ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142757 topics in this forum
-
தினமணி இப்பிடி - சொல்லுதாம்... வேற எங்கையும் வாசிசவங்க - சொல்லுங்க ! ஏற்கனவே - இது இணைக்கப்படாதிருந்தால்! http://www.dinamani.com/NewsItems.asp?ID=D...7Ls&Topic=0
-
- 12 replies
- 3.5k views
-
-
2006 தைமாதம் கடத்தப்பட்ட ஏழு த.பு.க.பணியாளர்களை விடுவிக்க ஒத்துழைக்குமாறு கோரிக்கை. - பண்டார வன்னியன் Tuesday, 30 January 2007 15:27 கடந்த ஆண்டு முற்பகுதியில் 29-01-2006, 30-01-2006 ஆகிய இருதினங்களில் பொலநறுவை மாவட்ட எல்லைப்பகுதியான வெலிக்கந்தை இராணுவ சோதனைச்சாவடிக்கு அருகாமையில் ஆயுதக்குழுவொன்றினால் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் ஏழு நிலமை என்னஎன்பதை இன்னமும் அறியமுடியாமல் இருக்கின்றது. சர்வதேச மனிதஉரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையின் வடிவம் வருமாறு- கடந்த ஆண்டு முற்பகுதியில் 29-01-2006, 30-01-2006 ஆகிய இருதினங்களில் பொலநறுவை மாவட்ட எல்லைப்பகுதியான வெலிக்கந்தை இராணுவ சோதனைச்சாவடிக்கு அருகாமையில் …
-
- 0 replies
- 730 views
-
-
செவ்வாய் 30-01-2007 14:08 மணி தமிழீழம் [மகான்] சாம்பல்தீவு தமிழ் விவசாயி சுட்டுக்கொலை இன்று காலை இனம்தெரியாத ஆயுததாரிகளால் 50 அகவையுடைய தமிழ் விவசாயி ஒருவர் சாம்பல்தீவு கிராமத்தின் அயல்கிராமமான ஆத்திமோட்டையில் சுட்டுக்கnhல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் சாம்பல்தீவை சேர்ந்த தர்மன் என இனம்காணப்பட்டுள்ளார். இவரது உடலமானது உப்புவெளி காவல்நிலையத்தில் கையளிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. http://www.pathivu.com
-
- 0 replies
- 852 views
-
-
புலிகளுக்கு நிதியுதவிகள் சென்றடைவதை தடுக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது: றொபேட் ஒ பிளேக். அபிவிருத்திப்பணிகளுக்கு சமாதானம் முக்கிய காரணமென அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஒ பிளேக் தெரிவித்தார். காலியில் நேற்று இடம்பெற்ற உதவி வழங்கும் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது: இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சமாதானம் முக்கியமாகவுள்ளது. அரசியல் தீர்விற்கான பேச்சுவார்த்தைமூலமே இது சாத்தியமாகும். இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் திருப்தியான அரசியல் தீர்வை காண்பதற்கான அதிகாரப்பகிர்விற்கான தீர்வுத்திட்டம் குறித்து அரசாங்கம் முன் முயற்சிகளை எடுத்து வருவது க…
-
- 0 replies
- 884 views
-
-
மன்னார் தீவை நிலப்பகுதியுடன் இணைப்பதற்கு ஜப்பான் உதவி. மன்னார் தீவை நிலப்பகுதியுடன் இணைப்பதற்கு ஐப்பான் 30 மில்லியன் ரூபா பெறுமதியான பணஉதவியை நன்கொடையாக வழங்கியுள்ளது. இப்பணத்தின் உதவியுடன் பழைய பாலத்திற்குப்பதிலாக 157 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமுமான புதிய பாலமொன்று அமைக்கப்பட உள்ளது. இது மட்டும் அன்றி மதாவாச்சியிலிருந்து மன்னார், தலைமன்னார் ஊடாக செல்லும் கடல்பாதையை (CAUSE WAY) அபிவிருத்தி செய்யவும் ஐப்பான் உதவ உள்ளது. தற்போது பாவனையிலுள்ள பாலம் 1930 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதாகும். இப்பாலம் 1990 இல் இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில் சேதப்படுத்தப்பட்டது. இது பின்னர் தற்காலிகமாக மீண்டும் திருத்தப்பட்டது. பாலம் தவிர கடற்பாதையும் கடல்மட்டம் உயரும் போத…
-
- 0 replies
- 812 views
-
-
