ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143326 topics in this forum
-
லண்டனிலிருந்து அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை கொழும்பிற்கு அழைத்து வந்த மிகின் எயார் வானூர்தியில் 6 பயணிகளே பயணித்துள்ளனர். 144 ஆசனங்களைக் கொண்ட அந்த வானூர்தியில் 138 ஆசனங்கள் வெறுமையாக இருந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 981 views
-
-
யாழ். கோண்டாவில் பகுதியில் நேற்று மாலை இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 707 views
-
-
யாழ். தென்மராட்சி மட்டுவில் பகுதியில் சண்முகலிங்கம் தேவதாஸ் (வயது 42) என்பவரை கடந்த 18 ஆம் நாள் முதல் காணவில்லை. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 646 views
-
-
சிறிலங்கா மீது மனித உரிமைகளுக்கான புத்திஜீவிகள் அமைப்பு கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 689 views
-
-
வடக்கு-கிழக்குப் பகுதிகளை இணைத்து தன்னை முதல்வராக்க வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களில் ஒன்றான ஈ.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தா கூறியதனை சிறிலங்காவின் அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் குழு நிராகரித்துவிட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் பெப்ரவரியில் தேர்தலை நடத்தப் போவதாக மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அறிவிக்க உள்ளது என்று கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர் கேசியன் ஹேரத் தெரிவித்துள்ளார் தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 703 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர் இளைஞர்களைக் கடத்திச் சென்று அவர்களிடம் ஆயுதங்களை திணிக்கின்றனர் என்று இலங்கை போர் நிறுத்த கணகாணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 932 views
-
-
இலங்கையின் சனாதிபதியினால் எடுக்கப்படும் சமாதான ???முன்னெடுப்புகள் தமிழா தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கும் வரை முன்னெற்றம் காணாதென்ற ரீதியில் சிங்கள அரசின் அடிவருடி அமைச்சன் டக்ளசு வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றிற்கு செவ்வி அளித்துள்ளான், என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ரொய்டர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றிலே இப்படி அலட்டியிருக்கின்றான் என தெரியவருகின்றது. மேலதிக விபரங்கள் யாரும் அறிந்தால் அறியத்தாருங்கள். ஜானா
-
- 25 replies
- 5.2k views
-
-
கிழக்கு மாகாணம் இராணுவ ஆட்சிக்குள் உட்பட்டிருக்கிறதா? 250,000 சீருடை தரிக்காத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பாதுகாப்பை நிலைப்படுத்துவதற்காக, கிழக்கு மாகாணத்தில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர
-
- 3 replies
- 1.1k views
-
-
Posted on : 2007-12-22 புலி விமானங்களுக்குப் பயந்து கூட்டு விமானப்படை ஒத்திகை? விடுதலைப் புலிகளின் விமானப் படையினால் ஏற்பட்டுள்ள வான் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் இலங்கையுடன் சேர்ந்து பல்வேறு கூட்டு விமானப்படை ஒத்திகையை மேற்கொள்ள இந்தியா தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விஜயசிங் இவ்வார முற்பகுதியில் கொழும்பில் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்த சமயம் விடுத்த அழைப்பை அடுத்தே இந்தக் கூட்டு விமானப்படை ஒத்திகைக்கு இணக்கம் காணப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இந்தியப் பாதுகாப்பு அமைச்சினதும் உள்துறை அமைச்சினதும் செயலாளர்கள் உள…
