Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழநாதம் நாளேட்டில் 24.08.06 வெளிவந்த ஆசிரியர் தலையங்கம் சிறப்புரிமை? உலகின் பல்வேறு நாடுகளிலும் பகுதிகளிலும் சில துறை சார்ந்தவர்கள் சிறப்புரிமை பெற்றவர்களாகவுள்ளனர். இதில் செஞ்சிலுவைச்சங்கத்தினர், மருத்துவத்துறையினர், மனிதாபிமான நிவாரணப் பணிகளில் ஈடுபடுபவர்கள்;, ஊடகவியலாளர்கள், மதகுருமார்கள், எனப் பலதுறை சார்ந்தவர்கள் உள்ளனர். ஆனால் சிறிலங்கா அரசோ அன்றி அதன் ஆயுதப்படைத்தரப்போ இத்தகைய சிறப்புரிமை எதையும் அத்துறை சார்ந்தோருக்கு வழங்குவதாக இல்லை. அதிலும் குறிப்பாகத் தமிழர் தாயகத்தில் உள்ளோருக்கு இச்சிறப்புரிமை வழங்கப்படுவதாக இல்லை. மாறாகச் சிறப்புரிமை பெறவேண்டியவர்களில் ஒரு தரப்பிரான ஊடகவியலாளர்களே சிறிலங்கா அரசினதும் ஆயுதப்படைத் தரப்பினரதும் முதல் இலக்காக…

  2. அதியுயர் பாதுகாப்பு முன்னரங்க நிலைகளில் ஒருவாரகால மோதல் -ஜெயராஜ்- தென்னாசியாவில் அதியுயர் பாதுகாப்பு முன்னரங்க நிலை எனக் கொள்ளத்தக்க பகுதியில் கடந்த 11 ஆம் திகதியிலிருந்து 17 ஆம் திகதி வரையிலான ஒருவார காலப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. சிறிலங்கா இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இதுவரை நடைபெற்ற மோதல்களில் இதுபோன்று ஒழுங்கமைக்கப்பட்டதும், பலப்படுத்தப்பட்டதுமான முன்னரங்கப்பகுதியில் மோதல்கள் இடம்பெற்றதி;ல்லை எனக்கூறின் மிகையாகாது. சிறிலங்கா இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பல முன்னரங்க நிலைகளில் கடும் சமர்கள் இடம்பெற்றதுண்டு இதில் 1998 இல் கிளிநொ…

  3. விமானக் குண்டுகளை வீசியோ அல்லது பல்குழல் பீரங்கியால் தாக்கியோ அல்லது பட்டினி போட்டோ தமிழர்களை அடக்கி ஒடுக்கி விடலாமென அரசு நினைத்தால் அது பகற்கனவாகவே முடியும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. மாவை சேனாதிராஜா நேற்று சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தை ஆரம்பித்து வைத்துப் பேசும்போது தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம்.லொக்கு பண்டார தலைமையில் கூடியது. விவாதத்தைத் தொடக்கி வைத்துப் பேசு கையில் அவர் கூறியதாவது: வடக்கு கிழக்கில் இப்போது மனித அவலங்கள் மலிந்து விட்டன. ஒரு லட்சத்து 58 ஆயிரம் தமிழ், முஸ்லிம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என ஐ.நா. மனித உரிமை நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 8 ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரைப…

  4. யாழ். குடாநாட்டில் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கள் தொலைத் தொடர்பு இணைப்புகளை அரசாங்கமே துண்டித்துள்ளதாக தெரிவித்துள்ள `டயலொக்' நிறுவனம் மீளவும் தொடர்புகள் வழங்கப்படுவது அரசாங்கத்தை பொறுத்தது எனவும் தமது தொலைத்தொடர்பு கட்டமைப்பினூடான சம்பாசனைகளை புலனாய்வுத் துறையினர் ஒட்டுக்கேட்க முடியுமெனவும் தெரிவித்துள்ளது. கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் குடாநாட்டுக்கான சகல செல்லிடத் தொலைபேசி இணைப்புகளும் முற்றாக செயலிழந்துள்ளன. இது குறித்து `டயலொக்' நிறுவனத்தை முன்னதாக தொடர்பு கொண்டு கேட்ட போது, தமது தொலைத்தொடர்பு கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறே அங்கு இணைப்புகள் செயலிழந்தமைக்கான காரணமென தெரிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று புதன்கிழமை இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் நலன்…

