ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
வாகரையில் மனிதப் பேரவலம் சமாதானத்தின் மீதான நம்பிக்கைகள்அடியோடு அற்றுப் போன நிலையில், இலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரதேசங் களில் மக்கள் போர்க்கால அவலங்களுக்கும் அழிவுகளுக்கும் முகம்கொடுக்கத் தொடங்கிவிட்டனர். புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் இரு வாரங்களே இருக்கின்றன. உலகிற்கு சமாதானத் தைப் போதிக்க வந்த யேசுபிரானின் அவதார தினத்தைக் கொண்டாடி மகிழ உலகம் தயாராகிருவருகிறது. ஆனால், இலங் கையில் தமிழர்களையும் ஏனைய இனத்தவர்களையும் போர் பற்றிய பயமே மீண்டும் கௌவத் தொடங்கி உள்ளது. சமாதா னம் தூர விலகிச் செல்கிறதே என்ற ஏக்கத்துடனேயே அவர்கள் புத்தாண்டை எதிர்கொள்கின்றனர். நாட்டின் வடக்கிலும், கிழக்கிலும் போக்குவரத்து மார்க் கங்கள் துண்டித்த நிலையில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் ச…
-
- 1 reply
- 809 views
-
-
யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள இராணுவத்தினர் பொது மக்களை திருக்கை வால் கொண்டு தாக்கி வருகின்றார்கள். குறிப்பாக இளைஞர்கள் உட்பட ஆட்டோச்சாரதிகள் மற்றும் வழிப்போக்கர்களும் இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். யாழ்ப்பாணத்தில் படைத்தரப்பினர் தமது பாதுகாப்புக் காரணங்களுக்காக நகரப் பகுதியில் வாகணங்கள் நிறுத்தப்படுவதை கட்டுப்படுத்தியுள்ளார்கள் அதனைத் தொடர்ந்து வர்த்தக நிலையங்கள் மற்றும் வீதியோரங்களில் வாகணங்கள் உந்துருளிகள் ஈருருளிகள் போன்றவற்றை நிரிபவர்கள் தரித்து நிற்பவர்கள் மீது படையினர் கண்மூடித்தனமாக திருக்கை வால் கொண்டு தாக்குவதுடன் வர்தகர்களையும் தாக்கியும் மற்றும் கடுமையாக எச்சரித்தும் வருகின்றார்கள். உந்துருளிளியல் இராணுவத…
-
- 1 reply
- 2.3k views
-
-
ஈழப்பிரச்சினைக்கு சமாதான தீர்வுகாண தவறினால் தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் - தொல்.திருமாவளவன் வீரகேசரி நாளேடு ஈழத்தில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக மனிதாபிமானப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். ஈழத்தமிழர்களின் பிரச்சினை எந்த வகையிலும் தீர்ந்தபாடில்லை. எனவே, தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரித்து அங்கு வாழும் தமிழர்களின் அடிப்படை பிரச்சினையை தீர்க்க முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித் தார். இலங்கை விவகாரத்தில் தமிழகம் வெகுவாக விழித்தெழுந்துள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அனைத்து தமிழகத் தலைவர்களும் ஒருமித்து குரல் கொடுத்து வருகின்றனர். எனவே, இதனை மத்திய அரசு …
-
- 0 replies
- 755 views
-
-
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கடும் மழை வெள்ளத்தினால் 6000 குடும்பங்கள் இடம்பெயர்வு [sunday December 17 2006 08:21:24 PM GMT] [virakesari.lk] நாட்டில் சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் சுமார் 6000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் இவர்கள் அம்பாந்தோட்டை பிரதேசத்தில் 8 முகாம்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, யோக கண்டிய குளம் பெருக்கெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திஸ்ஸமஹாராம பிரதேசத்திலேயே அதிகமான குடும்பங்கள் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. கிரிந்தி ஓயா பிரதேசத்திலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களை நோ…
-
- 0 replies
- 830 views
-
-
