ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143398 topics in this forum
-
யாழ்.நல்லூரில் கடைக்குள் புகுந்த மர்மக்கும்பல் இளைஞர்கள் மீது வாள்வெட்டு யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி வீதியில் உள்ள கடையொன்றினுள் இன்று இரவு 7.15 மணியளவில் நுழைந்த இனந்தெரி யாத பத்துப்பேர் அடங்கிய கும்பல் கடையில் வேலை செய்யும் இரு இளைஞர்களை வாளால் வெட்டியதுடன் கடையை யும் தீயிட்டு கொழுத்தி உள்ளனர். இச் சம்பவத்தில் 24 வயதுடைய கஜலக்சன் மற்றும் 20 வயதுடைய அஜித் என்பவர்களே வாள் வெட்டுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு மாநகர தீயணைப்பு படை விரைந்து வந்து தீயை அணைத்ததுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடையினு…
-
- 5 replies
- 731 views
-
-
மிதவாத தமிழ் தலைமைகளின் நிலையை உணர்ந்துகொள்ள வேண்டும் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காணும் விடயத்தில் நல்லாட்சி அரசாங்கமும் இழுத்தடிப்புப் போக்கை கடைப்பிடித்து வருகின்றமையானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொடுத்த பின்னரும் இந்த நிலை நீடித்துவருகின்றது. இதனால் வெறுப்படைந்துள்ள தமிழ் மக்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக அணிதிரளும் நிலை தற்போது உருவாகி வருகிறது. தமிழ் மக…
-
- 0 replies
- 426 views
-
-
-
- 0 replies
- 505 views
-
-
“கைபற்றிய சான்றுப் பொருட்கள் எம்மிடமிருந்து எடுக்கப்பட்டவை அல்ல” தம்மீது சுமத்தப்பாட்ட குற்றச்சாட்டை முன்னாள் போராளிகள் மறுப்பு:- அண்மையில் கிளிநொச்சி மற்றும் ஏனைய மாவட்டங்களில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான முன்னாள் போராளிகள் ஐந்து போரையும் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்திய பொழுது சந்தேக நபர்கள் தங்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றங்களை தாம் செய்யவில்லை எனவும் கைபற்றிய சான்றுப் பொருட்கள் தம்மிடமிருந்து எடுக்கப்பட்டவை அல்ல எனவும் தாம் அக்குற்றங்களை புரியவில்லை எனவும் சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதிருந்த போதும் அதனை மன்றில் சம…
-
- 0 replies
- 384 views
-
-
சுமந்திரன் விவகாரத்தில் கைதாகியுள்ள முன்னாள் போராளிகள் நால்வரும் அனுராதபுரம் சிறையில் (எம்.எப்.எம்.பஸீர்) தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரும் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் மேற்பார்வையில் அதன் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் மொஹம்மட் நவா ஸின் நேரடி கட்டுப்பாட்டில் இது குறித்த மேல …
-
- 1 reply
- 502 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணை முயற்சிக்கின்றனர் – The Siasat Daily தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணைய முயற்சிப்பதாக The Siasat Daily என்ற ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் மறைவுடன் இயக்கத்தின் செயற்பாடுகள் முற்றுப் பெற்ற போதிலும், மீள ஒருங்கிணைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மற்றும் தமிழகத்தைப் மையப்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு சர்வதேச ரீதியான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்திய உள்துறை அமைச்சிற்கு புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய இரகசிய அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்…
-
- 0 replies
- 537 views
-
-
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதி வைத்தியசாலையில்.! பூசா தடுப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் இருவரில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றுமொருவர் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டமையால் சுகயீனமுற்ற நிலையில் அவர் நேற்று மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தங்கவேலு நிமலன் என்ற தமிழ் அரசியல் கைதியே தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூசா தடுப்பு முகாமிலிருந்து தங்களை வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரியே இவர்கள் கடந்த 25 ஆம் திகதி முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். …
-
- 0 replies
- 185 views
-
-
சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்கு சென்று தான் இருக்க வேண்டிவரும் ; நாவற்குழி சிங்கள மக்கள் எங்களுக்கு வீடுகளை வழங்ககக் கூடாது எங்களை வெளியேற்றுங்கள் என்றால் எங்கள் சொந்த இடத்திலிருந்து நாங்கள் எங்கு செல்வது, அவ்வாறு எங்களை விரட்டினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்குச் சென்று தான் இருக்க வேண்டி வரும் என நாவற்குழியில் குடியமர்ந்திருக்கின்ற சிங்கள மக்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் நாவற்குழியில் குடியமர்ந்துள்ள தமிழ், சிங்கள மக்களுக்கான தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதன் போது ஊடகங்களைச் சந்தித்துக் கருத்து …
-
- 0 replies
- 503 views
-
-
கேப்பாப்புலவில் காணிகளை விடுவிப்பதாக அரசும் இராணுவமும் கூறியது பொய் : ரவிகரன் கேப்பாப்புலவு பிரசேத்தில் 235 ஏக்கர் காணியை விடுவிப்புச் செய்வதாக இராணுவமும் அரசாங்கமும் கூறியது முற்றிலும் பொய்யென வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். கேப்பாப்புலவு பிரதேசத்தில் இதுவரை ஒரு ஏக்கர் காணியைக்கூட இராணுவம் விடுவிக்கவில்லையென்பதே உண்மையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, கேப்பாப்புலவு என்பது வன்னிப் பெருநிலப்பரப்பின் பூர்வீகக் கிராமங்களில் ஒன்றாகும். இது தொடர்பாக இலங்கை பிரித்தானிய காலனித்துவத்துக்கு உட்பட்டிருந்த காலத்தில் இலங்கையை நிர்வ…
-
- 0 replies
- 350 views
-
-
தமிழ்ப் பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வருகின்றது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மஹிந்தவின் பிரஜாவுரிமையும் இரத்தாகும் என்கிறது தேசிய சுதந்திர முன்னணி நாட்டின் ஒற்றையாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து இரண்டாக பிளவுபட்ட ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்ற பிரிவினைவாதிகளின் கோரிக்கையை நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றப்போகின்றது.எனவே தமிழீழ கனவுக்கு தடையாக உள்ள அனைத்து தலைவர்களையும் முடக்கும் அரசாங்கம் தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பிரஜாவுரிமையை இரத்துச் செய்ய முயற்சித்து வரு கின்றதென தேசிய சுதந்திர முன்னணியின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரு…
-
- 0 replies
- 257 views
-
-
புதிய அரசியலமைப்பின் ஊடாக சகலரும் ஒற்றுமையாக வாழும் சூழல் உருவாக்கப்படும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறுகிறார் திட்டமிட்ட அடிப்படையிலான பொருளாதாரத்தின் ஊடாகக் கிடைக்கப் பெறும் பிரதிபலன்கள் கிடைக்கப்பெற்றதும் எவ்வித தாமதமும் இன்றி நாட்டு மக்களை வரிச் சுமையிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். புதிய அரசியலமைப்பின் ஊடாகத் தற்போது காணப்படும் குறைபாடுகளை சீர்செய்து, நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்து சகல மக்களும் ஒன்றாக வாழக் கூடிய இலங்கையின் அடையாளத்தை உருவாக்குவதற்கு நாம் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம் என்றும் அமைச்…
-
- 0 replies
- 255 views
-
-
உத்தேச அரசியலமைப்பினை காரணம் காட்டி நல்லாட்சியை கவிழ்க்க முடியாது சிறுபான்மை மக்களுக்கு நியாயமான தீர்வு கிட்டும் என்கிறார் அமைச்சர் ுதிய அரசியலமைப்பு இன்னும் முழு வடிவம் பெறவில்லை. எனவே உத்தேச மட்டத்திலுள்ள அரசியலமைப்பை முதற்காரணியாக கொண்டு தேசிய அரசாங்கத்தை கவிழ்த்துவிட முடியாது. அதேநேரம் சிறுபான்மை மக்களுக்கு ஒற்றையாட்சியின் கீழ் ஒரு நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றதென நீர்ப்பாசன அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார். புதிய அரசியலைமைப்பினை காரணமாக காட்டி ஆட்சிமாற்றத்தினை ஏற்படுத்த வே…
-
- 0 replies
- 222 views
-
-
திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா, ஜப்பானுடன் பேச்சு நடத்திவருகின்றோம் மஹிந்த ஓய்வுபெற்றிருந்தால் பிரச்சினை வந்திருக்காது என்கிறார் ரணில் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக திட்டங்களை உருவாக்கியிருக்கின்றோம். அதற்காக ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மஹிந்த ராஜபக் ஷ இரு தடவைகள் பதவி வகித்து விட்டு ஓய்வுபெற்று சென்றிருந்தால் இன்று இந்த நாட் டில் ஒரு பிரச்சினையும் வந்திருக்காது. மஹிந்த ராஜபக் ஷ ஓய்வுபெறாததன் காரணமாகவே நாங்கள் பொது வேட்பாளரை நிறுத்…
-
- 0 replies
- 204 views
-
-