  5. யாழ்ப்பாண குடாநாட்டில் தற்போது எற்பட்டுள்ள அசாதாரண நிலைமை தவிர்த்து இயல்பு நிலையை எற்படுத்துவது குறித்து யாழ் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறிக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. பலாலி இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மாவட்டச் செயலக அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள்,யாழ் பொற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டததை தளர்த்துதல்,எரிபொருள் விநியோகத்தை சுமுகமாய் மேற்கொள்வது,கப்பல் மூலம் எடுத்து வரப்படும் பொருட்களின் விநியோகம்,மற்றும் பிரதேசத்தில் தடைப்பட்டுள்ள போக்குவரத்து நடவடிக்கைகளை சீராக்குதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ள…

  6. எமது மக்களை பாதுகாக்க முடியாவிட்டால் எம்மைச் சுதந்திரமாக செல்லவிடுங்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். திருகோணமலை துறைமுகத்திற்கு சம்பூரால் ஆபத்து என்ற சிறிலங்கா அரச தலைவரின் கூற்றை ஏற்கமுடியாது. திருகோணமலை துறைமுகத்தை பாதுகாப்பதில் ஏனையவர்களை விட தமிழர்களுக்கே அதிக அக்கறை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு-கிழக்கு நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: அரசாங்கத்தால் வடக்கு-கிழக்கு மக்களை பாதுகாக்க முடியாவிட்டால் கூற…

  7. விடுதலைப் புலிகள் நடத்தியது தற்காப்புத் தாக்குதலே: சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்கம் [புதன்கிழமை, 23 ஓகஸ்ட் 2006, 07:26 ஈழம்] [பா.பார்த்தீபன்] "சிறிலங்கா அரசாங்கமே திருகோணமலையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. அதற்கெதிராக தற்காப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு விடுதலைப் புலிகள் தள்ளப்படார்கள். அதுவே மோதல்கள் தீவிரமடைவதற்குக் காரணமாகியது" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்திருக்கின்றார். "யுத்த நிறுத்தத்தில் தமக்குள்ள பற்றுறுதியை விடுதலைப் புலிகள் வெளிப்படுத்த வேண்டும்" என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்திருப்பதற்கு பதிலளிக்கையிலேயே சு.ப.…

  8. இலங்கையில் இடம்பெறும் பாரதூரமான மனித உரிமை மீறல்களை கண்காணிக்க சர்வதேசகுழுவை அனுப்ப வேண்டும் - அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமை அமைப்பு கோரிக்கை. இலங்கையில் இடம்பெறும் பாரதூரமான மனித உரிமை மீறல்களை கண்காணித்து அவற்றை கட்டுப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையின் கீழ் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் "ஹியூமன் ரைட்ஸ் வோட்ச்' எனப்படும் மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே ஹொங்கொங்கை தளமாகக் கொண்டியங்கும் ஆசிய மனித உரிமைகள் அமைப்பு கடந்த 17ஆம் திகதி வெளியிட்ட தமது விசேட அறிக்கையில்; பாரிய மனித படுகொலைகளும்,ஆட்கடத்தல்களும

  9. யுத்த விமானங்கள் தலைக்கு மேல் பறக்கும்போது பேச்சுக்கள் எப்படி சாத்தியமாகும்?: தயா மாஸ்டர் கேள்வி யுத்த விமானங்கள் தலைக்கு மேல் பறக்கும் போது பேச்சுக்கள் எப்படி சாத்தியமாகும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் கேள்வியெழுப்பியுள்ளார்.இது தொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு தயா மாஸ்டர் தெரிவித்துள்ளதாவது: "சிறிலங்கா அரசின் யுத்த விமானங்கள் சிறிது நேரத்துக்கு முன்னர் கூட எமது பிரதேசத்துக்கு மேலாக வட்டமிட்டுச் செல்கிறது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் அமைதிப் பேச்சுக்கள் எப்படி சாத்தியமாகும்? சமாதானத்துக்கு அறைகூவல் விடுக்கும் சிறிலங்கா அரசு தனது வேண்டுகோளில் இதய சுத்தியுடன் செயற்பட விரும்பினால் அமைதிக்கான புறச்சூழலை முதலில் உருவாக்க வேண…