அநுரா பண்டாரநாயக்கவுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபுர்வ வாசஸ்தலமான விசும்பாயவில் இருந்து வெளியேறுமாறு -மகிந்த உத்தரவு [sunday December 17 2006 06:01:13 PM GMT] [tharan] உல்லாசப் பயணத்துறை அமைச்சர் அநுரா பண்டாரநாயக்கவுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபுர்வ வாசஸ்தலமான விசும்பாயவில் இருந்து வெளியேறுமாறு மகிந்த உத்தரவு: தனக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளதாக முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். அமைச்சர் அநுரா பண்டாரநாயக்கவுடன் தொடர்பை ஏற்படுத்திய அரச தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்க, அநுராவை விசும்பாயவில் இருந்து வெளியேறுமாறு தெரிவித்தார். எனினும் அநுரா இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். அரச தலைவராக மகிந்த பதவி…
-
- 0 replies
- 872 views
-
-
குடாநாட்டில் வெள்ளைக் கிறிஸ்துமஸ் [ஞாயிற்றுக்கிழமை, 17 டிசெம்பர் 2006, 19:07 ஈழம்] [க.நித்தியா] யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள பாதுகாப்பு கெடுபிடிகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இம்முறை வெள்ளை நிற உடைகளை மட்டும் அணிந்து கிறிஸ்துமஸ் கொண்டாடப்படவுள்ளது. ஒவ்வொரு நாளும் மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். எமது அன்பிற்குரியவர்கள் பலர் காணாமல் போயுள்ளார்கள். நாங்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கி
-
- 0 replies
- 835 views
-
-
மக்கள் பயக்கெடுதியில் இராணுவத்தின் அடாவடித்தனம். நேற்று முன்தினம் வல்வையில் 40 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாய் இராணுவத்தின் சுற்றி வளைப்பில் நிர்வாணமாக்கி ஓட விரட்டப்பட்டு வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார் என்று வல்வையில் இருந்து நமது நிருபர் அறிவித்துள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்மணி வல்வையின் பழம் பெரும் நாடக நடிகர் திரு பெரியதம்பி அவர்களின் மகள் என்றும் கடற்கரும்புலி சிதம்பரத்தின் சகோதரியார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது மரண விசாரணைகள் நடைபெறுவதாகவும், உடலம் கணவன் பிள்ளைகளிடம் இதுவரை கையளிக்கப்படவில்லை என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது. நேற்று முன்தினம் வல்வை நடராஜா வீதி இராணுவத்தின் முற்றுகைக்கு உட்படுத்தப்ப…
-
- 0 replies
- 1.5k views
-
-
நியூயோக்கில் ரணில்- ராதிகா- நிருபம்சென் சந்திப்பு [ஞாயிற்றுக்கிழமை, 17 டிசெம்பர் 2006, 18:32 ஈழம்] [க.நித்தியா] சிறுவர்களும் ஆயுத முரண்பாட்டிற்குமான ஜக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி ராதிகா குமாரசுவாமியை மீண்டும் நியமிப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சிறப்பு சந்திப்பொன்றை அமொரிக்காவின் நியூயோக்கில் நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது. நியூயோர்க் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இலங்கைக்கான ஜ.நாவின் பிரதிநிதி பிரசாத் காரியவாசம் சிறப்பு விருந்துபசாரம் ஒன்றை வழங்கியுள்ளார். அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த விருந்துபசாரத்திற்கு ராதிகா குமாரசுவாமி மற்றும் முன்னாள் இந்திய தூதுவர் நிருபம் சென் ஆகியோர் கலந்து கொண்டனர…
-
- 0 replies
- 1.3k views
-
-
வாகரையில் சூனியப் பிரதேசம் நிறுவப் புலிகள் சர்வதேச அமைப்புகளிடம் யோசனை முன்வைப்பு [sunday December 17 2006 06:45:48 AM GMT] [uthayan.com] வாகரை ஆஸ்பத்திரி மற்றும் பாட சாலையை அண்டிய பகுதிகளை பாது காப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு, அகதி களுக்கான ஐ.நா. தூதரகம், போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஆகியவற்றின் பிரதி நிதிகளைச் சந்தித்துப் பேசிய போதே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் இந்தக் கோரிக் கையைத் தாம் கொழும் புக்கு எடுத்துச் சென்று அரசாங்கத் தரப்புடன் பேசி பதிலை அறிவிப்பதாக மூன்று அமைப்புகளின் பிரதிநிதிகளும் வாக்குறுதி அளித்தனர். ச…
