ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
வவுனியாவில் 156 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்: லக்ஸ்மன் கிரியெல்ல வவுனியாவில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற சமரில் 156 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகத்துறை தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகள் வசம் 95 சடலங்கள் இருக்கின்றன. அவை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட உள்ளன. இந்த மோதல்களில் விடுதலைப் புலிகள் இரு டாங்கிகளை எடுத்துச் சென்றுள்ளதுடன் 10 கொள்கலன்களில் உள்ள வெடிபொருட்கள் மற்றும் கனரக ஆயுதங்களையும் அழித்துள்ளனர். உக்கிரமான மே…
-
- 3 replies
- 1.5k views
-
-
மாங்குளப்பகுதியில் சிறிலங்கா விமானப்படையினர் விமானத்தாக்குதல் மு.சுப்பிரமணியம் இன்று செவ்வாய்க்கிழமை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான மாங்குளப்பகுதியில் புலிகளின் முகாம் என சந்தேகிக்கும் இலக்குகள் மீது தாக்குதல் சிறிலங்கா விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானங்கள் குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளார். முல்லிக்குளம், விளாத்திக்குளம், கல்மடு போன்ற இடங்கள் மீது தாக்குதல் நடத்தும் புலிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் போது புலிகளின் தலைவர்கள் கூடும் இடங்கள் தாக்கியழிக்கபட்டுள்ளது என இராணுவம் தெரிவித்துள்ளது. வீரகேசரி
-
- 1 reply
- 1.1k views
-
-
செவ்வாய் 05-06-2007 20:51 மணி தமிழீழம் [நிலாமகன்] திருகோணமலை சாம்பல்தீவில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு திருகோணமலை சாம்பல்தீவுப் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை சாம்பல்தீவு சல்லித்தோட்டப் பகுதியில் மீட்கப்பட்ட இச்சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அடையாளம் காண்பதற்காக சடலம் திருமலை பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நன்றி பதிவு
-
- 0 replies
- 739 views
-
-
செவ்வாய் 05-06-2007 19:08 மணி தமிழீழம் [மகான்] மட்டக்களப்பில் அமெரிக்கத் தூதுவர் ரொபேட் ஓ பிளாக் சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேட் ஓ பிளாக் தலைமையிலான துதுவராலய அதிகாரிகள் இன்று மட்டக்களப்புக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். சிறீலங்காவின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரிகளுடன் சென்ற இவர்கள் மட்டக்களப்பின் அரச படையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மட்டக்களப்பு நிலவரங்கள் மற்றும் யுத்த முன்னெடுப்புக்களால் இடம்பெயர்ந்த மக்களை மீளவும் மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயவே மட்டக்களப்பு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி பதிவு
-
- 0 replies
- 756 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள் அனுப்ப மறுப்பு: இந்திய அரசைக் கண்டித்து பழ. நெடுமாறன் உண்ணாநிலைப் போராட்டம் [செவ்வாய்க்கிழமை, 5 யூன் 2007, 19:44 ஈழம்] [க.நித்தியா] யாழ்ப்பாணக் குடாநாட்டில் பட்டினியால் வாடும் தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்ப அனுமதியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ.நெடுமாறன் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார். சிறிலங்கா இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்று வரும் யாழ்ப்பாணத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் போதிய உணவுப் பொருட்கள் இன்றி பட்டினியால் வாடி வருகின்றனர். பட்டினியால் வாடும் தமிழர்களுக்காக தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் …
-
- 15 replies
- 2.1k views
-
-