  10. அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் ஜனாதிபதி அங்கு அதிபர் புஷ்ஷிடம் நேரில் உதவிகோருவார்! ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அடுத்த மாதம் நடுப்பகுதியில் அமெரிக்கா செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நியூயோர்க்கில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ்ஷை சந்தித்துப் பேசவுள்ளார். பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் உலக நாடுகளின் தலைவர்களின் சம்பிரதாயபூர்வ சந்திப்பிற்குப் புறம்பாக மேற்படி சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகள், உதவிகள் குறித்து இந்த பேச்சுகளின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கையை விடுப்பார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் கூறின. ஜனாதிபதியுடன…

  11. செஞ்சோலை வளாகத்தில் சிறிலங்கா விமானப்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நேற்று சென்னை நகர உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாரிய மனிதச் சங்கிலிப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. http://www.sankathi.org/news/images/stories/August2006/2006082302.jpghttp://www.sankathi.org/news/images/stories/August2006/2006082303.jpghttp://www.sankathi.org/news/images/stories/August2006/2006082303.jpg

  12. வடபோர் முனையை அண்டிய மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதலை நடத்தியது. இன்று காலை வடபோர் முனையை அண்டிய மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதலை நடத்தியது. இதனால், பொதுமக்களின் குடியிருப்புக்களுக்கு சேதம் ஏற்பட்டிருக்கின்றது. மக்கள் ஏற்கனவே அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்றிருந்தமையால் உயிரிழப்புக்கள், காயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. இதேவேளை இன்று திருகோணமலை மூதூரில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் ஒருதொகுதியினர் மட்டக்களப்புக்ககு சென்றிருக்கின்றனர். அவர்கள் அங்குள்ள சிங்கள மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி சிறிலங்கா பட…

  13. சம்பூர் பகுதி விடுதலை புலி போராளிகளின் கட்டுபாட்டில் இருக்கிறது. இதனால் திருகோணமலை துறைமுகத்துக்கு ஆபத்து என்று இலங்கையின் சர்வதிகாரி தெரிவித்துள்ளார். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19332 தமிழர் துறைமுகம் வேறு பட்ட பலரின் ஆக்கிரமிக்குள் பல நூறு ஆண்டுகளாய் அடிமைபட்டு கிடக்கிறது. எங்கள் கவலை இந்த சர்வதேசநாடுகளுக்கு விளங்கவா போகுது????

    • 18 replies
    • 3k views
  14. தமிழீழ மண் மீட்ப்புப் போரில் வீரச்சாவை தழுவிக் கொணட மாவீரர்களுக்கு என் வீரவணக்கம். எல்லோரும் அவர்களின் கனவை விரைவாக்க இன் நாளில் முழுவீச்சாக செயல்படவேண்டும். - போரியல்(இராணுவம்), அரசியல், பொருளியல்(பொருளாதாரம்), மற்றும் மக்கள் பலப்படுத்தப்படவேண்டும். - சிறீலங்காவின் பொருளியலை பலவீனப்படுத்தப்படவேண்டும். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் சிறீலங்காவுக்கான ஏற்றுமதி மற்றும் அன்னிய செலவாணியைக் குறைக்க வேண்டும். உங்கள் எல்லோரின் ஆக்க பூர்வமான கருத்துக்களை எதிர்பார்த்து நிற்கின்றேன். - நன்றி -

    • 13 replies
    • 3.1k views
  15. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு அவசர செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். தாக்குதல்களை நிறுத்திவிட்டு பேச்சு மேசைக்கு தாம் தயார் என்றும் அதற்கு சாதகமான பதிலை அளித்து, கூடிய விரைவில் அமைதிப் பேச்சுக்களை நடத்த வருமாறு இச்செய்தியில் மகிந்த குறிப்பிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற உதவி வழங்கும் நாடுகளிள் இணைத்தலைமைகள் மாநாட்டில் கலந்துகொண்ட நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கரிடம் இந்த கோரிக்கையை மகிந்த விடுத்ததாகவும் நோர்வே அமைச்சரும் நோர்வேயின் சிறிலங்காவுக்கான முன்னாள் சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்மை தலைவர் பிரபாகரனுடன் தொடர்புகொண்டு மேற்படி செய்தியை தெரிவிக்குமாறும் அவர் பிறட்ஸ்கரிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரியவருகிறத…

