Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1.  '223 பேர் வாங்கிவிட்டனர்' -ஜே.ஏ.ஜோர்ஜ். 'நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 223 பேர் பெற்றுவிட்டார்கள். இன்னும் இருவர் மாத்திரமே எஞ்சியுள்ளனர்' என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் புதன்கிழமை இடம்பெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். 'தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை வேண்டாம் என்று சொல்லியவர்கள் அனைவரும் அந்த அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டுவிட்டனர். இன்னும் இருவர் மாத்திரமே அதனைப் பெற்றுக்கொ…

  2. நல்லிணக்கத்தில் பயணிக்க கால அவகாசம்-ட்ரம்பிடம் கோரிக்கை விடுத்த ஜனாதிபதிமைத்திரி நல்லிணக்கத்தை நோக்கிப் பயணிப்பதற்கு இலங்கைக்கு கால அவகாசம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கோரிக்கை விடுத்தி ருப்பதாக திறன் அபிவிருத்தி அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறுகின்ற அனைத்து சம்பவங்களும் வெளிநாடுகளுக்கு அறிக்கையாக செல்வதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க, தினமும் பொய்கூறிக் கொண்டு காலத்தை வீணடிக்க முடியாது என்றும் கூறினார். வரவு செலவுத் திட்டத்தின் வெளிவிவகார அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் நேற்றைய தினம…

  3. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளரிடம் அறிக்கை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். சத்திர சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஒருவகை சாயமே இந்த உயிரிழப்புக்களுக்கு காரணம் என்று அறியப்பட்டுள்ளதாகவும் குறித்த சாயம் பயன்படுத்தப்படுவதனை உடனடியாக நிறுத்தியுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டார். பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்ச…

  4. ‘விட்டுக்கொடுப்புகள் பலவீனமல்ல’ அழகன் கனகராஜ் “ஆட்சிமுறைமை தொடர்பில், மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். பிளவு படுத்தப்பட முடியாத ஒரேநாடு என்ற ஏற்பாடு அரசியலமைப்பில் உள்வாங்கப்படவேண்டும் என்பதுடன், ஒரே நாட்டுக்குள் நிர்வாக அதிகாரங்களைப் பகிரமுடியும் என்று சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விட்டுக்கொடுப்புகளை பலவீனமாக அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது” என்றும் சுட்டிக்காட்டியது. புதிய அரசியலமைப் பொன்றை இயற்றுவதற்கான எமது ஆதரவை, அதன் பின்னர் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கும் யுத்தத்தின் விளைவான ஏனைய விடயங்களை தட்டிக்கழித்து விடுவதற்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியது. நாடாளும…

  5. நடா (NADA) புயலை எதிர்கொள்வதற்கான சுகாதார அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகள் – கிளிநொச்சி சுகாதார துறையினா் அறிவிப்பு வானியல் எதிர்வுகூறல்களின் பிரகாரம் எமது கிளிநொச்சி மாவட்டத்தினூடாக 83 தொடக்கம் 93 கிலோமீற்றர் வேகத்தில் கடும் சுழல்காற்று அடுத்துவரும் 24 மணிநேரங்களுக்குள் வீசக்கூடும். அதேவேளை 46 மில்லிமீற்றரில் இருந்து 57 மில்லிமீற்றர் வரையான மழைவீச்சியும் அடுத்துவரும் 24 மணிநேரத்தினுள் எதிர்பார்க்கப்படுகிறது. சடுதியான கனமழை காரணமாகவும் கடும் சுழல்காற்றுக் காரணமாகவும் நேரக்கூடிய போக்குவரத்துத் தடை, மின்சார மற்றும் தொலைத்தொடர்புச் சேவைத் தடைகளை மனதிற் கொண்டு பின்வரும் முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம். 38…

  6. தடையின்றி இயங்கும் துமிந்தசில்வாவின் முகநூல் பக்கம் பாரத லக்ஸ்மன் கொலை வழக்கின் மரண தண்டனை கைதியாக சிறையில் உள்ள முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் முகநூல் பக்கங்கள், தொடர்ந்தும் இயக்கப்பட்டு வருவதாக தெரி விக்கப்பட்டுள்ளது மரண தண்டனை கைதி ஒருவர் இலங்கை சட்டப்படி வெளி உலகத்துடன் தொடர்புகளை கொண்டிருக்க அனுமதிக்கப்படமாட்டார். எனினும், துமிந்த சில்வாவின் முகநூல் பக்கங்களில் புதிய பதிவுகள் இடம்பெற்றுவருவது சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்துரைத்துள்ள சிறைச்சாலைகள்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், துமிந்த சில்வா வின் முகநூல் பக்கங்…

