Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னியில் மாவீரர்களின் பெற்றோர்கள் மதிப்பளிப்பு [வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008, 11:54 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னிப்பெரு நிலப்பரப்பில் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் நேற்று முன்நாள் நடைபெற்றன. விசுவமடு மேற்கு மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று முன்நாள் புதன்கிழமை நடைபெற்றது. விசுவமடு மகாவித்தியாலய முதல்வர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை போராளி பிரதீப் ஏற்றினார். தமிழீழ தேசியக் கொடியினை “சுதந்திரப் பறவைகள்” ஏட்டின் ஆசிரியர் தமிழவள் ஏற்றினார். மாவீரர்களின் பொது திருவுருவப்படத்திற்கு விசுவமடு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் செம்மண்ணன் சுடரேற்றி, மலர்மாலையினை சூட்டினார்.…

  2. எட்னா தயாரிப்புகள் மீதான தடையை நீக்கியது நீதிமன்றம் - அவற்றில் மெலமைன் இல்லையாம் [22 நவம்பர் 2008, சனிக்கிழமை 3:05 மு.ப இலங்கை] ‘எட்னா’ நிறுவனத் தயாரிப்பான சொக்லேட்டுகளிலோ, அந்நிறுவனம் பயன்படுத்தும் பால் வகைகளிலோ ‘மெலமைன்’ என்ற விசப் பதார்த்தம் இல்லை என சுகாதார அமைச்சு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியது. இதனை அடுத்து, இதற்கு முன்னர் ‘எட்னா’ நிறுவனத்துக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விடுத்திருந்த தடை உத்தரவுகளை கொழும்பு மேல் நீதிமன்றம் இரத்துச் செய்து கட்டளையிட்டது. நுகர்வோர் விவகார அதிகாரசபை சமர்ப்பித்த மனு ஒன்றைக் கவனத்தில் எடுத்த கொழும்பு நீதிவான் நீதிமன்றம், அதன் அடிப்படையில் ‘எட்னா’ சொக்லேட் உற்பத்தி நிறுவனத்தின்…

  3. யாழ்ப்பாணம், தென்மராட்சியிலுள்ள கிளாலி, விடத்தல்பளை, கொடிகாமம், கச்சாய், எழுதுமட்டுவாள் போன்ற பகுதிகளில் சிறீலங்கா படையினர் நேற்று வியாழக்கிழமை பாரியதேடுதல் ஒன்றை மேற்கொண்டனர். இதன்போது பொதுமக்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை எனினும் படைச்சீருடையில் அப்பகுதியில் யாரையும் அவதானித்தீர்களா என மக்கள் படையினரால் கடுமையாக விசாரணை செய்யப்பட்டதாக, தென்மராட்சிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். கடந்த சில நாட்களாக முகமாலை, கிளாலி முன்னரங்கில் வன்னி நோக்கி முன்னேற முற்பட்ட படையினரை எதிர்த்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட சமரில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் படையினருக்கு பெரும் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளன. இந்த வேளையில் விடுதலைப் புலிகளின் அணிகள் முன்னரங்க நிலைகள் ஊடா…

  4. முகமாலை,கிளாலி பிரதேசங்களில் பாதுகாப்பு படையினருக்கும் புலிகளுக்குமிடையே நேற்று இடம்பெற்ற மோதலில்களில் மட்டும் 250 படை வீரர்கள் கொல்லப்பட்டரென குருநாகல் மாவட்ட ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். மோதலின் போது காயமடைந்த படையினர் அநுராதபுரம், கொழும்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆஸ்பத்திரிகளில் இவர்களுக்கு இடம் வழங்கும் வகையில் அங்கு ஏலவே தங்கிச் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனரெனவும் அவர் கூறினார். http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58

