ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
22 JAN, 2024 | 05:59 PM பதில் பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதைத் தடுக்குமாறு கோரி கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது. பிரிதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, நீதிமன்றத்தில் தனது வாதங்களை முன்வைத்தார். இந்நிலையில் இந்த மனுவை எதிர்வரும் 31 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்க…
-
- 0 replies
- 212 views
- 1 follower
-
-
பொருட்கள் மீதான பெறுமதி சேர் வரி (VAT) பற்றிய தவறான கருத்துக்கள் வரிசைப்படுத்தப்படாவிட்டால், நாடளாவிய ரீதியில் VAT இல்லா கடைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அனைத்து நுகர்வோர் பொருட்களும் VAT வரிக்கு தகுதியானவை என பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்து நிலவுவதாகவும், அதுவே விலை உயர்வுக்கு காரணம் என்றும் அமைச்சர் கூறினார். VAT இல்லா கடைகளை நிறுவுவதற்கு பொருத்தமான இடங்களை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு (RDA) தெரிவு செய்வதற்கு இது தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். அதனடிப்படையில், போட்டி மற்றும் நியாயமான முற…
-
- 0 replies
- 311 views
- 1 follower
-
-
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு 22 JAN, 2024 | 05:08 PM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுதராதர சாதாரண பரீட்சை - 2023க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கமைய நாளை முதல் எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி முதல் விண்ணப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை பரீட்சாத்திகள் தத்தமது பாடசாலை ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சாத்திகள் தனிப்பட்ட ரீதியிலும் விண்ணப்பிக்க முடியும். இவ்வாண்டிலிருந்து பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் சகல தனிப்பட்ட பரீட்சாத்திகளுக்கும் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை அற்ற 15 வயதுக்குட்பட்ட தனிப்பட்ட பரீட்சாத்திகள் சாதாரணதர பரீட்சைக்கு தோற…
-
- 0 replies
- 268 views
- 1 follower
-
-
22 JAN, 2024 | 02:36 PM அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகந்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சம்பாதித்தமை தொடர்பில் பெண் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் . கைது செய்யப்பட்ட நபர் அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவராவார் என பொலிஸார் தெரிவித்தனர் . இவரிடமிருந்து சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக…
-
- 0 replies
- 391 views
- 1 follower
-
-
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் சிவனொளிபாதமலை சென்று வழிபட்டுள்ளார். இப்பயணத்தின் சிறந்த பகுதி இலங்கையர்களுடனான அன்பான சந்திப்புகள் என குறிப்பிட்டுள்ள ஜூலி சாங் தொலைதூரத்தில் இருந்து பயணிக்கும் இளைஞர்கள் மற்றும் குடும்பங்கள் ஒருவருக்கொருவர் உதவுவதாக அவர் தெரிவித்துள்ளார். தேநீர் அருந்தும் போது இடம்பெற்ற உரையாடல்களும், தமக்கு அவர்கள் காட்டிய கரிசனைகளும் இலங்கையர்களின் மீதான தனது மதிப்பை அதிகரித்துள்ளதாக அவர் தனது உத்தியோகபூர்வ X கணக்கில் பதிவிட்டுள்ளார். https://thinakkural.lk/article/288921
-
- 0 replies
- 463 views
- 1 follower
-
-
அரசியல் கைதி மீது சிறையில் தாக்குதல் ! இலங்கை மத்திய வங்கி குண்டு தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டில் கைதான மொரிஸ் என்பவர் மீது மகசீன் சிறைச்சாலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தாக்குதலுக்கு உள்ளானவரை நேரில் சென்று பார்வைதயிடவுள்ளதாக கூறியுள்ளார். மேலும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை அரசியல் கைதிகளாக அரசாங்கம் உள்வாங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் நடவடிக்கை திருப்தியளிக்கவில்லை என கூறியுள்ள சாண…
-
- 0 replies
- 204 views
-
-
யாழ் நகர்ப் பகுதியிலுள்ள பிரபல்யமான ஆடை விற்பனை நிலையங்கள், கார், மற்றும் வீடுகளை எரித்த குற்றச்சாட்டில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு சூத்தியதாரியைப் பிடிப்பதற்கு இன்டர்போலின் உதவி நாடப்பட்டுள்ளது. யாழ் நகரப்பகுதியில் உள்ள இரண்டு கடைகள் அண்மையில் எரிக்கப்பட்டன. 2 கோடி ரூபா பெறுமதியான பொருள்கள் இதன்போது எரிந்தன . அத்துடன் கார் ஒன்றும் எரிக்கப்பட்டது.மேலும் மோட்டார்சைக்கிள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசில் முறைப்பாடி பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் நேற்று மூன்று பிரதான சந்தேகநபர்களைக் கைதுசெய்தனர். ச…