  7. நோர்தேன் பவர் நிறுவனத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடை நிறுத்த உத்தரவு யாழ்ப்பாணம் – சுன்னாகம் பிரதேசத்தில் குடிநீரில் கழிவு எண்ணெய் கலப்பிற்கு காரணமான நிறுவனம் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நோர்தேன் பவர் நிறுவனத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மத்திய நிலையம் சார்பாக பேராசிரியர் ரவீந்திர காரியவசம் தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம் இந்த இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்திருக்கிறது. 2010ஆம் ஆண்டு சுன்னாகம் பகுதியில் அமைக்கப்பட்ட …

  8. மரம்முறிந்து விழுந்ததால் ஒருவர் பலி ; யாழில் சம்பவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரிப் பகுதியில் மரமொன்று முறிந்து விழுந்ததால் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், சாவகச்சேரிப் பகுதியில் வீசிவரும் பலத்த காற்றின் காரணமாகவே குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/14043

  9. அமைச்சர் மங்களவின் கருத்து எனது மதிப்பை இழக்கச் செய்கிறது-கோத்தா தனது மகன் அமெரிக்காவில் அரசாங்க வீட்டில் வாழ்வதாக அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள அடி ப்படையற்ற கருத்துக்கள் தனது மதிப்பை இழக்கச் செய்துள்ளதாக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்து ள்ளார். அமெரிக்காவில் தூதரக பிரதிநிதி இல்லாத லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் வீடு ஒன்று கொள்வனவு செய்யப்ப ட்டுள்ளதுடன்,அதில் கோத்தபாய ராஜபக்சவின் மகன் தங்க வைக்கப்பட்டுள்ளார் என நேற்று நாடாளு மன்றில் சுட்டிக்காட்டப்பட்டது. ஒரு வருடமும் 9 மாதங்களும் அந்த வீட்டுக்கான நிதி செலுத்தி பயன்படு த்தப்பட்டு வந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார். வெளிவிவகார அமைச்சு நிதி ஒதுக்கீ…

  10. http://www.tamilmirror.lk/187227/-ப-வண-ணன-ரவ-ர-ஜ-எம-ப-ய-க-க-ன-ற-ர-

  11.  ‘தமிழக முதல்வர்கள் வந்த வரலாறு இல்லை’ அழகன் கனகராஜ் “இந்தியாவைப் போன்றே, தமிழகத்துடனும் நாங்கள் நல்லுறவை வளர்க்கவேண்டும். தமிழக முதலமைச்சர்களில் ஒருவர்கூட இலங்கைக்கு உத்தியோகபூர்வ நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்ட வரலாறு இல்லை” என்று, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை, வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, “எமது பிரச்சினைகளை நாங்கள் தான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்க்கம…

  12.  குணரத்னத்தை நாடு கடத்தமாட்டோம். கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்னத்தை நாடுகடத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ள அரசாங்கம், ஸ்ரீ லங்கா பிரஜாவுரிமைக்காக விண்ணப்பித்தால், அது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார். குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்திட்டங்களை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர், கேகாலை, அங்குருவெல பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/187228/க-ணரத-னத-த-ந-ட-கடத-தம-ட-ட-ம-#sthash.0dDyjtj9.dpuf

  13.  ‘சட்டத்தின் பிரகாரமே அம்மான் கைதானார்’ ஜே.ஏ.ஜோர்ஜ் “முன்னாள் பிரதியமைச்சரான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், சட்டத்தின் பிரகாரமே கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, அரசாங்கம், நேற்று அறிவித்தது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்னவிடம், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். …

  14. நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற, மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள் அமைச்சு மீதான விவாதத்தில், தமிழ் பெண் எம்.பி.க்கள் எவருமே உரையாற்றவில்லை. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களில் 13 பேர் மட்டுமே, பெண் உறுப்பினர்களாவர். அவர்களில் ஆறு உறுப்பினர்கள் மட்டுமே நேற்றைய விவாதத்தில் உரையாற்றினர். இந்த அமைச்சு மீதான குழுநிலை விவாதம், நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிமுதல் 12 மணிவரையிலும் இடம்பெற்றது. விவாதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான ஈ.சரவணபவன் ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். ஈ.பி.டி.பி.யின் எம்.பி.யான டக்ளஸ் தேவானந்தாவும் இந்த விவாதத்திலும் உரையாற்றினார். 13 பெண் உறுப்பினர்கள் நாடாளும…

