Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 36 அகதிகள் நாடு திரும்பினர் கனகராசா சரவணன் இந்தியாவிலிருந்து இலங்கை அகதிகள் 36 பேர் நேற்று வியாழக்கிழமை நாடு திரும்பினர். மேற்படி 36 பேரையும், யு.என்.எச்.சி.ஆர் அமைப்பு, இரண்டு விமானங்களின் மூலம், சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு, நேற்று பிற்கல் அழைத்து வந்தது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மன்னார், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள், மும்பை மற்றும் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருந்ததாக அவ்வமைப்பு மேலும் கூறியது. மும்பையில் இருந்து 9 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரும் தமிழ்நாட்டில் இருந்து 11 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேருமாக 36 பேர், நாடு திரும்பியுள…

  2. மீனவர் பலி; கடற்படை வீரர்கள் இருவர் கைது -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் விடத்தல் தீவு கடற்பரப்பில், குள்ளா படகு மூலம் மீன் பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் கடற்படை வீரர்கள் இருவர் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர், விடத்தல் தீவு 7 ஆம் வாட்டாரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தாசன் கில்மன் (வயது39) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, “மீனவர் குள்ளா படகு மூலம் விடத்தல் தீவு கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டுள்ளார். இதன்போது, கடற்பாதுகாப்பில் ஈடுபட்ட கடற்படையினர் கடலில் படக…

  3. கொட்டாஞ்சேனை தமிழர்கள் இருவர் கடத்திக் கொலை : விசாரணைக்கு கடற்படை தளபதி இடையூறு (எம்.எப்.எம்.பஸீர்) கொட்டாஞ்சேனையில் கடந்த 2009ம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன், இரத்னசாமி பரமானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு கொலைச் செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்வதற்கு தற்போதைய கடற்படை தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்ர விஜே குணரத்னவின் செயற்பாடுகள் இடையூறாக உள்ளதாக குற்றப் புலனயவுப் பிரிவு இன்று நீதிமன்றுக்கு அறிவித்தது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி கொட்டாஞ்சேனையில் இருந்து வெல்லம்பிட்டிய பகுதியை நோக்கி தனது பீ.ஏ.6023 என்ற இலக்கத்தை உடைய வேனில் பயணித்த போது…

  4. ஐ.நா.வில் தமி­ழர்­க­ளுக்கு நீதி மீண்டும் மறுக்­கப்­பட்­டு­விட்­டது புலம்­பெயர், வடக்கு,கிழக்கு, சிவில் சமூக, அர­சியல் அமைப்­புக்கள் கூட்­ட­றிக்கை (ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீகஜன்) இலங்கை விவ­கா­ரத்­தினை ஐ,நா.வின் பொதுச்­ச­பையின் விசா­ர­ணைக்கு அனுப்­ப வேண்டும். ஐ.நா பொதுச்­சபை வழியே, சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­திற்கு இலங்­கையை பாரப்­ப­டுத்­து­வ­தற்­கான பரிந்­து­ரை­ யினை ஐ.நா . பாது­காப்பு பேர­வைக்கு வழங்க வேண்டும் என்று புலம்­பெயர், வடக்கு கிழக்கு, சிவில் சமூக அர­சியல் அமைப்­புக்கள் கூட்­டாக தெரி­வித்­துள்­ளன. மேலும் இலங்­கைத்­தீவின் இன­நெ­ருக்­க­டிக்கு தீர்­வு­காண வடக்கு கிழக்கு பகு­தி­யிலும், புலம்­பெயர் தமி­ழர…

