ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
வடக்கு மாகாண மக்களுக்கான பொருத்து வீட்டுத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட எந்தத் தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தாலும் நான் அத்திட்டத்தை அமுல்படுத்தியே தீருவேன் என மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன பொருத்து வீட்டுத் திட்டத்தை நிறுத்தியுள்ளார் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது. வடக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஏன் இந்த வீட்டுத் திட்டத்தை எதிர்க்கின்றனர் என்பது கடவுளுக்குத்தான் தெரியும். வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருத்து வீட்டுத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட பல்வேறு தரப்பினரால் இதற்கு எதிர்ப்பு…
-
- 25 replies
- 1.7k views
-
-
இணைப்பு2 – அவன்ட் கார்ட் கப்பல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள அவன்ட் கார்ட் கப்பலை 35 மில்லியன் ரூபா பிணையில் விடுவிக்க காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி குறித்த கப்பலை 35 மில்லியன் ரூபா பிணையில் உரிய நிறுவனத்திடம் கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவன்ட் கார்ட் கப்பல் தொடர்பில் இன்று தீர்மானிக்கப்பட உள்ளது Nov 25, 2016 @ 07:03 அவன்ட் கார்ட் கப்பல் தொடர்பில் இன்று தீர்மானிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கப்பலை ஏலத்தில் விடுவதா அல்லது விடுப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளது. இ…
-
- 0 replies
- 315 views
-
-
யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி சொர்ணகுமார் சொரூபன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, யாழ் பல்கலைக்கழகத்தில், இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. - See more at: http://www.tamilmirror.lk/186905/ய-ழ-பல-கல-க-கழகத-த-ல-ம-வ-ரர-கள-க-க-அஞ-சல-#sthash.hCBnEAsA.dpuf
-
- 3 replies
- 689 views
-
-
கச்சத்தீவில் இலங்கை அரசு புதிய கோயில் கட்டியதால் சர்ச்சை கச்சத்தீவில் இலங்கை அரசு புதிய தேவாலயத்தைக் கட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கச்சத்தீவில் உள்ள பழைய அந்தோணியார் கோயிலுக்கு அருகிலேயே, இலங்கை அரசு புதிய கோயிலைக் கட்டி எழுப்பி உள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ்கள், தமிழகத்தைச் சேர்ந்த குருக்கள் மற்றும் பக்தர்கள் யாருக்கும் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தேவாலயத்தின் புதிய கட்டடம் வரும் டிசம்பர் மாதம் 7-ம் தேதி திறக்கப்படவுள்ளது. இலங்கை அரசின் இத்தகைய நடவடிக்கை தமிழக கிறிஸ்துவ பக்தர்களிடையே சர்ச்சையை எழுப்பி உள்ளது. http://www.vikatan.com/news/world/…
-
- 0 replies
- 480 views
-
-
கரடியனாறு பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் 2 கைக்குண்டுகளும் ஒரு சைனைட் குப்பியும் மீட்பு கரடியனாறு பகுதியில் உள்ள வெலிகஹாகண்டிய வாவிக்கு பின்புறமாக உள்ள காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் 2 கைக்குண்டுகளும் ஒரு சைனைட் குப்பியும் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறை விசேட அதிரப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கைக்குண்டுகளும் ஒரு சைனைட் குப்பியும் மேலதிக விசாரணைகளுக்காக கரடியனாறு காவல் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதேவேளை மதவாச்சி பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி வெடிப்பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந…
-
- 0 replies
- 290 views
-
-
முல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேசத்தில் மீண்டும் காணி சுவீகரிப்பில் கடற்படையினர் (கே.குமணன்) முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் கடற்படைத் தளம் அமைந்துள்ள நிலப்பகுதியினை புதிய சரத்தின் கீழ் அபகரிக்கும் பொது அறிவித்தல் நேற்றுமாலை பிரதேச செயலாளரினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பகுதியில் உள்ள பொதுமக்களிற்கு சொந்தமான 617 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கடற்படை முகாம் பகுதியினை முழுமையாக அபகரிக்க இதுவரை காலமும் காணி சுவீகரிப்பின் 38 ஏ யின் கீழ் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு பல முறை இடம்பெற்ற முயற்சிகள் அனைத்தும் மக்களின் போராட்டங்கள் காரணமாக தடுக்கப்பட்டிருந்த போதிலும் குறித்த பிரதேசத…
-
- 0 replies
- 604 views
-
-
