ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதுகாக்க Android App -ஜே.ஏ.ஜோர்ஜ் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக குற்றங்களை குறைக்கும் வகையில், அவர்களது பாதுகாப்புக்காக அலைபேசி செயலி ஒன்றை அறிமுகப்படுத்த பொலிஸ், பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. முதலில் அன்ரோய்ட் (Android) திறன்பேசிகளில் அறிமுகமாகும் இந்த செயலி ( App) ஊடாக, தாம் இருக்கும் பிரதேசத்தில் 10 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பொலிஸ் நிலையம், வைத்தியசாலை உள்ளிட்டவற்றை உடனடியாக தொடர்பு கொள்ள முடியும். தற்போது, ஆங்க…
-
- 0 replies
- 223 views
-
-
மாலபே மருத்துவ கல்லூரிக்கு எதிராக யாழில் மருத்துவ பீட மாணவர்கள் நடைபவனி மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக கடந்த ஒரு வாரமாக யாழ் பல்கலைக்கழக மருந்துவ பீட மாணவர்கள் வகு ப்பு பகிஸ்கரிப்பு மற்றும் ,விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தநிலையில் குறித்த போராட்டத்தின் இறுதி நாளான இன்று ஏனைய கல்விச் சமூகத்துடன் இணைந்து நடை பவனி ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று காலை 9 மணியளவில் யாழ் மருத்துவ பீட முன்றலில் ஆரம்பித்த குறித்த நடை பவனி பலாலி வீதியின் ஊடாகச் சென்று வேம்படி சந்தியை அண்மித்து நல்லூர் பின் வீதியில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. நடைபவனியின் இறுதியில் வடக்கு மாகாண …
-
- 0 replies
- 412 views
-
-
யாழில் கோலாகலமாக ஆரம்பமாகியது சர்வதேச வர்த்தக கண்காட்சி யாழ்.மாநகர சபை, இலங்கை மாநாட்டு பணியகம் மற்றும் பன்னாட்டு வர்த்தக சபை ஆகியவற்றின் ஆதரவுடன் யாழ்ப்பாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனமும் இணைந்த விதமாக லங்கா எக்சிபிசன் அன்ட் கொன் பிறின்ஸ் சேவிஸ் பிறைவேட் லிமிடட் ஏற்பாடு செய்துள்ள வடக்கிற்கான நுழைவாயில் என்ற சர்வதேச வர்தக கண்காட்சி இன்றையதினம் யாழ்.மாநகரசபை மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியது. இன்றைய தினம் இதன் ஆரம்ப நிகழ்வுகள் காலை 10 மணியளவில் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியது. இந் நிக ழ்வில் பிரதம விருந்தினராக வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன், கௌரவ விருந்தினராக இந்திய துணைத்தூதுவர் ஆ. ந…
-
- 0 replies
- 270 views
-
-
வெளிநாடு செல்ல முன்னாள் போராளிகளுக்கு அனுமதி பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற நிலையில் விடுதலையான முன்னாள் போராளிகள், அவர்களின் தேவையின் நிமித்தம் வெளிநாடு செல்ல விரும்புவார்களாயின், அதற்கான ஏற்பாடுகளை புனர்வாழ்வு ஆணையாளர் நாயக அலுவலகம் மேற்கொள்ளத் தயாராக உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மூவர், அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு, இன்று இடத்பெற்றது. இதில் கலந்துகொண்ட, புனர்வாழ்வுத் திணைக்களத்தின் வன்னிப் பிரிவுப் பணிப்பாளர் கேணல் எம்.ஏ.ஆர்.ஹெமிடோன், உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர், இதுவரைய…
-
- 0 replies
- 341 views
-
-
உண்ணாவிரதம் கைவிடப்பட்டது -சண்முகம் தவசீலன், எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன், அ.அகரன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியா, பிரதான தபாலகத்துக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டு வந்த, உண்ணாவிரதப் போராட்டம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் வாக்குறுதியையடுத்து, கைவிடப்பட்டுள்ளது. அந்த பிரச்சினைக் குறித்து, எதிர்வரும் 9ஆம் திகதி, கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுப்பதாக அவர் வாக்குறுதியளித்துள்ளார். அன்றைய தினம், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அலரி மாளிக்கைக்கு வருமாறும் அவர் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளா…
-
- 9 replies
- 933 views
-
-
காணாமல்போனோர் பற்றி கையை விரித்தார் பிரதமர் காணாமல்போனோர் பற்றிய எந்தத் தகவல்களையும் இலங்கையில் தேடிக்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் இருப்பவர்களைத் தவிர ஏனையவர்கள் பற்றிய எந்தத் தகவலும் இலங்கையில் கிடையாது எனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். “இவர்கள் இலங்கையில் இல்லாத அதேநேரம், சட்ட ரீதியான வழியில் நாட்டை விட்டுச் சென்றிருக்கவில்லை” என்ற கொள்கை ரீதியான தீர்மானமொன்றை, காணாமல்போனோர் தொடர்பில் எடுக்க வேண்டியிருப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். காணாமல்போனோரின் உறவினர்கள், வவுனியாவில் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் ஜே.வி.பியின் தலைவருமான அநுர குமார தி…
-
- 1 reply
- 229 views
-
-
