ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
மாத்தறையின் சில பகுதிகளில் கறுப்புக் கொடிகள் பறக்கின்றன சிறீலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்சா துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சரும் மாத்தறை பகுதி சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமான மங்களா சமரவீராவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதை தொடர்ந்து மாத்தறையின் சில பகுதிகளில் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளதுடன், “மங்களா நாங்கள் உங்களுடன் நிற்போம்” என்பது போன்ற சுலோகங்களும் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. மேலும் மூன்று நாள் தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றுள்ள மங்களா அங்கிருந்து தொலைபேசி ஊடாக கொழும்பு வாரப்பத்திரிகை ஒன்றிற்கு தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக கருத்துக்களை வழங்கியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: …
-
- 0 replies
- 1k views
-
-
ஐ.நாவில் பலஸ்தீனத்திற்கு ஆதரவான மங்களாவின் வாக்கே மகிந்தவின் சீற்றத்திற்கான காரணம். அண்மையில் பதவியில் இருந்து நீக்கபட்ட மூன்று அமைச்சர்களிலும், துறைமுகங்கள் சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சர் மங்களா சமரவீரா வெளிவிவகார அமைச்சராக இருந்த காலத்தில் ஐ.நா சபையில் நடைபெற்ற தீர்மானம் ஒன்றின் மீதான வாக்கெடுப்பில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்ததும் மகிந்தாவின் கோபத்திற்கான ஒரு காரணம் என தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்ததாவது: மங்களா பலஸ்த்தீனத்தை ஆதரித்தது தான் ஐ.நாவின் சிறுவர்களும் ஆயுத மோதல்களும் என்னும் பிரிவிக்கான விசேட பிரதிநிதியான அலன் றொக்கினால் சமர்ப்பிக்கப்பட்ட சிறீலங்கா அரசு மீது குற்றம் சுமத்தும் அறிக்க…
-
- 0 replies
- 645 views
-
-
அரசுக்குள் இருக்கும் குழு ஒன்றே ஆட்கடத்தல்களில் ஈடுபடுகின்றது! மனோ கணேசன் எம்.பி. குற்றச்சாட்டு. அரசுக்குள் இருக்கும் ஒரு குழுவே ஆட்கடத்தலில் ஈடுபடுவதாக தெரியவருகிறது. கொழும்பில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபரொருவரை கைதுசெய்ய கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு உதவினோம். மூன்று மாதங்களாகியும் அந்த நபர் குறித்து எதுவித தகவலும் இல்லை. நீதிமன்றத்தில் அவர் ஆஜர் செய்யப்படவுமில்லை என்று கொழும்பு மாவட்ட ஐ.தே.கட்சி எம்.பி. மனோ கணேசன் கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் பேசும்போது தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கும் நீடிக்கும் பிரேரணை மீது அவர் தொடர்ந்து பேசும்போது கூறியதாவது: வடக்கு கிழக்குக்கு வெளியே 64 பேர் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 12 பேர் கொலை செய்யப்பட்…
-
- 10 replies
- 1.9k views
-
-
அரசைப் பலவீனப்படுத்துவோருக்கு புலிகள் உதவுவதாகக் குற்றச்சாட்டு சுதந்திரக்கட்சிச் செயலாளர் தெரிவிப்பு. அரசைப் பலவீனப்படுத்துவோரின் பின்னணியில் விடுதலைப் புலிகளே உள்ளனர் என சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயக்குழுக் கூட்டத்தின் பின் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இப்படிக் கூறினார். அவர் மேலும் கூறியதாவது அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த முயற்சிப் போரின் பின்னணியில் விடுதலைப் புலிகளே உள்ளனர். பலவீனப்படுத்த முயற்சிப்போரின் நடவடிக்கைளின் பின்னணியில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விடுதலைப் புலிகள் உள்ளனர் என்று தெளிவாகத் தெரியவருகிறது. புலிகளின் தேவைகளை அவர்கள் நிறைவேற்றி வருகின்றனர். ஆகையால் மஹிந்த ர…