  5. சர்­வ­தேசத்­திற்கு அடி­ப­ணிய ­போ­வ­தில்லை யுத்­தக்­குற்ற விசா­ர­ணையையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஒரு­போதும் ஒன்­றி­ணைக்­கவே முடி­யாது என்­கிறார் நீதி அமைச்சர் விஜே­தாஸ (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) யுத்­தக்­குற்ற விசா­ர­ணைகள் தொடர்­பாக சர்­வ­தேசம் எமக்கு அழுத்தம் பிர­யோ­கிக்க முடி யாது. எமது நாட்டு மக்­களின் மீது எமக்­ குள்ள அக்­கறை சர்­வ­தே­சத்­திற்கு இருக்க முடி­யாது. சர்­வ­தேசம் சொல்­வ­தற்கு எல்லாம் நாம் அடி­ப­ணிய போவ­தில்லை என நீதி அமைச்சர் விஜேய­தாஸ ராஜ­பக் ஷ சபையில் உறு­தி­ப­டத்­தெ­ரி­வித்தார். யுத்­தக்­குற்ற விசா­ர­ணை­யையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஒன்­றி­ணைக்க முடி­யாது. இது ரயில் தண்­ட­வாளம் போன்­றது. அவை இணையும் பட…

  6. தமிழீழத்தைப் பெற்றுக்கொள்ளவே ஐ.நா.வில் பிரேரணை தாக்கல் ஜெனிவாவில் முழங்கினார் சரத் வீரசேகர (ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீகஜன்) தமி­ழீ­ழத்தை அடைந்து கொள்ளும் நோக்கில் புலம்­பெயர் தமி­ழர்கள் மேற்­கொள்ளும் முயற்­ சியே ஐ.நா.மனித உரிமை பேர­வை­யின் பிரே­ர ணை­யாகும். இதற்கு ஐ.நா.துணை­போகக்­கூ­டாது என்று முன்னாள் பாரா­ளுமன்ற உறுப்­பினர் சரத் வீர­சே­கர நேற்று ஜெனி­வாவில் தெரி­வித்தார். நேற்று இடம்­பெற்ற ஐ.நா.மனித உரி­மை­பே­ரவை அமர்­வொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்: புலம்­பெயர் அமைப்­புக்கள் தமி­ழீ­ழத்தை அடைந்து கொள்­ளும்­நோக்­கி­லேயே ஐ.நா…

  7. கால அவ­கா­சத்தில் அரசு நீதியை வழங்­க­வேண்டும் அமெ­ரிக்கா, பிரிட்டன் வலி­யு­றுத்தல் (ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ். ஸ்ரீகஜன்) இலங்­கை­யா­னது தற்­போது வழங்­கப்­பட்­டுள்ள கால அவ­கா­சத்தில் நல்­லி­ணக்­கத்­திலும் பொறுப்­புக்­கூ­ற­லிலும் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்டும். அர்த்­த­முள்ள நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் அவ­சி­ய­மாகும் என்று அமெ­ரிக்­காவும் பிரிட்­டனும் தெரி­வித்­துள்­ளன. இலங்கை தொடர்­பான புதிய பிரே­ரணை நேற்று ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்­ட­போது கருத்து வெ ளியி­டு­கை­யி­லேயே அமெ­ரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடு­களின் ஜெனி­வா­வுக்­கான பிர­தி­நி­திகள் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டனர். அமெ­ரிக்கப் ப…

  8. இலங்கை தொடர்பான தீர்மானம் ஐ.நாவில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கும் தீர்மானத்திற்கு 2015ஆம் ஆண்டு தீர்மானத்திற்கு ஆதரவளித்த அனைத்து நாடுகளும் இம்முறையும் ஆதரவளிக்க ஏற்றுக்கொண்டதால் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது. http://www.virakesari.lk/article/18189

  9. புட்டினை சந்தித்தார் ஜனாதிபதி..! ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புட்டினை சந்தித்துள்ளார். ரஷ்யாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்நாட்டு ஜனாதிபதி விளாமிடிர் புட்டினை மொஸ்க்கோவில் சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பின் பொது இருநாட்டு வர்த்தக மற்றும் அரசியல் புரிந்துணர்வுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், மேலும் இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான 60 வருடகால ராஜதந்திர உறவுகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் மொஸ்க்கோவிலுள்ள கெர்மிளின் மாளிகையின், பச்சை அறையில் இடம்பெற்ற குறித்த…