மகசின், அனுராதபுர சிறைகளில் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் கொழும்பு மகசின் மற்றும் அனுராதபுர சிறைச்சாலைகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமது வழக்குகளை விரைவுபடுத்த வேண்டும் என்று கோரியே இவர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் அல்லது வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்று முன்னர் உண்ணாவிரதப் போராட்டங்கள் அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டது. எனினும், தமது வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதாக அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். http://www.puthi…
-
- 0 replies
- 616 views
-
-
உண்ணாவிரதிகளை சுவாமிநாதனுக்கு பதில் ருவான் விஜேவர்தன சந்திக்க கூட்டமைப்பின் அழுத்தமே காரணம் வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திக்க பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவை அனுப்பும் முடிவு கடைசி நேரத்திலேயே எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கி ன்றன. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 14 பேர் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் உடல்நிலை மோசமடைந்து வந்த நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜேவிபி உறுப்பினர்கள் நேற்றுமுன்தினம் கேள்விகளை எழுப்பினர். …
-
- 1 reply
- 288 views
-
-
அரசியலமைப்பு தொடர்பில் பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர் – சோபித்த தேரர் அரசியலமைப்பு திருத்த முரண்பாடுகள் தொடர்பாக, சிலர் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு, மக்களை ஏமாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார். ஹெல உறுமய கட்சி உறுப்பினர்கள், கண்டி மல்வத்தை பீடத்துக்கு புதன்கிழமை விஜயம் செய்து, மல்வத்துப் பீட மகாநாயக்கரைச் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டனர். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, தேரர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது, ஒன்றிணைந்த எதிரணியினர், அண்மைக்காலமாக, புதிய அரசியல் திருத்தம் தொடர்பான பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டு …
-
- 0 replies
- 171 views
-
-
வடக்கிலுள்ள வைத்தியசாலைகளின் குறைகளை கண்டறிய வருகிறார் ராஜித வடக்கிலுள்ள வைத்தியசாலைகளின் குறைபாடுகளையும் சுகாதாரத்துறை பிரச்சனைகளையும் தீர்ப்பதற்காக அடுத்த மாதம் 18,19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் சுகாதார் அமைச்சர் வை ராஜித சேனாரத்ன வடக்கிற்கு விஜயம் செய்கிறார். இதன்போது இங்குள்ள குறைபாடுகளை தீர்க்க எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன மருத்துவர்கள் மற்றும் தாதிமாரின் குறைபாட்டைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். மருத்துவ (திருத்த) சட்டமூலம் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய எஸ்.சிறிதரன் எம்.பி வடக்கில் வைத்தியசாலைகளில் உள்ள குறைபாடுகள் பற்றி குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 223 views
-
-
காணாமல் போனோரின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கவேண்டும் போர்க்குற்றம் குறித்தும் விசாரணை அவசியம் என்கிறார் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் (எம்.நியூட்டன்) காணாமல் போனோரின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்கவேண்டியது அவசியமானதாகும். இதேபோன்று யுத்தக் குற் றம் தொடர்பாகவும் உரிய விசாரணை நடத் தப்படவேண்டும் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் செயலகத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் யாழ். பிராந்திய கொன்சியூலர் அலுவலக திறப்புவிழா நேற்று நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உட்பட அ…
-
- 0 replies
- 192 views
-
-
பயங்கரவாத முகத்தோடு எங்கள் மக்களைப் பார்ப்பதை நிறுத்த வேண்டும் -முதல்வர் விக்கி கோரிக்கை 50 வருடங்களுக்கு மேலாக ஒரு சட்டத்தரணியாகவும் அதில் பாதிக் காலம் நீதிபதியாகவும் பணியாற்றிய எனக்கு நாட்டின் பாதுகாப்பு பற்றிய அக்கறை இருக்கின்றது .எனவே பயங்கரவாத முகத்தோடு எங்கள் மக்களைப் பார்ப்பதை நிறுத்த வேண்டும் என வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் செயலகத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் அலுவலகம் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில் இன்று உண்மையிலேயே எங்களுக்கு ஒரு நல்ல நாள். அமைச்சர் மங்க…
-
- 0 replies
