Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இவ்வருடம் முதலாம் திகதி தொடக்கம் தற்போதுவரை 25 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அதில் பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ள மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட், டெங்கு பாதிப்பால் பாடசாலை ஒன்றும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2016 ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள்…

  2. ருகுணு அபி­வி­ருத்தி வலய உடன்­ப­டிக்கை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம சிங்­கவின் தலை­மையில் அம்­பாந்­தோட்­டையில் இன்று கைச்­சாத்­தி­டப்­ப­டு­கின்­றது. இந்நிகழ்வில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் பங்கேற் கவுள்ளனர். தேசிய அர­சாங்­கத்தின் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களில் மேலு­மொரு நகர்­வாக ருகுணு பொரு­ளா­தார அபி­வி­ருத்தி வலயம் இன்று ஆரம்­பிக்­கப்­ப­டு­கின்­றது. அம்­பாந்­தோட்டை, மொன­ரா­கலை ஆகிய மாவட்­டங்­களை உள்­ள­டக்­கிய வகையில் 15ஆயிரம் ஏக்கர் நிலப்­ப­ரப்பை உள்­ள­டக்­கிய வகையில் இந்த பொரு­ளா­தார வலயம் ஆரம்­பிக்­கப்­ப­டு­கின்­றது. அம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்தம் செய்­து­கொள்­ள­வுள்ள நிலையில் அத­னுடன் இணைத்து செயற்­ப­டுத்தும் வகை…

  3. யாழ் பொலிஸ் நிலைய எல்லைக்குள் டெங்கு தொடர்பில் 384 வழக்குகள் பதிவு கடந்த வருடம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தினால் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கையின் போது யாழ் பொலிஸ் நிலைய எல்லலைக்குட்பட்ட பகுதிகளில் 384 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய சூழல் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தள்ளார். யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தம் வகையில் கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை துரித நடவடிக்கைகளை மேற்கொண்டோம். டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் உள்ள வீடுகளை கண்டறிந்து அவற்றிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனடிப்படையில் 384 வழக்குகள் வீட்டு…

  4. வட மாகாணப் பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்ளீர்ப்பதற்காக இடம்பெற்ற போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான நேர்முகப்பரீட்சை இந்த மாதம் 16,17,18 ஆகிய மூன்று தினங்களும் இடம்பெறும் என வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் செயலாளர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணப் பாடசாலைகளில் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 2016ம் ஆண்டில் 1000 ஆசிரியர்களை நியமிக்க அனுமதி கிடைத்தது. அதற்காக விண்ணப்பஙகள் கோரப்பட்ட வேளையில் அதிக பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். இதனால் குறித்த பட்டதாரிகளுக்கு போட்டிப்பரீட்சை இடம்பெற்றது. அவ்வாறு இடம்பெற்ற பரீட்சையின் பெறுபேறும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பரீட்சை…

  5. விபத்தில் உயிரிழந்த மாணவி மாவட்டத்தில் முதலாமிடம் 2016 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் சோகமான செய்தியொன்றும் வெளியாகியுள்ளது. 2016 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில், கணித பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ள மாணவி, அண்மையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவியான சத்தியநாதன் சிவதுர்க்கா, கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த போது குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில், அண்மையில் உயிரிழந்திருந்தார். இவர், கணித பிரிவில் 3 ஏ சித்திகளை பெற…

  6. திம்புக் கோட்பாட்டை கருத்த்தில் எடுத்து இலங்கையின் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற அன்றைய ஜெயம்பதி விக்கிரம ரட்ண எங்கே? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக எஸ் எம் வரதராஜன்:- புதிய அரசியலமைப்பு:- ஜயம்பதி அன்று சொன்னது இன்று கவனத்தில் எடுக்கப்படுகிறதா? ஜயம்பதி விக்ரமரத்ன அவர்கள் இன்று முக்கியமான ஒருவர். ஜனாதிபதி வழக்கறிஞர் . அரசியலமைப்பு விவகார ஆலோசகர். இன்றைய புதிய அரசியலமைப்பு ஏற்பாட்டு விடயத்தில் அவரின் பங்காற்றலும் முக்கியமானது. இதைவிட முக்கியம் என்னவெனில் அவர் ஐக்கிய தேசியக் கடசியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் . அரசியலமைப்பு மாற்றம் -இன முரண்பாட்டுக்குத் தீர்வு என்ற விடயம் தொடர்பில் தான் அவர் பாராளுமன்றத்…

