ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142904 topics in this forum
-
தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமை குறித்தும் அங்கு மக்கள் அனுபவிக்கும் அவலம் குறித்தும் பிரேசிலின் பெலம் நகரில் தற்போது நடைபெற்று வரும் உலக சமூக ஒன்றியத்தின் எட்டாவது மாநாட்டில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 361 views
-
-
இலங்கையின் தமிழர்கள் மீதான இன அழிப்புப்போரை கண்டித்து பிரித்தானியாவில் நேற்று நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் மீது பிரித்தானிய காவல்துறையினர் தடியடி மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 475 views
-
-
தமிழினத்தின் ஒரே காவலர்களாக விடுதலைப் புலிகளே இருப்பதால், அமெரிக்காவின் புதிய அரசாங்கம் - புலிகள் இயக்கம் தொடர்பான தனது கொள்கையை மறுபரிசீலனை செய்து - தனது பயங்காரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளை நீக்கும் என "ஒபாமாவுக்கான தமிழர்கள்" அமைப்பு நம்புவதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குடியேறியிருக்கும் மற்றும் அமெரிக்காவில் பிறந்த தமிழர்களைக் கொண்ட "ஒபாமாவுக்கான தமிழர்கள்" என்ற அந்த அமைப்பின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் நடைபெற்றுவரும் போரை, விடுதலைப் புலிப் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என சிறிலங்கா சித்தரித்து வருகின்றது. மேற்குலகமும், மேற்குலக ஊடகங்களும் கூட - உண்மையை மறைத்து - …
-
- 5 replies
- 1.1k views
-
-
தமிழகத்தில்.. தியாகி முத்துக்குமாரின் வீரமரணத்துக்குப் பின்னர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான மாணவர்கள் எழுச்சி.. இன்னும் பலம் பெறலாம் என்று கருதிய தமிழக அரசு.. அனைத்துக் கல்லூரிகளையும் மாணவ விடுதிகளையும் காலவரையறையின்றி உடனடியாக மூடுமாறு அறிவித்துள்ளது. 1960 களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டக்காலத்திற்குப் பின்னர் தற்போதே இவ்வாறான ஒரு முடிவை தமிழக அரசு பிறப்பித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தின் போது இந்திய உளவு அமைப்புக்கள் சேகரித்த தகவலின் அடிப்படையிலேயே இந்த முடிவை தமிழக அரசு எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எழுந்த மாணவர் எழுச்சியை அடக்க எடுக்கப்பட்ட முயற்சியாகவே தெரிகிறது. செய்தி ஆதாரம்:…
-
- 3 replies
- 949 views
-
-
இலங்கையில் சிங்களப் பேரினவாதத்தின் தமிழினப் படுகொலையை நிறுத்தக் கோரியும் மரணத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் வன்னி மக்களை காக்குமாறும் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் இன்று மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். சிறிலங்கா படையினரால் வன்னியில் தமிழ் மக்கள் இன அழிப்பு செய்யப்படுவதனைக் கண்டித்து லண்டனில் இன்று மாபெரும் எழுச்சிப் பேரணி தற்போது நடைபெறுகின்றது. இப்பேரணியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் திரண்டு வந்து தமது எழுச்சியை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர். லண்டன் மில் பாங்க் (MILL BANK ) எனும் இடத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் தொடங்கிய இந்த மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நாடாளுமன்ற சுற்று வட்டம் ஊடாக ரெம்பிள் பிளேஸை (TEMPLE PLACE…
-
- 3 replies
- 838 views
-
-
ஈழத்தமிழர்களுக்காக உயிர் நீத்த முத்துக்குமாரின் உடல் தகனத்திற்காக வடசென்னையில் உள்ள மூலக்கொத்தலம் மயானத்திற்கு ஊர்வலமாக கொளத்தூரில் இருந்து கொண்டு செல்லப் பட்டது. 8 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த ஊர்வலத்தில் ஒரு வயது குழந்தை முதல் முதிர்ந்தவர்கள் வரை பலரும் பங்கேற்றனர். இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தலைவர்கள், திரைப்பட படைப்பாளிகள், மாணவர் அமைப்புகள், பெண்கள் இயக்கங்கள், சமுதாய அமைப்புகள், பத்திரிகையாளர்கள் என பலரும் பெருமளவில் பங்கேற்றனர். முத்துக்குமார் உடல் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. பிரபாகரனின் படங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்தி பல்வேறு அமை…
-
- 1 reply
- 1k views
-
-
இன்று உலகெல்லாம் பயங்கரவாதிகள் என ஒதுக்கப்பட்டு, அழைக்கப்பட்டு பதுங்கி ஒதுங்கி இருந்த எம்மவர்கள் பிரித்தானியாவில் வரலாற்று கடமையை செய்து முடித்திருக்கிறார்கள். எமது இன்றைய சரித்திர நிகழ்வை, முக்கிய செய்தியாக ஒலி/ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் ஸ்கை செய்தி ஸ்தாபனத்துக்கு எமது நன்றிகளை தெரிவியுங்கள்.
