ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143410 topics in this forum
-
தமது பிள்ளைகள் அப்பாவிகள் – ஹாவா குழு என குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டவர்களின் தாய்மார் தமது பிள்ளைகள் அப்பாவிகள் எனவும் பொய்யாக அவர்கள் மீது ஹாவா குழு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அண்மையில் கைதுசெய்யப்பட்ட 11 இளைஞர்களின் தாய்மார் தெரிவித்துள்ளனர். அண்மையில் யாழில் கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞர்கள் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட போதே குறித்த இளைஞர்களின் தாய்மார் நீதிமன்ற வளாகத்தில் கண்ணீர் மல்க இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். நல்லாட்சி அரசாங்கத்திலும் தம் மீதான அடக்குமுறைகள் தொடர்வதாகவும் உண்மையில் ஹாவா குழுவின் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை கண்டறிந்து நீதியை நிலைநாட்ட வேண்டுமெனவும் அவர்கள்கோரிக்கை வ…
-
- 0 replies
- 216 views
-
-
போராட்டம் என்பது சுயவிருப்பின்றி உசுப்பேத்தல் மற்றும் சிலரது தூண்டுதலின் பேரால் நடந்ததாகவும், விடுதலைப் புலிகளின் கபடத்தனமான செயற்பாட்டால் சிக்கவைக்கப்பட்ட ஒருவர்தான் சதீஸ் என்று யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திரு சத்தியமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார். அரசியல் கைதி விவேகானதனூர் சதீசின் விடியலைத் தேடும் இரவுகள் நூல் வெளியீட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய மருத்துவர் சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்தாவது, போர் என்பது ஒருபோதும் நீதியாக நடைபெறாது. போரில் ஈடுபடுகிற தரப்பில் யார் முந்திக்கொள்வது என்றுதான் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இருதரப்பும் போரைச் செய்தபோது நாங்கள் உண்மையிலே சுகாதார ஊழியர்கள் கடுமையான ஒரு சவாலை எதிர்நோக்கினோம். இதில் எங்கள் சாரதிகள் மிகவும் நெ…
-
- 1 reply
- 676 views
-
-
70 கிலோகிராம் கஞ்சாவுடன் 8பேர் கைது வவுனியா பொலிஸ் பிரிவுகுட்பட்ட பகுதியில் வானொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 70 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் குறித்த வாகனத்தை சோதனை செய்தபோதே கஞ்சா போதைப்பொருள் கடத்தப்பட்டமை தெரிவந்துள்ளது. வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக கஞ்சா போதைப்பொருள் கடத்தப்பட்டுவரும் நிலையில் குறித்த வானை சோதனைக்கு உட்படுத்திய பின்னர் அதனை செல்வதற்கு அனுமதித்தபோதும், அதிலிருந்தவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து குறித்த வாகனத்தை பொலிஸார் மீண…
-
- 0 replies
- 243 views
-
-
இலங்கையில் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்கின்றன – பெலிசி காயிர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு இலங்கையில் வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்வதாக சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச தன்னார்வ அமைப்பின் துணைத் தலைவர் பெலிசி காயிர் தெரிவித்துள்ளார்.தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் அமைப்பின் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரங்கள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், பெலிசி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட சந்தேக நபர்களை காவல்துறையினர் சித்திரவதை செய்த சம்பவங்கள் தொடர்பில் 100க்கும் மேற்பட்ட முறைப்பா…
-
- 2 replies
- 355 views
-
-
வரணி குடமியன் பகுதியில் 40 லீற்றர் கோடா பரல்கள் கொடிகாமம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று இரவு 7.30 மணியளவில் குறித்த பகுதியை முற்றுகையிட்ட பொலிஸார் 40 லீற்றர் கோடா பரல்களை மீட்டதோடு சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் இன்றைய தினம் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.valampurii.lk/valampurii/content.php?id=12438&ctype=news
-
- 0 replies
- 515 views
-
-
ஆவா குழு சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு ஆவா குழு உறுப்பினர்கள் என சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 11 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவினை கொழும்பு மேலதிக நீதவான் இன்று பிறப்பித்துள்ளார். இவர்களை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்களில் ஒருவர் தரம் 11 கல்வி கற்கும் பாடசாலை மாணவன் என தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/13528
-
- 0 replies
- 211 views
-
-
