ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142726 topics in this forum
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் மதியுரைஞரும், தேசத்தின் குரல் என்று தமிழீழ தேசியத்தலைவரால் கொளரவப்படுத்தப்பட்டுள்ள கலாநிதி. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படம் திறப்பும் அஞ்சலிக்கூட்டமும் கோயம்புத்தூர் பெரியார் படிப்பகத்தில் இடம்பெற்றுள்ளது. பெரும்திரளான மக்கள் இங்கு திரண்டு மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்திற்கு தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர். இந்த இரங்கல் நிகழ்வில், கலாநிதி. அன்ரன் பாலசிங்கத்தின் திருவுருவப்படத்தை பெரியார் கழகத்தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார். அதனைத்தொடர்ந்து அஞ்சலிக் கூட்;டம் நிகழ்ந்தது. தலைமை இரங்கலுரையினை கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருஸ்ணன் அவர்கள் நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து இங்கு, கோவை ஞானி …
-
- 0 replies
- 1.3k views
-
-
மறைந்த மதியுரைஞர் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் நேற்று முதல் பிரார்த்தனை மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிறையில் உள்ள 58 தமிழ் அரசியல் கைதிகளே இச்செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த அஞ்சலி நிகழ்வுகளை, தொடர்ந்து மூன்று தினங்கள் நடத்தவுள்ளதாகக் கைதிகள் தெரிவித்துள்ளனர். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் உடல் அடக்கம் செய்யப்படுவரை மூன்றுவேளையும் ஆகாரம் எதுவும் அருந்தாமல் தாம் அஞ்சலி செலுத்தவுள்ளனர் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர் http://www.sankathi.org/news/index.php?opt...63&Itemid=1
-
- 0 replies
- 835 views
-
-
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அரசியல் தூணாக விளங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்திற்கு கண்ணீர் வணக்க நிகழ்வு நோர்வேயில் நடைபெற்றது. இந்நிகழ்வு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 7 மணிமுதல் 9 மணிவரை நடைபெற்றது. நோர்வே வாழ் தமிழீழ உறவுகள் பல நூற்றுக்கணக்கானோர் கனத்த நெஞ்சங்களோடு "தேசத்தின் குரலுக்கு" தமது கண்ணீர் வணக்கத்தை செலுத்துவதற்காக திரண்டிருந்தனர். நோர்வே பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். நோர்வேயின் சிறப்பு சமாதானத் தூதுவர் ஹன்சன் பெளயர், 1998 ஆம் ஆண்டு மதியுரைஞருக்கு நோர்வேயில் சிறுநீரக மாற்றீட்டுக்குரிய சத்திர சிகிச்சையை செய்த மருத்துவர…
-
- 2 replies
- 1.1k views
-
-
தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் மக்கள் வணக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படவுள்ளன. இன்று பிற்பகல் 5.00 மணிக்கு கிளிநொச்சி நகர்ப்பகுதியில் மக்கள் வணக்கத்துக்காக எடுத்துச் செல்லப்பட்டது. நாளை பரந்தன் பிரதான சந்தியில் இருந்து விசுவமடுப் பிரதேசத்திற்கு இவ் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி தருமபுரம். வட்டக்கச்சி, ஊடாக எடுத்துவரப்பட்டு கிளிநொச்சி. முழங்காவில் ஆகிய பகுதிகளுக்கு மக்களின் வணக்கத்திற்காக எதிர்வரும் செவ்வாய் கிழமை வரை எடுத்துச் செல்லப்படவுள்ளது. இன்றைய தினம் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு கண்ணீர் மல்க மக்கள் மலர்வணக்கம் செலுத்தியுள்ளனர…
-
- 0 replies
- 1.2k views
-
-