-
- 0 replies
- 905 views
-
-
விடுதலைப் புலிகளுடன் கண்காணிப்புக்குழு, செஞ்சிலுவை சங்கம் மற்றும் யு.என்.எச்.சி.ஆர் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துராயாடல். தமிழர் தாயகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. சந்திப்பானது விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்தில் நேற்றும் நேற்று முன்தினமும் இடம்பெற்றன. நேற்று முன்தினமிரவு விடுதலைப் புலிகளுக்கும் வன்னி மாவட்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. விடுதலைப் புலிகள் தரப்பில் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன்…
-
- 0 replies
- 824 views
-
-
இராணுவம் எறிகணைவீச்சு - கதிரவெளியில் 7பொதுமக்கள் பலி. மட்டக்களப்பு கதிரவெளியில் இரண்டு சக்கர உழவு இயந்திரத்தில் பயணம் செய்த 7 பொதுமக்கள் சிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணைவீச்சிற்கு இலக்காகி உடல்சிதறி பலியாகியுள்ளனர். இந்தக் கோரச்சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக வாகரை வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி எம்.வரதராஜன் தெரிவிக்கையில் இவர்கள் கொல்லப்பட்ட விடயம் சம்பவம் நடைபெற்ற தினத்தின் போது வெளியான போதிலும் அது உறுதிப்படுத்தவில்லை. இச்சடலங்கள் நேற்றைய தினம் அடக்கம் செய்யப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார். www.sankathi.com
-
- 0 replies
- 741 views
-
-
(ஞாயிற்றுக்கிழமை, 17 டிசெம்பர் 2006, 07:03 ஈழம்) (வவுனியாவிலிருந்து த.சுகுணன்) "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம், தேசியத் தலைவர் வே.பிரபாகரன் மீதும் போராளிகள் மீதும் கொண்டிருந்த பற்றை வார்த்தைகளுக்குள் அடக்கமுடியாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தான் படித்த விடுதலைத் தத்துவம் அதனூடாக தான் பார்க்கின்ற தமிழீழத்தை தேசியத் தலைவரின் சொல்லிலும் செயலிலும் தான் காண்பதாகவும் அதனால்தான் தலைவரின் பால் கவரப்பட்டு விடுதலைப் போராட்டத்தில் ஆரம்ப காலத்திலேயே தன்னை இணைத்துக் கொண்டதாகவும் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்து வந்ததாக நடேசன் குறிப்பிட்டார். "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தை நினைவு கூர்ந்து கருத்து வெளியிட்ட …
-
- 0 replies
- 842 views
-
-
அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபைக்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழு கலைக்கப்படால் மாத்திரமே அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவில் தாங்கள் மீண்டும் இணைந்து கொள்ள முடியம் என ஜே.வி.பி அறிவித்துள்ளது கடந்த பொது தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட சக்திகளின் அபிலாசைகளை பூர்த்தி செய்கின்ற குழுவாக அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபை அமைந்துள்ளது என ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார் நன்றி : பதிவு
-
- 0 replies
- 796 views
-
-
இலங்கைக்கு மீள அழைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி ஜானக பெரோவிற்கு பாதுகாப்பு அமைச்சின் துணை செயலளார் பதவி அல்லது அதற்கு இணையான பதவி நிலை ஒன்று வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகரான கோட்பாய ராஜபக்ச நீண்டகாலம் இலங்கையில் இல்லாமை மற்றும் விடுதலைப்புலிகளின் தாக்குதல் நுட்பங்கள் குறித்து போதிய அனுபங்களை பெற்றிராமை ஆகியவற்றால் அவருயைட செயல்பாடுகள் வினைத்திறன் மிக்கதாக இல்லை என்று சுட்டிக்காட்டப்ட்டுள்ளது இதனை அடுத்து விடுதலைப்புலிகளின் தாக்குதல் தந்திரோபாயங்கள் குறித்து விசாலாமான அறிவு மற்றும் அனுபவம் கொண்ட ஜானக பெரோரவை வரவழைத்து அவருடைய ஆலோசனைகளை பெறுவதற்கு கோட்டபாய ராஜபக்சவும் மகிந்த ராஜபக்சவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப…
