Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மொரோக்கோவில் எதிர்வரும் டிசம்பர் 11ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை, நூறு நாடுகளின் நூறு பிரதிநிதிகள் பங்குபற்றும் இளைஞர் மாநாட்டில், இலங்கையின் பிரதிநிதியாக இலங்கை சாரணர் சங்கத்தின் புலமைப்பரிசில் பெற்று வவுனியா மாவட்ட சாரணர் உதவி மாவட்ட ஆணையாளர் திரு சுந்தரலிங்கம் காண்டீபன் பங்குபற்றவுள்ளார். "முரண்பாடுகளை களைதலும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தலும்" எனும் தொனிப்பொருளில் இவ் இளைஞர் மாநாடு நடைபெறவுள்ளதுடன், எதிர்கால தலைமுறைக்கான ஓர் நல்ல சூழலை ஏற்படுத்த "இளைஞர்கள் மத்தியில் பொதுவான ஒரு சொல்" எனும் செயற்றிட்ட மாநாட்டில், வவுனியா திருநாவற்குளத்தைச் சேர்ந்த, பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியின் பழைய மாணவனும், விஞ்ஞானமானி பட்டதாரியுமான திரு.சு.காண்டீபன் பங்குபற்றவுள்ளதுடன், இவர்…

  2. ராஜபக்ஷ- நிஷங்க உறவு படங்களுடன் அம்பலம் தர்ஷன சன்ஜீவ நிதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் அவன்காட் தலைவர் நிஷங்க சேனாதிபதியும், கலிபோர்னியா டிஸ்ஸினி லாண்டில் விடுமுறையை உல்லாசமாக களிக்கும் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பல புகைப்படங்களை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நேற்று காட்டினார். அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் சேனாதிபதியும் நெருங்கிய நண்பர்கள் என்பதைக் காட்ட போதிய சான்றுகள் உள்ளதாகவும், இதனால்தான் அவன்ட் காட் நிறுவனத்தைக் காப்பாற்ற அமைச்சர் முயல்வதாகவும் அவர் கூறினார். 'இவர்கள் இருவரும் நண்பர்கள் என நாம் முன்னர் கூறியபோதும், அமைச்சர் அதை மறுக்கவில்லை. இந்தப் புகைப்படங்கள் உண்மையானவை அல்ல எனக் கூறும்படி அவரு…

  3. மனித உரிமைகளின் முன்னேற்றமே ஜிஎஸ்பி பிளஸை பெற்றுக்கொள்ள வழிவகுக்கும்- ஐரோப்பிய ஒன்றியம் [ வியாழக்கிழமை, 10 டிசெம்பர் 2015, 02:28.28 AM GMT ] ஐரோப்பிய ஒன்றியம், ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு மற்றும் உயர்நிலை மனித உரிமைகளை தளமாகக்கொண்டு செயற்பட்டு வருகிறது. இந்தநிலையில் இலங்கை உட்பட்ட அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் மனித உரிமை மேம்பாடு, தொழிலாளர் உரிமைகள், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி என்பவற்றை கடமையாக கொண்டு செயற்படும் போதே ஜிஎஸ்பி பிளஸ் சலுகை தொடர்பில் கவனம் செலுத்த முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் டலி தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமைகள் தினம், டிசம்பர் 10ல் அனுஸ்டிக்கப்படுவதை முன்னிட்டு அவர் வெளியிட்ட…

  4. ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பிற்கு வடக்கு முதல்வருக்கு அழைப்பு இல்லை? [ Thursday,10 December 2015, 03:13:34 ] 2016 வரவு செலவுத் திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாகாண முதலமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். எனினும் இந்தக் கலந்துரையாடலுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, இன்றைய தினம் அனைத்து மாகாணங்களிலுமுள்ள முதலமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடவிருப்பதாக கூறினார். இதற்கு அனைத்து முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்…

  5. இலங்கை நிதி நிலைமைகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை- குளோபல் தமிழ்ச செய்தியாளா் கொழும்பு: 10 டிசம்பர் 2015 இலங்கையின் நிதி நிலைமைகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் நிதி நெருக்கடி நிலைமைகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டின் பெரும்பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ள அதிகாரிகள் மிகச் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைத்தல், வியாபாரச் சூழ்நிலையை மாற்றியமைத்தல், திறந்த பொருளாதார கொள்கைகைள பின்பற்றுதல் போன்றவற்றின் ஊடாக ஆபத்துக்களை வரையறுத்துக்கொள்ள முடியும் என பரிந்துரை செய்துள்ளது. இலங்கையின் தற்போதைய வரிக…