COLOMBO ; A senior British diplomat was summoned by Sri Lankan police after he photographed a presidential motorcade with his mobile phone, the British High Commission said yesterday, terming it an "innocent mistake". The incident comes in the wake of a raft of new laws imposed to crack down on Tamil Tiger rebels and their supporters as the island’s two-decade civil war entered a new, violent phase. Photographing security posts and government buildings is prohibited in the capital, Colombo, where green sandbag turrets bristle with assault rifles and ministerial motorcades whip through town with heavily armed guards. "We can confirm that a British diploma…
-
- 3 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா, சோமாலியா அகதிகளுக்கு உதவ 5.215 மில்லியன் அமெரிக்க டொலரை அமெரிக்க அரச தலைவர் ஜோர்ஜ் புஸ் ஒதுக்கியுள்ளார். சிறிலங்கா, சோமாலியா நாடுகளின் இனப்பிரச்சினையில் பாதிக்கப்பட்டு அகதிகளான மக்களுக்கு உதவ இந்த நிதி பயன்படுத்தப்படும் என அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. சொந்த நாட்டின் போர்ச்சிக்கல்களால் பாதிக்கப்பட்டு தப்பித்த அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த மக்களின் எதிர்பாராத அவசரத் தேவைகளுக்கு இந்த நிதியைப் பயன்படுத்த வேண்டுமென வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா றைசுக்கு கடந்த வியாழக்கிழமை எழுதிய அறிக்கையில் அரச தலைவர் புஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த நிதியை அனைத்துலக, அரசு சார்ந்த, அரசு சாராத நிறுவனங்களின் தேவையைப் பொறுத்து அவர்களுக்கு உதவப் பயன்படுத்தலாம்…
-
- 0 replies
- 898 views
-
-
சகாப்தம் படைத்த பாலா ` தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற் றிற்கும் மேலாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாக ரன் மீதும் தமது அன்புரிமைச் செல்வாக்கைத் செலுத்தக் கூடிய ராஜகுருவாக விளங்கிய அன்டன் பாலசிங்கம் சாவை அணைத்துக் கொண்டு விட்டார். ""சாவைச் சந்திப்பதற்கு மனிதன் துணிய வேண்டும். அந்தத் துணிவிலும், தெளிவிலும், விழிப்பிலுமே மனித வாழ்வு அர்த்தமுள்ளதாக, நிறைவானதாக அமையும்'' என்று தாம் முன்னர் உரைத்தபடி சாவை வரவேற்று அதனுள் சாந்தி அடைந்திருக்கின்றார் சாவின் தத்துவம் புரிந்த தத்துவாசிரியர். விடுதலைப் புலிகளின் வளர்ச்சியிலும், அதன் இன்றைய விரிவாக்கத்திலும் மதியுரைஞர் பாலாவுக்கு நிரந்தரமான இடம் உள்ளது என்ப…
-
- 0 replies
- 959 views
-
-
இலங்கை சமாதான முயற்சிகளுக்கு பாலாவின் மறைவு ஒரு பின்னடைவு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறார் சொல்ஹெய்ம் [saturday December 16 2006 06:12:39 AM GMT] [uthayan.com] இலங்கை சமாதான முயற்சிகளில் புலிகளின் மதியுரை ஞர் அன்டன் பாலசிங்கம் கோபுரமாக உயர்ந்து நின்றவர். எனவே, அவரின் மறைவு சமாதான முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவு. இவ்வாறு பெரும் கவலையுடன் குறிப்பிட்டிருக்கிறார் நோர்வே வெளிநாட்டு அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நோர்வே அனு சரணைத் தரப்பின் பொறுப்பாளருமான எரிக் சொல்ஹெய்ம். இந்தியாவின் ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்துக்கு ஒஸ்லோவில் இருந்தபடி அளித்த பேட்டியிலேயே எரிக் சொல்ஹெய்ம் இவ்வாறு தெரிவித்தார். …
-
- 0 replies
- 808 views
-
-
Colombo, 16 December, (Asiantribune.com): Six Sri Lankan Air Force personnel are now undergoing a training program at Chandigarh in India, in preparation for the country’s latest purchase of MiG 27 jet fighter planes for its small air force. Indian newspapers have reported that the SLAF personnel are currently attending an electrical first line course for MiG 27 flip wings ground attack planes the country purchased from Ukraine recently. The group who started their course last October 14 would finish by January 5 2007 the reports said. When the program is over under the agreements with the Indian government, a third batch is expected to start training at the I…
