ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்வது விடுதலைப் புலிகளென்பது உறுதியாகியுள்ளது [19 - April - 2007] -கடற்படை அதிகாரி கூறுகிறார் -கே.பி.மோகன்- இந்திய மீனவர்களை சுட்டுக் கொலை செய்வது விடுதலைப் புலிகளென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் டீ.கே.பி.தசநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்திய மீனவர்களை கடற்படையினரே சுட்டுக் கொன்றனர் என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றதென நிருபிக்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார். கொழும்பில் நடந்த பாதுகாப்பு தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறினார். இலங்கை- இந்திய கடற்படையினர் அவரவர் கட்டுப்பாட்டு கடற் பகுதிகளில் மேற்கொண்டு வரும் 24 மணிநேர கடற் கண்காணிப்பு மற்றும் க…
-
- 8 replies
- 3.3k views
-
-
குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் பயங்கரவாதம் பற்றி பேச இலங்கை வருகிறார் [19 - April - 2007] - புதிய இடதுசாரி முன்னணி கண்டனம் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் பயங்கரவாதம் பற்றி இலங்கையில் பேசுவதற்கு முன்வந்துள்ளதாக புதிய இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக புதிய இடதுசாரி முன்னணி வெளியிட்ட அறிக்கையில்; போல்க் றொவிக் எனும் நோர்வே நாட்டு பயங்கரவாத எதிர்ப்பாளர், வெள்ளிக்கிழமை கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் `இலங்கையிலும், மூன்றாம் மண்டலநாடுகளிலம் பயங்கரவாத வளர்ச்சி' என்ற தொனிப் பொருளில் உரையாற்றவுள்ளார். உலக சமாதான அமைப்பினர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர் எனக்கூறப்படுகின்றபோதிலும் உண்மையில் இதன் பின்னணியில் பாதுகா…
-
- 7 replies
- 2.5k views
-
-
பிணையெடுக்க நாட்டில் எவருமில்லை தமிழ் இளைஞன் நீர்கொழும்பு சிறையில் [19 - April - 2007] - த. தர்மேந்திரா - தமிழ் இளைஞர் ஒருவரை பிணையில் விடுதலை செய்வதற்கு அவரது இரத்த உரித்துடைய உறவினர்கள் எவருமே நாட்டில் இல்லாததால் அவர் சிறையில் தடுத்து வைக்கப்படும் நிலையேற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பைச் சேர்ந்தவரும் கடவுச்சீட்டு மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவருமான வன்னியசிங்கம் இராஜசீலன் (வயது- 30) என்பவரே சரீரப் பிணையில் விடுதலையாவதற்கு இரத்த உரித்துடைய உறவினர்கள் எவரும் இலங்கையில் இல்லாததால் நீர்கொழும்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு நீதிவான் காந்தி வணிகசேகர இவ்விளைஞனை 10,000 ரூபா காசுப் பிணையிலும் தலா 50,000 ர…
-
- 0 replies
- 968 views
-
-
ரணிலிடம் தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் பதில்கள் [19 - April - 2007] ஜனாதிபதியின் சகோதரர் கோதாபய ராஜபக்ஷ போரையும் நாட்டின் பாதுகாப்பு நிலைவரத்தையும் தவறாகக் கையாளுவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவரை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து அகற்றவேண்டுமென்று விடுத்த கோரிக்கை அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. விக்கிரமசிங்க அந்தக் கோரிக்கையை விடுத்ததுடன் நின்றுவிடவில்லை. பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக யாரை நியமிக்க வேண்டுமென்று அரசாங்கத்துக்கு ஆலோசனையும் வழங்கியிருக்கிறார். 1990 களில் போரில் பல சமர்களை வென்றவர் என்று வர்ணிக்கப்படுகின்ற ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவையே பாது…