  16. இங்குகிருப்பவர்கள் புத்த பிக்குகளா? யுத்த பிக்குகளா? போருக்கு எதிராக நாம் நடத்திய கூட்டத்தை குழப்ப முயற்சித்தவர்கள் பௌத்த துறவிகளுக்கான காவியுடையை அணிந்திருந் தார்கள். தங்களை தேசிய பிக்கு முன்னணியை சார்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டார்கள். மனித உயிர்களை பலி எடுக்கும் யுத்தத்தை நிறுத்தும்படி கூறும் எமது சமாதான இயக்கத்தை குழப்பும்படி பௌத்த தர்மத்தில் எங்கே கூறப்பட்டிருக்கின்றது? புனித புத்த பகவானின் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு யுத்தத்தை முன்னெடுக்கும்படி கூறும் இவர்கள் புத்த பிக்குகளா? அல்லது யுத்த பிக்குகளா? என மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். வியாழக்கிழமை போருக்கு எதிரான முன்னணி நடத்திய கூட்டத்தில் ஊடு…

    • 2 replies
    • 1.3k views
  17. மட்டக்களப்பில் இன்றும் சிறிலங்காப் படையினர் எறிகணை வீச்சுத் தாக்குதல் மட்டக்களப்பில் இன்றும் சிறிலங்காப் படையினர் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.மட்டக்களப்பு நகரில் உள்ள சிறிலங்காப் படை முகாமிலிருந்து இன்று புதன்கிழமை காலை 6.30 மணி தொடக்கம் 7.00மணி வரை நாவற்காடு, ஈச்சந்தீவு, ஆயித்தியமலை ஆகிய பிரதேசங்களை நோக்கி ஆட்டிலெறி எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தினர்.இத்தாக்குதல் காரணமாக ஏற்கனவே படையினரின் எறிகணை வீச்சுத் தாக்குதலில் இடம்பெயர்ந்து ஆயித்தியமலை பாடசாலையில் தஞ்சமடைந்துள்ள மக்கள் இன்றும் இடம்பெயர்ந்துள்ளனர்.இதேவேளை மட்டக்களப்பின் படுவான்கரை பிரதேச மக்களுக்கான பொருட்களை கொண்டு செல்லும் பாதையாக பட்டிருப்பு பாலப்பாதை அமைந்துள…

    • 1 reply
    • 914 views
  18. நேற்று முந்தினம் பல்கலைக்களகத்தினுள் பலாத்காரமாக உள் நுளந்த படையினர் மாணவர் தங்கு விடுதிகள்... மாணவர் பேரவை அலுவலகம் எண்று எல்லா இடத்திலேயும் சேதினை நடத்தினர் பின்னர் பாக்கிஸ்தான் தயாரிப்பான சில (15 எண்று அரச தகவல்) நிலக்கண்ணி மிதிவெடிகளையும் தலைவர் படம் தாங்கிய தட்டிகள் என்பவற்றை கைப்பற்றியதாக செய்தி வெளியிட்டனர்...! (ஆனாக் புலிகளை தடை செய்யாத இலங்கை அந்த படங்களை தடை செய்வது வேடிக்கையானது...) இவை பாக்கிஸ்தான் தயாரிப்பு வகை... ஜொனி வெடிகள் அல்ல... http://www.lankaweb.com/news/items06/210806-1.html அதோடு கைக்குண்டுகளும் கைப்பற்ற பட்டதாகவும் சொல்கிறார்கள்...! இதை பல்கலைக்களக உதவி பீடாதிபதி நிராகர்த்துள்ளார்... இந்த கைப்பற்றல் எல்லால் பொய் என்றும் உரைத்த…