- 188 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு தெளிவான பதில் அளிக்கப்பட வேண்டும் – சம்பந்தன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கோரிக்கை நியாயமானது. அவர்களின் கேள்விக்கு நியாயமான பதில் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற வெளிவகார அமைச்சின் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , சில மாதங்களுக்கு முன்பு வவுனியா சென்ற போது அந்த அணியை சேர்ந்த பல தாய்மார்கள் , மனைவிமார்கள் என்னை சந்தித்தார்கள் அதனை தொடர்ந்து அந்த விடயத்தை பாராளுமன்ற…
-
- 2 replies
- 342 views
-
-
‘நுகேகொடை பேரணியால் பாதிப்பில்லை’ கவிதா சுப்ரமணியம் “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியில், அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு அரசியல்வாதியும் கலந்துகொள்ளமாட்டார் என்பதால், இந்தப் பேரணியால், அரசாங்கத்துக்கோ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கோ எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது” என்று, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலத்தில், நேற்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர…
-
- 0 replies
- 246 views
-
-
அரசியல் ரீதியில் நாடு தீர்மானம் மிக்க கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முஸ்லிங்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் கரங்களை பலப்படுத்த முன்வர வேண்டும் அரசியல் ரீதியில் நாடு தீர்மானம் மிக்க கட்டத்தை எட்டியுள்ள இந்த நேரத்தில் முஸ்லிங்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் கரங்களை பலப்படுத்த முன்வர வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வேண்டுகோள் விடுத்தார். அரசியலமைப்பு திருத்தம் இடம்பெற்றுவரும் இந்த நிலைமையில் முஸ்லிம் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி அவர்களை தவறாக வழிநடத்துவதற்கு சிலர் முயற்சித்து வருவதுடன் இந்த நேரத்தில் முஸ்லிங்களின் இராஜதந்திரம்மிக்க தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டுமென கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் ந…
-
- 0 replies
- 123 views
-
-
உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்காக ராஜீவ் இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்தார் – சீ.ஐ.ஏ உள்நாட்டு அரசியல் நோக்கங்களை பூர்த்தி செய்து கொள்ளும் நோக்கில் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்தார் என அமெரிக்க உளவுப் பிரிவான சீ.ஐ.ஏ தெரிவித்துள்ளது. சீ.ஐ.ஏவின் இரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது. 1987ம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலை இலக்கு வைத்து, ராஜீவ் காந்தி இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்தார் எனவும் குறிப்பாக இலங்கையின் வட பகுதிக்கு இந்திய ஹெலிகொப்டர் மூலம் உணவு உள்ளட்ட பொருட்களை கொண்டு வந்து வழங்கியிருந்த நடவடிக்கையானது இந்து மக்களை திருப்திபடுத்தி வாக்கு…
-
- 0 replies
- 313 views
-
-
நல்லூர் போராட்டத்தை புகைப்படம் எடுத்த வெளிநாட்டு பிரஜைகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளியிட கோரி வவுனியாவில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தினை வெளிநாட்டு பிரஜைகள். புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அத்துடன் போராட்டம் தொடர்பில் அவர்களுடன் வழிகாட்டியாக வந்திருந்தவரிடம் கேட்டு அறிந்து கொண்டனர். Tagsஉண்ணாவிரத போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் http://globaltamilnews.net/archives/15303
-
- 0 replies
- 284 views
-
-
'விமலின் கைதில் அரசியல் பின்புலம்' வி.நிரோஷினி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் கைதின் பின்னணியில், அரசியல் காரணமொன்று இருப்பதாக, அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸாமில் தெரிவித்தார். மேலும், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை கைவிட்டு, சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றுவதிலேயே இந்த அரசாங்கம் ஆர்வம் காட்டி வருவதாகவும், அவர் குறிப்பிட்டார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது, “வாக்குறுதிகளுடன் ஆட்…
-
- 0 replies
- 152 views
-
-
தமிழர்களின் ‘தங்கம்’: பதிலளிக்க ‘மந்தம்’ யுத்தத்தின் பின்னர் மீட்டெடுக்கப்பட்ட, தமிழ் மக்களின் தங்கம் தொடர்பிலான கேள்விக்குப் பதிலளிப்பதற்கு இரண்டுவாரகால அவகாசத்தை அரங்சாங்கம் கோரியுள்ளது. நாடாளுமன்றம், சபாநாயகர் தலைமையில் நேற்றுக்காலை 10.30க்குக் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான வாசுதேவ நாணயக்கார, யுத்தத்தின் பின்னர் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான பெருமளவு தங்கம், எங்கேனும் நம்பிக்கைப் பொறுப்பில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளதா எனக் கேள்வி கேட்டிருந்தார். இடையீட்டு கேள்விகளாக, “இவ்வைப்…
-
- 0 replies
- 289 views
-
-
யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் பாரிய தீ ( படங்கள் இணைப்பு ) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய அமைக்கப்பட்ட பெண்கள் விடுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எம்து செய்தியாளர் தெரிவித்தார். புதிய பெண்கள் விடுதியின் முதலாமாடியில் ஏற்பட்ட தீ பரவியதில் விடுதியின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் விடுதியில் இருக்கும் மாணவிகளை அப்புறப்படுத்தம் நடவடிக்கையில் தீயணைப்பு படையினரும் பொலிஸாரும் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினரும் ஈடுபட்டுள்ளனர். மின்னொழுக்கு காரணமாக தீயேற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றபோதிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவத்தில் எவ்வித உயிர்ச…
-
- 2 replies
- 673 views
-
-
ஓரினச்சேர்க்கை யோசனை அமைச்சரவையில் கூறியது யார்? : அமைச்சர் விளக்கம் (ப.பன்னீர் செல்வம், எம்.எம்.மின்ஹாஜ்) அமைச்சரவையில் ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி கோரி யோசனை முன்வைக்கப்படவில்லை. இப்படி யோசனை முன்வைக்கப்பட்டதாக கூறியது யார்? மனித உரிமை செயற்பாட்டுத் திட்ட அறிக்கையில் பாலியல் நாட்டம் என்ற யோசனையே முன்வைக்கப்பட்டதாக சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மருத்துவ திருத்தச் சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் ம…
-
- 0 replies
- 157 views
-
-
வர்த்தக நிலையங்களில் நள்ளிரவில் துணிகரக்கொள்ளை : முல்லைத்தீவில் சம்பவம் முல்லைத்தீவு நகரில் இன்று அதிகாலை இரண்டு வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு அண்மையாக உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிலும் மாவட்ட செயலகத்துக்கு அண்மையாக உள்ள ஆடையகம் ஒன்றிலும் இந்த கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன. இதில் பல்பொருள் அங்காடியில் சுமார் அறுபதாயிரம் ரூபா பணமும் மற்றும் சிகரெட் வகைகளும் களவாடி செல்லப்பட்டுள்ளதோடு ஆடை விற்பனை நிலையத்தில் முன்னூறு ரூபா பணம் மற்றும் ஆடைகள் பலவும் களவாடப்பட்டுள்ளன. குறித்த இரு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்…
-
- 0 replies
- 130 views
-
-
ராஜித கூறியது பொய்; அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஹொரணை வகவத்தை கைத்தொழில் வலயத்திற்கு இறப்பர் தொழிற்சாலைக்காக அரச காணி குத்தகைக்கு வழங்கப்படுவது தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன் தவறான கருத்தை வெளியிட்டிருப்பதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம கூறினார். அமைச்சர் மலிக் சமரவிக்ரம வெளியிட்டுள்ள அறிக்கையிலே இதனை கூறியுள்ளார். குறித்த தொழிற்சாலைக்காக ஹொரணை பிரதேசத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலம் சிறிய தொகை பணத்திற்காக குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அது தவறான கருத்து என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் மலிக் சமரவிக்ரம, அரச அளவையாளர்களால் அளவிடப்பட்டுள்ள பெறுமதிக்கு அமைவாக அந்த இடம் 9…
-
- 0 replies
- 157 views
-
-
கடற்படை புலனாய்வுப் பிரிவு முன்னாள் பொறுப்பாளர் கைது செய்யப்பட உள்ளார் கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் கைது செய்யப்பட உள்ளார். கடற்படைப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் ரியர் அட்மிரால் ஆனந்த குருகேவை கைது செய்ய உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு மேலதிக நீதவான் ராமஜெயம் ட்ரொஸ்கியிடம் தெரிவித்துள்ளனர். 2009ம் ஆண்டு இரண்டு கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் இந்த முன்னாள் கடற்படை அதிகாரி கைது செய்யப்பட உள்ளார். இதே சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்பய்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள லெப்டினன் கமான்டர் தம்மிக்க அனில் மாபாவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ம் திகதி வரையில் …
-
- 0 replies
- 352 views
-
-
இன முரண்பாட்டை ஏற்படுத்தும் செய்தி. பதில் அளிக்க மறுத்த காவல்துறையினர். இன முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமான செய்தி ஒன்றின் உண்மை தன்மையை அறியும் நோக்குடன் சில ஊடகவியலாளர்கள் , யாழ்.மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரை சந்திக்க சென்ற வேளை , தன்னை இப்பொழுது சந்திக்க முடியாது சனிக்கிழமை வந்து சந்தியுங்கள் என கூறி ஊடகவியலாளர்களை சந்திக்காது சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் திருப்பி அனுப்பியுள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு இருந்தார். அக் கொலை சம்பவத்துடன் முஸ்லீம் இளைஞர் ஒருவருக்கு தொடர்பு உண்டு எனவும் , அந்நபரை காவல்துறை தேடி வருவதாகவும் , அவர…
-
- 0 replies
- 243 views
-