-
- 0 replies
- 581 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற ஜே.வி.பி. தீவிரம் புதிய அரசியல் முன்னணியை அமைக்க ஐ.தே.க. முயற்சி. அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப் பட்ட மங்கள சமரவீர, அனுரா பண்டார நாயக்கா, ஸ்ரீபதி சூரியாராட்சி ஆகியோர் உட்பட ஏழு அரச எம்.பிக்களின் ஆதரவுடன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்கு ஜே.வி.பி. தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. ஐ.தே.கட்சியில் இருந்து அதிருப்திக் குழுவினர் அரசுடன் இணைந்ததையடுத்து அக்கட்சியின் நாடாளுமன்ற பலம் 45 ஆகியுள்ளது. நாடாளுமன்றத்தில் 38 ஆசனங்களைக் கொண்டிருக்கும் ஜே.வி.பி., அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மூவர் உட்பட ஐ.தே.கட்சி அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஏழு உறுப்பினர்களின்…
-
- 0 replies
- 606 views
-
-
[ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2007, 01:56 ஈழம்] [க.திருக்குமார்] வாகரை கண்டலடியில் அமைந்திருந்த மாவீரர்துயிலும் இல்லம் நேற்று சிறீலங்காப் படையினரால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. தமது வெற்றியை அடையாளப்படுத்தும் வகையில் கனரக இயந்திரங்களின் உதவியுடன் கண்டலடி மாவீரர்துயிலும் இல்லத்தை சிறீலங்காபடையினர் நேற்று முற்றாக அழித்துள்ளனர். சர்வதேச ஜனநாயக விதிகளின் படி போர்க்கைதிகள், போரில் காயமடைந்தவர்கள், போர் நினைவாலயங்கள் என்பவை யார் வசம் இருந்தாலும் மதிக்கப்பட வேண்டியவை. போரில் வீரமரணம் அடைந்த போராளிகளின் உடல்களை அடக்கம் செய்யும் பிரதேசம் மாவீரர் துயிலும் இல்லமாகும். இது தமிழ் மக்களின் மிக விசேடமான நினைவுச்சின்னமாகும், மரணமடைந்த வீரர்களின் உறவினர்கள் தமது உறவுகளுக்கு…
-
- 2 replies
- 906 views
-
-
மனிதஉரிமை மீறல் குறித்து சுட்டிக்காட்டும் அமைப்புக்கள் புலிகள் சார்பானவை அல்ல - நாட்டில் சட்டம், ஒழுங்கு நடைமுறையில் உள்ளதா என ரணில் சபையில் கேள்வி இலங்கையில் பாரிய அளவில் மனித உரிமை மீறல்கள் இடம் பெற்று வருவதாக மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச அமைப்புக்கள் சுட்டிக்காட்டி வருகின்றன. இந்த அமைப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பானவை என்று கூறிவிடமுடியாது என்று எதிர்க்கட்சித் தலைவரும், ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் கூறினார். மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய பாராளுமன்ற நிலையியற் குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் ரணில் விக்கிரம சிங்க சபையில் வேண்டுகோள் விடுத்தார். நாட்டில் சட்டம், ஒழுங்கு நடைமுறையில் உ…
-
- 1 reply
- 769 views
-
-
வன்னியில் அண்மையில் நடைபெற்ற இரு சம்பவங்கள் எமது தேசத்தின் இறுக்கமான புலனாய்வுக் கட்டமைப்புடன் தொடர்புபட்டவை. ஒன்று தமிழீழ தேசிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்வை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் அண்மையில் ஆரம்பித்து வைத்திருந்தார். தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் இந்த அடையாள அட்டைகள் தேசத்தின் பாதுகாப்புக்கு மிக முக்கியமானவை. சிறிலங்காவின் சாதாரண அடையாள அட்டைகளை போலதல்லாது சர்வதேச தரத்திற்கு இணையாக தயாரிக்கப்பட்ட இந்த அட்டைகள் ஒரு மனிதனின் சரித்திரத்தை ஒரு சில நிமிடங்களில் கணணித்திரையில் தரவல்லவை. இரண்டாவது 'மிகப்பெரும் தாக்குதலுக்கு கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் தயாராகி வருகின்றனர், தென்னிலைங்கையின் நிலமையைப் பொறுத்து…
