ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
மகிந்த விரும்பினால் உடன் வெளியேறலாம்! சு.க. அறிவிப்பு! முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விரும்பினால் கட்சியை விட்டு உடன் வெளியேறிச் செல்ல முடியும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா அல்லது கட்சியை விட்டு விலகிச் செல்வதா என்பதனை மகிந்தவே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். எந்தவொரு தீர்மானத்தையும் சுயாதீனமாக எடுக்க அவருக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தெரிந்து கொண்டு கட்சியின் ஒழுக்க மற்றும் யாப்பு விதி மீறல்களில் மகிந்த ராஜபக்ச ஈடுபடுவதானது பாரதூரமான…
-
- 0 replies
- 310 views
-
-
வடமாகாண ஆரோக்கிய விழா யாழில்! வடமாகாண சுகாதார அமைச்சு மற்றும் பல்கலைக்கழக சமுதாய குடும்ப மருத்துவ துறை பிரிவு இணைந்து ஏற்பாடு செய்த வடமாகாண ஆரோக்கிய விழா கண்காட்சி யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஆரம்பமானது. குறித்த கண்காட்சியை யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் ஆரம்பித்து வைத்தார். மேலும் இக்கண்காட்சியில் மாகாண சுகாதார சேவையின் பிரதி பணிப்பாளர் கேதீஸ்வரன் கலந்து கொண்டிருந்தார். http:/…
-
- 1 reply
- 415 views
-
-
பொன்சேகாவின் எம்.பி பதவிக்கு எதிராக மனு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலின் ஊடாக, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் நியமனம் சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சரத் பொன்சேகாவின் நியமனம் மற்றும் அந்த பதவியிலிருப்பது சட்டவிரோதமானது என்றும், அப்பதவியில் தொடர்ந்திருந்து செயற்படுவதை தடுக்குமாறு இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனு, இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/166435/%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%AE-%E0…
-
- 0 replies
- 299 views
-
-
பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சிவனருள் உற்பத்தி நிலையம் கிளிநொச்சி – பெரிய பரந்தன் பகுதியில் இயங்கிவரும் சிவனருள் உற்பத்தி நிலையத்தின் மூலம் அதிகளவிலான பெண்கள் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு பெண் தலைமைத்துவத்தின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினைக் கட்டியெழுப்பும் நோக்குடன் சிவனருள் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையம், பல்வேறு உற்பத்திகளை சந்தைப்படுத்தி வருவதுடன், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பெண்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கி வருகிறது. இதேவேளை, தமது உற்பத்திகளை மக்கள் அதிகளவில் நுகரும்போது தம்மைப் போன்று பலரது வாழ…
-
- 3 replies
- 384 views
-
-
தமிழரசுக் கட்சிக்கு எதிரான மனுவை அனுமதிப்பதா.. இல்லையா? - தீர்ப்பு ஒத்திவைப்பு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள, அனுமதிப்பதா என்பது தொடர்பிலான தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாப்பு அரசியலமைப்பு வரையறைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரியே, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எச்.கே.டி சந்திரசோம என்பவராலேயே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாப்பில் பிறிதொரு தேசம் கோரப்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். அது அரசியலமைப்பை மீறும் செயல் என குறிப்பிட்டுள்ள அவர், அந்தக்…
-
- 0 replies
- 313 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜெர்மன் ஜனாதிபதியுடன் சந்திப்பு ஜெர்மனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு ஜனாதிபதி ஒக்கீம் கொக்கை (Joachim Gauck ) சந்தித்து உத்தியோகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். பர்லீனிலுள்ள பெல்வியு மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜெர்மன் ஜனாதிபதி அமோக வரவேற்பளித்ததாகவும் , ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 5 தசாப்த காலமான ஜெர்மனால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அபிவிருத்திக்கான நிதி உதவி தொடர்பில் தனது இதயபூர்வமான நன்றிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்த…
-
- 0 replies
- 268 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரும் காலங்களில் ஒரே குழுவாக அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இடம்பெறவுள்ளதுடன், அதனையடுத்து பங்காளிக்கட்சித் தலைவர்களிடத்தில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான விசேட சந்திப்பும் நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று மாலை 5மணி முதல் 7மணி வரையில் கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நட…
