ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143529 topics in this forum
-
சிறிலங்கா மீது ஜப்பான் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம். சிறிலங்காவிற்கு மிகவும் அதிகளவு நிதி உதவிகளை வழங்கிவரும் ஜப்பான் சிறிலங்கா மீது அதிக அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்று அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. எனினும் ஜேர்மனி மற்றும் பிரித்தானிய ஆகிய அரசுகளின் தீர்மானங்களை பின்பற்றி சிறிலங்காவிற்கான நிதி உதவிகளை மட்டுப்படுத்தும் நோக்கம் ஜப்பானுக்கு இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பான் அதிகாரிகள் உடனான சந்திப்பின் பின்னர் இது தொடர்பாக மனித உரிமை கண்காணிப்பகத்தனை சேர்ந்த சோபி றிச்சார்ட்சன் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஆண்டு சிறிலங்காவில் மனித உரிமைகள் மோசமடைந்துள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் 100,0…
-
- 1 reply
- 629 views
-
-
சாவகச்சேரி தாக்குதலில் இராணுவத்தைச் சேர்ந்தவர் பலி. யாழ். சாவகச்சேரியில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். சாவகச்சேரி பிரதேச செயலகம் முன்பாக உள்ள இராணுவ காவலரண் மீது அடையாளம் தெரியாத நபர்கள் வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயமடைந்தார். தாக்குதல் நடத்தியோருக்கும் இராணுவத்தினருக்கும் இடையே 10 நிமிட நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இத்தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. படுகாயமடைந்த இராணுவத்தைச் சேர்ந்தவர் பலாலி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்…
-
- 1 reply
- 917 views
-
-
சனி 26-05-2007 18:29 மணி தமிழீழம் [மயூரன்] நான்கு மிக்-29 ரக யுத்த விமானங்கள் மற்றும் நான்கு எம்.ஜ-24 ரக யுத்த உலங்கு வானூர்த்திகள் கொள்வனவு செய்யத் அரசாங்கம் தீர்மானம் சிறீலங்கா அரசு நான்கு மிக் - 29 ரக யுத்த விமானங்களையும் நான்கு எம்.ஜ - 24 ரக யுத்த உலங்கு வானூர்த்திகளையும் கொள்வனவு செய்யத் தீர்மானித்துள்ளது. இந்த யுத்த வான்கலங்களைக் கொள்வனவு செய்வதற்காக விமானப்படை பொறியியலாளர் ஏயார் வைஷ் மார்ஷல் பிரசாந்த டி சில்வா தலைமையில் விசேட குழுவொன்று மிக விரைவில் ரஷ்யா மற்றும் உக்கிரேன் நாட்டுக்கச் செல்லவுள்ளது. ஏற்கனவே மிக் - 29 யுத்த விமானங்களுக்காக 800 கோடி இலங்கை ரூபாக்களை ஒதுக்கியுள்ள சிறீலங்கா அரசாங்கம் மேலும் நான்கு எம்.ஜ - 24 யுத்த உலங்கு வானூர்திகள…
-
- 1 reply
- 1.2k views
-
-
சனி 26-05-2007 18:04 மணி தமிழீழம் [மகான்] அட்டாளைச்சேனையில் மக்கள் படையினர் கைகலப்பு: 3 படையினர் உட்பட 11 பேர் காயம்.அட்டாளைச்சேனையில் நேற்று வெள்ளிக்கிழமை பொதுமக்கள் படையினரிடையே ஏற்பட்ட கைகலப்பு காரமாண 3 விசேட அதிரடிப்படையினரும் 8 பொதுமக்களும் காயங்களுக்கு உள்ளாகினர். சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட முச்சக்ரகவண்டியை துரத்திப்பிடித்த மக்கள் அதனை தீக்கிரையாக்கப்பட்டது. சம்வடி இடத்திற்கு வரவழைக்கப்பட்ட விசேட அதிரடிப்படையினர் பொதுமக்களுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டபோதே இக் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதன்போது பொதுமக்கள் படையினர் மீது கற்கள், தடிகள் கொண்டு தாக்கியுள்ளனர். இதேநேரம் படையினரும் திருப்பித் தாக்கியதில் மொத்தம் 11 பேர் காயங்களுக்கு உள்ளாகினர…
-
- 0 replies
- 1k views
-
-
சனி 26-05-2007 18:20 மணி தமிழீழம் [மயூரன்] KY-11 ரக ராடர் கொள்வனவுக்காக கோத்தபாய ராஜபக்ச இந்தியா பயணம் சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்தியா சென்றுள்ளார். இவரது இந்தியப் பயணம் இந்தியாவிடமிருந்து ராடர்களைக் கொள்வனவு செய்யும் நோக்கிலேயே அமைந்துள்ளதாக கொழும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியவிடமிலிருந்து KY-11 ரக ராடர்களை கொள்வனவு செய்யும் பொருட்டு புதுடெல்லி சென்றுள்ள கோத்தபாய ராஜபக்ச உயர்மட்டப் பேச்சுக்களையும் நடத்தவுள்ளார். சிறீலங்காவால் கேட்கப்படும் KY-11 ரக ராடார்களை சிறீலங்காவுக்கு வழங்குவதால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும் என்பதால் அதனை வழங்க மறுத்து வருகின்றது. இந்த நிலையில் இந்தியா சென்ற…