சிறீலங்காவில் இனப்போர் உக்கிரமடையத் தொடங்கிய 1981 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரையான காலப்பகுதியில் இராணுவ நீதிமன்றத்தின் விசாரணைகளை எதிர்நோக்கியுள்ள உயர்ந்த படையதிகாரி என்ற பெயரை சிறீலங்காக கடற்படையின் தென்பகுதிக் கட்டளைத்தளபதி பெற்றுள்ளார். சிறீலங்காவில் இனப்போர் உக்கிரமடையத் தொடங்கிய 1981 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரையான காலப்பகுதியில் இராணுவ நீதிமன்றத்தின் விசாரணைகளை எதிர்நோக்கியுள்ள உயர்ந்த படையதிகாரி என்ற பெயரை சிறீலங்காக கடற்படையின் தென்பகுதிக் கட்டளைத்தளபதி பெற்றுள்ளார் http://www.eelampage.com/?cn=30658 அவன் என்னப்பா செய்வான் புலிகள் ஊடுறுவியதுக்கு அவன் காப்பெடுத்து பதுங்கியது தப்பா ஏன் மகிந்தவின் ஊரை தாண்டியெல்லோ வந்து சாத்தி இருகிறாங்கள் அதுதான் …
-
- 0 replies
- 969 views
-
-
அரசாங்கத்தில் இணைய ஹெல உறுமய ஆர்வம். அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர் பதவி பெறுவது தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்துவரும் ஜாதிக ஹெல உறுமய, அது தொடர்பான இறுதித் தீர்மானத்தை இன்று செவ்வாய்க் கிழமை மேற்கொள்ளவுள்ள அதேவேளையில், ''ஐ.தே.க. அரசாங்கத்தில் இணையவும், அமைச்சர்களின் தொகை அதிகரிக்கவும் வழிவகுத்த பொறுப்பை ஜே.வி.பி.யினரே ஏற்றுக்கொள்ள வேண்டும்" எனவும் குற்றஞ்சாட்டியிருக்கின்றது. இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளரும் மத்திய குழு உறுப்பினருமான நிசாந்த சிறீ வர்ணசிங்க தகவல் தருகையில் மேலும் கூறியதாவது: ''அரசாங்கத்தில் இணைந்துகொண்டு அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ எமக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். இது தொட…
-
- 1 reply
- 894 views
-
-
இராதா கிருஷ்ணனிடமிருந்து பிரதி அமைச்சுப் பதவி பறிப்பு. மலைய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராதா கிருஷ்ணனின் பிரதி அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. நேற்றைய அமைச்சரவை மாற்றத்தின்போது அவருக்கு அமைச்சுப் பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை. அமைச்சரவை மாற்றத்திற்கு முன்பு அவர் தொழில் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி பிரதி அமைச்சராகவிருந்தார். தமிழர்கள் கடத்தப்படுவதற்கும் கைதுசெய்யப்படுவதற்கும் எதிராக அரசிற்குள் இருந்துகொண்டுஅவர் பேசிவந்தார். இருநாட்களுக்கு முன் பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க்கைதிகள் 33 பேர் விடுவிக்கப்படுவதற்கு இவரது கடும் முயற்சி காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. வெளிவிவகாரத்தை இழந்தார் மங்கள! அதிர…
-
- 2 replies
- 1.4k views
-
-
முஸ்லீம்களுக்கான தனியான மாவட்டம் ? கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களுக்கான தனியான மாவட்டம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு சிறீலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இணைவதற்கு முன்வைத்த நிபந்தனைகளில் முக்கியமானதாக கருதப்படும் முஸ்லீம்களுக்கான தனியான மாவட்டம் தொடர்பான கோரிக்கையை சிறீலங்கா ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாக முஸ்லீம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன கல்முனை பொத்துவில் மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக இந்த மாவட்டம் அமைக்கப்படவுள்ளது சிறீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் இன்று இடம்பெறும் போது முஸ்லீம் காங்கிரசும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது -Path…
