Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளுக்கு என்ன நடந்தது: ஜே.வி.பி. கேள்வி இலங்கையில் நடந்த போரின்போது புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளில் பொதுமக்களுக்கு உரியதை, அவர்களிடமே கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நலிந்த ஜயதிஸ்ஸ போரின்போது, போர் வலயப் பகுதிகளிலிருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்ட நகைகள் குறித்து, மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் எழுப்பி கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மலையகம் மற்றும் தெற்கிலுள்ளவர்களுக்கு தங்களது காணி எந்தளவுக்கு முக்கியமோ, அதேபோன்று வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களது நகைகள் முக்கியமானதா…

  2. உண்ணாவிரத போராட்டத்தில் உள்ள கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவு கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் கைதிகளுக்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்குமாறு கொழும்பு நீதிமன்றம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 14 தமிழ் கைதிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அவர்கள் இன்று நீதிமன்றத்தில் உள்ள எதிராளிகள் கூண்டில் நிறுத்தப்படவில்லை என்று அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல்கொடுக்கும் அமைப்பைச் சேர்ந்த அருட்தந்தை சத்திவேல் தெரிவித்தார். உண்ணாவிரத போராட்டம் காரணமாக இந்த கைதிகளின் உடல்நிலை பாதிக்கப்ப…

  3. அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் காலமானார் சுகயீனம் காரணமாக கண்டி போதனா வைத்தியசாலையில் இன்று மாலை அனுமதிக்கப்பட்ட அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய ஸ்ரீ கலகொட அத்ததஸ்ஸி தேரர், சற்றுமுன்னர் காலமானார். http://www.virakesari.lk/article/4019

  4. உடுவே தம்மாலோக தேரருக்கு விளக்கமறியல் உரிய ஆவணங்கள் இன்றி யானைக் குட்டியை தன்னகத்தே வைத்திருந்த உடுவே தம்மாலோக தேரரை இம் மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. http://www.virakesari.lk/article/4016

  5. பிரேரணை நிறைவேறியது புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக, முழு நாடாளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக நியமிப்பதற்கான யோசனை, திருத்தங்களுடன், வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (09) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்போது, கூட்டு எதிரணி உறுப்பினர்கள் அவையில் இருக்கவில்லை. - See more at: http://www.tamilmirror.lk/167829/%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A8-%E0%AE%B1-%E0%AE%B5-%E0%AE%B1-%E0%AE%AF%E0%AE%A4-#sthash.BaXJVWQq.dpuf

  6. யாழில் மகளிர் தினம்! வன்மைக்கு முதலிடம்! வடமாகாண நன்நடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகளும், மற்றும் மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த நிலையான எதிர்காலத்திற்கு வலுவான பெண்கள் எம் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் பி.ப 2மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடக்கு முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்பித்தார். சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக குறும்படங்கள் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் குறும்பட இறுவட்டுக்களும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. இதில் வடமாகாணத்தில் 3 குறும்படங…

  7. வல்வெட்டித்துறை மாணவி கடத்தல், பாலியல் வல்லுறவு வழக்கு: எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை! வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குடும்பஸ்தருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து, இன்று தீர்ப்பளித்துள்ளார். அத்துடன் 30 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 லட்சம் ரூபா நட்டஈடு செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் மாணவி ஒருவரை, அதிகாலை 3 மணிக்கு கடத்திச் சென்று முல்லைத்தீவில் வைத்து பால…

  8. வெளிநாட்டிலிந்து வருகை தரும் தமிழர்களையும் நல்லாட்சி அரசாங்கம் சிறையில் அடைத்துக் கொண்டிருப்பதாக வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரே கடுமையாக விமர்சித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் வேண்டுகோளுக்கு இணங்க வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரே மெகசின் சிறைச்சாலைக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியிருந்தார். அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், இந்த அரசாங்கம் தன்னை நல்லாட்சி மற்றும் நல்லிணக்க அரசாங்கமாக அழைத்துக் கொள்கின்றது. ஆனாலும் இந்தச்சிறைக்குள் அடைபட்டிருக்கின்றவர்கள் மத்தியில் வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரும் இருக்கின்றார். இதுதான் நல்லாட்சியின் லட்சணமா என்ற கேள்வி எமக்குள் …

  9. பிரித்தானிய தன்னார்வ தொண்டரும் மருத்துவருமான தமிழ்வாணி என்ற பெண்ணின் விடுதலையின் பின்னணியில், கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் செயற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்வாணி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக சாட்சிமளித்தவர்களில் முக்கியமானவர் என சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவத்தினர், தமிழ் வாணியை கைது செய்திருந்தனர். தமிழ்வாணியை விடுதலை செய்து பிரித்தானியாவிற்கு அனுப்பி வைத்ததன் பின்னணியில் முக்கிய அமைச்சர் ஒருவர் செயற்பட்டுள்ளார். அப்போதைய இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் கோரிக்கைக்கு அமைய தமிழ்வாண…