  15. தமிழரசுக்கட்சிதான் பெரும்பான்மை! அனுசரித்து போனால் கனக்க சாதிக்கலாம்!! சொல்கிறார் சிவஞானம் தற்போது தமிழர்கள் தரப்பில் தமிழரசுக்கட்சிதான் பெரும்பான்மை என்றும் அதனை முதல்வர் விக்கினேஸ்வரன் உட்பட மற்றயவர்கள் புரிந்து அதனை அங்கீகரித்து அனுசரித்து நடந்தால் பலவற்றை சாதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஆதவன் தொலைகாட்சிக்கு வழங்கிய சிறப்பு கலந்துரையாடலில் இதனை அவர் தெரிவித்தார். மாகாணசபை உறுப்பினர் அனந்தி மற்றும் மாகாண எதிர்கட்சி தலைவர் தவராசா பங்குகொண்ட நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது தமிழரசுக்கட்சியை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் மாகாண சபையில் இருப்பதாகவும் இன்னொருவர் ரெலோ கட்சியை சேர்ந்தவர் என்றும் ம…

  16. வடபகுதியில் சூறாவளி அபாயம் திருகோணமலையிலிருந்து 450 கிலோமீற்றர் தூரத்தில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதனால், இத்தாழமுக்கம் யாழ். குடாநாட்டின் வடமேற்காக நகரும் அதேவேளை, அடுத்து வரும் 12 மணித்தியாலங்களில் இத்தாழமுக்கமானது சூறாவளியாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகு, இன்று புதன்கிழமை (30) மாலை அறிவித்துள்ளது. 1ஆம் திகதி (வியாழக்கிழமை) நள்ளிரவு இத்தாழமுக்கமானது, தமிழ் நாட்டின் வடபகுதியூடாக நகருமெனவும் 2ஆம் திகதி வரை காற்றுடன் கூடிய மழை காணப்படுமெனவும் வானிலை அவதானிப்பு நிலையத்தினால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதென, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகு மேலும் தெரிவித்துள்ளது. - See more at…

  17. ரவிராஜ் கொலை வழக்கின் முதல் சாட்சியாளருக்கு பலத்த பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் முறைப்பாட்டாளர்கள் தரப்பு முதல் சாட்சியாளரான ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் பிரித்திவிராஜ் மனம்பேரிக்கு பலத்த பாதுகாப்பு வழங்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதன், கருணா குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபர்களிடமிருந்து சாட்சியாளருக்கு பாதுகாப்பு வழங்குமாறு கொழும்பு பிரதம நீதவான் மணிலால் வைத்தியதில…

  18. ஆனையிறவு,குறிஞ்சாதீவு உப்பளங்களை தனியாா் மயமாக்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி ஆனையிறவு மற்றும் குறிஞ்சாதீவு உப்பளங்கள் தனியாா் மயமாக்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நாளை 01-12-2016 காலை ஆனையிறவு உப்பளத்திற்கு முன்பாக ஆா்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. காலை ஒன்பது மணிக்கு ஆனையிறவு உப்பளத்திற்கு முன்பாக ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு உப்பளங்களின் சுற்றயல் கிராம மக்கள் அமைப்புகள் இந்த ஆா்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளன. ஆனையிறவு மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளங்கள் தனியாரிடம் கையளிக்கப்படுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் நடைபெறுவதை அவதானிக்க முடிகிறது எனவும் 1938 ஆம் ஆ…

  19. சுதந்திரத்தின் பங்காளர்களில் கருணாவும் ஒருவர்- அவரின் கைது தவறென்கிறது கூட்டு எதிர்க்கட்சி வடக்கு, கிழக்கு மாகாணங்களை கைப்பற்றுவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது நோக்கமாக இருந்த போதிலும், இன்று முழு இலங்கையையும் தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றி கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூட்டு எதிர்கட்சி சந்தேகம் வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் கைது செய்யப்பட்டமை தொடர்பாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி தனது கடும் எதிர்ப்பையும் இன்றைய தினம் வெளியிட்டது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ…