-
- 30 replies
- 6.2k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்தியா பயணம். தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவுக்குப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளனர். கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடன் சுரேஷ் பிரேமச்சந்திரனும் பயணமாகியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களின் தற்போதைய சூழ்நிலை உட்பட, பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும், தங்களது முன்னைய சந்திப்பில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும், இந்திய தலைவர்களுடன் இவர்கள் பேச்சு நடத்தவுள்ளனர். ஏற்கனவே டில்லி சென்று இந்தியப் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பல முக்கிய தலைவர்களைச் சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், அதற்கு முன்னதாக தமிழ்நாட்டில் முதலமைச்சர் கலைஞர் மு.கருணா…
-
- 1 reply
- 979 views
-
-
*ஆராய 5 சட்டத்தரணிகளை கொண்ட குழு - ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் - சட்டக் கல்லூரி அனுமதியில் தமிழ் மொழி மூலமான பரீட்சார்த்திகளுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க 5 சிரேஷ்ட சட்டத்தரணிகளைக் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்க பேரவையின் கூட்டம், சங்கத்தின் அலுவலகத்தில் அதன் தலைவர் நிஹால் ஜயமான தலைமையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த சட்டத்தரணிகள் சங்க முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் சட்டக் கல்லூரிக்கு தமிழ் மொழி மூலமான பரீட்சார்த்திகள் தெரிவு செய்யப்படுவது குறித்து மூத்த சட்டத் தரணி நீலகண்டன் சட்டத் தரணிகள் சங்க பேரவையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். …
-
- 0 replies
- 872 views
-
-
* 600 குடும்பங்கள் இருப்பிடங்களை இழந்து விடும் அபாயம் மூதூர் கிழக்கில் அனல்மின் நிலையத்தை அமைப்பதற்காக அரசு தமிழர்களுக்கு சொந்தமான சுமார் ஐந்நூறு ஏக்கர் நிலத்தை சுவீகரிக்கவுள்ளதாகத் தெரிய வருகிறது. மூதூர் கிழக்கில் சம்பூர் பகுதியில் மிக விரைவில் இந்த அனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்பப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதியில் இடம்பெற்ற பாரிய இராணுவ நடவடிக்கையால் 40,000 க்கும் மேற்பட்ட மக்கள் மூதூர் கிழக்கில் 12 க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து வெளியேறிய நிலையில் தற்போது சம்பூர் பகுதியில் 500 ஏக்கர் நிலத்தை இந்த அனல்மின் நிலையம் அமைப்பதற்காக சுவீகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மூதூர் கிழக்கு மக்கள் தற்போது…
-
- 0 replies
- 618 views
-
-
வாகரைப் பகுதியில், 17 கிளேமோர் குண்டுகள் பொருத்தப்பட்ட நிலையில் கடற்புலிகளின் தற்கொலைத் தாக்குதல் படகொன்றை படையினர் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த 17 கிளேமோர்களை விட சுமார் 30 கிலோ ரி.என்.ரி. ரக வெடி மருந்தும் அந்தப் படகினுள் வைக்கப்பட்டிருந்ததாக படைத் தரப்பு தெரிவித்துள்ளது. மேற்படி 17 கிளேமோர்களும் 30 கிலோ வெடி மருந்தும் ஒரே நேரத்தில் வெடிக்கும் விதத்தில் வயர்கள் மூலம் இணைப்புகள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாரிய தாக்குதலொன்றுக்காக கடற்கரும்புலிகள் இந்தப் படகைத் தயார் நிலையில் வைத்திருந்த போதே படையினர் வாகரையை கைப்பற்றியதன் மூலம் அங்கிருந்து இந்தப் படகையும் கைப்பற்ற முடிந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். வாகரைப் …
