Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தேசத்தின்குரலின் இறுதி வீரவணக்க நாளன்று யாழ்ப்பாணத்தில் துக்கம் அனுஸ்டிப்பு. யாழ் குடாநாட்டில் மறைந்த தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கத்திற்கு இன்று யாழ் குடாநாட்டு மக்கள் துக்கம் அனுஸ்டித்தார்கள். இன்று வர்த்தக நிலையங்கள் தனியார் கல்வி நிலையங்கள் உட்பட பல நிறுவனங்களும் பூட்டப்பட்டதுடன் அரச தனியார் போக்குவரத்துச் சேவைகளும் மட்டுப்படுத்திய அளவிலேயே இடம் பெற்றன. காலையில் வர்த்தக நிலையங்களைப் பூட்டிய உரிமையாளர்கள் இராணுவத்தனரால் அழைக்கப்பட்டு வர்த்தக நிலையங்களை திறக்கும்படி வற்புறுத்தி திறப்பித்தும் உள்ளார்கள். இத்தகைய சம்பவங்கள் சங்கானை, சுன்னாகம், யாழ்ப்பாணம், கைதடி உட்பட பல பகுதிகளிலும் இடம் பெற்றள்ளன. இத்துடன் வர்த்தகர்கள் சல இடங்களில் இராணு…

  2. மேனனை கருணாநிதி சந்தித்தது தவறு" - பழ.நெடுமாறனுடன் சந்திப்பு இந்திரா காந்திக்குப் பிறகு வந்த மத்திய அரசுகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையின் முக்கியத்துவத்தைக் குறைத்து விட்டன என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவருமான பழ. நெடுமாறன் குற்றம் சாட்டுகிறார். இலங்கைத் தமிழர்களுக்காக நீண்ட நெடுங்காலமாக சலிக்காமல் குரல் கொடுத்து, அயராமல் பாடுபட்டு வருபவர் நெடுமாறன். தமிழகத்தில் உள்ள தலைவர்களிலேயே இவரை விட இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர் யாரும் இருக்க முடியாது. பொடா சட்டத்தின் வாயில் சிக்கி சிறைவாசம் அனுபவித்தவர். அப்படியும் குரல் தளராமல், ஈழத் தமிழர்களுக்காக முழங்கி வரும் தமிழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான நெடுமாறன். ஈழத் தம…

  3. பாலா அண்ணைக்கு முதல்வர் கருணாநிதி வழங்கிய கௌரவம்: சு.ப.தமிழ்ச்செல்வன் நன்றி ஈழத்தின் சுயமரியாதைச் சுடரொளியை அணையாமல் பாதுகாத்தவர் என பாலா அண்ணனுக்கு அவர் வழங்கிய கௌரவம் மொத்த தமிழினத்தின் சுயமரியாதை எது என்பதை உலகறிய வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதையிட்டு நாம் நிறைவடைகிறோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். லண்டனில் இன்று புதன்கிழமை நடைபெற்ற "தேசத்தின் குரல்" பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடையே தமிழீழத் தாயகத்திலிருந்து செய்மதியூடாக சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய உரை: அகிலம் எங்கும் பரந்திருக்கும் தமிழினத்திற்கு சுதந்திர தமிழீழத்தைச் சுட்டிநின்ற கலங்கரை விள…

  4. தமிழர்களின் வரலாற்றில் பதிவுபெறும் ஒரு நாயகனாக பாலாண்ணா இப்பூவுலகில் இருந்து விடைபெறுகின்றார்:- பொட்டுஅம்மான். தமிழர்களின் வரலாற்றில் பதிவுபெறும் ஒரு நாயகனாக பாலாண்ணா இப்பூவுலகில் இருந்து விடைபெறுகின்றார். வாழ்வின் நீண்டகாலப் பகுதியை தமிழீழ தேசத்திற்காக கொடுத்து வாழ்ந்த மாமனிதனை எம் தேசியத் தலைவர் அவர்கள் தேசத்தின் குரல் எனும் உயர்கௌரவத்தைக் கொடுத்து வழியனுப்பிவைக்கிறார். என தேசத்தின் குரல் அன்ரன்பாலசிங்கம் அவர்களின் இறுதிவீரவணக்க உரையை ஆற்றிய விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறைப்பொறுப்பாள