-
- 10 replies
- 1.3k views
-
-
முத்துக்குமாரின் உடலை தமிழீழம் அனுப்புங்கள் திகதி: 01.02.2009 // தமிழீழம் // [சோழன்] ஈழத்தமிழர்களுக்காக தனது இன்னுயிரை அர்ப்பணித்த வீரத் தமிழ் மகன் முத்துகுமாரின் உடலை தமிழீழத்திற்கு அனுப்புமாறு விடுதலைப் புலிகள் கோரியதாக இன்று நடைபெற்ற முத்துக்குமாரின் இறுதி நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. எனினும், அவரது உடலை அனுப்பி வைக்க முடியாமையால் தமிழீழத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அவருக்கான நடுகல் ஒன்றை அமைப்பதற்கு அவரது வித்துடலின் சாம்பலை அனுப்பி வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இன்று நடைபெற்ற இறுதி நிகழ்வில் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டதுடன், மிக நீண்ட நேரம் இடம்பெற்ற இறுதி ஊர்வலம் நள்ளிரவுக்கு சற்று முன்னதாகவே …
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழக அரசியல் ஒரு பார்வை. தி. மு.க வின் தில்லு முல்லு. காணொளி http://tamiloosai.com/index.php?option=com...1&Itemid=68
-
- 0 replies
- 824 views
-
-
31/01/2009, 22:10 [ வவுனியா நிருபர் கோபி ] செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ அலுவலகம் மீது கைக்குண்டு வீச்சு வவுனியாவில் அமைந்துள்ள ரெலோ செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான அலுவலகம் மீது ஆயுததாரிகள் மேற்கொண்ட கைக்கண்டு வீச்சில் அலுவலகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று சனிக்கிழமை இரவு 8.00 மணியளவில் வவுனியா வைரவன் குளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தமையில் இயங்கிவரும் அலுவலகம் இனம் தெரியாத ஆயுததாரிகளின் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த சமயம அவர் அங்குயிருக்கவில்லை எனவும் இதனால் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை எனவும் தெ…
-
- 0 replies
- 591 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினை-பிப்ரவரி 4 ஆம் தேதி தமிழகத்தில் முழுஅடைப்பு போராட்டம் சென்னை: இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பிப்ரவரி 4 ஆம் தேதி தமிழகத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அப்பாவித் தமிழர்களைப் பாதுகாப்பது தொடர்பாக, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.த…
-
- 0 replies
- 371 views
-
-
மூண்டெழுமா முத்துக்குமார் இட்ட தீ? அவநம்பிக்கையால் நிரம்பிய சூழலிலும் நம்பிக்கையூட்டும் தருணம் எப்போதாவது தோன்றத்தான் செய்கின்றது. ஆயினும் அது தோன்றி மறையும் ஒரு தருணம் மட்டுமா, அன்றி புதியதொரு நிகழ்வுப் போக்கின் துவக்கமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியிருக்கிறது. இப்பதிவை எழுதும் இந்த நேரத்தில் முத்துக்குமாரின் இறுதிப் பயணம் கொளத்தூரிலிருந்து பெரம்பூரைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு அமைப்பினரும் அமைப்பு சாராத தமிழ் உணர்வாளர்களுமாக பல்லாயிரக்கணக்கானோர் காட்டாற்று வெள்ளம் போல் கரை புரண்டு செல்ல, அந்த வெள்ளத்தின் மீது மிதந்து செல்கிறான் முத்துக்குமார். பேரணியின் துவக்கத்தில் பாதையெங்கும் மலர் தூவிச்செல்லும் ஒரு வாகனம். அதனைத் தொடர்ந்து எம…
-
- 6 replies
- 1.4k views
-
-
தாய் தமிழகத்தில் இருந்து ஒருமடல். உலகத்தமிழினமே, நாம் எண்ணிப்பார்க்கவேண்டிய எங்கள் எரியும் நினைவுகளுக்கு எண்ணெய் ஊற்ற வேண்டியதருணம் இது என்பதை நம்மவரில் ஒருவனான வீரத்திருமகன் முத்துக்குமார் உணர்த்திவிட்டுச்சென்றிருக்
-
- 1 reply
- 742 views