  5. ராஜபக்ஷே பிரதர்ஸ்! இலங்கையை இயக்கும் டீம்! நவம்பர் மாதத்தை மகிந்தா ராஜபக்ஷேவால் மறக்க முடியாது. அவர் பிறந்த மாதம், அவர் இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மாதம். உறக்கத்திலும் விழிப்பிலும் அவர் நெஞ்சில் நிழலாடும் பிரபாகரன் பிறந்த மாதமும் இதுவே! 64-வது பிறந்த நாளை இந்த 19-ம் தேதி கொண்டாடுகிறார் இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியான மகிந்தா ராஜபக்ஷே! லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டும் அங்குள்ள முக்கிய கட்சிகள். இப்போதைய ஜனாதிபதி மகிந்தாவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும், லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள். சந்திரிகாவின் அப்பா பண்டாரநாயகாவும் மகிந்தாவின் அப்பா ராஜபக்ஷேவும்தான் அந்தக் கட்சியை ஆரம்பித்தவர்கள். நம்மூர் நெடுஞ்செ…

  6. வன்னிக்கான உணவு, மருந்து மற்றும் எரிபொருட்களை தடுத்து மனித அவலத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ள சிறிலங்கா அரசை அம்பலப்படுத்தும் பேரணிகள் இன்று வன்னியில் நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 692 views
  7. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மகிழவெட்டுவானில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் காவலரண் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 584 views
  8. நொச்சியாகம ராணுவப்பயிற்சி முகாமில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 2 படையினர் கொல்லப்பட்டு 12 படையினர் காயமடைந்துள்ளதாக ராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். படையினருக்கான பயிறிசிகளை வழங்கும் லிண்டவேவா முகாமில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலதிக விபரங்கள் விரைவில்..... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

    • 2 replies
    • 1.4k views
  9. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் கருணா குழுவினரால் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக

  10. வவுனியா சாந்த சோலைப் பிரதேசத்தில் ஒருவர் கொலை - (படம் இணைப்பு) http://www.globaltamilnews.net/tamil_news....=2431&cat=1 வவுனியா சாந்த சோலைப் பிரதேசத்தில் இன்று காலை இனம் தெரியாத நபர்களினால் இளஞர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டு இருப்பதாக வவுனியா காவற்துறையினர்; தெரிவித்துள்ளனர். இந்த சடலம் வவுனியா பொது மருத்துவ மனையின் சவச்சாலையில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம் பெற்ற இடத்திற்கு சென்ற வவுனியா மாவட்ட நீதவான் UP அலக்ஸ் ராஜா விசாரனைகளினை மேற் கொண்டதுடன் அவ்விடத்தில் இருந்த தடயப் பொருட்களை வைத்து விசாரனைகளினை மேற் கொள்ளுமாறு வவுனியாக் காவற்துறையினருக்கு உத்தரவு இட்டுள்ளார். கொல்லப்பட்ட நபர் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட…

  11. பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைக்கும் போது, ஆங்கிலத்தில் தேர்ச்சி அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது : http://www.globaltamilnews.net/tamil_news....d=2430&cat= பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்து கொள்ளும் போது, ஆங்கிலத்தில் சாதாரண சித்தி அல்லது இரண்டாம் மொழியை கட்டாயமாக்குமாறு அகில இலங்கை ஆங்கில ஆசிரியர்கள் சங்கம் உயர்கல்வி அமைச்சர் விஸ்வா வர்ணபாலவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. உலகில் பல நாடுகளில் உயர்கல்விக்கு இரண்டாம் மொழி முக்கியம் என கருதப்பட்ட போதும் இலங்கையில் அவ்வாறான நிலைமை இதுவரை ஏற்படவில்லை என ஆங்கில ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.ஏ ஸ்டென்லி பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார். தாய் மொழியில் உயர்கல்வியை கற்கமுடியுமா என்பதை அறிய உடனடியாக …

