ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
யாழ் வடமராட்சி வல்வெட்டி பகுதியில் சிறுவர் பாடசாலை நிகழ்வில் ஏற்றிய சிங்ககொடி அறுந்து பறந்தது தொடர்பில் விசாரணை நடத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது. சிறுவர் பாடசாலை நிகழ்வொன்றில் சிங்ககொடியினை ஏற்றுவதற்காக வல்வெட்டிதுறை காவல்நிலைய அதிகாரி அழைக்கப்பட்டு அவரால் கொடிஏற்றபட்ட வேளை அறுந்து காற்றில்பறந்துள்ளது.இந்நிகழ்வில் முன்னாள் நாடாளமன்ற உறுப்பினர் சிவாஜிலி்ங்கம் உள்ளிட்ட முதன்மையானவர்கள் கலந்துகொண்டார்கள். சிங்ககொடி அறுந்து காற்றில் பறந்தது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . http://www.sankathi24.com/news/40879/64//d,fullart.aspx
-
- 1 reply
- 304 views
-
-
தென்னாபிரிக்க மத்தியஸ்தம் குறித்து இந்தியா எச்சரிக்கையாக இருக்கும்! - கேணல் ஹரிகரன் கணிப்பு. [sunday, 2014-04-27 08:45:42] இலங்கையில் அரசியல் தீர்வு விடயத்தில் தென்னாபிரிக்கா மத்தியஸ்தம் வகிக்கின்றமை தொடர்பாக இந்திய அரசாங்கம் அவதானமாக இருக்கும் என்று இந்திய இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் அதிகாரியான கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார். தென்னாபிரிக்கா இந்தியாவுடன் சிறந்த உறவை பேணுகின்ற நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தானை போல இந்தியா தென்னாபிரிக்காவை அச்சுறுத்தலான நாடாக கருதாது. ஆனால் இந்தியாவும் இலங்கையில் அரசியல் தீர்வு ஒன்றை முன்வைத்துள்ளது. இதனை இலங்கை அரசாங்கம் ஏற்க மறுத்து வருகிறது.…
-
- 7 replies
- 987 views
-
-
இராணுவச் சிப்பாய்களைக் கொண்டு கணவரைக் கொலை செய்த மனைவி! [Monday, 2014-04-28 07:28:24] இராணுவச் சிப்பாய்களைக் கொண்டு கணவரைக் கொலை செய்த மனைவி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குருணாகல் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணவரை படுகொலை செய்வதற்காக இருபது லட்ச ரூபா பணத்தை இராணுவச் சிப்பாய்களுக்கு வழங்கியுள்ளார். குருநாகல், வெல்லாவ பிரதேச நெலியா கிராமத்தில் கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி 37 வயதான ஜனக பிரியந்த என்ற செல்வந்த வர்த்தகர் கொடூரமான முறையில் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். கொலையுண்டவர் மனைவியுடன் கோபித்துக்கொண்டு தனியே வாழ்ந்த வந்தார். வெளிநாடு சென்று திரும்பிய குறித்த நபரின் மனைவி ஏக்கர் கணக்கான தெங்கு காணியை விற்பனை செ…
-
- 0 replies
- 495 views
-
-
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் கீழ் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையினால், யாழ்ப்பாணத்தில் 38 அறைகளைக் கொண்ட ஓய்வு விடுதி ஒன்று அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை கடந்தவாரம் அனுமதி அளித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்த திட்டத்தை அமைச்சரவையில் முன்வைத்திருந்தார். வடக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொள்வோர் தங்குவதற்கு வசதியாகவே இந்த விடுதி அமைக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த விடுதியை அமைப்பதற்குத் தேவையான காணியை சுவீகரிப்பதற்கும் சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. http://www.puthinappalakai.com/view.php?20140428110411
-
- 0 replies
- 240 views
-
-
சிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பங்கெடுத்த லெப்.ஜெனரல் தல்பீர் சிங் சுகக், இந்திய இராணுவத்தின் அடுத்த தளபதியாக இந்த வாரம் நியமிக்கப்படவுள்ளார். இந்திய இராணுவத்தின் அடுத்த தளபதியாக லெப்.ஜெனரல் தல்பீர் சிங் சுகக் நியமிக்கப்படுவதற்கு பாஜகவைச் சேர்ந்தவரும், முன்னாள் இந்திய இராணுவத் தளபதியுமான ஜெனரல் வி.கே.சிங் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். லெப்.ஜெனரல் தல்பீர் சிங் சுகக்கை அடுத்த இராணுவத் தளபதியாக நியமிப்பதற்கு, நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவிடம் இந்தியப் பாதுகாப்பு அமைச்சு, பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு விரைவில் அவரை அடுத்த இராணுவத் தளபதியாக நியமிக்கவுள்ளது. இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடந…
