Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "எந்த தடைகள் வந்தாலும் உடைத்துக்கொண்டு முன்செல்வோம்" (எம்.ஆர்.எம்.வஸீம்) இனங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்தும் எமது பயணத்துக்கு எந்த தடைகள் வந்தாலும் அதனை உடைத்துக்கொண்டு முன்செல்வோம் என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தள மீள் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/20638

  2. பொது­ப­ல­சேனா செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை கைது செய்தே தீருவோம் : பொலிஸ் மா அதிபர் பூஜித பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை மிக விரைவில் கைது செய்தே தீருவோம் எனவும் அது தொடர்பில் யாரும் எவ்­வித சந்­தே­கமும் கொள்ளத் தேவை இல்லை என்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர தெரி­வித்தார். இது தொடர்­பி­லான நட­வ­டிக்­கை­க­ளுக்கு நான்கு விசேட பொலிஸ் குழுக்­களை கட­மையில் ஈடு­ப­டுத்­தி­யுள்ள நிலையில் குற்­ற­மி­ழைத்த எவ­ரையும் தப்­பிக்க விடப் போவ­தில்லை, ஞான­சா­ரரின் கைது உறு­தி­யா­னது எனவும் நீதி­மன்ற உத்­த­ர­வுகள், சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக சிறப்பு நட­வ­டிக்­கை­யாக அது இடம்­பெறும் என்றும் பொலிஸ் …

  3. விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்! சிறிலங்காவில் விரைவில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதில் ஜப்பானில் வாழும் சிறிலங்கா நாட்டவர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்பான் சென்றுள்ள முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ அங்கிருந்தவாறு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு செவ்வி வழங்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியாளர்களினால் நாட்டை சீராக வழிநடத்த முடியாமல் உள்ளதால், ஆட்சியாளர்கள் மீது ஜப்பானில் உள்ள சிறிலங்கா நாட்டவர்கள் விரக்தி அடைந்துள்ளதாகவும், இதனால் சிறிலங்காவில் உடனடியாக ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென அவர்கள் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தற்ப…

    • 0 replies
    • 413 views
  4. இரட்டைக் குடியுரிமை கொண்ட இலங்கை தூதுவர்கள் வெளி­நா­டு­களில் பணி­யாற்­று­கின்ற இலங்கையின் மூன்று தூது­வர்கள் இரட்டைக் குடி­யு­ரிமை கொண்­ட­வர்கள் என்று ஸ்ரீ­லங்கா வெளி­வி­வ­கார அமைச்சு கண்­ட­றிந்­துள்­ளது. பங்­க­ளாதேஷ், பிரான்ஸ், மற்றும் அமெ­ரிக்­காவின் லொஸ்­ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இலங்கை தூது­வர்­களே இரட்டைக் குடி­யு­ரி­மையைக் கொண்­ட­வர்கள் என்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. பங்­க­ளா­தே­ஷுக்­கான இலங்கை தூது­வ­ராகப் பணி­யாற்றி வரும் வை.கே.குண­சே­கர, பிரித்­தா­னியா மற்றும் இலங்கை குடி­யு­ரிமை கொண்­டவர். பிரான்­ஸுக்­கான இலங்கை தூது­வ­ராகப் பணி­யாற்றும் திலக் ரண­வி­ராஜா அமெ­ரிக்க குடி­யு­ரி­மையைக் கொண்­டுள்­ளவர். லொஸ்­ஏஞ்சல்ஸ் நகரில் கொன்சூல் ஜென­ர­லாகப…

    • 1 reply
    • 211 views
  5. ஞானசார தேரரை தேடி பொலிஸார் வலை வீச்சு.! (எம்.எப்.எம்.பஸீர்) கைது செய்வதற்காக பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய விஷேட பொலிஸ் குழுக்கள் பல இடங்களில் சோதனைகளை நடத்தியுள்ளனர். குறிப்பாக ஞானசார தேரர் சிகிச்சைப் பெறுவதாக நம்பப்படும் மூன்று இடங்களிலும் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு சோதனைகளை நடத்தியுள்ளது. எனினும் இதன்போது ஞானசார தேரர் அங்கு இருக்கவில்லை என உயர் மட்ட பொலிஸ் தகவல்கள் கேசரிக்கு தெரிவித்தன. http://www.virakesari.lk/article/20610