-
-
NESHOR அமைப்பினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களை அத்தளத்தில் பார்வையிடலாம். http://www.nesohr.org/
-
- 0 replies
- 735 views
-
-
அப்பாவித் தமிழர்கள் புலிகளின் பகுதியிலிருந்து விலகி, ‘பாதுகாப்பான பகுதி’ என அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு வர இலங்கை அரசு 48 மணி நெர கெடுவை விதித்துள்ளது. இந்தக் கெடு இன்று மாலையுடன் முடிவடைகிறது. ஆனால் இந்த கெடுவை ஏற்று அரசுப் பகுதிக்கு வர மக்களிடையே முழு ஆதரவு இல்லை. மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான தமிழர்களே இடம் பெயர்ந்துள்ளனர். மற்றவர்கள் வரவில்லை. இந்த நிலையில், 48 மணி நேர கெடு முடிந்ததும் ராணுவம் மீண்டும் தாக்குதலைத் தொடங்கும் என இலங்கை வெளியுறவு அமைச்சர் பலித கொஹனா எச்சரித்துள்ளார். இதனால் இரண்டரை லட்சம் தமிழர்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. ராணுவம் நடத்தப் போகும் கடும் தாக்குதலில் சிக்கி பெருமளவில் உயிரிப்பு ஏற்படும் அபாயமும் அதிகர…
-
- 1 reply
- 676 views
-
-
தமிழீழ மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க இந்திய அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு மதுரையைச் சேர்ந்த தமிழரான ரவி நேற்று தன்னையே எரியூட்டிக்கொண்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 552 views
-
-
சொதுகுக http://www.isaiminnel.com/index.php?option...7&Itemid=45
-
- 0 replies
- 782 views
-
-
சொடுகுக http://www.isaiminnel.com/index.php?option...6&Itemid=45
-
- 0 replies
- 1.2k views
-
-
நிரந்தரமான போர்நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டு அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்தும் படி அனைத்துத் தரப்பினரிடமும் மீண்டும் வேண்டுவதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. வன்னியல் எமது மக்கள் உணவு மருத்துவம் வாழ்விடம் என்பனவின்றி பெருந் துன்பத்திற்குள்ளாகியிருக்க
-
- 0 replies
- 421 views
-
-
ஈழத்தமிழர்களுக்காக நேற்று முன் தினம் சென்னையில் தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் சென்னை கொளத்தூரில் உள்ள அவரது வீட்டில் ஆரம்பமாகிவிட்டது. கொளத்தூரில் இருந்து மூலக்கொத்தளம் என்கிற இடத்துக்கு இந்த ஊர்வலம் 2 மணி நேரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இதில் பெண்களும், மாணவர்களுமே பெரும் பங்கேற்றுள்ளனர். 3கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் பங்கெடுத்துள்ள இந்த இறுதி ஊர்வலம் நீண்டுள்ளது. ஊர்வலத்தின் வழிநெடுகிலும் பொதுமக்கள் தண்ணீர் பந்தல், மோர் பந்தல் அமைத்து ஊர்வலத்தில் பங்கெடுத்துள்ள தமிழுணர்வாளர்களுக்கு தாகம் தீர்க்கின்றனர். முத்துக்குமார் உடல் செல்லும் வாகனத்தில் இயக்குநர் அமீர் அமர்ந்துள்ளார். …
-
- 4 replies
- 1.3k views
-
-
நெதர்லாந்து வெளிவிவகாரத்துறை அமைச்சின் முன்பாக தமிழர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் [சனிக்கிழமை, 31 சனவரி 2009, 08:10 பி.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] இலங்கையில் உடனடியாக போரை நிறுத்தி தமிழ் மக்களை பேரழிவில் இருந்து காப்பாற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி நெதர்லாந்து வெளிவிவகாரத்துறை அமைச்சின் முன்பாக முன் அனுமதி எதுவும் பெறாது திடீரென தமிழர்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். த கேக் நகரில் உள்ள வெளிவிவகாரத்துறை அமைச்சின் முன்பு இன்று சனிக்கிழமை காலை பெருந்திரளான தமிழர்கள் எழுச்சியுடன் ஒன்றுகூடியதனை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். நூற்றுக்கணக்கான இளையோர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தகவல் அறிந்து பெருமளவிலான தமிழ் மக்கள்…