  12. இலங்கையில் இடம்பெற்று வரும் அப்பாவி தமிழர்களின் கொலைகளை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக தலையிட வேண்டும் எனக் கோரி மலேசியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் இன்று மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. ஜனசக்தி வாசகர் இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த மகஜர் கையளிக்கப்பட்டது. கோலாலம்பூர் டம்மான்சார, ஜாலான் செமெந்தானில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அப்பாவி தமிழர்களை கொல்வதும் அவர்களை துன்புறுத்துவதுமே இலங்கை அரசாங்கத்தின் குறிகோளாக உள்ளது. கடந்த 1975 ஆண்டு முதல் கடந்த 33 வருடங்களாக இந்த இன்னல்களை இலங்கை தமிழர்கள் அனுபவித்து வருவதாகவும் பல நாடுகளின் உதவியுடன் இந்த அழிவுகள் நடைபெறுவதாகவும் எனின…

  13. நன்றி தமிழ்நாதம்

  14. வன்னியில் இருந்து நோயாளர் காவு வாகனத்தினை ஓமந்தை சோதனை நிலையம் ஊடாக வவுனியாவுக்கு நேற்று செல்வதற்கு சிறிலங்கா படையினர் அனுமதி மறுத்ததன் காரணமாக இரண்டு நாளே ஆன பச்சிளம் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  15. மன்னாரின் நிலவரம் மிகுந்த கவலையைத் தோற்றுவித்துள்ளது - செல்வம் அடைக்கலநாதன் மன்னாரின் தற்போதைய நிலவரம், மிகுந்த கவலையை தோற்றுவித்திருப்பதாக தெரிவித்து அது தொடர்பான பத்திரிகை செய்தி அறிக்கை ஒன்றினை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கை வருமாறு:- மன்னாரில் சமீப காலங்களாக இலங்கை ராணுவத்தினர் தமது செயற்பாட்டை முழு அளவில் விஸ்தரித்திருக்கின்றனர். தினமும் சுற்றிவளைப்புக்கள், தேடுதல்கள், கைதுகள் என்பன தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. அத்துடன் நாள்முழுவதும் ஜந்து உந்துருளிகளில் 10 ராணுவத்தினர் முகத்தை மறைத்துக் கொண்டு தலைக்கவசம் அணிந்த நிலையில் அதிவேகமாக மன்னார் நகரின் பிரதான வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதி வீதிகளி…

    • 0 replies
    • 868 views
  16. மேலதிக சிகிச்சைக்காக செல்லும் நோயார்களை திருப்பியனுப்பும் சிறிலங்கா படை [வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008, 11:47 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மருத்துவமனைகளில் இருந்து வவுனியாவுக்கு நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லும் நோயாளர் காவு வாகனங்களை சிறிலங்கா படையினர் திருப்பியனுப்பும் அவலம் தொடர்கின்றது. முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மருத்துவமனைகளுக்குரிய நோயாளர் காவு வாகனங்களை மூன்று நாட்களாக வவுனியாவுக்கு செல்லவிடாது ஓமந்தையுடன் திருப்பி அனுப்பிய சிறிலங்கா படையினர், நேற்று முன்நாள் நோயாளர் வாகனங்களை வவுனியாவுக்கு செல்ல அனுமதியளித்த போதிலும் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கு அனுமதிக்கவில்ல…

    • 0 replies
    • 523 views
  17. இரு தரப்பினரதும் இணக்கப்பாட்டுடன் ஓர் சோதனைச் சாவடி அமைக்கப்பட வேண்டும் - ICRC: http://www.globaltamilnews.net/tamil_news....d=2426&cat= இரண்டு தரப்பினரதும் இணக்கப்பாட்டுடன் ஓர் சோதனைச் சாவடி அமைக்கப்பட வேண்டும் என சர்தேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் சிவிலியன் பாதுகாப்பை உச்ச அளவில் உறுதிப்படுத்தக் கூடிய ஓர் பாதை குறித்து உத்தரவாதமளிக்க வேண்டும் என அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக அம்பியூலன்ஸ்கள், உணவு நிவாரணப் பொருள் கொல்கலன்கள், மோதல்களில் உயிரிழந்தவர்களின் சடல பரிமாற்றம் போன்றவற்றுக்கு பாதுகாப்பான ஓர் சோதனைச் சாவடி அவசியம் என சர்தேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக் கிளைத் தலைவர் போல் …