-
- 1 reply
- 1.1k views
-
-
சனிக்கிழமை, 26 மே 2007, 15:25 ஈழம்] [கொழும்பு நிருபர்] கொழும்பு கோட்டைப் பகுதியில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக 20 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 6 சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அரச பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் மேலதிக விசாரணகளைத் தொடங்க உள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரி தெரிவித்தார். இதனிடையே குண்டுத் தாக்குதலில் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் puthinam.com
-
- 0 replies
- 544 views
-
-
இலங்கையில் அனைத்துலகத்தின் ஈடுபாடுகள் அதிகரிக்க வேண்டும்: பிரித்தானியா நா.உ. வலியுறுத்தல். இலங்கை நிலைமைகள் குறித்து அனைத்துலகத்தின் ஈடுபாடுகள் அதிகரிக்க வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹெய்த் வாஸ் வலியுறுத்தியுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிற்கான நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது: இலங்கையில் நடைபெறும் போரில் மீது அக்கறை கொள்வோர் மீது பல குழுவினரும், ஊடகங்களும் குற்றங்களை சுமத்துவது அவநம்பிக்கைகளை ஏற்படுத்துகின்றது. இலங்கை விடயத்தில் அனைத்துலகத்தின் ஈடுபாடுகள் அதிகம் இருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன். மோதல்களில் ஈடுபடும் தரப்புக்களை ஒரு அமைதிவழியிலான தீர்வைக் காண்பதற்கு கொண்டுவரும் முயற்சிகளுக்காக அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு அம…
-
- 0 replies
- 782 views
-
-
Date: 25 May 2007 ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடல் படையின் 6 போர்க் கப்பல்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை படையினருக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் புலிகளுக்கு விமான பலமும் கூடியுள்ளது. இதையடுத்து இந்திய கடல் பகுதியில் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் பல்வேறு வகையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், 12 மீனவர்கள் கடத்தப்பட்டதற்கும் விடுதலைப் புலிகள்தான் காரணம் என்று கூறப்பட்டதால் கடல் பகுதி கண்காணிப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. …
-
- 4 replies
- 878 views
-
-
Friday May 25 2007 09:46:55 PM GMT] [virakesari.lk] மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்டவர் வேப்பங்குளம் 8 ஆம் ஒழுங்கையைச் சேர்ந்த சண்முகராஜா பாஸ்கரன் (வயது 30) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இறந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு விசாரணைகள், மருத்துவ பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 586 views
-
-
நாடு செல்லும் பாதை? [26 - May - 2007] * "உத்தியோகபூர்வமானவை எனஅறிவித்து கூட்டிக் குறைத்து வெளியிடப்படும் புள்ளி விபரங்களின் நம்பகத் தன்மையின் உண்மையான அளவு கோல் பொதுமக்களே' இந்த நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது? அபிவிருத்திப் பாதையிலா? அல்லது அழிவுப் பாதையிலா? என்று ஒருவர் கேள்வி எழுப்பினால் நிச்சயம் இரண்டாவது பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது என்ற பதிலைத் தயக்கம் இன்றி கூறிவிட முடியும். ஏனெனில், இன்று நடைபெற்றுவரும் அன்றாட நிகழ்வுகள் ஒவ்வொன்றும் அவ் அவலப் பாதையை வெளிச்சமிட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றன. சில வாரங்களுக்கு முன்பு இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட வருடாந்த புள்ளிவிபரத்தில் 7.4 சதவீத பொருளாதாரம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக எடுத்துக் காட்டிய…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறுபான்மையினர் குரலை நசுக்கிவிட காய் நகர்த்தல்? [26 - May - 2007] இனநெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியாக சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவை அரசாங்கம் நியமித்து