-
- 0 replies
- 954 views
-
-
இலங்கை அரசின் பாதுகாப்பு அமச்சின் இணையத்தில் இந்தப்படத்தை பார்த்தேன்.யாழ் மக்களின் பரிதாபநிலையை இப்படி போட்டு அவமானப்பாடுத்துகிறார்கள் எப்போ இவர்களுக்கு விடிவு
-
- 4 replies
- 1.4k views
-
-
….இலங்கையில் பொதுமக்களில் கணிசமான் தொகையினர் போதிய அரசியல அறிவு கொண்டவர்களல்லர். இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தி இந்நாட்டின் கடுங்கோட்பாட்டு அரசியல் வாதிகள், சராசரி அரசியல் அறிவைத் தானும் கொண்டிராத அந்த அப்பாவிப் பொதுமக்களது உணர்வுகளைத் திiசை திருப்பி “:நாட்டுப் பற்று” என்ற ஒரு துரும்பைப் பயன்படுத்தி யதார்த்தத்தை மறைந்துவிடப் பிராயத்தனப் படுகின்றனர்;…. ….உலகத்துப் பொலிஸ்காரன் எனத் தம்பட்டமடித்து ஈராக் நாட்டை ஆக்கிரமித்துக் கொண்ட அமெரிக்க வல்லரசு இன்று ஈராக்கில் தனக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு நிலைகாரணமாக, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் அவதியற நேர்ந்துள்ளமை, எமது நாட்டின் இன்றைய ஆடசியாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைகிறது….. …
-
- 0 replies
- 1.5k views
-
-
சென்னை, டிச. 16: இலங்கைக்கு லாரி மூலம் வெடிபொருள் சப்ளை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் கருணாநிதிக்கு அவர் எழுதிய கடித விவரம்: இலங்கைக்கு எடுத்துச் செல்வதற்காக வெடிபொருள்களுடன் சென்ற லாரியை போலீஸôர் பிடித்துள்ளது குறித்து டிச.9-ம் தேதியன்று தில்லியில் நேரில் சந்தித்தபோது குறிப்பிட்டிருந்தீர்கள். இது தொடர்பாக டிச. 11-ம் தேதியிட்ட உங்களது விரிவான கடிதமும் கிடைத்துள்ளது. எனக்குக் கிடைத்த தகவலின்படி, வெடிபொருள்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் மூலம் அந்த வெடி பொருள்கள் இலங்கை கடற்படைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த வெடிபொருள்கள் கடலை ஆழ…
-
- 1 reply
- 1k views
-
-
http://www.nerudal.com/content/view/3411/70/ தேசவிடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து வரலாறாகிய பாலா அண்ணாவுக்கு எமது இறுதி மரியாதையை செலுத்துமுகமாகவும் வாகரையில் அரச பயங்கரவாதத்தால் பலியான எமது மக்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை (18-12-2006) அன்று வர்த்தக நிலையங்களை மூடி போக்குவரத்துச் சேவைகள் மற்றும் கல்விநிலைய செயற்பாடுகளை இடைநிறுத்தி துக்கதினமாக அனு~;டிப்பதுடன் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் நடாத்தப்படும் நேரடி n~ல் தாக்குதல்களை நிறுத்தி இராணுவ நடவடிக்கைகள் நடைபெறும் இடத்திலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு முழுமையானதும், தடைகளற்றதுமான சுதந்திரம் வழங்கப்படவேண்டுமென சர்வதேசத்தை வலியுறுத்தக்கோரியும் அன்றையதினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்வாக…
-
- 0 replies
- 727 views
-
-
சிறீலங்கா படையினரால் இரு இளைஞர் கைது சிறீலங்கா படைகளால் வலிகாமம்இ யாழ் தீவகம் பகுதிகளில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள். வலிகாமம் அளவெட்டி மாரியம்மன் வீதியை சேர்ந்த 23 அகவையுடைய இராசரட்டினம் ஈழவேந்தன் என்ற இளைஞர் படையினரால் கடத்தப்பட்டு உடுவில் படைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை கடந்த புதன்கிழமை காரைநகரில் இருந்து வேலணை ஊடாக நயினாதீவிற்கு சென்ற 36 அகவையுடைய கணபதி மகேந்திரன் என்ற இளைஞர்இ சிறீலங்கா படைகளால் கடத்தப்பட்டுள்ளார். http://www.pathivu.com
-
- 0 replies
- 673 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் 'தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவுகள் தாங்கிய பாடல்கள் http://www.tamilnaatham.com/bala_anna_songs_2006_12_15.html
