ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143404 topics in this forum
-
விடைபெறும் இந்திய, சீன பாதுகாப்பு ஆலோசகர்கள் கொழும்பில் உள்ள இந்திய, சீன தூதரகங்களில் பாதுகாப்பு ஆலோசகர்களாகப் பணியாற்றிய அதிகாரிகள் ஒரே நேரத்தில் நாடு திரும்பவுள்ளனர். இந்தியத் தூதரகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பாதுகாப்பு ஆலோசகர் பதவியை வகித்த இந்திய கடற்படையைச் சேர்ந்த கப்டன் பிரகாஸ் கோபாலன் மற்றும், சீனத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய சீன மக்கள் விடுதலை இராணு வத்தைச் சேர்ந்த மூத்த கேணல் லி செங்லிங் ஆகியோரே பணியை முடித்து நாடு திரும்பவுள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று பிற்பகல் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவை தனித்தனியாகச் சந்தித்து முறை ப்படி விடைபெற்றுக் கொண்டனர்.…
-
- 0 replies
- 344 views
-
-
மகிந்த மீது வருத்தத்தில் பொதுபலசேன கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக தாங்கள் பரப்புரைகளில் ஈடுபட்டதாகவும் எனினும் அவர் தற்போது தம்மை குறை கூறுவதாகவும் பொது பலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்கு ஐதேகவுடனும், சம்பிக்க ரணவக்கவுடனும் இணைந்து பொது பலசேனா பணியாற்றியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார். வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை நேற்றுமுன்தினம் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். சம்பிக்க ரணவக்கவே பொது பலசேனாவை உருவாக்கினார் என்றும், தன்னிடம் இரு…
-
- 0 replies
- 164 views
-
-
முக்கிய விடயங்கள் குறித்து கூட்டமைப்பு ஜனாதிபதி, பிரதமருடன் முதலில் பேச வேண்டும் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தல் (ரி.விரூஷன்) தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் மக்கள் சார்பில் அரசாங்கத்திற்கு முன்வைத்திருந்த வடக்கு, கிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமையிலான சமஸ்டி ஆட்சி போன்ற விடயங்களுக்கு ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் புதிய அரசியலமைப்பு தொடர்பான வழிகாட்டல் குழுவில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்மந்தன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் ஆகியோர் வெளியேற வேண்டும். அத்துடன் தமிழ் மக்களது ஆணைகளை ப…
-
- 0 replies
- 237 views
-
-
பிரித்தானியா, சுவிட்சர்லாந்திலிருந்து சுற்றுலா வந்த இரண்டு பெண்களின் பணம் கொள்ளை (எம்.எப்.எம்.பஸீர்) தனியார் வங்கிகளின் இலத்திரனியல் டொலர் இயந்திரங்களில் இருந்து மில்லியன்கணக்கில் பணம் கொள்ளையிட்டு வந்த பல்கேரியர்கள் நால்வர் அடங்கிய திட்ட மிட்ட குற்றக் குழுவானது சுற்றுலாவுக்காக இலங்கை வந்த பிரித்தானிய மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளைச் சேர்ந்த இரு பெண்களின் வங்கிக்கணக்குகளில் இருந்த இலட்சக்கணக்கான பணத்தை கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேற்படி இரு பெண்களும் நேற்று முன் தினம் ஹிக்கடுவை சுற்றுலா பொலிஸாரிடம் முறைப்பாடளித்துள்ளனர். இது தொடர்பில் தற்போது க…
-
- 0 replies
- 232 views
-
-
பொதுபல சேனாவுக்கும் எமக்கும் “டீல்” என்பது இவ்வாண்டின் மிகப்பெரும் “ஜோக்” நள்ளிரவில் என்னை தேட வேண்டாம் என்கிறார் மனோ (நமது நிருபர்) பொதுபல சேனா மற்றும் பொது எதிரணி எம்.பி.க்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோருக்கும் எமக்குமிடையில் இரகசிய உடன்படிக்கை உள்ளது என்றும் நள்ளிரவில் நாம் சந்தி த்து உரையாடுகின்றோம் என்றும் நண்பர் அமைச்சர் டிலான் பெரேரா கூறியுள்ளார். இது, இன்றுடன் முடியும் இந்த ஆண்டின் மிகப்பெரும் நகைச்சுவையாகும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார். 2016ஆம் ஆண்டின் மிகச்ச…