அரசியலமைப்பு ரீதியாக மாற்றங்களை மேற்கொள்வது குறித்து அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகளைப் பெற்றுவரும் நடவடிக்கைகள் தொடர்வதாக அவ்வப்போது அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் இடைக்கால அறிக்கையின் பிரகாரம் தேர்தல் மறுசீரமைப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள ஆளும் கட்சி மேற்கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. விடமிருந்தும் சிறுபான்மை இன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5 கட்சிகளிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உத்தேச தேர்தல் சீர்திருத்தத்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
Posted on : Sat May 26 8:34:51 EEST 2007 பலாலி ராணுவத் தளம் மீது பாரிய தாக்குதல் நடத்த புலிகள் ஆயத்தம் பிரிகேடியர் முனசிங்கவின் கணிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் பலாலி இராணுவத் தளத்தின் மீது விமானத் தாக்குதல் ஒன்றை நடத்தக்கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. பலாலி தளத்தைத் தாக்குவது விடுதலைப் புலிகளின் இராணுவ வியூகத்தின் மிக முக்கிய அம்சமாக இருக்கும். பொல்காவளை ஐ.தே.க.அமைப்பாளரும் முன்னாள் இராணுவப் பேச்சாளருமான பிரிகேடியர் சரத் முனசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு பெரும் எடுப்பில் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டு வருகிறார்கள். நெடுந்தீவில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் இந்த வகையில் முதல் கட்டமென்றே கொள…
-
- 3 replies
- 1.9k views
-
-
பௌத்த சங்க பிரதிநிதிகளை சந்திக்க பிரிட்டன் தூதர் மறுப்பு பௌத்த சங்கங்களின் சம்மேள னப் பிரதிநிதிகளை சந்திக்க கொழும்பி லுள்ள பிரிட்டிஷ் தூதுவர் மறுத்துள்ளார். இது தொடர்பாக மேற்படி பௌத்த சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் பிரிட்டிஷ் தூதுவர் சிவில் சமூகங் களை சந்திக்கப் பயப்படுகிறார். பயங் கரவாத பிரச்சினை தொடர்பாக பிரிட் டிஷ் அரசாங்கமும் இலங்கையிலுள்ள அதன் தூதுவரும் மேற்கொள்ளும் நட வடிக்கைகள் எம்மை கவலை கொள்ளச் செய்துள்ளன. பிரிட்டனுடனான இலங்கை யின் உறவுகளை பெரிதும் பாதிக்கும் வகையில் அலுவல்கள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்பட் டுள்ளது உதயன்
-
- 3 replies
- 1.3k views
-
-
ஆயுதக் கொள்வனவு குறித்த விவரங்களை வெளியிட முடியாது நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரிவிப்பு அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்படும் ஆயுத விவரங்கள் எதுவும் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் வெளியிடப்படமாட்டாது. பிரதமமந்திரி ரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்றுமுன்தினம் நாடா ளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்தார். ""மிக் 29'' விமானக் கொள்வன தொடர்பாக நாடாளுமன்றில் நடைபெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தை முடித்து வைத்துப் பேசிய பிரதமரர் மேலும் கூறியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போராடுவதற்காக ஆயுதங்கள் இராணுவ உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் கொள்முதல் செய்யப்படுகின்றன. அரசியல்வாதிகளின் ஆலோசனைகளின் மீது அல்ல. இராணுவ அதிகாரிகளின் ஆலோசனைப்படி அவர்களுக்குத் தேவைய…
-
- 0 replies
- 1k views
-
-
தீவகத்துக்கான போக்குவரத்து சீரானது; நெடுந்தீவுக்கான படகுச் சேவை நிறுத்தம் நெடுந்தீவில் வியாழக்கிழமை இடம் பெற்ற தாக்குதலை அடுத்து பிறப்பிக்கப் பட்ட ஊரடங்குச் சட்டம் காரணமாக அன் றைய தினம் பாதிக்கப்பட்ட தீவுப் பகுதிக் கான போக்குவரத்து நேற்றுக் காலை சீரா னது. எனினும், நெடுந்தீவுக்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. அதனால் அங்கி ருந்து வந்த பொது மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடிய வில்லை. தொலைபேசி சேவைகள் ஸ்தம் பிதம் அடைந்ததால் அங்குள்ள நிலைமை யைச் சரிவர அறியமுடியவில்லை. நெடுந்தீவு குயின்ராக் பகுதியிலுள்ள கடற்படைத் தளத்தின்மீது நேற்றுமுன் தினம் அதிகாலை விடுதலைப் புலிகள் நடத் திய தாக்குதலை அடுத்து அன்றைய தினம் தீவுப் பகுதியில் முழுநேர ஊரடங்குச…
