ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இவ்வருடம் முதலாம் திகதி தொடக்கம் தற்போதுவரை 25 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அதில் பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ள மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட், டெங்கு பாதிப்பால் பாடசாலை ஒன்றும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2016 ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள்…
-
- 0 replies
- 340 views
-
-
ருகுணு அபிவிருத்தி வலய உடன்படிக்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் தலைமையில் அம்பாந்தோட்டையில் இன்று கைச்சாத்திடப்படுகின்றது. இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற் கவுள்ளனர். தேசிய அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் மேலுமொரு நகர்வாக ருகுணு பொருளாதார அபிவிருத்தி வலயம் இன்று ஆரம்பிக்கப்படுகின்றது. அம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 15ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய வகையில் இந்த பொருளாதார வலயம் ஆரம்பிக்கப்படுகின்றது. அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் செய்துகொள்ளவுள்ள நிலையில் அதனுடன் இணைத்து செயற்படுத்தும் வகை…
-
- 2 replies
- 381 views
-
-
யாழ் பொலிஸ் நிலைய எல்லைக்குள் டெங்கு தொடர்பில் 384 வழக்குகள் பதிவு கடந்த வருடம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தினால் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கையின் போது யாழ் பொலிஸ் நிலைய எல்லலைக்குட்பட்ட பகுதிகளில் 384 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய சூழல் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தள்ளார். யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தம் வகையில் கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை துரித நடவடிக்கைகளை மேற்கொண்டோம். டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் உள்ள வீடுகளை கண்டறிந்து அவற்றிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனடிப்படையில் 384 வழக்குகள் வீட்டு…
-
- 0 replies
- 232 views
-
-
வட மாகாணப் பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்ளீர்ப்பதற்காக இடம்பெற்ற போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான நேர்முகப்பரீட்சை இந்த மாதம் 16,17,18 ஆகிய மூன்று தினங்களும் இடம்பெறும் என வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் செயலாளர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணப் பாடசாலைகளில் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 2016ம் ஆண்டில் 1000 ஆசிரியர்களை நியமிக்க அனுமதி கிடைத்தது. அதற்காக விண்ணப்பஙகள் கோரப்பட்ட வேளையில் அதிக பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். இதனால் குறித்த பட்டதாரிகளுக்கு போட்டிப்பரீட்சை இடம்பெற்றது. அவ்வாறு இடம்பெற்ற பரீட்சையின் பெறுபேறும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பரீட்சை…
-
- 2 replies
- 262 views
-
-
விபத்தில் உயிரிழந்த மாணவி மாவட்டத்தில் முதலாமிடம் 2016 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் சோகமான செய்தியொன்றும் வெளியாகியுள்ளது. 2016 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில், கணித பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ள மாணவி, அண்மையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவியான சத்தியநாதன் சிவதுர்க்கா, கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த போது குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில், அண்மையில் உயிரிழந்திருந்தார். இவர், கணித பிரிவில் 3 ஏ சித்திகளை பெற…