-
- 0 replies
- 980 views
-
-
மூவர் பொலிஸாரால் கைது - கே.பி. மோகன் - கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள மறைவிடமொன்றிலிருந்து சட்ட விரோதமான முறையில் மறைத்து வைத்திருந்த பொருட்கள் சிலவற்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, இப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தவர்களென சந்தேகிக்கப்படும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். டோர்ச்லைட்டுகள், பற்றறிகள், இறுவெட்டுகள், கையடக்க தொலைபேசிகள், பெற்றோல், மருந்து வகைகள், பன்டேஜ் ஆகியனவே பெருந்தொகையில் கைப்பற்றப்பட்டுள்ளன. இப்பொருட்கள் கடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்த பொலிஸார், சந்தேக நபர்களிடமிருந்து இரகசியங்களை பெற்றுக் கொள்ள தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் …
-
- 0 replies
- 767 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஐக்கிய தேசியக் கட்சி செய்துகொண்ட நல்லாட்சிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை காலாவதியாகிவிட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த ஐ.தே.கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ருக்மன் சேனாநாயக்க உடன்படிக்கையின் நகலை கிழித்தெறிந்ததோடு இனிமேல் அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியான எதுவிதமான ஒத்துழைப்பையும் தமது கட்சி வழங்காதென்றும் அறிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே ருக்மன் சேனாநாயக்க இந்த அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில், கட்சி எதுவிதமான அறிவித்தலையும் வழங்காது, செயற்குழுவின் அனுமதியின்றி அரசாங்கத்துடன் இணைந்து பதவிகளை …
-
- 0 replies
- 829 views
-
-
பிரிந்து சென்றோரின் கட்சி அங்கத்துவத்தை பறிப்பதற்கு ஐ.தே.கட்சி சட்ட நடவடிக்கை. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்று அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டவர்களின் கட்சி அங்கத்துவத்தைப் பறிப்பதற்கும் அவர்களின் தொகுதிகளுக்குப் புதிய அமைப்பாளர்களை நியமிப்பதற்குமான நடவடிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அக்கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனாநாயக்க நேற்றுத் தெரிவித்தார். கட்சியைவிட்டு பலர் பிரிந்து சென்றார்கள் என்பதற்காக கட்சி பலமிழந்து விட்டது என்று அர்த்தமல்ல. கட்சியைப் பலமிழக்கச் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையையும் தகர்த்தெறியும் மாற்றுத் திட்டம் எம்மிடம் உள்ளது. எமது பலம், கட்சி உறுப்பினர்கள் அல்லர்; கட்சிக்கு வாக்களித்த மக்கள்தான். கட்சிய…
-
- 0 replies
- 636 views
-
-
(தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய "விடுதலை" என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலில் இருந்து சில பகுதிகள் - நன்றி: பெரியார் முழக்கம் வார ஏடு) விடுதலைப்புலிகள் தலைமை தாங்கி முன்னெடுத்து வரும் தமிழீழ சுதந்திர இயக்கத்திற்கு எம்.ஜி.ஆர். அவர்கள் நல்கிய உதவி அளப்பரியது. எல்லாவற்றையுமே முழுமையாக இங்கு ஆவணப்படுத்த முடியாதபோதும், ஒரு சில முக்கிய சம்பவங்களையாவது பதிவு செய்வது வரலாற்று ரீதியாகப் பயன்படும் எனக் கருதுகிறேன். இப்பொழுது தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகள் என்ற சொல்லை உச்சரிப்பதே சட்ட விரோதமான ஒரு குற்றச் செயலாகக் கருதப்படுகிறது. எம்.ஜி.ஆர். அவர்கள் வளர்த்து விட்ட அ.தி.மு.க. கட்சியும், அதன் தலைமையும் இன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த…