-
- 0 replies
- 246 views
-
-
யுத்த குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் சுயாதீன விசாரணைகளை நடத்த ஒத்துழைக்காவிடின் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். போரின் போது பாலியல் கொடுமைகளை ஆயுதமாகப் பயன்படுத்தியமை சாதாரண விடயமல்ல என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வடக்கில் தொடர்ந்தும் இராணுவ முகாம்களை வைத்திருப்பது ஜனநாயக செயல் அல்ல. இராணுவத்தை வெளியேற்ற அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். போரின் போது இராணுவம் பாலியல் வல்லுறவை ஆயுதமாக பயன்படுத்தியுள்ளமையென ஐ.நா. தெரிவித்துள்ள அறிக்கை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு யுத்தத்தின் போது இராணுவத்தினர் தமிழ் பெண்கள் மீது பாலியல் கொடுமைகளையும் செய்தனர் என்ற குற்றஞ்சாட்டி 2009…
-
- 0 replies
- 449 views
-
-
சிங்கள அடிப்படைவாதிகளின் சிறைக்கைதியாகியுள்ள அரசாங்கம் வட மாகாண சபைக்கான அதிகாரங்களை வழங்காது அடிமைப்படுத்தி வைத்துள்ளது எனக் குற்றம் சாட்டும் அரசின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடது சாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார வடக்கில் படையினர் வகை தொகையின்றி காணிகளை கையகப்படுத்துவது கைவிடப்பட வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில், வட மாகாண சபை தேர்தல் மட்டுமே நடத்தப்பட்டுள்ளதே தவிர அச்சபை இயங்குவதற்கான எந்த அதிகாரங்களும் மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை. வட மாகாண சபை செயலாளர் நியமிப்பில் முதலமைச்சருடன் எந்தவித பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்ல…
-
- 0 replies
- 334 views
-
-
சந்திரிகாவுக்கு ராஜயோகம் பிறந்துள்ளதாம்! - அமைச்சர்களை வளைத்துப் போட முயற்சி. [sunday, 2014-04-27 18:53:38] முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு மிகப்பெரிய ராஜயோகம் பிறந்துள்ளதாக அவரது ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். தனக்கு ராஜயோகம் பிறந்துள்ளதாக ஜோதிடர்கள் கூறிய தகவலை, அவர் சில அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், அமைச்சர்களின் ஆதரவை பெறுவது தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் சந்திரிகா மீண்டும் பகிரங்க அரசியலுக்கு வர தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://seithy.com/breifNews.php?newsID=108204&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 468 views
-
-
ராமேஸ்வரத்திலிருந்து அரிய வகை கோவேறு கழுதைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராமேஸ்வரம் தீவில் தனுஸ்கோடி முதல் பாம்பன் வரை அரிய வகை கோவேறு கழுதைகள் வாழ்ந்து வாழ்கின்றன. பாம்பன் பாலம் 1988 ஆம் ஆண்டு திறக்கப்படுவதற்கு முன்னர், ராமேஸ்வரம் தீவு ரயில் சேவையால் மாத்திரமே இந்தியாவுடன் இணைந்திருந்தது. அதுவரை உள்ளுர் போக்குவரத்திற்கு குதிரை வண்டிகளை மாத்திரமே அதிகம் சார்ந்திருந்தனர். 1988-க்கு முன்னர் ராமேஸ்வரத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்ரீகர்களை ராமநாதசுவாமி கோயில், தனுஷ்கோடி, ராமர் பாதம், அக்னி தீர்த்தம் உள்ளிட்ட இடங்களுக்கு கழுதைகள்பூட்டிய (கோவேறு கழுதைகள்) வண்டிகளையே பயன்படுத்தினர். ஆனால் 1988-க்கு பின்னர், பாம்பனில் ரோடு பாலம் திறக்கப்பட்…
-
- 0 replies
- 408 views
-
-
ஜனாதிபதி மஹிந்த, பஹ்ரேன் பயணமானார் திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2014 07:44 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை பஹ்ரேன் பயணமானார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/108400-2014-04-28-02-17-27.html
-
- 0 replies
- 349 views
-
-