-
- 3 replies
- 2.1k views
-
-
''இது கொதிநிலையா? இல்லை உறைநிலையா?''' "சர்வதேசச் சமூகம் இனியாவது எமது விடுதலைப் போராட்டம் தொடர்பாக நீதியான புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என எமது மக்கள் உறுதியாக நம்புகின்றனர். இன அழிப்பைத் தொடரும் சிங்கள அரசிற்கு இராணுவ, பொருளாதார உதவிகள் வழங்குவதை அடியோடு நிறுத்தி, சர்வதேச சமூகம் எமது மக்களின் சுயநிர்ணய உரிமையையும், இறையாண்மையையும் ஏற்று அங்கீகரிக்குமென எமது மக்கள் இன்றைய புனித நாளிலே எதிர்பார்த்து நிற்கின்றனர்''. தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவர், தனது மாவீரர் தின உரையில் சர்வதேசத்திற்கு விடுத்த வேண்டுகோள் இதுவாகும். சர்வதேச நாடுகளின் பிராந்திய, பூகோள நலனைப் புரிவதாக ஏற்றுக் கொண்டு, இப்பிராந்தியத்தில் நீடித்த அமைதி நிலவ வேண்டுமாயின் தமிழ் ம…
-
- 0 replies
- 1.6k views
-
-
வைகோ விறுவிறு ''தமிழனுக்காக முதல்வர் பேசவே மாட்டார்!'' இலங்கை அரசுக்கு ராணுவத் தொழில்நுட்பங்களை வழங்க இந்திய அரசின் உயர்நிலைக் குழு ஒன்று கொழும்பு சென்றிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக தலைவர்கள் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ காரசாரமாக எழுதிய கடிதத்தின் வரிகள் டெல்லியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், டெல்லி தமிழ்ச் சங்கத்தில் இலக்கிய உரை ஆற்றப்போகும் வைகோ, புலிகள் விஷயத்தைக் கையில் எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு உளவுத்துறையின் பல்ஸை எகிற வைத்திருக்கிறது. நெல்லையில் இருந்த வைகோவிடம் அவரது கடிதம் தொடர்பாகவும், டெல்லி விசிட் சம்பந்தமாகவும் சில கேள்விகளை முன் வைத்தோம். …
-
- 0 replies
- 1.6k views
-
-
உலக தரிசனத்தின் மட்டக்களப்பு அலுவலகம் மீது கைக்குண்டுத் தாக்குதல் உலக தரிசனத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் மீது கைக்குண்டுத் தாக்குதல் இலக்காகியுள்ளது. கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் உலக தரிசனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேற்றிரவு இனம் தெரியாதோரால் வீசப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் உலக தரிசனத்திற்குச் சொந்தமான வாகனங்கள் தேசமடைந்துள்ளன. குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற வேளை உலக தரிசனம் அலுவலகத்தில் எவரும் இல்லாததால் உயிர் இழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 0 replies
- 807 views
-
-
லண்டனிலிருந்து கொழும்பு திரும்ப சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு சிறிலங்கா ஏயர்லைன்சில் இடம் மறுக்கப்பட்டமை தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர் பீற்றர் ஹில்லை நீக்க மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2.4k views
-
-
குடாநாட்டு மக்களின் பீதியான வாழ்வை நீக்காவிடில் அரசு திக்குத்தடுமாற நேரிடும் அங்கிலிக்கன் பேராயர் சுட்டிக்காட்டுகிறார் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழும் மக்கள், கொலைகள், காணாமல் போதல், கப்பம் கேட்டுப் பயமுறுத்தல் ஆகிய சம்பவங்கள் அங்கு அதிகரித்து வருவதால் பீதி நிறைந்து வாழ்கிறார்கள். பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாடு முழுமையாக இருக்கும் வேளையில் இவை நடப்பதை விளங்கிக்கொள்வது கடினமாக உள்ளது. இவற்றை நிறுத்த முடியாத பட்சத்தில் யாழ். குடாநாட்டு மக்கள் மேலும் பிரிக்கப்பட்டு சட்டமின்மை காணும் வேளை, அதனால் இலங்கை அரசு திக்குத்தடுமாற நேரிடும். இவ்வாறு சுட்டிக்காட்டியிருக்கிறார் இலங்கை அங்கிலிக்கன் திருச்சபையின் பேராயர், உயர் அருள் பணி டுலிப் டி சிக்கேரா. யாழ். குடா…