-
- 0 replies
- 776 views
-
-
சோதனை நிலையங்களில் செஞ்சிலுவையின் கண்காணிப்புப் பணி: இருதரப்புகளும் இணங்கி பாதுகாப்பு உத்தரவாதம் தரவேண்டும் வவுனியா ஓமந்தை மற்றும் மன்னார், உயிலங்குளம் சோதனை திறக்கப்படுவது தொடர்பாக செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதிக் கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடை யிலான சந்திப்பு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கடந்த 22ஆம் திகதி ஓமந்தை சோதனை நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து அங்கு கண் காணிப்பு பணியில் ஈடுபடுவதிலிருந்து செஞ்சிலுவைக் குழு வெளியேறியது. அது தொடர்பாக புலிகளுடன் பேசுவதற்காக செஞ் சிலுவைச் சர்வதேசக் குழுவின் இலங்கைக் கான பிரதிநிதி வன்னி வந்திருந்தார். புலிகளின் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்க…
-
- 0 replies
- 597 views
-
-
கண்காணிப்புக் குழுவினரின் கிளிநொச்சி விஜயம் ரத்து போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் லால் ஜோஹாஸ் சன்பேக் நேற்று கிளிநொச்சிக்கு செல்லவில்லை என்று கண்காணிப்புக் குழுப் பேச்சாளர் ஒமர்சன் தெரிவித் தார். போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் நேற்று கிளிநொச்சிக்குச் சென்று புலிகளை சந்தித்து பேச்சு நடத்த விருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அந்தப் பயணம் ரத்தா னது. இதற்கான காரணம் என்ன? என்பது குறித்துக் கண் காணிப்புக் குழுவின் பேச்சாளர் எதுவும் தெரிவிக்க வில்லை உதயன்
-
- 0 replies
- 727 views
-
-
Posted on : Sat May 26 8:44:40 EEST 2007 ரணிலோடு சேர்ந்து பத்திரிகையாளர் மாநாடு நடத்துவதா? இ.தொ.கா., முஸ்லிம் காங்கிரஸ் மீது கடுஞ்சீற்றம் கொண்டுள்ள அரசுத் தலைமை அரசுக் கூட்டமைப்பிலும் அமைச்சரவை யிலும் இடம்பெற்றுக்கொண்டு, அதே சம யம் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலை வர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒரே மேசையில் அமர்ந்திருந்து பத்திரிகையாளர் மாநாடு நடத்திய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி போன்றவை மீது அரசுத்தலைமை கடுஞ்சீற்றத்துடன் இருப்பதாக விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. இச்சீற்றம் காரணமாக மேற்படி மூன்று கட்சிகளின் சார்பில் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர்களுக்கு, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்துக்கான அழ…
-
- 0 replies
- 723 views
-
-
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அமெரிக்கா தீவிரமாகச் செயலாற்றும் இணைத்தலைமை நாடுகளுடன் ஆராய்ந்துள்ளதாகத் தகவல் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை அதிகாரிகள், நோர்வே தரப்பி னர், இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் ஆகிய தரப்பு களுடன் நாம் இணைந்து தீவிரமாகச் செயலாற்றவுள்ளோம். எமது இந்தச் செய்தியை அவர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கின்றோம். அமெரிக்காவின் அரசுத்துறைப் பேச்சாளர் ரொம் கஷே மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த புதன்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற வாராந்தச் செய்தியாளர் சந்திப் பில் அவர் இத்தகவலை வெளியிட்டார். அப்போது அவர் மேலும் தெரிவித்ததாவது: இலங்கையில் தற்போது அதிகரித்துவருகின்ற வன்செயல்கள் துரதிர்ஷ்டவசமானவை.…
-
- 1 reply
- 714 views
-
-
சர்வதேச அரசியலைக் கையாள சாணக்கியமற்ற இலங்கை தன்னை இறைமையுள்ள, சட்டபூர்வமான அரசாகப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் கொழும்பு அரசு, இலங்கை இனப் பிரச்சினை விவகாரத்தில் சர்வதேச மனிதாபிமான ஏற்பாடு களை மதிக்காமல், பௌத்த சிங்களப் பேரினவாத மேலாண் மைப் போக்கோடு செயற்படுவது, சர்வதேச ரீதியில் அதற்கு எதிரான கருத்து நிலைப்பாட்டை உருவாக்கி வருகின்றது என இப்பத்தியில் பல தடவைகள் சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். அது பற்றிய தகவல்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன. தினசரி ஆள்கடத்தல்கள், கப்பம் அறவிடல், படுகொலைகள், மோசமான மனித உரிமை மீறல்கள் என்று பேரவலத்தைச் சந்தித்து வரும் ஈழத் தமிழர்களுக்கு கொழும்பு அரசின் காவல்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு முறைமைகளின் கீழ் நீதியோ, அமைதியான கௌரவமான …
