Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்புத் துறைமுகத்துக்குள் கப்பல்கள் நுழைய மற்றொரு வாயில் திறக்கப்படும் நீருக்கடியிலான பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை கொழும்புத் துறைமுகத்துக்குள் கப்பல் கள் நுழைவதற்கான வடக்கு வாசலையும் மீளத் திறந்து விடுவதற்கு பாதுகாப்பு வட் டாரங்கள் தீர்மானித்திருக்கின்றன. அதற் கேற்ப அப்பகுதியில் நீருக்கடியிலான பாது காப்பு முறைமை ஸ்தாபிக்கப்பட்டு, அது சோதனை செய்யப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது மூடப்பட்டிருக்கும் இரண்டா வது வாசலைத் திறந்து விடுவதன் மூலம் சரக்குக் கப்பல்கள் நீண்ட நேரம் காத்துக் கிடந்து, அதனால் கப்பல் சேவை நிறுவ னங்களுக்கும், இறங்குதுறைகளுக்கும் பெரும் தொகைப் பணம் வீண்விரயமாகிப் போவதைத் தவிர்க்க முடியும் என விடய மறிந்த வட்டாரங்கள் சுட்டிக்…

  2. அத்தாஸின் கட்டுரைகளை சிங்களத்தில் மொழிபெயர்ப்பவருக்கும் அச்சுறுத்தல்! அலுவலகத்துக்கு வந்து மிரட்டிச் சென்றனர் "லங்காதீப' சிங்களப் பத்திரிகையின் மாகாணச் செய்தி ஆசிரியர் டபிள்யூ, ஜி. குணரத்ன நேற்று அவரது அலுவலகத்தில் வைத்து வெளியார் ஒருவரால் அச்சுறுத்தப்பட்டார். குணரத்ன அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தவேளை, அங்குவந்த வெளி யார் ஒருவர், அவருடன் செய்தி விடயமாக கலந்துரையாடவேண்டும் எனத் தெரிவித்து அலுவலக வாசலில் அனுமதி பெற்றார். மூன் றாம் மாடியில் உள்ள செய்திப் பிரிவுக்கு சென்ற அந்த நபர், "சண்டே ரைம்ஸ்' பத்திரிகையில் இக்பால் அத்தாஸ் எழுதும் கட்டுரையை சிங்களத்தில் மொழி பெயர்த்து ""லங்காதீப''வில் வெளியிடுவதற்குப் பொறுப்பாக உள்ள குணரத்தினவிடம் சென்று, இனிமேல் அவ்வாறு செய…

  3. அந்த வங்கியின் நிiறைவேற்று அதிகாரியிடம் ரணில் கேள்வி முழு நாட்டையும் யுத்தத்தில் சிக்கவைத்துக் கொண்டு, ஸ்தீரமற்ற பொருளாதாரத்தில் சிக்கிக் கிடக்கும் இலங்கை அரசிற்கு கடன் வழங்கலாமா? என்பது குறித்துத் தீர்மக்கமாகச் சிந்தித்து முடிவு எடுங்கள். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் எச்.எஸ்.பி.ஸி. வங்கியின் பிரதமநிறைவேற்று அதிகாரி ஸ்டீபன் கே.கிறீனிடம் கேட்டுள்ளார். இது தொடர்பாக - இலங்கையின் யுத்த நிலைமை மற்றும் பொருளாதாரத் தன்மை போன்றவற்றை விளக்கி ரணில், ஸ்டீபனுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தள்ளார். அக்கடிதத்திலே மேற்கண்டவாறு கேட்டுள்ளார். அக்கடிதத்தில் அவர் மேலும குறிப்பிட்டள்ள விடயங்கள் வருமாறு :- இலங்கை அரசிற்கு 5 ஆயிரத்து 600 கோடி ரூபா கடன் வழங்கும…

    • 0 replies
    • 1.1k views
  4. சமாதானப் பேச்சுக்களுக்குரிய காலம் இன்னும் கடந்துவிடவில்லை – ஜான் ஏக்லன்ட் (Jan Egeland ) சிறிலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையி

  5. சிறிலங்காவின் வரலாற்றில் மகிந்தவே மிகவும் கேவலமான அரச தலைவர்: "லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ்" அரசியல் அதிகாரங்களின் செறிவாக்கம் ராஜபக்ச குடும்பத்திடமே இருப்பதால், சிறிலங்காவின் வரலாற்றில் இந்த ஜனநாயக நாட்டை ஆட்சி செய்த தலைவர்களில் மகிந்த ராஜபக்சவே மிகவும் கேவலமான தலைவராக இருக்கலாம் என்று "லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ்" தெரிவித்துள்ளது. அந்த ஏட்டின் பத்தி எழுத்தாளர் ஹென்றி சூ எழுதிய பத்தியின் தமிழ் வடிவம்: நாட்டில் உள்ள அத்தனை மக்களினது நடவடிக்கைகளும் ராஜபக்ச குடும்பத்தின் நடவடிக்கைகளாக கிட்டத்தட்ட மாறிவிட்டது. ஏனெனில் அவரது குடும்பமே நாட்டை ஆள்வதுடன், உள்நாட்டுப் போரையும் நடத்தி வருகின்றது. இதன் நடுவே ராஜபக்சவின் நான்கு சகோதரர்கள் ஜனநாயக வழிகளில் தேர்ந்தெடுக்கப்ட…

  6. நெடுங்கேணி வான் தாக்குதல்: சிறிலங்கா வான்படை - கண்காணிப்புக்குழு மோதல் வவுனியா மாவட்டம் நெடுங்கேணியில் அண்மையில் சிறிலங்கா வான் படையினரால் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல் தொடர்பான இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிற்கும் சிறிலங்கா வான்படைக்கும் இடையில் கருத்து வேறுபாடு தோன்றியுள்ளது. இந்த வான் தாக்குதலில் ஒரு குழந்தை கொல்லப்பட்டதுடன், இரு பொதுமக்கள் காயமடைந்திருந்தனர். எனினும் தாம் விடுதலைப் புலிகளின் இலக்குகளையே தாக்கியதாகவும், அதில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவோ அல்லது காயமடையவோ இல்லை என்று சிறிலங்கா வான் படை தெரிவித்துள்ளது. ஆனால் சிறிலங்கா வான் படையினர் நடத்திய அன்றைய தாக்குதலில் ஒரு குழந்தை கொல்லப்பட்டு, இரு பொதுமக்கள் க…

    • 0 replies
    • 874 views
  7. "சந்திரிகாவின் கொழும்பு விஜயம்" இவ்விஜயம் ஒரு பெரும் பரபரப்புக்குரியதாகக் கொழும்பு ஊடகங்களால் பெரிது படுத்தப்பட்டது. எரிபொருள் விலையேற்றம், உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், முழு இலங்கையுமே போர்மயப்படுத்தல் போன்ற சம்பவங்களினால் மக்கள் மகிந்த ராஜபக்ச அரசின் மீது வெறுப்புக் கொண்டிருக்கும் இவ்வேளையில், திருமதி சந்திரிக்காவின் விஜயம் சிறீலங்காவின் நாடாளுமன்ற அரசியலில் சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற பிரச்சாரம் மிகவேகமாகக் மேற்கொள்ளப்படுகின்றது. சிங்கள மக்கள் மத்தியில் ரணில் மங்கள கூட்டணிக்குப் பெருகி வரும் ஆதரவு இவர் அரசியலில் களமிறங்கும் போது மேலும் வலுவடையும் எனவும் கருதப்படுகிறது. அதேவேளையில் தொண்டமானின் வெளியேற்றம், முஸ்லிம் கொ…

  8. புதன் 29-08-2007 05:05 மணி தமிழீழம் [செந்தமிழ்] அத்தாசின் மொழிபெயர்ப்பாளருக்கும் கொலை அச்சுறுத்தல் சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் பாதுகாப்பு பத்தி எழுதும் இக்பால் அத்தாசின் பத்தியை தினமும் வெளியாகும் லங்காதீப பத்திரிகையில் மொழிபெயர்ப்பு செய்யும் மூத்த பத்திரிகையாளர் டபிள்யு.ஜி.குணரட்னவிற்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ச்சியாக இவ்வாறக அத்தாசின் பத்தியை மொழிபெயர்ப்பு செய்யகூடாது அச்சுறுத்தல்விடுக்கப்பட்டு வந்ததாக தெரியவருகிறது. இவ்வாறு கொலை அச்சுறுத்தல் விடுக்கும் நபர் சிறீலங்கா வான்படையை சேர்ந்த உத்தியோகஸ்தர் எனத்தெரியவருகிறது. இதேவேளை அத்தாசிற்கு தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களையடுத்து அவர்தனது பாதுகாப்பு நிலவரங்கள்…