-
- 1 reply
- 234 views
-
-
மனித உரிமை மீறல்கள் குறித்து மேற்கொள்ளப்படும் உள்ளக விசாரணையின் போது, பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அடுத்தடுத்து அம்பலத்திற்கு வரும் என்று கருத்திட்ட அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். 'உள்ளக விசாரணையில் இராணுவ வீரர்கள் பற்றிய விவாதம் ஆரம்பிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்களை மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா முன்வைக்கவுள்ளார். இதன்போது இராணுவ வீரர்களை சுடுவதற்காக துப்பாக்கி தாரிகளுக்கு பணம் கொடுத்தது யார்? எல்.ரீ.ரீ.ஈ.னருடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம்? எல்.ரீ.ரீ.ஈ.யினருக்கு பணம் வழங்கியது யார்? அதில் எ…
-
- 0 replies
- 398 views
-
-
இலங்கைக்கு 14 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி இலங்கைக்கு 14 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி வழங்க ஜேர்மன் இணக்கம் தெரிவித்துள்ளது. ஜேர்மனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த நாட்டு தலைவர்களுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாகவே இந்த, உதவி கிட்டியுள்ளது. ஜேர்மன் - இலங்கைக்கு இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, அங்கிருக்கும் எமது விஷேட பிரதிநிதி ஷெகான் பரணகம குறிப்பிட்டுள்ளார். இந்த நிதியில் ஆறு மில்லியன் யூரோ வில்பத்து சரணாலய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவும், வடக்கு, கிழக்குக்காக நான்கு மில்லியன் யூரோவும், 2.4 மில்லியன் யூரோ சிறிய மற்றும் மத்தியதர தொழிற்துறை மு…
-
- 0 replies
- 258 views
-
-
ஏஞ்சலா மேர்கலை சந்தித்தார் ஜனாதிபதி ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜேர்மன் நாட்டின் சென்சியூலர் ஏஞ்சலா மேர்கலை சற்று முன்னர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜேர்மனியின் பெர்லின் நகரில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை ஜேர்மனி பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அங்கு அரச பிரதானிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். தொடர்ந்து ஜேர்மனி வௌிவிவகார அமைச்சர், பொருளாதார விவகார அமைச்சர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார். அத்துடன இரு நாடுகளுக்கிடையிலும் இன்று சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=77140 (அத தெரண தமிழ்)
-
- 25 replies
- 1.4k views
-
-
ஜேர்மன் அதிபர் விரைவில் இலங்கைக்கு விஜயம் ஜேர்மன் அதிபர் ஏஞ்ஜலா மெர்கல் இலங்கைக்கான விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கான உத்தியோகபூர்வை அழைப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜேர்மன் அதிபருடனான சந்திப்பின்போது விடுத்துள்ளார். அதேவேளை இலங்கைக்கான ஜி.எஸ்.பி வரிச்சலுகை மற்றும் ஐரோப்பா சந்தைக்கான இலங்கைக்கான மீன் ஏற்றுமதி தடையை நீக்குவது தொடர்பிலான விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்துவதாக ஜேர்மன் அதிபர் கூறியுள்ளார். http://onlineuthayan.com/news/8986
-
- 0 replies
- 294 views
-
-
யாழ். சாரணிய சங்கத்தின் நூற்றாண்டு விழா 9ஆவது ஜம்போறி நிகழ்வில் சங்கமம் -பாநூ கார்த்திகேசு இலங்கை சாரணிய சங்கத்தினால் நடத்தும் 9ஆவது ஜம்போறி நிகழ்வு, இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஜம்போறி நிகழ்வில் யாழ்ப்பாணம் நகரசபை விளையாட்டரங்கு உட்பட அதனை அண்டிய பகுதிகளில் 20ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சாரணிய இயக்கத்தின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை(17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சாரணிய இயக்கத்தின் தலைவர் நிமால் டீ சில்வாவினால் இவ்வறிவிப்பு வழங்கப்பட்டது. 22ஆம் திகதி நடைபெறும் வ…
-
- 0 replies
- 259 views
-
-
புலிகள் மஹிந்தவை குறைத்து மதிப்பீடு செய்துவிட்டனர் – பெசில் ராஜபக்ஸ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்கள் வாக்களிப்பதனை தடுக்கும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பணம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்படும் எமில் காந்தனிடம் பணம் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த தகவல்களில் எவ்வித உண்மையும் கி…
-
- 0 replies
- 423 views
-
-
