Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. `ஏன் இந்தத் தயக்கம்?' இலங்கைப் பிரச்சினையில் பாதிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் என்பதால், இந்திய அரசாங்கம் தனது தார்மீக கடமையிலிருந்தும் விலகி நிற்பது நியாயமில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கும் தமிழகத்தின் முன்னணி நாளேடான `தினமணி' ஈழப்பிரச்சினைக்கு நல்ல முடிவை ஏற்படுத்தும் பொன்னான வாய்ப்பு தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கிடைத்திருப்பதாகவும் அவர் முன்னின்று செயற்பட்டால் நல்ல தீர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. `ஏன் இந்த தயக்கம்' என்று மகுடமிட்டு நேற்று வெள்ளிக்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருக்கும் `தினமணி' மேலும் தெரிவித்திருப்பதாவது; விடுதலைப் புலிகள் எப்போது? எப்படி? எங்கே? தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரியாமல் நிச்சயம் இலங்கை இராணுவம் குழம்பிப…

    • 0 replies
    • 1k views
  2. அனுராதபுரம் தாக்குதலில் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களை தொடர்புபடுத்த சிறிலங்கா தீவிர முயற்சி அனுராதபுரம் வான் படைத்தளம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களை தொடர்புபடுத்த சிறிலங்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. அனுராதபுரம் வான் படைத்தளத் தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் பயன்படுத்திய வெடிபொருட்கள், ஆயுதங்கள், தற்கொடை அங்கிகள் உள்ளிட்ட தாக்குதல் உபகரணங்களை விடுதலைப் புலிகள் எடுத்துச் சென்றது எப்படி என்பது குறித்து சிறிலங்கா அராசாங்கம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. மேலும் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படாத ஏதேனும் அமைப்புக்களுக்கு சொந்தமான வாகனத்திலா அப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன என்றும் ச…

    • 0 replies
    • 702 views
  3. மக்களின் எந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருக்கிறது மகிந்த அரசாங்கம்?: ஜே.வி.பி. மக்களின் எந்தப் பிரச்சினைக்குத் தீர்வு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கண்டிருக்கிறது என்று ஜே.வி.பி. கேள்வி எழுப்பியுள்ளது. பதுளையில் நடைபெற்ற நிகழ்வில் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா பேசியதாவது: மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு திடீரென ஜே.வி.பி. நினைவுக்கு வந்துள்ளது. அதனால் அரசாங்கத்தைப் பாதுகாக்க தற்போது முற்போக்கு சக்திகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அரசாங்கத்தைப் பார்த்தால் யாராலும் அதனையிட்டு மகிழ்ச்சியடைய முடியாது. யாராலும் இதனைக் காக்கவும் முடியாது. இந்த அரசாங்கத்தை அமைக்க பங்களிப்புச் செய்த யாருக்கும் மகிழ்ச்சியில்லை. இந்த அரசாங்கத்தைப் பாதுகாக…

  4. மகிந்தவின் வரவு - செலவுத் திட்டம் நிறைவேறுமா? சிறிலங்கா அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் செயற்பாடுகளுக்காக எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியைப் பெறுவதற்காக இரகசியப் பேச்சுவார்த்தைகளை ஐக்கிய தேசியக் கட்சி தொடங்கியுள்ளதாக அரசியல் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள் இருவிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மங்கள சமரவீர மற்றும் சிறீபதி சூரியாராச்சி ஆகியோர் சந்திரிகாவுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் உதவியைப் பெற பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின்…

    • 0 replies
    • 747 views
  5. யுத்த முன்னெடுப்புகள் தென்னிலங்கை நோக்கிப் பரவுகிறது - தேசிய சமாதானப் பேரவை கவலை சிறீலங்கா அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்புகள் தென்னிலங்கை நோக்கிப் பரவி வருவதாக தேசிய சமாதானப் பேரவை கவலை வெளியிட்டுளள்து. எல்லாளன் நடவடிக்கை குறித்து, இன்று அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் தேசிய சமாதானப் பேரவை, கிழக்கில் சிறீலங்கா அரசாங்கம் ஈட்டியதாக கூறப்படும் வெற்றிகள், ஒருபுறம் வடக்கில் யுத்த முன்னெடுப்புக்களை தீவிரமடைய வைத்து, மறுபுறம் தெற்கை நோக்கி யுத்தத்தை நகர்த்தத் தொடங்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இது, கடந்த கால வரலாற்றின் மீள்பதிவாக அமைந்திருப்பதோடு, வரலாற்றில் இருந்து பட்டறிவைப் பெற்றுக் கொள்வதற்கு, நாட்டின் அரசியல் - படைத் தலைவர்கள் தவறியிருப்பதையே உணர்த்த…