  9. செவ்வாய் 28-08-2007 20:02 மணி தமிழீழம் [சிறீதரன்] காரைநகரில் இரு சிறீலங்கா கடற்படையினர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை காரைநகர் வலன்தலைச் சந்திக்கு அருகில் உள்ள காவலரண் ஒன்றின் அருகில் இரு சிறீலங்கா கடற்படையினர் மர்மமான முறையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை இச்சடலங்கள் சிறீலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சடலங்களில் ஒருவரின் கழுத்தில் சுறுக்குக் கயிறு காணப்பட்டுள்ளது. பதிவு

    • 3 replies
    • 1.8k views
  10. யாழ். வீதிகளில் பொதுமக்கள் நடமாட தடை: விடுதலைப் புலிகள் கண்டனம் [செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2007, 19:57 ஈழம்] [சி.கனகரத்தினம்] யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவ வாகனத் தொடரணி செல்லும்போது வீதிகளில் பொதுமக்கள் நடமாடக்கூடாது என்று சிறிலங்கா இராணுவம் தடை விதித்துள்ளமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: யாழில் இராணுவ வாகனத் தொடரணி செல்லும் போது பொதுமக்கள் நடமாடக்கூடாது என்றும் மீறி வீதிகளில் நடமாடினால் கண்டதும் சுட்டுக்கொல்லப்படுவர் என்றும் சிறிலங்கா இராணுவம் வானொலியூடாக அறிவித்தல்களை விடுத்துள்ளது. இதனால் இராணுவ வாகனத் தொடரணி செல்லும் நேரத்தில் பொது…

  11. 'கள நிலையில் மாற்றம் வருகின்றபோது----!" -சபேசன் (அவுஸ்திரேலியா)- ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும், நிவாரண ஒருங்கிணைப்பாளருமான திரு ஜோன் ஹோல்ம்ஸ் அவர்கள், மனித உரிமை மீறல்கள், துஷ்ப்பிரயோகங்கள் சம்பந்தமாகச் சிறிலங்காவைச் சாடியதையடுத்து அவர் மீது கடுமையான கண்டனங்களைச் சிறிலங்கா அரசு சுமத்தியிருந்தது. சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே, 'ஐ.நா. சபையின் உயர் அதிகாரியான ஜோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி' என்றும், 'அவர் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இலஞ்சம் வாங்கியிருக்கக் கூடும்' என்றும் கருத்து வெளியிட்டிருந்தார். சிங்களப் பேரினவாத அரசியல் கட்சிகளும், சிங்கள ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு ஜோன் ஹோல்ம்சைக் கண்டித்து அறிக்கைகள் வெளி…

    • 1 reply
    • 1.3k views
  12. கோத்தபாயவின் கருத்து போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் வகையிலானதா என்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம் : போ.க.குழு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கருத்து போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் வகையிலானதா என்பது பற்றி இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு கவனம் செலுத்தியிருப்பதாகத் தெரியவருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியிருந்த கோத்தபாய ராஜபக்ஷ, சமாதானப் பேச்சுவார்த்தைக்கான கதவுகளை மஹிந்த ராஜபக்ஷ திறந்தே வைத்துள்ள போதும், வன்னியை இராணுவ ரீதியாகக் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகக் கூறியிருந்தார். கண்காணிப்புக்குழு இந்தக் கருத்துத் தொடர்பாக கவனம் செலுத்தியிருப்ப…

  13. அம்பாறையில் விடுதலைப் புலிகளுடன் இணைய வந்த 18 வயதிற்கும் குறைவான 14 பேரை, ஐ.நா.சிறுவர் நிதியத்திடம் (யுனிசெவ்) ஒப்படைப்பதற்காக நேற்று திங்கட்கிழமை மாலை அழைத்து வந்த போது அவர்கள் மீது விஷேட அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். பொத்துவில் - திருக்கோவில் வீதியில் தாண்டியடிப் பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது; அம்பாறையில் அண்மைக்காலத்தில் தங்களுடன் இணைந்த 18 வயதுக்கும் குறைவான 14 சிறுவர்களை (9 ஆண்கள், 5 பெண்கள்) யுனிசெவ்விடம் ஒப்படைக்க புலிகள் முன்வந்தனர். இது தொடர்பாக ்யுனிசெவ்ீ அதிகாரிகளுக்கும் ஒரு வாரத்திற்கு முன் அறிவிக்கப்பட்டது. அவர்களும் இந்த சிறுவர்களை இன்று…