-
- 1 reply
- 450 views
-
-
திம்புக் கோட்பாட்டை கருத்த்தில் எடுத்து இலங்கையின் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற அன்றைய ஜெயம்பதி விக்கிரம ரட்ண எங்கே? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக எஸ் எம் வரதராஜன்:- புதிய அரசியலமைப்பு:- ஜயம்பதி அன்று சொன்னது இன்று கவனத்தில் எடுக்கப்படுகிறதா? ஜயம்பதி விக்ரமரத்ன அவர்கள் இன்று முக்கியமான ஒருவர். ஜனாதிபதி வழக்கறிஞர் . அரசியலமைப்பு விவகார ஆலோசகர். இன்றைய புதிய அரசியலமைப்பு ஏற்பாட்டு விடயத்தில் அவரின் பங்காற்றலும் முக்கியமானது. இதைவிட முக்கியம் என்னவெனில் அவர் ஐக்கிய தேசியக் கடசியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் . அரசியலமைப்பு மாற்றம் -இன முரண்பாட்டுக்குத் தீர்வு என்ற விடயம் தொடர்பில் தான் அவர் பாராளுமன்றத்…
-
- 0 replies
- 339 views
-
-
புலிகளின் நினைவுச் சின்னங்கள் மீளமைக்கப்படவேண்டும்-கலந்தாய்வுச் செயலணி பரிந்துரை விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்குத் தேவையான அரசியலமைப்பு திருத்தங்கள் செய்ய ப்பட வேண்டும் என்று நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வுச் செயலணியின் தலைவர் மனோரி முத்தெட்டுவேகம தெரி வித்தார். கொழும்பில் நேற்று செயலணியின் அறிக்கை தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “தமது அன்புக்குரியவர்களை பறிகொடுத்தவர்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசா ங்கம் துரிதமாக எடுக்க வேண்டும்.இராணுவத்தினரால் தரைமட்டமாக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் புதைகுழிகள…
-
- 1 reply
- 303 views
-
-
முன்னாள் போராளிகளைப் போன்று இராணுவத்திற்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் – நல்லிணக்க செயலணி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு புனர்;வாழ்வு அளிக்கப்பட்டதனைப் போன்றே, இராணுவத்திற்கும் புனர்;வாழ்வு அளிக்கப்பட வேண்டுமென நல்லிணக்க பொறிமுறைமை குறித்த செயலணி பரிந்துரை செய்துள்ளது. வடக்கில் நிலை கொண்டுள்ள இராணுவப் படையினருக்கும் கிரமமான அடிப்படையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு ஒவ்வொரு படைப்பிரிவாக அகற்றப்பட வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது. இலங்கையின் வரலாற்றில் படையினருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டுமென முதல் தடவையாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என கொழும்பு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்த யோ…
-
- 1 reply
- 241 views
-
-
தெல்லிப்பளை இராணுவத்தின் வசமுள்ள மக்களின் காணிகளில் ஒரு பகுதியை அடுத்தவாரம் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் இராணுவத்தின் வசமுள்ள மக்களின் காணிகளில் ஒரு பகுதியை அடுத்தவாரம் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார். தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரமாக எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியை பிரகடனப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார், அவர் இது தொடர்பில் மேலும் குறிப…
-
- 1 reply
- 191 views
-
-
5 பில்லியன் அமெரிக்க டொலரை முதலிட சீனா முன்வந்துள்ளது அடுத்த ஐந்து வருட காலப்பகுதியில் ஹம்பாந்தோட்டை வர்த்தக வலயத்தில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய சீனா தயாராகியுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் யிசியென் லியேன் கூறியுள்ளார். ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் நோக்கில் இந்த முதலீட்டை சீனா மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை வர்த்தக வலய திறப்பு இன்று இடம்பெற்ற போது, அதில் கலந்து கொண்ட போது சீன தூதுவர் இதனைக் கூறியுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/189365/-ப-ல-ல-யன-அம-ர-க-க-ட-லர-ம-தல-ட-ச-ன-ம-ன-வந-த-ள-ளத-#sthash.L5DFEMHD.dpuf