-
- 5 replies
- 1.8k views
-
-
மகிந்தரின் கிழக்குப் போர் விரைவில் முட்டுச் சந்திக்கு வரும்? [19 - April - 2007] சங்கரன் சிவலிங்கம் (கனடா) தமிழ் மக்களின் அபிலாஷைகளை மட்டுமல்ல, சர்வதேச நியமங்கள், விழுமியங்களையும் புறக்கணித்துவிட்டு ஷ்ரீலங்கா அரசு தமிழர் தாயகத்தின் மீது மிலேச்சத்தனமான யுத்தமொன்றை நடத்திக் கொண்டிருக்கின்றது. இந்த யுத்தத்தினால் மட்டக்களப்பின் படுவான்கரை பகுதி சின்னாபின்னமாக்கப்பட்டுள்ள
-
- 3 replies
- 2.4k views
-
-
அமெரிக்காவில் அல்-ஹைடாவின் அடுத்த தாக்குதலுக்கு புலிகள் அமைப்பு உதவி [19 - April - 2007] ஒசாமா பின்லேடனின் அல்-ஹைடா அமைப்பினர் ஐக்கிய அமெரிக்காவில் மேற்கொண்ட இரட்டை கோபுரத் தாக்குதல்களின் பின்னர் அல்-ஹைடா சந்தேக நபர்கள் ஐக்கிய அமெரிக்காவுக்குள் போலிக் கடவுச்சீட்டுகளைப் பிரயோகித்து பிரவேசிப்பதைத் தடுப்பதற்காக கடவுச்சீட்டுகளைப் பரிசோதனை செய்வதில் பல்வேறு கடுமையானதும் நுணுக்கமானதுமான நடைமுறைகளை அமெரிக்க குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலம் கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் அல்-ஹைடா அமைப்பினர் ஐக்கிய அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் ஒன்றைத் தொடுப்பதற்காக முயற்சித்து வருவதாகவும், இதற்காக அமெரிக்காவுக்குள் அமெரிக்க …
-
- 11 replies
- 2.7k views
-
-
போர் நிறுத்தம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு - தேவை ஏற்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவிப்பு [19 - April - 2007] -கே.பி.மோகன்- போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பாக முடிவொன்றுக்கு வர சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு தகவல் நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வாராந்த பாதுகாப்பு செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் கூறியதாவது; சர்வகட்சி மாநாட்டில் இந்த விடயம் தொடர்பாக ஆழமாக ஆராயப்பட்டுள்ளது. ஆனாலும், இன்னும் இறுதித் தீர்மானத்திற்கு வரவில்லை. அநேகமாக சர்வஜன வாக்கெடுப்பொ…
-
- 1 reply
- 705 views
-
-
படகு அகதிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்; அமெரிக்கா சென்று வாழ்வதற்கு வசதி சிட்னி,ஏப்.19 அகதி அந்தஸ்து கோரும் பொருட்டு ஆஸ்திரேலியா நோக்கிப் படகில் சென்ற வேளை பிடிபட்டு இப்போது பசுபிக் தீவான நவ்றுவில் தங்கவைத்து விசாரிக்கப்படும் 83 இலங்கைத் தமிழர்களும் அமெரிக்காவில் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்படும் எதிர்பாராத திருப்பமும் வாய்ப்பும் கிடைத்துள்ளன. வாஷிங்டனில் கடந்த வாரம் அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் கைச்சாத்தான "பரஸ்பர உதவி ஒப்பந்தம்' இலங்கைத் தமிழர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாகக் கிடைத்துவிட்டது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், "நவ்று' தீவில் வைத்து விசாரிக்கப்படும் 83 இலங்கைத் தமிழர்கள் அமெரிக்காவில் அகதிகளாக ஏற்றுக்குடியமர்த்தப்படுவர். அதே போன…
-
- 23 replies
- 4.3k views
-
-
