ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143671 topics in this forum
-
இலங்கை பிரச்னையில் குலுங்கிய இங்கிலாந்து! இலங்கைத் தமிழர்களைக் காப்பதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயார்' என்று அறிவித்ததோடு நிற்காமல் தமிழ்நாட்டின் உணர்வை உலகுக்கு எடுத்துக்காட்ட 'தமிழர் சங்கிலி' போராட்டத்துக்கும் வழி வகுத்தார் தமிழக முதல்வர். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, முதலில் அதை மத்திய அரசேகூட சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் வெளியுறவுத்துறைச் செயலாளரை விட்டு இலங்கைத் தூதரிடம் பேசச் சொன்னார்கள். தி.மு.க. இந்த விஷயத்தில் உறுதியாக இருக்கிறது என்பது மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் கொடுத்ததற்குப் பிறகுதான் மத்த…
-
- 0 replies
- 2.5k views
-
-
வன்னிக்களமுனையில் பின்புல மற்றும் வான் சூட்டாதரவுடன் படையினர் மேற்கொண்டுள்ள பெரும் ஆறு முனையிலான முன்நகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல் நடத்தி முறியடித்துவருவதாகவும் இதில் படையினருக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளாகவும் களமுனை தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான படையினரின் இந்த ஆறு முனை முன்நகர்வு முயற்சிக்கு எதிராக இன்று திங்கட்கிழமை காலை வரை தமிழீழ விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல் நடத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் இதுவரை 33 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் இலங்கை படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இந்த மோதல்களில் சுமார் 60க்கும் மேற்பட்ட படையினர் கொ…
-
- 15 replies
- 5.2k views
- 1 follower
-
-
பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராதாகிருஸ்ணன் கூறியிருக்கும் கருத்துக்கள் இவைகள். பாஜகவை ஈழ ஆதரவுக் கட்சியாக சித்தரிக்க முனைந்த யாழ் கள உறவுகள் கட்டாயம் இதைப் படித்து தெளிவு பெற வேண்டும். திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு மாற்றாக அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். இதில் பாஜகவும் இடம் பெற வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். இந்த கூட்டணியில் தேமுதிகவும் இணைய வேண்டும். தற்போது நிலவும் விலைவாசி உயர்வு, மின் வெட்டு, போன்ற பிரச்சனைகளை திசை திருப்பவே இலங்கை தமிழர் பிரச்சனையை திமுக கையில் எடுத்துள்ளது. இலங்கையில் ஈழ தமிழர்களின் போராட்டம் பின்னடைவுக்கு விடுதலைப் புலிகளே காரணம். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாசிச போக்கு தான் இந…
-
- 14 replies
- 3.2k views
-
-
கொழும்பு பங்குசந்தை சரிவில் வீரகேசரி இணையம் 10/20/2008 12:55:10 PM - கொழும்பு பங்குசந்தை நடவடிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அனைத்து பங்குகள் விலைச்சுட்டெண் 30 புள்ளிகளால் வீழ்ச்சி அடைந்துள்ளது.
-
- 3 replies
- 1.4k views
-
-
ஈழததமிழர் குறித்த தமிழக மக்களின் அக்கறையுணர்வுகள் அபரிமிதமாக வெளிப்பட்ட போதும், இந்திய மத்திய அரசின் செயற்பாடுகளில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆயினும், இந்தியாவைச் சீண்டிப் பார்க்கும், நகர்வுகளிலும், சினங்கொள்ள வைக்கும் வார்த்தைகளை உரைப்பதிலும், சிங்கள அரசுசார்ந்தோர் ஆளாளுக்கு, அள்ளிக்கொட்டுகின்றார்கள். இந்தியாவின் இந்த மெளனம் ஏன்?, இந்தியாவின் இந்தத் தயக்கம் ஏன், என்பது பலரிடத்திலும் உள்ள கேள்வி. கேட்டோம், தமிழகத்தில் , தமிழீழமக்களின் விடுதலையை நேசிக்கும் சக்திகளில் ஒன்றான தொல்.திருமாவளவன் தலைமையிலான விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் மாநிலச் செய்தித் தொடர்பாளர், வழக்கறிஞலர் ஆர்வலனிடம் கேட்டோம். ஆச்சிரியம் தந்தது அவர் பதில். காரணம், தமிழீழ விடுதலையை நேசிக்கும் சக்திகள்…
-
- 0 replies
- 1.6k views
-
-
பல ஆண்டுகளாக ஈழத்திலே மண்ணின் மைந்தர்கள் சிங்கள அரச பயங்கரவாதிகளால் கொல்லப்படுவதை ஒரு முறை கூட கண்டிக்காத இங்குள்ள பார்ப்பன சிங்கள அரசின் கைக்கூலியான இந்திய மார்க்சிசுடு கம்யூனிசு கட்சியானது ஈழத்தமிழர் போராட்டத்தினையும் . தமிழர்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்துவதையே தொழிலாக கொண்ட இந்து பத்திரிக்கையினை கண்டித்து தமிழர்கள் போராட்டம் நடத்தியதை CPI(M) ¸கட்சியின் மாநிலக்குழு கண்டிக்கிறது. பெரியார் தி.க. மற்றும் ஏனைய தமிழ் அமைப்புகள் எல்லாம் சமூக விரோத அமைப்புகளாம் பகுத்தறிவைப்பரப்பும் பெரியாரியவாதிகள் காட்டுமிராண்டிகளாம். நம் நாட்டில் தமிழர்க்கு எதிரி பார்ப்பனர்கள்( cpi(m) , rss பிரிவுகள்) தமிழீழத்திலே தமிழர்களுக்கு எதிரிகள் சிங்களவர்கள் இரண்டு பார்ப்பனியர்களையும்…