    • 0 replies
    • 674 views
  6. அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தாக்குதல் நடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் தளபதிகளை அழைத்த தமிழீழத் தேசியத் தலைவர் "உங்களுக்கு நான் எல்லாளனைக் காட்டப் போகின்றேன்" என்று அறிமுகப்படுத்தியதாக தூயவன் அரசறிவியல் கல்லூரியின் ஆசிரியர்களில் ஒருவரான கலைக்கோன் தெரிவித்துள்ளார். 21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: தாக்குதல் தொடங்குவதற்கு முதல் நாள் தலைவர் அனைத்துப் பொறுப்பாளர்களுடனுமான தனது வழமையான சந்திப்புக்களை நிறுத்தி அந்தப் போராளிகளைப் பற்றிய நினைவுகளில் முழுமையாக மூழ்கியிருந்தார். அன்று நள்ளிரவில் தளபதிகளை அழைத்திருந்தார். அவர்களிடம் தலைவர் "உங்களுக்கு நான் எல்லாளனைக் காட்டப் போகின்றேன்" என்று கூறினார். தலைவர் அவ்வாறு…

    • 2 replies
    • 1.6k views
  7. மன்னார் மாவட்டம் தம்பனையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். தொடர்ந்து வாசிக்க

  8. யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளரின் சகோதர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 604 views
  9. அனுராதபுரம் வான் படைத்தளத்தில் புலிகளால் சிறிலங்காவின் 18 வானூர்திகள் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய வானூர்திகள், உலங்குவானூர்திகள் உள்ளிட்ட தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கு இந்தியா உதவ முன்வந்துள்ளது என்று அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  10. ஓமந்தனை சோதனை நிலையத்தை சனிக்கிழமைகளிலும் திறக்கப்பட உள்ளது என்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கை பிரதிநிதி டூன் வண்டேன்ஹோவ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  11. கிழக்குப் பகுதியில் ஆட்கடத்தல்களும் படுகொலைகளும் தொடர்ந்து நடைபெறுவதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  12. இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக மகிந்தவினால் அமைக்கப்பட்ட சிறிலங்காவின் அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு 2 மாதம் "விடுமுறை" அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  13. யாழ். முகமாலை மற்றும் பருத்தித்துறை கடற்பரப்பில் வீரச்சாவடைந்த மூன்று போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 972 views
  14. மட்டக்களப்பு மாவட்டம் மாவடிவேம்பில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த சம்பந்தன் என்ற கண்ணன் (வயது 22), அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 747 views
  15. ஒப்பரேசன் எல்லாளன் படை நடவடிக்கையில் களப்பலியான கரும்புலிகளை நினைவு கூர்ந்து ஓர் பாடல் http://www.yarl.com/videoclips/view_video....114485aa4e0a23b

  16. http://www.yarl.com/videoclips/view_video....93831e3fb400ce8

    • 2 replies
    • 2.8k views
  17. Posted on : Sat Oct 27 7:15:00 2007 .அரசின் தாக்குதல்களிலிருந்து தமிழரைக் காப்பாற்றுங்கள்! ஆர்பர் அம்மையாரிடம் தமிழ்க் கூட்டமைப்பு அவசர வேண்டுகோள் அரசின் தாக்குதல் நடவடிக்கையில் இருந்து இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மனித உரிமைகளுக்கான ஐ.நா. ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையா ரிடம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத் துள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, லூயிஸ் ஆர்பருக்கு அவசர மனு ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அதி லேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக் கப்பட்டிருக்கின்றது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு: நீங்கள் அண்மையில் இலங்கைக்கு மேற் கொண்ட விஜயத்தின்போ…

  18. இனநெருக்கடியை இராணுவக் கண்ணோட்டத்தில் அணுகினால் எத்தரப்புமே இறுதிவெற்றி இலக்கை அடைய முடியாது [27 - October - 2007] காலகண்டன் இன்றைய காலம் உலகமயமாதலின் காலமாகும். முதலாளித்துவத்தின் தொடர்ச்சியை சகல நிலைகளிலும் தூக்கி நிறுத்தி அதனைப் பலவழிகளிலும் பலமுடையதாக்கி முன்கொண்டு செல்வதற்கு ஏகாதிபத்தியத்தால் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சி நிரலே உலகமயமாதலாகும். உலக நாடுகளின் பொருளாதார அரசியல் சமூகப் பண்பாட்டுத்துறைகள் அனைத்திலும் இந்த உலகமயமாதலின் நச்சுத்தனங்கள் மிக மிக நாசுக்காகவே ஊடுருவல் செய்து நிற்கின்றன. அவற்றின் நோக்கங்கள், தன்மைகள், செயற்பாடுகள், விளைவுகள் பற்றி பரந்துபட்ட மக்கள் எவ்வித கவனமும் கவலையும் கொள்ளாத வகையிலே தான் இவ் உலகமயமாதல் நிகழ்ச்சி நிரல் மூன்றாம…

  19. அனுராதபுரம் வான் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியது எப்படி? "டெய்லி மிரர்" [வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2007, 05:18 PM ஈழம்] [பி.கெளரி] அனுராதபுரம் வான் படைத்தளத்தை கடந்த திங்கட்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு தாக்கி அழித்தனர் என்பது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான டெய்லி மிரரில் அதன் பாதுகாப்பு ஆய்வாளர் சுனில் ஜெயசிறீ தெரிவித்துள்ளார். அதன் முக்கிய பகுதிகளை அறிய.. http://www.puthinam.com/full.php?2e1VoW00a...d43YOA3a03oMV2e

