ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143343 topics in this forum
-
மஹிந்தவுடன் அப்பம் உண்ட கதைக்கு விளக்கமளித்த ஜனாதிபதி மைத்திரி கொழும்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 66 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரபலமான அப்பம் உண்ட கதை விவகாரத்துக்கு விளக்கமளித்துப் பேசினார். நேற்றைய கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுகையில், அப்பம் உண்டு தேநீர் குடித்த கதை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மிக பிரபலமான ஒன்றாக மாறியதுடன் என்னை அவமதிப்பதற்கு கூறும் கதையாகவும் மாறியது. ஆனால் அப்பம் உண்ட அன்றைய தினத்தில் கட்சியின் சிரேஷ்ட முக்கியஸ்தர்கள் சகலரும் அமர்ந்திருந்தார்கள். அப்ப…
-
- 0 replies
- 483 views
-
-
நாமல் – கலா கீச்சகத்தில் மோதல் முதலில் சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு பிறகு கீச்சகத்தில் பதிவிடுங்கள் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேகநபராக பொலிஸாரால் கூறப் படும் சுவிஸ்குமாரை தப்பிக்க உதவியமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது கீச்சகத்தில் (ருவிட்டரில்) பதிவிட்ட கருத் துக்கு வழங்கியுள்ள பதிலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “உங்களது பதிவு நீதிமன்றத்தையும், நீதிமன்றத்…
-
- 0 replies
- 674 views
-
-
ஊறணி கனிஷ்ட வித்தி. ராணுவத்தால் விடுவிப்பு மாவட்டச் செயலரிடம் இன்று கையளிப்பு இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலிருந்த ஊறணி கனிஷ்ட வித்தியாலயம், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக யாழ்ப்பாண மாவட்டச் செயலரிடம் இன்று காலை ஒப்படைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பொன்னாலை – பருத்தித்துறை வீதியில், ஊறணிக் கிராமத்தில் முதன்மைச் சாலைக்கு வடக்குப் பகுதிகள் விடுவிக்கப்பட்டன. தெற்குப் பிரதேசம் விடுவிக்கப் படவில்லை. தெற்குப் பிரதேசத்திலேயே இந்தப் பாடசாலை அமைந்துள்ளது. அது இதுவரை படைமுகாமாகவே பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தப் பாடசாலையை விடுவிக்குமாறு கோரிக்…
-
- 1 reply
- 282 views
-
-
32 வருடங்களின் பின்னர் யாழில் மாட்டு சவாரி -ரொமேஸ் மதுசங்க பாம்பரிய கிராமிய விளையாட்டுகளில் ஒன்றான “மாட்டு சவாரி” போட்டி 32 வருடங்களின் பின்னர் யாழ். ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்றது. ஊர்காவற்துறை - புதுவேலி மைதானத்தில் நேற்று (03) நடைபெற்ற இந்தப் போட்டியில், 32 மாடுகள் சவாரியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், அவை ஒவ்வொன்றும் சுமார் 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடையவை எனவும் அவற்றின் உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர் http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/32-வருடங்களின்-பின்னர்-யாழில்-மாட்டு-சவாரி/71-203226
-
- 0 replies
- 294 views
-
-
யாழில் மூத்த ஊடகவியலாளர்மீது இருவர் கண்மூடித்தனமான தாக்குதல்! மூத்த ஊடகவியலாளா் நவரத்தினம் பரமேஸ்வரன் மீது இன்றைய தினம் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் வைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதில் சம்மந்தப்பட்டவர்கள் இலங்கையின் முன்னாள் எதிர்கட்சி தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தின் மகன் மற்றும் மானிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த கௌரிகாந்தன் என்றும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துவெளியிட்ட ஊடகவியலாளர் பரமேஸ்வரன், “சுமார் 32வருட ஊடக வரலாற்றினில் சிறீலங்கா படை அதிகாரிகள் முதல் விடுதலைப்புலிகளது தலைமை வரை கேள்விக்குள்ளாக்கியிருந்த போதும் எனக்கு எந்தவித அச்சு…
-
- 4 replies
- 1.1k views
-
-
பச்சை, நீலக் கொடிகளுடன் வருவோருக்கு மக்கள் சரியான பாடம் கற்பிக்கவேண்டும் சரவணபவன் எம்.பி.தெரிவிப்பு Share பச்சைக் கொடி, நீலக் கொடியுடன் எமது பகுதிகளுக்கு வருபவர்களுக்கு “நீங்கள் குண்டு போட்டு அழித்தவற்றையே சீரமைத்துத் தருகிறீர்கள்” என்று மக்கள் துணிந்து சொல்லவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். சுழிபுரம் கிழக்குப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற காளையடிச் சாலை சீரமைப்புத் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ…