  14. சமாதானக் குழுவினரால் தமிழ்மொழி புறக்கணிப்பு [28 - August - 2007] நாவலப்பிட்டி நகரில் இயங்கும் சமாதானக் குழுவினரிடம் பல தரப்பட்டவர்கள் சென்று தங்களது பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்து வரும் வேளை அங்கு வழங்கப்படுகின்ற விண்ணப்பங்கள், - ஆவணங்கள் தனிச் சிங்கள மொழியிலுள்ளதால் மொழி புரியாத மலையக தோட்ட மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். இது சம்பந்தமாக நீதி மறுசீரமைப்பு அமைச்சு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கம்பளை கல்விக் காரியாலயத்தில் மலையக தமிழ் ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் "சுற்று நிருபங்கள்" தனிச் சிங்கள மொழியில் அனுப்பப்படுவதாகவும் அதிபர், ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். தினக்குர…

  15. சிறிய பேரினவாதக் கட்சிகளினால் ஆட்டிப்படைக்கப்படும் அரசாங்கம் [28 - August - 2007] வ. திருநாவுக்கரசு அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்காவைச் சேர்ந்த சமஷ்டி ஆட்சி முறைமை நிபுணர் கலாநிதி ஜோன் கின்செட் என்பவருடன் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது, சர்வகட்சி பிரதிநிதிகள் குழுத் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரணவைச் சந்தித்து கருத்து பரிமாறியதாக கின்செட் தெரிவித்ததையடுத்து, அக்குழுவினால் வெளிக்கொணரக்கூடிய இறுதிப் பெறுபேறு தொடர்பாக நாம் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கவில்லையென நான் எடுத்துக் கூறியதாக முன்னைய வாராந்தக் கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தேன். அக்குழுவின் இறுதி அறிக்கை வெளிவரப்போவதாக சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. …

  16. குளவிகொட்டி 35 விமானப்படையினர் காயம் சிகிரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 86 பேர் காயமடைந்து சிகிரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளவி கொட்டியவர்களில் 35 விமானப் படையினரும் அடங்குவர். - சங்கதி

  17. பிரித்தானியாவின் திட்டத்தை சிறிலங்கா வரவேற்குமா?-செய்திஆய்வு- இலங்கைப்பிரச்சனைக்குத் தீர்வுகான உதவக்கூடிய வழிமுறைகளை பிரித்தானியா வெளியிட்டுள்ளதன் மூலம் அது இலங்கை விவகாரங்களில் தலையிட விருப்பம் கொண்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 150ஆண்டுகள் பிரித்தானியாவின் காலணித்துவப் பிடிக்குள் இங்கை அகப்பட்டுக்கொண்டது. ஐரோப்பிய வருகைக்குமுன் தமிழ் சிங்கள இனங்களுக்குத் தனியரசு தனித்தனியாக இருந்து வந்துள்ளது.ஆயினும் பிரிட்டனே பல்வேறு சிற்றசுகளை வெற்றிகொண்டு இலங்கையை ஒரே நிர்வாக அலகாக்கியது. இன்று இலங்கையி;ல் நிலவும் இன முறன்பாட்டிற்கு பிரித்தானியாவும் ஒருகாரணமாகும். காலணித்துவத்தைக் கைவிட்டுச் சென்றபோது இருதேசிய இனங்களும் சுய உரிமையோடு வாழ ஏற்பாடு செய்திரு…