    • 5 replies
    • 471 views
  6. பளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: சந்தேக நபர் யாழில் கைது பளையில் சுற்றுக் காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் வாகனத்தின் மீது பற்றைக்குள் மறைந்திருந்த இனந்தெரியாதவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பொலிஸார் தெரிவித்திருந்தனர். இந்தச் சம்பவம் கடந்த மே மாதம் 19 ஆம் திகதி நடைபெற்றிருந்தது. திடீர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெரும் பதற்றத்தையும் – பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பின்னர் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில், உரும்பிராயைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தகவல் வெளியிட்…

    • 6 replies
    • 1.2k views
  7. திரு­கோ­ண­மலை பள்­ளி­வாசல் மீதான தாக்­குதல் பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் கீழ் 3 சிறப்புக் குழுக்கள் விசா­ரணை (எம்.எப்.எம்.பஸீர்) திரு­கோ­ண­மலை நீதி­மன்ற வீதியில் கடற்­படை தளத்தை அண்­மித்­துள்ள பெரி­ய­கடை ஜும் ஆ பள்­ளி­வாசல் மீதான பெற்றோல் குண்டுத் தாக்­குதல் தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்கு மூன்று சிறப்புக் குழுக்கள் நிய­மிக்­கப்பட்­டுள்­ளன. கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதி­ரி­சிங்­கவின் மேற்­பார்­வையில், திரு­கோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆர்.எம்.என்.ஜி.ஓ. பெரே­ராவின் நேரடி கட்­டுப்­பாட்டில் இந்த மூன்று பொலிஸ் குழுக்­களும் நிய­மிக்­கப்ப்ட்­டுள்­ளன. திரு­மலை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சந்­திர குமா­ரவின் வழ…

    • 1 reply
    • 213 views
  8. புலிகள் இராணுவத்திடம் சரணடைய விரும்பவில்லை மூன்றாம் தரப்­பிடம் சர­ண­டை­யவே விரும்­பினர். அதனை அர­சாங்கம் விரும்­ப­வில்லை நேர்­காணல் ரொபட் அன்­டனி புலிகள் இறுதி யுத்­தத்­தின்­போது இரா­ணு­வத்­திடம் சர­ண­டைய ஒரு­போதும் விரும்­ப­வில்லை. மாறாக மூன்றாம் தரப்­பிடம் சர­ண­டை­யவே விரும்­பினர். அதற்கு அர­சாங்கம் விரும்­ப­வில்லை என்று கடந்த அர­சாங்­கத்தின் பாது­காப்பு பேச்­சா­ளரும் அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் தற்­போ­தைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார். வீர­கே­சரி நாளி­த­ழுக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே கெஹெ­லிய ரம்­புக்­வெல மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு: Q :…

  9. மூன்று பிர­தான கங்­கை­க­ளுக்கு அணை கட்­டி­யி­ருந்தால் வெள்ளம் ஏற்­பட்­டி­ருக்­காது பிர­தமர் 2001 லேயே திட்­ட­மிட்­டி­ருந்தார் என்­கிறார் அமைச்சர் (க.கம­ல­நாதன்) களுகங்கை, ஜின் கங்கை மற்றும் நில்­வள கங்கை ஆகி­ய­வற்றின் நீரை முறை­யாக முகா­மைத்­துவம் செய்­யா­மையே கடந்த நாட்­களில் ஏற்­பட்­டி­ருந்த பெரு வெள்­ளத்­திற்கு கார­ண­மாகும். 1968 இல் ஐக்­கிய அமெ­ரிக்க நிறு­வ­ன­மொன்­றினால் விடுக்­கப்­பட்ட அறிக்­கையின் பிர­காரம் 2001 ஆம் ஆண்டில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­மசிங்க முன்­மொ­ழிந்த திட்­டத்தை நிறு­வி­யி­ருந்தால் வெள்ளம் ஏற்­பட்­டி­ருக்­காது எனவும் உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் வஜிர அபே­கு­ண­வர்­தன தெரி­வித்தார். ஐக்­கிய தேச…

