Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஓமானில் இருந்து நாடு கடத்தப்பட்ட தமிழ் இளைஞர் விமான நிலையத்தில் கைது [ திங்கட்கிழமை, 25 சனவரி 2016, 02:59.35 AM GMT ] ஓமானில் இருந்து நாடு கடத்தப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை பொலிஸார் கைதுசெய்தனர். கிளிநொச்சியை சேர்ந்த 25வயதான இந்த இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். போலியான வீசாவுடன் இத்தாலிக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் இவரை ஓமானிய பொலிஸார் கைதுசெய்து தடுத்து வைத்திருந்தனர். விசாரணையின் முடிவிலேயே அவர் நேற்று நாடு கடத்தப்பட்டார். இந்தநிலையில் இன்று அவர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tami…

  2. படையினர் வசமுள்ள எல்லாக் காணிகளும் விடுவிக்கப்படாது! - பாதுகாப்புச் செயலாளர் உறுதி [Monday 2016-01-25 07:00] தேசிய பாதுகாப்பு நலனுக்கு தேவைப்படும் காணிகள் எவையும் வடக்கில் விடுவிக்கப்படாது. அதற்குப் பதிலாக உரிமையாளர்களுக்கு மாற்று காணிகள் வழங்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்தக் குழு ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது. தேசிய பாதுகாப்பு நலனுக்கு தேவைப்படும் காணிகள் எவையும் வடக்கில் விடுவிக்கப்படாது. அதற்குப் பதிலாக உரிமையாளர்களுக்கு மாற்று காணிகள் வழங்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்…

  3. இலங்கையில் சிங்களமும், பௌத்தமுமே முதன்மை என்கிறது மஹாவம்சம். ஆதலால் சிங்களம் ஆட்சிப்பிடம் ஏற வேண்டும் என்றும், பௌத்தம் அரச அங்கீகாரம் பெற்ற மதமாக என்றும் நிலைத்து நிற்க வேண்டும் என்கிறது அது. இதனால் தான் இன்றுவரை புத்தத்தின் பெயரால் இரத்தம் சிந்தப்படுகின்றது இலங்கையில். இலங்கைக்கு புத்தர் இரண்டு முறை வந்து சென்றதாகவும் இன்னொரு வரலாற்றைக் கூறுகின்றார்கள் இவர்கள். அதாவது, இது இலங்கை என்பது சிங்கள பௌத்த பீடபூமி என்னும் சித்தாந்தத்தை காலாகாலமாக நிலை நிறுத்துவதற்கு, அடுத்த தலைமுறையிடமும், கடும்போக்கான இனவாத, மதவாத சிந்தனைகளை தூண்டி, இலங்கையில் ஏனைய இனங்களையும் மதங்களையும் இல்லாமல் செய்வதற்கான அடிப்படையான திட்டமிட்ட செயற்பாடு என்பதில் இருவேறு கருத்துக்கள…

    • 0 replies
    • 249 views
  4. யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் வசம் 5,341 ஏக்கர் காணிகள்! -அதிகாரபூர்வ தகவல் வெளியானது [Sunday 2016-01-24 20:00] இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாகவிருக்கும் வலிகாமம் வடக்கில் இன்னமும் 5,341.28 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என யாழ்.மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்பதற்கு முன்னர் வலிகாமம் வடக்கில் 7080.5 ஏக்கர் நிலங்கள் உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்தது. இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், இரண்டு கட்டங்களாக 1,739.02 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாகவிருக்கும் வலிகாமம் வடக்கில் இன்னமும் 5,341.28 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என யாழ்.மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

  5. மலையக மக்களை இலக்கு வைக்கும் 'சிறுநீரக வியாபாரக் கும்பல்கள்' வறுமையின் பிடியில் சிக்கிய மக்களை தரகர்கள் இலக்கு வைக்கிறார்கள்' இலங்கையின் மலையகத்தில் வறுமையில் பிடியில் வாடும் தோட்டத் தொழிலாளர்களை குறிவைத்து சட்டவிரோத சிறுநீரக வியாபாரத்தில் சிலர் ஈடுபட்டுவருவதாக மலையகத்தைச் சேர்ந்த அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மலையக மக்களை இலக்குவைத்து இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்துவருவதை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்கனவே உறுதிசெய்திருப்பதாகவும் கல்வி அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் பிபிசி தமிழோசையிடம் கூறினார். இவ்வாறான சிறுநீரக வியாபாரத்தில் 'தரகர்கள்' ஈடுபட்டிருப்பதாகவும் அவர்களால் பாதிக்கப்பட்ட…