  6. மனித உரிமை சட்டங்கள் பலப்படுத்தப்படும் ; ஜெனீவாவில் ஸ்ரீலங்கா உறுதி [ Thursday,10 December 2015, 03:52:27 ] சர்வதேச மனித உரிமை சட்டதிட்டங்களுடன் உள்நாட்டு சட்டங்களை இணைக்கும் பொறிமுறையை பலப்படுத்த ஸ்ரீலங்கா அரசாங்கம் புதுப்பிக்கப்பட்ட அரசியல் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜெனீவாவில் வைத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனீவாவிற்கான ஸ்ரீலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். செஞ்சிலுவைச் சங்கத்தின் 32ஆவது சர்வதேச மாநாடு ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அனைத்துவிதமான பாலியல் மற்றும் பால…

  7. வியாபார நிலையத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் வியாபார நிலையம் ஒன்றிற்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த பெண்ணை அப்பகுதி இளைஞர்கள் மீட்டுள்ளனர். குறித்த வியாபார நிலையத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றியதுடன் பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி சந்திப் பகுதியில் உள்ள கண்ணன் ஸ்ரோர்ஸ் என்னும் வியாபார நிலையத்தில் பெண்ணெருவர் நீண்ட காலமாக பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற வியாபார நடவடிக்கையில் கிடைக்கப்பெற்ற பணத்தில் 3 …

  8. 2016ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டத்தில் 306.7 பில்லியன் ரூபாய்கள் (30 ஆயிரத்து 670 கோடி) பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள குறித்த 306.7 பில்லியன் ரூபாய்கள் நிதி இலங்கையின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத அதியுச்ச ஒதுக்கீடு என்றும் சுட்டிக்காட்டியுள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், இந்த வரலாற்றுச் சாதனையைப் புரிவதற்கு அரசாங்கம் நாட்டு மக்களைக் கடன்காரர்களாக்கியுள்ளதாகவும், எமது மக்களை கடன்காரர்களாக்கி எமது மக்களின் வரிப்பணத்தில் எமது பகுதியில் நிலைபெறச்செய்துள்ள இராணுவத்திற்கான இந்நிதியொதுக்கீட்டை தாம் எவ்வாறு ஆதரிக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். வரவுசெலவுத்திட்ட மூ…

  9. வெள்ள அனர்த்தத்தால் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு சபையில் தமது அனுதாபத்தைத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழக மக்களுக்கு உதவி செய்வதற்காக வடக்கு மாகாண சபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிதியத்துக்கு ஆதரவு வழங்க அனைவரும் முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது. நாடாளுமன்றத்தில் நேற்று காலை இடம்பெற்ற மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றியபோது மேற்கண்டவாறு அனுதாபம் தெரிவித்து கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவிக்கையில், "எமது இனப்படுகொலைக்கு எதிராக தமிழ…

  10. கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல வீதிகளில் நீர் தேங்கியிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. மேலும் பல பிரதான வீதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரியவருகின்றது. http://www.tamilwin.com/show-RUmtzCTcSWlo1H.html

  11. கனமழையால் மிதக்கும் கிளிநொச்சி (வீடியோ) இலங்கை கிளிநொச்சியில் பெய்து வரும் கனமழையால் அந்த நகரமே நீரில் மிதக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் பெய்து வரும் கனமழையால் அனைத்து குளங்களுக்கும் நீர் வந்தவாறே உள்ளது. இதனால், குளங்களில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஊழியர்களும் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாணவ- மாணவிகள் வெள்ள நீரில் மிதந்து பள்ளிகளுக்கு செல்கின்றனர். அங்குள்ள இரணைமடு, அக்கராயன், வன்னேரி, கரியாலை நாகபடுவான், குடமுருட்டி, புதுமுறிப்பு கனகாம்பிகை, கல்மடும் பிரமந…

  12. அரச மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கிடையே யாழில் கைகலப்பு அரச மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பால் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகினர். குறித்த சம்பவம் இன்று காலை பரமேஸ்வரா சந்தி பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, புன்னாலைக்கட்டுவான் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்த அரச மற்றும் தனியார் பேருந்துகளில் அரச பேருந்து பரமேஸ்வரா சந்தி பேருந்து தரிப்பிடத்தை முதலில் வந்து சேர்ந்து பயணிகளை ஏற்ற ஆயத்தமாக இருந்தவேளை அரச பேருந்துக்கு முன்னால் தனியார் பேருந்து நிறுத்தப்பட்டு மக்களை ஏற்றிச் செல்ல விடாது தடுத்துள்ளது. …