  5. தேசத்தின் குரலுக்கு தமிழீழ தேசியத் தலைவர் வீரவணக்கம் செலுத்தினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் உருவப்படத்திற்கு தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரவணக்கம் செலுத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசறையொன்றில் அமைக்கப்பட்ட மண்டபத்தில் "தேசத்தின் குரல்" பாலசிங்கத்தின் திருஉருவப்படத்திற்கு தமிழீழத் தேசியத் தலைவர் சுடரேற்றி மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தினார். இந்நிகழ்வில் தேசியத் தலைவரின் துணைவியார், அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், தமிழீழ மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன்.தியாகம், கேணல் துர்க்கா உள்ளிட்ட தளபதிகள், போராளிகள் எனப் பலரும் பங்கே…

  6. சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து துணை இராணுவக் குழுவான கருணா குழு பாதுகாப்பு கோரியுள்ளது. கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பு செங்கலடியில் நடைபெற்ற தாக்குதலில் அக்குழுவைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "நாங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருப்பதால் பாதுகாப்பு தேவைப்படுகிறது" என்று அக்குழுவின் பேச்சாளர் எனக் கூறப்படும் அசாத் மௌலானா என்பவர் தெரிவித்துள்ளார். -puthinam-

    • 0 replies
    • 995 views
  7. முல்லைத்தீவு மக்கள் குடியிருப்புக்கள் மீது கிபீர்த் தாக்குதல். இன்று காலை 10.00மணியளவில் முல்லைத்தீவு மக்கள்குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான கிபீர்விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளன. தேசத்தின் குரலின் இறுதிவணக்க நிகழ்வில் மக்கள் ஈடுபட்டிருந்த வேளை மக்ளை அச்சுறுத்தும் வகையில் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. www.sankathi.com

  8. பிரபாகரனின் 'வாய்ஸ்' ஆன்டன் பாலசிங்கம் விடுதலைப் புலி தலைவர் பிரபாகரனின் நண்பராக இருந்த ஆன்டன் பாலசிங்கம், நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்திருக்கிறார். இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமான "போர் - அமைதி' (ரஹழ் ஹய்க் டங்ஹஸ்ரீங்) என்ற அத்தியாயத்தில் பாலசிங்கம் அமைதியின் ஃபேஸ"க இருந்திருக்கிறார். போர் முனை யுக்திகளைப் பொறுத்தமட்டில் பிரபாகரன் அதைத் தன்னகத்தே வைத்துக்கொண்டார் என்பதில் சந்தேகமில்லை. பாலசிங்கம் மரணம் அடைந்ததும் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "வாய்ஸ் ஆஃப் தி நேஷன்' என்று பாலசிங்கத்தை வர்ணித்துள்ளார் பிரபாகரன். இதில் "நேஷன்' என்று அவர் சொல்வது தனி ஈழத்தைக் குறிக்கும்! வெளி உலகத்திற்கு விடுதலைப்புலிகளின் "வாய்ஸ2க'வும், விடுதலைப் புலிகளுக்கு வெளி உல…

    • 0 replies
    • 1.7k views
  9. நாம் எப்போதும் இந்திய அரசையும் அரசியல்வாதிகளையும் நம்பக்கூடாது. இது அடுத்த உதாரணம் http://thatstamil.oneindia.in/news/2006/12/19/lanka.html

    • 2 replies
    • 1.7k views
  10. நீலாசேனை இராணுவ முகாம் மீது தாக்குதல் ஒரு இராணுவ வீரர் பலி [Wednesday December 20 2006 06:29:37 AM GMT] [யாழ் வாணன்] மன்னார் நீலாச்சேனை இராணுவ முகாம் மீது இன்று புதன்கிழமை அதிகாலை புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் போது ஒரு இராணுவ வீரர் பலியாகியுள்ளதாகவும், இத்தாக்குதல் இராணுவத்தினரால் முறையடிக்கப்பட்டுள்ளதாக ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்தது http://www.tamilwin.com/