-
- 8 replies
- 952 views
- 2 followers
-
-
ஒட்டுசுட்டான் உப காவல்துறை பரிசோதகருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் adminJanuary 21, 2024 ஒட்டுசுட்டான் காவல் நிலையத்தில் கடமையாற்றும் உப காவல்துறை பரிசோதகர் காவல் நிலைய பொறுப்பதிகாரியை தவறாக வழி நடத்தி , அப்பகுதி மக்களை வஞ்சித்து வருவதாக , புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஒட்டுசுட்டான் பகுதியில் பண்ணை ஒன்றினை நடாத்தி வருகிறோம். அதேவேளை பண்ணையில் வைத்து நாம் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு உதவிகளையும் செய்து வருகின்றோம். இந்நிலையில் கடந்த 18ஆம் திகதி ஒட்டுசுட்டான் காவல…
-
- 0 replies
- 379 views
-
-
Published By: NANTHINI 22 JAN, 2024 | 11:37 AM நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பல வீடுகளிலுள்ள தொலைப்பேசிகளுக்கு அழைப்பெடுத்து, தம்மை பொலிஸார் எனக் கூறி, ஏமாற்றி பணம் பறிக்க முற்படும் கும்பலொன்று தலைமறைவில் இயங்கி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, முல்லேரியா, நவகமுவ பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு இதுபோன்ற அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் எனக் கூறி பணம் பறிக்க அழைப்பு விடுக்கப்படுவது தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/174499
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
சிறீதரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன் தொடர்ந்தும் ஒற்றுமையாகப் பயணிப்போம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசு தலைவர் பதவிக்கு போட்டியிட்டவருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்றைய தினம் (21.01.2024) இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவில் தோல்வியுற்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இன்றைய தினம் எமது தமிழரசுக் கட்சி உட்கட்சி ஜனநாயகத்தை நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் முன்மாதிரியாக நிகழ்த்திக் காட்டி இருக்கின்றது. இதில் வெற்றி பெற்ற சக வேட்பாளர் மற்றும் எனது நண்பன் சிறீதரனுக்கு எனது ம…
-
- 3 replies
- 838 views
-
-
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை! விடுதலைப் போராட்டத்திற்கு முன்னர் ஈழத்தமிழர்களுக்கு ஆயுதங்களை வழங்கிய இந்தியா தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார மீள்கட்டமைப்பிற்கான ஆயுதங்களையும் தமிழர் தாயகத்திற்கு வழங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை வர்த்தக மையத்தில் இடம்பெற்ற அயலக தமிழர் தின விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைக்காக தொடர்ந்து போராடிவரும் தாம் தமிழக முதல்வரிடமும் அரசியல் பிரமுகர்களிடமும் மேற்படி கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்…
-
- 35 replies
- 2.5k views
-
-
19 JAN, 2024 | 09:20 PM ( எம்.நியூட்டன்) மக்கள் துன்பத்தில் வாடும் நிலையில் அரசியல்வாதிகள் அக்கறையில்லாது இருக்கிறார்கள் என செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி, வரி அதிகரிப்பு தொடர்பாக கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டை ஆள்பவர்களோ, அரசியல்வாதிகளோ ஏழை மக்களை பற்றி கவலைப்படுவதில்லை, கண்ணிரை துடைப்பதற்கோ முன்வருவதில்லை. எதுவாக இருந்தாலும் மனிதனின் அடிப்படை தேவையாகிய உணவு, சுகாதாரம், இருப்பிடம் இவை மூன்றிற்கும் இந்த நாட்டில் கஸ்ரமான சூழல் ஏற்பட்டுள்ளது. பஞ்சம் என்பது வெளிப்படையாக தெரியாவிட்டாலும் ஒருவேளை நல்ல உணவை உண்ண முடியாது தவிர்த…
-
- 1 reply
- 549 views
- 1 follower
-
-
இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு! சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின்கீழ் சர்வதேச கடவுச்சீட்டு இன்று (19) சென்னையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேலும் தெரிவிக்கையில்” வடக்கு கிழக்கை சேர்ந்த இலங்கையர்கள் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவின் பல்வேறு முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இலங்கைக்குத் திரும்புவதாயினும் வெளிச்செல்லும் பாஸ்கள் மாத்திரமே வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டுசென்…