செவ்வாய் 05-06-2007 18:42 மணி தமிழீழம் [தாயகன்] யாழ் பல்கலைக்கழகத்தில் குருதிக்கொடை நிகழ்வு சிறீலங்காப் படையினரால் மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதன் நினைவாக, யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று குருதிக்கொடை நிகழ்வு இடம்பெற்றது. மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்தக் குருதிக்கொடை நிகழ்வில் 90ற்கும் மேற்பட்ட மாணவர்களும், பேராசிரியர்களும், பல்கலைக்கழக பணியாளர்களும் கலந்துகொண்டனர். சிறீலங்காப் படையினரின் நேரடி அச்சுறுத்தல் மத்தியிலும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. pathivu
-
- 1 reply
- 1.1k views
-
-
பங்களாதேஷ் தனது பிரஜைகளை இலங்கை செல்ல வேண்டாமென அறிவித்துள்ளது. இலங்கையில் அதிகரித்திருக்கும் வன்முறைகள் காரணமாக இலங்கைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பங்களாதேஷ் தனது நாட்டுப் பிரஜைகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களைத் தொடர்ந்து விமானச் சேவைகள் குறைவடைந்துள்ளமை மற்றும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைகளைக் கவனத்தில் கொண்டே பங்களாதேஷ் அரசாங்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையம் மீது விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தக் கூடிய அச்சுறுத்தல் காணப்படுவதால் முக்கியமான காரணங்கள் இருந்தால் அன்றி இலங்கைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பங்களாதேஷின் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள சுற்றுநிருபத்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
சமாதான முயற்சிகளை மீண்டும் ஆரம்பிக்க யசூசி அகாசி சிறீலங்கா சென்றடைந்துள்ளார். சமாதான முயற்சிகளை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் ஜப்பானின் சிறப்பு சமாதானத் தூதுவர் யசூசி அகாசி நான்கு நாட்கள் பயணமாக இன்று சிறீலங்கா சென்றடைந்துள்ளார். சமாதான முயற்சி, மற்றும் சிறீலங்காவின் தற்போதைய நிலை பற்றி யசூசி அகாசி சிறீலங்கா அரசுடன் பேச்சு நடத்துவார் என, கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. யசூசி அகாசி, சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ உட்பட பலரைச் சந்திக்க இருப்பதாகக் கூறப்பட்டுள்ள போதிலும், பாதுகாப்பைக் காரணம்காட்டி அகாசியின் கிளிநொச்சிக்கான பயணம் சிறீலங்கா அரசால் தடுத்து நிறுதப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோர்வே தூதுவர் உட்பட வெளி…
-
- 1 reply
- 895 views
-
-
படையினரது 12 உடலங்கள் கையளிப்பு. கிளிநொச்சி அரசசார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகத்தில் வைத்து இன்று காலை 10.30 மணியளவில் கொல்லப்பட்ட படையினரது 12 சடலங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கிளிநொச்சி ஜ.சி.ஆர்.சி வதிவிட பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டது. -Sankathi-
-
- 7 replies
- 2.6k views
-
-
மட்டக்களப்பு அம்பலாந்துறையில் கிளைமோர் தாக்குதல்: படையினர் ஒருவர் பலி! மட்டக்களப்பில் சிறீலங்காப் விசேட அதிரடிப் படையினர் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 10.30 மணியளவில் மட்டக்களப்பு அம்பலாந்துறையில் வீதியால் சென்ற விசேட அதிரடிப் கால்ரோந்து அணியினர் மீது இலக்கு வைத்து வீதியோர கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் சிறீலங்கா விசேட அதிரடிப் படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர் களுவாஞ்சிக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். -Pathivu-
-
- 0 replies
- 812 views
-
-