  11. "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்துக்கு சென்னையில் இரங்கல் கூட்டம் [புதன்கிழமை, 20 டிசெம்பர் 2006, 06:04 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்துக்கு இரங்கல் தெரிவித்து சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை கூட்டம் நடைபெற்றது. தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் "தேசத்தின் குரல்" மறைவு குறித்த இரங்கல் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள உலகத்தமிழர் பேரமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவருமான பழ.நெடுமாறன் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளதாவது: சுதந்திரத்துக்காக போராடும் இந்த இயக்கத…

    • 0 replies
    • 762 views
  12. வடமராட்சியில் சிகையலங்கார நிலைய உரிமையாளர் சுட்டுக்கொலை நிஷாந்தி நேற்று செவ்வாய்க்கிழமை காலை யாழ் வடமராட்சியில் சிகையலங்கார உரிமையாளரொருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ள்ளார்.. கொல்லப்பட்டவர் அந்தோனிப்பிள்ளை பிரபகரன்(32) என்னும் குடும்பஸ்தர் என இனங்காணப்பட்டுள்ளார் தொண்டமனாறு- வல்வெட்டிதுறை வீதியில் ஆதியடி கோவிலிலுள்ள தனது சிகையலங்க்கர நிலையத்தில் நின்றபோது இரு இனந்தெரியாத நபர்கள் இவரை சுட்டு கொன்றுள்ளனர்.. http://www.virakesari.lk/vira/html/head_view.asp?key=3420

  13. மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு கடந்த 48 மணிநேரத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழைப்பொழிவு காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இம் மழைப்பொழிவு காரணமாக அம்பாறை பாக்கியவதி, திருக்கோவில் ஆகிய பகுதிகளில் 50 000க்கு அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதேவேளை நேற்று அம்பாறை திருருக்கோவில் பகுதியில் சிறிய புயல் தாக்கியுள்ளதாகவும் இதனால் பாடசாலை ஒன்றும், தபால் அலுவலகம், வை.எம்.சி.ஏ கட்டிடமும், சில செயலகங்களும், 50வவரையான வீடுகளும் சேதங்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. http://www.pathivu.com/

  14. அவுஸ்திரெலியாவில் விடுதலைப்புலிகளினைத்தடை செய்யப் போவதாக வந்த செய்தி பொய்யாகும். இலங்கை அரச பத்திரிகையான தினகரனிலும், டெயிலி நியூசிலும், சிங்கள ஊடகங்களிலும், எட்டப்ப ஊடகங்களிலும் சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றது. அவுஸ்திரெலியாப்பாரளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ்சாண்டர் டவுணர் சொன்னதாக அச்செய்திகளில் வந்தன. ஆனால் அச்செய்தி பொய் என்று அவுஸ்திரெலியாப்பாரளுமன்ற உறுப்பினர்களிடம் தொடர்பு உள்ளவர்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. Australia (Alexander Downer) will not ban Tamil Tigers - Utter lie by Sri Lankan Intel Circle The recent reports published by Sri Lankan State intelligence funded news web blogs regarding Australia's stand on Tamil freedom stru…

  15. ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க டிச. 22 இல் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி அறப்போர்! - கி. வீரமணி ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரிமையைப் பாதுகாக்க தமிழகம் முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் மனித சங்கிலி அறப் போராட்டம் நடைபெறும் என்று இன்று (டிச. 19) செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிவித்தார். அப்பேட்டியின் விவரம் வருமாறு: இலங்கையில் ஈழத் தமிழர்கள், அப்பாவி பொதுமக்கள் பட்டினிப் போட்டும் குண்டு மழை பொழிந்தும் சிங்கள அரசு தமிழினத்தை அழித்து வருவது தடுக்கப்பட வேண்டும். அங்கு செயற்கையாக ஒரு பஞ்சத்தை சிங்கள அரசு உருவாக்கி தமிழினத்தை அழிக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டு வருகிறது. இதை முதலில் நாம் தடுத்து நிறுத்தியாக வேண்டும். இதில் கட்சி,…

