ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
திங்கள் 09-04-2007 19:46 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதிகளின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ரொக்கட்றோ சதுக்கத்தில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பிக்க இருந்தவேளை பிரஞ்சு காவல்துறையினரால் பொதுமக்கள் அனைவரும் திருப்பியனுப்ப முற்பட்டவேளை தமிழ் மக்கள் இன்னொரு பகுதியில் கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனையடுத்து ரொக்கட்றோ நகரபிதா வருகைதந்து அனைவரையும் அமைதியாகத் திரும்புமாறு கேட்டுக்கொண்டதையடுத்தும் பொதுமக்கள் இன்னொரு புறத்தில் ஒன்றுகூடியுள்ளனர். இதேவேளை பிரச்சு காவல்துறையினர் ரொக்கட்றோ பிரதேசத்தில் காணும்…
-
- 16 replies
- 4.4k views
-
-
-
அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரச்சாரத்தால் சிறிலங்கா அரசாங்கம் வெட்கப்பட வேண்டும். அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரசார நடவடிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவிப்பது அராசாங்கத்தை வெட்கப்பட வைக்கும் செயற்பாடு எனத் தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகள், இந்தப் பிரசார நடவடிக்கைக்கு முழு ஆதரவு வழங்குவதாகக் கூறியுள்ளனர். இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்கு சர்வதேசக் கண்காணிப்புக் குழுவொன்றை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி ‘விதிமுறைப்படி விளையாடு’ எனும் தலைப்பில் சர்வதேச மன்னிப்புச் சபை சர்வதேச பிரசார நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளது. இந்தப் பிரசார நடவடிக்கைக்குத் தாம் ஆதரவு வழங்குவதாக விடுதலைப் புலிகள் அமைப்புக் கூறி…
-
- 2 replies
- 1.1k views
-
-
'மக்களை கடத்துவதால் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த முடியாது': ரணில் [செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2007, 20:09 ஈழம்] [அ.அருணாசலம்] "தமிழ் மக்களை காணாமல் போகச் செய்வதன் மூலமோ அல்லது கடத்துவதன் மூலமோ தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த முடியாது. மக்களை கடத்துவதன் மூலம் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தலாம் என அரசாங்கம் நினைத்தால் அது அவர்களின் தவறாகவே இருக்கும்" என சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார். கொழும்பில் காணாமல் போதல், கொல்லப்படுவோர் தொடர்பான பொது மக்கள் கண்காணிப்புக் குழுவினால் நேற்று திங்கட்கிழமை ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: "இந்த பிரச்சினைகள…
-
- 1 reply
- 843 views
-
-
பேருந்து விபத்து பொதுமக்கள் 17 பேர் பலி. - பண்டார வன்னியன் Tuesday, 10 April 2007 10:30 காலியில் இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 15 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இவ் விபத்தானது கெண்டைனர் ஒன்றுடன் பேருந்து நேருக்கு நேர் மோதியமையால் ஏற்ப்பட்டதாகும். இது தொடர்பான மேலதிக விபரம் தெரியவரவில்லை. சங்கதி
-
- 6 replies
- 1.8k views
-
-
தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு, நாடு முழுவதிலும் அதிவிசேட உயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் நேற்றுத் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. புதுவருடப் பிறப்புக்கு முன்னதாக இந்த வாரத்தில் விடுதலைப்புலிகள் தமது தாக்குதல்களை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சத்தினாலேயே அரசாங்கம் அதிவிசேட பாதுகாப்பு நடவடிக்கை களை முன்னெச்சரிக்கையாகத் தொடங்கி பாதுகாப்புத் துறையினரை உஷார் நிலையில் வைத்துள் ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. மேலதிக எண்ணிக்கையில் பாதுகாப் புப் படையினரையும் மேப்ப நாய்களுடன் பொலீஸாரையும் ஈடுபடுத்தி நாடுமுழுவ திலும் விசேட பாதுகாப்புத்திட்டம் ஒன்று நேற்றுத் தொடக்கம் அமுலுக்கு வந்திருப் பதாக மூத்த பொலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மின் உற்பத்தி நிலையங்கள், தொலைத் தொடர்பு ந…