-
- 0 replies
- 229 views
-
-
சாவகச்சேரியில் 56 பேருக்கு டெங்குத் தொற்று Share கடந்த மாதம்டெங்கினால் பீடிக்கப்பட்ட 56 பேர் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. பிரதேசத்தில் மழை பெய்யாத நிலையில் புலம்பெயர் நாடுகளிலிருந்து ஆலய திருவிழாக்க ளுக்கு வந்தவர்களை வரவேற்கவும் வழியனுப்பவும் தென்பகுதிக்கு அவர்களுடன் சுற்றுலா சென்றவர்களுமே டெங்கினால் பீடிக்கப்பட்டவர்களாக இனம்காணப்பட்டுள்ளனர். இவர்களுடன் தென்பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக…
-
- 0 replies
- 335 views
-
-
வாள் வைத்திருந்தவர் கைது வாளொன்றினைத் தன் வசம் வைத்திருந்தவர் நேற்று யாழில் கைது செய்யப்பட்டுள்ளார். என்று தெரிவிக்கப்படுகிறது. 28 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய சந்தேகநபரின் வீடு பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்போது தடை செய்யப்பட்ட வாளொன்றினையும், 140 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளையும் வைத்திருந்தமைக்காக குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபரை இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர். …
-
- 0 replies
- 311 views
-
-
இராணுவ வீரர்களுக்கு எதிராக செயற்பட எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது வருட பூர்த்தி விழா கொழும்பில் இன்று (03) நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விழாவிற்கு தலைமை தாங்கினார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிக்குகள் அமைப்பு, கிளை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ,தொகுதி அமைப்பாளர்கள் உட்பட கட்சியின் அனைத்துத் தொகுதிகளினதும் உறுப்பினர்கள் விழாவில் பங்கேற்றிருந்தனர். மக்கள் அதிகாரம் சரியான திசையில் எனும் தொனிப்பொருளில் இம்முறை 66 ஆவது வருட பூர்த்தி நிகழ்வுகள் நடைபெற்றன. வருட பூர்த்தி நிகழ்வின் போது ஜனாதிபதி உரையாற்றும் போது…. ”இர…
-
- 5 replies
- 613 views
-
-
இந்திய உதவி அபிவிருத்தி திட்டங்கள் மந்தகதியில் ; சுஷ்மா சுவராஜ் இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தாமதிக்கப்படுவதாக இந்தியா விசனம் வெளியிட்டிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்திருக்கின்றது. கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடிய நிலையிலேயே இவ்வாறு இந்திய உதவியுடனான திட்டங்கள் தாமதிக்கப்படுவது தொடர்பில் உரையாடியதாக தெரியவருகிறது. இல…
-
- 0 replies
- 335 views
-
-
பொன்சேகாவுக்குப் பதிலடி கொடுப்பாராம் கோத்தா “போர்க்கள இரகசியங்களை அம்பலப்படுத்தும் வகையில் கருத்து வெளியிடும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு உரியவகையில் பதிலடி கொடுக்கப்படும்”என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ‘உதயன்’ பத்திரிகைக்குத் தெரிவித்தார். முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் ஜெகத் ஜயசூரிய குற்றமிழைத்துள் ளார் என்றும், அதற்குரிய ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதால் சாட்சியமளிக்கத் தயார் என்றும் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் வினவியபோதே கோத்தபாய ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார். …
-
- 0 replies
- 477 views
-
-
சாட்சிகளுக்கு அச்சுறுத்தலெனக் கூறி அரசியல் கைதிகள் மீதான வழக்கை வவுனியாவிலிருந்து மாற்ற முயற்சி போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட படையினரைப் படுகொலை செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் மூவருக்கு எதிராகச் சாட்சியம் அளித்த இருவர் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணையை ஆரம்பித் துள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர்களின் வழக்கை வவுனியா மேல் நீதிமன்றிலிருந்து மாற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 256 views
-
-
‘மஹிந்த உத்தரவிட்டிருக்க வேண்டும்’ -சந்துன் ஏ. ஜயசேகர “தனது சகோதரரான காமினி அத்துகோரளையின் மரணம் தொடர்பில் சந்தேகம் காணப்பட்டிருக்குமாயின், அது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய பொறுப்பு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் காணப்பட்டது” என, நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளை தெரிவித்துள்ளார். புதிய நீதியமைச்சரான தலதா அத்துகோரளை, தனது பணியின் முதலாவது அம்சமாக, தனது சகோதரரின் மரணம் குறித்த உண்மையைக் கண்டறிய வேண்டுமென, முன்னாள் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தனது சகோதரரின் மரணம் குறித்து, தனக்கு எந்தச் சந்தேகமு…