-
- 18 replies
- 4.1k views
-
-
Tamil MP sent kin to CanadaFears for their safety in Sri Lanka By TOM GODFREY, SUN MEDIA The wife and children of a senior Sri Lankan lawmaker are seeking refugee status in Canada following death threats that were made against the politician in Colombo, community members say. Suresh Premachandran, 47, is one of 22 MPs of the Tamil National Alliance in Sri Lanka. His wife, Gopilakumari Premachandran, and their three children aged 4, 8 and 12 have been living quietly in Scarborough even though their cases were flagged for further investigation by Canadian security officers, sources said. CROSSED AT FALLS Gopilakumari couldn't be reached …
-
- 12 replies
- 3.1k views
-
-
அனுரா, மங்கள, ஸ்ரீபதி சூரியாராய்ச்சி மூவரது அமைச்சுப் பதவிகளும் பறிப்பு!ஜனாதிபதி நேற்றிரவு அதிரடி நடவடிக்கை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களான அனுரா பண்டாரநாயக்கா, மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராய்ச்சி ஆகியோரது அமைச்சுப் பதவிகள் நேற்றிரவு ஜனாதிபதியால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. மூவரது அமைச்சுப் பதவிகளையும் ஜனாதிபதி நேற்றிரவு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கிறார் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்தது. கடந்த மாதம் 28ஆம் திகதி பதவியேற்ற புதிய அமைச்சரவையில் அனுரா பண்டாரநாயக்கா தேசிய பாரம்பரிய அமைச்சராகவும், மங்கள சமரவீர துறைமுகம் மற்றும் விமானசேவை அமைச்சராகவும், ஸ்ரீபதி சூரியாராய்ச்சி துறைமுக அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்றிருந்தனர். …
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டமை மிகப் பெரிய தவறு தமிழீழ விடுதலைப்புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டமை மிகப் பெரிய தவறு என சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பி.பி.சி அவர் வழங்கிய நேர்காணலின் போதே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் என சில பிரதேசங்கள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் அங்கு வாழும் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாகவம் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார் இலங்கையின் அயல் நாடு என்ற வகையில் இனப்பிரச்சினை தீர்வு முயற்ச்சிகளில் இந்தியா கூடுதலான பங்களிப்பபை ணர்வு பூர்வமாக வழங்க வேண்டும் என த…
-
- 2 replies
- 1.9k views
-
-
சிறீலங்காவின் அரச அதிபர் வெடிகுண்டுதாரிகளைப் போல மனிதாபிமானம் அற்றவர்: த கார்டியன் நாளேடு [சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2007, 05:56 ஈழம்] [அ.அருணாசலம்] தமிழ் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற விடுதலைப்புலிகளை முறியடிக்கலாம் என சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சா நம்புவாராக இருந்தால் அவர் ஒரு மனிதாபிமானமற்றவராகவே கொள்ளப்படுவார். என நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகிய த கார்டியன் நாளேட்டில் ஜேனார்தன் என்பவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அவர் எழுதிய ஆய்வின் முழுவடிவம் வருமாறு: சிறீலங்காவின் தென்மேற்கு கரையோர வீதியால் நாம் தலைநகர் கொழும்பை நோக்கி பயணித்துக் கொண்டு இருந்தோம். அதன் பிரதான சுற்றுலாத்துறை மையமான ஹிக்கடுவ பகுதியில் எம்மை இடைமறித்த சிறீ…