-
- 1 reply
- 1.1k views
-
-
எது பயங்கரவாதம் என்பதை சார்க் தலைவர்கள் புரிந்து கொள்ளட்டும் [10 - April - 2007] [Font Size - A - A - A] வி.திருநாவுக்கரசு 22 வயது நிரம்பிய தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கம் (சார்க்) தனது 14 ஆவது உச்சி மாநாட்டினை சென்ற வாரம் புதுடில்லியில் நடத்தியது. உலக சனத்தொகையில் 20% அல்லது 1.5 பில்லியன் மக்கள் வாழும் இப்பிராந்தியத்தில் தான் அதிகளவு வறுமையும் காணப்படுகிறது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் நாடுகளுடன் புதிதாக ஆப்கானிஸ்தானும் இணைந்துள்ளது. மேலும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் தென்கொரியாவும் முதல் முதலாக பார்வையாளர்களாக பங்கேற்றுள்ளனர். பார்வையாளர்கள் மேற்பார்வையாளர்கள் என எண்ணத் தோன்றியது. …
-
- 1 reply
- 1.1k views
-
-
ஊடரங்கு வேளையில் நடைபெறும் கொடூரம்! -(தேசியன்) [08 - April - 2007] யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊரடங்கு வேளையில் கதவுகளை உடைத்துக்கொண்டு வீடுகளுக்குள் நுழையும் ஆயுதக் கும்பல்கள் கொள்ளையில் ஈடுபடுவதுடன் குடும்பத்தவரின் கண்முன்னே பெண்களை வல்லுறவுக்குட்படுத்தி வருவதனால் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். ஆயுத முனையில் நிர்வகிக்கப்பட்டு வரும் யாழ்ப்பாணத்தில் மாலை 6 மணியுடன் அமுலுக்கு வரும் ஊரடங்குச் சட்டத்தால் மக்கள் எவரும் வெளியில் நடமாட முடியாத சூழலே நிலவி வருகின்றது. மாதகல் வீதி, காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி, பருத்தித்துறை வீதி, முகமாலை வீதி, தீவுகளுக்கான வீதியென குடாநாட்டின் அனைத்து பிரதான வீதிகளும் அரச படைகளின் கடுகளவும் பிசகாத கண்காணிப்பின் கீழேயே உள்ள…
-
- 38 replies
- 6k views
-
-
தமிழர்களை அழித்தாலே யுத்தத்தில் வெற்றி பெறமுடியுமென செயற்படுகிறது அரசாங்கம் [10 - April - 2007] * சொந்த மக்களையே கொல்லும் நிர்வாகம் என்று சாடுகிறார் ரணில் - பி.ரவிவர்மன், அருளானந்தம் அருண் - சொந்த நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு தர முடியாமல் சொந்த மக்களையே கொல்வதற்கு வழி செய்யும் அரசு மகிந்த ராஜபக்ஷவின் அரசு என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடினார். தமிழர்களை அழித்தாலே யுத்தத்தில் வெற்றி பெற முடியும் என்றும் தமிழர்கள் அனைவரும் புலிகள் என்னும் ஒரு கருத்தை முன்னிறுத்தி அதற்கமைவாகவே மகிந்த அரசு செயற்படுகின்றது என்றும் குற்றம்சாட்டிய அவர், தமிழ் மக்களைக் கடத்துவதன் மூலம் புலிகளை இல்லாதொழிக்க முடியும் என யாரும் நினைத்தால் அது மிக…
-
- 1 reply
- 818 views
-
-
செவ்வாய் 10-04-2007 03:04 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் மிகவும் மோசமடைந்து வருகின்றன - சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆழ்ந்த கவலை சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் மிகவும் மோசமடைந்து வருவதாக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மீண்டும் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், கடந்த வாரத்தில் மட்டும் பொதுமக்கள் 30 பேர் கொல்லப்பட்டு, 50 பேர் வரையில் காயமடைந்திருப்பதாக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்ட அறிக்;கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவிலுள்ள அனைத்துத் தரப்பினரும் மனித உரிமைகளைப் பேணும் அனைத்துலக சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் எனவும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வேண்டுகோள் விடுத்…