    • 2 replies
    • 1.4k views
  18. மென்மேலும் உறுதியாகிறது யுத்த தீவிர எண்ணப் போக்கு யுத்தநிறுத்தம் செயன்முறையில் உள்ளது என்று கூறப்பட்டாலும், அது செத்துச் செயலிழந்து நாளாகி விட்டது. உக்கிப்போன காகிதத்தில், உருக்குலைந்த எழுத்துக்களில் அது பதிவு செய்யப்பட்டிருப்பதோடு சரி. உண்மையில் நடைமுறையில் அது இல்லை. யுத்த நிறுத்தம் இருப்பதாக ஒரு புறம் கூறிக்கொண்டே மறுபுறம் பெரும் யுத்தச் செயற்பாடுகளும், இராணுவ நட வடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் அதிசயப் பூமி இது. பொதுவாக யுத்த நிறுத்த விடயத்தில் என்றில்லை, தேசிய இனப்பிரச்சினை தொடர்பான சகல அம்சங்களி லுமே இவ்வாறு இரட்டைவேட நிலைப்பாடே தரப்புகளி னால் இங்கு வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன என்பதும் கண்கூடு. புதிதாக ஆட்சிப்பீடம் ஏறிய ஜனாதிபதி மஹிந்தரின் அரசு யு…

  19. வவுனியா மன்னார் எல்லைப் புறத்தில் இரு தரப்புகளும் படைகளைக் குவிக்கின்றன வவுனியா, மன்னார் மாவட்டங்களில் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கும் இடையிலான எல்லை நெடுக, இரு புறங்களிலும், இரு தரப்பினரும் பெரும் யுத்த ஆயத்தச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு புறங்களிலும் படை மற்றும் ஆயு தத் தளபாடக் குவிப்பில் இரண்டு பக்கத்தினரும் ஈடுபட்டிருக்கும் அதேசமயம், அந்த எல்லை நெடுகிலும் அவ்வப்போது மோதல்களும் தொடர்ந்து வெடித்து வரு கின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஓமந்தை மேற்கில் கள்ளிக்குளம் மற் றும் தம்பனைப் பகுதிகளில் ஞாயிறு இர வும் நேற்று அதிகாலையும் மோதல்கள் இடம்பெற்றன…

  20. போராட்டத்தில் உயிரிழந்த தமிழீழ விடுலைப் புலிகளின் உறுப்பினாகள் புதைக்பட்டிருக்கும் மாவீரர் துயிலும் இல்லங்களளை இலங்கை அரசு படைகள் தொடர்ந்து புல்டோசர்கள் கொண்டு அழித்து வருகின்றன என்று கூறப்படுகின்றது.நாகரிக உலகம் அருவருக்கத்தக்க வகையில் இந்தக் கொடூர மிலேச்சத்தனத்தை இலங்கை அரசுப்படைகள் புரிந்து வருகினறன என த.தே.கூட்டமைப்பின் நாடாளுமனற் உறுப்பினர் ப. அரியநேந்திரன் விசனம் தெரிவித்திருக்கிறார். 'யுத்த கைதிகளும், யுத்ததில் காயமுற்றோரும், யுத்த நினைவுச் சின்னங்களும் அவை அல்லது அவர்கள் எந்தத் தரப்பைச் சேர்ந்திருப்பினும் மதிக்கப்ட வேண்டும் என்பதே சர்வதேச நாகரிக மரபாகும். அதை மீறி, அநாகரிகமாகவும் கொடூரமாகவும் நடந்து வருகிறது இலங்கை அரசு. இறந்த பின்னரும் புலிகளின் போராளிக…

  21. வவுனியா, மன்னார் எல்லையில் மோதல் 3 இராணுவம் பலி, 5 பேர் காயம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வவுனியா, மன்னார் எல்லையில் இருக்கும் பாலமோட்டைப்பகுதியில் நேற்று மாலை 4 மணிக்கு முன்னகர்ந்த சிறிலாங்கா இராணுவத்தை நிறுத்த விடுதலைபுலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது 3 இராணுத்தினர் பலியாகி உள்ளார்கள். மேலும் 5 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். மாலை 4 மணியிலிருந்து 6.30 வரை நடைபெற்ற இம்மோதலில் விடுதலைப்புலிகளுக்கு எதுவித இழப்புக்களும் ஏற்படவில்லை என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளார் இளந்திரயன் தெரிவித்துள்ளார். SLA, Tigers clash in Vavuniyaa-Mannaar border At least 3 Sri Lanka Army (SLA) soldiers were killed and five wounded in …