வன்னிப் பகுதியில் இருவேறு வான்வெளித் தாக்குதல்கள். வன்னிப் பகுதியில் சிறீலங்கா விமானப் படையினர் இருவேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இன்று காலை 9.20 மணிக்கு மாங்குளப் பகுதி வான்பரப்புக்குள் நுழைந்த இரு கிபிர் விமானங்கள் அங்கு தாக்தலை நடத்தியுள்ளன. இத்தாக்குதலில் வணிக நிலையம் ஒன்று சேதமடைந்துள்ளது. அத்துடன் மாங்குளம் மாகாவித்தியாலயம் மற்றும் மக்கள் குடியிருப்புக்கள் மீது விமானக்குண்டின் சிதறுதுண்டுகள் வீழ்ந்துள்ளன. இதேபோன்று இன்று பிற்பகல் 1.00 மணியளவில் வன்னியில் பகுதி வான்பரப்பினுள் நுழைந்து இரு மிக் 27 யுத்த விமானங்கள் கிளிநொச்சி நகரப் பகுதியில் பேரிரச்சல் சத்தத்துடன் வட்டமிட்டதோடு கிளிநொச்சியின் கிழக்குப் பகுதியில் நான்கு தடவைகள் அங்கு தாக்குதலை நடத்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
கொழும்பை 3 வலயங்களாக பிரித்து புதிய பாதுகாப்பு நடைமுறைகள் அமுல் [05 - June - 2007] கே.பி.மோகன் கொழும்பு நகரில் நேற்று திங்கட்கிழமை முதல் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வீதிகளிலும் அருகருகே கடற்படையினர் குவிக்கப்பட்டுள்ளதோடு இராணுவத்தினரும் சந்திகளில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொழும்பு நகரில் தாக்குதல் திட்டங்களை மேற்கொள்ள புலிகள் சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருப்பதாக கிடைத்திருக்கும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே கடும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக படை அதிகாரியொருவர் தெரிவித்தார். பாதுகாப்பு நடைமுறைகளுக்குப் பிரஜைகள், பாதுகாப்புக் குழுக்கள், நடைபாதை வியாபாரிகளின் விழிப்புக் குழுக்கள், …
-
- 3 replies
- 1.8k views
-
-
புலிகளுக்கு பணம் கொடுத்த ஒருவரை கைது செய்த அரசு ஏனைய மூவரையும் என்ன செய்யப் போகின்றது [05 - June - 2007] * ரணில் கேள்வி எழுப்புகிறார் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களிப்பதைத் தடுப்பதற்காக, மகிந்த ராஜபக்ஷ சார்பில் பெருந்தொகை பணத்தை விடுதலைப் புலிகளுக்கு வழங்குவதில் இடைத் தரகர்களாக செயற்பட்டவர்களில் ஒருவரை மட்டும் கைது செய்துள்ள அரசு ஏனைய மூவர் தொடர்பில் என்ன செய்யப் போகின்றதென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெ…
-
- 0 replies
- 2.2k views
-
-
இலங்கை முஸ்லிம்களுக்கு சொந்தமான நாடு உலமாக்களின் முஸ்லிம் கட்சி உரிமை கோருகிறது [05 - June - 2007] இலங்கை பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான மண் என்று சிங்களப் பேரினவாதிகள் கூறி வருவது அப்பட்டமான பொய். அது மிகவும் கண்டிக்கத்தக்க கூற்றாகும். முதல் மனிதன் தோன்றிய வரலாற்றை நோக்குகின்றபோது இந்த மண் முஸ்லிம்களுக்கே சொந்தமானதாகுமென உலமாக்களின் முஸ்லிம் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் எம்.எம்.எம்.நூறுல்ஹக் எழுதிய `முஸ்லிம் பூர்வீகம்' நூலின் நான்காவது அறிமுக விழா அண்மையில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கருத்துரை வழங்கும்போதே அவர் இதனைக் கூறினார். `எழுவான்' வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் அதன…
-
- 11 replies
- 2.4k views
-
-
தலைமறைவான புலிகளின் பெண் முகவர் டோக்கியோ "சிறீலங்கா வாரம்" நிகழ்வில் [05 - June - 2007] புலிகள் இயக்கத்தின் சர்வதேச ஊடக வலையமைப்புகள் மூலமான பிரசார நடவடிக்கைகளில் பங்குபற்றி வந்த பிரபல பெண் அறிவிப்பாளர் ஒருவரை அண்மையில் டோக்கியோவில் நிகழ்ந்த "சிறீலங்கா வாரம்" விழாவில் அறிவிப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏற்பாடு இறுதி நேரத்தில் "சிறீலங்கா வாரம்" விழா நிகழ்ச்சி நிரலிலிருந்து தூதரக அதிகாரிகளால் நீக்கப்பட்டுள்ளது. குறித்த புலிகள் அமைப்பின் பெண் பிரசார அறிவிப்பாளர் சில வருடங்களுக்கு முன் அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர் எனவும் அவர் அதன் பின்னர் தேசிய இரகசிய விசாரணைப் பிரிவினரால் புலிகளின் முகவர…
-
- 0 replies
- 2k views
-
-
