ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143433 topics in this forum
-
வடபகுதியில் இருந்து சென்ற பேரூந்து வெள்ளத்தில் மூழ்கியது புதன்கிழமை, டிசம்பர் 19, 2012 வடபகுதியில் இருந்து இன்று அதிகாலை புறபப்ட்ட பயணிகள் பேரூந்து சிலாபம் அருகே வெள்ளத்தில் மூழ்கியது. மழை வெள்ளத்துடன் இழுத்துச்செல்லப்பட்ட இந்த பேருந்தில் 60 பேர் வரை பயணம் செய்துள்ளனர். இதுவரை பயணிகள் மீட்கப்படவில்லை, வெள்ளத்தினுள் சிக்குப்பட்ட பேரூந்திற்குள்ளேயே பயணிகள் அந்தரித்த வண்ணம் சுமார் 6 மணி நேரமாக முடக்கப்பட்டுள்ளனர். இதனை ஒரு புதினமாக சுமார் 500 வரையான சிங்கள மக்கள் துர இருந்து பார்த்துக்கொண்டு இருப்பதாகவும், கூடவே பொலிசாரும் கடற்படையினரும் தூர இருந்தே பார்த்துக்கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%95…
-
- 1 reply
- 868 views
-
-
மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் தொங்குப்பாலத்திற்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியில் சுமார் 12 ஆடிக்கு மேல் ஆற்று நீர் தற்போது பாய்ந்து கொண்டிருப்பதாக குஞ்சுக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை லக்டன் டி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் மடு பிரதான வீதியில் இருந்து பெரிய குஞ்சுக்குளம்இமாதா கிராமம்இபெரிய முரிப்பு ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் பிரதான வீதிகள் தற்போது திருத்த வேளைகள் இடம் பெற்றுக்கொண்டிருக்கினறது.அப்பகுதியூடாக காணப்படும் கட்டுக்கரை குளத்தின் துருசு பல வருடங்களாக சேதமடைந்த நிiயில் காணப்படுகின்றது. -இந்த நிலையில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக தற்போது குஞ்சுக்குளம் பகுதியில் உள்ள ஆறு த…
-
- 0 replies
- 655 views
-
-
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் - குளோபல்தமிழ்ச்செய்தியாளர் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யும் வரையில் பகிஸ்கரிப்பு போராட்டத்தை கைவிடுவதென்ற பேச்சிற்கே இடமில்லையென பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று தெளிவுபட அறிவித்து விட்டது.பல்கலைக்கழக துணைவேந்தரது அழைப்பின் பேரில் மாணவர் ஒன்றியப்பிரதிநிதிகள் அவரை சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.அவ்வேளையில் பல்கலைக்கழகத்தில் கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக பேசப்பட்ட வேளையிலேயே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களையும் விடுவிக்கும் வரையில் போராட்டத்தை விலக்கி கொள்வதென்ற பேச்சிற்கே இடமில்லையென மாணவர் ஒன்றியப்பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதனிடையே எதிர்வரும் வெள்ள…
-
- 2 replies
- 666 views
-
-
(ஹபீல் பாரிஸ்) பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி புதிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. இந்த பிரேரணையில் கைச்சாத்திட்டவர்களே விசாரணை நடத்துபவர்களாகவும் உள்ளனர். இதற்கு அப்பாலும் முரண்பாடுகள் உண்டு என ஐ.தே.க கூறியது. குற்றப்பிரேரணையை விசாரிப்பவர்களுக்கு குற்றப்பிரேரணை செயன்முறையுடன் வேறு வகையில் தொடர்புள்ளவர்களுக்கும் இடையில் குடும்ப உறவுகள் காணப்படுகின்றன. இது இன்னொரு முரண்பாடு ஆகும் என ஐ.தே.க எம்.பி சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவின் கணவரான தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை தொடக்கப்பட்ட முறைபற்றி கேட்டபோதே சேனசிங்க எம்.பி மேற…
-
- 0 replies
- 415 views
-
-
தமிழ்ப் பிரதேசத்தில் இராணுவம் நிலை கொண்டிப்பது குறித்த விவாதங்கள் தமிழ் அரசியல் வட்டாரங்களில் சமீப காலங்களாக இடம்பெற்று வருகின்றதாக கூறி தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்பும் நோக்கத்தில் அவ்வியக்கத்தின் அரசியல் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.. 'இலங்கை இராணுவம் உட்பட முப்படைகள் என்பவை தமிழ் மக்களால் ஆக்கிரமிப்பு படைகளாகவே அதாவது சிங்களப்படைகளாவே பார்க்கப்படுகின்றன. இந்நிலையில், எமது தாயகத்தில் இருந்த ஆக்கிரமிப்பு படைகள் முற்றாக வெளியேற வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பமாகும். இலங்கை இனப்…
-
- 0 replies
- 499 views
-
-