  18. ரெலோ இயக்க உறுப்பினர் ஒருவர் வெள்ளை வானில் சென்றவர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்: http://www.globaltamilnews.net/tamil_news....d=2427&cat= வவுனியாவில் ரெலோ இயக்க உறுப்பினர் ஒருவர் நேற்று வெள்ளை வானில் சென்றவர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வவுனியா கற்குழியிலுள்ள வீட்டுக்கு வெள்ளை வானில் சென்றவர்கள் இவரை கடத்திச் சென்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. சுப்பிரமணியம் கணேசலிங்கம் என்ற உறுப்பினரே இவ்வாறு கடத்தப்பட்டவராவார். இது குறித்து ரெலோ அமைப்பின் தலைவரும் வன்னி மாவட்ட எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கடித மூலம் அறிவித்துள்ளார். அதில் தமது இயக்கத்தின் உறுப்பினரான சுப்பிரமணியம் கணேசலிங்கம் …

  19. U.N மற்றும் ICRC தவிர்ந்த ஏனைய தொண்டு நிறுவனங்கள் இலங்கைக்கு பிரவேசிப்பது தடை செய்யப்படவேண்டும் - கோத்தபாய: http://www.globaltamilnews.net/tamil_news....d=2424&cat= ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தவிர ஏனைய அரசசார்பற்ற நிறுவனங்கள் இலங்கைக்கு வருவது தடைசெய்யப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பல வருடங்களாக வடக்கில் பணியாற்றிய அரசசார்பற்ற நிறுவனங்களை சேர்;ந்த சுமார் 3 ஆயிரம் உறுப்பினர்கள் வடக்கில் எந்த அபிவிருத்தி பணிகளையும் மேற்கொள்ளவில்லை, எனினும் இவர்கள் சர்வதேச ரீதியில் இலங்கை தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பர…

  20. இந்திய மத்திய மாநில அரசைக் கண்டித்து ஈழத்தமிழருக்கு ஆதரவாக உடல் வலுக்குறைந்தோர் தமிழ்நாடு எங்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 874 views
  21. சிறிலங்காவின் தலைநகரில் கடந்த வாரத்தில் மட்டும் 5 தமிழ் இளைஞர்கள் கடத்தல் [வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008, 09:50 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐந்து தமிழ் இளைஞர்கள் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை, மட்டக்குளிய, வத்தளை, நீர்கொழும்பு ஆகிய தமிழர்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களிலேயே இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதியால் சென்று கொண்டிருக்கும்போது அல்லது வீதியால் சென்று கொண்டிருக்கும்போது வெள்ளை வானில் வரும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் கடத்தி செல்வதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். புதினம…

    • 0 replies
    • 532 views
  22. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணத்தை மத்திய வங்கி அரசுடமையாக்கியுள்ளது : http://www.globaltamilnews.net/tamil_news....=2320&cat=1 தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணத்தை மத்திய வங்கி அரசுடமையாக்கி உள்ளதாக மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 71 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை இலங்கை மத்திய வங்கி முடக்கி வைத்திருந்தது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் குறித்த அமைப்பு விடுதலைப் புலிகளுக் ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை புலனாகியுள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சந்தேகத்தின் பேரில் முடக்கி வைக்கப்பட்டிருந்த சுமார்…

  23. பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் - மங்கள: http://www.globaltamilnews.net/tamil_news....d=2417&cat= நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்தி ஆட்சியினை மீண்டும் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று சிறி லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவரும் எம்.பி.யுமான மங்கள சமரவீர தெரிவித்தார். இந்தியாவின் அழுத்தம் காரணமாக யுத்த நிறுத்தத்தை அறிவிப்போமென அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால் வரவேற்போம். வெறுமனே அரசியல் இருப்புக்காக எமது படையினர் உயிர்த் தியாகம் செய்கின்றனர் என்றும் அவர் மேலும் கூறினார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.