-
- 1 reply
- 1.2k views
-
-
ஆண்டன் பிரபாகரன் உருக்கம் கருணாநிதி அஞ்சலி டிசம்பர் 15, 2006 கிளிநொச்சி: ஆண்டன் பாலசிங்கம் மறைவின் மூலம் ஈழத்தின் ஒளி அணைந்து விட்டது என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கூறியுள்ளார். பாலசிங்கம் மறைவு குறித்து பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சி மற்றும் வலிமையில் பாலசிங்கத்தின் பங்கு மகத்தானது. நமது மூத்த உறுப்பினர் அவர். சிறந்த சிந்தனையாளர். தத்துவஞானி. எல்லாவற்றையும் விட எனக்கு உற்ற தோழராக விளங்கியவர். எனக்கு சக்தியையும், ஆற்றலையும் கொடுத்தவர். எனது துயரங்கள், வேதனைகளை பகிர்ந்து கொண்டவர். புலிகள் அமைப்புக்காக அரசியல் மற்றும் தூதரக ரீதியில் பலம் வாய்ந்த குரலாக ஒலித்தவர். யாரிடமிருந்து நான் அறிவுரைக…
-
- 0 replies
- 1.2k views
-
-
வெள்ளி 15-12-2006 17:38 மணி தமிழீழம் [சிறீதரன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசிசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமாகிய தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மறைவையொட்டி இன்று பயத்துடன் மக்கள் தமது சோகத்தை வெளிப்படுத்தினார்கள். யாழ் குhநாட்டை ஆக்கிரமித்து நிற்க்கும் இராணுவம் மக்களின் துக்கத்தை வெளிப்படுத்தக் கூட அனுமதிக்காது மிகவும் காட்டுமிரண்டித்தனமாக நடந்து கொள்கின்றமையால் இத்தகைய நிலமை காணப்பட்டது. ஆனாலும் பொது அமைப்புக்களைப் பொறுத்தவரையில் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு தமது துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள். இன்று யாழ் நகரப் பகுதியில் பொது மக்களின் நடமாட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டதுடன் ஒரு அமைதியான நிசப்தம் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்தாகும். நன்றி…
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கையின் கிழக்கே நீரில் முழ்கி 13 பேர் பலி [Friday December 15 2006 02:22:49 PM GMT] [யாழ் வாணன்] இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட வாகரைப் பிரதேசத்திலிருந்து அரசாங்க கட்டுப்பாட்டு பகுதி நோக்கி இடம் பெயர்ந்தவர்கள் பயணம் செய்த படகுகள் சில விபத்திற்குள்ளானதில் குழந்தைகள் பெண்கள் உட்பட குறைந்தது 13 பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக அச்சம் நிலவுகிறது. வாகரையிலிருந்து இன்று காலை கடல் வழியாக சுமார் 90 பேருடன் புறப்பட்டதாகக் கூறபப்டும் 9 வள்ளங்களில் 7 வள்ளங்கள் மட்டுமே பாதுகாப்பாக சென்றடைந்துள்ளது. வாகரை கடலில் வள்ளமொன்று விபத்திற்குள்ளானதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த…
-
- 0 replies
- 894 views
-
-
வெள்ளி 15-12-2006 17:50 மணி தமிழீழம் [மயூரன்] அமெரிக்கா தனது நாட்டு மக்களின் சுதந்திரத்திற்காக போராடிய ஒரு தேசம் என்ற அடிப்படையில் இலங்கைத் தமிழ் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை ஏற்று உரிய தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு உதவியளிக்க உடனடியாக முன்வரவேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம் வலியுறுத்திக் கேட்டுள்ளது. அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ.பிளேக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று வியாழக்கிழமை காலை திடீர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்றுக் காலை சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற இந்த விசேட சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா சம்பந்…
-
- 0 replies
- 766 views
-
-