மோட்டார் சைக்கிள் விஷமிகளால் தீவைத்து எரிப்பு ; முல்லைத்தீவில் சம்பவம் (கே.குமணன் ) முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று இரவு இனம் தெரியாதநபர்களால் திணைக்கள வளாகத்தில் வைத்து தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கடற்கரை வீதியில் உள்ள கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவரின் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிளை அலுவலக வளாகத்தில் நிறுத்திவிட்டு விடுதியில் தூக்கத்தில் இருந்த வேளையில் நள்ளிரவில் வந்த இனம்தெரியாத நபர்கள் காவோலைகளை மோட்டார் சைக்கிளின் மேல் போட்டு தீவைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். …
-
- 0 replies
- 383 views
-
-
“மாவீரர்தின நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி கிடையாது” : பாதுகாப்பு அமைச்சு இறந்த உறவினர்களை நினைவுக்கூர்ந்து அஞ்சலி செலுத்துங்கள். ஆனால் விடுதலை புலிகளை மையப்படுத்தி வடக்கில் மாவீரர்தின நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி கிடையாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 3 தசாப்த கால போரில் உயிர்நீத்த விடுதலைப் புலிகளை நினைவுகூறும் நாளான மாவீரர் தின நிகழ்வுகள் கார்த்திகை 27ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. http://www.virakesari.lk/article/13871
-
- 0 replies
- 337 views
-
-
துயிலுமில்லத்தை சிரமதானம் செய்யும் மக்கள்..! (நிபோஜன்) யுத்தத்தில் உயிரிழந்த தனது உறவுகளை நினைவு கூறுவதற்காக கிளிநொச்சி துயிலுமில்லம் பகுதியை மக்கள் சிரமதானம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சிரமதான பணிகள் இன்று காலை வட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/13847
-
- 2 replies
- 855 views
-
-
மங்களராம விஹாராதிபதியின் இனவாதத்தை கண்டித்து சபையில் தீர்மானம்.! மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் அடாவடித்தனங்களைக் கண்டித்து இன்று இடம்பெற்ற வட மாகாண சபையின் 66 வது அமர்வில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானத்தால் இந்தப் பிக்குவின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் பிரேரணை முன்வைக்கப்பட்டு அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி, நாட்டின் நல்லிணக்கத்தையும் இன ஐக்கியத்தையும் சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்தத் தீர்மானம் வலியுறுத்தி நிற்கின்றது. …
-
- 2 replies
- 286 views
-
-
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் தெருவிளக்குகளை பொருத்துமாறு மக்கள் கோரிக்கை (கே.குமணன்) முல்லைத்தீவு நகரம், புதுக்குடியிருப்பு உப நகரம் என்பவற்றில் தெருவிளக்குகள் கூடுதலாகப் பொருத்தப்பட வேண்டுமென மக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நகரம் கடற்கரையில் கூடுதலான மின்விளக்குகள் போட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கை, மாவட்டச் செயலரிடம் கிராம மக்கள் பிரதிநிதிகளினால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவிற்கு சுற்றுலாப் பயணிகள் கூடுதலாக படையெடுப்ப்பதன் காரணமாக கடற்கரையில் கூடுதலான மின்வெளிச்சங்கள் தேவைப்படுகின்றது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் ஏனைய சமூகவிரோத செயல்கள் இடம்…
-
- 0 replies
- 204 views
-
-
மூன்று மணி நேரங்களுக்குள் மட்டு. வைத்தியசாலையை நாடினால் பாரிசவாத தாக்குதலை அவசர சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம் - விசேட நரம்பியல் நிபுணர் வைத்தியர் திவாகரன் 2016-11-25 11:30:53 (ஏ.எச்.ஏ. ஹுஸைன்) மூன்று மணி நேரங்களுக்குள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை அணுகினால் பாரிச வாத தாக்குதலை அவசர சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விசேட நரம்பியல் நிபுணர் வைத்தியர் ரீ. திவாகரன் தெரிவித்தார். தற்சமயம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சரித்திரத்தில் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இரத்தக் கட்டியைக் கரைக்கும் சிகிச்சை முறைமூலம் பாரிசவாத தாக்குத…
-
- 0 replies
- 239 views
-
-
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர அனுமதிக்கவேண்டும் யுத்தத்தின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் விடயத்தில் தொடர்ந்தும் பெரும் சர்ச்சையான நிலை நீடித்து வருகின்றது. இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் மே மாதம் 18ஆம் 19 ஆம் திகதிகளில் அஞ்சலி நிகழ்வுகளை நடத்துவதற்கு கூட முன்னைய அரசாங்க காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதேபோன்று விடுதலைப்புலிகள் வடக்கு, கிழக்கில் நிலைகொண்டிருந்த காலத்தில் நவம்பர் மாதத்தில் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதிவரை மாவீரர் வாரமாக அனு…