-
- 0 replies
- 607 views
-
-
செவ்வாய் 10-04-2007 13:02 மணி தமிழீழம் [மோகன்] இந்திய தூதராலய சாரதி வாகனத்துடன் கடத்தப்பட்டுள்ளார் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு இந்திய தூதராலயத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்று கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொழும்பிற்கு தூதுவர் ஒருவரை ஏற்றுக் கொண்டு வருவதற்கு சென்றபோது இரு தாக்குதலாளிகளால் அவ்வாகனத்தின் சாரதி எஸ்.விஸ்வநாதன் தாக்கப்பட்டு வாகனத்துடன் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக சீதுவ காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இவர்களது வாகனம் இரவு 11 மணியளவில் கொழும்பை விட்டு புறப்பட்டதாகவும் பேலியகொட தனுகாம பாலத்தலடியில் மற்றொரு மகழுர்தினால் துரத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். மகழுர்தில் துரத்தியவர்கள் வாகனத்தின் சாரதியை தமத…
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்த அரசமைப்பு வரையறைக்குள் தீர்வுக்கு இடமேதும் கிடையாது ` இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு இந்தியாவின் மாதிரியை ஒத்த அதிகாரப் பகிர்வு மூலம் தீர்வு காணலாம் என சில அரசியல் பிரகிருதி கள் பெரும் பிரசாரம் செய்து வருகின்றனர். இவ்விடயத்தை ஒட்டி தமிழர் தேசிய இயக் கத் தலைவர் பழ. நெடுமாறன் இப்போது தெரிவித் துள்ள இரண்டு விடயங்கள் இங்கு கவனிக்கத் தக்கவை. ஒன்று இந்தியாவில் இருப்பது போன்ற இன சமரசம் பாகுபாடின்மை இலங்கையில் கிடை யாது. இங்கு பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்தை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி நசுக்குவதே தனது வாழ்வியல் நோக்காகக் கொண்டு அந்தத் தீவிர வெறியில் செயற்படுகின்றது. அடுத்தது இலங்கை இனப்பிரச்சினைக்கு இலங்கையின் அரசமைப்புக்குள் உட்பட்டு தீர்வு காணவே…
-
- 0 replies
- 690 views
-
-
ஈழப் பிரச்சினையும் இந்தியாவும் இலங்கை பேரினவாத அரசினால் மீண்டும் தமிழ் மக்கள் வேட்டையாடத் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் ஈழத்தமிழர் விடயத்தில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தடுமாற்ற பிதற்றல்களாலும் தமிழ் மக்களை ஏமாற்றும் மத்திய அரசுடனான கடித அரசியல் கண்கட்டி வித்தைகளாலும் தமிழக மக்களே வெறுப்படைந்து போயுள்ளனர். எப்போதுமில்லாதவாறு தற்போது விடுதலைப் புலிகளுக்கெதிராக தமிழக அரசு எடுத்து வரும் `தேவையற்ற' பாதுகாப்பு ஏற்பாடுகள், சோதனை கெடுபிடிகள், தேடுதல்கள் என்பவற்றால் தமிழகத்தில் யுத்தம் நடைபெறுவது போன்ற நிலையே இங்கு காணப்படுகின்றது. இலங்கை கடற்படையினரால் தினமும் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் வைத்து கொன்றொழிக்கப்படுகின்றார்கள
-
- 3 replies
- 1.4k views
-
-
ஓமந்தை மீது புலிகள் தாக்குதல். சிப்பாய் பலி 03 பேர் காயம். - பண்டார வன்னியன் Tuesday, 10 April 2007 11:11 இன்று காலை 7.45 மணியளவில் வவுனியா ஓமந்தை முன்னரங்க சிறிலங்கா இராணுவ படைமுகாம்களிலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதற்கு பதில் தாக்குதலாக விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டு மூன்று படைச்சிப்பாய்கள் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாக படைத்தரப்பு அறிவித்து உள்ளது. சங்கதி.கொம்
-
- 0 replies
- 818 views
-
-
நான்காம் கட்ட ஈழப்போரும் வேறுபட்ட சமர் உத்திகளும் -அருஸ் (வேல்ஸ்)- தரைப்படைகளின் கடுமையான மோதல்கள், விமானத்தாக்குதல்கள், கடற்படையினரின் தாக்குதல்கள், பயங்கரவாத தடுப்புச் சட்டமும் அதனால் அல்லல்படும் மக்களும், தனிமைப்படுத்தப்பட்ட யாழ். குடாநாடு, ஏதிலிகளாக்கப்பட்ட மட்டக்களப்பு மக்கள் என ஒரு முழு அளவிலான போருக்குள் இலங்கை சிக்கியுள்ளது. எனினும் எந்தத் தரப்பாலும் அது போராக பிரகடனப்படுத்தப்படவில்லை. அரசாங்கம் போரும் சமாதானமும் என்ற அணுகுமுறையை கடைப்பிடிக்கின்றது, விடுதலைப் புலிகளும் தற்காப்புத் தாக்குதல்களையும், அழித்தொழிப்பு சமர்களையும் நடாத்தி வருகின்றனர். ஆனால் இந்த போரில் இருதரப்பினதும் சமராடும் உத்திகள் (வுயஉவiஉள) முற்றிலும் வேறுபட்டவை. அரசு வி…