  7. புலிகளின் நினைவுச் சின்னங்கள் மீளமைக்கப்படவேண்டும்-கலந்தாய்வுச் செயலணி பரிந்துரை விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்குத் தேவையான அரசியலமைப்பு திருத்தங்கள் செய்ய ப்பட வேண்டும் என்று நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வுச் செயலணியின் தலைவர் மனோரி முத்தெட்டுவேகம தெரி வித்தார். கொழும்பில் நேற்று செயலணியின் அறிக்கை தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “தமது அன்புக்குரியவர்களை பறிகொடுத்தவர்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசா ங்கம் துரிதமாக எடுக்க வேண்டும்.இராணுவத்தினரால் தரைமட்டமாக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் புதைகுழிகள…

  8. முன்னாள் போராளிகளைப் போன்று இராணுவத்திற்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் – நல்லிணக்க செயலணி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு புனர்;வாழ்வு அளிக்கப்பட்டதனைப் போன்றே, இராணுவத்திற்கும் புனர்;வாழ்வு அளிக்கப்பட வேண்டுமென நல்லிணக்க பொறிமுறைமை குறித்த செயலணி பரிந்துரை செய்துள்ளது. வடக்கில் நிலை கொண்டுள்ள இராணுவப் படையினருக்கும் கிரமமான அடிப்படையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு ஒவ்வொரு படைப்பிரிவாக அகற்றப்பட வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது. இலங்கையின் வரலாற்றில் படையினருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டுமென முதல் தடவையாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என கொழும்பு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்த யோ…

  9. தெல்லிப்பளை இராணுவத்தின் வசமுள்ள மக்களின் காணிகளில் ஒரு பகுதியை அடுத்தவாரம் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் இராணுவத்தின் வசமுள்ள மக்களின் காணிகளில் ஒரு பகுதியை அடுத்தவாரம் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார். தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரமாக எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியை பிரகடனப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார், அவர் இது தொடர்பில் மேலும் குறிப…

  10. 5 பில்லியன் அமெரிக்க டொலரை முதலிட சீனா முன்வந்துள்ளது அடுத்த ஐந்து வருட காலப்பகுதியில் ஹம்பாந்தோட்டை வர்த்தக வலயத்தில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய சீனா தயாராகியுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் யிசியென் லியேன் கூறியுள்ளார். ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் நோக்கில் இந்த முதலீட்டை சீனா மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை வர்த்தக வலய திறப்பு இன்று இடம்பெற்ற போது, அதில் கலந்து கொண்ட போது சீன தூதுவர் இதனைக் கூறியுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/189365/-ப-ல-ல-யன-அம-ர-க-க-ட-லர-ம-தல-ட-ச-ன-ம-ன-வந-த-ள-ளத-#sthash.L5DFEMHD.dpuf

  11. ஜனாதிபதி சிறிசேனவின் இரு வருடகால ஆட்சி ஒரு கண்ணோட்டம் இலங்கை மணித் திரு­நாடு. இந்து சமுத்­தி­ரத்தின் முத்து, இனிய திரு­நாடு. பல்­வ­ளமும் பல்­லி­னமும் வாழும் நாடு. பகவான் புத்த பெரு­மானின் ஆசியும் அருளும் பெற்று பல மதங்­களும், பல மொழி­களும் பேசப்பட்டு இறை­யருள் பெற்­ற­நாடு. எத்­த­னையோ மன்­னர்கள், அர­சர்கள் ஆண்டு அனு­ப­வித்த நாட்டை போர்த்­துக்­கேயன், ஒல்­லாந்தன், ஆங்­கி­லேயன் ஆசை கொண்டு எம் நாட்டை ஆட்சி செய்து பின்னர் அந்­நியன் அடித்­தொ­ழிக்­கப்­பட்டு நம்மை நாமே ஆட்சி செய்­கின்ற பரி­பூரண சுதந்­திர நாடாகும். எத்­தனை பிர­த­மர்கள், எத்­தனை ஜனா­தி­ப­திகள், நம்­நாட்டின் தலைமை ஏற்று ஆட்சி செய்து இன்று தர்ம சொரூ­பனாக, கருணை மனத்­…