-
- 0 replies
- 409 views
-
-
அரசமைப்பு உருவாக்கம், கூட்டு அரசு ஆயுள் நீடிப்பு சு.க. மாநாட்டில் மைத்திரி நிசப்தம் புதிய அரசமைப்பு உருவாக்கம், ஐக்கிய தேசியக் கட்சியுடனான உடன்படிக்கை நீடிப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் பற்றி அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தனது நேற்றைய பேச்சில் மூச்சுக் காட்டவில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது ஆண்டுவிழா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் பொரளை, கெம்பல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மகிந்த அன் கோ பங்கேற்கவில்லை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கட்சி ஆதரவாளர்கள் வருகைதந்து இதில் பங்கேற்றனர். ஐக்கிய மக்க…
-
- 0 replies
- 298 views
-
-
தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஜனாதிபதி மைத்திரி : மனோ புகழாரம் ஐக்கிய தேசிய முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து ஆட்சியை நடத்துவது தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதற்கேயாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கின்றார் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பொரளை கெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 0 replies
- 442 views
-
-
மனிதப் படுகொலைகளுக்கான ஆதாரங்களை பொன்சேகா நீதிமன்றில் வெளியிடவேண்டும் வலியுறுத்துகிறார் சம்பந்தன் “இறுதிப் போரில் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டமைக்கு ஆதாரங்கள் உள்ளன என்று போரை நடத்திய இராணுவத் தளபதியான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா பகிரங்கமாக அறிவித்துள்ளார். சரத் பொன்சேகா எவ்வித தயக்கமுமின்றி நீதிமன்றில் முன்னிலை யாகி உண்மையை வெளிப்படுத்தவேண்டும். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை சரத் பொன்சேகாவின் கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊக்குவிக்கும்” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் …
-
- 0 replies
- 300 views
-
-
நீதிபதி இளஞ்செழியனை தாக்கிய குழு வவுனியாவில் அட்டகாசம்? பதற்றமான சூழல் வவுனியா - குருமன்காட்டு சந்திக்கு அருகாமையில் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வலுவூட்டல் நிலையமொன்றிற்குள் சற்றுமுன்னர் வாள்களுடன் புகுந்த குழுவொன்று கடையை சூறையாடியதுடன் விற்பனை நிலைய உரிமையாளரையும் வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் இன்றைய தினம்(03) இரவு 10.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா குருமன்காடு புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள உடல் வலுவூட்டல் நிலையமொன்றிற்குள் புகுந்த வாள்வெட்டுக்கும்பல் அதன் உரிமையாளரை தாக்கியதுடன் பல பொருட்களையும் சேதப்படுத்தப்படுத்தியுள்ளனர். …
-
- 2 replies
- 507 views
-
-
நீர் ஏன் இங்கு வந்தீர் என்று எவரும் கேட்க முடியாது நான் எவருக்கும் பயமில்லை : மட்டக்களப்பில் மனோ தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமொழிகள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடமாடும் சேவையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நடமாடும் சேவை தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமொழிகள் அமைச்சர் மனோ கணேஷன் தலைமையில் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் மனோ கணேஷன் கருத்து தெரிவிக்கையில், " பெரியகல்லாறு வைத்தியசாலையை தரமுயர்த்தி தருவேன் என்றும், நான் சொன்னால் செய்வேன், நீர் ஏன் இங்கு வந்தீர் என்று எவரும் கேட்க முடியாது, நான் அமைச்சர், நான் எவருக்கும் பயமில்லை, இம்மாவட்டத்தில் பல குறைபாடு…
-
- 1 reply
- 492 views
-
-