  10.  விசாரணையை ஆரம்பித்தால் ‘யுத்தம் ஏற்படலாம்’ -ஜே.ஏ.ஜோர்ஜ் “படையினருக்கு எதிராக விசாரணையை ஆரம்பித்தால் அது தமிழ், சிங்கள மக்களிடையே விரிசலை ஏற்படுத்தி விடுவதுடன், மீண்டுமொரு யுத்தத்துக்கு கூட வழிசமைத்து விடும். போர்க்குற்ற விசாரணை குறித்த சர்வதேச அழுத்தங்களுக்கு அரசாங்கம் அடிபணியாது. நாட்டுக்கு என்ன தேவையோ அதைத்தான் அரசாங்கம் செய்யும்” என்று, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, தெரிவித்தார். “போர்க்குற்ற விசாரணையையும் நல்லிணக்கப் பொறிமுறையையும் ரயில் தண்டவாளத்தின் இரண்டு நிரல்கள் போன்றவை அவற்றை ஒரே தடவையில் முன்னெடுக்கமுடியாது” என்றார். நாடாளுமன்றத்தில் நேற்று (23) இடம்பெற்ற நன்கொடை உறுதி…

    • 0 replies
    • 356 views
  11. தவறாக வௌியிட்ட செய்தியை திருத்தவும்; AFP செய்திச் சேவைக்கு கடிதம் தனது தலைமையில் மரணப்படை ஒன்று செயற்பட்டதாக சர்வதேச ஊடகமான பிரான்ஸ் செய்திச் சேவை (AFP) வௌியிட்ட செய்தி தவறானது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியுள்ளார். இதன்காரணமாக குறித்த செய்தியை திருத்தி பிரசுரிக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது சட்டத்தரணியூடாக பிரான்ஸ் செய்திச் சேவைக்கு (AFP) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றிற்கு தெரிவிக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து தன்மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு செய்தி வௌியிடப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் ல…

    • 0 replies
    • 195 views
  12. வௌிநாட்டு நீதிபதிகளை நியமிக்க அரசாங்கம் இணக்கம் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக வௌிநாட்டு நீதிபதிகளை நியமிக்க அரசாங்கம் இணங்கியுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தற்போதைய அரசாங்கத்தால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இணங்கியுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டியேற்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=89574

  13. மஹிந்த ராஜபக்‌ஷவிடம் தற்போது விசாரணை முன்னளா் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, பாரிய மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் அங்கு ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில், மஹிந்த ராஜபக்ஷவின் விளம்பரங்களை காட்சிப்படுத்தியமையால், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்ட நஸ்டம் குறித்த விசாரணைகளுக்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=89569

    • 0 replies
    • 193 views
  14. இலங்கையில் உயர்ஸ்தானிகராலயம் அமைக்க நியூஸிலாந்து முடிவு Tweet இலங்கைக்கான நியூஸிலாந்துக்கான உயர்ஸ்தானிகராலயத்தை கொழும்பில் திறக்கவுள்ளதாகவும், இதன்மூலம் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மேலும் வலுப்படும் என்றும் நியூஸிலாந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் முரே மெக்கலி கூறினார். “உள்நாட்டுப் போரால் ஒரு தலைமுறை இடைவெளியின் பின் இலங்கை மீளக் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது. இலங்கையின் இந்த முயற்சிக்கு அரசியல் ரீதியாகவும் விரிவாக்கப்பட்ட பொருளாதார ரீதியாகவும் உதவ நியூஸிலாந்து விரும்புகிறது. பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைந்து வரும் இலங்கையில் பாற்பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகள் அதிகமாக இ…

    • 0 replies
    • 218 views
  15. உயிரிழந்த காயமடைந்த பயங்கரவாதிகளின் விபரங்கள் இல்லை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) 1972ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் எம்மிடத்தில் இல்லை என ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான கஜந்த கருணாதிலக்க சபையில் அறிவித்தார். அதேநேரம் இக்காலப்பகுதியில் அரச பாதுகாப்புத் தரப்பில் பொலிஸ் தவிர்ந்து ஏனைய படைகளில் 25ஆயிரத்து 363 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 38ஆயிரத்து 675 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று வாய்மூலவிடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டு எதி…