-
- 0 replies
- 236 views
-
-
இலங்கை அரசியல் வரலாற்றில் இன்று முக்கியமான நாளாக பதியப்பட்டுள்ளது. ஏனெனில் இது வரை காலமும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு தென்னிலங்கையிலேயே பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்துது. எனினும், இன்றைய தினம் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு எதிராக தமிழ் மக்களே கிளர்ந்து எழுந்துள்ளனர் என்றே கூறவேண்டும். அப்படியான சம்பவம் ஒன்றே இன்று இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் வவுனியாவில் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், ஆர்ப்பாட்டம் முடிவடைந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் உருவப்படத்தை தீயிட்டு எரித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இன்றைய தினம் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன் போது தமி…
-
- 2 replies
- 243 views
-
-
அதிகாரப்பகிர்வு அவசியமா.? : ரெஜினோல்ட் குரே அதிகாரப் பகிர்வு தொடர்பில் யார் விவாதித்தாலும், பாராளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்தாலும் அதிகாரப்பகிர்வு அவசியமா என்பது தொடர்பில் மக்களே இறுதி தீர்மானம் எடுக்கவேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். யுத்தத்தின் பின்னர் வடக்கில் தமிழ் மக்களின் செயற்பாடுகளும் அவர்களின் நகர்வுகளும் பூரண ஜனநாயகத்தை வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். வடக்கில் முன்வைக்கப்பட்டு வரும் கருத்துக்கள் மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பில் வடமாகாண ஆளுநரின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/14921
-
- 1 reply
- 458 views
-
-
திங்கட்கிழமை வருகிறார் சுஷ்மா (லியோ நிரோஷ தர்ஷன்) இரு தரப்பு மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் கடற்றொழில், விவசாய அமைச்சர் ராதா மொஹான் சிங் உள்ளிட்ட குழுவினர் திங்கட்கிழமை இலங்கை வருகின்றனர். இலங்கை கடல் எல்லையை மீறும் இந்திய மீனவர்களை தொடர்ந்தும் கைது செய்வதோடு ஏற்கனவே தடுப்பு காவலில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே இவர்களின் விஜயம் அமைகிறது. இதுவரையில் இலங்கை கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் 51 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பு…
-
- 0 replies
- 206 views
-
-
2017 ஆம் ஆண்டு தீர்மானம் மிக்கது அதிகாரப் பகிர்வு அழிவையே தரும் மக்கள் முகம் கொடுக்க தயாராக வேண்டும் என்கிறார் மஹிந்த (க.கமலநாதன்) 2017 ஆம் ஆண்டானது மிக தீர்மானம் மிக்க ஆண்டாகும், அதற்கு முகம்கொடுப்பதற்கு இலங்கை மக்கள் தயாராக இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் தனிப்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்படவுள்ள அதிகார பகிர்வு தொடர்பிலான பொதியும் இந்தியர்களுக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் எட்கா ஒப்பந்தமும் அழிவின் ஒரு பகுதி மாத் திரமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் …
-
- 0 replies
- 277 views
-
-
காணால் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உண்ணாவிரதம் -க.அகரன் “காணாமல் போனோர் தொடர்பாக நல்ல முடிவை தெரிவிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்து, வவுனியாவில் இன்று அடையாள உண்ணாவிரதப்போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தாயகப்பகுதியில் கையளிக்கப்பட்டு மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி கண்டறியும் சங்கம் ஏறபாடு செய்துள்ள இந்த உண்ணாவிரதப்போராட்டம், வவுனியா கச்சேரிக்கு முன்பாக உள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலைக்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது. காலை 9 மணிக்கு ஆரம்பமான இப்போராட்டம், மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளதுடன் தீர்வு கிடைக்காவிட்டால் பொங்கலுக்கு பின்னராக காலத்தில் தொடர் உண்ணாவிரத்தில் ஈடுபடவுள்ளதாகவும…