யாழில் மீண்டும் வேலைக்குத்திரும்பியுள்ள சுகாதார தொழிலாளர்கள் (ஆர்.வி.கே.) யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதார சபை சுகாதார தொழிலாளர்கள் மீண்டும் இன்று காலை தொடக்கம் தமது பணிக்கு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சபையின் சுகாதார சபை சுகாதார தொழிலாளர்கள் மீண்டும் இன்று காலை தொடக்கம் தமது பணிக்கு திரும்பியுள்ளார்கள். இந்நிலையில் யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தேங்கிக்கிடக்கும் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன.நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி வட பிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்கத்தினர் கடந்த 7 ஆம் திகதி தொடக்கம் நடத்திய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நேற்று மாலையுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்…
-
- 0 replies
- 283 views
-
-
‘ஆவாவுக்கு பிரேஸிலிருந்தே கன்னி வாள் வந்துள்ளது’ அழகன் கனகராஜ் ஆவா குழுவின் ஆரம்பத் தலைவன் கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்த சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்னாயக்க, அக்குழுவுக்கான முதலாவது வாள், பிரேஸிலிலிருந்தே கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என்றும் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை, ஜே.வி.பியின் தலைவரும் எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க கேட்டிருந்த, ஆவா குழு தொடர்பிலான கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் அங்கு தொடர்ந்து பதிலளிக்கையில், “யாழ்பாணம், இணுவில் பகுதிய…
-
- 0 replies
- 336 views
-
-
அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க ஜேர்மன் ஒத்துழைப்பு இலங்கையில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க ஜேர்மன் பூரண ஒத்து ழைப்பு வழங்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். அண்மையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் ஜேர்மன் நாட்டின் உயர்ஸ்தானிகர் ஜோன் ரோட் உடனான சந்திப்பினை அடுத்தே அமைச்சர் இதனை தெரிவி த்துள்ளார். இதன்போது அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் உயர்ஸ்தானிகருடன் அமைச்சர் கலந்துரையாடினார். இதுதொடர்பில் கருத்து தெரிவி…
-
- 0 replies
- 178 views
-
-
முதல்வர் விக்கியின் உறுதிமொழியை அடுத்து சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது-நாளைமுதல் வழமைபோல் ஊழியர்கள் கடமையில் நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி வட பிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்கத்தினர் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்று மாலை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கைக்கு அமைய வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் வட பிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்க ஊழியர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்தே பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்…
-
- 0 replies
- 190 views
-
-
சூழ்ச்சிகளை வெற்றிகொள்வதற்கான மனோதிடம் என்னிடம் உள்ளது – ஜனாதிபதி மோசடியாளர்களைச் சுற்றி மட்டுமன்றி நல்லதொரு நாட்டுக்கான எமது குறிக்கோள்களைச் சுற்றியும் தடைகள் சூழ்ந்திருந்த போதிலும், அவையனைத்தையும் வெற்றிகொள்வதற்கான மனோதிடம் தன்னிடமிருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ராவய பத்திரிகையின் முப்பது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (15)இடம்பெற்ற அறிஞர்கள் கருத்தாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ராவய உட்பட்ட ஊடகங்களின் விமர்சனங்களுக்கு தான் தொடர்ச்சியாக முகங்கொடுப்பதாகவு தெரிவித்த ஜனாதிபதி அனைவரினதும் மரியாதைக்கும் ந…
-
- 0 replies
- 330 views
-
-
யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கில் இயங்கிய குழுக்களுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவே ஆயுதங்களை வழங்கினார். முன்னைய ஆட்சியில் தான் இராணுவத்தை அரசியலாக்கினர். ஆகவே, ஆவா குழுவின் பின்னணியிலும் இவர்கள் இருக்க வாய்ப்புக்கள் உள்ளன. இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து சரியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இன்று விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் தொடர்பில் குரலெழுப்பும் எவரும் அன்று எனக்காகக் குரலெழுப்பவில்லை என வும் அவர் குறிப்பிட்டார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் கொழும்பில் கலந்துகொண்ட நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவி…
-
- 0 replies
- 399 views
-
-
நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவது அரச உயர்மட்ட குழுக்களின் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா (க.கமலநாதன்) இந்நாட்டில் சிதறிக் கிடக்கும் குழுக்களை ஒன்றிணைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதற்காகவே நல்லிணக்கத்தினை உறுதிப்படுத்தும் பொறுப்பை அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு கையிலெடுத்துள்ளதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க செயலகத்தின் நம்பிக்கைக்கான சிறகடிப்பு என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதிநாள் நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகை…
-
- 0 replies
- 154 views
-
-
வடமாகாண சபை பொறுப்புடன் செயற்பட வேண்டும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவிப்பு (ரொபட் அன்டனி) வட மாகாண சபையானது மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்திசெய்வதில் செயற்திறனாக செயற்படவில்லையென்றே நாங்கள் கருதுகின்றோம். வட மாகாண சபைக்காக மத்திய அரசாங்கம் ஒதுக்குகின்ற நிதியைக் கூட முழுமையாகப் பயன்படுத்தாத நிலைமையே சபையில் காணப்படுகின்றது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். எனவே வட மாகாண சபையானது பொறுப்புடன் செயற்படவேண்டியது அவசியமாகும். மக்களின் தேவைகள் குறித்து ஆழமாக கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்ற முன்வரவேண்டும். வெறுமனே அரசாங்கத்தை …
-
- 0 replies
- 289 views
-
-
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார். நல்லாட்சி அரசாங்கமானது நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்துவருகின்ற போதிலும் அதனை குழப்பும் வகையிலான செயற்பாடுகளில் இனவாத சக்திகள் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றன. அரசாங்கமானது அரசியலமைப்பை மாற்றியமைத்து பிரச்சி னைக்கு தீர்வுகாண்பதற்கான முன்முயற்சிகளை எடுத்து வருகின்றது. ஆனால் இந்த முயற்சிகளைக் கூட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான பொது எதிரணியினர் உட்பட இனவாத அமைப்புக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. …
-
- 0 replies
- 345 views
-
-
மலையக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் கண்டுகொள்வதேயில்லை. சம்பள உயர்வு பிரச்சிணை, ஆசிரியர் உதவியாளர்களுக்கான சம்பளம் வழங்கப்படாமை உள்ளிட்ட அனைத்து மலையக பிரச்சினைகளும் இவ்வரசாங்கத்திலும் தொடர்கின்றமையானது பெரும் கவலையளிப்பதாக உள்ளது என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். மலையக உதவி ஆசிரியர்களுக்கு புதிய வரவு, செலவுத் திட்டத்தினூடாக எவ்வாறான நிவாராணங்கள் பெற்றுத்தரப்படவுள்ளதாக வினவிய போதே அவர் கேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் குறிப்பிடுகையில் மலையக ஆசிரியர் உதவியாளர்கள் நியமனம் வழங்கப்பட்டதிலிருந்து இத…
-
- 0 replies
- 384 views
-
-
நல்லாட்சி விடியலோடு சதீஸ்குமார் எதிர்பார்க்கின்ற விடியலும் ஏற்படும் – சுமந்திரன் சட்டத்தை விமர்சிக்க கூடாது என்று இங்கு பேசப்பட்டது அப்படியல்ல நன்றாக விமர்சிக்கலாம் நாங்கள் பயங்கரவாத தடைச்சட்டம் கொடுமையானது என்று நாங்கள் தொடர்ச்சியாக விமர்சிக்கின்றோம். நீதிமன்ற தீர்ப்புக்களையும் விமர்சிக்கலாம் நீதிமன்ற தீர்ப்பு தவறானது என்பதை எவரும் விமர்சிக்கலாம். ஆனால் ஒரு வழக்கில் தீர்ப்பு கொடுக்கப்படுவதற்கு முன்னர் வழக்கு நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் போது அந்த வழக்கை பற்றி விமர்சிக்க கூடாது அது தண்டணைக்குரிய குற்றம். நாங்கள் வழக்கறிஞர்களாக பயிற்றப்படுகின்ற போது எங்களுடைய சிரேஸ்ட சட்டத்தரணிகள் சொல்வார்கள் நீதிபதிகளுக்கு இதுதான் சரி …
-
- 4 replies
- 547 views
-
-
முஸ்லிம்களை தீ வைத்து எரிப்பதாக மிரட்டல் விடுத்த டான் பிரசாத் சற்று முன்னர் கைது கொழும்பில் கடந்த 3ஆம் திகதியன்று தவ்ஹித் ஜமாத் நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக் கணக்கான மக்களை தற்கொலை தாக்குதல் நடத்தியும், தீ வைத்து எரித்தும் கொள்ளுவேன் என்று தெரிவித்திருந்த டான் பிரசாத் என்பவர் சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, கோட்டை பொலிஸ் நிலையத்தில் தவ்ஹீத் ஜமாத் சார்பில், கடந்த 7 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். டான் பிரசாத்தை நீதிமன்றில் ஆஜர் படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். http://www.virakesari.lk/article/13514
-
- 0 replies
- 326 views
-
-