  10. இறுதிக்கட்ட போரின் கடைசி நாட்களில் இலங்கை இராணுவத்தால் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக, போர்களத்தில் செயற்பட்ட வைத்திய கலாநிதி.ரி.வரதராஜன் தெரிவித்துள்ளார். லங்காசிறி 24 செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இறுதிக்கட்டத்தில் களத்தில் ஏற்பட்ட அவலங்கள், விடுதலைப் புலிகளின் தலைவரின் இளைய மகனுக்கு என்ன நடந்தது, சரணடைந்தோருக்கு என்ன நடந்தது, காணாமல்போனோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது என்பது தொடர்பில் பல்வேறு விடயங்களை அவர் எம்மோடு பகிர்ந்து கொண்டார். http://www.tamilwin.com/show-RUmuyDTdSXnr6H.html

  11. யோஷித ராஜபக் ஷவுக்கு எதிரான ஆதாரங்களாக கருதப்படும் பல மின்னஞ்சல்கள் வெளிநாட்டில் இருந்து செயற்படும் ஒருவரால் அல்லது குழுவொன்றினால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் யோஷித ராஜபக் ஷவினுடைய மின்னஞ்சல்கள் அடங்கிய இறுவட்டொன்று கைப்பற்றப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் 4000 இற்கும் அதிகமான மின்னஞ்சல்கள் உள்ள நிலையில், வெளி நாட்டிலிருந்து ஒருவர் யோஷிதவுடனான தொடர்புகள் அடங்கிய மின்னஞ்சல்களை அழித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்றுக் காலை அரச சட்டவாதிக்கு அறிவித்துள்ளதாக மேல் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது அவர் சுட்டிக்கட்டினா…

  12. பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையின் படி வடக்கு,கிழக்கில் 7 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே காணாமல் போயுள்ளனர் என்றும், அவர்களில் பலர் ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றும் மஹிந்த ஆதரவு அணி உறுப்பினரான தினேஷ் குணவர்தன வெளியிட்ட கருத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் எம்.பி. கடும் ஆட்சேபனை வெளியிட்டார். அத்துடன், காணாமல்போனோர் விவகாரம் குறித்து சுமந்திரனுக்கும் தினேஷ் குணவர்தனவுக்குமிடையில் சபையில் கடும் சொற்போர் மூண்டது. நாடாளுமன்றம் நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆகியன முடிவடைந்த பின்னர், காணாமல்போனோர் விவக…

  13. வாக்குத் தவறியது மைத்திரியின் அரசு! காணாமற்போனோர் விவகாரம், அரசியல் கைதிகளின் விவகாரம் இரண்டிலுமே அரசு சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை இன்னமும் நிறைவேற்றவில்லை. இவ்வாறான நிலையில் நாட்டில் எவ்வாறு நல்லிணக்கம் ஏற்படும். சரியான விடயங்களைச் செய்வதற்கு அரசு தயக்கம் காட்டக்கூடாது. சரியானவற்றை செய்வதற்குத் தான் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன். காணாமல்போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகை…

  14. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இதற்குப் பதிலாக சர்வதேச தரத்திலான சட்டமூலமொன்றை எதிர்வரும் மாதங்களில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். காணாமல்போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுவந்த சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் கூறினார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக சர்வதேச தரத்திலான சட்டமொன்று கொண்டுவரப்படும். இது தொடர்பான சட்டவரைபொன்று சட்டஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட…

  15. காணாமல்போனோரின் உறவுகள் கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் கடந்த 2008 ஆம் ஆண்டு கடற்படையினரால் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளையும் கணவர்களையும் மீண்டும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி கணவர்களையும் பிள்ளைகளையும் இழந்தவர்கள் இன்று பகல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 8 வருடங்கள் கடந்தும் இன்னும் தங்கள் பிள்ளைகளை கண்ணில் காட்டாமல் எங்கு ஒழித்துவைத்திருக்கிறார்கள். இந்த நல்லாட்சி அரசாங்கமாவது எங்களுக்கு நல்லவழியை காட்டும் என்று எண்ணி இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தெஹிவளை, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் வெளிநாடுகளுக்கு படிப்பிற்காகவும் வேலை நிமிர்த்தமும் செல்ல …

  16. ஜனாதிபதி தலைமையில் 32ஆவது முதலமைச்சர்கள் மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான 32ஆவது முதலமைச்சர்கள் மாநாடு எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி தென் மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக தென் மாகாண சபையின் பிரதம செயலாளர் ஆர்.சி.டி சொய்ஷா தெரிவித்துள்ளார். 9 மாகாண முதலமைச்சர்களும் சந்திக்கும் இந்த மாநாட்டில் கிழக்கு மாகாணத்தில் மாகாண நிர்வாகத்தை கொண்டு நடாத்துவதில் ஏற்பட்டிருக்கும் முட்டுக்கட்டைகள் குறித்து முழுமையான அறிக்கை ஒன்றை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். இதுவரை காலமும் மாகாண நிர்வாகத்தில் குறிப்பாக அபிவிருத்தி நடவ…