-
- 1 reply
- 2.3k views
-
-
தமிழர்கள் எரிமலையாக கிளம்பிவிட்டனர் என்று நேற்று மாலை சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் "பற்றி எரிகிறது தமிழ் ஈழம்" என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புப் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார் அவர் தமது உரையில் குறிப்பிட்ட முக்கிய செய்தி வருமாறு: தமிழர்கள் உள்ளத்தால் அனைவரும் ஒருவரே என்ற உணர்வில் நாம் கூடியிருக்கின் றோம். பெரியார் திடலிலி ருந்து எந்தப் பிரகடனம் புறப் பட்டாலும் அது எல்லா இடங் களுக்கும் போய்ச் சேர்ந்து வெற்றி வாகை சூடும். ஈழத்திலே இன்றைக்கு எப்படிப்பட்ட கொடுமைகள் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன? சிங்களவர்களின் கொடுமை, கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் …
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் - பிரான்சு 20.10.08 ஊடகச் செய்தி லெப் கேனல் தவம் குறும்படவிழா பிரான்சு Festival de court-metrage 2008 France லெப். கேணல் தவம் நினைவாக தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் - பிரான்சு நடாத்திய குறும்படவிழா 19.10.08 அன்று பரிசில் சிறப்பாக நடைபெற்றது. லெப். கேணல் தவம் திருவுருவப்படத்துக்கான ஈகைச்சுடரை போட்டியின் தலைமை நடுவர் திரு. ஆதவன் அவர்கள் ஏற்றி வைக்க மலர் மாலையினை கலைபண்பாட்டுக் கழக பிரான்சின் செயற்பாட்டாளர் திரு.பரா அவர்களும் அணிவித்தார். புலம்பெயர்ந்து இலங்கை இந்தியா தவிர்ந்த ஏனைய நாடுகளில் வாழும் கலைஞர்களின் குறும்படங்கள் கலந்து கொண்ட இவ்விழாவின் நடுவர்களாக திரு. மாணி. நாகேஸ், திரு. கி.பி. அரவிந்தன், திரு. ஆதவன் ஆகியோர் …
-
- 4 replies
- 2.1k views
-
-
வன்னியில் இடம் பெயர்ந்தோர் நிலவர அறிக்கை http://www.tamilnaatham.com/pdf_files/2008...ot_20081022.pdf
-
- 0 replies
- 889 views
-
-
எந்தவொரு நாட்டின் இனப்பிரச்சினையும் இராணுவ ரீதியாக தீர்க்கப்பட்டதாக சரித்திரம் இல்லை என இந்தியாவின் பிரபல எழுத்தாளரும், முன்னாள் உயர்பாதுகாப்பு அதிகாரியுமான கேணல் அனில் அதலே தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் செவ்விந்திய பழங்குடியினர் மொத்தமாக இனப்படுகொலை செய்யப்பட்டதனைப் போன்று துரதிஸ்டமான முடிவுகள் மட்டுமே இராணுவ தீர்வின் மூலம் எட்டப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த நடவடிக்கைளின் மூலம் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே காரணம் என குற்றம் சுமத்துவது அடிப்படையற்றதென அவர் தெரிவித்துள…
-
- 0 replies
- 1.6k views
-
-
நெருக்கடிகளுடன் "இடம்பெயர்ந்த" பாடசாலைகள் [செவ்வாய்க்கிழமை, 21 ஒக்ரோபர் 2008, 08:24 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] பருவ மழை தொடங்கியிருப்பதன் காரணமாக இடம்பெயர்ந்த பாடசாலைகள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக கிளிநொச்சி வலய கல்விப்பணிப்பாளர் த.குருகுலராஜா கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: கடும் மழை பொழிய தொடங்கியிருக்கின்றது. இடம்பெயர்ந்த பாடசாலைகள் ஒரு ஒழுங்குக்கு வரும் முன்னரே மழை தொடங்கியிருக்கின்றது. இதன் காரணமாக மாணவர்கள் பெரும் இடர்களை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக க.பொ.த. சாதாரண தேர்வுக்கு தோற்றுகின்ற மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாத இடர் உள்ளது. இடம்பெயர்ந்து உள நெருக்கீட்டிற்கு உள்ளாகியிருக்கும் மாணவர்கள் மத்தியில் உ…
-
- 0 replies
- 573 views
-
-
இலங்கைத் தமிழர் படுகொலை விவகாரம்: இந்திய நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு [செவ்வாய்க்கிழமை, 21 ஒக்ரோபர் 2008, 08:14 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் ஆவேசத்துடன் கோரிக்கை எழுப்பியதால் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்கள் எழுப்பியதை தொடர்ந்து சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை கூடியதும், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் முக்கிய அங்கம் வகிக்கும் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செ…