தண்ணீர் கொடுக்காத சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை -எம்.றொசாந்த் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தமக்கு உணவு, குடிநீர் தராமல், அழைத்து வந்துள்ளதாக ஊர்காவற்துறை நீதவானிடம், புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபர்கள் முறையிட்டுள்ளனர். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (15) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போது நீதவான், சந்தேகநபர்களிடம் “ஏதேனும் மன்றில் தெரிவிக்க போகின்றீர்களா?” என வினாவினார். அதனையடுத்து எட்டாவது சந்தேகநபர், தம்மை அழைத்து வந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உணவு, தண்ணீர் தரவில்லை எனறு கூற…
-
- 0 replies
- 213 views
-
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையவுள்ள சட்ட திருத்தம் சட்டத்தரணி எம்.ஏ.எம். ஹக்கீம் (சிரேஷ்ட விரிவுரையாளர் சட்டபீடம், - கொழும்புப் பல்கலைக்கழகம்) யுத்தத்திற்குப் பின்னரான சமாதான சூழலில் மக்கள் நாட்டின் எப்பாகத்திற்கும் செல்வதற்கும், தமது காணிகளில் குடியிருப்பதற்கும் வாழ்வாதாரக் காணிகளை மீளப்பெறுவதற்குமான சந்தர்ப்பம் எழுந்துள்ளது. ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்குச் சொந்தமான காணிகள், வீடுகள், ஏனைய கட்டிடங்கள் மற்றும் விவசாய நிலங்களில் ஏராளமானவை கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு …
-
- 1 reply
- 925 views
-
-
சுவிஸ்குமாரின் வங்கிக் கணக்கினை ஆராய உத்தரவு புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் ஒன்பதாவது சந்தேகநபரான சுவிஸ்குமாரின் வங்கிக் கணக்கை விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் ஒன்பதாவது சந்தேகநபரான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமாரின், வங்கிக் கணக்கை விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. யாழ் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட பின்னர், சுவிஸ்குமார் எவ்வாறு தப்பிச் சென்றார் என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றத்தடுப்பு புலனாய்வுபிரிவு பொலிஸார் மன்றில் தெரிவித்தனர். மேலதிக விசாரணைக்காக, சுவிஸ்குமாரிட…
-
- 0 replies
- 256 views
-
-
உறவுகளை நினைவுகூரும் உரிமை வேண்டும் : தமிழ் அரசியல் தலைவர் கோரிக்கை 30 வருட யுத்தத்தில் உயிர் நீத்த போராளிகள் பொது மக்களுக்கு சபையில் அஞ்சலி செலுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கார்த்திகை மாதத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமையை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பாரளுமன்றத்தில் இன்று 2017 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்; யுத்தத்தில் உயிர் நீத்த போராளிகள் பொது மக்களுக்கு இந்த கார்த்திகை மாதத்தில் எனது மர…
-
- 0 replies
- 271 views
-
-
வித்தியா கொலை சம்பவம் : வாக்குறுதியை நிறைவேற்றாத ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்து படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் தாயாரிடம் விசேட நீதிமன்றம் அமைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குற்றம் சுமத்தினார். பாராளுமன்றத்தில் இன்று 2017 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மீதான மூன்றாவது நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/13507
-
- 0 replies
- 235 views
-
-
7 அடி உயரமான கஞ்சா செடி -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி மாவட்டத்தில் 7 அடி உயரமான கஞ்சா செடி கைப்பற்றப்பட்டுள்ளது. மலையாளபுரம் பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, மேற்கொண்ட விசேட தேடுதலின்போது, குறித்த கஞ்சா செடியும், 25 லீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பிரதி பொலிஸ்மா அதிபரின் கட்டளைக்கமைய தேடுதல் மேற்கொண்ட விசேட பொலிஸ் குழுவினரால் குறித்த செடி மீட்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரையும் மீட்கப்பட்ட பொருட்களையும் கிள…
-
- 1 reply
- 472 views
-
-
வடக்கு பாடசாலைகளை உன்னிப்பாக கண்காணிக்கிறது மாகாண கல்வியமைச்சு வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளை எமது கல்வி அமைச்சானது உன்னிப்பாக கவனித்து வருகி ன்றது.குறிப்பாக யாழ்ப்பாண கல்வி வலயம்,வலிகாம கல்வி வலயம்,ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளின்அபிவிருத்தி,கல்வி நடவடிக்கைகளில் நாம் நேரடியான கவனத்தினை கொண்டுள்ளோம் என யாழ்.சுன்னாகம் இராமநாதன் பெண்கள் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் பிரதம விருந்தி னராக கலந்து கொண்ட வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.ரவீந்திரன்மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது "அண்மையில் உள்ள பாடசாலை நல்ல பாடசாலை" எனும் கருப்பொருளுக்கு அமைய பாடசாலைகளின் அப…
-
- 0 replies
- 362 views
-