ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
அடக்குமுறை தொடர்ந்தால் இராணுவ சதிப்புரட்சி -தினேஷ் குணவர்தன எச்சரிக்கை எதிர்க்கட்சி மீதான அடக்குமுறை தொடர்ந்தால் இராணுவ சதிப் புரட்சியொன்று ஏற்படுவதற்கான சாத்தி யக்கூறுகள் ஏற்படுமென கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எச்ச ரித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றையதினம் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்துகொண்டிருந்த நிலையிலேயே, இராணுவ சதிப்புரட்சியொன்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். அவருடைய இந்தக் கருத்தைத் தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவருக்கு எதிராக குரல் எழுப்பிய துடன், எதிர்த்தரப்பிலிருந்த ஒரு சில நாடாளுமன்ற …
-
- 0 replies
- 258 views
-
-
வடக்கில் வெற்றியீட்டிய சாதனையாளர்கள் கௌரவிப்பு வடக்கு மாகாணத் கல்வித்திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண சபையின் வழிகாட்டலின் கீழ் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வில் வெற்றியீட்டிய சாதனையாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. குறித்த நிகழ்வானது இன்று காலை காலை 9 மணிக்கு, வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் செ.உத யகுமார் தலைமையில் யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் ஆரம்பமானது. மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள குறித்த நிகழ்வின் முதலாம் நாள் நிகழ்வின் பிரதம விரு ந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா,…
-
- 2 replies
- 404 views
-
-
அரசியலமைப்பு பேரவை வழிநடத்தல் குழுவின் கீழுள்ள ஆறு உப-குழுக்களின் அறிக்கை நாடாளுமன்றத்தில், நேற்று சனிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த அறிக்கைகளின் மீதான விவாதம், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9,10 மற்றும் 11ஆம் திகதிகளில் இடம்பெறும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இதேவேளை, அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவின் அடுத்த கூட்டம் டிசெம்பர் மாதம் 10ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்தில் இடம்பெறும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அரசியலமைப்பு பேரவை வழிநடத்தல் குழுவின் கீழுள்ள உப-குழுக்களின் அறிக்கையை சமர்ப்பித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில், அடிப்படை உரிமைகள், நீதிமன்றம், நிதி, தேசிய மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு…
-
- 0 replies
- 348 views
-
-
மறைந்து வரும் யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளை தயாரித்து விற்பனை செய்யும் 'ஆயுசு 100' விற்பனை நிலையத்தின் செயற்பாடு உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. முதலாம் குறுக்குத்தெரு, வேம்படி மகளிர் உயர்தர பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள இந்த நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அதன் பணிப்பாளர் கே.றுசாங்கன், நேற்றுப் புதன்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தினார். தொடர்ந்து கூறுகையில், 'ஹோட்டல் மற்றும் சுற்றுலா துறையில் கல்வி பயிலும் மாணவர்களைக் கொண்டு இந்த நிலையம் கொண்டு நடத்தப்படுகின்றது. மாணவர்களுக்கு, சுற்றுலா துறை சார்ந்த பயிற்சிகளை வழங்குதல், அது சார்ந்த தொழில் கல்வியை அவர்களு…
-
- 0 replies
- 980 views
-
-