தமிழ்ப் பெண்களை அதிகளவில் பொலிசில் இணைக்க நடவடிக்கை! [Friday, 2014-04-25 16:47:59] வட மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார். யாழ்,மாவட்டத்தின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக நான் கடமையேற்ற காலப்பகுதியில் யாழ்,மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மிகவும் குறைவாக உள்ளதாக பொது மக்களால் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த விடையம் தொடர்பாக நான் ஆராய்ந்து பார்த்ததில் யாழ் மாவட்டத்தில் மட்டும் அல்லது வட மாகாணத்திலேயே குறித்த குறைபாடு உள்ளமை கண்டறியப்பட்டது. குறித்த குறைபாட்டினை ந…
-
- 2 replies
- 559 views
-
-
கொழும்பில் கழிவகற்றலுக்கும் வரி அறவீடு! ஏப் 28, 2014 கொழும்பு நகரமக்களுக்கு கழிவகற்றல் வரி அறவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகர கழிவகற்றலை முறையாக மேற்கொள்ளும் பொருட்டு கொழும்பு வாழ் மக்களிடம் இருந்து வரி அறவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . கொழும்பு நகர மாநாகர சபையின் பிரதிமுதல்வர் இதனை அறிவித்துள்ளார். கொழும்பு நகரகழிவகற்றல் தொகுதிகள் 100 ஆண்டுகள் பழமையானவை அந்தவகையில் இவற்றிற்கு மாற்றீடாக புதிய கழிவகற்றல் தொகுதி அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதன் நிர்மாண பணிகளுக்கு மக்களிடம் இருந்து வரிஅறவிட்ப்படவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். http://www.sankathi24.com/news/40874/64//d,fullart.aspx
-
- 0 replies
- 218 views
-
-
மாத்தளைப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது! [Monday, 2014-04-28 07:53:41] மாத்தளை மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளின் மாதிரிகள் கார்பன் பரிசோதனைகளுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.இலங்கையின் வேண்டுகோளுக்கு இணங்க அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஆய்வுக் கூடம் ஒன்று இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள முன்வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,மாத்தளையில் பல மாதங்களுக்கு மனித புதைகுழி ஒன்று பற்றிய தகவல்கள் கிடைத்தன. இதன் பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது. அந்த புதைக்குழியில் இருந்து பல எலுப்ப…
-
- 0 replies
- 213 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை விடவும் மோசமான ஒரு நிலைமையை இந்த நாட்டில் கொண்டு வர பொதுபல சேனா அமைப்பினர் முயற்சிக்கின்றனர் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த முப்பது வருட கால யுத்தத்தின் பின்னர் நிம்மதியான சூழ்நிலை ஏற்படுமென்றும், அச்சமின்றி தொழில் செய்யலாம், பிள்ளைகளுக்கு கல்வி புகட்டலாம் என்றும் மக்கள் நம்பியிருந்த வேளையில் நாட்டில் மிகவும் மோசமான நிலையை பொதுபல சேனா அமைப்பு உருவாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சிறுபான்மையினரின் அடையாளங்களையும் மதங்களையும் அழிப்பதுடன் சிறுபான்மையினருக்கு இந்த நாடு சொந்தமில்லை. இது ஒரு பெளத்த நாடு என்று தெரிவித்து வந்த பொதுபல சேனா அமைப்பினர் இப்பொழ…
-
- 4 replies
- 464 views
-
-
மட்டக்களப்பு வாழைச்சேனை - நாசிவன்தீவுக் கிராமத்தில் செயற்படவிருக்கும் யூரியா பை தயாரிப்புத் தொழிற்சாலையானது அந்தப் பகுதியைச் சூழவுள்ள வாவிக்கும் கிராம மக்களின் வாழ்வுக்கும் கேடு விளைவிக்கும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது விடயமாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன் மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி மன்மதராஜாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கோறளைப்பற்றுப் பிரதேசத்திலுள்ள நாசிவன்தீவுக் கிராமத்தில் ஒரு நபர் தனது காணியில் யூரியா பை தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்றை நிறுவி வருகின்றார். இத்தொழிற்சாலை செயற்படத் துவங்கும்பட்சத்தில் நாசிவந்தீவு கிராம மக்களுக்கும் அதனைச் சூழவுள்ள வா…
-
- 2 replies
- 450 views
-
-