-
- 0 replies
- 898 views
-
-
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் புகைப்பட தொகுப்பு http://www.alaikal.com/index.php?option=co...=92&catid=3
-
- 6 replies
- 3.2k views
-
-
பொதுமக்களை கொலை செய்யும் ஒரு நாட்டிற்கு தமது அரசாங்கம் எந்த விதமான வெடிமருந்துகளையும் வழங்காது என இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார். அண்மையில் சிறீலங்கா கடற்படைக்கு முகவரியிடப்பட்ட வெடிபொருட்கள் சிலவற்றை இந்திய காவல் துறையினர் கைப்பற்றியிருந்தனர் சிறீலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்திய நிறுவனம் ஒன்று இந்திய மத்திய அரசாங்கத்தின் அனுமதியுடன் இந்த வெடிமருந்துகளை அனுப்பி வைத்திருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது நன்றி : பதிவு
-
- 1 reply
- 1.1k views
-
-
மக்களுக்கு விநியோகிப்பதற்காக யாழ்குடாநாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட அரிசிவகைகள் பறிமுதல் செய்யப்ட்டு படைமுகாம்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு பதிலாக காங்கேசன் படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த அரிசி வகைகள் கூட்டுறவுச் சங்கத்தினருக்கு படையினர் வழங்கியுள்ளனர். ஏ-9 பாதை மூடப்பட்டபின் கடல்மார்க்கமாக கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் பலவற்றையே படையினர் இவ்வாறு பறிமுதல் செய்து பதுக்கி வைத்துள்ளனர். நன்றி : பதிவு
-
- 0 replies
- 989 views
-
-
கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இன்று வெரது இல்லத்தில் காலமாகி விட்டார். தமிழீழ விடுதலைப் பயணத்தில் ஒரு தூணாக, தேசியத் தலைவருக்கு பக்க பலமாக இருந்த பாலா அண்ணா அவர்களின் இறப்பு தமிழீழ மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
-
- 93 replies
- 13.5k views
-
-
வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை வவுனியா வேப்பங்குளப் பகுதியில் மாலை 8.30 மணியளவில் இரு வாகனத்தில் அவரது கடைக்கு சென்ற இனம்தெரியாத ஆயுததாரிகள் வர்த்தகர் ஒருவரை அவரது கடைக்கு முன்பாக சிங்களத்தில் கூப்பிட்டபின் சுட்டுக் கொன்றுள்ளனர். ஆவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் 59 அகவையுடைய அம்பிகைபாகர் மாணிக்கவாசகர் என இனம்காணப்பட்டுள்ளார். http://www.pathivu.com/
-
- 0 replies
- 879 views
-
-
கிழக்கில் அவலமும் கோரமும் தொடர்கிறது உடன் பிறப்புக்களையும் உறவுகளையும் இழக்கிறோம் [saturday December 16 2006 06:32:49 PM GMT] [virakesari.lk] கிழக்கில் தொடரும் அவலமும் அழிவும் கோரமான முறையில் கடந்த ஏப்ரல் 25 ஆம், 26 ஆம் திகதிகளில் ஆரம்பமானது. அப்போது ஆரம்பமான அலைச்சலும் அவலமும் கோரமும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான எமது உடன் பிறப்புக்களையும் உறவுகளையும் இழந்துள்ள÷õம். இந்தப் பயங்கரவாதத்துக்கு முடிவு வராதா என்றுதான் பலரும் ஏங்கித்தவிக்கின்றனர். இவ்வாறு வாகரையில் இருந்து கடல் வழியாக வாழைச்சேனைக்கு தப்பிவர முயன்று கடலுடன் சங்கமமான தமிழ் உடன்பிறப்புக்கள் நிலைமை பற்றி கருத்து வெளியிட்ட மூதூர் கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த அரச ஊழியர…
-
- 0 replies