-
- 0 replies
- 1k views
-
-
உதவி வழங்கும் சமூகம் இராணுவத் தீர்வுக்கு எதிர்ப்பு [செவ்வாய்க்கிழமை, 30 சனவரி 2007, 08:06 ஈழம்] [கொழும்பு நிருபர்] இன நெருக்கடிக்கு இராணுவத் தீர்வை நாடுவதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கும் சிறீலங்காவுக்கு உதவி வழங்கும் சர்வதேச சமூகம், விடுதலைப் புலிகளுடன் அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது அவசியம் எனவும் வலியுறுத்தியிருக்கின்றது. மோதலுக்குத் தீர்வைக் காண்பதற்கான எந்தவொரு இராணுவ நடவடிக்கையையும் ஜப்பான், அமெரிக்கா, உலக வங்கி என்பன கடுமையாக எதிர்த்திருக்கின்றன. ''இந்தப் பயங்கரமான மோதலுக்கு இராணுவ வழியில் தீர்வைக்காண முடியாது என்பது எமது உறுதியான நம்பிக்கை'' என்று அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் பிளேக் காலியில் நடைபெறும்…
-
- 0 replies
- 614 views
-
-
இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பில் ஆழ்ந்த கவலையடைவதுடன் கவனமும் செலுத்துகிறோம். இலங்கை சமாதானமும் அமைதியும் நிலவுமேயாயின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வர் என உலக வங்கியின் தெற்காசியாவிற்கான பிரதி தலைவர் பிரபல் பட்டேல் இன்று தெரிவித்துள்ளார். இலங்கையில் சமாதானத்தை நிலை நிறுத்துவதை தவிர வேறு தேர்வு இல்லை. இலங்கையின் அபிவிருத்தி, புணரமைப்பு பணிகள் சமாதானத்தினை உண்டாக்குவதிலேயே தங்கியுள்ளது. முழு இலங்கையில் அண்மைய மோதல்களால் மக்கள் இடம்பெயர்ந்து வீடுகளை,கல்வி மற்றும் போதியளவு சுகாதார வசதியின்றி சிரமப்படுகிறார்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் போதியளவு பாதிப்பில்லாத போதும் இடம்பெறும் வன்முறைகள் நிறுத்தப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ள…
-
- 15 replies
- 2.2k views
-
-
செவ்வாய் 30-01-2007 00:35 மணி தமிழீழம் [மயூரன்] கடந்த சனிக்கிழமை வன்னி விசுவமடுப் பகுதியில் எதிர்பாராத வெடிவிபத்தில் போராளி ஒருவரும் ஒன்பது உதவிப்படை வீரர்களும் வீரச்சாவை தழுவிக் காண்டிருப்பதாக தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். தமிழீழ போர் உதவிப்படை வீரர்களான யாழ் மாவட்டத்தை சேர்ந்த சின்னப்பா தவராசா, துரைசாமி தவராசா, செல்லத்துரை பிரமானநடதம், தம்பிராசா அருணோதயன், சபாரத்தினம் றஜிந்தன், விசுவமடுவைச்சேர்ந்த மகேந்திரன் றஜிவன், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த யோகரத்தினம் நிசாந்தன், செபமாலை நரேஸ்காந்தன்,சிவஞானம் விஜிதரன் ஆகியோரே வீரச்சாவடைந்துள்ளனர். இவர்களுடன் லெப்.கேணல் மலரவன் என்றழைக்கப்படும் யாழ்மாவட்டத்தை சேர்ந்த நவரத்தினராசா சுரேஸ்குமார் என்ற போராள…
-
- 4 replies
- 1.2k views
-
-
US backs Sri Lanka, urges talks and access for humanitarian agencies [TamilNet, Monday, 29 January 2007, 14:23 GMT] The United States, reiterating its strong support for Sri Lanka's efforts "to combat terror," Monday called on Sri Lankan President Mahinda Rajapakse's government to also forge a power-sharing proposal as the basis for negotiations with the LTTE. Pointing out development can only take place amid peace, U.S. Ambassador to Sri Lanka Robert Blake told a meeting of Sri Lanka's donor community that 'transparency, good governance, and respect for human rights and the rule of law are essential preconditions for economic development and indispensable prerequ…