-
- 3 replies
- 1.7k views
-
-
காரைதீவில் மிக பெரிய பிரமாண்டமான அனுமான் சிலை ஒன்று இன்று (29) திறந்துவைக்கப்பட்டுள்ளது. காரைதீவு மகா விஷ்ணு ஆலயத்தில், லண்டனில் வசிக்கும் அருமத்துரை கோபி, கோபாலகிருஸ்ணா பிரபா ஆகியோரின் அனுசரணையில் இந்த பிரமாண்டமான அனுமான் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதன்போது பொதுமக்கள், பக்தர்கள் என பெரும் திரளானவர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். http://battinaatham.com/description.php?art=6975
-
- 14 replies
- 1.6k views
-
-
வடக்குக் கிழக்கில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதற்கு முன்னர், அங்கு பல மடங்கு விஸ்தரிக்கப்பட்ட கோவில்கள் மற்றும் பள்ளிவாசல்கள் தொடர்பில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவேண்டுமென மேல்மாகாண அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரர் ஆலயம் அண்மையில் 5 மடங்கு விஸ்தரிக்கப்பட்டமை தொடர்பாக எவருமே வாய்திறக்கவில்லை. ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கு பகுதிகளில் பௌத்த தலங்கள் அமைக்கப்பட்டுவருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. எனினும் பல மதப் பிரிவினர் அப்பகுதிகளில் ஏற்கனவே காணப்பட்ட தமது தலங்களை விஸ்தரித்து நிர்மானித்துள்ளனர். உதாரணமாக திருகோணமலை இருந்…
-
- 6 replies
- 1.2k views
-
-
கை, கால்களின்றி உலகை வலம் வரும் ஜானிஸ் மெக் டேவிட் இலங்கை வருகை ஜானிஸ் மெக் டேவிட், ஜேர்மனைச் சேர்ந்த 25 வயதான ஊக்கமூட்டும் பேச்சாளர். தனது சக்கர இருக்கையிலேயே உலகை வலம் வருபவர். இயலாமையைப் பொருட்படுத்தாமல், தனி நபர்கள் தங்களது முழுத்திறனை அடைவது சாத்தியம் என்பதை நிரூபிக்கும் வகையில், அவர் தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ளார். ஜானிஸ் மெக் டேவிட்டிற்கு பிறவியிலேயே கை, கால்கள் கிடையாது. இந்நிலையில், இவர் தற்போது பல்கலைக்கழகம் செல்வதோடு, தனது காரில் உலகின் பல நாடுகளுக்கும் விஜயம் செய்து வருகின்றார். கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்திற்கு இன்று காலை வருகை தந்த ஜானிஸ் மெக் டேவிட் …
-
- 0 replies
- 455 views
-
-
நான்கு ஆண்டுகளில் 2000 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது:- கடந்த நான்கு ஆண்டுகளில் சுமர் இரண்டாயிரம் கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. ஹெரோயின் மற்றும் கொக்கேய்ன் போதைப் பொருளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. காவல்துறை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 2016ம் ஆண்டில் மட்டும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மொத்த பெறுமதி 2470 கோடி ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் 1486 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப் பொருளும், 147 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் இவ்வாறு இந்த ஆண்டில் மீட்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/archives/12191
-
- 0 replies
- 171 views
-
-
பிரபாகரனே தமிழர்களின் பிரச்சினைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர் பிரபாகரனே தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர். அவர் மீது தமிழ் மக்களுக்கு இருக்கும் மரியாதையை ஒருபோதும் இல்லாமலாக்க முடியாது. அதனடிப்படையிலேயே விஜயகலா மகேஸ்வரனும் பிரபாகரன் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். நவ சமசமாஜ கட்சி காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் பிரதமராகியிருப்பார் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ள …