  6. இலங்கையில் முதலாம் வகுப்பிலிருந்து பாலியல் கல்வி இலங்கையில் முதலாம் வகுப்பு தொடங்கி பாலியல் கல்வியை முன்னெடுக்க தேசிய சிறார் அதிகார சபை பரிந்துரை செய்துள்ளது. இலங்கையில் சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை. பாடசாலை மாணவர்களுக்கு முதலாம் வகுப்பு முதல் கட்டம் கட்டமாக பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என அந்த அமைப்பு கல்வி அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதை அந்த அமைப்பின் தலைவி நடாஷா பாலேந்திரா பிபிசியிடம் உறுதிப்படுத்தினார். பாலியல் கல்வியை பாடசாலை திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்க தாம் நாட்டின் கல்வி அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். டாக்டர் நடாஷா பாலேந்திர…

  7. கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுங்கள்; ஜனாதிபதியிடம் ஜெனீபன் கோரிக்கை ஜனாதிபதியினால் அண்மையில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ள ஜெனிபனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் சந்தித்துள்ளார். முல்லைத்தீவு பகுதியில் ஆடைத் தொழிற்சாலையொன்றின் அங்குரார்ப்பண நிகழ்விற்கு ஜனாதிபதி சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தன்னை விடுதலை செய்தமைக்கு இதன்போது ஜெனீபன் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்ததாகவும், சிறைவாசம் அனுபவித்துவரும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜெனிபனின் ப…

  8. சிங்ஹ லேயின் பேரணி... சிங்ஹ லே அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பிலிருந்து- கண்டிக்கு வாகன பேரணியொன்று நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்டது. இதன்போது பிடிக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு மொஹொமட் ஆஸிக்) - See more at: http://www.tamilmirror.lk/164542/%E0%AE%9A-%E0%AE%99-%E0%AE%B9-%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A3-#sthash.MA92B2nI.dpuf

  9. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காற்றில் பறக்கவிட்டு விட்டதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுமத்தியிருந்த குற்றச்சாட்டை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. வடக்கு மாகாணசபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களுடன், கடந்த புதன்கிழமை நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபைத் தேர்தலின் போது. கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பாதுகாப்பது தொடர்பாக இடம்பெற்றிருந்த வாக்குறுதி, 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். அதேவேளை, கிளிநொச்சியில் நேற்று ந…

    • 0 replies
    • 339 views
  10. விமானந்தாங்கிப் போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் இலங்கையைப் பொறுத்தவரையில் எட்டித்தொட முடியாத உயரம் கொண்டவையாக இருந்தாலும், இவற்றின் வருகைள் எல்லா வேளைகளிலும் உள்நாட்டில் பரபரப்புக்குரியதாகவே இருந்து வந்திருக்கின்றன. இலங்கையின் அரசியல் மட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதிலும் இத்தகைய பாரிய வெளிநாட்டு போர்க்கப்பல்கள் தாக்கம் செலுத்தியிருக்கின்றன. மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ள இலங்கைத்தீவு எப்போதுமே வல்லரசுகளின் கண்களுக்கு உறுத்தலான ஒன்றாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அந்தவகையில் விமானந்தாங்கிப் போர்க்கப்பல்களுக்கும், நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் இலங்கையின் துறைமுகங்கள் கவர்ச்சி மிக்க இடங்களாக இருப்பதில் ஆச்சரியமில்…