அவுஸ்திரேலியா சென்ற அகதிகளை மீளவும் சிறீலங்காவுக்கு எடுக்க கோத்தபாய முயற்சி ஏப் 27, 2014 அவுஸ்திரேலியாவிலுள்ள போலி அகதிகளை மீளவும் இலங்கைக்கு அனுப்புவது தொடர்பில், ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்இ பேச்சு நடத்தியுள்ளார். அவுஸ்திரேலியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் அகதிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே, போலியான அகதிகளைத் திருப்பி அனுப்புவது குறித்துப் பாதுகாப்புச் செயலருடன் ஆஸ்திரேலியா பேச்சுக்களை நடத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின், கான்பராவில் உள்ள ஹயாட் விடுதியில் நடந்த ஆள்கடத்தல் மற்றும் நாடு கடந்த குற்றங்கள் தொடர்பான ஆஸ்திரேலிய இலங்கை கூட்டுக்குழுவின் இரண்டாவது கூட்டத்தில்…
-
- 0 replies
- 376 views
-
-
மறிச்சிக்கட்டி காணி பிரச்சினைக்கு தீர்வு திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2014 02:00 -எஸ்.றொசேரியன் லெம்பேட் சர்ச்சைக்கூறிய மறிச்சிக்கட்டி, மறைக்கார்தீவு கிராம மக்களின் காணிப் பிரச்சினைககு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொடுத்துள்ளார் என்றும் இதற்கு முஸ்ஸிம்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுவதாகவும் வட மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் றிப்கான் பதியுதீனினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இடம்பெயர்ந்த நிலையில் மறிச்சிக்கட்டி, மறைக்கார்தீவு பகுதியில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களை திடீரென அங்கு சென்ற பொது பல சேனா அமைப்பினர் அச்சுறுத்தியதோடு இனவாதத்தை தூண்டும் வகையில் மக்களுடன் கத…
-
- 0 replies
- 264 views
-
-
அரசசேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்ய இராணுவம் யார்? - அமைச்சர் ஐங்கரநேசன் ஆவேசம். [sunday, 2014-04-27 19:16:35] முறையான வர்த்தமானி அறிவித்தலோ, அரச இலச்சினையுடன் கூடிய விளம்பரமோ, எவர் கோருகிறார் என்ற அடிக்குறிப்போ இல்லாமல் அநாமதேயப் பிரசுரங்களின் மூலம் இராணுவம் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அரச சேவைக்கு ஆட்சேர்ப்பதற்குச் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இருக்கும்போது எமது இளைஞர்களை இப்படித் தந்திரமாக ஆட்சேர்ப்பதற்கு இராணுவத்துக்கு அருகதை இல்லை என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கத்தின் 94ஆவது ஆண்டு நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கர…
-
- 0 replies
- 452 views
-
-
ஜனாதிபதிக்கே சவால் விடும் நிலைக்குச் சென்றுள்ளது பொதுபல சேனா! - அமைச்சர் ரிஷாத் பதியுதீன். [sunday, 2014-04-27 19:00:40] விடுதலைப் புலிகளை விடவும் மோசமான ஒரு நிலைமையை இந்த நாட்டில் கொண்டு வர பொதுபல சேனா அமைப்பினர் முயற்சிக்கின்றனர் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த முப்பது வருட கால யுத்தத்தின் பின்னர் நிம்மதியான சூழ்நிலை ஏற்படுமென்றும், அச்சமின்றி தொழில் செய்யலாம், பிள்ளைகளுக்கு கல்வி புகட்டலாம் என்றும் மக்கள் நம்பியிருந்த வேளையில் நாட்டில் மிகவும் மோசமான நிலையை பொதுபல சேனா அமைப்பு உருவாக்கியுள்ளது. சிறுபான்மையினரின் அடையாளங்களையும் மதங்களையும் அழிப்பதுடன் சிறுபான்மையினருக்கு இந்த நாடு சொந்தமில்லை. இது ஒரு பெளத்…
-
- 0 replies
- 394 views
-
-
பொருளாதார ரீதியாக பாதகமான விளைவுகள் ஏற்படும்! - ஜனாதிபதிக்கு நிபுணர்கள் எச்சரிக்கை. [sunday, 2014-04-27 09:12:17] நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்தாவிட்டால் பொருளாதார ரீதியாக பாதக விளைவுகளை எதிர்நோக்க நேரிடலாம் என பொருளியல் நிபுணர்கள் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நான்கு பேராசிரியர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். பரிந்துரைகளை அமுல்படுத்துவது இன்னமும் காலம் தாமதிக்கப்பட்டால், முதலீட்டாளர்களின் வருகை வரையறுக்கப்படலாம்.சில மேற்கத்தைய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இலங்கைக் கிளைகளை மூடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றன. இந்த நேரத்தில் புத்திகூர்மையுடன் தீர்மானங்கள் எடுக்க வேண்டுமென பொரு…
-
- 0 replies
- 283 views
-
-