-
- 1 reply
- 495 views
-
-
சுமந்திரன் நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு (எம்.சி.நஜிமுதீன்) ஜூரிகள் சபை உறுப்பினர்கள் சிங்களவர்களாக இருப்பதனால் ரவிராஜ் கொலை வழக்குத் தொடர்பான தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என சுமந்திரன் எம்.பி. குறிப்பிட்டிருப்பதன் மூலம் அவர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளார். இதன் மூலம் இனவாதத்தை விதைப்பவர்கள் யார் என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது என்று முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்த்திப்பு நேற்று பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்து…
-
- 2 replies
- 579 views
-
-
இலங்கையில் சமஸ்டி முறை ஆட்சி நிறுவக் கூடாது எனக் கோரி பிரித்தானியாவில் போராட்டம் இலங்கையில் சமஸ்டி முறையில் ஆட்சி நிறுவப்படக் கூடாது எனக் கோரி பிரித்தானியாவில் சில இலங்கையர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு எதிரில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய என்ற பெயரில் அரசாங்கம் சமஸ்டி முறையிலான ஆட்சியை அறிமுகம் செய்ய முயற்சிப்பதாகவும் ஐக்கிய என்ற பெயரில் அரசாங்கம் சமஸ்டி முறையிலான ஆட்சியை அறிமுகம் செய்ய முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவ…
-
- 1 reply
- 501 views
-
-
கலாசார விழாவில் பேரிகை முழக்கம் -ஐ.நேசமணி தமிழர்களின் பாரம்பரிய இசைக் கருவியான பேரிகை வாத்தியத்தை, மீண்டும் பொது நிகழ்வில் காரைநகர் பிரதேச செயலகம் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. தமிழர்களின் தொன்மைச் சின்னங்களைப் பாதுகாக்கும் செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்த வாத்தியம் முழக்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை (27) காரைநகர் பிரதேச செயலக கலாசார விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் ஐந்து அடி விட்டம் கொண்ட பேரிகை முழங்க விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர். பேரிகை என்பது பழந்தமிழர்களின் வாத்தியங்களில் முக்கியத்துவம் பெற்றதாகும். குறிப்பாக தமிழ்நாட்டில் வாழ்ந்த மன்னர்கள் இதனை அதிகமாகப் பயன்படுத்தியி…
-
- 0 replies
- 247 views
-
-
மட்டு.நீதிமன்றத்துக்குள் கோடரியுடன் சென்ற வேடுவர்; உள்ளே அனுமதித்தமைக்காக நன்றி தெரிவித்தார்! 2016-12-30 12:40:14 (காங்கேயனோடை நிருபர்) மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்தைச் சேர்ந்த வேடர் ஒருவர் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை கோடரியுடன் ஆஜராகி யிருந்தார். இந்த வேடுவர் தனது மகனின் வழக்கு தொடர்பில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். மேற்படி வேடர் தனது பாரம்பரிய உடையுடன் தோளில் கோடரியை சுமந்தவராக நீதிமன்றத்திற்குள் நுழைந்தார். நீதிமன்றத்திற்குள் நுழையும்போது நீதிமன்ற பிரதான நுழைவாயிலில் நின்ற பொலிஸ் அதிகாரிகள் அவரிடம் விசாரணைகளை மேற் கொண்ட பின்னர் அவ…
-
- 0 replies
- 256 views
-
-
பல்கலை மாணவர் விவகாரம் : சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் தை மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் பல்கலைக்கழக மாணவர் இருவர் யாழ் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பிலான வழக்கு இன்று யாழ் நீதவான நீதி மன்றில் பதில் நீதவான் வி.ரி. சிவலிஙகம் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பொலிஸார் தமது மேலதிக விசாரணை அறிக்கையை மன்றில் தாக்கல் செய்ததோடு, புலன் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் , அரச பகுப்ப…
-
- 0 replies
- 205 views
-
-