-
- 0 replies
- 824 views
-
-
பயங்கரவாதம் -யோ.செ.யோகி- பயங்கரவாதம்| என்ற பதம் பெரும் சர்ச்சைக்குரிய ஒரு பதமாகும். அமெரிக்கா இன்று ~பயங்கரவாதத்திற்கு| எதிரான போர் என்று கூறிக்கொண்டு தன்நலனுக்கு எதிராகச் செயற்படும் வலுக்குன்றிய நாடுகள் மீது குண்டு வீசுகிறது அல்லது அவற்றை வன்கவர்கிறது. அல்லது அங்கு நடக்கும் ஆட்சியைக் கவிழ்த்;துவிட்டு அதற்குச் சார்பான ஆட்சியைக் கொண்டு வருகின்றது. அமெரிக்கா மீது செப்டெம்பர் 9-11 நடத்தப்பட்ட தாக்குதல் அமெரிக்கா அதனது நலன்சார்ந்த திட்டங்களைச் சுலபமாக மக்களை ஏமாற்றிச் செயற்படுத்த நல்ல வாய்ப்பை அளித்தது. கெடுபிடிக் காலப் போரின்போது பொதுவுடைமையாளர்களின் குறிப்பாக சோவியத் ஒன்றியத்தின் சர்வாதிகாரத்தில் இருந்த உலகை மீட்பதாக நடித்த அமெரிக்கா இப்போது உலகைப் பயங்கர…
-
- 0 replies
- 916 views
-
-
'அரச பயங்கரவாதத்தில் இருந்து தமிழ் மக்களை அதி விரைவில் மீட்போம். அதற்கான ஒன்றுபட்ட போராட்டம் 2008ம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பிக்கப்படும். அரசின் அராஜக அடக்கு முறைகளுக்கு நாம் அடிபணிந்து போக மாட்டோம்.' மஹிந்த அரசு வரவு செலவுத் திட்டத்திற்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் எதிராக வாக்களித்த சிறுபான்மை இன உறுப்பினாகளைத் தேடித் தேடிப் பழிவாங்க ஆரம்பித்து விட்டது. ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச மனித உரிiமைகள் ஆணைக்குழுவும் பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை அரசு உறுதிபடுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளன. ஆனால், இலங்கை அரசு என்ன செய்கின்றது? தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் அப்பாவித் தமிழ் மக்களை விரட்டி விரட்டி வகை தொகையின்றி கைது செய்து ச…
-
- 0 replies
- 899 views
-
-
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் வேட்பாளர் முத்துக்குமாரு சிவபாலன் (வயது 34) இன்று மாலை சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
ஒரு வாரகாலத்தில் கிழக்கில் 11 பேரைக் காணவில்லை கண்காணிப்பு குழு அறிக்கை கிழக்கு மாகாணத்தில் ஒருவார காலத்திற்குள் மட்டும் 11 பேர் காணõமல் போயுள்ளதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கண்காணிப்பு குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழு வாராந்தம் வெளியிடும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கிழக்கு மாகாணத்தில் கடந்த வாரத்தில் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்திருந்தன டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் மட்டும் 11 பேர் காணாமல் போயுள்ளனர். அம்பாறை திருக்கோவில், தாண்டவன்வெளி, திருகோணமலை மற…
-
- 0 replies
- 762 views
-
-
இலங்கை மனித அவல நிலைமைகள் குறித்து அமெரிக்க ஊடகங்கள் கவனம் செலுத்தவில்லை இலங்கையில் நிலவும் மனித அவலங்கள் குறித்து அமெரிக்க ஊடகங்கள் மிகக் குறைந்தளவே முக்கியத்தும் கொடுத்துள்ளது என எல்லைகளற்ற மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மனிதாபிமான பிரச்சினைகள் நிலவும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. அமெரிக்க ஊடகங்களில் 18 நிமிடங்களுக்கு குறைவான காலப்பகுதியே இந்த ஆண்டு இலங்கை மனிதாபினமான பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டுள்ளன. இலங்கை, செச்சினியா, மத்திய ஆபிரிக்க குடியரசு ஆகிய நாடுகளில் நிலவும் யுத்த முன்னெடுப்புகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் குறைந்தளவு முக்கியத்துவமே கொடுக்கப்பட்டுள்ளது. கொங்கோ, சிம்பாவே, மியான்மார், கொலப்பியா ஆகிய நாடுகளின் மனிதாபிமா…