மாதகல் கோணாவளை வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அறையில், கிடங்கு வெட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 கிலோ 305 கிராம் கஞ்சா மற்றும் 76 இலட்சத்து 2 ஆயிரத்து 500 ரூபாய் பணம் என்பவற்றை கைப்பற்றியுள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய தற்காலிக பொறுப்பதிகாரி டிக்கிரி பண்டாரா தெரிவித்தார். அத்துடன், வீட்டு உரிமையாளரான 24 வயதுடைய யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு புதன்கிழமை (16) மதியம் கிடைக்கபெற்ற ரகசியத் தகவலினை அடுத்து, குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டது. வீட்டின் அறையினுள் சந்தேகத்துக்கிடமான முறையில் இருந்த குழியொன்றை தோண்டிய போது, 5 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா மீட்கப்பட்டது. மேலும், சமையில் அறையில் இருந்த வாளி ஒன்றினுள் மிக…
-
- 0 replies
- 399 views
-
-
இலங்கையின் புதிய அரசியலமைப்புக் குறித்த இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 6 உப குழுக்களின் அறிக்கையை பிரதமர் சமர்ப்பித்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய சாராம்சங்கள் என்ன, அவை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்புடையதா என்று அந்தக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியை இங்கு கேட்கலாம். http://www.bbc.com/tamil/india-38038805
-
- 0 replies
- 348 views
-
-
ஐங்கரநேசன் அவர்கள் மக்கள் பணியை நித்தம் செய்யும் செயற்பாட்டாளர். மக்களைக் குழப்புவதே முழுநேரத் தொழிலாகக் கொண்டு சிலர் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று (18-11-2016) கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில் நடைபெற்ற விதைச் சுத்திகரிப்பு நிலையத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவித்ததாவது, விவசாய அமைச்சருக்கு கிடைத்த உத்தியோகத்தர்கள் மிகவும் நல்லவர்கள். இலஞ்சம் ஊழலில் ஈடுபடாதவர்கள். வேறு சிலரைப்போல் அடாவடித்தனத்தில் ஈடுபடுபவர்கள் அல்ல. பணம்பெற்றுக்கொண்டு வறிய மக்களின் காணியைப் பறித்து பணக்காரர்களுக்கு கொடுத்து க…
-
- 0 replies
- 372 views
-
-
வடக்கு, கிழக்கில் நிலவும் வீட்டுப் பற்றாக்குறை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமருக்கு த.தே.கூ மகஜர் வடக்கு, கிழக்கில் நிலவும் வீட்டுப் பற்றாக்குறை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மகஜரொன்றை அனுப்பி வைத்துள்ளது. கூட்டமைப்பின் 16 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு இந்த மகஜரை அனுப்பி வைத்துள்ளனர். மூன்று தசாப்தகால யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீட்டுத் தேவையானது அவசரமாக பூர்த்தி செய்யப்பட வேண்டிய பிரச்சினையாகக் காணப்படுவதாக அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இந்திய அரசாங்கத்தினால் 50 ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மீள்குடியேற்ற அ…
-
- 0 replies
- 272 views
-
-
அம்பாறையைச் சேர்ந்தவரால் விதை நடும் இயந்திரம் கண்டுபிடிப்பு விவசாயத்தை இலகுபடுத்தும் வகையிலான விதை நடும் இயந்திரம் ஒன்று, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ரவிராஜினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவின் தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ரவிராஜ் என்பவரே இந்த விதை நடும் கருவிக்கு சொந்தக்காரர். 2010 ஆம் ஆண்டு முதல் அவர் மேற்கொண்ட விடா முயற்சி இன்று பலனளித்துள்ளது. இந்த விதை நடும் கருவி மூலம் சோளம், பயறு மற்றும் கச்சான் போன்ற சிறுதானிய விதைகளை நட முடியும். http://newsfirst.lk/tamil/2016/11/அம்பாறையைச்-சேர்ந்தவரால/
-
- 0 replies
- 486 views
-
-
இன ஒற்றுமை, சமாதானத்தை சீர்குலைக்க எவரையும் அனுமதிக்கமுடியாது-பிரதமர் நாட்டில் மீண்டும் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில், இன, மத முரண்பாடுகளை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். 30 வருட கொடூர யுத்தத்திற்குப் பின்னர் இனங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள ஒற்றுமை மற்றும் சமா தானத்தை சீர்குலைக்க இடமளிக்க முடியாது என்று தெரிவித்துள்ள பிரதமர், இனங்களுக்கிடை யிலான சமாதானத்தை குழப்ப முற்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான …
-
- 0 replies
- 304 views
-
-
மாவீரர் மாதத்தில் அவர் மகத்துவங்களை மட்டும் கதைப்போம் என கருதியது மனது. ஆனாலும் எல்லைகளை மீறி சில எச்சங்கள் செல்வதால் வரித்த வரம்புகளை கடந்து செல்லவேண்டியிருக்கின்றது. ஒரு இனத்தின் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என தெரியாத அவலத்தை பகிரங்கப்படுத்தவேண்டிய சர்வதேச விசாரணையை – மழுங்கடித்து மறைத்து இறுதியில் எமது மக்களை ஏமாற்றி – அது எப்பவோ முடிந்துவிட்டதாக சொல்லி வருகின்றார் சுமந்திரன். அறிவில் சிறந்தவர்களாக ஏமாற்ற முடியாதவர்களாக இருந்த எமது இனத்தை இவ்வளவு தூரம் தனது வார்த்தை ஞர்லத்தால் ஏமாற்ற துடிக்கின்றது அந்த சட்டாம்பித்தனம். இப்போது தமிழர்களுக்கு தீர்வை சொல்லாத அரசியலமைப்பு திருத்தத்தில் தமிழர்களுக்கு தீர்வு உள்ளது என ஏமாற்ற புறப்பட்ட…
-
- 0 replies
- 434 views
-
-
மாணவர்களின் கல்வியைக் குழப்ப வடக்கில் தீய சக்திகள் முயற்சி-முதல்வர் குற்றச்சாட்டு வடமாகாண மாணவர்களின் கல்வியைக் குழப்புவதற்கு, தேவையற்ற பல தீய சக்திகள் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னே ஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். இவ்வாறானவர்களின் செயற்பாடுகளை முறியடிப்பதற்காக பொலிஸாரும் மக்கள் குழு க்களும் முயற்சி செய்கின்ற போதும், மாணவர்களில் சிலரும் வேறு சதிகாரக் கும்பல்களும் இந்த நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் – உரும்பிராய் பலாலி வீதியிலுள்ள வசாவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ப…
-
- 1 reply
- 265 views
-
-
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் விசாரணைகள் கிடப்பில் போடப்படவில்லை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் விசாரணைகள் கிடப்பில் போடப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க இந்த விடயம் குறித்து இன்று பாராளுமன்றில் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என குறிப்பிட்டுள்ள அவர் சில சம்பவங்கள் தொடர்பிலான சாட்சியங்களை திரட்டுவதில் கால தாமதம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னரே ஊடகவியலாள…
-
- 0 replies
- 244 views
-
-
என்னை விடவும் எனது பாரியாருக்கு சம்பளம் அதிகம் – பிரதமர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தன்னை விடவும் தனது பாரியாருக்கு சம்பளம் அதிகம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க கூடுதலான சம்பளத்தை ஈட்டுவதாகத் தெரிவித்துள்ள அவர் தமது தேர்தல் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணியாற்ற அரசியல்வாதிகளுக்கு வாகனம் வழங்குவதில் தவறில்லை என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் ஜோன் அமரதுங்க கோரியுள்ளார். http://globaltamilnews.net/archives/7515
-
- 0 replies
- 355 views
-
-
ஆசிரியர்கள் மாணவர்களிடம் பரிசுப் பொருட்களை பெற்றுக்கொள்ளத் தடை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஆசிரியர்கள் மாணவர்களிடம் பரிசுப் பொருட்களை பெற்றுக்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களிடமிருந்து ஆசிரியர்கள் பரிசுப்பொருட்கள் எதனையும் பெற்றுக்கொள்ளக் கூடாது எனவும் அவ்வாறு பரிசு பெற்றுக்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பிலான சுற்று நிருபம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. http://globaltamilnews.net/archives/7519
-
- 0 replies
- 234 views
-
-