  20. காங்கேசன் துறை கடற்பிராந்தியத்தில் அலை அவதானம் மன்னார் முதல் திருகோணமலை வரையான காங்கேசன் துறை கடற்பிராந்தியத்தில் 3 மீற்றர் உயரத்துக்கு கடல் அலை மேலெழும்பும் அபாயம் நிலவுவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடும் காற்று காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதுடன் கடலுக்குச் செல்வோர் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். - See more at: http://www.tamilmirror.lk/187196/க-ங-க-சன-த-ற-கடற-ப-ர-ந-த-யத-த-ல-அல-அவத-னம-#sthash.y5kWfMhT.dpuf

  21. மனித உரிமை மீறல்: முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா 4 லட்சம் நஷ்ட ஈடு தர உச்சநீதிமன்றம் உத்தரவு சாதாரண பிரஜை ஒருவரின் மனித உரிமையை மீறியதற்காக நான்கு இலட்சம் ரூபா நஷ்ட ஈடு தருமாறு உச்ச நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு உத்தரவிட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள கிரிபத்கொட பிரதேசத்தில் வசிக்கும் அசித நாணாயக்கார எனும் நபர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான தீர்ப்பு வழங்கிய போது நீதிபதிகள் இந்த உத்தரவைப் பிறப்பித்தனர். கடந்த 2010 ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் உத்தரவின் படி தனது வீட்டின் ஒரு பகுதி இடிக்கப்பட்டதாக மனுதாரர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இத நடவடிக்கைகளுக்கு கிரிபத்கொட போலிஸ் …

  22. உரியவர்கள் அனுமதித்தால் மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேனா ஹெட்டியாராட்சி ஆகியோர் அனுமதி வழங்கினால் மட்டுமே வன்னி பிரதேசத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படும் என வன்னி இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க தெரிவித்துள்ளார். வன்னி இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்கவிற்கும் தமிழ் விருட்சம் அமைப்பிற்குமிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதன்போது வவுனியா ஈச்சங்குளம் பகுதியிலுள்ள மாவீரர் துயிலும் இல்லம் இரா…

  23.  இவரைத் தெரிந்தால் அறிவிக்கவும் செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம் கல்லூண்டாய் வெளியில் வாள்வெட்டுக்கு இலக்காகி வீழ்ந்து கிடந்த நிலையில் மானிப்பாய் பொலிஸாரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் தொடர்பில், எந்தத் தகவலையும் பெறமுடியாத நிலையில் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.ஜீ.என்.டி ஜெயவீர, பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார். 45 தொடக்கம் 50 வயது மதிக்கத்தக்க மேற்படி நபர் கடந்த 16ஆம் திகதி இரவு கல்லுண்டாய் வெளிபகுதியில் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள…

  24. உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள கடற்கரையை அண்மித்த பகுதிகள் விடுவிக்கப்படவில்லை (ஆர்.வி.கே.)வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து சில பகுதிகள் விடுவிக்கப்பட்டிருந்தாலும் கடற்கரையை அண்மித்த பகுதிகள் எவையும் விடுவிக்கப்படாத நிலையுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக இந்த அரசாங்கத்தினால் சுமார் 2000 ஆயிரம் ஏக்கர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற நிலையில் சுமார் 500 இற்கும் அதிகளவிலான ஏக்கர் நிலப்பரப்பு இராணுவம், பொலிஸ் மற்றும் கடற்படையினரின் வசமே தற்போதும் இருப்பதாக மிள்குடியேற்றக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வாறு கடற்கரைப் பிரதேசத்தையும் விடுவிக்கப்பட்ட ஏனைய பிரதேசத்தின் ஏல்லைகளையும் மீண்டும் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இர…

  25. மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குவதைத் தடுப்பதற்கான நிகழ்ச்சி நிரலே தற்போது தலைதூக்கியுள்ளது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான சுவிஸர்லாந்து தூதரகத்தின் அரசியல் கொள்கைகள் வகுப்பு தொடர்பான செயலாளர் டமியனோ அஞ்சலோ ஸ்குஅய்டாமெட்டி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று திருகோணமலையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. நிதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்படும் சில நிர்மாண செயற்பாடுகளில் மத்தியரசின் தலையீடுகள் தொடர்பிலும் இதன் போது விளக்கமளிக்கப்பட்டுள்ளன எனவும் சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் மற்றும் நடுத்தர மு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.