  16. Started by Theevaan,

    Sorry to write in English but I read a message from following article that you can send Malar Valayam if you cannot go to Alexandra Palace. Specially who live out of England. Use the website, they will deliver for us. Thank you http://www.tamilnaatham.com/articles/2006/dec/arush/20.htm

    • 0 replies
    • 4.3k views
  17. செவ்வாய் 19-12-2006 21:39 மணி தமிழீழம் (சிறீதரன்) டிசம்பர் மாதம் முதல் இருவாரத்தில் சிறீலங்காப் படையினரால் 72 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இது குறித்து விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் விடுத்திருக்கும் அறிக்கையில்: சிறீலங்கா படையினர் மற்றும் துணை ஆயுதக் குழுவினரின் நேரடியான தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும்இ ஏனைய 41 பேரும் திருமலை வாகரையில் சிறீலங்காப் படையினர் ஏவிய எறிகணைத் தாக்குதலிலும் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி : பதிவு கடந்த இருவாரத்திலும் 21 தமிழ் மக்கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதாகவும் இவர்களில் 13 பேர் யாழ் குடாநாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும…

  18. ராதிகா குமாரசுவாமிக்கு எதிராக அமெரிக்காவில் பிரசாரங்கள்! சிறுவர்களும், ஆயுத முரண்பாட்டிற்கு மான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமியை மீண்டும் அப்பதவியில் நியமிப்பது தொடர்பாக எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விசேட சந்திப்பொன்றை அமெரிக்கா வின் நியூயோர்க்கில் நடத்தியுள்ளார் நியூயோர்க் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இலங் கைக்கான ஐ.நாவின் பிரதிநிதி பிரசாத் காரி யவசம் விருந்துபசாரம் ஒன்றை வழங்கியுள்ளார். அவரது இல்லத்தில் நடை பெற்ற இந்த விருந்துபசாரத்தில் ராதிகா குமார சுவாமி மற்றும் முன்னாள் இந்தியத் தூது வர் நிருபம் சென் ஆகியோர் கலந்துகொண் டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற்ற…

  19. இலங்கையில் ஈழம் எரிகிறது, எரிகிறது, எரிந்துகொண்டே இருக்கிறதே! மூவாயிரம் பேர் படுகொலை; 35,000 பேர் வீடிழந்துள்ளனர்! சிங்கள அரசுக்கு எச்சரிக்கை தேவை! ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை தேவை! தேவை!! காலத்தால் தக்க நடவடிக்கை எடுத்துள்ளார் தமிழக முதல்வர் பிரதமருக்கும், சோனியாவுக்கும் தந்திகள் குவியட்டும்! குவியட்டும்!! ஈழத்திலே தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கும் படுகொலைகள் குறித்தும், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது குறித்தும், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- இலங்கையில் சிங்கள வெறித்தன அரசால் தமிழர்கள் திட்டமிட்டு அழிக்கப்படும் கொடுமை பல முனைத் தாக்குதல்களாக நாளும் நடைபெறுகிறது. மனித உர…

  20. ஜானக பெரேராவை பாதுகாப்பமைச்சின் துணைச் செயலாளராக நியமிக்க திட்டம் இலங்கைக்கு மீள அழைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி ஜானக பெரேராவிற்கு பாதுகாப்பு அமைச்சின் துணைச் செயலாளர் பதவி அல்லது அதற்கு இணையான பதவி நிலை ஒன்று வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நீண்ட காலம் இலங்கையில் இருந்திருக்கவில்லை, மற்றும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நுட்பங்கள் குறித்து போதிய அனுபவங்களை பெற்றிராமை ஆகியவற்றால் அவருடைய செயல்பாடுகள் வினைத்திறன் மிக்கதாக இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை அடுத்து விடுதலைப் புலிகளின் தாக்குதல் தந்திரோபாயங்கள் குறித்து விசாலமான அறிவு மற்றும் அனுபவம் கொண்ட ஜானக பெரேராவை வரவழைத்து அவருடைய…