நாகர்கோவிலில் ஒருவர் சுட்டுக்கொலை நாகர்கோவிலில் படையினரின் முன்னரங்கக் காவலரணுக்குள் பிரவேசிக்க முற்பட்டார் எனக் கூறப்படும் நபர் ஒருவர் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக தேசிய பாதுகாப்பு ஊடகநிலையம் தெரிவித்திருக்கிறது. இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 6.10 மணியளவில் இடம் பெற்றுள்ளது. குறிப்பிட்ட நபர் படையினரின் முன்னரங்கக் காவ லரணுக்குள் அத்துமீறி நுழைந்தார் என்றும், இவ்வாறு நுழைந்தவர் விடுதலைப்புலி உறுப்பினர் என்றும், இவர் மீது படையினர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டனர் என்றும் ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. (சி) உதயன்
-
- 0 replies
- 611 views
-
-
தமிழர்களின் அவலக் குரலுக்கு சர்வதேசம் செவிசாய்க்க வேண்டும் தமிழ் மாணவர் ஒன்றியம் அறிக்கை சர்வதேசம் தனது அலட்சியப் போக்கை நீடிக்காது, தமிழர்களின் அவலக் குரல்களுக்குச் செவிசாய்க்கவேண்டும். அவ்வாறின்றி அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு துணைபோகுமானால், அது தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகவே அமையும். இவ்வாறு தமிழ் மாணவர் ஒன்றியத்தின் யாழ். மாவட்டப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குடாநாட்டில் இளம் சந்ததியினர் பெரும் எண்ணிக்கையில் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றனர். ஆனால், அத்தகைய அநீதிகள் வெளி உலகத்திற்குத் தெரியாதவாறு அரசினால் திட்டமிட்டு வியூகங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எடுத்துச…
-
- 0 replies
- 609 views
-
-
சடலம் மீட்பு ஏழாலை மத்தியில் வயல் கிணற்றிலிருந்து நேற்று (17.04.2007) குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த பேரம்பலம் தங்கராசா (வயது 58) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை (16.04.2007) இரவு வயலுக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தவர்கள் நேற்று வயலுக்கு சென்று கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டுள்ளனர். உதயன்
-
- 0 replies
- 680 views
-
-
அல்லைப்பிட்டிக் காவலரணில் இருந்து தீர்க்கப்பட்ட வேட்டுக்குச் சிப்பாய் பலி! யாழ்ப்பாணம்,ஏப்.19 அல்லைப்பிட்டியில் கரையோரமாக அமைந்துள்ள படையினரின் காவலரண்களில் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். செவ்வாயன்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், கொல்லப்பட்ட சிப்பாயின் மரண விசாரணை ஊர்காவற்றுறை நீதிவான் ஜெயராமன் றொக்ஸி முன்னிலையில் நேற்று இடம்பெற்றது. படையினரின் காவல் நிலையை நோக்கி ஒருவர் வந்தார். அவரை யார் என விசாரித்தபோது சம்பந்தப்பட்டவர் குரல் கொடுக்காததையடுத்து, காவலரணில் நின்ற படையினர் வேட்டுக்களைத் தீர்த்தனர். அப்போது அவர் உயிரிழந்தார் என்றும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. விசார…
-
- 0 replies
- 820 views
-
-
சமஷ்டி முறையில் அதிகாரப் பகிர்வு இவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசியல் தீர்வுக்கான முன்னெடுப்புகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். எம்மைப் பொறுத்தவரை 60 ஆண்டுகளாக நீடித்து நிலவும் இப்பிரச்சினைக்கு தற்போதைய தருணத்தில் நிரந்தரத் தீர்வு காண்பதற்கான செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். மூன்று தசாப்த யுத்தம் மற்றும் வன்முறைகளாலும் உயிரிழப்புகள், சொத்து அழிவுகளாலும் மக்கள் மிகவும் களைப்படைந்துவிட்டனர். அன்றாட அவலங்கள் தொடர்பான எமது அக்கறையுடன் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றை எட்டுவதற்கே அரசு முன்னுரிமை அளிக்கவேண்டும். ஜனநாயகத்தையும், சமாதானத்தையும், அமைதியையும் நேசிக்கும் சாதாரண தமிழ் மக்களின் ஏக்கமும் இதுதான். சமூகத்தின் பல்வேறு மட்…