-
- 1 reply
- 1.4k views
-
-
அரசு மே மாதத்தில் தீர்வுத்திட்டத்தை சமர்ப்பிப்பது சந்தேகமே: ஐ.தே.க அரசாங்கத்திற்குள்ளும், அதன் கூட்டணிகளுக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் உள்ளதால் இனப்பிரச்சனைக்கான தனது தீர்வுத் திட்டத்தை மே 1 ஆம் நாள் சமர்ப்பிப்பதாக சுதந்திரக் கட்சி கூறியிருப்பது சந்தேகமே என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. சுதந்திரக் கட்சிக்குள் உள்ள சில கூட்டணிகள் அதிகாரப் பரவலாக்கத்திற்கு எதிராக உள்ளதால் தாம் இந்த சந்தேகத்தை கொண்டுள்ளதாக ஊடகத்துறையிருடனான மாநாட்டின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்ரன் பெர்ணான்டோ தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: அரசாங்க கூட்டணிக் கட்சிகள் வடக்கு - கிழக்கு பிரச்சனை தொடர்பாக வேறுபட…
-
- 1 reply
- 898 views
-
-
சிறிலங்காவில் 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு உல்லாசப் பயணத்துறையில் மிகவும் ஒரு முன்னேற்றமான நிலையை ஏற்படுத்தியிருந்தது. எனினும் தற்போது ஆரம்பித்துள்ள மோதல்களில் மிகவும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள துறையாக உல்லாசப் பயணத்துறையே இருப்பதாக அனைத்துலக செய்தி நிறுவமான ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் சிறிலங்காவில் உல்லாசப் பயணத்துறையை முன்னேற்றுவதற்கு அதிகாரிகள் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். எனினும் தினமும் இடம்பெறும் கடல், வான், தரை தாக்குதல்கள் அதற்கு சாதகமாக இல்லை. இப்படிப்பட்ட நிலைமைகளில் உல்லாசப் பயணத்துறையே முதலாவதாக …
-
- 1 reply
- 870 views
-
-
கடுமையான உணவுத் பற்றக்குறையில் வாழும் மட்டக்களப்பு இடம்பெயர்ந்த மக்கள் மட்டக்களப்பில் இடம்பெயர்ந்துள்ள 150,000-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு பெய்து வரும் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள அதேசமயம் கடுமையான உணவு பற்றாக்குறைக்கும் முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்கா அரசாங்கத்தினால் மீண்டும், மீண்டும் வழங்கப்பட்ட உறுதிமொழிகளைப் போல் எந்தவிதமான உணவு விநியோகங்களும் இந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். மூன்று வேளைகளும் உணவை உட்கொள்ள வேண்டிய மக்கள் 100 தொடக்கம் 200 கிராம் அரிசியுடன் ஒரு நாளை கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பால் மா வகைகளின் பற்றாக்குறையினால் சிறார்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சத்துருக்…
-
- 0 replies
- 703 views
-
-
பயங்கரவாதப் பாசறைகள்! 1986_ம் ஆண்டு பெங்களூரில் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாடு நடைபெற்றது. அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி பங்கு கொண்டார். இலங்கை அதிபர் ஜெயவர்தனேயும் வந்திருந்தார். ஈழம் தனி நாடு ஆகிவிடுமோ என்ற அச்சம் அப்போது சிங்கள இனவாதிகளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. புல்லாங்குழல் கூட ஈழப் போராளிகளுக்குத் துப்பாக்கியாகப் பயன்பட்ட நேரம். ரத்தக் கறைகளோடு வந்த ஜெயவர்தனே, ராஜிவ் காந்தி அருகில் அமர்ந்தார். ‘தனி ஈழம் அமைந்தால் இந்தியாவிற்கு ஆபத்து’ என்றார். வஞ்சக வலையை விரித்தார். ‘‘எப்படி?’’ என்று ராஜிவ் கேட்டார். ‘தமிழ்நாடும் தனி நாடாகிவிடும். ஆகவே, ஈழப் போராளிகளுக்கு எதிராக இந்தியாவும் போர் தொடுக்க வேண்டும்!’ என்றார் ஜெயவர்தனே. அதனை உண்ம…