தென்மராட்சி வறணியில் வெடிவிபத்தில் ஒருவர் மரணம்:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- 19 டிசம்பர் 2012 தென்மராட்சியின் வறணிப்பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வெடி விபத்தில் ஒருவர் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார். மரணமானவர் ஏழு பிள்ளைகளது தந்தையான கந்தசாமி காந்தராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார். பன்றிகளை கொல்வதற்கென வெங்காய வெடிகளை எடுத்து சென்ற வேளை அது வெடித்ததாக கூறப்படுகின்றது. வெடி விபத்தில் வயிறு பிளந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. வறணி இடைக்குறிச்சி பகுதியில் வசித்து வந்த நிலையில் அருகாகவுள்ள கண்டல் காடுகளில் நடமாடும் பன்றிகளை பொறி வைத்து பிடிப்பதற்கான ஏற்பாடுகளுடன் சென்று கொண்டிருந்தவேளை இவ்விபத்து நடந்ததாக கூறப்படுகின்றது. வறணி சைவப்பிரகாச பாடசாலையினை அண்மித…
-
- 0 replies
- 509 views
-
-
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றின் மீது இனந்தெரியாத ஆயுததாரிகள் சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் அநுராதபுரம் இராஜாங்கனைப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த சமயம் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தந்துகொண்டிருந்த பஸ் ஒன்றில் ஆயுதங்களுடன் பயணித்த சிலர், திடீரென மேற்படி பஸ்ஸுக்குள் புகுந்து சாரதியையும் நடத்துனரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இது தொடர்பில் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.eeladhesam.com
-
- 1 reply
- 493 views
-
-
By General 2012-12-15 16:11:38 இலங்கை வான்பரப்பில் கடந்த சில தினங்களாக அடிக்கடி தென்படுவதாகக் கூறப்படும் இணங்காணப்படாத பறக்கும் பொருள் மற்றும் வேற்றுக்கிரக வாசிகளின் பிரசன்னம் தொடர்பிலான தகவல்களை இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆதர் சி. கிளார்க் மத்திய நிலையம் ஆகியன மறுத்துள்ளன. இணங்காணப்படாத பறக்கும் பொருளாக கூறப்படுபவை சில வேளைகளில் நாட்டின் பல மாவட்டங்களில் பெய்து வரும் சிகப்பு நிற மழையாக இருக்கலாம் என இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் அனில் சமரநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் வானில் விசித்திரமான பொருட்கள் எதனையும் கண்டால் அது தொடர்பில் உடனடியாக தமக்கோ அல்லது இவ்விடயத்துடன் தொடர்புடைய வேறு நிறுவனத்துக்கோ உடனடியாக …
-
- 3 replies
- 1.9k views
-
-
By Kapila 2012-12-19 15:09:19 இந்திய இராணுவ தளபதி பிக்ரம்சிங் இன்று பிற்பகல் 2 மணியளவில் இலங்கையை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். இந்திய இராணுவத்துக்கு சொந்தமான விசேட விமானமொன்றிலேயே அவர் இங்கு வந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். நான்கு நாள் இங்கு தங்கவுள்ள அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை உட்பட பல முக்கியமான நபர்களை சந்திக்கவுள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=2163 ஜெனரல் பிக்ரம் சிங் நாளை ஜனாதிபதியை சந்திப்பார் இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் நாளை ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை சந்திக்கவுள்ளார். இதேவேளை, மூன்று…
-
- 2 replies
- 332 views
-
-
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அனுசரணையுடன் வருடாந்தம் நடைபெறும் நீதவான்களுக்கான மாநாட்டை அரசாங்கம் ரத்து செய்த போதிலும், மாநாட்டை திட்டமிட்டபடி நடாத்த நீதவான்கள் தீர்மானித்துள்ளனர். இந்த மாநாட்டில் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் இந்த மாநாட்டை ரத்து செய்த போதிலும், திட்டமிட்டபடி மாநாட்டை நடாத்த நீதவான்கள் தீர்மானித்துள்ளனர். நீதிச் சேவைகள் பேரவையினால் இந்த வருடாந்த மாநாடு நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. வருடாந்த நீதவான்கள் மாநாட்டிற்கு தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சு அனுசரணை வழங்கி வந்ததா…
-
- 0 replies
- 478 views
-
-