    • 0 replies
    • 436 views
  11. இனவழிப்பை செய்தவர்கள் என்றோ ஒருநாள் மண்ணில் வீழ்ந்து அழு(ந்து)வார்! [ ஞாயிற்றுக்கிழமை, 24 சனவரி 2016, 06:35.02 AM GMT ] [ வலம்புரி ] நவாலியில் சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீது நடந்த விமானக்குண்டுத் தாக்குதலில் போது அப்பாவிப் பொதுமக்கள் இறந்த செய்தி அறிந்து தான் அழுது குழறியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. கன்மவினை பற்றி சைவ சித்தாந்தம் மிகத் தெளிவாகப் போதிக்கின்றது. இந்த உலகில் இடம்பெறும் அனைத்து வினைப்பயன்களுக்கும் கன்மாவே காரணம் என்பது சைவ சித்தாந்தத்தின் தத்துவம். இங்குதான் தன்னை அறிதல் என்ற விடயம் முக்கியம் பெறுகிறது. உன்னையே நீ அறிவாய் என்ற சோக்கிரட்டிஸின் தத்துவமும் இதன் வழி வந்தவைதான். ஆக, முதல…

  12. யாழ்ப்பாண நில வெடிப்பிற்கு காரணம் வெளியானது...?? [ ஞாயிற்றுக்கிழமை, 24 சனவரி 2016, 05:46.35 AM GMT ] யாழ். புத்தூர் மேற்கு நவக்கிரி பகுதியில் நிலத்தில் உண்டான திடீர் வெடிப்புகள் பூமிநடுக்கம் அல்ல எனவும், அவை நிலத்தின் கீழ் உள்ள சுண்ணாம்பு பாறைகளில் உண்டாகும் உடைவுகளால் ஏற்படும் தரை இறக்கம் மட்டுமே எனவும், பேராதனை பல்கலைக்கழக புவியல்துறை பேராசிரியர் வி.நந்தகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை வீடொன்றிலும் தோட்ட நிலங்களிலும் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டிருந்தன. இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழக புவியல்துறை பேராசிரியர் வி.நந்தகுமாரை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். …

  13. பிரித்தானியாவில் அடைக்கலம் கோருவோருக்கான கடிதங்கள் போலி! பிரித்தானிய உயர்ஸ்தானிகரம் [ ஞாயிற்றுக்கிழமை, 24 சனவரி 2016, 03:59.01 AM GMT ] பிரித்தானியாவில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ள இலங்கையர்களை உறுதிப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்படும் சட்டத்தரணிகளின் கடிதங்கள் பெரும்பாலும் நம்பிக்கையற்றவையாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரக அதிகாரி ஒருவர் பிரித்தானிய உள்துறை அமைச்சுக்கு இந்த விடயத்தை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அரசியல் அடைக்கலம் கோரியவர்களுடைய 80 கோரிக்கைகளை பரிசீலித்தபோது அதில் 30 கோரிக்கைகளின் சட்டத்தரணி கடிதங்கள் நம்பிக்கைக்குரியனவாக இருக்கவில்லை. குறிப்பாக குறித்த சட்டத்தரணி கடிதங்களில்…

  14. போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு உதவ ஜப்பானிய நீதிபதி இன்று கொழும்பு வருகிறார் Published by Rasmila on 2016-01-24 09:55:51 போர்க்­குற்ற விசா­ரணை தொடர்­பான இலங்கை அர­சாங்­கத்தின் செயல்­மு­றை­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக, ஜப்­பானின் போர்க்­குற்ற விசா­ரணை நீதி­ப­தி­யான மோட்டூ நுகுசி இலங்கை வர­வுள்ளார். ஜெனிவா தீர்­மா­னத்­துக்கு அமை­வாக, போர்க்­குற்­றச்­சாட்­டுகள் குறித்து விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் உள்­நாட்டுப் பொறி­முறை ஒன்றை உரு­வாக்கும் முயற்­சியில் அர­சாங்கம் ஈடு­பட்­டுள்­ளது. இதற்கு உதவும் நோக்­கி­லேயே ஜப்பான் தனது சிறப்புப் பிர­தி­நி­தியை இன்று கொழும்­புக்கு அனுப்­பி­வைக்­க­வுள்­ளது. கம்­போ­டி­யாவில் கெமர் ரூஜ் ஆட்­சிக்­கா­லத்தில் நிகழ்ந்த போர்க்­குற…