-
- 9 replies
- 1.7k views
-
-
சிறீலங்கா நாடாளுமன்றத்தில் தமிழர்கள் மீது தமிழருக்கு இல்லாத உணர்வு தீடிர் என்று சில சிங்களவருக்கு ஏற்பட்டுள்ளது. சிறீலங்கா அரசால் கொண்டுவரப்பட்ட அவசகாலச்சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான வாக்கெடுப்பு சிறீலங்கா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது ஆறுமுகம் தொண்டமானும் அமைச்சரான சந்திரசேகரனும் தமது இனம் மற்றும் மொழிப்பற்று என்பவற்றை மறந்துவிட்டு தமிழினத்தை அழிவிற்கு வழிவகுக்கம் அவசரகாலச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். வரலாற்றில் தமிழினதின் ஒட்டுக் குழுக்களை வழிநடத்திய சிறிபதிசூரியாராச்சியும் மங்கள சமரவீர மற்றும் அனுரா பண்டாரநாயக்கா ஆகியோர் இந்த அவசரகாலத்திற்கு எதிர்பு தெரிவித்து நாடாளுமன்றத்தைவிட்டு வெளிநடப்பு செய்த நிலையில் இலங்கை அரசியலின் கிங்மேக்கர் என்று மார்ப…
-
- 1 reply
- 1.3k views
-
-
விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போடவேண்டும்: மகிந்த [சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2007, 07:40 ஈழம்] [க.திருக்குமார்] விஆரம்பிக்க வேண்டுமாயின் விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை கீழே போடவேண்டும் என பி.பி.சிக்கு வழங்கிய நேர்காணலின் போது சிறீலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்சா தெரிவித்துள்ளார். வர் மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப்புலிகள் தொடர்ந்து மோதல்களில் ஈடுபட்டால், படையினர் தற்காப்புத் தாக்குதல்களை நடாத்துவதற்கு பின்னிற்கப் போவதில்லை. அண்மைய மாதங்களில் பாதுகாப்புப் படையினர் கிழக்கின் பெருமளவான நிலப்பகுதிகளில் இருந்து விடுதலைப்புலிகளை வெளியேற்றியுள்ளனர். எமது கட்டுப்பாட்டில் உள்ள மக்களை விடுவிப்பது எமது கடமை. எனினும் இனப்பிரச்சனைக்கு ஒரு நீண்டகாலத…
-
- 2 replies
- 1.2k views
-
-
சிங்கள ஊடகவியலாளர்கள் மூவரதும் வங்கிக் கணக்குகளை முடக்க உத்தரவு தொலைபேசி அழைப்புகளை விசாரிக்கவும் நீதிமன்று அனுமதி. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று சிங்களப் பத்திரிகையாளர்கள் தொழிற்சங்கவாதிகள் உட்பட நான்கு சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குள் யாவற்றையும் முடக்கவும், அந்த நால்வரும் பயன்படுத்திய தொலைபேசிகளின் அழைப்புகள் குறித்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இவ்விவகாரம் குறித்துக் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் நேற்று கொழும்பு பிரதம நீதிவான் குசல சரோஜினி வீரவர்த்தனா முன்னிலையில் விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்தனர். இந்தச் சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின்கீழ் தடுத்து வை…
-
- 0 replies
- 676 views
-
-
தமிழ்த்தேசியம் ரணிலைப் புறக்கணித்தமையே மஹிந்தவின் ஆட்சிக்கும் யுத்தத்துக்கும் காரணம்! "சுடர் ஒளி' ஆசிரியர் தலையங்கத்துக்கு பதிலளித்து சபையில் ஹக்கீம் உரை: மஹிந்த ராஜபக்ஷவின் அரசில் இணைந்து நாம் அமைச்சுப் பதவிகள் பெற்றுக்கொண்டமை தொடர்பாக விமர்சிக்கும் பத்திரிகைகள், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்க நாம் எடுத்த முயற்சி தோல்வியடையத் தமிழ் தேசியம் தேர்தலைப் பகிஷ்கரித்தமையே காரணம் என்பதையும் அந்தப் பின்னணியிலேயே மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகி யுத்தம் ஏற்பட்டது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அமரரான …