-
- 0 replies
- 684 views
-
-
கொழும்பு தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பம். சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இராணுவப் பேரூந்து மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலானது தொலைதூர இயக்கி (Remote control) மூலம் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை வெளியிட்டுள்ள பெயர் குறிப்பிட விரும்பாத உயர் பாதுகாப்பு அதிகாரி மேலும் தெரிவித்துள்ளதாவது: தொலைதூர இயக்கி மூலம் குண்டுகளை வெடிக்கவைக்கும் தொழில்நுட்பம் தற்போது உலகில் வழமையானது. ஆனால் கொழும்பில் இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதற்தடவை ஆகும். குண்டுடன் இணைக்கப்பட்ட ஐசியானது அதனை ஒத்த ஐசி ஊடாக தனது சமிக்ஞை அலைகளை பரிமாற்றக்கூடியது. இந்த வகை இயக்கிகளாக செல்லிடப்பேசிகளை அல்லது ஜிபிஎஸ் தொலைத்தொடர்பு சா…
-
- 1 reply
- 1.2k views
-
-
புலிகளை யுத்தத்தில் தோல்வியுறச் செய்தாலும் இறுதித் தீர்வுகாண அரசியல் தீர்வு தேவை வீரகேசரி நாளேடு இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் அரசாங்கம் உடனடியாக அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும். அரசியல் தீர்வொன்றை முன்வைக்காத நிலையில் பிரச்சினைக்கு ஒருபோதும்தீர்வுகாண முடியாது. புலிகளை யுத்தத்தின் மூலம் தோல்வியுறச்செய்தாலும் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொழுது இறுதியில் அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் பாராளுமன்றத்தில் நேற்று முன்வைத்த ஒத்திவைப்பு பிரேரணையில்…
-
- 0 replies
- 1.2k views
-
-
புலிகளை அழிக்கும் ஆயுதங்கள் குறித்து இராணுவ உயர் அதிகாரிகளுக்கு தெரியும் விடுதலைப் புலிகளை அழிக்க எத்தகைய ஆயுதங்கள் அவசியமென்பதை இராணுவ உயர் அதிகாரிகள் அறிந்து வைத்துள்ளதாக நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்த ஜே.வி.பி. அதற்கு ஐ.தே.க வின் அறிவுரை அவசியமற்றதெனவும் தெரிவித்தது. பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் ஜே.வி.பி சார்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சந்திரசேன விஜயசிங்க இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் , பயங்கரவாதம் வளர வாய்ப்புகள் வழங்கியமை கடந்தகால அரசாங்கங்கள் செய்த மாபெரும் தவறாகும் . வன்னியில் …
-
- 4 replies
- 1.5k views
-
-
சனி 26-05-2007 00:33 மணி தமிழீழம் [மகான்] பாலித்த கோகண மட்டக்களப்பு பயணம் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலரும், சமாதானச் செயலகத்தின் செயலாளருமான பாலித்த கோகண நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்புக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். மீள்குடியேற்றம், பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விடயங்களைக் கேட்டறிவதற்காகவே மட்டக்களப்புக்கான பயணத்தை மேற்கொண்டதாகச் அரச தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இன்றைய பயணத்தின் போது அரச அதிகாரிகள், போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு பிரதிநிதிகள், ஐ.நா பிரதிநிதிகள் என அனைத்து தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு
-
- 4 replies
- 943 views
-
-
ஜரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தால் புலம்பெயர் தமிழர்கள் ஏமாற்றம். தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை ஜரோப்பிய ஒன்றியம் அடுத்த வருடத்திற்கு நீடிப்பதற்கு ஆலோசிப்பதையிட்டு புலம்பெயர் வாழ் தமிழர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக சுவிஸ் தமிழர் பேரவை ஜரோப்பிய ஒன்றிய தலைமை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. கடிதத்தின் முழு வடிவம் இங்கே கிளிக் செய்யவும் (pdf) -Sankathi-
-
- 5 replies
- 2.9k views
-