-
- 0 replies
- 227 views
-
-
ஜனாதிபதி சிறிசேனவின் இரு வருடகால ஆட்சி ஒரு கண்ணோட்டம் இலங்கை மணித் திருநாடு. இந்து சமுத்திரத்தின் முத்து, இனிய திருநாடு. பல்வளமும் பல்லினமும் வாழும் நாடு. பகவான் புத்த பெருமானின் ஆசியும் அருளும் பெற்று பல மதங்களும், பல மொழிகளும் பேசப்பட்டு இறையருள் பெற்றநாடு. எத்தனையோ மன்னர்கள், அரசர்கள் ஆண்டு அனுபவித்த நாட்டை போர்த்துக்கேயன், ஒல்லாந்தன், ஆங்கிலேயன் ஆசை கொண்டு எம் நாட்டை ஆட்சி செய்து பின்னர் அந்நியன் அடித்தொழிக்கப்பட்டு நம்மை நாமே ஆட்சி செய்கின்ற பரிபூரண சுதந்திர நாடாகும். எத்தனை பிரதமர்கள், எத்தனை ஜனாதிபதிகள், நம்நாட்டின் தலைமை ஏற்று ஆட்சி செய்து இன்று தர்ம சொரூபனாக, கருணை மனத்…
-
- 0 replies
- 240 views
-
-
வன்னிக்கோட்ட மக்கள் வீட்டுத்திட்டம் கோரி ஆர்ப்பாட்டம் க. அகரன் வவுனியா, சிதம்பரபுரம் வன்னிக்கோட்ட மக்கள் வீட்டுத்திட்டம் கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வன்னி கோட்டத்தில் வாழும் 300 குடும்பங்களுக்கு 1994ஆம் ஆண்டு காலப்பகுதியில் 25 ஆயிரம் ரூபாய் மானியமாகவும் 25 ஆயிரம் ரூபாய் கடனாகவும் வழங்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இந் நிலையில் தாம் தற்போதும் கடனாக வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாயைச் செலுத்தி வரும் நிலையில், தம்மால் அமைக்கப்பட்ட வீடுகள் மிகவும் சேதமடைந்துள்ளதாகவும் தாம் அவ்வீடுகளில் வசிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், தற்போது ஏனைய கிராமங்களுக்கு வழங்கப்படும் வீட்டுத்திட்ட…
-
- 1 reply
- 396 views
-
-
பூதாகரமாகும் பிரச்சினைகள் இலாபம் யாருக்கு? வில்பத்து விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. வில்பத்து சரணாலயத்துக்குரிய வனப்பிரதேசங்களை விரிவுபடுத்தி தற்போது வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு சேராத அது சார்ந்த அனைத்து நிலப்பரப்பையும் உள்ளடக்கக்கூடியவாறு வன ஜீவராசிகள் வலயத்தை வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சுற்றாடல் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த ஆலோசனையை முன்வைத்துள்ளார். வில்பத்து உள…
-
- 0 replies
- 376 views
-
-
இலங்கையிலுள்ள நிறுவனத்திற்கு வாகன உதிரிப்பாகங்களைப் பொருத்தும் அனுமதியை வழங்கவில்லை – Volkswagen இலங்கையிலுள்ள எந்தவொரு நிறுவனத்திற்கும் தமது வாகனங்களின் உதிரிப்பாகங்களைப் பொருத்தும் அனுமதிப்பத்திரத்தை வழங்கவில்லை என Volkswagen சர்வதேச நிறுவனம், டைம்ஸ் ஒன்லைன் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளது. Volkswagen சர்வதேச நிறுவனத்தின் தொடர்பாடல் பிரிவைச் சேர்ந்த கெத்தரின் ஹோமன் இதனைக் கூறியுள்ளார். http://newsfirst.lk/tamil/2017/01/95616/
-
- 0 replies
- 169 views
-
-
சாட்சியமளித்தோர் விடயத்தில் படையினர் தலையிடார்-பாதுகாப்பு செயலர் தெரிவிப்பு போரின் போது இடம்பெற்ற கொடுமைகள் தொடர்பாக நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியுடன் கருத்து க்களைப் பகிர்ந்தவர்கள் விடயத்தில் இராணுவமோ, காவல்துறையோ தலையீடு செய்யமாட்டாது என பாதுகாப்புச் செயலர் கரு ணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார். கலந்தாய்வு செயலணியின் முன்பாக சாட்சியமளித்தவர்கள், கருத்துக்களைப் பகிர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று செயலணியின் தலைவர் மனோரி முத்தெட்டுவேகம கோரியிருந்தார். இதுதொடர்பாக அவர் கடந்தவாரம் பாதுகாப்புச் செயலரை சந்தித்து, சாட்சியமளித்தவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத…
-