-
- 0 replies
- 857 views
-
-
புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள் – சமுதாய இயக்கத் தலைவர்கள் கடந்த 17-10-2008 அன்று, புதுச்சேரி முதல்வர் வி.வைத்திலிங்கம் அவர்களைச் சந்தித்து இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். மேலும், புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தில் ‘இலங்கை அரசு ஈழத் தமிழர்கள் மீதான போரை உடனடியாக நிறுத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும், இலங்கைக்கு ஆயுத உதவி உள்ளிட்ட இராணுவ உதவிகள் வழங்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்’ உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரியிருந்தனர். இந்நிலையில், இன்று (20-10-2008) கூடிய புதுச்சேரி சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக சட்டமன்றத்தில் தி.…
-
- 0 replies
- 822 views
-
-
நேற்று மாலை கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு சிங்களவெறியன் இராசபக்சேவுடன் சேர்ந்து கொண்டு தமிழர்களை கொன்றுகுவிக்கும் அமெரிக்க கைக்கூலி மன்மோகன்சிங்கைக் கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது http://www.tamilseythi.com/tamilnaadu/koovai-2008-10-21.html அசுரன்
-
- 0 replies
- 827 views
-
-
மட்டக்களப்பில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக விசேட செய்தியாளர் தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு காத்தான்குடி காவற்துறைக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் என்னும் இடத்தில் இலங்கை நேரப்படி மாலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 0 replies
- 959 views
-
-
இலங்கைப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. பல போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்த் திரையுலக தமிழ் இன உணர்வுக்குழு சார்பில் ராமேஸ்வரத்தில் பிரம்மாண்ட பேரணியும் பொதுக்கூட்டமும் 19ம் தேதியன்று நடத்தப்பட்டது. இதில் தமிழ் திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். படத்தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம. நாராயணன், துணைத்தலைவர்கள் அன்பாலயா பிரபாகரன், எஸ்.ஏ. சந்திரசேகரன், செயலாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே.முரளிதரன், பொருளாளர் காஜா மைதீன், இயக்குனர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், விஜய டி. ராஜேந்தர், கே.எஸ்.ரவிக்குமார்,…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவுக்கு இந்திய அரசு அளித்து வரும் இராணுவ உதவிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தமிழ்நாடு சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 445 views
-
-
இந்தியாவின் அழுத்தங்களுக்கு பணியமுடியாது: மகிந்த மீண்டும் அறிவிப்பு [செவ்வாய்க்கிழமை, 21 ஒக்ரோபர் 2008, 06:55 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கை தமிழர்கள் மீதான போர் குறித்த இந்தியாவின் அழுத்தங்களுக்குப் பணியாமல் தொடர்ந்து போரை நடத்த உள்ளதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மீண்டும் அறிவித்துள்ளார். மகிந்தவின் அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகங்களின் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலில் மகிந்த இதனை தெரிவித்தார். தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் அதன் காரணமாக இந்திய மத்திய அரசாங்கத்தின் தலையீடுகள் தொடர்பில் அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை அறிய வேண்டும் என்றும் ராஜபக்ச கூறினார். மேலும் தற்போ…
-
- 0 replies
- 523 views
-
-
சென்னையில் ஒக். 24 இல் மனித சங்கிலி அணிவகுப்பு [செவ்வாய்க்கிழமை, 21 ஒக்ரோபர் 2008, 06:46 பி.ப ஈழம்] [க.நித்தியா] சென்னையில் இன்று நடைபெறுவதாக தமிழக அனைத்துக்கட்சிகளின் பாரிய மனித சங்கிலி அணிவகுப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்துக்கட்சிகளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக அனைத்துக்கட்சிகளின் சார்பாக ஒக்ரோபர் 21 ஆம் நாள் (இன்று) பிற்பகல் 3:00 மணியளவில் நடைபெறுவதாக இருந்த "மனிதச் சங்கிலி அணி வகுப்பு" பெருமழை காரணமாக இதே ஒக்ரோபர் திங்கள் 24 ஆம் நாள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதினம்