-
- 0 replies
- 688 views
-
-
அரசுடனும் விடுதலைப்புலிகளுடனும் நோர்வே விரைவில் தொடர்புகொள்ளும் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து நோர்வே அவதானித்து வருகின்றது. அது விரைவில் அரசுடனும், விடுதலைப்புலிகளுடனும் தொடர்புகொள்ளும். இவ்வாறு கொழும்பிலுள்ள நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தனிடம் கூறினார்என அறியப்படுகின்றது. தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாகக் கொழும்பிலுள்ள நோர்வே தூதுவரை இரா. சம்பந்தன் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். நோர்வே தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைகள், மக்களின் இடப் பெயர்வுகள்குறித்து தூதுவரிடம…
-
- 1 reply
- 992 views
-
-
இந்தியாவால் சிறீலங்காவிற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி சிறீலங்காவின் தெற்குபிராந்திய தொடரூந்து இணைப்பை அபிவிருத்தி செய்வதற்கு 100 மில்லியன் அமெரிக்கடொலர் கடனுதவி அளிப்பதாக இன்று இந்தி அலுவலகர்கள் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை கடந்த நான்கு வருடங்களில் 281 மில்லியன் அமெரிக்க டொலர்; கடனுதவியாக வழங்கியுள்ளதாகவும் இவை கோதுமைஇ பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்தியதாகவும் இந்தியதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை இந்தியாவால் சிறீலங்காவிற்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பம்இ மற்றும் எண்ணை அகழ்வு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாகவும் சிறீலங்காவின் உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 1 reply
- 844 views
-
-
கிளிநொச்சியில் போராளி அணிகளின் போர்ப் பயிற்சி நிறைவு நிகழ்வு நேற்று முன்தினம் கிளிநொச்சியில் குட்டிசிறி மோட்டார் படையணிஇ படைய தொடக்கப் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றை சேர்ந்த போராளி அணிகளின் போர்ப்பயிற்சி நிறைவு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது உரையாற்றிய புலிகளின் குரல்வானொலியின் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றின் முக்கிய காலகட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு நிற்கும் வேளையில்இ போராளிகளாக நிமிர்ந்து நிற்கும் பிள்ளைகள் விடுதலையின் பாதையில் உறுதியுடன் பயணிப்பார்கள் எனக்குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களை பட்டினியால் வதைத்தும்இ படுகொலை செய்தும் இளையதலைமுறையினரை கடத்திக் கொன்றும் தமிழிழ மண்ணை ஆக்கிரமிப்பதில் சிறீலங…
-
- 0 replies
- 1.2k views
-
-
தஞ்சமடைந்தாலும் சுட்டுக் கொல்கிறார்கள்!" - கலங்குகிறார் எஸ்.எம்.கோபாலகிருஷ்ணன் சமாதானத்துக்கான எல்லா சாத்தியங்களும் அறுந்துவிட, இலங்கையில் யுத்த அரக்கனின் ரத்த தாகம் மீண்டும் தலைவிரித்து ஆட ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில், போரின் காரணமாக ஊருக்குப் போக முடியாமல் தமிழகத்தில் தஞ்ச மடைந்திருக்கிறார் இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலகிருஷ்ணன். இவர் இந்திய ராணுவம் இலங்கையில் இருந்த காலத்தில் இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டவர். அதே காலத்தில் ‘ஈழ மண்ணில் ஒரு இந்தியச் சிறை’ என்கிற தொடரை ஜூனியர் விகடன் இதழில் எழுதியவர். ‘‘ஈழத்தில் வாழும் தமிழர்களின் நிலைக்கு நானே ஒரு எடுத்துக்காட்டு. ஐம்பதாண்டு காலம் இலங்கையின் மிக முக்கிய பத்…
-
- 2 replies
- 1.1k views
-