வடமராட்சி கிழக்கு பகுதியில் நடைபெற்றுவரும் சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தவர்களுக்கு ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது. வடமராட்சி கிழக்கு குடத்தணை அம்பன் கொட்டாடை போன்ற மக்கள் குடியிருக்கும் கிராமங்களில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் ஒட்டுக்குழுவின் மகேஸ்வரி நிதியத்தினால் சட்ட விரோதமான முறையில் மணர் அகழ்வு நடைபெற்று வருகின்றது. கட்டுப்படுத்த முடியாத அளவு மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அப்பகுதியில் குளங்களைப் போல் மழை நீர் தேங்கும் அளவு பாரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்னும்மொரு முறை அப்பகுதியினை சுனாமி போன்ற கடலலை தாக்கினால் மேற்படிக் கிராமம் முழுமையாக அழிவடைய…
-
- 1 reply
- 455 views
-
-
சிலாபம் முன்னேஸ்வரம் குளம் உடைப்பெடுத்ததால் அப்பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேவேளை பொலிஸார் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் வள்ளங்கள் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.மேலும் வெள்ளப் பெருக்கு காரணமாக புத்தளம் - கொழும்பு வீதியில் சிலாபம் ஜயபிம, மற்றும் மாதம்பை பகுதிகளின் ஊடக செல்லும் அனைத்து போக்குவரத்துக்களும் தடைபட்டுள்ளன. இன்று காலை கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற தனியார் பேருந்து பங்கதெனிய பகுதியில் வெள்ள நீரி்ல் இழுத்துச் செல்லப்பட்டு பாதையினைவிட்டு வயல் பகுதியில் புதையுண்ட நிலையில் அனர்த்த நிவாரண சேவைகள் பிரிவின் அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகளின் உதவியுடன் பஸ்ஸிலிர…
-
- 0 replies
- 403 views
-
-
இந்திய மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அதிகளவு சுங்கவரியை உடனடியாக குறைக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் கைவிரித்துள்ளது. இந்திய மோட்டார் வாகன ஏற்றுமதியாளர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் வரி அதிகரிப்பை, சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. இது குறித்து இந்திய அரசாங்கம் கொழும்பிலுள்ள தமது தூதரகம் மூலம் சிறிலங்கா அரசுடன் பேச்சுக்களை நடத்தியது. எனினும் உடனடியாக இந்தக் குறைப்பை மேற்கொள்ள முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகம, இந்த வரி அதிகரிப்பு இந்தியாவின் மீதான நேரடி நடவடிக்கை அல்ல என்றும், சிறிலங்காவின் ஏற்றுமதி வருமானம் போதாது என்பதால், அதைச் …
-
- 1 reply
- 488 views
-
-
மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜேவிபியும், விடுதலை புலிகளும் இந்நாட்டின் சட்டபூர்வ அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் தூக்கினார்கள். தமிழ் புலிகள் வட கிழக்கில் தனி ஒரு நாட்டை உருவாக்க முனைந்தார்கள். சிங்கள ஜேவிபியினர் முழுநாட்டையும் கைப்பற்ற முனைந்தார்கள். இரு சாராருமே ஆயுதம் தூக்கியவர்கள்தான். இருசாராருமே ஆட்சியை முழுதாகவோ, பகுதியாகவோ பிடிக்க ஆயுதம் தூக்கி போராடியவர்கள்தான். புலிகள் வட கிழக்கில் குறிப்பிட்ட பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டு ஆட்சியில் வைத்திருந்தைபோல், ஜேவிபியினரும் தமது போராட்டத்தின் போது தெற்கில் மாத்தறை மாவட்டத்தில் சில பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் பிடித்து வைத்து அங்கு ஆட்சி நடத்தியவர்கள்தான். எனவே இறந்துபோன ஜேவிபி போராளிகளை தெற்கில் நினைவுகூ…
-
- 4 replies
- 732 views
-
-
ஹெய்ட்டியுடன் இலங்கை இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்துள்ளது 19 டிசம்பர் 2012 ஹெட்டியுட்ன் இலங்கை இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்துள்ளது. கடந்த 14ம் திகதி உத்தியோகபூர்வமாக இரு நடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணே மற்றும் ஹெய்ட்டிக்கான வதிவிடப் பிரதிநிதி ஜேன் வெஸ்லி ஆகியோருக்கு இடையில் இராஜதந்திர உறவுகளை ஆரம்பிப்பது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் என்ற அடிப்படையில் இலங்கையும், ஹெய்ட்டியும் பொதுவான இலக்குகளைப் பகிர்ந்து கொண்டுள்ளதாக பாலித கொஹணே தெரிவித்துள்ளார். அணி சேரா நாடுகள் அமைப்பிலும் இரு நாடுகளும் காத்திரமான பங்களிப்பை வழங…
-
- 3 replies
- 548 views
-
-