- 0 replies
- 276 views
-
-
'பெப்ரவரி 10க்கு முன்னர் நிலைப்பாடுகளை அறிவியுங்கள்' தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வை கொண்டுவரும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் புதிய அரசியலைமைப்புக் கலந்துரையாடல் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டுக்கொண்டே போகிறது. அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய வழிகாட்டல் குழுவில், தயாரிக்கப்பட்ட இடைக்கால வரைபு பற்றிய தத்தமது நிலைப்பாடுகளை முன் வைப்பதில் கட்சிகள் இடையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இனிமேலும் இதை தள்ளி வைக்க முடியாது. குறிப்பாக அதிகாரப்பகிர்வு, தேர்தல் முறைமை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஆகியவை தொடர்பாக உங்கள் நிலைப்பாடுகளை வழிகாட்டல் குழுவுக்கு அறிவியு…
-
- 0 replies
- 333 views
-
-
இலங்கைக்கு எதிராக ஐ.நா வில் தீர்மானம் நிறைவேற்ற முயற்சி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சென்னையைச் சேர்ந்த சட்டத்தரணிகள் சிலர் உள்ளிட்ட தரப்பினர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்வரும் 9ம் திகதி சென்னையில் சட்டத்தரணிகள் கூடி இந்த விடயம் குறித்த ஆராய உள்ளனர். இலங்கையின் அரசியல் சானத்தின் 6ம் திருத்தச்சட்டம் தொடர்பிலேயே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் சட்ட மா அதிபர் றாம்சே கிளார்க் (Ramsey Clark) , தமிழக ஒய்வு பெற்ற நீதவான் சிவசுப்ர…
-
- 0 replies
- 248 views
-
-
கடலுக்கு சென்று காணாமல் போயிருக்கும் மீனவர்களின் உண்மை நிலைமை என்ன? அமைச்சர் ஹக்கீம் விளக்கம் கடந்த டிசம்பர் 24ஆம் திகதி இரண்டு இயந்திரப் படகுகளில் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போயுள்ள கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் பற்றி பலவாறான தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. படகுகள் இரண்டும் அவற்றில் பயணித்த 6 மீனவர்களும் மாலைதீவு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர் என்ற ஆதாரபூர்வமற்றதும், ஊர்ஜிதமற்றதுமான செய்தியொன்றும் பரப்பப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டி ஆராச்சியுடனும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர சீ விஜேகுணரத்தினவுட…
-
- 0 replies
- 362 views
-
-
அல்ஹுசைன் மறுக்கவில்லையே எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்கிறார் ராஜித (ரொபட் அன்டனி) சர்வதேச நீதிபதிகளை உள்ளீர்க்கமாட்டோம் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணை யாளர் ஏற்றுக்கொண்டுள்ளதாக நான் கூறியதை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் ஒருபோதும் மறுக்கவில்லை. அவரது அலுவலகம் டுவிட் டர் ஊடாகமறுத்தது என்பதனை ஏற்க முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் சர்வதேச நீதிபதிகளை பரிந்துரை செய்திருந்தாலும் தீர்மானம் எடுப்பது இலங்கையின் இறை மையை பொறுத்தது என்று ஏற்கனவே அறிவித்த…
-
- 0 replies
- 261 views
-
-
பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் திடீர் இராஜினாமா (ரொபட் அன்டனி) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சிறி ஹெட்டிகே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் இராஜினாமா கடிதத்தை அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மனில் உள்ள ஹைடில் பேர்க் பல்கலைக்கழகத்தின் வருகை தரு விரிவுரையாளராக நியமனம் பெற்றுள்ள பேராசிரியர் சிறி ஹெட்டிகே சில காலம் அங்கு பணியாற்றவேண்டியிருப்பதால் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பொலிஸ் ஆணைக்குழுவின் ஒரு உறுப்பினராக தொடர்ந்து பதவி வகிக்க…
-
- 0 replies
- 255 views
-
-