  16. ஒரு வழி பாதையில் ஜெனீவா பிரேரணை : ஏற்குமா இலங்கை? இலங்கை அரசாங்கம் போர் குற்றங்கள் குறித்த விசாரணைக்கு, சர்வதேச நீதிபதிகள் முறையை எதிர்த்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர், விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகள் முறையை பின்பற்றவேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இச்சூழலில் யுத்த குற்ற விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. யார் சர்வதேச தரப்பிடம் வாக்குறுதிகளை கொடுத்தாலும், ஜனாதிபதியின் நிலைப்பாடு உள்ளக விசாரணை பொறிமுறை என்பதே என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கையில் சர்வதேச ந…

  17. ரஷ்ய இராணுவ வீரர்களின் நினைவு தூபிக்கு ஜனாதிபதி மலர் அஞ்சலி செலுத்தினார்…! நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் நடைபெறும் இலங்கை ஜனாதிபதி ஒருவரின் முதலாவது ரஷ்யாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் ரஷ்யாவின் பிரபல இராணுவ வீரர்களின் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். மொஸ்கோ நகரின் செஞ்சதுக்கத்தில் அலெக்சாண்டர் பூங்காவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நினைவு தூபியானது இரண்டாவது உலக யுத்த காலத்தில் உயிர் நீத்த சோவியத் ஒன்றியத்தின் இராணுவ வீரர்களின் நினைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. செஞ்சதுக்கத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி மொஸ்கோ நகரின் இராணுவ கட்டளையிடும் அதிகாரியி…

  18. கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு கிராமத்தில் வெடிக்காத நிலையில் வெடி பொருட்கள் : அச்சத்தில் மக்கள் அண்மையில் ஒருமாத கால தொடர் போராட்டத்தின் மூலம் தமது சொந்தக்காணிகளுக்குள் சென்ற கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தற்போது அவர்களது காணிகளில் ஆபத்து ஏற்படுமென்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். விடுவிக்கப்பட்ட காணிகளில் மற்றும் கிணறுகளில் வெடிக்காத வெடி பொருட்கள் காணப்படுவதாகவும், இதனால் தமது காணிகளை சுத்தப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்வதில் தமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அண்மையில் கூட ஒருகாணியில் துப்பரவு செய்து தீ வைக்கும்போது வெடிபொருள் ஒன்று வெடித்ததாகவும் எவருக்கும் அதனால் தெய்வாதீனமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்…

  19. சம்­பந்­தன் - மைத்­திரி அடுத்­த­வா­ரம் சந்­திப்பு புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் தொடர்­பில் எதிர்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­த­னுக்­கும், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும் இடையே அடுத்த வாரம் சந்­திப்பு நடை­பெ­றும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க நட­வ­டிக்­கை­கள் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. வழி­ந­டத்­தல் குழு­வின் கூட்­டத்­தில் அதி­கா­ரப் பகிர்வு தொடர்­பான விட­யங்­கள் அலசி ஆரா­யப்­பட்டு முடி­வ­டைந்­துள்­ளன. இந்த நிலை­யில் எதிர்க்கட்­சித் தலை­வ­ரும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்­கும், அரச தலை­வர் மைத…

  20. வாள் வெட்டுக் கும்பலின் அச்சுறுத்தலால் கோவிலில் தஞ்சமடைந்தனர் மக்கள் : வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்­பு­பட்­ட­வர்­கள் கைது செய்­யப்­ப­டும் வரை, பாது­காப்­புக்­காக ஆல­யத்­தில் படுத்­து­றங்­கு­வோம் என்று தெரி­வித்த வட­ ம­ராட்­சிப் பகு­தியை சேர்ந்த பத்­துக்­கும் மேற்­பட்ட குடும்பங்கள், நேற்று இரவு பருத்தித்துறை நீதிமன்றுக்கு முன்பாகவுள்ள இந்து ஆலயத்தில் தங்கி யிருந்தனர். பொலிஸாரின் உத்தரவாதத்தையடுத்து நேற் றுப் பின்னிரவு அவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பினர். வடமராட்சி, அல்வாய் பகுதியில் நேற்றுமுன்தினமிரவு இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க் கப்…