முதல் நாள் அமர்விலேயே இலங்கை குறித்த விடயங்களை பிரஸ்தாபிக்கவுள்ள ஹுசைன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 24 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில் முதலாவது அமர்வில் உரையாற்றவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பில் பிரஸ்தாபிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் முதல் மூன்று நாட்களில் நடைபெறவுள்ள அமர்வுகளில் உரையாற்றவுள்ள பிரிட்டன், அவுஸ்திரேலியா, சுவீடன், பிரான்ஸ், டென்மார்க், நெதர்லாந்து, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் இலங்கை விவகாரம் தொடர்பிலும் பிரஸ்தா…
-
- 0 replies
- 298 views
-
-
தீர்வு விரைவில் வரவேண்டியது அவசியம் வலியுறுத்துகின்றார் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் (மூதூர் நிருபர்) “இந்த நாட்டில் சமத்துவமாகவும் சுயமரியாதையுடனும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என எமது மக்கள் விரும்புகின்றனர். அதற்கான தீர்வு விரைவில் வரவேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். புதிதாக பல கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் கலைத்தம்ப மண்டபத்தை பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தபோதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். ஆலயத்தின் இந்த தம்பமண்டபத்தை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேற்ற…
-
- 0 replies
- 439 views
-
-
புதிய அரசியலமைப்பினை குழப்ப வேண்டாம் ராஜபக் ஷவின் கூட்டங்கள் சவாலானவை அல்ல; திருடர்களை சிறையில் அடைப்போம் என்கிறது ஐ.தே.க. மஹிந்த ராஜபக் ஷவை சவாலாக கருதி அரசாங்கம் செயற்படவில்லை. அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் அளவிற்கு அவர்களிடம் பலம் இல்லை. மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் இருந்து நாட்டின் சொத்துக்களை சூறையாடிய திருடர்களை அடுத்த இரு ஆண்டுகளுக்குள் சிறைக்கு அனுப்பியே தீருவோம் என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை தடுக்க எவரும் முயற்சிக்கவேண்டாம். அது ஜனநாயகத்தை மீறும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டார். பொது எதிரணியின் பேரணி தொடர்பில் அரசா…
-
- 0 replies
- 316 views
-
-
புலிகளின் மீளுருவாக்கத்திற்கு மஹிந்த ராஜபக் ஷவே காரணம் முன்னாள் போராளிகள் 12 ஆயிரம் பேரை விடுவித்து நாட்டை அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ளார் என்கிறார் சம்பிக்க ரணவக்க யுத்தத்தில் அழிக்கப்பட்ட புலிக ளின் நகர்வுகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியில் செயற்படும் தமிழ் அரசியல் தலைவர்களை கொலைசெய்வதே இவர்களின் இலக்காக உள்ளது. ஆகவே நாட்டின் இராணுவ பாதுகாப்பை பலப்படுத்தி புலனாய்வு நட வடிக்கைகளை மேலும் விஸ்தரிக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்தது. புலிகளின் மீளுருவாக்கத்திற்கு முன்னைய அரசாங்கமே காரணமாகும். 12 ஆய…
-
- 0 replies
- 431 views
-
-
நயினாதீவில் பெளத்த சின்னங்களை அதிகரித்து, பௌத்த மத அடையாளங்களைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக, நயினாதீவு நாகதீப புரான விகாரையில் புதிதாக புத்தர் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் நாள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி கருங்கல்லில் செதுக்கப்பட்ட இந்தப் புத்தர் சிலையை திறந்து வைத்தார். நாகபாம்பு மீது புத்தர் தியானத்தில் அமர்ந்திருக்கும் வகையில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற லெப்.கொமாண்டர் ஜெயவர்த்தன இந்தச் சிலையை வடிவமைத்துள்ளார். இந்த சிலை திறப்பு விழாவில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மி…
-
- 0 replies
- 395 views
-
-
கொள்கைகள் மக்கள் நலம் சார்ந்ததாக அமைய வேண்டும். தனிப்பட்ட அரசியல்வாதிகளின் அடுத்த தேர்தலை மையமாக வைத்து வகுக்கப்படக் கூடாது என தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு, வடமாகாணத்தின் நீர்வளத்தினை மீட்டெடுத்தல், பாதுகாத்தல், பங்கிடுதல், முகாமை செய்தல் எனும் விடயப்பரப்புக்களை உள்ளடக்கியதாக வடமாகாணத்திற்குப் பொருத்தமான ஒரு நீரியல் கொள்கையினை வகுப்பதற்கான சர்வதேச மற்றும் உள்@ர் நிபுணர்கள் கலந்து கொண்ட ஆய்வரங்கு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்றுக் காலை 10 மணியளவில் …
-
- 0 replies
- 303 views
-
-