  21. தொடரும் வன்முறைகள் குறித்து நோர்வே ஆழ்ந்த கவலை பண்டிகை காலத்தை முன்னிட்டு தாக்குதலை நிறுத்துமாறும் கோரிக்கை [Tuesday December 19 2006 06:45:33 PM GMT] [யாழ் வாணன்] இலங்கையில் தொடரும் வன்முறைகள் தொடர்பில் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள நோர்வே பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் நலன் கருதியாவது தற்காலிகமாகவேனும் இரு தரப்பினரும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. சமாதான பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கான புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் நோர்வே உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வது சாத்தியமில்லை. இருதரப்பினரும் சமாதானத்துக்கான விருப்பத்தையோ சமிக்ஞைகளையோ வெளிப்படுத்தினால் மட்டுமே மீண்டும் சமாதான பேச்சுக்கள் சாத்தியமாகும் என்றும் …

  22. அனைத்துலக சமூகத்தின் பதில் என்ன?: விடுதலைப் புலிகள் [திங்கட்கிழமை, 18 டிசெம்பர் 2006, 16:22 ஈழம்] [பூ.சிவமலர்] வாகரையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சிறிலங்கா அரசு திட்டமிட்டுச் செயற்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு எவரும் ஏவுகணை விஞ்ஞானம் படிக்க வேண்டியதில்லை. வாகரையைத் தன்வசமாக்கும் திட்டத்தில் சிறிலங்கா அரசு, அனைத்துலக விதிமுறைகளை மீறியதுடன், மனிதாபிமான வேண்டுகோள்களையும் நிராகரித்துள்ளது என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் அறிக்கை விடுத்துள்ளது. வாகரையில் உள்ள மக்கள் நல சேவை புரியும் இடங்களை மட்டக்களப்புக்கான அனைத்துலக செஞ்சிலுவகைச் சங்கப் பிரதிநிதி காசேசி மார்யத்தை, விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் க…

    • 6 replies
    • 1.9k views
  23. மலையகத் தொழிலாளருக்கு ஆதரவாக நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போர்! அரசுக்கு ஜே.வி.பி. எச்சரிக்கை தோட்டத் தொழிலாளரின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணும்படி ஜே.வி.பி., ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. தவறும் பட்சத்தில் நாடு முழுவதும் அரச, தனியார் துறைகளை ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் வேலை நிறுத்தப் போராட் டமொன்றை நடத்தப்போவதாக அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜே.வி.பியின் கீழ் இயங்கும் 131 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஜே.வி.பி. தொழிற்சங்கங்களுக்குப் பொறுப் பான கே.டி, லால்காந்த ஆகியோருடன் நேற்றுக் காலை இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி பொதுச் செயலாளர் எஸ். சதாசிவம் பேச்சு நடத்தினார். தோட்டத் தொழிலாளரின…

  24. கடந்த 7 மாதத்தில் 210,000 பேர் அகதிகளாக இடப்பெயர்வு [செவ்வாய்க்கிழமை, 19 டிசெம்பர் 2006, 19:22 ஈழம்] [க.நித்தியா] கடந்த ஏழு மாத காலத்தில் இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் இருந்து மேலும் 210,000 பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். ஆழிப்பேரலை பேரழிவினால் தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறிய மக்கள் தொகையில் பாதி இது என முன்னணி பிரித்தானிய துயர் துடைப்பு அமைப்பு ஒன்று கவலை தெரிவித்துள்ளது. போரின் பயங்கரமான பாதிப்பும், நாட்டின் சில பகுதிகளில் போக்குவரத்துச் சேவை கட்டுப்படுத்தப்பட்டிருப்பத

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.