இலங்கை விடயத்தில் இந்திய கொள்கை மாற வேண்டும்" தியாகு ஈழத் தமிழர்கள் பால் தமிழக மக்கள் கொண்டுள்ள பற்று, ஆதரவு என்ற பொறி, அணைந்து விடாமல் காத்து வரும் எண்ணற்ற ஆர்வலர்களில் தியாகுவும் முக்கியமானவர். தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கியப் பங்காற்றுபவர். ஈழப் பிரச்சினையின் தற்போதைய நிலை, இந்தியாவின் அணுகுமுறை குறித்து நம்முடன் தியாகு பகிர்ந்து கொண்டவை: ஈழம் இன்று? ஈழத்தின் இப்போதையை நிலையை சொல்கிறபோது, அங்கு ஒரு போர் தவிர்க்க முடியாதது என்ற சூழல்தான் உள்ளது. இதற்கான பொறுப்பும், பழியும் சிங்கள அரசையே சாரும். அமைதி முயற்சிகளுக்கான அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் முறியடித்து விட்டார்கள். 2001லிருந்து ஏறத்தாழ 4 ஆண்டு காலம் போரற்ற சூழ…
-
- 8 replies
- 1.7k views
-
-
http://www.uthayan.com/pages/news/today/02.htm
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழமே தமிழரின் விடிவுக்கு ஒரே வழி என உறுதியோடு தலைவரின் கரத்தை பலப்படுத்திய அரசியல் போராளி பாலா அண்ணாவின் உடல் தமிழீழத்திற்கு எடுத்துச் செல்லப்படுமா? அவர் நேசித்த மண்ணில் நேசித்த மக்களோடு உறங்குவது அவரின் இறுதி விருப்பமாகக் கூட இருந்திருக்கும் அல்லவா? சிங்களம் இடம் கொடுக்குமா?
-
- 7 replies
- 3.5k views
-
-
யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு கல்வியமைச்சால் அனுப்பி வைக்கப்பட்ட 4 இலட்சம் இலவச பாட நூல்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படாமல் இராணுவ முகாமில் முடங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண மாணவர்களுக்கு மொத்தம் 8 இலட்சம் பாடநூல்கள் தேவைப்படுகின்றன.இவற்றில் 4 இலட்சம் இலவச பாடநூல்கள் கடந்த 7 ஆம் திகதி வியாழக்கிழமை கப்பல் மூலமாக அங்கு அனுப்பி வைக்கப்பட்டன. இறுதித் தவணைக்காக பாடசாலைகள் கடந்த 8 ஆம் திகதி மூடப்பட்ட சமயம் தென்னிலங்கையில் பல பாடசாலைகளுக்கான நூல் விநியோகம் ஓரளவு நடைபெற்றிருந்தது. கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, அடுத்த வருடம் பாடசாலைகள் ஆரம்பிக்க முன் இலவச நூல் விநியோகம் பூரணப்படுத்தப்பட்டிருக்க வேண்டுமென கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். …
-
- 0 replies
- 903 views
-
-
* அவுஸ்திரேலிய அரசு தெரிவிப்பு புதிய குடியேற்றவாசிகளுக்கு பிரஜாவுரிமையை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவுஸ்திரேலியா கட்டாயப் பரீட்சையொன்றின் அடிப்படையிலேயே இது தீர்மானிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. புதிய குடியேற்றவாசிகளது ஆங்கில அறிவும், அவுஸ்திரேலியாவின் முக்கிய விழுமியங்கள் பற்றிய அறிவும் கணினி மூலம் பரிசோதிக்கப்படும். அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் ஹவாட் செவ்வாய்க்கிழமை இதனை தெரிவித்துள்ளார். மேற்குலகின் தாராளவாத விழுமியங்களை ஏற்றுக் கொள்ளாத மத்திய ஆசிய நாட்டவர்களை தவிர்ப்பதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்படுவதை அவர் நிராகரித்துள்ளார். சிலரை தவிர்ப்பதும் ஏனையவர்களை உள்ளே வருவதற்கு அனுமதிப்பதும் இதன் நோக்கமல்ல என அவர் தெரிவித்துள்ளார்.…
-
- 0 replies
- 1.1k views
-
-
* அமைச்சரவை தீர்மானம் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவி, பிள்ளைகளுக்கு அனுதாப அடிப்படையிலான கொடுப்பனவாக 50 இலட்சம் ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அமைச்சரவைப் பேச் சாளரான தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். புதன்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனையொன்றுக்கு அமைய அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியிருப்பதாகவும், நிதியானது திறைசேரியிலிருந்து வழங்கப்படுமெனவும் அமைச்சர் யாப்பா கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலே…
-
- 0 replies
- 908 views
-