-
- 0 replies
- 533 views
-
-
நளினி விடுதலை செய்யக்கோரி மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான நளினி தன்னை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். மறைந்த ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், தனக்கு ஆயுள்தண்டனை முடிந்துவிட்ட காரணத்தால் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்று வழக்கு தொடுத்திருந்தார். அண்மையில், இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து தள்ளுபடி செய்தார். இந்நிலையில், நளினி தரப்பில் மீண்டும் மேல்மு…
-
- 0 replies
- 563 views
-
-
பிரான்சில் தடையை மீறி பேரணி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு [திங்கட்கிழமை, 20 ஒக்ரோபர் 2008, 06:00 மு.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] பல தடைகளையும் மீறி ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு பிரான்சில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். பிரான்சின் தலைநகரான பாரிசில் றிபப்பளிக் சதுக்கத்தில் தொடங்கி பாஸ்டில் சதுக்கம் வரையில் நடத்தப்படவிருந்த பேரணிக்கு பிரான்ஸ் காவல்துறை அனுமதி வழங்க மறுத்துவிட்டது. எனினும், பல்லாயிரக்கணக்கான மக்கள் தன்னெழுச்சியாக அறிவிக்கப்பட்டிருந்த இடத்தில் திரளத்தொடங்கினர். இதில் அங்கு வந்திருந்த பிரெஞ்சு மக்களும் கலந்து தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். பலமுறை அனுமதி மறுக்கப்பட்ட போதும் காவல்துறையின் தடைகளையும்…
-
- 6 replies
- 1.2k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 550 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு விடியல் கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்: தமிழ்த் திரையுலகம் [திங்கட்கிழமை, 20 ஒக்ரோபர் 2008, 05:27 மு.ப ஈழம்] [க.நித்தியா] ஈழத் தமிழர்களுக்கு விடியல் கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்று தமிழ்த் திரையுலகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இராமேஸ்வரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் திரையுலகம் நடத்திய பிரமாண்ட பேரணியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஈழத்தில் நடக்கும் தமிழின படுகொலையை உடனடியாக இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தாய் தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட, சேகரிக்கப்படுகிற அத்தியாவசிய உதவிகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இராமேஸ்வரம் மீனவர்கள் சிறிலங…
-
- 6 replies
- 1.2k views
-
-
ரீ.எம்.வீ.பீயின் பிள்ளையான் அணியின் முக்கியஸ்த்தரும் அவ்வணியின் நிதி மூலங்களுக்கு பொறுப்பாக இருந்தவருமான சீலன் அவரது உதவியாளர் மற்றும் 3 சிங்கள இளைஞர்கள் தமிழக காவற்துறையின் பிடியில் சிக்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தின் எக்மோர் பகுதியில் தனியார் தங்கு விடுதியில் தங்கியிருந்தபோது தமிழக புலனாய்வுத் துறையால் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் இதன்போது 40 லட்சம் இந்திய ரூபாய்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் இரகசியத் தகவல் ஒன்று கூறுகிறது. ஆரம்பத்தில் இவர்கள் விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பின் விசாரணையின் போதே இவர்கள் பிள்ளையான் அணியைச் சேர்ந்தவர்கள் என அறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுக…
-
- 0 replies
- 2.1k views
-
-
புலிகளுக்கு எதிரான போரை நிறுத்தும்படி எவரும் அழுத்தம் கொடுக்கவில்லை-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீரகேசரி இணையம் 10/21/2008 12:08:48 PM - பயங்கரவாதத்திற்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு சர்வதேசத்திடமிருந்து எதுவிதமான அழுத்தங்களும் கொடுக்கப்படவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களை இன்று காலை அலரி மாளிகையில் சந்தித்து பேசியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்திய தமிழ்நாட்டு அரசியல்வாதிகளால் கொடுக்கப்படும் அழுத்தங்களும் தற்காலிகமானது என தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுடன் நட்புடன் செயற்படுவதினால் யுத்தத்தை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படாது எனவும் கூறியுள்ளார். …
-
- 0 replies
- 718 views
-