  20. வெள்ளி 26-10-2007 17:11 மணி தமிழீழம் [தாயகன்] வான்படைத்தளத்தை உடனடியாகப் பாவிக்க முடியாது - அரசு இன்று ஒப்புக்கொண்டது விடுதலைப் புலிகளின் சிறப்பு தற்கொடைக் கரும்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான அநுராதபுரம் வான் படைத் தளத்தை உடனடியாகப் பாவிக்க முடியாமல் இருப்பதை, தாக்குதல் இடம்பெற்று நான்கு நாட்களின் பின்னர் இன்று சிறீலங்கா அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய சிறீலங்கா வான் படைத்தளபதி றொஷான் குணதிலக்க இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். விமானத் தளத்தின் ஓடு பாதை உட்பட பல இடங்களும், கட்டடங்களும் பலத்த சேதத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும், விமான எதிர்ப்புக் கருவிகள் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை மீளக்கட்…

    • 7 replies
    • 3.4k views
  21. வெள்ளி 26-10-2007 19:20 மணி தமிழீழம் [செந்தமிழ்] அநுராதபுர வான்படைத் தளம் 20 நிமிடங்களில் கரும்புலிகள் வசம் வீழ்ந்தது - போராளி கலைக்கோன் எல்லாளன் நடவடிக்கையின் போது அநுராதபுர வான்படைத் தளத்தை சிறப்புக் கரும்புலிகள் 20 நிமிடங்களில் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர் என போராளி கலைக்கோன் ஆசிரியர் தெரிவித்துள்ளார். இது குறித்து லெப்.கேணல் ராஜன் கல்விப் பிரிவைச் சேர்ந்த போராளி கலைக்கோன் ஆசிரியர் கருத்துத் தெரிவிக்கையில்... எல்லாளன் நடவடிக்கையின் போது அதிகாலை 3.20 மணிக்கு அநுராதபுர வான்படைத் தளத்தினுள் ஊடுருவிய கரும்புலிகள் 20 நிமிடங்களில் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அங்கிருந்த வானூர்திகளை அழித்துள்ளனர். …

    • 2 replies
    • 3.1k views
  22. பயங்கரவாததிற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவிரித்துள்ளார். இதுகுறித்து கிழக்கு மாகாணத்தையும் வடமத்திய மாகாணத்தையும் இணைக்கும் பாலம் ஒன்றைத் திறந்து வைக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பயங்கரவாததிற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும், பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பது உறுதி என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவருக்கும், விடுதலைப் புலிகளின் தலைவருக்கும் நான் தெரியப்படுத்த விரும்புவதாகவும் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். புலிகளுடன் பேச்சுக்கள் மூலம் தீர்வு காணப்படாத நிலையிலேயே நாங்கள் தாக்குதல்களை நடத்தினோம். விடுதலைப் புலிகள் பேச்சுக்களைக் சீர்குலைத்தனர். த…

    • 7 replies
    • 4k views
  23. யாருக்கு இந்த இழிவு? ஜ வெள்ளிக்கிழமைஇ 26 ஒக்ரேபர் 2007 ஸ ஜ ஜோசெப் ஸ யுத்தம் என்றாலும் அதைக் கைக்கொள்வதிலும் ஒரு நாக ரிகம் நியாயம் அவசியமாகும்.யுத்தத்தில் பொதுவாகக் கையாளவேண்டிய ஒரு நடை முறை சர்வதேச வழக்காறாக இருந்து வருகின்றது. அதைப் பின்பற்றுவது யுத்தத் தரப்புகளின் கடமையாகும்.நியாயம் வேண்டி கௌரவமான வாழ்வும், இருப்புக்கான உரிமையும் வேண்டி நீதியுடன் போராடி வருகின்ற ஈழத் தமிழினத்துக்கு எதிராகக் கொடூரமான அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நிற்கும் கொழும்பு அரசு.அநுராதபுரத்தில் உள்ள விமானப்படையினரின் பிரதான தளம் மீது அதிகாலை வேளை ஊடுருவி ஒரு துணிச்சலான தாக்குதலைப் புலிகளின் கரும்புலி அணி ஒன்று மேற்கொண் டிருக்கின்றது. அதே சமயம், …

    • 0 replies
    • 2.5k views
  24. வெள்ளி 26-10-2007 15:32 மணி தமிழீழம் [தாயகன்] வவுனியாவில் கண்ணிவெடித் தாக்குதல் - 6 படையினர் பலி வவுனியாவில் சிறீலங்காப் படையினரை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 6 படையினக் கொல்லப்பட்டிருப்பதுடன், மேலும் 4 படையினர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா கல்மடு பகுதியில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஆனால், புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை எடுத்து செயலிழக்கச் செய்ய முற்பட்டபோதே அது வெடித்து தமது படையினர் இறந்திருப்பதாக சிறீலங்கா படைத்தரப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பான சுயாதீன தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. Pathivu

    • 2 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.