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-
-
20 JAN, 2024 | 01:43 PM காசோலையை வழங்கி 15 மாணிக்கக் கற்களை கொள்வனவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 பெண்கள் உட்பட 6 பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 24, 30 மற்றும் 36 வயதுடைய பேருவளை, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 3 ஆண்களும் 25, 43 மற்றும் 53 வயதுடைய யாழ்ப்பாணம் பிரதேசத்தை சேர்ந்த 3 பெண்களுமாவர். சந்தேக நபர்கள் 15 மாணிக்கக் கற்களை கொள்வனவு செய்து அதற்கான தொகையாக 28,750,000 ரூபாவை பணமாக வழங்குவதற்கு மாறாக காசோலை மூலம் வழங்கியுள்ளனர். ஆனால் வழங்கப்பட்ட காசோலைக்கான பணம் உரிய வங்கிக்கணக்கில் இருந்திருக்கவில்லை. இத…
-
- 1 reply
- 318 views
- 1 follower
-
-
வடக்குக்கான இந்திய ஒத்துழைப்பு தொடரும் ! இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா வை , வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நேற்று இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் , அபிவிருத்தித்திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது ஆளுநரால் இந்திய உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தப்பட்டது. இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவிபுரியும் என தெரிவித்த உயர்ஸ்தானிகர், விசேடமாக வடக்கு மாகாணத்துக்கான ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். https://thinakkural.lk/article/288889
-
- 1 reply
- 330 views
-
-
நாடு இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது - ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஜனாதிபதி சாகல ரத்நாயக்க! எதிர்கட்சிகள் எவ்வகையான விமர்சனங்களை முன்வைத்தாலும் அரசாங்கம் முன்னெடுத்துவரும் புதிய பொருளாதார மறுசீரமைப்புக்களின் பலன்கள் எதிர்காலத்தில் மக்களுக்கு கிடைக்குமென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். நாட்டை முன்னேற்றும் போது சட்டத்தையும் சமாதானத்தையும் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவின் சமூக பொலிஸ் குழுக்களைத் தௌிவூட்டும் வகையில் நேற்று (19) கொழும்பு தாமரை தடாகம் கலையரங்கத்தில் ஏற்பா…
-
- 0 replies
- 269 views
-
-
இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வீதி அபிவிருத்திக்காக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவராக உள்ள பாராளுமன்ற உறுப்பினருக்கு 150 மில்லியன் ரூபாவும் சிறிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 50 மில்லியன் ரூபா கிராமிய அலுவல்கள் அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த சவாலான ஆண்டில் வரும…
-
- 3 replies
- 362 views
- 1 follower
-
-
20 JAN, 2024 | 09:49 AM மாத்தறை, தெவுந்தர கடற்பரப்பில் பெருந்தொகையான போதைப் பொருட்களுடன் இரு படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த இரு படகுகளும் காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகமும் இணைந்தே குறித்த படகுகளுடன் போதைப்பொருள் தொகையை கைப்பற்றியுள்ளன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ஹெரோயின் ரகத்தை சேர்ந்தது என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர். தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 404 views
- 1 follower
-
-
20 JAN, 2024 | 09:26 PM வவுனியாவில் யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக இரு பெண்கள் இன்று (20.01) கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிப்படைந்த யுவதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கழிவு தண்ணீர் மற்றும் வெள்ள நீர் என்பன வீதியில் உள்ள வாய்க்கால் ஊடாக செல்வது தொடர்பில் அப் பகுதியில் உள்ள இரு வீட்டாரிடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது. குறித்த பகுதி வடிகாலமைப்பு சீரற்ற நிலையில் காணப்படுவதாலும், அனுமதியற்ற கட்டிடங்கள் காரணமாகவும் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு குறித்த வீட்டாரால் முறைப்பாடு செய்யப்பட்…
-
- 0 replies
- 342 views
- 1 follower
-
-
