ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
வலிகாமம் மேற்கு சங்கானையில் கிணறு ஒன்றினுள் இளைஞரின் உடல். வலிகாமம் மேற்கு, சங்கானையில் அமைந்துள்ள முருகமூர்த்தி கோயிலுக்கு அருகே பாழடைந்த கிணறொன்றினுள், கை கால்கள் கட்டப்பட்டு, சித்திரவதை செய்ததற்கான காயங்களுடன் ஒரு இளைஞரின் உடலை, அப்பகுதி பொதுமக்கள் கண்டுள்ளனர். 20 வயது மதிக்கத்தக்க இந்த இளைஞரின் உடல், டெனிம் காற்சட்டை அணிந்த நிலையில், கிணற்றில் காணப்பட்டது. இதுபோன்று, சிறீலங்கா இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள சுழிபுரம் பகுதி பாழடைந்த கிணறு ஒன்றினுள்ளும், இளைஞர் ஒருவரின் உடல் காணப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த உடல் பின்னர் காணாமல் போயுள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள வேளையில் கடத்தப்படும் இளைஞர்கள், இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளாக்க…
-
- 0 replies
- 765 views
-
-
வல்வெட்டத்துறை மக்கள் வங்கிக்கு முன்பாக உடுப்பிட்டிக்கும் வல்வெட்டித்துறைக்கும் இடையில் நேற்று மாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் ஒரு இராணுவம் கொல்லப்பட்டும், இருவர் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர். இதுதொடர்பில் சிறீலங்கா இராணுவம் உத்தியோகபூர்வமான எந்தவித அறிவித்தலும் விடவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஆனபோதும் சிறீலஙடகா இராணுவத்தினர் அவ்இடத்தை அண்டியபகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 969 views
-
-
அரசு – ஐ.தே.க. உடன்படிக்கை கிழித்தெறியப்பட்டது [திங்கட்கிழமை, 29 சனவரி 2007, 08:07 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஐக்கிய தேசியக் கட்சி செய்துகொண்ட நல்லாட்சிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை காலாவதியாகிவிட்டது என உத்தியோகபூர்வமாக அறிவித்த ஐ.தே.க. தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ருக்மன் சேனாநாயக்க, உடன்படிக்கையின் நகலைக் கிளித்தெறிந்ததோடு, இனிமேல் அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியான எந்தவிதமான ஒத்துழைப்பையும் தமது கட்சி வழங்காது எனவும் அறிவித்திருக்கின்றார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே ருக்மன் சேனாநாயக்க இந்த அறிவிப்பை வெளியிட்டார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெ…
-
- 2 replies
- 942 views
-
-
ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - புதிய சபாநாயகராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் டி.எம். ஜயரட்ணவை நியமிக்க அரச உயர் வட்டாரம் விரும்புவதாக அறிய வருகிறது. தற்போதைய சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார அப்பதவியிலிருந்து இராஜிநாமாச் செய்து அமைச்சுப் பதவியொன்றைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. இதனை அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரொருவரும் உறுதிப்படுத்தினார். மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க காலத்திலிருந்து கட்சி தாவாமலிருக்கும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த டி.எம். ஜயரட்ணவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டுமென கட்சிக்குள்ளே கோரிக்கை வலுவடைந்தது. இந்நிலையில் அவருக்கு பல்வேறு அமைச்சுப்…
-
- 0 replies
- 698 views
-
-
-150 கோடி டொலர் உதவி கிடைக்குமென பிரதியமைச்சர் நம்பிக்கை டிட்டோ குகன் அரசாங்கம் முன்வைத்திருக்கும் 10 வருடகால அபிவிருத்தி திட்டத்தை சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படையாக எடுத்துக் கூறுவதே நாளை திங்கட்கிழமையும், நாளை மறுதினமும் காலியில் நடைபெறவுள்ள இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் மாநாட்டின் நோக்கமென பிரதி நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். இம்மாதம் 29 ஆம், 30 ஆம் திகதிகளில் காலி லைட் ஹவுஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ள இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு தொடர்பாக விளக்கமளிக்கும் முகமாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பிரதி நிதியமைச்சர் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்தார். அவர் இங்கு மேலும் கூற…
-
- 0 replies
- 602 views
-
-
நேபாளத்திற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாவோ போராளிகளின் தலைவர் பிரசந்திராவை சந்தித்து பேசியுள்ளார் இந்த சந்திப்பின் போது தான் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு விரும்புவதாக மாவோ போராளிக் குழு தலைவர் கூறியுள்ளார்.ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க நேபாள பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவுடனும் பேச்சு நடத்தியுள்ளார் இந்த பேச்சுவார்த்தையின் போது நேபாளத்தில் மேற்கொள்ளப்பட்ட அமைதி முயற்ச்சிகள் குறித்து ரணில் விக்கிரமசிங்க கேட்டறிந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 694 views
-
-
உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு நாளை காலியில் ஆரம்பம் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு நாளை காலியில் உள்ள லைட் ஹவுஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ளது மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த மாநாட்டில் இலங்கைக்கு உதவி வழங்கும் 50 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது பணத்தைக் கொட்டிக் கொடுப்பார்கள.; மகிந்த எமது மக்கள் மீது குண்டைக் கொட்டப்போகிறான்.