இலங்கைக்கு 162.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கம் சர்வதேச நாணய நிதிய இணக்கம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கைக்கு 162.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதிய இணக்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் இரண்டாவது கட்ட தவணைக் கடன் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 325.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதித்துள்ளது என்பதும் நோக்கத்தக்கது. http://globaltamilnews.net/archives/7505
-
- 0 replies
- 250 views
-
-
ஊடகவளங்கள் பயிற்சி மையத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஊடகவளங்கள் பயிற்சி மையத்தில் ஊடகக்ககற்கை பயிற்சி நெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழப்பாணப் பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமாக ஊடகக்கற்கைப் பயிற்சிநெறி இடம்பெறுகின்றது. குறித்த பயிற்சி நெறியில் தமது கற்கை நெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று காலை 10.45 மணியளவில் ஊடகவளங்கள் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு குறித்த பயிற்சி மையத்தின்பணிப்பாளர் தே.தேவானந்த் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக யாழ் பல்கலைக் கழக துண…
-
- 0 replies
- 288 views
-
-
பிரமிட் வியாபாரத்தால் ஏமாற்றப்படும் யாழ்ப்பாணத்தவர் இலங்கையில் பரவலாக இயங்கிவரும் பிரமிட் வியாபாரம் மூலம் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பா ணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் எமது செய்திப் பிரிவுக்குத் தெரிவித்துள்ளார். கொழும்பைத் தலைமையகமாகக் கொண்டு குளோபல் வியாபார சந்தையென்ற பெயரில் வியாபாரம் ஸ்தாபனம் ஒன்று நாடு தழுவிய ரீதியில் இயங்கி வருகிறது. இவ்வியாபாரத்தின் மூலம் சங்கிலிப்பிணைப்பு என்ற முறையால் ஆட்களை உள்வாங்கி அவர்களிடம் இருந்து பெருந்தொகைப் பணத்தை குறித்த நிறு வனம் வாங்கியுள்ளது. வியாபாரத்தில் இணையும் நபர்கள் மேலும் நபர்களை இணைத்துவிடுவதன் மூலம் இவர்களுக்கு இலாபத்தை வழங்குவதாக இந்நிறுவனம் கூறியுள்ளது. எந…
-
- 0 replies
- 311 views
-
-
இனப்பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வே பொருத்தமானது-மாவை சேனாதிராஜா இனப்பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வே பொருத்தமானது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறு ப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் முஸ்லிம் அமைச்சர்கள் பலர் நாடாளுமன்றத்தில் உள்ள போதிலும், தேியப்பட்டியலில் தெரிவான மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் 'ஏஜ்ன்ட்' போன்று செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு குறிப்பி ட்டுள்ளார். இதுகுறித்து மாவை சேனாதிராஜா மேலும் தெரிவி…
-
- 4 replies
- 329 views
-
-
ஜனவரிமுதல் வடக்கில் பாடசாலை நேரத்தில் மாற்றம் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாட சாலைகளும் ஆரம்பிக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, காலை 07.30 மணிக்கு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 01.30 மணிக்கு முடிவ டையும் என வடமாகாண கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வட மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் சீராக ஒரே நேரத்தில் இயங்க செய்வதற்கு நடவ டிக்கை எடுக்கப்பட்டு, அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 270 views
-
-