கீரிமலை வீட்டுத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம் -செல்வநாயகம் கபிலன் கீரிமலையில் காணி இல்லாதவர்களுக்கு, காணியுடன் கூடிய வீடமைக்கும் பணி, இராண்டாம் கட்டமாக இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெல்லிப்பழை பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை அண்டிய அரச காணியில், ஏற்கெனவே 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்தது. அத்துடன் குறித்த வீட்டுத்திட்டத்துக்கு “நல்லிணக்கபுரம்” என பெயர் சூட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து, முகாம்களில் வாழும் மேலும் 31 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளன…
-
- 0 replies
- 230 views
-
-
பலாலியில் 137 வீடுகளின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி -செல்வநாயகம் கபிலன் மீளக்குடியேற்றம் செய்து வைக்கப்பட்ட பலாலி வடக்கில் 137 வீடுகளின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக தெல்லிப்பழை பிரதேசச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீள்குடியேற்ற அமைச்சின் 8 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அன்ரனிபுரம் பகுதியில் 30 வீடுகளின் பணி நிறைவடைந்துள்ளது. அதேபோல் காணி அற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அரச காணியில் கட்டப்பட்ட 107 வீடுகளின் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இதனையடுத்து எதிர்வரும் 4 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகைதரும் ஜனாதிபதி, பயனாளிகளிடம் கையளிக்கவுள்ளார். 1990 ஆம…
-
- 0 replies
- 275 views
-
-
அரசாங்கத்துக்கு எதிராக 3 ஆலயங்களில் தேங்காய் உடைப்பு தற்போதுள்ள அரசாங்கத்துக்கு எதிராக ஆலயங்கள் 3 இல் தேங்காய் உடைத்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதுள்ள அரசாங்கம் மக்களுக்கு இழைக்கும் தீங்குகளை நிறுத்துமாறும், அவ்வாறு முடியாவிட்டால் புதிய அரசாங்கம் உருவாக ஆசிர்வாதம் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து இந்த ஆலயங்களில் பூசை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சீனிகம, முன்னேஸ்வரம் மற்றும் நவகமுவ ஆகிய ஆலயங்களில் இந்த வேண்டுதல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேசபற்றுள்ள மக்கள இயக்கம் இதனை ஏற்பாடு செய்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/188926/அரச-ங-கத-த-க-க-எத-ர-க-…
-
- 0 replies
- 215 views
-
-
அனைத்து இந்திய மீனவர்களுக்கும் விடுதலை - அரசாங்கம் அறிவிப்பு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் சட்டமா அதிபரின் ஆலோசனையின் கீழ் விடுதலை செய்வதென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை கடற்பரப்பை ஊடுறுவும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் தடுப்பு காவலில் உள்ள மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிரியங்கள்ளிய நீர்த்தேக்கத்தை மையமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு தேவையான வள்ளங்கள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் வழங்கல் மற்றும் 10 இலட்சம் ரூ…
-
- 0 replies
- 226 views
-
-
ஜனவரி 8 இல் சம்பந்தன் தலைமையில் கூடுகிறது த.தே.கூ. பாராளுமன்றக்குழு புதிய அரசியல் சாசனம் குறித்து முழு நாளும் விசேட ஆராய்வு (ஆர்.ராம்) புதிய அரசியல் சாசன உருவாக்கம் குறித்து ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் எதிர்வரும் ஜனவரி மாதம் எட்டாம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு கூடுகின்றது. கொழும்பு – மார்க்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் முழுநாளும் நடைபெறவுள்ள இந்த விசேட கலந்துரையாடலில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களை யும் அவசியம் பங்கேற்குமாறும் கோரப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடல் க…
-
- 1 reply
- 276 views
-