அரசியல் தீர்வுத் திட்டத்தில் ஆயத்தமின்றி பேசுவதற்கு தயாரென கூறினால் போதுமா? [05 - June - 2007] * கம்போடியா, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக் காட்டியிருக்கும் விடயம் இது மனிதனால் மனிதனுக்கு இழைத்தாகிய ஈனம். இன்று எம்முன் உள்ளது. ஒரு அழிந்து போன நாடு.நாம் மறக்க முடியாத சில பாரதூரமான படிப்பினைகள் மற்றும் மிக முக்கியமானதொரு கேள்வி; சிங்களவர்களும் தமிழர்களும் பிரிந்து செல்லும் கட்டத்தினை அடைந்து விட்டார்களா? இது (1958 இனக்கலவரத்தில் தமிழர் ஆளாக்கப்பட்ட அட்டூழியங்கள் முதலியவற்றினை சித்திரித்து அன்றைய முன்னணி பத்திரிகையாளரும் சண்டே ஒப்சேவர், பத்திரிகை ஆசிரியருமாகிய ராசி. வித்தாச்சி எமெஜன்சி 58 என மகுடமிட்டு எழுதிய நூலிலிருந்து எட…
-
- 1 reply
- 807 views
-
-
அரசாங்கத்தின் இரட்டைவேட செயற்பாட்டினால் நாடு பலவீனமடையும் நிலைமை ஏற்பட்டுள்ளது வீரகேசரி நாளேடு பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் மற்றும் இனப்பிரச்சினை தீர்வு செயற்பாட்டில் அரசாங்கம் இரட்டைவேடம்போட்டுக்கொண்டிர
-
- 0 replies
- 1k views
-
-
Posted on : Tue Jun 5 7:48:41 EEST 2007 அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டதே இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் கொலை ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அரசுக்கும் வெளிநாடுகளில் அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இலங்கை செஞ்சிலுவைச் சங்கப் பணியா ளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு குற்றம் சாட்டி அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருக்கிறது ஜனாதிபதி செயலகம். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்ப தாவது: மட்டக்களப்பு செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுக்கும், அவரது அரசுக்கும், ஒட்டுமொத்தத்தில் இலங்கைக்கும் மனித உரிமைகள் தொடர்பில் வெளி நாடுகளில் …
-
- 0 replies
- 1k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 19,204 போராளிகள் வீரச்சாவு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் எண்ணிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 1983ம் ஆண்டு நவம்பர் 27ம் நாள் தொடக்கம் 2007ம் ஆண்டு மே 15ம் நாள் வரையில் 19,204 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. மாவீரர்களின் மொத்த எண்ணிக்கை மாவட்டம் தொகை யாழ்ப்பாணம் 6929 மட்டக்களப்பு - அம்பாறை 4894 வன்னி 2809 திருமலை …
-
- 5 replies
- 1.9k views
-
-
Posted on : Tue Jun 5 7:49:45 EEST 2007 தொண்டர் நிறுவனங்களின் பணிகள் மட்டக்களப்பில் முடங்கும் அபாயம்! செஞ்சிலுவைப் பணியாளர்கள் இருவரின் படுகொலைகளால் ஏனையோர் மத்தியில் அச்சம் போரினாலும், ஆழிப்பேரலையினாலும் பெருமளவில் பாதிக்கப்பட்டு மனிதாபிமானப் பணிகள் பெரும் அளவில் தேவைப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொண்டர் நிறுவனங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் முடங்கிப்போகும் அபாய நிலை தோன்றியுள்ளது. மட்டக்களப்புச் செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் இருவர் கொழும்பில் கடத்தப்பட்டுப் படு கொலை செய்யப்பட்ட சம்பவத்தினால் வெளிநாட்டு, உள்நாட்டுத் தொண்டர் நிறுவனங்களில் பணியாற்றுவோர் மத்தியில் பெரும் அச்ச நிலை தோன்றியுள்ளது. அரசசார்பற்ற மற்றும் தொண்டர் நிறு வனங்களில் பணியாற…
-
- 0 replies
- 690 views
-
-