-
- 0 replies
- 780 views
-
-
திருத்தந்தையின் தரிசனமாவது திருந்தி நடக்க வழிசெய்யுமா? ` இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமாக மீறப்பட்டு வருகின்றமை இன்று சர்வதேச விவகாரமாகியிருக்கின்றது. இக்குற்றச்சாட்டுகள் ஆயுதக்குழுக்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகள் போன்றவற்றுக்கு எதிராக மட்டுமல்லாமல், நாட்டின் அரசுக்கும் அதன் தலைமைக்கும் எதிராகவும் கூட பரவலாக முன்வைக்கப்பட்டு வருவதுதான் இங்கு முக்கிய பிரச்சினை. அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் ஆட்கடத்தல்கள், அச்சுறுத்திக் கப்பம் அறவிடுதல், ஆட்கள் காணாமற் போகச் செய்தல், படுகொலை செய்யப்படல் என்று அராஜகங்கள் அளவுக்கு அதிகமாக நடக்கின்றன. இக்கொடூரங்களைத் தடுப்பதற்கு அரசுத் தரப்பு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்காமல் உதாசீனமாக நடந்து…
-
- 0 replies
- 582 views
-
-
இரணைமடு ஓடு தளத்தை அண்மித்த பகுதிகளின் மீது ஜெட் விமான தாக்குதல் நடத்தப்பட்டது: விமானப்படை பேச்சாளர். இலங்கை விமானப் படையினர் ஜெட் விமானத்தை பயன்படுத்தி இரணைமடு விமான ஓடு தளத்தை அண்மித்த பகுதிகளின் மீது நேற்று முன்தினம் இரவு விமான தாக்குதல்களை மேற்கொண்டனர் என்று விமானப்படை பேச்சாளர் குரூப்கெப்டன் அஜந்த டி சில்வா தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; இரணைமடு விமான ஓடு தளத்தை அண்மித்த வடகிழக்கு பகுதிகளில் நேற்று முன்தினம் சந்தேகத்திற்கிடமான வாகன நடமாட்டங்கள் அதிகரித…
-
- 4 replies
- 1.4k views
-
-
பேச்சு நடத்த நோர்வேத் தூதுவர் வன்னிக்கு விஜயம்: புலிகள் நடத்திய வான் தாக்குதலின் பின்னர் அங்கு வரும் முதலாவது முக்கிய ராஜதந்திரி. * வடக்கு கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்களைத் தணிப்பது. * கடந்த வருடம் ஒக்ரோபருக்குப் பின்னர் ஒரேயடியாகத் தேக்கநிலை அடைந்திருக்கும் சமாதானப் பேச்சுக்களின் எதிர்காலக் கதி. இவை இரண்டு குறித்தும் விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்துவதற்காக இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர், எதிர்வரும் திங்கட்கிழமை வன்னிக்கு முக்கிய விஜயம் ஒன்றை மேற்கொள்கிறார். கடந்த பெப்ரவரி மாதத்தின் பின்னர் இப்போது இங்கு வருகைதரும் நோர்வேத் தூதுவர், விடுதலைப் புலிகள் கடந்த மாதம் 26ஆம் திகதி, கட்டுநாயக்கா விமானத்தளம் மீது தாக்குதல் நடத்திய பின்னர் வன்னி…
-
- 1 reply
- 896 views
-
-
போருக்கு அழைப்பு விடுத்து கொழும்பில் சுவரொட்டிகள். "யுத்தத்திற்குத் தயாராகுங்கள்" என்று யுத்தத்துக்கு அழைப்பு விடுக்கும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் நேற்று கொழும்பு நகர வீதிகளெங்கும் ஒட்டப்பட்டிருந்தன. "கலாசாரத்துக்காகப் போராடும் முன்னணி" என்ற புதிய அமைப்பு ஒன்றின் பெயரில் இந்தச் சுவரொட்டிகள் காணப்பட்டன. -Uthayan-
-
- 7 replies
- 2k views
-
-