    • 9 replies
    • 2.1k views
  19. தேசியத் தலைவரால் சின்னத்தம்பி சிவமகாராசா மாமனிதராக மதிப்பளிப்பு. ஈழநாடு முதன்மைப் பணிப்பாளர் சின்னத்தப்பி சிவமகாராசாவுக்கு விடுதலைப் புலிகள் மாமனிதர் விருதி வழங்கி மதிப்பளித்துள்ளனர். சுயவாழ்வின் சுகபோகங்களைத் துறந்து, பொதுநல வாழ்வை இலட்சியமாக வரித்து, அந்த இலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த உயர்ந்த மனிதரை இன்று நாம் இழந்துவிட்டோம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 22.08.2006 சுயவாழ்வின் சுகபோகங்களைத் துறந்து, பொதுநல வாழ்வை இலட்சியமாக வரித்து, அந்த இலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த உயர்ந்த மனிதரை இன்று நாம் இழந்துவிட்டோம். தமிழிழன விடுதலைக்காக ஒளிர்ந்த ஒரு இலட்சியச் சுடர் அணைந்து…

  20. புலிகள் வன்முறைகளை விலக்கி பேச்சுக்கு முன்வர சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் - பாலித கோகண தமிழீழ விடுதலைப்புலிகள் வன்முறைகளை விலக்கி பேச்சுவார்த்தைகளுக்கு முன்வருவதற்கு வர்த்தக சமூகம் வலியுறுத்த வேண்டும் என அரசாங்க சமாதான செயலகர் கோரியுள்ளார். தமிழிழ விடுதலைப்புலிகளின் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர தனியார் துறையினரின் பங்களிப்பு காத்திரமாக அமையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய அவர் அரசாங்கம் யுத்தம் ஒன்றின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காண முயற்சிக்கவில்லை. எனவேதான் தமிழிழ விடுதலைப்புலிகளின் தாக்குதல்களை தடுக்கும் நடவடிக்கைகளை மாத்திரம் படைத்தரப்பு மேற்கொண்டு வருவதாக பாலித…

  21. காலத்தின் தேவைகருதி புலம்பெயர் மக்கள் செய்யவேண்டியது என்ன? இன்று புலம்பெயர் மக்களிடம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுவரும் விடயம் வடஅமெரிக்காவில் இடம்பெற்ற தமிழர் கைது என்பதில் சந்தேகமேயில்லை.அமெரிக்காவின

  22. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிய கப்பல் யாழ் சென்றடைந்தது.. யாழ் குடாநாட்டுக்கான அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கொழும்பிலிருந்து கப்பல் ஒன்று யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளது. நேற்று நண்பகல் இக்கப்பல் கொழும்பிலிருந்து 3600 மெற்றிக் தொன் அத்தியாவசியப் பொருட்களுடன் புறப்பட்டுள்ளதாக கொழும்பு துறைமுக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து புறப்பட்ட கப்பல் நேற்றிரவு யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்துள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை 5600 மெற்றிக் தொன் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இன்னொரு கப்பல் யாழ் செல்லவுள்ளதாக அமைச்சர் கேகலிய ரம்புக்வெல ஊடகவிலயாளரிடம் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

    • 0 replies
    • 948 views
  23. சம்பூரால் திருகோணமலைக்கு ஆபத்து: மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான சம்பூரினால் திருகோணமலை துறைமுகத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இணைத் தலைமை நாடுகளின் தூதுவர்களை நேற்று திங்கட்கிழமை சந்தித்த மகிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார். மகிந்தவின் அலரி மாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பில் நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கர், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஜுலியன் வில்சன், வொல்ப்கங் எர்டம்ன்ஸ்டொர்ட்டெர் (ஜேர்மனிய பதில் தூதுவர்), பிரித்தானிய பதில் தூதுவர் ஜேம்ஸ் மூரே, ஜப்பானிய பதில் தூதுவர் நொபுகி இடோ ஆகியோர் பங்கேற்றனர். சிறிலங்கா மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, வெளிவிவக…

    • 0 replies
    • 828 views
  24. விடுதலைப் புலிகளின் தலைவரினால் மேற்கொள்ளப்படும் முழுமையான மோதல் தவிர்ப்பு குறித்து அரசாங்கம் பரிசீலிக்க தயார் என மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுடன் திங்கட்கிழமை சந்திப்பொன்றை மேற்கொண்ட வேளையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்க செயலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையின் சமாதான முயற்சியின் தற்போதைய நிலை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட ஏனைய விடயங்கள் குறித்து இணைத்தலைமை நாடு களின் பிரதிநிதிகள் மகிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்து கருத்து பரிமாறினர். விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாகவே பாதுகாப்பு படையினர் இராணுவ …

    • 0 replies
    • 987 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.