  12. வன்னிக்கோட்ட மக்கள் வீட்டுத்திட்டம் கோரி ஆர்ப்பாட்டம் க. அகரன் வவுனியா, சிதம்பரபுரம் வன்னிக்கோட்ட மக்கள் வீட்டுத்திட்டம் கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வன்னி கோட்டத்தில் வாழும் 300 குடும்பங்களுக்கு 1994ஆம் ஆண்டு காலப்பகுதியில் 25 ஆயிரம் ரூபாய் மானியமாகவும் 25 ஆயிரம் ரூபாய் கடனாகவும் வழங்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இந் நிலையில் தாம் தற்போதும் கடனாக வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாயைச் செலுத்தி வரும் நிலையில், தம்மால் அமைக்கப்பட்ட வீடுகள் மிகவும் சேதமடைந்துள்ளதாகவும் தாம் அவ்வீடுகளில் வசிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், தற்போது ஏனைய கிராமங்களுக்கு வழங்கப்படும் வீட்டுத்திட்ட…

  13. பூதாகரமாகும் பிரச்சினைகள் இலாபம் யாருக்கு? வில்­பத்து விவ­காரம் மீண்டும் பேசு­பொ­ரு­ளா­கி­யி­ருக்­கி­றது. வில்­பத்து சர­ணா­ல­யத்­துக்­கு­ரிய வனப்­பி­ர­தே­சங்­களை விரி­வு­ப­டுத்தி தற்­போது வன ஜீவ­ரா­சிகள் திணைக்­க­ளத்­துக்கு சேராத அது சார்ந்த அனைத்து நிலப்­ப­ரப்­பையும் உள்­ள­டக்­கக்­கூ­டி­ய­வாறு வன ஜீவ­ரா­சிகள் வல­யத்தை வர்த்­த­மா­னியில் பிர­க­ட­னப்­ப­டுத்­து­மாறு ஜனா­தி­பதி சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார். சுற்­றாடல் அமைச்சின் கீழுள்ள நிறு­வ­னங்­களின் அதி­கா­ரி­க­ளுடன் கடந்த வாரம் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்ற விசேட கலந்­து­ரை­யா­டலின் போதே ஜனா­தி­பதி இந்த ஆலோ­ச­னையை முன்­வைத்­துள்ளார். வில்­பத்து உள…

  14. இலங்கையிலுள்ள நிறுவனத்திற்கு வாகன உதிரிப்பாகங்களைப் பொருத்தும் அனுமதியை வழங்கவில்லை – Volkswagen இலங்கையிலுள்ள எந்தவொரு நிறுவனத்திற்கும் தமது வாகனங்களின் உதிரிப்பாகங்களைப் பொருத்தும் அனுமதிப்பத்திரத்தை வழங்கவில்லை என Volkswagen சர்வதேச நிறுவனம், டைம்ஸ் ஒன்லைன் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளது. Volkswagen சர்வதேச நிறுவனத்தின் தொடர்பாடல் பிரிவைச் சேர்ந்த கெத்தரின் ஹோமன் இதனைக் கூறியுள்ளார். http://newsfirst.lk/tamil/2017/01/95616/

  15. சாட்சியமளித்தோர் விடயத்தில் படையினர் தலையிடார்-பாதுகாப்பு செயலர் தெரிவிப்பு போரின் போது இடம்பெற்ற கொடுமைகள் தொடர்பாக நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியுடன் கருத்து க்களைப் பகிர்ந்தவர்கள் விடயத்தில் இராணுவமோ, காவல்துறையோ தலையீடு செய்யமாட்டாது என பாதுகாப்புச் செயலர் கரு ணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார். கலந்தாய்வு செயலணியின் முன்பாக சாட்சியமளித்தவர்கள், கருத்துக்களைப் பகிர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று செயலணியின் தலைவர் மனோரி முத்தெட்டுவேகம கோரியிருந்தார். இதுதொடர்பாக அவர் கடந்தவாரம் பாதுகாப்புச் செயலரை சந்தித்து, சாட்சியமளித்தவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத…

  16.  'பெப்ரவரி 10க்கு முன்னர் நிலைப்பாடுகளை அறிவியுங்கள்' தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வை கொண்டுவரும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் புதிய அரசியலைமைப்புக் கலந்துரையாடல் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டுக்கொண்டே போகிறது. அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய வழிகாட்டல் குழுவில், தயாரிக்கப்பட்ட இடைக்கால வரைபு பற்றிய தத்தமது நிலைப்பாடுகளை முன் வைப்பதில் கட்சிகள் இடையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இனிமேலும் இதை தள்ளி வைக்க முடியாது. குறிப்பாக அதிகாரப்பகிர்வு, தேர்தல் முறைமை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஆகியவை தொடர்பாக உங்கள் நிலைப்பாடுகளை வழிகாட்டல் குழுவுக்கு அறிவியு…