-
- 0 replies
- 913 views
-
-
யாழ். குடாவில் ஊரடங்கு சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை கடுமையாக அமுல்படுத்த பாதுகாப்புப் படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பலாலி பாதுகாப்பு நடவடிக்கைத் தலைமையகம் அறிவித்துள்ளது. படைத் தலைமையகத்தினால் நேற்றிரவு ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குடாநாட்டில் இரவு 7 மணிக்கு நடைமுறைக்கு கொண்டு வரப்படும் ஊரடங்குச் சட்டம் அதிகாலை நான்கு மணிக்கு நீக்கப்படும். ஊரடங்கு நேரத்தில் விதிகளை மீறும் வகையில் வீதிகளில் நடமாடுவோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, ஊரடங்கு நேரத்தில் வீதிகளில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்த்துக் கொள்…
-
- 0 replies
- 819 views
-
-
சர்வதேச நாடுகளின் அசைவற்ற நிலையே, கொழும்பின் அராஜகப் போக்குக்கு உந்துசக்தியாக உள்ளது: சுப.தமிழ்ச்செல்வன் [திங்கட்கிழமை, 29 சனவரி 2007, 04:33 ஈழம்] [காவலூர் கவிதன்] எந்தவிதமான உணர்வையும் வெளிப்படையாகத் தெரிவிக்காத, வெறும் அசைவற்ற போக்குடன் சர்வதேச சமூகம் இருப்பது, சிறீலங்கா அரசு, தனது வன்முறை அரசியலையும் இராணுவத் தீர்வையும் தொடர்ந்து முன்னெடுக்க, உந்துசக்தியாக இருக்கிறது என்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். தமிழ்நெற் இணையத்தளத்திற்கு அவர் வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்திருப்பதாவது: இலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவத்தீர்வு சரியானது அல்ல என்பதை வெறுமனே கருத்தாக வெளிப்படுத்திவரும் சர்வதேச சமூக…
-
- 1 reply
- 949 views
-
-
[28 - January - 2007] [Font Size - A - A - A] அரச நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவையும் அரச நிறுவனங்களின் கணக்கு விபரங்களைக் கண்டறியும் பாராளுமன்றக் குழுவையும் இரத்துச் செய்துவிட்டு அதற்குப் பதிலாக அவை இரண்டையும் ஒன்றாக இணைத்து `நல்லாட்சி நிர்வாகக் குழுவை' உருவாக்கும் முயற்சிகள் மறைமுகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தகவல்கள் கசியத் தொடங்கியதும் அரசாங்கம் அதனை முற்றாக நிராகரித்ததோடு குற்றவாளிகள் தப்புவதற்கு அரசு ஒருபோதும் இடமளிக்காது என்று அறிவித்தது. அரச துறையில் இடம்பெற்றுவரும் ஊழல் நடவடிக்கைகளை மூடிமறைப்பதற்கு மேற்படி குழுக்களை இரத்துச் செய்து ஊழல் பேர்வழிகள் தப்புவதற்கு வசதியாக திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்…
-
- 0 replies
- 757 views
-
-
உதவி வழங்கும் நாடுகள் அழுத்தம் கொடுக்குமா? [28 - January - 2007] [Font Size - A - A - A] -அஜாதசத்ரு- சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடனான இன நெருக்கடித் தீர்வு முயற்சிகளுக்கான அனைத்து சமாதான முயற்சிகளையும் ஓரங்கட்டிவிட்டு இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையொன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் நிலையில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு நாளை திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் நடைபெறவுள்ளது. காலியில் இரு தினங்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டிற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ள அதேநேரம், இதனையொட்டி தென் பிராந்தியப் பிரதேசங்களான காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அதிகூடிய விசேட பாதுகாப…
-
- 1 reply
- 996 views
-
-
வியட்னாம் கற்றுத்தந்த பாடம் -சி.இதயச்சந்திரன்- அமெரிக்கா பற்றி யாராவது பேசினால் வியட்னாமின் ஞாபகம் எல்லோருக்கும் வரும். போராட்டங்கள் குறித்து அலசும் போது, வியட்னாமிய விடுதலைப் போரை உள்நுழைக்காது போனால் ஆய்வு செய்பவர்கள் தடுமாறிப்போவார்கள். இந்த வியட்னாம் தரும் படிப்பினைகள், காலங் கடந்தாலும் சில விடயங்களை எமக்குப் புலப்படுத்தியபடியே சென்றிருக்கின்றன. வியட்னாம் மக்களோடு அன்று போர் புரிந்த அமெரிக்கா இன்று தனிப்பெரும் உலக வல்லரசு. இன்றைய நவீன உலக ஒழுங்கில், அமெரிக்காவைப் புறந்தள்ளி அரசியல் பேசுவதென்பது நகைப்பிற்கிடமாகத் தென்படும். சிறிலங்கா விவகாரத்திலும் இந்த உலக ஜனநாயகக் காவலனின் பங்களிப்பு அதிகமாகக் காணப்படும். இந்த…