-
- 0 replies
- 742 views
-
-
யுத்தநிறுத்த உடன்பாட்டு நிலைகளுக்கு அரசுப் படைகள் மீண்டாலேயே பேச்சு நோர்வேத் தரப்புக்கு புலிகள் தெளிவுபடுத்திய பதில் இதுதான் யுத்த நிறுத்தத்துக்கு வழிசெய்த புரிந்துணர்வு உடன்பாட்டின் கீழ் வரையறை செய்யப்பட்ட தமது கட்டுப்பாட்டு எல்லைகளுக்கு அரசுப்படைகள் மீண்டால் மட்டுமே இனிமேல் அமைதிப் பேச்சுகளை நடத்தமுடியும் என்று விடுதலைப் புலிகள் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர் என நம்பகமாக அறியவந்திருக்கின்றது. கடந்த முதலாம் திகதி கிளிநொச்சியில் அனுசரணைத் தரப்பினரான நோர்வேயின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோதே விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் குழு இவ்விடயத்தைத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தெரிவித்தது என அறியவந்தது. கொழும்புக்கான நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர் தலைமையிலான ந…
-
- 0 replies
- 686 views
-
-
நீண்ட நாட்களுக்குப்பின் நிதர்சனம் சேவையை தொடர்ந்துள்ளது.அதில் உண்டியலான் திரு.டாக்டர் ஜெயதேவனின் அதிரடி ரிப்போர்ட் பற்றி தகவல் வந்துள்ளது.பாகிஸ்தானிடம் இலங்கை வாங்கிகுவித்த ஆயுத விபரம் எல்லாம் விலாவாரியாக தன்னுடைய சொந்த தளத்தில் வெளியிட்டுள்ளாராம். தேடுகிறேன். நீங்களும் உதவி செய்யுங்கள்
-
- 0 replies
- 1.1k views
-
-
ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வந்த மூவரை தாம் கைது செய்துள்ளதாக பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். [Wednesday February 07 2007 10:30:24 AM GMT] [virakesari.lk] இவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளையடுத்து, இம்மூவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர் எனவும் அவர் கூறினார். கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஹிரு பத்திரிகையின் சுதந்திர ஊடகவியலாளர் உபாலி செனவிரட்ண, தொழிற்சங்கவாதியும் அக்குண பத்திரிகையின் ஆசிரியருமான சிசிர குமார மற்றும் சுதந்திர ஊடகவியலாளர் நிஹால் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர் என நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.…
-
- 13 replies
- 2.7k views
-
-
சிறீலங்கா காவல்துறையினருக்கு எதிராக ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் சிறீலங்கா காவல்துறையினருக்கு எதிராக ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் சேவைகள் ஆணைக் குழு அறிவித்துள்ளது பாலியல் வன்புணர்வு ,கப்பம் பெறுதல்,முறையற்ற கைதுகள் ,ஆகியவற்றுடன் கொலைகள் தொடர்பாகவும் பொலிசார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் பரனமான தெரிவித்துள்ளார் கடந்த 2005ம் ஆண்டு முதல் சேகரிக்கப்பட்டு வரும் பொலிசாருக்கு எதஜரான முறைப்பாடுகளில் 72 முறைப்பாடுகளுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
-
- 1 reply
- 882 views
-
-
கொழும்பு (A.F.P) - "அமெரிக்காவின் சமாதானத் தூதுவர் உருவாக்கம் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை!" சிறீ லங்கா ஊடக அமைச்சர் அறிவிப்பு! அண்மையில் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஜ் இடம் 38 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சிறீ லங்காவின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அமெரிக்கா உதவ வேண்டுமெனக் கூறிச் சமர்ப்பித்த அமெரிக்க சமாதானத் தூதுவர் பற்றிய அறிக்கை சம்மந்தமாக தாம் கவலைப்படவில்லை என சிறீ லங்காவின் ஊடக அமைச்சர் அனுரா யாப்பா தெரிவித்துள்ளார். மேலும், இது போன்ற முயற்சிகள் அமெரிக்காவில் முன்பும் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அமெரிக்கா தமது அரசாங்கம் எடுக்கும் நிலைப்பாட்டிற்கு அமைய விடுதலைப் புலிகளுடன் போர்புரிந்து அவர்களை பலவீனப்படுத்துவதற்கு தொடர்ந்தும் உதவி செய்யும் என எதிர்பார்ப்பதா…