சங்கரி - சித்தார்த்தன் - பத்மநாபா அணி ஐக்கியப்பட்டு செயற்படுவதற்கு முடிவு ஏனைய தரப்புகளுக்கும் அழைப்பு. வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, த.சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா அணி) ஆகியன ஐக்கியப்பட்டுச் செயற்படத் தீர்மானித்திருப்பதாக அறிவித்திருக்கின்றன. தங்களது நிலைப்பாட்டுடன் இணைந்து செயற்பட விரும்பும் அனைத்து அரசியல், சமூக சக்திகளுடனும் தாங்கள் ஐக்கியமாகச் செயற்ப்படத் தயார் என இந்த அமைப்புகளின் தலைவர்கள் கூட்டாக அறிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக புளொட் தலைவர் என்ற வகையில் த.சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என்ற வகையில் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எவ். பொதுச்…
-
- 5 replies
- 1.4k views
-
-
சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய வேம்படி மாணவிகள் 232 பேரும் சித்தி அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம்இஏப்.18 கடந்த வருடம் நடைபெற்ற ஜி.சீ.ஈ. (சாதாரண) தரப் பரீட்சையில் சித்தியடைந்த யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று முற் பகல் 10 மணிக்கு கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. கல்லூரியின் அபிவிருத்திச் சங் கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. இந்தப் பரீட்சைக்குத் தோற்றிய 232 மாணவிகளும் சித்தி அடைந் துள்ளனர். அவர்கள் அனைவரும் உயர்தர வகுப்பில் கல்வியைக் தொடரக் கூடிய தகுதியைப் பெற் றுள்ளனர். கணிதப்பாடத்தில் 154 மாண விகள் "ஏ' விசேட சித்தி பெற்றுள் ளனர். விஞ்ஞான பாடத்தில் 228 மாணவிகள் சித்திபெற்றுள்ளனர். அ…
-
- 17 replies
- 2.3k views
-
-
வவுனியாவில் சிறிலங்காப் படையினர் மீது கைக்குண்டு வீச்சு: ஒருவர் பலி வவுனியாவில் சிறிலங்காப் படைத்தரப்பினர் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இராணுவத் தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். வவுனியா ஈரப்பெரியற்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நின்ற படையினர் மீது நேற்று புதன்கிழமை இரவு 8.45 மணியளவில் இக்கைக்குண்டு வீசப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் ஒருவர் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் ஆவார். -புதினம்
-
- 1 reply
- 634 views
-
-
கொழும்பு ஊடகத்தின் குற்றச்சாட்டு தவறானது: நோர்வே நோர்வே பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக பயங்கரவாதத்திற்கு எதிரான நோர்வே மக்கள் என்ற அமைப்பு தெரிவித்த கருத்தை நோர்வே அரசாங்கம் மறுத்துள்ளது. கொழும்பில் இருந்து வெளிவரும் 'சண்டே ரைம்ஸ்' வெளியிட்ட கட்டுரை தொடர்பாக நோர்வேயின் வெளிவிவகார அமைச்சு ஒரு திறந்த கடிதத்தை அதன் தலைமை ஆசிரியருக்கு எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் நோர்வேயின் வெளிவிவகார அமைச்சின் தகவல் தொடர்பு தலைமை அதிகாரியான றோய் பிரெடி அன்டேர்சன் தெரிவித்துள்ளதாவது: சண்டே ரைம்சில் ஏப்ரல் 15 ஆம் நாள் 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கட்டுரையில் நோர்வே பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக பயங்கரவாதத்திற்கு எதிரான நோர்வே மக்கள் என்ற அமைப்பு கருத்து தெரிவித்திருப்ப…
-
- 3 replies
- 1.2k views
-
-