  15. கைதிகளை விடுதலை செய்யவும் ; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு [ Sunday,24 January 2016, 03:29:20 ] சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு எதிர்வரும் வியாழக்கிழமை மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடவுள்ளது. விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தமிழ் அரசியல் கைதிகளுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி என்றும் அடிப்படை மனித உரிமை மீறல் எனவும் சுட்டிக்காட்டிய அந்த அமைப்பு சட்டமா அதிபர் திணைக்களம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. ஜெனீபன் என்ற கைதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது போன்…

  16. மஹிந்தவுடன் நெருக்கமான தாய்லாந்தின் மாபியா குழு இலங்கையில் தஞ்சம்? [ ஞாயிற்றுக்கிழமை, 24 சனவரி 2016, 02:56.52 AM GMT ] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் தொடர்புகளை கொண்டிருந்த தாய்லாந்தின் மாபியா தலைவர் ஒருவர் இலங்கைக்கு வந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரச புலனாய்வு சேவையை சுட்டிக்காட்டி ஆங்கில செய்திச்சேவை ஒன்று இதனை தெரிவித்துள்ளது. இந்த மாபியா தலைவர் அவரது உறுப்பினர்களுடன் இலங்கைக்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாபியா தலைவர், தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சின்வாத்ராவுடன் தொடர்புகளை பேணி வந்தவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாபியா உறுப்பினர்களுக்கு இலங்கை இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கிய…

  17. முன்னாள் அமைச்சர் பசில் மீது விசாரணை ஆரம்பம்! [ ஞாயிற்றுக்கிழமை, 24 சனவரி 2016, 04:26.27 AM GMT ] சுற்றுலாத்துறை அமைச்சிலிருந்து 4.7 மில்லியன் ரூபா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஊவா மாகாண அபிவிருத்திக்கான பணத்தை தேர்தல் பிரசாரத்துக்காக ஒதுக்க பசில் ராஜபக்ஸ உத்தரவிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com/show-RUmuyBRYSWho6I.…

  18. தகுதியற்ற அதிகாரி ஒருவர் பயிற்சிக்காக அனுப்பப்படவுள்ளார் [ ஞாயிற்றுக்கிழமை, 24 சனவரி 2016, 04:39.02 AM GMT ] மலேசியாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் இராணுவ பயிற்சிகளுக்காக இலங்கையில் இருந்து தகுதியற்ற அதிகாரி ஒருவர் அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பொய்யான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு இந்த அதிகாரி அனுப்பப்படவுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. இராணுவத்தின் இரண்டாம்நிலை உயர் அலுவலரே இந்த பயிற்சிக்கு அனுப்பப்படவுள்ளார். பொய்யான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போதும் குறித்த அலுவலருக்கான அனுமதி கிடைத்துள்ளதாக ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பில், இலங்கை இராணுவ தன்னார்வ படையின் தளபதி எச்…

  19. நல்லாட்சி அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை தமிழர்களுக்கு ஆபத்தானது [ Sunday,24 January 2016, 02:28:19 ] தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் மேலும் வலுப்பெறாத வகையில் ஸ்ரீலங்காவின் வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். வெளியுலக இராஜதந்திர மட்டத்தில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் தமிழ்த் தேசியம் என்ற அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்காமல் ஸ்ரீலங்காவின் தேசியம் என்ற வகையில் தீர்வுக்கான வேலைத் திட்டங்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்டது என்றும் அதன் தொடர்ச்சியாக மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் செயற்படு…

  20. தமிழ் மக்களின் ஒற்றுமையை குலைக்கும் த.ம.பே.களுக்கு கிழக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்- சிறிநேசன் எச்சரிக்கை VIDEO Published on January 23, 2016-9:05 am · No Comments தமிழ் மக்களின் ஒற்றுமையை குலைக்கும் வகையில் செயல்படும் தமிழ் மக்கள் பேரவைக்கு கிழக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். http://www.whathits.com/thinakkathir