உலக அரங்கில் இருந்து மேலும் தனிப்படாத கொள்கைகளை பின்பற்ற அரசாங்கம் முன்வரவேண்டும்! - இரா.சம்பந்தன் அழைப்பு. [sunday, 2014-04-27 08:48:10] உலக அரங்கிலிருந்து மேலும் தனிமைப்பட்டுவிடக்கூடிய கொள்கைகளைக் கைக்கொள்ளாமல், கூட்டிணைந்த செயற்பாடுகளுக்கு வழிகோலக்கூடிய கொள்கைகளை அரசாங்கம் பின்பற்றுவதே நற்பலன்களைத் தரவல்லதாக அமையும் என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவுநர் தந்தை செல்வநாயகம் நினைவுப் பேருரை நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்திய போதே - தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இந்தக் கருத்தை வலியுறுத்தினார். கொழும்பு, பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந…
-
- 0 replies
- 335 views
-
-
மடு வலயப் பாடசாலைகளில் புகைப்படம் எடுத்து விபரம் திரட்டிய இராணுவத்தைக் கண்டிக்கிறது இலங்கை ஆசிரியர் சங்கம்! [sunday, 2014-04-27 08:41:17] மன்னார் மடு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்குள் அத்துமீறிப் பிரவேசித்த இராணுவ புலனாய்வாளர்கள் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களை தனித்தனியாகவும், பாடசாலை மாணவர்களை வகுப்பறை ரீதியாக குழுவாகவும் புகைப்படம் எடுத்து விவரம் திரட்டியுள்ளதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இதுபற்றி கருத்து வெளியிட்ட அந்தச் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், யுத்தம் முடிவடைந்த பின்னர், யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் அமைதி நிலவுகின்ற நேரத்தில் பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை அச்சமடையச் செய்யும் வகை…
-
- 0 replies
- 459 views
-
-
சம்பூர் மக்கள் இடம்பெயர்ந்து 9 ஆண்டுகள் நிறைவு! - மீள்குடிமர்வு வேண்டி சிறப்பு பூஜை வழிபாடு. [sunday, 2014-04-27 07:48:50] திருகோணமலை மாவட்டம், சம்பூர் பிரதேச மக்கள் தமது பிரதேசத்திலிருந்து வெளியேறிய 9வது ஆண்டை நேற்று நினைவுகூர்ந்த அதேவேளை, சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் வேண்டி சிறப்பு பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர். சம்பூர் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இந்த சிறப்பு பூசை வழிபாடுகள் நடைபெற்றன. போர்க் காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த சம்பூர் பிரதேசத்தில் 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாகவே அந்த பகுதியிலுள்ள குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. கடந்த 2005-…
-
- 0 replies
- 259 views
-
-
சிங்கள குடும்பங்கள் குறிப்பிட்ட தொகை குழந்தைகளை மாத்திரமே பெற்றுக்கொள்கின்றமை வருத்தமளிக்கிறது. இதனால், இலங்கையில் அமுலில் இருக்கும் குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்போவதாக மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். அத்துடன், கூடியளவு பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்குத் தேவையான பால்மா மற்றும் ஆடைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கம்பஹா, கிரிந்திவெல பிரதேசத்தில் 8 குழந்தைகளைக் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு உதவுவதற்காகச் சென்றுள்ள அமைச்சர் மேர்வின் சில்வா, அங்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/108376-2014-04…
-
- 0 replies
- 394 views
-
-
மகிந்த அரசின் இறுதிக்கட்ட பாரிய இன அழிப்புப் போரில் பல்வேறு நாடுகளும் தமது பங்களிப்பை வழங்கியிருந்தன. பல நாடுகளின் இராணுவ உயர்மட்டத் தளபதிகள் களமுனைக்கு நேரடியாகச் சென்றும் ஆலோசனைகளை வழங்கியிருந்தனர். இதில் இந்திய இராணுவம் போரில் நேரடியாகப் பங்கெடுத்ததாக ஏராளமான செய்திகள் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே வெளிவந்துகொண்டிருந்தன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய இராணுவத்தினர் சிறீலங்கா இராணுவத்தினருடன் களமுனையில் நிற்கும் சில நிழற்படங்களும் அப்போது வெளியாகியிருந்தன. இவற்றை இந்தியாவோ அல்லது சிறீலங்காவோ அப்போது மட்டுமல்ல இன்றுவரை மறுக்கவில்லை. போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளை எட்டும் நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தமிழின அழிப்புப் போருக்கு உடந்தையாக இர…
-
- 0 replies
- 457 views
-