-
- 0 replies
- 470 views
-
-
வீரத் தமிழ் மகன் முத்துகுமரனின் இறுதி ஊர்வலம் இடை நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள்இ விடுதிகளை காலவரையின்றி மூடச்சொல்லி அரசு உத்தரவிட்டதை தொடர்ந்துஇ மாணவர்கள் முத்துகுமாரின் உடலை தகனம் செய்ய மறுத்து இறுதி ஊர்வலத்தை பாதியிலேயே நிறுத்தி உள்ளனர். அரசு உத்தரவை வாபஸ் வாங்க சொல்லி மாணவர்கள் சாலையில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். மதுரை அருகே இன்று இரவு ஈழ தமிழர் படுகொலையை கண்டித்து ரவி என்பவர் தீக்குளித்துள்ளார். இதனை விபத்து என்று திசை திருப்ப முயன்றதை விடுதலை சிறுத்தை அமைப்பினர்இ மற்றும் ரவியின் மகன் 'பிரபாகரன்' மறுத்து ரவியின் தீக்குளிப்பிற்கான உண்மை காரனத்தை வெளிப்படுத்துயுள்ளனர். தமிழக தொலைக்காட்சிகள் முத்துகுமாரின் ஊர்வலம் மற்றும் அதனால…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கை பிரச்னையில் அரசியல் தீர்வு காண மத்திய அரசு தொடர்ந்து முயற்சி எடுக்கும் என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி எழுதியுள்ள கடிதத்தில் உறுதியளித்துள்ளார். இந்தக் கடிதத்தை சட்டப்பேரவையில் நேற்று அமைச்சர் அன்பழகன் வாசித்து காட்டினார். அந்த கடிதத்தின் விவரம் வருமாறு: "நீங்கள் (கருணாநிதி) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சில உடல் பரிசோதனைகளையும், சிகிச்சைகளையும் மேற்கொண்டு வரும் செய்தி அறிந்து வருத்தமுற்றேன். இது சிறிய அளவிலான பிரச்னையாக இருக்கவேண்டுமென்றும், நீங்கள் விரைவில் குணம் அடைவீர்கள் என்றும் நம்புகிறேன். இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் உங்களது ஆதரவுக்கரம் எங்களுக்குத் தேவை. கொழும்பில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் கடந்த…
-
- 1 reply
- 813 views
-
-
இலங்கை நிலைமை பெரும் வேதனையளிக்கின்றது : அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வீரகேசரி இணையம் 1/31/2009 11:25:31 AM - இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்தம் பெரும் வேதனையளிப்பதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து அமெரிக்கா பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் விரைவில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தக் கூடிய ஓர் சூழ்நிலை வெகுவிரைவில் உருவாகும் எனத் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பதில் ஊடகப் பேச்சாளர் ரொபர்ட் வூட் தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மீதும்,…
-
- 4 replies
- 1.3k views
-
-
தமிழகத்தில் இன்று முத்துக்குமாரின் இறுதி நிகழ்வுகள் கொளத்தூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், மதுரையில் இன்னொரு இளைஞர் தீக்குளித்துள்ளார். பள்ளிப்பட்டு என்ற இடத்தைச் சேர்ந்த ரவி என்ற இளைஞரே ஈழத் தமிழ் மக்களுக்கு நீதியும் சமாதானமும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தீக் குளித்ததாக தெரியவருகின்றது. எனினும் இதுதொடர்பான மேலதிக தகவல்கள் எதனையும் அறிந்து கொள்ள முடியவில்லை. இது இவ்வாறிருக்க, இன்று கொளத்தூரில் வீரத் தமிழ்மகன் முத்துக்குமாரின் இறுதி நிகழ்வுகள் பெரும் எழுச்சியுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற
-
- 0 replies
- 1.2k views
-