  21. 'விடுதலைப் புலிகள் போரில் தோற்றாலும் அவர்களின் சிந்தனை தோற்கவில்லை' இலங்கையில் விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டாலும், அவர்களின் பிரிவினைவாத சிந்தனை, கருத்து ரீதியில் தோற்கடிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். அரசியலமைப்பு வழியாக நாட்டின் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒன்பதாம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், வெறுமனே நிறைவேற்று ஜனாதிபதி முறை மற்றும் தேர்தல் முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் அளவுக்குத்தான் புதிய அரசியமைப்பு மாற்றம் இருக்கவேண்டும். அதனைத் தாண்டி அரசியலமைப்பு முழுமையாக மாற்றப்படக்கூடாது என்று ம…

  22. மூன்றாவது பிள்ளை பெற்றுக் கொள்ளும் படையினருக்கான வெகுமதியை நிறுத்தியது அரசு! [Saturday 2016-01-23 08:00] மூன்றாவது பிள்ளையைப் பெற்றுக் கொள்ளும் படையினருக்கு வழங்கப்பட்டு வந்த ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் படைவீரர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் இந்த கொடுப்பனவை வழங்கியிருந்தது. எனினும், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முப்படை மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றில் கடமையாற்றி வருவோருக்கு பிறக்கும் மூன்றாவது பிள்ளைக்கு வழங்கப்பட்டு வந்த ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவிற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மூன்றாவது பிள்ளையைப் பெற்றுக் கொள்ளும் படையினருக்கு வழங்கப்பட்டு வந்த ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த அ…

  23. இலங்கையின் புதிய கட்சியில் மகிந்த இருப்பார்': கோட்டாபய மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின்போது மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக கோட்டாபய ராஜபக்ஷ இருந்தார் இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத ஒரு அரசியல் கலாசாரம் தற்போது நிலவுவதாகவும், அதனால் பலமான எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இவ்வாறு உருவாகவுள்ள கட்சியில், மஹிந்த ராஜபக்ச நிச்சயமாக அங்கம் வகிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் புதிய கட்சியொன்று உருவாகவுள்ளதாக ஊடகங்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் பிபி…

  24. கடந்த கால படிப்பினைகளை உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமைக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் இடைவெளி ஏற்பட யாரோ அவரை பயன்படுத்தியிருக்கிறார்கள். உதாரணமாக கடந்த காலங்களில் தலைமைப்போட்டி காரணமாக ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தேவையில்லாத விமர்சனங்களை சுமந்திரன் மீது முன்வைத்து வந்தார். சுமந்திரன் பின்கதவால் வந்தவர் என அவரை சீண்டி வந்தார். இதன் விளைவாக சுமந்திரன் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். இதன் விளைவு சுமந்திரன் வென்றார். சுரேஷ் பிரேமச்சந்திரன் தோற்றார். எனவே நாவடக்கம் இல்லாததன்மைதான் இந்த பிரச்சினைக்கு காரணம். தேசிய பட்டியலை பின்கதவு என கேலி செய்த சுரேஷ் பிரேமச்சந்திர…

    • 0 replies
    • 439 views
  25. ஜனாதிபதிக்கு காலக்கெடுவிதித்துள்ள அரசியல் செல்வாக்குள்ள குழுவினர் 23 ஜனவரி 2016 தேர்தல் பிரச்சார காலப்பகுதியில்வழங்கப்பட்ட சீர்திருத்த வாக்குறுதிகளை பெப்ரவரி நான்காம் திகதிக்குள் நிறைவேற்றாவிட்டால் கடும் அரசியல் விளைவுகளை ஜனாதிபதி சிறிசேன அரசாங்கம் சந்திக்கநேரிடும் என அரசாங்கத்திற்குள் காணப்படும் செல்வாக்கு மிக்க பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுகாதார அமைச்சர் ராஜிதசேனரத்தின சில நாட்களிற்கு முன்னர் தனது நெருங்கிய நண்பர்கள் சிலரிற்கு இதனை தெரிவித்துள்ளார். 40 சிவில் சமூக அமைப்புகள் இது தொடர்பில் கடும் அழுத்தங்களை விடுத்துவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.