புதிதாக அரசியல் கட்சி ஒன்றை உருவாக்க சந்திரிக்கா முடிவு புதன்கிழமை, டிசம்பர் 19, 2012 புதிதாக அரசியல் கட்சி ஒன்றினை ஆரம்பிப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளார் என கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இவர் எதிர்க்கட்சிகள் பலவற்றுடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தற்போது இந்தியா சென்றுள்ளதால் அவர் நாடு திரும்பியவுடன் அவருடனும் இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளார். இருப்பினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…
-
- 2 replies
- 519 views
-
-
சிலோன் பெற்றோலிய கூட்டுத்தாபனம் 90 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு 14 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் 90 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 159 ரூபாவாகும். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/54806-2012-12-15-03-54-25.html தொடர்புபட்ட செய்தி: மேலும் சரியப்போகும் இலங்கை ரூபாய் ?: http://www.yarl.com/forum3/index.php?showtopic=112566 வட்டி வீதங்களைக் குறைக்க நடவடிக்கை!: http://www.yarl.com/forum3/index.php?showtopic=113011
-
- 16 replies
- 834 views
-
-
இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களில் ஒருவரான பொன்னையா மாணிக்கவாசகம் அவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கத்தினால் வழங்கப்படும் உயர் விருதான கலாபூசணம் விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடந்த விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. நாட்டின் பல பாகங்களை சேர்ந்த சிங்கள, தமிழ், முஸ்லீம் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இலங்கையின் கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது. கலாபூசணம் விருது பெற்ற மாணிக்கவாசகம் இலங்கையில் உள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர்களில் ஒருவராவார். பி.பி.சி மற்றும் வீரகேசரி வவுனியா செய்தியாளராக இருக்கும் இவர் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் வவுனியா மாவட்ட …
-
- 1 reply
- 509 views
-
-
செம்மணி மனித புதைகுழி விவகாரத்தை இலங்கையரால் குறிப்பாக தமிழர்களால் அவ்வளவு இலகுவாக மறந்து விட முடியாது. ஆம் இலங்கை வரலாற்றில் கறுப்புப்ள்ளியை ஏற்படுத்திய ஒரு விடயமாக இது அமைந்தது.முழு உலகையே இலங்கையை கேள்விக்குள்ளாக்கும் நிலைக்கு தள்ளிய விடயங்களில் ஒன்றாக இதனைக் குறிப்பிடலாம். இதேபோல் பரபரப்பை ஏற்படுத்திய மற்றுமொரு விவகாரமாக சூரியகந்த மனித புதைகுழியைக் குறிப்பிடலாம். இதிலிருந்து நூற்றுக்கணக்கான சடலங்கள் மீட்கப்பட்டதுடன் உலக அரங்கில் சலசலப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேபோன்று மிருசுவில் மனித புதைகுழி விவகாரம், துரையப்பா மைதான புதைகுழி விவகாரம் ஆகியனவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. அவ்வகையில் தற்போது மாத்தளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகள் விவகாரமும்…
-
- 0 replies
- 619 views
-
-
(சுமித்தி) கைதுகளுக்கும் காரணமின்றிய தடுத்து வைத்தலுக்கும் எதிராக நடாத்தவுள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு மக்களை அழைக்கும் வகையில் இலங்கை தமிழரசு கட்சியினரால் யாழ். நகரில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களின் காரணமற்ற கைதுகளை, தடுத்து வைத்தலை கண்டித்தும் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய கோரியுமே இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படவிருக்கின்றது. யாழ். நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிமுதல் மாலை 4.00 மணிவரை இந்த உண்ணாவிரதப்போராட்டத்தை நடாத்த தமிழரசு கட்சிதீர்மானித்துள்ளது. தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து நடாத்தவுள்ள இந்த உண்ணாவிரத போராட்டத்தில…
-
- 0 replies
- 443 views
-
-