-
- 0 replies
- 3.5k views
-
-
கொழும்புத் துறைமுகம் மீதான தாக்குதல் முதலீட்டாளர்களுக்கான செய்தியே -பொருளியலாளர்கள் கொழும்புத் துறைமுகத்தின் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் சிறிலங்காவின் பொருளாதாரத்தின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு வெளிநாட்டு முதலீட்டாளர்களிற்கான மிகப்பெரிய செய்தியாகவும் விளங்குகின்றது எனப் பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கொழும்புத் துறைமுகம் மிகுந்த பாதுகாப்பாக இருப்பதாக பெருமெடுப்பில் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசு தாக்குதல் துறைமுகப்பகுதிக்கு அப்பால் வைத்தே முறியடிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்த ுவருகின்றது. ஆனால் அரசு வெளியிடும் தகவல்களுக்குள் இருக்கும் ஓட்டைகள், குழப்பங்கள், முரண்கள் என்பவையே நேற்று நடைபெற்ற சம்பவத்தின் உண்மை நி…
-
- 2 replies
- 1.3k views
-
-
தொப்பிகலையை இலக்கு வைத்த படையினரின் நகர்வுகள்! -விதுரன் கிழக்கில் முழு அளவிலான படை நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. வாகரையை கைப்பற்றியதன் மூலம், மட்டக்களப்பில் புலிகள் வசமுள்ள ஏனைய பகுதிகளையும் கைப்பற்றி விடமுடியுமென அரசு கருதுவதால் அடுத்து வரும் நாட்களில் உக்கிரமான போர் வெடிக்கப் போகிறது. திருகோணமலைத் துறைமுகத்துக்கு மூதூர் கிழக்கில் சம்பூரிலுள்ள புலிகளின் ஆட்லறிகளால் பெரும் ஆபத்தேற்பட்டுள்ளதாகக் கூறி ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல் இன்று பாரிய படை நடவடிக்கையாக கிழக்கின் பல்வேறு பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்த உடன்பாடு அமுலிலிருக்கையிலும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வடக்கு - கிழக்கிலிருக்கையிலுமேயே இந்தப் பாரிய படை நடவடிக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
வாய்மூடி மௌனியாக...! மிகப் பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தி வாகரைப் பிரதேசத்தைச் சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. அதாவது, யுத்த நிறுத்த உடன்பாட்டின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியாக இருந்த வாகரைப் பகுதியை தமிழ் மக்களைக்கொன்றும், காயப்படுத்தியும், பட்டினிக்கு உள்ளாக்கியும், வைத்திய சேவையை முடக்கியும் சிறிலங்கா அரசு காரியத்தைச் சாதித்துக் கொண்டுள்ளது. இங்கு இருவேறு சம்பவங்கள் தோற்றுவிக்கப்பட்டிருந்தன. ஒன்று யுத்த நிறுத்த உடன்பாட்டைச் சிறிலங்கா அரசாங்கம் அப்பட்டமாக மீறியுள்ளமையாகும். அதாவது, யுத்த நிறுத்த உடன்பாட்டின்படி விடுதலைப்புலிகளின் நிர்வாகப் பகுதிஃ கட்டுப்பாட்டுப் பகுதி என ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதேசத்தின் மீது தனது ஆயுதப் படைய…
-
- 0 replies
- 1k views
-
-
யாழில் வெட்டுக்காயங்களுடன் மற்றொரு இளைஞனின் உடலம்வலிகாமம் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இனம்தெரியாத இளைஞன் ஒருவரது உடலம் நேற்று சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டள்ளது. இவரது உடலமானது சுன்னாகம் கந்தரோடை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குடிசார்தகவலின் படி யாழ்பாணம் பகுதியில் வேறு ஒருஇடத்தில் இருந்து கடத்தப்பட்டு சுன்னாகம் பகுதிக்கு வெள்ளை வாகனத்தில் மாலை 5 மணியளவில் கொண்டுவந்து கந்தரோடை வித்தியாலயப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் வீசியுள்ளதாக அறியமுடிகிறது. படுகாயமடைந்த நிலையில் அவ்இளைஞன் உயிருக்காக போராடிக்கொண்டிருந்தபோது அயலவர்கள் அச்சம்காரணமாக அவரைகாப்பற்ற முயலவில்லை என மேலும் அறியமுடிகிறது. ஊரடங்கு சட்டம் காரணமாக பொதுமக்களது நடமாட்டம் சிறீலங்கா இராணுவத்தால் க…