புதிய அரசியலமைப்புக் குறித்த இடைக்கால அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக, முழு நாடாளுமன்றமும், அரசியலமைப்புப் பேரவையாக மாற்றப்பட்டிருந்தது. இந்த அரசியலமைப்புப் பேரவையின் கூட்டம் இன்று காலை 9 மணியளவில் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார். இந்த அமர்வில், அரசியலமைப்புத் திருத்தம் குறித்து உப குழுக்களின் அறிக்கையை, பிரதமர் ரணில்விக்கிரமசிங்க சமர்ப்பிப்பார். அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான நியமிக்கப்பட்ட ஆறு உப குழுக்கள், வழிகாட்டுதல் குழுவுக்குச் சமர்ப்பித்திருந்த அறிக்கைகளையே சிறிலங்கா பிரதமர் அரசியலமைப்புப் பேரவையில் இன்று சமர்ப்பிக்கவுள்ளார். அத்துடன், தேர்த…
-
- 0 replies
- 295 views
-
-
நாட்டுக்கு சென்று நீண்டகாலம் வாழ விருப்பும் மூத்த வெளிநாட்டு குடிமக்களுக்காக கனவு இல்லம் விசா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.வயது முதிர்ந்தவர்களின் கனவு இல்ல திட்டத்துக்காக தரப்படும் வீசாவால் இது கனவு இல்ல வீசா என கூறப்படுகிறது. வெளிநாட்டு முதியவர்கள் மீது அன்பாகவும் கருணையோடும் இருந்து அவர்களுடம் இணைந்து வசிக்கும் அழகிய விடயத்தை இதன் மூலம் இலங்கை மக்கள் பெற முடியும் என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.55 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் யாரும் இத்திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம் இத்திட்டத்தில் இணைய விரும்புவர்கள் 15,000 அமெரிக்க டொலர்களை அல்லது அதற்கு இணையான வெளிநாட்டுப் பணத்தை இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியொன்றின் வைப்பு நிதியாக வைக்க வேண்டும்.இங்க…
-
- 0 replies
- 431 views
-
-
இந்தக் கைதுகள் மட்டும் போதுமா? பைஸ் இந்த சக்திகளின் பின்னால் இருப்பவர்கள் யார்? அவர்களது நோக்கம் என்ன? என்பது பற்றியும் ஆராய்ந்தறிய வேண்டும். இந்த இனவாதக் களத்தில் நமது கண்களுக்குத் தெரிவதெல்லாம் வெறும் அம்புகள்தான். அவற்றை எய்தவர்கள் யார் என்பதைக் கண்டறிவதே இனவாதம் எனும் புற்று நோய்க்கு மருந்து செய்வதற்கு பேருதவியாக இருக்கும். நாட்டில் கடந்த பல மாதங்களாக பிரபலங்கள் கைது செய்யப்படுவதும் விளக்கமறியலில் வைக்கப்படுவதும் வழக்கமாகிவிட்டன. எப்.சி.ஐ.டி. யிடம் வாக்குமூலமளிக்கிறார் என்று ஒரு தகவல் வரும். சில மணி நேரங்களில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் மேலும் சில ம…
-
- 0 replies
- 183 views
-
-
இன, மத வாதத்தை இல்லாது ஒழிக்கவேண்டியதன் அவசியம் நாட்டில் அண்மைக் காலமாக இனவாதத்தைத் தூண்டி குழப்பங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இந்தச் செயற்பாட்டில் பௌத்த தேரர்கள் உட்பட அரசியல்வாதிகளும் ஈடுபட்டு வருகின்றனர். இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி சமூகங்களிடையே உருவாகிவரும் நல்லிணக்க சூழலை சீர்குலைப்பதற்கே இவ்வாறான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் குருணாகல், கண்டி ஆகிய பகுதிகளில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. வடக்கு, கிழக்கு பகுதிகளில் புத்தர் சிலைகள் தான்தோன்றித்தனமான வகையில் அமைக்கப்படுவதுடன் மதவாதத்…
-
- 0 replies
- 237 views
-
-
தன்னுடைய விகாரைக்கு வரவில்லை என மைத்திரிபாலவையும் கெட்ட வார்த்தைகளால் சுமணரத்ன தேரர் ஏசினார் – வியாழேந்திரன் : குளோபல் தமிழ் செய்தியாளர் சோபித தேரர் மறைந்த போது சிங்கள மக்களும் முஸ்லீம் மக்களும் தமிழ் மக்களும் கண்ணீர் விட்டார்கள் என்று தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் சோபித தேரர்கள் வாழ்ந்த நாட்டில்தான் அம்பிட்டிய சுமணரத்ன தேரர்களும் வாழ்வதாக தெரிவித்துள்ளார். அண்மையில் கிராம சேவையாளர் ஒருவரை தவறான வார்த்தைகள் மூலம் பேசியதன் ஊடாக பெரும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ள மட்டக்களப்பில் தங்கியுள்ள சுமணரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்டத்தின் தமிழ் தேசியக் கூட்டமை…
-
- 0 replies
- 326 views
-