-
- 6 replies
- 2.7k views
-
-
திங்கள் 09-04-2007 18:09 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஆகக்குறைந்தது வெப்பத்தை நாடிச்சென்று தாக்கும் ஏவுகணைகளையாவது வாங்கி அனுப்புங்கள் - மேஜர் ஜெனரல் சந்திரசிறீ யாழ் குடாநாட்டில் உள்ள முக்கிய இராணுவ மையங்களில் கனரக விமான எதிர்ப்பு ஆயுதங்களை விரைவாகப் பொருத்திய சிறீலங்காப் படையினர் தற்பொழுது அவசர அவசரமாக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கி அனுப்புமாறு கொழும்பில் அமைந்துள்ள இராணுவத் தலைமைப் பீடத்திற்கு அவசர செய்தியை அனுப்பியுள்ளனர். இதுகுறித்து கொழும்பு இராணுவ பீடத்திற்கு செய்தியை அனுப்பியுள்ள யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ வல்லைப்பாலம், குடத்தனை, எழுதுமட்டுவாள், நாவற்குளம், கெற்பெலி, வரணி, கிளாலி, பலாலி, காரைநகர், காங்கேசந்துறை போன்ற தளங்களுக்…
-
- 2 replies
- 2k views
-
-
புலிகளா சுட்டார்கள்? - தப்பிய மீனவர் பேட்டி http://www.tamilnaatham.com/pdf_files/2007..._2007_04_08.pdf நக்கீரன் வார இதழ்
-
- 0 replies
- 1k views
-
-
திங்கள் 09-04-2007 17:45 மணி தமிழீழம் [சிறீதரன்] கொக்குவி்ல் அரசியல் செயலகம் படையினரால் சுற்றிவளைத்துத் தேடுதல் சிறீலங்காப் படையினரால் விடுதலைப் புலிகளின் கொக்குவில் அரசியல் செயலகம் சுற்றிவளைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு ஜீவ் வண்டிகள் மற்றும் ரக் வாகனத்திலும் வந்த 50 வரையிலான படையினரே இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தேடுதல் நடவடிக்கை படையினரால் ஒரு மணி நேரம் நடத்தப்பட்டது. இதேநேரம் கொக்குவில் பகுதி நேற்று படையினரால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும். இதனால் நேற்று முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் பதட்டம் காணப்பட்டதாகவும் குடிசார் தகவல்…
-
- 1 reply
- 1.1k views
-
-
கட்டுநாயக்க விமானத்தளத்தை பார்வையிட கண்காணிப்புக்குழு ஏன் அக்கறை காட்டுகிறது * கேள்வி எழுப்புகிறது அரசு - டிட்டோ குகன் - விடுதலைப் புலிகளால் விமானத் தாக்குதல் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை பார்வையிட அரசாங்கத்திடமிருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லையென போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ள அதேநேரம், பொதுமக்கள் மத்தியில் நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து கவனம் செலுத்தாத கண்காணிப்புக் குழு கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தின் மீது மட்டும் ஏன் அக்கறை காட்டுகிறதென அரசாங்கம் கேள்வி எழுப்புகிறது. அண்மைக் காலமாகவே நாளாந்தம் வன்முறைகள் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டிய போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு பேச்சாளர் தொபினூர் ஒமர்சன், சம்பந்…
-
- 0 replies
- 1.6k views
-
-
கொழும்பு இந்து காபோ.தா சாதாரணதரப்பரீட்சையில் 10A சித்திகளை 10 மாணவர்களும் 38 மாணவர்கள் 9A சித்திகளையும் பெற்று சாதனை படைத்தது இருகின்றனர்,ஒரு மாணவன் கூட அனைத்து பாடங்களிலும் சித்தியடையாமல் இல்லாமல் இருந்தது மற்றுமொரு சாதனை.கடந்த ஆண்டு 5 பரீட்சையிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்று தமிழ் மாணவர்களின் பெருமையை இலங்கையின் தலைநகரில் ஏற்படுத்தி கொடுத்துள்ள ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பழைய மாணவன் என்ற ரீதியில் நன்றிகளும் பாராட்டுக்களும்.
-
- 11 replies
- 3.1k views
-
-
வணக்கம் நண்பர்களே.... Youtube.com ல் கட்டுநாயக்க தாக்குதல் (2001) தொடர்பாக ஓர் video பார்த்தன்...நீங்களும் பார்த்மகிழுங்கள்... http://www.youtube.com/watch?v=SFACTcX8Qb8...ser&search=
-
- 1 reply
- 1.8k views
-