Date: 2007-06-05 அளவுக்கு மீறிய நம்பிக்கை! இலங்கையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய தரப்புகளில் ஒன்றான இலங்கை அரசுப் பக்கத்திலிருந்து அந்த யுத்த நிறுத்தம் குறித்து வெளியிடப்படும் முன்னுக்குப் பின் முரணான கருத்துகள் மக்களைக் குழப்பமடைய வைப்பனவாக இருக்கின்றன. ""போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டிய காலம் கனிந்துவிட்டது. ஒப்பந்தம் கைச்சாத்தான காலத் துக்கும் இன்றைய தள கள நிலைமைக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. ஆகவே போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதா என்பது குறித்து அடுத்த வாரத்தில் விசேட கலந் துரையாடல்களை அரசு நடத்த உள்ளது'' என்று அரசின் சார்பில் அதன் பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ்ப் பிரதிநிதிகளையும் ஐரோப்பிய ஒன்றியம் அழைத்திருக்க வேண்டும்: மனித உரிமைகள் பேச்சாளர் செல்வி ஆழிப்பேரலை அனர்த்தத்துக்குப் பின்னரான மீள் கட்டமைப்பு மற்றும் மனித உரிமைகள் நிலை தொடர்பாக பிரசெல்சில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக்குழுவின் கூட்டம் தொடர்பாக கவனத்தைச் செலுத்தியிருக்கும், விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம், தமிழ்ப் பிரதிநிதிகள் பங்குகொள்ளாத இது போன்ற கூட்டமொன்று பயனுள்ளதாகவோ முழுமையானதாகவோ இருக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கின்றது. இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் ஒன்றுக்கு தமிழ்ப் பிரதிநிதிகளையும் ஐரோப்பிய ஒன்றிய அபிவிருத்திக்குழு அழைத்திருக்க வேண்டும் என இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் த…
-
- 0 replies
- 786 views
-
-
யாழ். குடாவை கைப்பற்ற புலிகள் முயற்சித்தால் அது அவர்களுக்கு பேரழிவாகவே முடியும்: சரத் பொன்சேகா யாழ்ப்பாணக் குடாநாட்டை கைப்பற்றுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சித்தால் அது அவர்களுக்கு பேரழிவாகவே முடியும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரச சார்பு ஊடகமான 'டெய்லி நியூஸ்' நாளேட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்துள்ள முக்கிய பகுதிகள்: அரச படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதால் போர் நிறுத்த உடன்பாடானது செயற்திறனற்றதாக உள்ளது. தற்போது போர் நிறுத்த உடன்பாடு என்பது இங்கு இல்லை. போர் நிறுத்தம் தொடர வேண்டும் எனில் விடுதலைப் புலிகள் தம்மை பலப்…
-
- 11 replies
- 2k views
-
-
எமது பணியாளர்களின் படுகொலை தொடர்பாக முழு விசாரண தேவை: செஞ்சிலுவைச் சங்கம் சிறிலங்காவின் குற்றப்புலனாய்வுத் துறையினர் என சந்தேகிக்கப்படுவோரால் கடத்திக் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட தமது பணியாளர்கள் இருவரினதும் படுகொலை தொடர்பாக முழு விசாரணை தேவை என்று சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தின் பொது இயக்குநர் நெவில் நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை அவர் மேலும் தெரிவித்ததாவது: இது தொடர்பாக முழு அளவிலான விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துலகத்தின் விதிகளுக்கு அமைய இப்படுகொலைகள் தடை செய்யப்பட்டவை என்பதனை மோதலில் ஈடுபடும் தரப்புக்கள் தமது கருத்திற்கொள்ள வேண்டும். மனிதாபிமான அமைப்புக்களின் பணிகளுக்கு சிறில…
-
- 0 replies
- 694 views
-
-
சிறீலங்காவில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - பிரித்தானியா ஆழ்ந்த கவலை. சிறீலங்காவில் பாதுகாப்பு நிலமை மிகவும் மோசமடைந்து, சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக பிரித்தானியா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. சிறீலங்காவிற்கான பிரித்தானியத் தூதுவர் டொமினிக் சில்கொட் நேற்று கொழும்பில் ஊடகர்களைச் சந்தித்து பேசும்போது இந்தக் கவலையை வெளியிட்டார். இலங்கையின் உள்நாட்டுப் போரும், வன்முறைகளும் அமைதியை சீர்குலைத்து வருவதாகக் கூறிய சில்கொட், அமைதிப் பேச்சு மூலமான தீர்வுக்கான வாய்ப்புக்கள் குறைவடைந்து வருவதாகவும் தெரிவித்தார். இரத்மலானையில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் குண்டுத் தாக்குதலில் 7 பொதுமக்கள் பலியானமை, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் இரண்டு பணியாள…
-
- 2 replies
- 1.1k views
-