  21. வீடு புகுந்த கொள்ளைக் கும்பல் 3 பெண்கள் மீது வாள்வெட்டு - இணுவிலில் ஞாயிறன்று அதிகாலை சம்பவம் இணு­வில் சிவ­காமி அம்­மன் கோவி­ல­டி­யில் வீடு புகுந்து கொள்­ளை­யிட முயற்­சித்த கொள்­ளை­ய­ருக்கு பெறு­ம­தி­யான பொருள்­கள் எவை­யுமே கிடைக்­க­வில்லை. இத­னால் வீட்­டில் இருந்த 3 பெண்­கள் மீது வாள்­வெட்­டுத் தாக்­கு­தலை மேற்­கொண்­டு­விட்­டுக் கொள்­ளைக் கும்­பல் தப்­பித்­தது என்று தெரி­விக்­கப்­பட்­டது. இணு­வில் சிவ­காமி அம்­மன் கோவி­ல­டி­யில் உள்ள ஆண் தாதிய உத்­தி­யோ­கத்­தர் ஒரு­வ­ரின் வீட்­டி­லேயே இந்­தச் சம்­ப­வம் நேற்­று­முன்­தி­னம் ஞாயிற்­றுக்­கி­ழமை அதி­காலை வேளை­யில் இடம்­பெற்­றது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். …

  22. பிரச்சினைகளை தீர்க்க விட்டால் வடக்கு முதலமைச்சர் பதவி விலக வேண்டும் - வேலையற்ற பட்டதாரிகள் தமது பிரச்சினைகளை கேட்டுத் தீர்ப்பதற்கு முடியாவிட்டால் வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் பதவி விலக வேண்டுமென, வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு இன்று சென்றிருந்த வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்டோர் பட்டதாரிகளை சந்திக்காமல் அங்கிருந்து திரும்பியுள்ளனர். இதனையடுத்தே, வேலையற்ற பட்டதாரிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். …

  23. வடமாகாணசபைக்கு கிழக்கு முதலமைச்சர் நன்றி கிழக்கில் டெங்கு நோய் தீவிரமாக பரவி வரும் நிலையில் வடக்கிலிருந்து தேர்ச்சி பெற்ற இரண்டு புகைவிசுறும் குழுவினரை அனுப்பியமைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வட மாகண முதலமைச்சர் சி வி விக்ேனஸ்வரன் மற்றும் சுகாதார அமைச்சர் பா,சத்தியலிங்கத்துக்கு தமது நன்றிகளை தெரிவித்துள்ளார், கிழக்கு மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள இடங்களுக்கு இந்தக்குழுவினர் பயணிக்கவுள்ளதுடன் அங்கு இவர்கள் புகைவிசுறும் நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளனர். அண்மையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் மற்றும் வட மாகாண சுகாதார அமைச்சர் பா,சத்தியலிங்கத்துக்குமிடையில் இடையில் இடம்பெற்ற க…

  24. “சர்வதேச நீதிபதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை” (ஆர்.யசி) யுத்த குற்ற விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. யார் சர்வதேச தரப்பிடம் வாக்குறுதிகளை கொடுத்தாலும் ஜனாதிபதியின் நிலைப்பாடு உள்ளக விசாரணை பொறிமுறை என்பதே என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்தது. ஆட்சி மாற்றம் ஏற்படாது இருந்திருப்பின் இராணுவமும் ராஜபக் ஷக்களும் போர்க்குற்றவாளிகளாக தண்டிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி குறிப்பிட்டது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற போதே கட்சியின் உறுப்பினர்கள் இதனை தெரிவித்தனர். http://www.virak…

  25. இந்திய மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையால் கைது இலங்கை கடற்பரப்பில் வெவ்வேறு பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த 16 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அனலைதீவு கடற்பரப்பில் வைத்து 8 இந்திய மீனவர்களையும் மேலும் 8 இந்திய மீனவர்களை மன்னார் கடற்பரப்பில் வைத்தும் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். http://www.virakesari.lk/article/18153

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.