  13. தமிழர்தாயகத்தை அபரிக்க வடகிழக்கில் தீவரமாகும் காடழிப்பு- குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்: 09 டிசம்பர் 2015 கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக வடகிழக்கு தமிழர் தாயகத்தில் பாதுகாக்கப்பட்ட காடுகள் இப்போது மிக வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றது. அண்மைய காலத்தில் 16ஆயிரத்து 500 ஏக்கர் காட்டுப் பகுதி குடியிருப்பாக மாறியிருப்பதாக சுற்றாடல் பாதுகாப்பு ஒன்றியம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது. இந்தக் காடழிப்பின் நோக்கம் எதற்கானது என்பதையும் அது தடுத்து நிறுத்தப்படாமல் இருப்பது எதற்கானது என்பதையும் குறித்து நாம் அதிகம் சிந்திக்க வேண்டிய நிலையிலுள்ளோம். இலங்கையின் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே சுற்றாடல்துறை சார்ந்த அமைச்சை பெறுப்பில் வைத்திருக்கிற…

  14. கத்தி படத்தை உதாரணம் காட்டிய ரஞ்சன் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரிகள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தன் உரையின் போது விஜயின் கத்தி படத்தில் வரும் ஒரு சில காட்சிகளை உதாரணம் காட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரிகள் அமைச்சு மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது. இதில் இந்த அமைச்சின் பிரதியமைச்சரான ரஞ்சன் ராமநாயக்க உரையாற்றுகையில், அண்மையில் தென்னிந்திய இயக்குநர் தயாரித்து நடிகர் விஜய் நடித்த கத்தி படம் பார்த்தேன். அதில் நடிகர் ஒருவர் நாயகன் விஜயைப் பார்த்து கம்யூனிஸ்ட் வாதம் தொடர்பாக சுருக்கமாக விளக்கமொன்றைக் கேட்பார். அதற்கு நாயகன் விஜய் தான் நன்றாக வயிறு நிறைய உண்ட பின்னர் மேலதிகமாக உண்ணும் ஒவ்வொரு உணவும் மற்றையவருடையது. இதுதான்…

  15. அதிகாரப்பகிர்வே இனப்பிரச்சினைக்குத் தீர்வு : ஜயம்பதி விக்கிரமரட்ண 1988ஆம் ஆண்டு முதல் ஆட்சியிலிருந்து வரும் அரசுகள், 13ஆவது திருத்தச்சட்டத்தினூடாக மாகாண சபைகளுக்கு வலது கையால் வழங்கப்பட்ட அதிகாரங்களை இடது கையால் பறித்தெடுத்துள்ளன எனக் குற்றஞ்சாட்டிய ஜனாதிபதி சட்டத்தரணியும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரட்ண, அதிகாரப்பகிர்வே இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்றும், கொழும்பில் தீர்மானம் எடுப்பதை நிறுத்தி மாகாண சபைகளுக்கு அந்த அதிகாரத்தை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், வடக்கு மாகாண சபையால் ஆலோசனை பெறுவதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கடந்த மார்ச், ஏப்ரலில் அனுப்பப்பட்டுள்ள கல்வி, சுகாதாரம் தொடர்பான பிரகடனங்கள் இன்ன…

  16. தமிழரைப் பயங்கரவாதிகளாகப் பார்க்காதீர்!- டலஸ் எம்.பியின் கருத்துக்கு அமைச்சர் கிரியெல்ல பதில் [ புதன்கிழமை, 09 டிசெம்பர் 2015, 01:23.02 AM GMT ] எல்லாத் தமிழர்களும் பயங்கரவாதிகள் அல்லர். ஒவ்வொரு தமிழரையும் பயங்கரவாதியாகவும், தமிழ் அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாகவுமே கடந்த அரசு அடையாளப்படுத்தியது. ஆனால், புதிய அரசு அவ்வாறு அல்ல. இவ்வாறு சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். சர்வதேசப் பொலிஸார் ( இன்ரபோல்), புலனாய்வுப் பிரிவுகள் ஆகியவற்றிடம் அறிக்கை பெறப்பட்ட பின்னரே புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கம் செய்யப்பட்டது .எனவே, இந்த விடயத்தை இனவாதக் கோணத்தில் பார்க்கக்கூடாது. அத்துடன், எல்லாத் தமிழர்களும் பயங்கரவாதிகள் அல்லர் எ…

  17. மஹிந்தவிற்கு வெளியே செல்ல முடியாத நிலைமை? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 09 டிசம்பர் 2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வெளியே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறைக்கப்பட்டதனால் தாம்மால் வெளி நிகழ்வுகளில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பிரச்சினை காரணமாக வெளிநிகழ்வுகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்பதனை வரையறுத்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது தமக்கு 89 இராணுவப் படையினர் பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் இதில் சிலர் விடுமுறையில் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விடுமுறை பெற்றுச் சென்றவர்…