  17. தாமரைத் தடாகம் மலசலகூடம் போன்றது: சந்திரிகா -பியூமி பொன்சேகா கொழும்பிலுள்ள தாமரைத் தடாகம் (நெலும் பொகுன) கலையரங்கம் மலசலகூடம் போன்று இருப்பதால் சுற்றுச்சூழல் அழகைக் கெடுப்பதாகவும் இந்தக் கலையரங்குக்குத் தான் முதலில் தீட்டியிருந்த எண்ணக்கருவை ராஜபக்ஷ அரசாங்கம் மாற்றிக் குழப்பிவிட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். 'தாமரைத் தடாகம் அவலட்சணமாக உள்ளது. இதை சொல்வதையிட்டு நான் மனம் வருந்துகின்றேன். நான் எனது வீட்டை விட்டு வரும்போதேல்லாம் இதைக் காண்கிறேன். இது சுற்றுச்சூழலை கெடுத்துவிட்டது. முதலில் இருந்தத் திட்டம் அழகானது. இப்போது அங்கு மக்கள் போவதில்லை. இங்குள்ள கழிவறைகளும் பாவனைக்குரியதாக இல்…

  18. குடிநீர் வேண்டும்... கு.புஸ்பராஜ், ஆ.ரமேஸ் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை, பாமஸ்டன் கொலனியில், நிலவி வரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுத் தருமாறு கோரி, 300 இற்கு மேற்பட்ட மக்கள் ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதி, பாமஸ்டன் சந்தியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் இன்று (09) ஈடுப்பட்டனர். - See more at: http://www.tamilmirror.lk/167801/%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%A8-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%AE-#sthash.Kk4WkLGY.dpuf

  19. குற்றச் செயல்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள போதிலும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். தலைநகரம் மற்றும் தென் பகுதிகளில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்தக் குற்றச் செயல்கள் தனிப்பட்ட பகைமை காரணமாகவே இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த சில வாரங்களில் இலங்கையில் துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த மார்ச் 5ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில்…

  20. நாமலுக்கு எதிராக வழக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச உட்பட 8 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 12.5 கோடி ரூபாவை பயன்படுத்தி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சேவை வழங்கும் கவர்ஸ் கோபரேஷன் பிரைவட் லிமிட்டட் நிறுவனத்தை கொள்வனவு செய்தமை தொடர்பாகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்சவை தவிர ஏனையோர் நாட்டில் இருந்து வெளியேற தடைவிதித்த நீதவான், நிறுவனத்தின் பெயரில் உள்ள வ…

  21. ஹட்செசன்- சம்பந்தன் பேச்சுவார்த்தை Published by MD.Lucias on 2016-03-09 12:41:19 புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரைஸ் ஹட்செசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். http://www.virakesari.lk/article/3998

  22. இலங்கைப் பெண்ணுக்கு குவைத்தில் மரண தண்டனை! போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கைப் பெண் ஒருவர் உள்ளிட்ட நால்வருக்கு குவைத் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கைப் பெண் ஒருவர் மற்றும் மூன்று இந்தியர்களுக்கு எதிராக நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குவைட் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர்கள் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டனர். இதன்போது குற்றவாளிகள் வசம் இருந்து நான்கு கோடி இந்திய ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது. எது எவ்வாறு இருப்பினும்…

  23. "ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்"; இரு மாதத்திற்குள் 44,677 முறைப்பாடு பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை தெரிவிக்கும் முகமாக ”ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்” என்ற சேவை ஆரம்பமாகி இரண்டு மாதங்களுக்குள் 44,677 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அத்தோடு, இந்த முறைப்பாடுகளுக்கு அமைய பொதுமக்களுக்கு பதிலளிப்பதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஒருங்கிணைப்பாளர் சிரால் லக்திலக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 2020 ஆம் ஆண்டளவில் அனைத்து பிரஜைகளினதும் பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதற்கான ஒரு தீர்வு திட்டத்தின் நோக்கத்துடன் ஜனாதிபதியால் இந்த திட்டம் ஆரம்பிக்கப்ப…

  24. உடுவே தம்மாலோக தேரரைக் கைது செய்ய விரைந்தனர் பொலிஸார்? உடுவே தம்மாலோக தேரரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்பொருட்டு தற்போது பொலிஸார் தேரர் பணிபுரியும் கிருளப்பனையிலுள்ள அலன்மெதினியாராமவுக்கு சென்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. யானைக் குட்டியை தன்னகத்தே வைத்திருந்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/news/10396

  25. மஹிந்த பலம் பெறுவதை ஆவலுடன் நோக்கும் ரணில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலொன்று நெருங்கி வரும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள்ளும் தமது நிலையைப் பலப்படுத்திக் கொண்டு வருவதை அவதானிக்க முடிகிறது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள், வேறு கட்சிகளை உருவாக்கினாலோ அல்லது அவற்றுடன் இணைந்து செயற்பட்டாலோ, கட்சியிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுவர் என, ஸ்ரீல.சு.கவின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க அண்மையில் விடுத்த எச்சரிக்கையை அதற்கு ஓர் உதாரணமாக எடுத்துக் காட்டலாம். அதை விட, ஜனாதிபதியே நேரடியாக எடுத்த ஒரு நடவடிக்கை, அவர் கட்சிக்குள் களைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.