சிரானிக்கெதிரான குற்றப் பிரேரணையை வாபஸ் பெற முடியாது; அவரை பணி நீக்கம் செய்வது உறுதி: பிரதி சபாநாயகர் [Wednesday, 2012-12-19 08:55:39] பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணையை வாபஸ் பெற்றுக்கொள்ள முடியாது என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். குற்றப் பிரேரணை வாபஸ் பெற்றுக்கொள்ள அரசியல் அமைப்பில் இடமில்லை. குற்றப் பிரேரணை தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கை ஏற்கனவே நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பின் பிரகாரம் மீளவும் அதனை வாபஸ் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடையாது. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளது. பொதுவான ஆவணம் என்பதனால் கட்டணத்தை செலுத்தி நாட்டின்…
-
- 1 reply
- 564 views
-
-
சுன்னாகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் காவற்துறையினரால் கைது : 19 டிசம்பர் 2012 பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் காவற்துறையினரால் யாழ்ப்பாணத்தில் நேற்றுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அவர் என்ன காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டார் என்பது காவற்துறையினரால் தெரிவிக்கப்படவில்லை. இவருடன் சேர்ந்து கடந்த மூன்று வாரங்களில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் 39 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சுன்னாகம் மின்சார நிலைய வீதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் சிவாகினி (வயது 40) என்ற பெண் நேற்று காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார் என்று அவரது உறவினர்கள் கூறுகின்றனர். சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செ…
-
- 0 replies
- 520 views
-
-
கனடாவில் போதை கலந்த கேக்கை உண்ட 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி! இலங்கைத் தமிழ் பெண் தொடர்பு? Published by News on December 18, 2012 | Comments Off கனடாவில் போதை கலந்த கேக்கை உண்ட 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி! இலங்கைத் தமிழ் பெண் தொடர்பு? [ செவ்வாய்க்கிழமை, 18 டிசெம்பர் 2012, 03:25.42 AM GMT ] இது பற்றி தெரியவருவதாவது: கனடா மொன்றியலில் தமிழ் கத்தோலிக்கருக்கென தானியான தேவாலயம் உள்ளது. க்ந்த 15.12.2012 இரவு இவர்களின் ஒளிவிழா நிகழ்ச்சி (நத்தாரை முன்னிட்டு) ஒரு பாடசாலையில் நடந்தது. அங்கு ஒரு தமிழ்ப் பெண் கேக் பொதியை வழங்கியுள்ளார், அதை பெற்றுக்கொண்டவர்கள் பகிர்ந்து உண்ணும் போது வாந்தி,மயக்கம் ,தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது, உடன் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசார் பாதிக்கப்ப…
-
- 0 replies
- 520 views
-
-
பாரதவின் மனைவி,மகள்,பிரதி சொலிசிட்டரை சந்தித்தனர்:சி.ஐ.டி புதன்கிழமை, 19 டிசெம்பர் 2012 01:47 0 COMMENTS (பாரூக் தாஜுதீன்) பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரனின் கொலைத்தொடர்பில் தமது அபிப்பிராயத்தை தெரிவிப்பதற்காக அவரது மனைவியும் மகளும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மதவ தென்னக்கோனை சந்தித்ததாக குற்றப்புலனாய்வு பொலிஸார் கொழும்பு கோட்டை நீதவானிடம் தெரிவித்தனர். இந்த கொலைத்தொடர்பிலான வழக்கு விசாரணை கொழுப்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றபோதே குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர். பாரத லக்ஷ்மன் மற்றும் வேறு நான்கு பேர்களின் கொலைத்தொடர்பிலான சுருக்க முறையற்ற விசாரணையின்போது உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஷிராணி அபயசேகர நீதிமன்றத்தில் மேற்கண்டவாறு தெரிவித்த…
-
- 0 replies
- 441 views
-
-
படைப்பலத்தை வைத்துக் கொண்டு பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது; அமைச்சர் ராஜித தெரிவிப்பு படைப்பலத்தை வைத்துக்கொண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியாது எனத் தெரிவித்துள்ள கடற்றொழில்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ண, அரசியல் ரீதியான அணுகுமுறைகள் மூலமே பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினை எட்டமுடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். கிளிநொச்சியில் கடந்தவாரம் பூநகரி இரனைமாதா நகரில் கடலுணவு பதனிடல் நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியவை வருமாறு: நாட்டில் நிலவுகின்ற நீண்ட கால பிரச்சினைக்கு அரசியல் வழிமுறைகள் மூலமே நல்ல தீர்வினை காணவேண்டும். லிபியாவில் ஏற்பட்ட கிளர்ச்சியின்போத…
-
- 0 replies
- 461 views
-