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் பட்டப்படிப்புகள் கற்கை நெறி இவ்வருடம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இவ்வருடம் இக் கற்கை நெறிக்காக 83 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் கிழக்குப் பல்கலைக்கழகப் பதிவாளர் வி.காண்டீபன் இன்று(05) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர் பொருத்தமான தொழில்நுட்ப அறிவும் பின்புலமும் உள்ள இளைஞரை உருவாக்குவது நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும். மேலும் இது சுயதொழில் முயற்சியாக்கங்களை உருவாக்க வழிவகுக்கும். நாட்டின் அபிவிருத்திக்கு தொழிநுட்பவியல் துறைசார் பட்டதாரிகளின் உருவாக்கம் மிகவும் அவசியமானதென்பதைக் கருத்திற்கொண்டு 2013 ஆம் ஆண்டிலிருந்து தொழில்நுட்பக் கல்விக்கற்கை க.பொ.த …
-
- 0 replies
- 133 views
-
-
புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் காலதாமதம் இருக்கக்கூடாது புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் விடயத்தில் காலதாமதம் காண்பிக்கப்பட்டு வருகின்றது. அரசியல் யாப்புசபையின் வழிநடத்தல் குழுவினால் அமைக்கப்பட்ட ஆறு உபகுழுக்களின் அறிக்கைகள் தொடர்பிலான விவாதம் எதிர்வரும் 9, 10, 11 ஆம் திகதிகளில் நடைபெறும் என்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 10 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவாதத்திற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த நிலையில் தற்போது வழிநடத்தல் குழுவில் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படமாட்…
-
- 0 replies
- 254 views
-
-
பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மஹிந்த முஸ்தீபு (லியோ நிரோஷ தர்ஷன்) பிரதமர் ரணில் விக்ரம சிங்கவிற்கு எதிராக வலுவான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வருவது தொடர் பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட கூட்டு எதிர்க் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பந்தோட்டை துறைமுகம் மற்றும் சீன வர்த்தக வலய விவகாரம் உள்ளிட்ட நாட்டில் முன்னெடுக்கப்படும் புதிய அரசியலமைப்பு நடவடிக்கைகள் போன்ற பல விடயங்களை உள்ளடக்கிய நம்பிக்கையில்லா பிரேரணையே இவ்வாறு முன் வைக்கப்பட உள்ளது. இந்த விடயம் தொடர்பில் …
-
- 0 replies
- 285 views
-
-
விசாரணைப் பொறிமுறைக்கு உள்ளக நீதிபதிகளின் பிரசன்னம் போதுமானது தேசிய அரசாங்கத்திற்குள் தொடர்பாடல் இடைவெளி என்கிறது சு.க. (ப.பன்னீர்செல்வம்) புதிய அரசியலமைப்பு தொடர்பில் சிங்கள மக்களின் 51 வீதமான ஆதரவு கிடைத்தால் மட்டுமே அது நடைமுறை சாத்தியமாக அமையும் என எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் தெரிவித்த கருத்தை வரவேற்பதாக அரசாங்கம் தெரிவித்தது. மேலும் தேசிய அரசுக்குள் தெளிவான தகவல் தொடர்பாடல்கள் இல்லாததன் காரணமாகவே பிரச்சினைகள் தலைதூக்குகின்றன என்றும் அரசின் பிரதான பங்காளியான சுதந்திரக்கட்சி குற்றம் சாட்டியது. கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று வெள்ளிக்கி…
-
- 0 replies
- 160 views
-
-
யாழ் இளவாலையில் வாள்வெட்டுக்குழுவைச் சேர்ந்த ஐவர் கைது இளவாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இளவாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தினை வடமாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ரி.கணேசநாதன் தலைமையில் இயங்கும் சிவில் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்கள் புகைப்படம் எடுத்து சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகருக்கு அனுப்பியதனை அடுத்து சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் தலைமையிலான காவல்துறையினர் துரித கெதியில் விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என…
-
- 2 replies
- 393 views
-