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதவியை குமார் சங்கக்கார நிராகரித்தார் பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவியை, பிரபல கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார நிராகரித்தார் என தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரத்தியேக செயலாளர் பாலித பெல்பொல இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் பீ.சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற குமார் சங்கக்காரவின் இறுதி டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு கோரியிருந்தார். எவ்வாறெனினும் இந்த விடயம் குறித்து பதிலளிக்க கால அவகாசம் தேவைப்படுவதாக குமார் சங்கக்கார அப்போது கூறியிருந்தார். பின்னர், வேலைப்பளு மற்றும் ஏனைய சில…
-
- 0 replies
- 358 views
-
-
விஜயகலா மகேஸ்வரன் யாழ் பாதுகாப்பு தலைமையகத்திற்கு திடீர் விஜயம் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ் பாதுகாப்பு தலைமையகத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டார். அவர் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்காவை நேற்று (17) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். வடக்கில் மீள்குடியேறியுள்ள மக்களின் நிலமைகள் மற்றும் யாழ் மாவட்டத்தில் உள்ள மயிலிட்டி, வலிவடக்கு மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதி மக்களின் மீள்குடியேற்றங்கள் பற்றி இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. வலி.வடக்கில் ஏனைய விடுவிக்கப்பட வேண்டிய இடங்களின் விபரங்கள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டன. மேலும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அம்மக்களைய…
-
- 0 replies
- 342 views
-
-
தாயகத்துக்கு வருமாறு ஜேர்மனிலுள்ள இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு யுத்த காலத்தில் ஜேர்மனில் தஞ்சமடைந்த இலங்கையர்களை மீண்டும் தாயகத்திற்கு திரும்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையில் அனைத்து மக்களும் சந்தோஷமாக வாழக் கூடிய ஜனநாயக நாடாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜேர்மன் சான்சலர் அஞ்சலா மெர்கலுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களை சந்தித்த போதே, அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார். மேலும், ஜேர்மனால் இலங்கைக்கு வழங்கப்படும் அவிவிருத்திக்கான உதவிகள் தொடர்பில் தனது நன்றிகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இணைந்து கொண்ட அஞ்சலா மெர்கல்…
-
- 0 replies
- 353 views
-
-
பலாலி விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்கு வடக்கு முதல்வர் எதிர்ப்பு இந்தியாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள பலாலி விமான நிலையத்தின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பு வௌியிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார். பலாலியில் இருந்து தென்னிந்தியாவுக்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற, பிரேரணையை 2014ம் ஆண்டு வட மாகாண சபை நிறைவேற்றியது. இரு வாரங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் இலங்கை வௌிவிவகார அமைச்சர்கள் பலாலி விமான நிலையத்தை விரிவாக்குவது தொடர…
-
- 0 replies
- 346 views
-
-
அரசை எதிர்த்து சிங்கப்பூரில் தேங்காய் உடைக்கவுள்ள மஹிந்த அணி (எஸ்.ரவிசான்) நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் உட்பட நாட்டிற்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நாடளாவிய ரீதியில் ஒன்றினைந்த எதிர்க்கட்சியினரால் முன்னெக்கப்படும் தேங்காய் உடைத்தல் நடவடிக்கையின் அடுத்தக்கட்டமானது சிங்கப்பூரில் முன்னெக்கப்படவுள்ளதாக மஹிந்த ஆதரவு எம்.பி பந்துல குணவர்தன தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மக்களுக்கு எதிரான தொடர்ச்சியான செயற்பாடுகளினால் அரசின் ஆயிட்காலமானது குறைந்து வருவதாகவும் அவர் சுட்டிகாட்டினார். கொழும்பில் அமைந்துள்ள என்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற …
-
- 1 reply
- 263 views
-
-
அரசியலமைப்பு திருத்தத்தில் புலம்பெயர்ந்தவர்களின் கருத்துக்களும் அவசியம் இலங்கையின் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தற்போது பொதுமக்களின் கருத்துக்கள் அறியப்பட்டு வருகின்றன. நாம் இந்த முயற்சியை வரவேற்றிருந்த நிலையில், இதன்போது புலம்பெயர்ந்தவர்களின் கருத்துக்களும் அறியப்பட வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்தபோது, அந்த யோசனையை பிரதமர் உடனடியாக ஏற்றுக்கொண்டதுடன், அதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், …
-
- 0 replies
- 297 views
-
-