  22. 13 பொது மக்கள் படுகொலை; சாட்சிக்கு நீதிமன்றம் உத்தரவாதம் கிளிநொச்சியில் இருந்து வந்து இங்கு சாட்சியம் அளிப்பதற்கு அல்லைப்பிட்டி, வேலணை, புளியங்கூடல் ஆகிய பகுதிகளில் கடந்த வருடம் மே மாதம் 13ஆம் திகதி பதின்மூன்று பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் சாட்சிக்கு யாழ். நீதிமன்றம் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கி உள்ளது. கடந்த வருடம் மே 13ஆம் திகதியன்று அல்லைப்பிட்டி, வேலணை, புளியங்கூடல் ஆகிய இடங்களைச் சேர்ந்த பதின் மூன்று பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கின் முக்கிய சாட்சியான பெண்மணி ஒருவர் உயிர் அச்சத்தின் பேரில் கிளிநொச்சி சென்று வசித்து வருகிறார். இந்த வழக்கு விசாரணைகளை ஊர்காவற்றுறை மேலதிக நீதிவான் இ.த.விக்னராஜா முன்னிலையில் நேற்று எடுக்கப்பட்ட…

  23. கானல் நீராக மாறிவரும் தீர்வுக்கான யோசனைத் திட்டம் இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதற்கான யோசனைத் திட்டத்தைத் தயாரித்து சிபார்சு செய்யவெனத் தம்மால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு விடயத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷ இருதலைக் கொள்ளி எறும்பு நிலையில் நிற்கிறார் என்பதைக் கடந்தவாரம் இப்பத்தியில் சுட்டிக்காட்டியிருந்தோம். "ஒரு புறம் வேடன்; மறுபுறம் நாகம்' என்ற நிலைமை. சர்வதேச சமுதாயத்தைத் திருப்திப்படுத்துவதற்கு அமைதி வழியில் தீர்வு காண்பதற்காகத் தென்னிலங்கையின் இணக்கப்பாட்டை உருவாக்கும் ஆக்கபூர்வமான எத்தனத்தில் தாம் ஈடுபட்டிருக்கிறார் எனக் காட்டுவதன் மூலம் உலக சமூகத்தை சமாளிப்பதற்கு இந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு என்ற தந்…

  24. நீங்கள் தமிழரா? ஸ்ரீலங்கா விமான சேவையில் பயணம் செய்ய விருப்பமா? முதலில் இதைப்படியுங்கள் 'இன்சுலின் மருந்தில் தங்கியுள்ள நீரிழிவு நோயாளியான நான் கிட்டத்தட்ட 15 மணித்தியாலங்களுக்கு மேலாக ஒரு போத்தில்தண்ணீர் தவிர வேறு ஆகாரமெதுவுமின்றி கிட்டத்தட்ட கோமா மயக்கநிலைக்கு வந்துவிட்டேன்." ஸ்ரீ லங்கா விமான சேவை தந்த கொடூர அனுபவம் ஸ்ரீலங்கா விமான சேவை உத்தியோகத்தர்களால் விமானப்பறப்பின்போதும், ஸ்ரீலங்கா(கொழும்பு) சர்வதேச விமானநிலையத்திலும் நான் மனிதாபிமானமின்றி நடத்தப்பட்டதை எண்ணிப்பார்க்கும்போது அது ஒரு கெட்ட கனவாகவும் கொடூரமான நாளாகவும் அமைந்துவிட்டது. எனது மருத்துவச் சிகிச்சைக்கான இந்தியப்பயணம் ஹீத்ரோவிலிருந்து ஸ்ரீலங்கன் விமானம் இல…

    • 7 replies
    • 2.1k views
  25. செவ்வாய் 28-08-2007 03:47 மணி தமிழீழம் [செந்தமிழ்] அத்தாசின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீளவும் பழையநிலைக்கு கொண்டுவரகோரிக்கை சிறீலங்காவில் பத்திரிகையாளர்களாக தொழில்புரியும் ஊழியர்கள் சங்கம் நேற்று சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலருக்கு சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் ஆலோசகராகவும் பாதுகாப்பு பத்தி எழுத்தாளருமான இத்பால் அத்தாசிற்கு மறுபடியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. அவரது பாதுகாப்பு எதுவித முன்அறிவிப்பு ஏதுமின்றி தீடீரென குறைக்கப்பட்டுள்ளதாகவம் இனம்தெரியாத நபர்கள் உந்துருளியில் அவரை தொடர்பதாகவும் இதனால் அவரது பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுவதாகவும் சிறீலங்காவின் பாதுகாப்பு செயலருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாக …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.