-
- 0 replies
- 262 views
-
-
புதிய அரசமைப்பின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு -கூட்டமைப்புடனான சந்திப்பில் ஜனாதிபதி உறுதியளிப்பு புதிய அரசமைப்பின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டட தொகுதியில் உள்ள ஜனாதிபதியின் செயலகத்தில் நேற்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் 16 பேரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவா தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் அரச தரப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாத்திரமே கலந்து கொண்டார். சுமார் இரண்டு மணிநேரம் இந்தச…
-
- 1 reply
- 272 views
-
-
200 கோடி ரூபா பெறுமதியான கொக்கைன் மீட்பு ஒருகொடவத்தை கொள்கலன் தளத்திலிருந்து 200 கோடி பெறுமதியான கொக்கைன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தேடுதல் வேட்டையின் போது 200 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீட்கப்பட்ட கொக்கைன் போதைப்பொருள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/13812
-
- 1 reply
- 258 views
-
-
ஆவா குழுவினர் என்ற சந்தேகத்தில் கைதானோர் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மனோவின் அதிருப்தியை அடுத்து முடிவு (நமது நிருபர்) வடக்கில் ஆவா குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 11 பேருக்கும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களை சுமத்தி நீதி விசாரணையை முன்னெடுப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டம் நேற்றிரவு அலரிமாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னணியி…
-
- 0 replies
- 223 views
-
-
யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் மாவீரர்நாள் சுவரொட்டிகள் ( ஆர்.வி.கே., ரி.விரூஷன் ) யாழ்ப்பாண பல்கலைகழகத்துக்குள் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது புகைப்படங்களுடன்கூடிய துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. பல்கலைகழகத்திற்கு இன்று காலை வந்த மாணவர்களாலேயே குறித்த துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டிருந்தது. இதன்படி இத் துண்டுப்பிரசுரங்களில் மாவீரர் நாள், தேசிய தலைவரது பிறந்தநாளிற்கு வாழ்த்துக்கள் போன்ற வசனங்கள் அச்சிடப்பட்ட நிலையில் பல்கலைகழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பீடங்களின் நுழைவாயில்களிலும் ஒட்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர். குறித்த துண்டுப்பிரசுரங்களை யார் ஒட்டியதென்பது…
-
- 1 reply
- 377 views
-
-
இலங்கையின் இயற்கை எழிலை வெளிப்படுத்த கனடா நகரில் "சர்வதேச சுற்றுலா பயணக் கண்காட்சி 2016" இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு சபை மற்றும் இலங்கை தேயிலை சபை ஆகியவற்றுடன், கனடாவின் ஒட்டாவா நகரிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகரகம் கூட்டாக இணைந்து மொன்ரியால் நகரில் "சர்வதேச சுற்றுலா பயணக் கண்காட்சி 2016" இனை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கை தொடர்பாக கனடாவில் நடைபெற்ற மிகப் பெரிய நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும். 400 விற்பனை நிலையங்களைக்; கொண்டிருந்த இந்த கண்காட்சியகத்தை பயண முகவர்கள் உட்பட 2000 பேர் வரையில் நேரில் பார்வையிட்டுள்ளனர். இலங்கையின் இயற்கை அழகை வெளிப்படுத்துவதில் பெருமுயற்சியை மேற்கொண்டிருந்த குறித்த விற்பனை ந…
-
- 0 replies
- 822 views
-
-
மாவீரர் தின பிரேரணையை விலக்கி கொண்டது வடமாகாணசபை மாவீரர் தினத்தை நினைவு கூருவதற்கு மத்திய அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும் என கோரி வடமாகாண சபையில் முன்மொ ழியப்படவிருந்த பிரேரணை சமகால சூழலை காரணம் காட்டி விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 66 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. இதன் போது சபையில் முன்மொழிவதற்காக மாகாணசபை உறுப்பி னர் து.ரவிகரன் பிரேரணை ஒன்றை சபைக்கு முன் மொழிய திட்டமிட்டிருந்தார். மாகாண சபை அமர்வுக்கு முன்னர் நடைபெற்ற மாகாணசபை உறுப்பினர்கள் நடத்திய கூட்டத்தில் குறித்த பிரேரணை சமகால சூழலுக்கு பொருத்தமற்றது என கூறியதை தொடர்ந்து பிரேரணை சபையில் எடுத்துகொள்ளப்படமால் விலக்கப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 302 views