  10. அரசாங்கம் அதிரடி : ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தை அமுல்படுத்த தீர்மானம் : சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் எச்சரிக்கை இன, மத மோதல்களை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் குழுக்கள் மற்றும் தனிநபர்களை கைது செய்ய அரசாங்கத்தினால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தை (INTERNATIONAL COVENANT ON CIVIL AND POLITICAL RIGHTS (ICCPR) ACT, No. 56 0F 2007) Article 3. (1) No person shall propagate war or advocate national, racial or religious hatred that constitutes incitement to discrimination, hostility or violence. அமுல்படுத்துமாறு, நாடளாவிய ரீதியில் உள்…

  11. "வீடுகளை அமைத்து எங்களுடைய உயிர்களை காப்பாற்று" மலையக அரசியல் தலைமைகளிடம் புலம்பும் தோட்ட மக்கள் நாட்டில் சில பாகங்களில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக அடைமழை பெய்து வருவதோடு மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கினால் பலர் பலியாகியுள்ளதுடன் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ள இதேவேளை தங்களுடைய சொத்துக்களையும் உடமைகளையும் உறவுகளையும் இழந்து எவ்வித அடிப்படை வசதிகள் இல்லாமல் அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். மலையக அரசியல்வாதிகளை பொருத்தவரையில் மலையக மக்களுடைய தேவைகளை அல்லது அவர்களுடைய ஆபத்துகளை கேட்டு அறிந்து செயல்படுகின்றார்களா என அக்கரப்பத்தனை போட்மோர் தோட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அக்கரப்பத்தனை போட்மோர் தோட்டத்தில் கடந்த …

  12. தமிழர் தாயகப் பகுதிகளில் புத்தர் சிலைகள் புதிதாக வைக்கப்படுவது அசௌரியங்களை ஏற்படுத்துகிறது:- கதிர்காம பஸ்நாயக்க நிலமேயுடனான சந்திப்பில் இந்து மாமன்றத்தின் உப தலைவர் ஆறு திருமுருகன்:- தமிழர் தாயகப் பகுதிகளில் புத்தர் சிலைகள் புதிதாக வைக்கப்படுவதால், தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌரியங்கள் குறித்து கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே டி.பீ.குமாரகேயிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு நேற்று சென்றிருந்த கதிர்காம பஸ்நாயக்க நிலமேயுடனான சந்திப்பின் போது, இந்து மாமன்றத்தின் உப தலைவர் ஆறு திருமுருகன் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். இந்து மா மன்றத்தில் பௌத்த மதத்திற்கு மதிப்பளிப்…

  13. சரியான புரிந்துணர்வே நாட்டு மக்களனைவரையும் ஒன்றிணைக்கும் ; சி.வி.விக்னேஸ்வரன் சரியான புரிந்துணர்வே இந்த நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கதிர்காமம் முருகன் ஆலயத்தின் தலைமை மதகுரு டி.பி.குமாரகே நேற்று இரவு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை அவருடைய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருந்தார். இந்தக் கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது முதலமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், கதிர்காமம் ம…

  14. “முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்துக்கும் பெருங்கடலுக்கும் இடைப்பட்ட பகுதியில், பெருமளவு மீன்கள் உயிர் இழப்பதற்கு அதிக வெப்பமே காரணம்” என, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார். “அதிக வெப்பமே குறித்த பகுதியின் நீரினை பச்சைநிறமாக மாற்றி பெருமளவு மீன்கள் உயிர் இழப்பதற்கு காரணமாக அமைந்து விட்டது. வழமையாக இவ்விடத்தில் நீல நிறத்திலே நீர் காணப்படும். “அதிகரித்த வெப்பம் காரணமாக நீர் பச்சை நிறமாக மாற்றமடைந்து பெருமளவு மீன்கள் உயிர் இழந்ததன் காரணமாக, இப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் பெருமளவு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. “நந்திக் கடல் பெருங்கடலுடன் இணையும் பகுதியிலேயே மீன்க…

    • 2 replies
    • 859 views
  15. சக்தி டிவி செய்திகள் 8PM (04/06/2017)