-
- 4 replies
- 1.5k views
-
-
சுதந்திர தினக் கொண்டாட்டம் யுத்தத்திற்கான புதிய அத்தியாயம் -ஜெயராஜ்- 'விடுதலைப் புலிகளுடனான 20 வருடகாலப் போரில் தாம் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளதாகக் காட்டும் செயல்" எனச் சிறிலங்காவின் 59 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் போது மகிந்த அரசாங்கம் மேற்கொண்ட 'தீவிரமான இராணுவ விளம்பரங்கள்" இருந்தன சிறிலங்கா கடற்படையின் போர்க் கப்பல்கள், அதிவேக டோறாப் பீரங்கிப்படகுகள் அணி வகுத்துச் செல்ல, கிபிர் மற்றும் மிக்-27 ரகப் போர் விமானங்கள், எம்.ஜ - 24 வகைத் தாக்குதல் வானூர்திகள் வானில் பறந்து சாகசம் செய்ய, பல்குழல் எறிகணைச் செலுத்திகள், டாங்கிகள், கவச வாகனங்கள், ஆட்லறிப்பீரங்கிகள் என்பன அணிவகுப்பில் வர 3,500 சிறிலங்கா இராணுவத்தினரின் அணிவகுப்பும…
-
- 0 replies
- 774 views
-
-
யுத்த நிறுத்த உடன்படிக்கையை ரத்து செய்யக்கோரி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு செய்து செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை ரத்துச் செய்து, நோர்வேயை உடனடியாக வெளியேற்ற கோரி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது . அகில இலங்கை வர்த்தக ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.. சுமார் ஒருமணித்தியாலம் நடத்தப்பட்ட இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து க…
-
- 0 replies
- 830 views
-
-
Heavy SLA casualties feared in Jaffna claymore attack [TamilNet, Friday, 09 February 2007, 04:10 GMT] Several Sri Lanka Army (SLA) troopers have been feared killed in a claymore attack on a bus carrying SLA soldiers along Palaly Road, less than 50 meters from Urelu SLA camp at 10:30 p.m. during curfew hours Thursday night, sources in Jaffna said. The Palaly military command has not released official details on the attack. The damaged bus, belonging to the Ceylon Transport Board (CTB), has been taken inside the Urelu camp, local residents said. However, large areas of blood stains and broken glasses are still visible near the scene of the attack, according to res…
-
- 1 reply
- 2.4k views
-
-
[09 - February - 2007] [Font Size - A - A - A] இலங்கையில் அரசாங்க சார்பற்ற சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் அண்மைக் காலமாக எதிர் நோக்க வேண்டியிருக்கின்ற நெருக்கடிகள் காரணமாக சர்வதேச சமூகம் அரசாங்கத்துக்கு நெருக்குதல்களைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது போலத் தெரிகிறது. இலங்கைக்கு உதவி வழங்கும் பிரதான நாடுகளின் தூதுவர்கள் சகிதம் கொழும்பில் நேற்று முன்தினம் புதன்கிழமை அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூட்டிய செய்தியாளர்கள் மகாநாட்டில் அவர் தெரிவித்த கருத்துக்கள் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கு எதிரான அணுகுமுறையை அரசாங்கம் கடைப்பிடிக்கவில்லை என்று சர்வதேச சமூகத்துக்கு உறுதியளிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலையொன்று உருவாகியிருப்பதை வெளிக்காட்டுகி…
-
- 0 replies
- 831 views
-