அனைத்துலக இராஜதந்திரிகளுக்கு சிறிலங்கா அரசு கடும் எச்சரிக்கை "சிறிலங்காவின் சட்ட விதிகளை மீறும் இராஜதந்திரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயங்க மாட்டாது" என்று அந்நாட்டு அரசாங்கம் எச்சரித்துள்ளது. நேற்று புதன்கிழமை நடைபெற்ற வாராந்த பாதுகாப்பு மாநாட்டிலேயே பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: "அரசாங்கம் சில இராஜதந்திரிகளின் (பெயர்கள் குறிப்பிடப்படவில்லை) நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. நாம் சுற்றி வளைத்து பேச விரும்பவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் சிறிலங்காவின் விவகாரங்களில் தலையிட்டமைக்காக பிரித்தானியாவின் இராஜதந்த…
-
- 4 replies
- 992 views
-
-
'அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரே சிறிலங்காவில் மோதல்கள் அதிகரிப்பதற்கு காரணம்': ஜெனீவா அறிக்கை "அமெரிக்காவினால் அனைத்துலக ரீதியில் முன்னெடுக்கபட்டு வரும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரே சிறிலங்கா போன்ற பல நாடுகளின் உள்நாட்டுப் போர்கள் உக்கிரமடையக் காரணம். இந்த நாடுகள் அமெரிக்காவின் சொற்பதத்தை பயன்படுத்தி உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு இராணுவத் தீர்வைக் காணும் முயற்சியில் இறங்கியுள்ளன." நோர்வேயின் அகதிகளுக்கான சபையின் ஒரு பிரிவான உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான கண்காணிப்பு மையம் ஜெனீவாவில் வெளியிட்ட தனது 2006 ஆம் ஆண்டுக்கான அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பயங்கரவாதத்திற்…
-
- 0 replies
- 683 views
-
-
''17ஆவது ஆண்டில் புதிய பாய்ச்சலுக்காக காத்திருக்கும் சாள்ஸ் அன்ரனி படையணி'' - தெ.றஞ்சித்குமார்- விடுதலைப் போராட்டம் இன்று விடுதலைப்புலிகளின் படையணிகளோடும், புதிய படைணிகளின் அறிமுகங்களோடும் எதிரிக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறது. விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வரை ஆரம்பகால கட்டங்களில் இலக்குகள் மீது தாக்குதல்கள் நடாத்துவதற்கு ஈருருளிகளைக்கூட விடுதலைப்புலிகள் பயன்படுத்தியுள்ளனர். போராட்ட வளர்ச்சிக்கால கட்டங்களில் சிறிய குழுக்களாக பெரும் இராணுவ பலங்களின் நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப்புலிகள் முகம் கொடுத்தார்கள். அதன் ஒரு தொடர்ச்சியாக விடுதலைப்புலிகள் கெரில்லா ரீதியான நடவடிக்கையை மேற் கொண்டு, அடுத்த கட்டமா…
-
- 1 reply
- 1.1k views
-
-
புதன் 18-04-2007 21:03 மணி தமிழீழம் [மயூரன்] 3 மாதத்திற்கு பின்னரே படுவான்கரை மக்கள் மீள்குடியேற்றப்படுவர் - பசில் ராஜபக்ச படுவான்கரை மக்களை மீளவும் குடியேற்றுவது தொடர்பில் சிறீலங்கா அதிபரின் ஆலோசகர் பசில் ராஜபக்சவின் தலைமையில் கொழும்பு அரச செயலகத்தில் மட்டக்களப்பு அரச அதிபர் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் சந்தி்ப்பு ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் மட்டுக்களப்பு படுவான்கரை மக்களை மூன்று கட்டங்களாக மீளவும் குடியேற்ற சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இவ் மீள் குடியேற்றங்கள் எதிர்வரும் யூலை 30 நாளுக்குப் பின்னரே சாத்தியப்படும் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முதலாவது மீள் குடியேற்றம் வெல்லாவெளிப் பிரதேசத்திலும், இரண்டாவது மீள் குடியேற்றம் பட்ட…
-
- 0 replies
- 922 views
-