  17. இலங்கைக்கு எதிராக ஐ.நா வில் தீர்மானம் நிறைவேற்ற முயற்சி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சென்னையைச் சேர்ந்த சட்டத்தரணிகள் சிலர் உள்ளிட்ட தரப்பினர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்வரும் 9ம் திகதி சென்னையில் சட்டத்தரணிகள் கூடி இந்த விடயம் குறித்த ஆராய உள்ளனர். இலங்கையின் அரசியல் சானத்தின் 6ம் திருத்தச்சட்டம் தொடர்பிலேயே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் சட்ட மா அதிபர் றாம்சே கிளார்க் (Ramsey Clark) , தமிழக ஒய்வு பெற்ற நீதவான் சிவசுப்ர…

  18. கட­லுக்கு சென்று காணாமல் போயிருக்கும் மீன­வர்­களின் உண்மை நிலைமை என்ன? அமைச்சர் ஹக்கீம் விளக்கம் கடந்த டிசம்பர் 24ஆம் திகதி இரண்டு இயந்­திரப் பட­கு­க­ளில் ஆழ் கட­லுக்­கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போயுள்ள கல்­முனை பிர­தே­சத்தைச் சேர்ந்த மீன­வர்கள் பற்றி பல­வா­றான தக­வல்கள் வெளி­வந்த வண்­ண­முள்­ளன. பட­குகள் இரண்டும் அவற்றில் பய­ணித்த 6 மீன­வர்­களும் மாலைதீவு கடற்­ப­டை­யி­னரால் மீட்­கப்­பட்­டுள்­ளனர் என்ற ஆதா­ர­பூர்­வ­மற்­றதும், ஊர்­ஜி­த­மற்­ற­து­மான செய்­தி­யொன்றும் பரப்­பப்­பட்­டுள்­ளது. ஆனால் பாது­காப்புச் செய­லா­ளர் ­க­ரு­ணா­சேன ஹெட்­டி­ ஆ­ராச்­சி­யு­ட­னும் ­க­டற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் ரவீந்­திர சீ விஜே­கு­ண­ரத்­தி­ன­வு­ட…

  19. அல்ஹுசைன் மறுக்கவில்லையே எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்கிறார் ராஜித (ரொபட் அன்­டனி) சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ளீர்க்­க­மாட்டோம் என்ற அர­சாங்­கத்தின் தீர்மா­னத்தை ஐ.நா. மனித உரிமை ஆணை­ யாளர் ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தாக நான் கூறி­யதை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் ஒரு­போதும் மறுக்­க­வில்லை. அவ­ரது அலு­வ­லகம் டுவிட் டர் ஊடாகமறுத்­தது என்­ப­தனை ஏற்க முடி­யாது என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார். ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் சர்­வ­தேச நீதி­ப­தி­களை பரிந்­துரை செய்தி­ருந்­தாலும் தீர்­மானம் எடுப்­பது இலங்­கையின் இறை­ மையை பொறுத்­தது என்று ஏற்­க­னவே அறி­வித்­த…

  20. பொலிஸ் ஆணைக்­கு­ழுவின் தலைவர் திடீர் இரா­ஜி­னாமா (ரொபட் அன்­டனி) தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழுவின் தலைவர் பேரா­சி­ரியர் சிறி ஹெட்­டிகே தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­துள்­ள­தா­கவும் இரா­ஜி­னாமா கடி­தத்தை அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு சமர்ப்­பித்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஜேர்­மனில் உள்ள ஹைடில் பேர்க் பல்­க­லைக்­க­ழ­கத்தின் வருகை தரு விரி­வு­ரை­யா­ள­ராக நிய­மனம் பெற்­றுள்ள பேரா­சி­ரியர் சிறி ஹெட்­டிகே சில காலம் அங்கு பணி­யாற்­ற­வேண்­டி­யி­ருப்­பதால் பொலிஸ் ஆணைக்­கு­ழுவின் தலைவர் பத­வி­யி­லி­ருந்து வில­கு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் பொலிஸ் ஆணைக்­கு­ழுவின் ஒரு உறுப்­பி­ன­ராக தொடர்ந்து பதவி வகிக்க…