-
- 0 replies
- 930 views
-
-
24 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்குத் தாவினர். - பண்டார வன்னியன் Sunday, 28 January 2007 12:30 சிறிலங்காவின் ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சிகளில்இருந்து 24 பாராளுமன்ற உறுப்பினர்கள் தாவியுள்ளதாக கொழும்புச்செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ.தே.க.விலிருந்து 18 பேரும் முஸ்லீம் கொங்கிரசிலிருந்து 6 பேருமே இவ்வாறு கட்சிதாவியுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதியின் ஊடக ஒருங்கிணைப்பாளராகிய லூசியன் இராஜகருணநாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற சிறிலங்கா அமைச்சரவை விஸ்தரிப்பின் போது இந்தக்கட்சி தாவிய பாராளுமன்ற உறுப்பினர்களுட் பலர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். கொழும்பின் இரண்டு பிரதானகட்சிகளிடையேயும் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர…
-
- 17 replies
- 3.1k views
-
-
வவுனியா கணேசபுரம் பகுதியில் தந்தை, மகன் சுட்டுக்கொலை . வவுனியா கணேசபுரம் பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு தந்தையும் மகனும் சுட்டுக்கொல்லப்பட்டனர். கணேசபுரம் அம்மன்கோவிலடிப் பகுதியில் வீடொன்றினுள் இரவு 9 மணியளவில் நுழைந்த ஆயுத பாணிகளே அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். இதனால் தந்தையும் அவரது மகனும் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஆயுதபாணிகள் வீட்டை அடித்து நொருக்கி பொருட்களுக்கு சேதங்களை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில், கட்டிட தொழிலாளியான முருகையா (வயது 50) என்பவரும், இந்தியாவுக்கு அகதியாகச் சென்று அண்மையில் நாடுதிரும்பிய இவரது மகனான சசிதரன் ( வயது23) என்பவரும் உயிரி…
-
- 0 replies
- 813 views
-
-
முஸ்லீம்களுக்கான தனியான மாவட்டம் ? கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களுக்கான தனியான மாவட்டம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு சிறீலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இணைவதற்கு முன்வைத்த நிபந்தனைகளில் முக்கியமானதாக கருதப்படும் முஸ்லீம்களுக்கான தனியான மாவட்டம் தொடர்பான கோரிக்கையை சிறீலங்கா ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாக முஸ்லீம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன கல்முனை பொத்துவில் மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக இந்த மாவட்டம் அமைக்கப்படவுள்ளது சிறீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் இன்று இடம்பெறும் போது முஸ்லீம் காங்கிரசும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது -Path…
-
- 30 replies
- 6.2k views
-
-
யாழ்ப்பாண மக்களை சுரண்டும் ஈவிரக்கமற்ற கப்பல் வாணிபம் -யாழின்மைந்தன்- Sunday, 28 January 2007 "யாழ்ப்பாண மக்களின் பசி பட்டினியைப் போக்க துணிச்சலுடன் கப்பல் மூலமாக யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதாகக் கூறும் கொழும்பு வர்த்தகர்கள் குடாநாட்டு மக்களை ஈவிரக்கமின்றி சுரண்டும் கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் வணிகத்திலே ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குடாநாட்டு நிர்வாக அதிகாரிகளினதும், படைத்தரப்பினரதும் ஆத்திரத்துக்குள்ளாகி வருகின்றனர்." பொருட்கள் கொழும்பு விலை யாழ்ப்பாணத்தில் விலை யாழ். குடாநாட்டுக்கான ஒரே தரைவழிப்பாதை மூடப்பட்டு இன்றுடன் நூற்றி எழுபது நாட்கள் முடிந்து விட்டன. ஏ-9 தரைவழிப்பாதை மூடப்பட்டதால், குடாநாட்டு மக்களுக்கான வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