-
-
கொட்டாஞ்சேனை தமிழர்களின் கடத்தல் குறித்து தற்போதைய கடற்படை தளபதியும் அறிந்திருந்தார் - குற்றப் புலனாய்வு பிரிவு நீதிமன்றில் தெரிவிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டில் கடத்தப்பட்ட இரு தமிழர்களின் கடத்தல் மற்றும் அவர்களது உடைமைகளைக் கொள்ளையிட்டமை தொடர்பில் தற்போதைய கடற்படை தளபதியும் அறிந்திருந்தமைக்கான சான்றுகள் தம்மிடம் உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துளள்து. இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தேவைப்படும் பல்வேறு ஆவணங்களை கடற்படையிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடாக கோரிய போதும் அவை…
-
- 0 replies
- 211 views
-
-
மாதத்தில் ஒருதடவை மட்டும் குளிக்கும் அமைச்சரால் சிரிப்பு அழகன் கனகராஜ் ஒரு மாதத்தில் ஒரு தடவை மட்டுமே குளிக்கும் அமைச்சரொருவரின் பெயரை அறிந்துகொள்வதற்கு ஜனாதிபதி, அமைச்சர்கள் மட்டுமன்றி அவையே காத்திருந்த போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், அந்த அமைச்சரின் பெயரைக் கூறாமலேயே, தனதுரையை நிறைவு செய்துகொண்டார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, கமத்தொழில், பெருந்தோட்டக் கைத்தொழில், மகாவலி மற்றும் சுற்றாடல் ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது. அந்த விவாதத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சார்ள்ஸ் நிர்மலநாதனும், உரையாற்றினார். மகாவலி அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபா…
-
- 0 replies
- 181 views
-
-
சர்வதேச மட்டத்தில் வடக்கு மக்களின் பிரச்சினை பேசப்படுகின்றது : மலையக மக்களின் பிரச்சினைகள் தேசிய ரீதியில் கூட உணரப்படவில்லை வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் சர்வதேசம் வரையில் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் மலையக மக்களின் பிரச்சினைகள் தேசிய ரீதியில் கூட உணரப்படவில்லை என கல்வி இராஜங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் கவலை வெளியிட்டார். பாராளுமன்றத்தில் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் கமத்தொழில், பெருந்தோட்ட கைத்தொழில், மகாவலி அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன மற்றுமு; நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சுக்கள் மீதான செலவுத்தலைப்புக்கள் மீது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், …
-
- 0 replies
- 369 views
-
-
லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியருக்கு சர்வதேச பிடியாணை நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியிரான சந்தருவான் சேனாதீரவுக்கு சர்வதேச பிடியாணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை கம்பஹா நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. http://www.virakesari.lk/article/13846
-
- 0 replies
- 343 views
-
-
மலையக மக்களுக்கு விடிவை பெற்றுக்கொடுங்கள் : சபையில் கூட்டமைப்பு எம்.பி. க்கள் வலியுறுத்து பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வரும் மலையக மக்களுக்கு சொந்த நிலம் வழங்கப்படவேண்டும். தேசிய அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் வலியுறுத்தினர்கள். பாராளுமன்றத்தில் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் கமத்தொழில், பெருந்தோட்ட கைத்தொழில், மகாவலி அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன மற்றுமு; நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சுக்கள் மீதான செலவுத்தலைப்புக்கள் மீது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். த…
-
- 0 replies
- 323 views
-
-
பேரின்பராஜா திபான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் மீது, 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதியன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டபோது, செனவிரத்ன என்ற சந்தேகநபர், கறுப்புநிறப் பையினுள் ரி-56 ரகத் துப்பாக்கியை வைத்து எவ்வாறு சுட்டார் என்பதை, முதலாவது சாட்சியாளரான மனம்பேரிகே பிருதிவிராஜ் சம்பத், கொழும்பு மேல்நீதிமன்றத்தில், நேற்று வியாழக்கிழமை செய்துகாட்டினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது படுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜ் எம்.பியின் படுகொலை தொடர்பான சாட்சியமளிப்பு, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக தலைமையில், விசேட சிங்கள ஜூரிகள் எழுவர் அடங்கிய ஜூரி சபை முன்ன…
-
- 0 replies
- 198 views
-