  21. கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் பட்டப்படிப்புகள் கற்கை நெறி இவ்வருடம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இவ்வருடம் இக் கற்கை நெறிக்காக 83 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் கிழக்குப் பல்கலைக்கழகப் பதிவாளர் வி.காண்டீபன் இன்று(05) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர் பொருத்தமான தொழில்நுட்ப அறிவும் பின்புலமும் உள்ள இளைஞரை உருவாக்குவது நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும். மேலும் இது சுயதொழில் முயற்சியாக்கங்களை உருவாக்க வழிவகுக்கும். நாட்டின் அபிவிருத்திக்கு தொழிநுட்பவியல் துறைசார் பட்டதாரிகளின் உருவாக்கம் மிகவும் அவசியமானதென்பதைக் கருத்திற்கொண்டு 2013 ஆம் ஆண்டிலிருந்து தொழில்நுட்பக் கல்விக்கற்கை க.பொ.த …

  22. புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரத்தில் கால­தா­மதம் இருக்கக்கூடாது புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் விட­யத்தில் கால­தா­மதம் காண்­பிக்­கப்­பட்டு வரு­கின்­றது. அர­சியல் யாப்­பு­ச­பையின் வழி­ந­டத்தல் குழு­வினால் அமைக்­கப்­பட்ட ஆறு உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள் தொடர்­பி­லான விவாதம் எதிர்­வரும் 9, 10, 11 ஆம் திக­தி­களில் நடை­பெறும் என்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை எதிர்­வரும் 10 ஆம் திகதி சமர்ப்­பிக்­கப்­படும் எனவும் முன்னர் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த விவா­தத்­திற்­கான ஏற்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. இந்த நிலையில் தற்­போது வழி­ந­டத்தல் குழுவில் இடைக்­கால அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட­மாட்­…

  23. பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மஹிந்த முஸ்தீபு (லியோ நிரோஷ தர்ஷன்) பிர­தமர் ரணில் விக்­ர­ம­ சிங்­க­விற்கு எதி­ராக வலு­வான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை ஒன்றை கொண்டு வரு­வது தொடர் பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ உள்­ளிட்ட கூட்டு எதிர்க் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அம்­பந்­தோட்டை துறை­முகம் மற்றும் சீன வர்த்­தக வலய விவ­காரம் உள்­ளிட்ட நாட்டில் முன்­னெ­டுக்­கப்­படும் புதிய அர­சி­ய­ல­மைப்பு நட­வ­டிக்­கைகள் போன்ற பல விட­யங்­களை உள்­ள­டக்­கிய நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையே இவ்­வாறு முன் வைக்­கப்­பட உள்­ளது. இந்த விடயம் தொடர்பில் …

  24. விசாரணைப் பொறிமுறைக்கு உள்ளக நீதிபதிகளின் பிரசன்னம் போதுமானது தேசிய அரசாங்கத்திற்குள் தொடர்பாடல் இடைவெளி என்கிறது சு.க. (ப.பன்­னீர்­செல்வம்) புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் சிங்­கள மக்­களின் 51 வீதமான ஆத­ரவு கிடைத்தால் மட்­டுமே அது நடைமுறை சாத்­தி­ய­மாக அமையும் என எதிர்­க்கட்சித்தலைவர் சம்­பந்தன் தெரி­வித்த கருத்தை வர­வேற்­ப­தாக அர­சாங்கம் தெரிவித்தது. மேலும் தேசிய அர­சுக்குள் தெளி­வான தகவல் தொடர்­பா­டல்கள் இல்­லா­ததன் கார­ண­மா­கவே பிரச்­சி­னைகள் தலை­தூக்­கு­கின்­றன என்றும் அரசின் பிர­தான பங்­கா­ளி­யான சுதந்­தி­ரக்­கட்சி குற்றம் சாட்­டி­யது. கொழும்பு கோட்­டை­யி­லுள்ள ஜனா­தி­பதி மாளி­கையில் நேற்று வெள்­ளிக்­கி­…

  25. யாழ் இளவாலையில் வாள்வெட்டுக்குழுவைச் சேர்ந்த ஐவர் கைது இளவாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இளவாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தினை வடமாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ரி.கணேசநாதன் தலைமையில் இயங்கும் சிவில் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்கள் புகைப்படம் எடுத்து சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகருக்கு அனுப்பியதனை அடுத்து சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் தலைமையிலான காவல்துறையினர் துரித கெதியில் விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.