  16. ஐநா 72ஆவது கூட்டத்தொடருக்கான உபதலைவராக ரொகான் பெரேரோ தெரிவு! ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்தொடருக்கான உபதலைவர் பதவி சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐநா பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் முதல் 2018ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வரை நடைபெறவுள்ளது. ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தி உப தலைவர் பொறுப்பை சிறிலங்கா வகிக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 72ஆவது கூட்டத் தொடரின் உப தலைவராக சிறிலங்கா சார்பான உப தலைவரான ஐநாவிற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரொகான் பெரேரா செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://thuliyam.com/?p=69757

    • 0 replies
    • 329 views
  17. இந்தியாவும் சீனாவும் ஏட்டிக்கு போட்டியாக உதவி லியோ நிரோஷ தர்ஷன் 27 நாடுகளிலிருந்து குவியும் நிவாரணங்கள் இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள அனர்த்த நிலை­மை­களை கருத்தில் கொண்டு அமெ­ரிக்கா, இந்­தியா மற்றும் சீனா உள்­ளிட்ட 27 உலக நாடுகள் உதவிக் கரம் நீட்­டி­யுள்­ளன. இதே­வேளை இந்­தி­யா வும் சீனாவும் நிவா­ரண உத­வி­களை தொடர்ச்­சி­யாக மேற்­கொண்டு வரு­கின்­றன. மேலும் கிடைக்­கப்­பெறும் நிதி உத­விகள் அனைத்தும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு வீடு­களை அமைப்­ப­தற்குப் பயன்­ப­டுத்­தப்­பட உள்­ள­தாக அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள அனர்த்த நிலை­மை­களை கருத்தில் கொண்டு 44 உலக நாடுகள் நேர­டி­யாக பல்­வேறு வகையில் உத­வி­களை வழங்­கு­வ­த…

    • 1 reply
    • 556 views
  18. வெள்ளம், மண்சரிவால் அழிவுற்ற வீடுகளை மீள நிர்மாணிப்பதற்காக ஏட்டிக்கு போட்டியாக உதவி சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் அழிவுற்ற வீடுகளை மீள நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்துக்கு அமெரிக்க அரசாங்கத்தின் 350 மில்லியன் ரூபா நிதி அன்பளிப்பு நேற்று ஜனாதிபதியினது உத்தியோபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் உள்ளிட்ட பிரதிநிதிகளால் அந்த நன்கொடை சிறிசேனவிடம்; உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. மேலும் நாட்டிலுள்ள இளைஞர், யுவதிகளின் நிபுணத்துவ ஆற்றலை மேம்படுத்துவதற்காக 12 மில்லியன் டொலரை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் வி…

  19. 300 பேர் இதுவரை உயிரிழப்பு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 இலட்சத்தையும் தாண்டியது ஆர்.யசி வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவில் பாதிக்­ கப்­பட்ட மக்­களின் எண்­ணிக்கை 7 இலட்­ச­மாக உயர்­வ­டைந்­துள்­ள­துடன் அனர்த்­தத்தில் உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை 300 க்கும் அதி­க­மாக இருக்­க லாம் எனவும் காணா­மல்­போ­யுள்ள 92 பேரையும் உயி­ரி­ழந்­த­வர்­க­ளா­கவே தற்­பொ­ழுது கருத வேண்­டி­யுள்­ள­தா­க வும் பிரதி அமைச்சர் லக் ஷ்மன் யாப்பா அபே­வர்­தன தெரி­வித்துள்ளார். கடந்த மாதம் இறு­தியில் தென்­னி­ லங்­கையில் ஏற்­பட்ட வெள்ளம் மற் றும் மண்­ச­ரிவு அனர்த்­தத்தில் 1 இலட்­சத்து 85 ஆயி­ரத்து 805 குடும்­பங்­களைச் சேர்ந்த 7 இலட்­சத்து 4 ஆயி­ர…

  20. தென்பகுதி மக்களுக்காக... முல்லைத்தீவு, முள்ளிவாய்கால் கிழக்கு கிராமத்தின் சகவாழ்வு சங்கத்தைச் சேர்ந்த இளம் உறுப்பினர்கள், தாம் வீடு வீடாக சென்று சேகரித்த 80,000 ரூபாய் நிதியை, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு வழங்கமாறு தெரிவித்து, அமைச்சர் மனோ கணேசனிடம், இன்று ஒப்படைத்தபோது எடுக்கப்பட்ட படங்கள். http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/தென்பகுதி-மக்களுக்காக---/46-197946