போர்க்குற்றம் மேற்கொண்ட நபர்கள் உள்ளார்கள் என்றால் தராதரம் பாராமல் தண்டனை வழங்க வேண்டும் என பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். உலகின் திறமையான இராணுவம் என்றாலும் தவறிழைக்கக்கூடிய சிலர் இருக்க கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மல்வத்து அஸ்கிரி மஹநாயவை நேற்று சந்தித்த போது பொன்சேகா இதனை குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து நுகேகொடயில் மஹிந்த நடத்திய பேரணி குறித்து கருத்து வெளியிட்டார். விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவராக விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) இந்த பேரணியில் உரையாற்றியமை தொடர்பில் அமைச்சர் கருத்து வெளியிட்டிருந்தார். “கருணா அம்மான் என்பவர் புலிகள் இயக்கத்தில் தொ…
-
- 0 replies
- 468 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு , முஸ்லீம்களுக்கு என்ன தீர்வை முன் வைக்க போகிறது? வடகிழக்கு இணைந்தால் தாம் சிறுபான்மையாகி விடுவோமென்ற சந்தேகம் முஸ்லீம் மக்களிடம் உண்டு. எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பு கிழக்கிலுள்ள முஸ்லீம் சிவில் சமூகத்திடம் தமிழ் தரப்பினால் முஸ்லீம்களிற்கு தீர்வாக என்னத்தை வழங்கமுடியுமென்பதை தெளிவுபடுத்த வேண்டும். என காத்தான்குடி முஸ்லீம் போரத்தின் பிரதிநிதிகள் தெரிவித்து உள்ளனர். வடமாகாணத்திற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு உள்ள காத்தான்குடி முஸ்லீம் போரத்தினை சேர்ந்தவர்கள் வடக்கில் பல்வேறு இடங்களுக்கும் சென்றும் பல தரப்பினர்களை சந்தித்து தற்கால தமிழ் முஸ்லீம் மக்களுக்கு இடையிலான புரிந்துணர்வு தொடர்பில் கலந்த…
-
- 4 replies
- 429 views
-
-
கடந்த 10.01.2017 வெளிமாவட்டத்தில் பணியாற்றிய ஆசிரியர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய மூன்று ஆசிரியர்களுக்கு வடமாகாணக் கல்விப்பணிப்பாளரால் வழங்கப்பட்ட ஜனநாயக விரோத “பணித்தடை” உத்தரவை விலக்கி ஆசிரியர்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது. நாளை திங்கட்கிழமை காலை 9 மணிக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண முதலமைச்சர் செயலகம் முன்பாகக் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறும். அத்துடன் இந்தக் கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்கும் வரை ஜனநாயக ரீதியான இப்போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 234 views
-
-
புதிய அரசியலமைப்பு தயாரிப்பு பணிகளில் தடங்கல்-கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பு தயாரிப்பு பணிகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டிருந்த போதிலும் தற்போது அதில் தடங்கல் காணப்படு வதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் இதுவரை இணைந்து இயங்கியமைக்கு மாறாக கருத்துக்களை கூறுவதற்கு தலைப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதன்காரணமாக அரசியலமைப்பு தயாரிப்பு பணிகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய அரசியலமைப்பு பணிகள் முற்றுமுழுதாக சுமுகமாக நிறைவடையும் என எதிர்பார்…
-
- 0 replies
- 508 views
-
-
தினமும் தம்மை நிர்வாணப்படுத்தி சோதனைக்குட்படுத்துவதாக தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு கடிதம் தினமும் தம்மை நிர்வாணப்படுத்தி சோதனைக்குட்படுத்துவதாக தெரிவித்து கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து சிறைச்சாலையின் உயர் அதிகாரிகள், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டுள்ள போதும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையெனவும் கைதிகள் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். அரசாங்கத்தின் உத்தரவின் அடிப்படையிலேயே இச் சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறுவதாக தெரிவித்துள்ள கைதிகள், தம்மையும் மனிதர்களாகவு…
-
- 0 replies
- 354 views
-
-
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் உறுதிமொழி பாதுகாக்கப்படுமா? வடக்கில் காணாமலடிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த நான்கு தினங்களாக வவுனியாவில் மேற்கொண்ட உணவுத்தவிர்ப்புப் போராட்டம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தனவின் எழுத்து மூல உறுதியையடுத்து வியாழனன்று மாலை கைவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 9ஆம் திகதி பிரதமர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், சட்டமா அதிபர் உள்ளிட்டவர்களுடன் உண்ணாவிரதம் இருந்தவர்களில் 10 பேருக்கு பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் அளிப்பதாக இராஜாங்க அமைச்சர் எழுத்து மூல உத்தரவாதம் அளித்துள்ளார் . காணாமலடிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்…
-
- 1 reply
- 515 views
- 1 follower
-