உலக ஒழுங்குக்கு அமைய புலிகளின் தலைவர் விரைவில் முடிவுகளை எடுப்பார் Sunday, 28 January 2007 -மட்டு.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தெரிவிப்பு போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டு ஐந்து வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், உலக ஒழுங்குக்கு அமைய பொறுமை காத்து வந்த எமது தலைவர் விரைவில் சில முடிவுகளை அறிவிப்பாரென விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியல் துறைப் பெறுப்பாளர் சீராளன் தெரிவித்துள்ளார். கிழக்கின் தற்போதைய நிலைமைகள் குறித்து அவர் மேலும் கூறுகையில்; "மூதூர் கிழக்கு மற்றும் வாகரைப் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட மனிதப் பேரவலம் போன்று மட்டக்களப்பிலும் பெரும் அவலத்தை உருவாக்க அரசு முயல்கிறது. கடந்த சில தினங்களாகக் க…
-
- 2 replies
- 2.7k views
-
-
[ஞாயிற்றுக்கிழமை, 28 சனவரி 2007, 09:45 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்ஷ அமைச்சர்களின் கடமைகளில் தலையிடுவதுடன் கொள்முதல்களுக்கும் திட்டங்களுக்குமான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கைகளிலும் மிக அதிகளவில் குறுக்கீடு செய்கிறார் என சிறீலங்காவின் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியிருக்கின்றார
-
- 0 replies
- 867 views
-
-
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்தின் பக்கத்துக்கு கட்சிதாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லீம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று அரசில் இணைய உள்ளனர். அதேவேளையில், இவ்வாறு அரசுடன் இணைந்துகொள்பவர்களையும் உள்ளடக்கிய அமைச்சரவை மறுசீரமைப்பும் இன்று நடைபெற உள்ளது. ஐ.தே.க. தலைமையில் திருப்தியடைந்துள்ள சுமார் பதினேழு வரையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அரசில் இணைந்து கொள்வார்கள் என அரசு எதிர்பார்க்கின்றது. ஆனால் 13 உறுப்பினர்களே ஐ.தே.க.வில் இணைந்து கொள்ள உள்ளனர் என ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறும் விஷேட வைபவம் ஒன்றில் இவர்கள் அனைவரும் அர…
-
- 0 replies
- 777 views
-
-
* பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ -ராய்ட்டர் செய்திச்சேவை- விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது தாக்குதலை மேற்கொண்டு அவர்களுடைய இராணுவ கட்டமைப்புகளை அழிக்கப்போவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ராய்ட்டர் செய்திச் சேவைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சமாதானம் குறித்து நேர்மையான அக்கறை கொண்டுள்ளதை விடுதலைப்புலிகளின் தலைவர் தனிப்பட்ட ரீதியில் வெளிப்படுத்தினால் மாத்திரமே இராணுவத்தின் திட்டங்களை கைவிடச் செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் இராணுவக் கட்டமைப்புகளை அழிக்க விரும்புகின்றோம், அவை எங்கிருந்தாலும், வடக்கு, கிழக்கு, தெற்கில் இருந்தால…
-
- 0 replies
- 966 views
-
-
பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு உலகின் ஏனைய நாடுகளைப் போன்று எமது நாட்டிலும் எமது தேசியக் கொடியின் கீழ் விமான சேவைகள் ஏனைய நாடுகளுக்கு சேவையை மேற்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்திலேயே "மிஹின் லங்கா" விமான சேவை ஆரம்பிக்கபட்டதாகத் தெரிவிக்கும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ கூடிய விரைவில் இதுபோன்ற தேசிய கப்பல் சேவையொன்றும் ஆரம்பிக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை 25 ஆம் திகதி மாத்தறை பிரதேச செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்ற "ஜாதிக சவிய" திட்டத்தின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கூட்டத்தில் உரையாற்றும் போதே பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். இலங்கைக்கென தனித்துவமான விமான சேவை இருந்தது. ஆனால், இ…
-
- 0 replies
- 872 views
-