-
- 0 replies
- 729 views
-
-
பழ. நெடுமாறன் அவர்கள் அவரது பத்திரிகையான மாதம் இரு முறை வெளிவரும் தென் செய்தி பத்திரிகையில் ஈழத்தமிழருக்கு பொருள் அனுப்ப முடியாது போனதனால் ஆதங்கப்பட்டு அவர் எழுதிய கட்டுரையின் கடைசிப் பக்கம் நெருப்பில் போட்டு வாட்டியது போல் ஒரு கவிதை வெளியாகியிருக்கின்றது. சாங்கியன் என்ற பெயரில் வந்த அந்தக் கவிதை கீழே : 'ஒரு இரங்கலின் மரணம்' என் எழுதுகோலும் தாளும் எப்போதும் தயாராகவே இருக்கின்றன. இரங்கல் கவிதை எழுத என் சொந்தங்கள் உயிர் காக்க உணவு வழங்கவும் உதவாத எழுதுகோலும் தாளும் எப்போதும் தயாராகவே இருக்கின்றன தமிழ்ச சொந்தங்களை கொல்ல தில்லி கூட்டாளி ஆயுதங்கள் அனுப்பியபோதும் அதைத்தடுக்க முனையாத என் எழுதுகோலும் தாளும் எப்போதும் தயாராகவே இருக்கின்றன…
-
- 2 replies
- 2.1k views
-
-
மனித உரிமைகள் ஆணையகத்தில் தஞ்சமடைந்த இருவர் சிறைச்சாலையில் வைத்து கடத்தப்பட்டனர் [Friday December 21 2007 03:15:44 PM GMT] [pathma] யாழ் மனித உரிமைகள் ஆணையத்தில் சரணடைந்து, நீதிமன்றின் உத்தரவின் பெயரில் யாழ் சிறைச் சாலையில் தங்க வைக்கப்பட்ட இரு பொதுமக்களை சிறீலங்காப் படையினர் கடத்திச் சென்றுள்ளனர். யாழ் சிறைச்சாலைக்குச் சென்ற சிறீலங்காப் படையினர் விசாரணைக்காக செய்வதாகத் தெரிவித்து அந்த இருவரையும் கடத்திச் சென்றுள்ளனர். http://tamilwin.net/article.php?artiId=584...;token=dispNews
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கைத்தீவு எதனை நோக்கிச் செல்கிறது -எரிமலை- சிறிலங்கா தொடர்பாக அண்மைக்காலங்களாக இடம்பெறும் சம்பவங்களையும் அது தொடர்பாக வெளிவருகின்ற செய்திகளையும்- அது சர்வதேச ஊடகங்களாக இருக்கலாம் அல்லது உள்நாட்டு செய்தி நிறுவனங்களாக இருக்கலாம்- நாம் சற்று ஊன்றிக் கவனித்தால் இலங்கைத்தீவு எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என்பதனை அறிந்து கொள்ளலாம். யாழ். குடாநாட்டின் செஞ்சிலுவைச் சங்க தலைவராக விளங்கிய தவராஜா கடத்திச்சென்று படுகொலை செய்யப்பட்டதனை கண்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடுகின்றவர்களைக் காப்பாற்றிப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 'மனிதாபிமானப்பணிகளில் ஈடுபடுகின்றவர்கள் சுதந…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐ.நா உதவி சிறீலங்காவுக்கு அச்சுறுத்தலாக அமையாது அவசரமாக சிறீலங்காவில் மனித உரிமைகள் கண்காணிப்பு மையத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டிருக்கின்ற
-
- 0 replies
- 941 views
-
-
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படும் தி.மு.க அரசை உடனடியாக நீக்க வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். 'இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உதவியாகவும் ஆதரவாகவும் தி.மு.க. அரசு செயல்பட்டு வருவதாகசவும் தி.மு.க. அரசின் தேச விரோத செயல் குறித்தும் தொடர்ந்து மத்திய அரசுக்கு சுட்டி காட்டி வருகிறார் அ.தி.மு.க வின் ஜெயாலலிதா. மேலும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இரு முக்கியத் தலைவர்களை ராஜீவ்காந்தி கொலை வழக்கின் தேடப்படும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. அப்படி இருக்கையில், அந்த இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படும் தி.மு.க. அரசு பதவியில் நீடிக்கத்…
-
- 7 replies
- 2k views
-