புதிய வாய்ப்புக்களைத் தேடும் முயற்சியில் அரசாங்கம் எமது அரசாங்கமானது புதிய துறைகளில் பன்முகப்படுத்தப்பட்ட ஒத்துழைப்புடன்கூடிய நீண்டகால அடிப்படையிலான புதிய வாய்ப்புக்களைத் தேடும் முயற்சியில் உறுதிபூண்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜேர்மன் அதிபர் அஞ்சலா மெர்கல்லைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய உத்தியோகபூர்வ கூட்டறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, பல ஆண்டுகளாக இலங்கை மற்றும் ஜேர்மனி நாடுகளுக்களுக்கிடையே நெருங்கிய மற்றும் சுமூகமான உறவுகள் பேணப்பட்டு வந்திருக்கின்றன. என்னை இங்கு அழைத்ததற்காக மட்டுமன்றி இரு நாடுகளுக்குமிடையில…
-
- 0 replies
- 205 views
-
-
யாழ்ப்பாணத்தில் மீண்டும் சாட்சியங்களை ஏற்க தயாராகின்றது பரணகம ஆணைக்குழு [ Thursday,18 February 2016, 03:18:13 ] காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு யாழ். மாவட்டத்திற்கான மீண்டுமொரு அமர்வை ஏற்பாடு செய்து வருகின்றது. இதற்கமைய எதிர்வரும் 27ஆம் திகதி முதல் அடுத்தமாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ். மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட சில இடங்களில் முறைப்பாடுகளை ஏற்பதற்கு இந்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. காணாமல் போனோர் ஆணைக்குழுவின் ஆயுட்காலம் ஏற்கனவே ஒருமுறை நீடிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய கடந்த 15ஆம் திகதியுடன் ஆணைக்குழுவின் காலம் முடிவடைந்தது. ஆணைக்குழுவின் கால எல்லையை நீடிக்குமாறு அதன…
-
- 0 replies
- 291 views
-
-
மகிந்தவுக்கு செக்! ஆட்சியைத் தக்கவைப்பதற்காக புலிகளுக்கு பணம் வழங்கியது யார்? அந்தப் பணத்தினூடாக எவ்வாறான ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டன என்பது உள்ளிட்ட முக்கிய பல இரகசியத் தகவல்களை பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா விரைவில் அம்பலப்படுத்துவார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே சு.கவின் சிரேஷ்ட உறுப்பினர்களுள் ஒருவரான அமைச்சர் சரத் அமுனுகம மேற்கண்ட தகவலை வெளியிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், மின்சாரக் கதிரையை காண்பித்து அரசியல் நடத்தியவர்கள், இன்று இராணுவத்தைய…
-
- 0 replies
- 368 views
-
-
இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்குகிறது ஜே.வி.பி.! [ வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2016, 02:04.12 AM GMT ] இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கைச்சாத்திடப்படவுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு (எட்கா) உடன்படிக்கைக்கு (எதிராக நாடு தழுவிய ரீதியில் பரப்புரையை முன்னெடுப்பதற்கு ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது. குறித்த ஒப்பந்தம் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டும் ஆரம்பகட்ட நடவடிக்கை இன்று வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க சிறப்புரையாற்றவுள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை இந்தியாவுக்கு தாரைவார்க்கும் எட்கா வேண்டாம் என்ற த…
-
- 0 replies
- 359 views
-
-
சம்பூர் அனல்மின் நிலையத்திற்காக மக்களை வெளியேற்ற வழக்கு தாக்கல் [ Thursday,18 February 2016, 03:05:56 ] திருகோணமலை - சம்பூர் அனல்மின் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியிலிருந்து உரிமையாளரை வெளியேற்றுவதற்காக மூதூர் பிரதேசசபையினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உறுதிக்காணியிலிருந்து வெளியேற்றுவதற்காகவே தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக வைரமுத்து அருமைத்துரை ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தார். மூதூர் நீதிமன்றத்திலிருந்து மார்ச் மாதம் 3ஆம் திகதி 9 மணிக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு தனக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சம்பூர் அனல் மின் நிலையம் காரணமாக 25இற்கும் மேற்பட்ட குடியிருப்ப…
-
- 0 replies
- 246 views
-
-
குடாநாட்டு வான்பரப்பில் மும்முறை வட்டமிட்ட கிபிர்! பதற்றத்தில் மக்கள்! யாழ்.குடாநாட்டில் 7வருடங்களின் பின்னர் கிபிர் போர் விமானம் இன்றும் 2ஆவது முறையாக அதிகாலை 6.30 மணியளவில் யாழ்.குடாநாட்டை மும்முறை வட்டமிட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியது. நேற்று முன்தினம் கூட பிற்பகல் 2.10 மணியளவில் இந்த கிபிர் விமானம் யாழ்.குடாநாட்டு வான்பரப்பில் பேரிரைச்சலுடன் பறந்தது. அன்று பெரிதாக மக்கள் மத்தியில் அச்சமான நிலைமை தோன்றவில்லை ஆனால் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டு வான்பரப்பில் மும்முறை கிபிர் போர் விமானம் வட்டமிட்டதால் மக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியமை குறிப்பிடத்தக்கது. http:…
-
- 0 replies
- 207 views
-