- 939 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் மதியுரைஞரும், தேசத்தின் குரல் என்று தமிழீழ தேசியத்தலைவரால் கொளரவப்படுத்தப்பட்டுள்ள கலாநிதி. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படம் திறப்பும் அஞ்சலிக்கூட்டமும் கோயம்புத்தூர் பெரியார் படிப்பகத்தில் இடம்பெற்றுள்ளது. பெரும்திரளான மக்கள் இங்கு திரண்டு மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்திற்கு தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர். இந்த இரங்கல் நிகழ்வில், கலாநிதி. அன்ரன் பாலசிங்கத்தின் திருவுருவப்படத்தை பெரியார் கழகத்தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார். அதனைத்தொடர்ந்து அஞ்சலிக் கூட்;டம் நிகழ்ந்தது. தலைமை இரங்கலுரையினை கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருஸ்ணன் அவர்கள் நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து இங்கு, கோவை ஞானி …
-
- 0 replies
- 1.4k views
-
-
மறைந்த மதியுரைஞர் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் நேற்று முதல் பிரார்த்தனை மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிறையில் உள்ள 58 தமிழ் அரசியல் கைதிகளே இச்செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த அஞ்சலி நிகழ்வுகளை, தொடர்ந்து மூன்று தினங்கள் நடத்தவுள்ளதாகக் கைதிகள் தெரிவித்துள்ளனர். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் உடல் அடக்கம் செய்யப்படுவரை மூன்றுவேளையும் ஆகாரம் எதுவும் அருந்தாமல் தாம் அஞ்சலி செலுத்தவுள்ளனர் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர் http://www.sankathi.org/news/index.php?opt...63&Itemid=1
-
- 0 replies
- 842 views
-
-
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அரசியல் தூணாக விளங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்திற்கு கண்ணீர் வணக்க நிகழ்வு நோர்வேயில் நடைபெற்றது. இந்நிகழ்வு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 7 மணிமுதல் 9 மணிவரை நடைபெற்றது. நோர்வே வாழ் தமிழீழ உறவுகள் பல நூற்றுக்கணக்கானோர் கனத்த நெஞ்சங்களோடு "தேசத்தின் குரலுக்கு" தமது கண்ணீர் வணக்கத்தை செலுத்துவதற்காக திரண்டிருந்தனர். நோர்வே பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். நோர்வேயின் சிறப்பு சமாதானத் தூதுவர் ஹன்சன் பெளயர், 1998 ஆம் ஆண்டு மதியுரைஞருக்கு நோர்வேயில் சிறுநீரக மாற்றீட்டுக்குரிய சத்திர சிகிச்சையை செய்த மருத்துவர…
-
- 2 replies
- 1.1k views
-
-
தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் மக்கள் வணக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படவுள்ளன. இன்று பிற்பகல் 5.00 மணிக்கு கிளிநொச்சி நகர்ப்பகுதியில் மக்கள் வணக்கத்துக்காக எடுத்துச் செல்லப்பட்டது. நாளை பரந்தன் பிரதான சந்தியில் இருந்து விசுவமடுப் பிரதேசத்திற்கு இவ் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி தருமபுரம். வட்டக்கச்சி, ஊடாக எடுத்துவரப்பட்டு கிளிநொச்சி. முழங்காவில் ஆகிய பகுதிகளுக்கு மக்களின் வணக்கத்திற்காக எதிர்வரும் செவ்வாய் கிழமை வரை எடுத்துச் செல்லப்படவுள்ளது. இன்றைய தினம் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு கண்ணீர் மல்க மக்கள் மலர்வணக்கம் செலுத்தியுள்ளனர…
-
- 0 replies
- 1.3k views
-
-
COLOMBO ; A senior British diplomat was summoned by Sri Lankan police after he photographed a presidential motorcade with his mobile phone, the British High Commission said yesterday, terming it an "innocent mistake". The incident comes in the wake of a raft of new laws imposed to crack down on Tamil Tiger rebels and their supporters as the island’s two-decade civil war entered a new, violent phase. Photographing security posts and government buildings is prohibited in the capital, Colombo, where green sandbag turrets bristle with assault rifles and ministerial motorcades whip through town with heavily armed guards. "We can confirm that a British diploma…
-
- 3 replies
- 1.6k views
-