தொடரும் பொலிஸாரின் அதிரடி வேட்டை! இன்று (20) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய விசேட நடவடிக்கையின் கீழ் மேலும் 986 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம், போதைப்பொருள் குற்றச்சாட்டில் 667 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 498 கிராம் ஹெரோயின் மற்றும் 143 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 10 பேர் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட உள்ளதுடன், போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட உள்ளனர். மேலும், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 319 சந்தேக நபர்கள் மற்றும் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்…
-
- 0 replies
- 243 views
-
-
பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ஐ.நா அவதானம் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக, தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் பரிசீலனையில் உள்ள, திருத்தப்பட்ட பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது, உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான இலங்கையின் அணுகுமுறையின் அர்த்தமுள்ள சீர்திருத்தத்திற்கான திருப்புமுனையாக இருக்க வேண்டும் என்று பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. முன்மொழியப்பட்ட சட்டமூலம், முன்னதாக இருந்த சட்டத்தை போலவே உள்ளது என்றும் அந்த பேரவை குறிப்பிட்டுள்ளது. இது 'பயங்கரவாதத்தின்' செயல்களை பரந்த அளவில் வரையறுக்கிறது. …
-
- 0 replies
- 214 views
-
-
20 JAN, 2024 | 10:40 AM மின்சார சபையை மறுசீரமைக்கும் சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மின்சார சபையின் மேலும் 51 ஊழியர்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, மின்சார சபையை மறுசீரமைக்கும் சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துக் கொண்ட மின்சார சபையின் 15 ஊழியர்களின் சேவை ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், சேவை இடைநிறுத்தப்பட்டுள்ள மின்சாரசபையின் ஊழியர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. உத்தேச மின்சார சபை சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார சபையின் ஊழியர்கள் கடந்த 03 ஆம் திகதி முதல் மூன்று நாட்கள…
-
- 1 reply
- 285 views
- 1 follower
-
-
நயினை அம்மனுக்கு தங்க குடம் adminJanuary 20, 2024 நயினாதீவு நாக பூசனிஅம்மன் திருக்குடமுழுக்கிற்காக தங்கத்திலான திருக்குடம் ஆலயத்தில் வைத்து செய்யப்பட்டுள்ளது. குறித்த தங்க திருக்குட பவனி இன்றைய தினம் சனிக்கிழமை காலை நடைபெற்று , திருக்குடமுழுக்கிற்காக கங்காதரணி தீர்த்தக் கேணியில் இருந்து தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது. ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 24ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. பிரதிஷ்டா கிரியைகள் கடந்த தினம் புதன்கிழமை ஆரம்பமாகி கிரியைகள் இடம்பெற்று வருகின்றன. நாளை மறுதினம் 22ஆம் திகதி திங்கட்கிழமை காலை 07 மணி முதல் , மறுநாள் செவ்வாய்க்கிழமை மாலை 05 மணி வரை அடியவர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வுகள் இடம்பெறும். அதனை த…
-
- 0 replies
- 235 views
-
-
Published By: RAJEEBAN 19 JAN, 2024 | 05:50 PM இலங்கை அரசாங்கம் தனது உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைமீளாய்வு செய்யவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையின் தற்போது நடைமுறையில் உள்ள மிகவும் ஆபத்தான பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை மாற்றீடு செய்வதற்காக இலங்கையின் நாடாளுமன்றத்தில் தற்போதுஆராயப்பட்டு பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் குறித்து மிகுந்த கரிசனை கொண்டுள்ளோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது இலங்கையின் உள்நாட்டு பாதுகாப்பிற்கான ஒரு அர்த்தமுள்ள சீர்திருத்தமாகயிருக்க வேண்டும். ஆனால் இந்த முன்மொழியப்பட்டுள்ள சட்ட…
-
- 0 replies
- 361 views
- 1 follower
-
-
ஜெனீவாவை திருப்திப்படுத்த இரகசிய திட்டமா? சண்முகம் தவசீலன் குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை விவகாரம் இன மத நல்லிணக்கம் எனும் பெயரில் குருந்தூர் மலையில் இரகசிய கலந்துரையாடல் இன மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து குருந்தூர்மலை ஆலயம் சார்ந்தவர்கள் என சிலருக்கும் , பௌத்தமத குருமார்களுக்கும் இடையில் குருந்தூர் மலையில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குந்தூர்மலை பகுதியில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரை விவகாரம் தற்போது சர்வதேச அளவில் பாரிய பேசுபொருளாக மாறியுள்ளது 2018 ம் ஆண்டு முதல் குந்…
-
- 1 reply
- 460 views
-