  21. நாட்டில் டெங்கு நோய் வேகமாக பரவி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் மொத்தமாக 55 ஆயிரத்து 150 டெங்கு நோயாளார்களே நாட்டில் இனங்காணப்பட்டுள்ளனர். எனினும், 2017 ஆம் ஆண்டின் இதுவரையான முதல் 6 மாத காலப்பகுதியில் 56 ஆயிரத்து 887 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த மே மாதத்தில் 12 ஆயிரத்து 212 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கு கடந்த மாதம் ஏற்பட்ட மோசமான காலநிலை மாற்றமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. டெங்கு நோய் தாக்கம் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு காணப்படுகிறது. கொழும்பு மாவட்டத்தில் மட்டும் இவ்வாண்டில் 12 ஆயிரத்து 610 டெங்கு நோயாளர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்…

    • 0 replies
    • 271 views
  22. கால அவகாசம் நிறைவு: அகல மறுக்கின்றது இராணுவம் புதுக்குடியிருப்பு மக்கள் கவலை இரா­ணு­வம் கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள புதுக்­கு­டி­யி­ருப்பு மக்­க­ளின் காணி­கள் 3 மாத கால அவ­கா­சத்­தில் விடு­விக்­கப்ப­டும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் அது தொடர்­பாக இரா­ணு­வத்­தி­னர் தற்­போது வரை மௌன­மாக இருக்­கின்­ற­னர் என்று காணி­க­ளின் உரி­மை­யா­ளர்­கள் கவலை தெரி­வித்­த­னர். கடந்த ஜன­வரி மாதம் 31 ஆம் திகதி பிலக்­கு­டி­யி­ருப்­பில் மக்­கள் நில மீட்பு போராட்­டத்தை ஆரம்­பித்­த­னர். அதனைத் தொடர்ந்து பெப்­ர­வரி மாதம் 4 ஆம் திகதி புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச செய­ல­கத்­துக்கு முன்­னால் பொன்­னம்­ப­லம் வைத்­தி­ய­சாலை அமைந்­தி­ருந்த காணி உ…

  23. மகிந்த அணியைச் சந்திக்கவுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு! புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிந்தராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினரை அடுத்த வாரமளவில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்திப்பு தீர்மானிக்கப்பட்டபோதிலும் இது தொடர்பாக இன்னமும் இறுதிப்படுத்தப்படவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும்வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளபோதிலும் அதற்கான பணிகள் தாமதப்படுத்தப்பட்டுக்கொண்டே வருகின்றது. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு த…

    • 0 replies
    • 384 views
  24. கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே யாழ். வருகை கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே டி.பி.குமாரகே யாழ்ப்பாணத்துக்கு இன்றையதினம் வருகைத்துள்ளர்.யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த அவர் முதலில் நல்லூர் ஆலயத்துக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.அதன் பின்னர் நல்லை ஆதின குரு முதல்வர் மற்றும் தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆருதிருமுகன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார். http://uthayandaily.com/story/5140.html

  25. வாளுடன் அட்டகாசம் புரிந்தோர் கைது யாழ்ப்பாண நகரில் பட்டப் பகலில் வாளுடன் திரிந்த இளைஞர்கள் தொடர்பாகப் பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையில் இரண்டு இளைஞர்கள் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 14ஆம் திகதி முற்பகல் 11 மணியளவில் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளொன்றில் வாளுடன் திரிந்ததால் பதற்றமான சூழல் நிலவியதாகத் தெரிவித்து கடந்த மே 15 ஆம் திகதி உதயனில் புகைப் படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. அந்தச் செய்தியின் அடிப்படையில் புகைப்படத்தில் காணப்பட்ட மோட்டார் சைக்கிளின் இலக் கத்தகட்டை வைத்து விசாரணை நடத்திய யாழ்ப்பாணப் பொலிஸார், சம்பவம் தொடர்பாக மானிப்பாய் கனகசபை வீதி மற்றும் லோட்டன் வீத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.