  18. முல்லைத்தீவு கடலில் இந்திய படகுகளின் ஆக்கிரமிப்பு; கடற்படையினர் நடவடிக்கை எடுப்பதில்லை [ Wednesday,9 December 2015, 05:54:58 ] முல்லைத்தீவு கடலில் இந்திய இழுவைப் படகுகளின் ஆக்கிரமிப்பு கடற்படையினர் நடவடிக்கை எடுப்பதில்லை என வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பொருளாளர் ஏ. மரியதாஸ் தெரிவித்தார். வவுனியாவில் கொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வடமாகாண கடற்தொழிலாளர் இணையம் ஆகியன இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டமானது போரினாலும் இயற்கை அனர்த்தமாகிய சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட மாவட்டம் எனவும் அந்தவகையில்…

  19. குப்பைக்குள் போனாலும் தான் குண்டுமணியே என்கிறார் ஆனந்தசங்கரி! [Wednesday 2015-12-09 08:00] குப்பைக்குள் போனாலும் குண்டுமணி குண்டு மணிதான். மக்கள் வீசியது குண்டுமணியை. ஆனால் நீங்கள் கையில் வைத்திருப்பதோ குப்பையைத்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். குப்பைக்குள் போனாலும் குண்டுமணி குண்டு மணிதான். மக்கள் வீசியது குண்டுமணியை. ஆனால் நீங்கள் கையில் வைத்திருப்பதோ குப்பையைத்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குறித…

  20. அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் மீண்டும் நாடகம் ? [ Wednesday,9 December 2015, 03:26:11 ] பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலை புலிகள் இயக்க சந்தேகநபர்கள் 20 பேரை விடுதலை செய்ய முடியுமா என்பது குறித்து சட்டமா அதிபர் ஆராய்ந்துவருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் உரிய அதிகாரிகளை சந்தித்து இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக புனர்வாழ்வு,மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். பாரிய பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் குற்றஞ்சாட்டுக்களில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின…

  21. 20 புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்வது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது – டி.எம். சுவாமிநாதன்: 09 டிசம்பர் 2015 மேலும் 20 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாக புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர்கள் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியமை உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 சந்தேக நபர்கள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்த சந்தேக நபர்களை விடுதலை செய்வது குறித்து சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்ந…

  22. ரவிராஜ் படுகொலை வழக்கு விசாரணை ஜனவரி 4ம் திகதி திகதி நடைபெறவுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் திகதி நடைபெறவுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நிரோசா பெர்னாண்டோ இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். ரவிராஜ் கொலையுடன் ஏழு சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மூன்று சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜராகத் தவறியிருந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராகவும் திறந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை க…

  23. வடகிழக்கு மாகாணங்களில் காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழு வடகிழக்கு மாகாணங்களுக்கு வரக்கூடாது. வந்தால் நாங்கள் சத்தியாகிரக போராட்டங்களை நடத்துவோம், ஆணைக்குழுக்கு செருப்பால் அடிப்போம் என வடகிழக்கு மாகாணங்களை சேர்ந்த காணமல்போனவர்களின் உறவுகள் கூறியிருக்கின்றனர். இன்றைய தினம் மேற்படி காணாமல்போனவர்களின் உறவுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவை புறக்கணிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தியிருந்தனர். குறித்த கூட்டத்தின் பின்னர் யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக காணாமல்போனவர்களின் உறவுகள் நடத்திய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலேயே உறவுகள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர். இதன்போது காணாமல்போ…

  24. கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முன்னிலை சோஷலிச கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதிக்கு வருகைத் தந்த பொலிஸார், நீதிமன்ற உத்தரவை ஆர்ப்பாட்டக்காரர்களிடம் அறிவித்துள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார். எனினும், பொலிஸாரின் அறிவித்தலை பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னோக்கி செல்வதாகவும் அவர் கூறினார். முன்னிலை சோஷலிச கட்சியின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான குமார் குணரட்ன விடுதலை செய்யப்பட்டு, இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டம…

  25. கணவன் காணாமல் ஆக்கப்பட்டு விட்ட நிலையில் அவர் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா..? என்று தெரியாத நிலையில், கழுத்தில் போடப்பட்டுள்ள தாலியை கழட்டுவதா..? நெற்றியில் சூடிய திலகத்தை அழிப்பதா? என்று கூடத்தெரியாமல், பல பெண்கள் வாழ்ந்து கொண்டு இருப்பதாக கவலை வெளியிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன். நேற்றையதினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2016 ஒதுக்கீட்டு சட்டமூலம் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இலங்கையை எடுத்துப்பார்க்கின்ற போது ஏறத்தாழ ஐம்பது வீதத்துக்கும் அதிகமான பெண்கள் இருக்கின்றார்கள். ஆதலால் மனித வளத்திலும் அதிகமான பங்கினையும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.