கிளிநொச்சி - வன்னேரிக் குளத்தின் பின் பகுதியில் தொடர்கின்ற மணல் அகழ்வின் காரணமாகவே, குளத்தின் நீர், வேகமாக வற்றுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 1953ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வன்னேரிக்குளம், குடியேற்றத் திட்டத்தில் கிராமத்தின் உயிர்நாடியாகக் காணப்படுகின்றது. முழுமையாக விவசாயத்தை நம்பியுள்ள இக்கிராமத்தில், 363 ஏக்கரில் ஆண்டு தோறும் பெரும்போகப் பயிர்ச்செய்கை இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு - கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள் குளங்களின் வான் வெள்ளம், இக்குளத்தை நிரப்பும். வன்னேரிக்குளத்தில் இருந்து வெளியேறுகின்ற நீர் மண்டைக்கல்லாறு வழியாக பூநகரிக் கடலில் கலக்கின்றது. வன்னேரிக் குளத்தையும் தேவன்குளத்தையும் இணைத்து உருவாக்கப்படவுள்ள பெரும் நீர…
-
- 0 replies
- 309 views
-
-
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, அவரது அமைச்சுப் பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டுமென, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நேற்றுக் கோரினார். முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக, அமைச்சர் பொன்சேகா முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்தே, இந்தக் கருத்தை, விமல் வீரவன்ச முன்வைத்துள்ளார். இது தொடர்பாக, நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த அவர், அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை, அமைச்சர் பொன்சேகா மீறிவிட்டார் எனவும், விஜயதாச ராஜபக்ஷவைப் போன்றே, அமைச்சர் பொன்சேகாவும் நீக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார். அமைச்சர் பொன்சேகாவின் கருத்து, ஒட்டுமொத்த அரசாங்கத்தின் கருத்து என வேறு …
-
- 0 replies
- 342 views
-
-
ஆயுதம் ஏந்தாத போராட்டத்தை முன்னெடுப்போம் : யாழில் சுமந்திரன் ஸ்ரீலங்காவில் வாழும் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகள் புதிய அரசியல் அமைப்பின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் அனைத்து நாடுகளும் ஒன்றாக உள்ளதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தன்தெரிவித்தார். இவ்வாறனதொரு சூழ்நிலை இதுவரை காலமும் இருந்ததில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார். தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உடுவில் - மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 32ஆவது நினைவு தினம் நே…
-
- 5 replies
- 629 views
-
-
கடைசி வரை மகனை காணாமலே உயிர் விட்ட ஈழத்தாயின் சோகக்கதை! இன்னும் இப்படி எத்தனை? கடந்த 8 ஆண்டுகளாக முள்ளிவாய்க்காலில் இராணுவத்திடம் சரணடைந்து தனது மகனை தேடி வந்த முன்னாள் போராளி வீமனின் (ஜனாா்த்தனன்) தாயார் ஈஸ்வரன் ருத்ராதேவி மாரடைப்பு காரணமாக கடந்த 31 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். முன்னாள் போராளி வீமன் (ஜனார்த்தனன) முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போய் எட்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஒப்படைக்கப்படாத நிலையில் குறித்த தாயார் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் தொடர்ச்சியாக போராடி வந்தார். இந்நிலையில் தனது எதிர்பார்ப்பு நிறைவேறாமலே கடந்த 31-08 2017 அன்று அமரத்துவம் அடைந்துவிட்டார். இவரின் இறுதிக்கி…
-
- 2 replies
- 472 views
-
-
அரச தலைவருக்கு நாமல் பிறந்தநாள் வாழ்த்து!! அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனவின் பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் அரசதலைவரின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தினூடாக பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது வருட நிறைவு விழா அந்தக்கட்சியின் தலைவரின் பிறந்த நாளான இன்று நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://newuthayan.com/story/25422.html
-
- 5 replies
- 637 views
-
-
மட்டக்களப்பில் அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அட்டகாசம் மட்டக்களப்பின் சில பகுதிகளில் அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. இதனைத் தவிர சொத்துக்களுக்கும் அதிகளவு சேதம் ஏற்பட்டுள்ளது. 25.02.2017 மட்டக்களப்பு கரடியனாறு மாவடியோடை பகுதியில் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி அதிகாலை காட்டு யானைத் தாக்கியதில் ஒருவர் பலி. 29.07.2017 மட்டக்களப்பு – வெல்லாவௌி பகுதியில் ஜூலை மாதம் 29 ஆம் திகதி யானை தாக்கி ஒருவர் பலி. 20.08.2017 உறுகாமத்தில் சண்முகராஜ் கோமளராணி என்பவருக்கு சுயதொழிலுக்காக வழங்கப்பட்ட பாய் பின்ன…
-
- 0 replies
- 441 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (03-09-2017)
-
- 0 replies
- 443 views
-