ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
பேசாலை தேவாலயம் மீதான சிறிலங்கா கடற்படையின் அட்டூழியத் தாக்குதல: வத்திக்கானுக்கு மன்னார் ஆயர் கடிதம் மன்னார் பேசாலை தேவாலயம் மீதான சிறிலங்கா கடற்படையின் அட்டூழியத் தாக்குதல் குறித்து வத்திக்கானுக்கு மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அடிகளார் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையின் மிகப் பெரிய தேவாலயங்களில் ஒன்றான மன்னார் விக்டோரி தேவாலயத்தில் சிறிலங்கா கடற்படையினரது தாக்குதலில் அப்பாவி மக்கள் இரத்தம் சிந்தியுள்ளமையால் தேவாலயத்தின் புனிதம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் கொல்லப்பட்ட ஆறு பொதுமக்களின் சடலங்களை எரியூட்டிவிட்டு வந்திருகிறேன். உள்ளுர் மக்கள் சிறிலங்கா கடற்படையினரால் அச்சமடைந்த நிலையில் உள்ளனர். பேசால…
-
- 4 replies
- 1.4k views
-
-
http://www.sankathi.org/vankaalai.html :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: இதில் வரும் காட்சியும் அதன் பின்னனி இசையும் மனதை பாதிக்கும்,...................
-
- 6 replies
- 4.6k views
-
-
புலிகளின் இராணுவப் பேச்சாளராக இளந்திரையன் நியமனம்! விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளராக இளந்திரையன் (மார்ஷல்) நி யமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாள ராக இருந்த இவர் விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகத்திற்கு அண்மையில் மாற்றப் பட்டிருந்தார். ஜெனீவா சென்ற விடுதலைப் புலிகளின் உயர்மட்டப் பேச்சுக் குழுவிலும் இவர் இடம்பெற்றிருந்தார். விடுதலைப் புலிகளின் தலைமையால் இராணுவப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ள இவர், நேற்று தமது பொறுப்பை ஏற்றுக்கொண்டார் எனக் கிளிநொச்சி செய்திகள் தெரிவிப்பதாக தமிழ் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் அமைப்பு இராணுவப் பேச்சாளர் ஒருவரை நியமித்திருப்பது இதுவே முதல் தடவையாகும். -சங்கதி…
-
- 3 replies
- 1.8k views
-
-
கண்காணிப்பாளர்களுக்காக புதிய நாடுகளில் அவசரமாக ஆள் தேடும் நெருக்கடியில் நோர்வே! இலங்கை யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவில் கண்காணிப்பாளர்களாகப் பணியாற்று வதற்காக புதிய நடுநிலை நாடுகளில் ஆள்களை அவசர அவசரமாகத் தேட வேண்டிய இக்கட்டில் அனுசரணைத்தரப்பான நோர்வே சிக்கியிருப்பதாகத் தெரியவருகின்றது. தற்போது நோர்வே, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த இருபது கண்காணிப் பாளர்களும் டென்மார்க், சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 37 கண்காணிப்பாளர் களுமாக மொத்தம் 57 கண்காணிப்பாளர்கள் யுத்தநிறுத்தக் கண்காணிப்புப் பணியில் ஈடு பட்டிருக்கின்றனர். நோர்ட்டிக் நாடுகளைச் சேர்ந்தோரை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கு இலங்கை அரசும், புலிகளும் போர் நிறுத்தத் துக்கு வழிசெய்த…
-
- 2 replies
- 1.2k views
-
-
தென்னிந்திய நிலைமையும் தென்னிலங்கைப் போக்கும் ஈழத்தில் குண்டுமழை பொழிந்து தமிழர்களை அழிக் கும் கொடுமை நடந்துகொண்டிருப்பது குறித்தும், அவர் களைக் காப்பாற்ற இந்திய மத் திய மற்றும் தமிழக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை ஒன்றை விடுத்திருக்கின்றார். தமிழகத்தின் தேசிய முற்போக்குத் திராவிடக் கழ கத் தலைவரும், தமிழக சட்ட மன்ற உறுப்பினருமான நடிகர் விஜயகாந்த்தும் ஈழத் தமிழர்களுக்காக மீண்டும் குரல் எழுப்பத் தொடங்கியிருக்கின்றார். ஈழத் தமிழர்களுக்காக தமிழகத்திலிருந்து மீண்டும் வலுவான குரல் எழும்பத் தொடங்கியிருப்பது ஈழத் தமிழர் களுக்கு ஒரு தார்மீகப் பலமாகவும், பாதுகாப்பாகவும் உருவெடுத்து வருகின்றது…
-
- 0 replies
- 921 views
-
-
ஒஸ்லோவில் புலிகள் நடந்துகொண்டவிதம் இராஜதந்திர முதிர்ச்சியின் வெளிப்பாடு! தமிழக சஞ்சிகை கருத்து போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந் தம் தொடர்பான பேச்சுகளுக்காக நோர்வே சென்ற விடுதலைப் புலிகள் அங்கு நடந்துகொண்ட விதம், இராஜதந்திரத்துறையிலும் புலிகள் முதிர்ச்சி பெற்றவர்கள் என்பதையே மிகத்துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது. இவ்வாறு தமிழகத்திலிருந்து வெளிவரும் "தென்செய்தி' சஞ்சிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. "புலிகள் கொடுத்த பதிலடி' என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்தப் பத்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: நோர்வேயின் தலைநகரமான ஒஸ் லோவில் நடைபெறவிருந்த சமாதானப் பேச்சு முறிவடைந்துவிட்டது. கண்காணிப்புக் குழுவின் பாதுகாப்பு மற்றும் அதனது நடைமுறை தொடர்பாகப்…
-
- 2 replies
- 1.7k views
-
-
நோர்வேக்கு பதில் அனுப்பப்படும்: தயா மாஸ்டர் நோர்வேக்கு சமாதான செயலகம் மூலமாக பதில் அனுப்பி வைக்கப்படும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த தயா மாஸ்டர், நோர்வேயின் 5 கேள்விகளுக்கு பதில் அனுப்புவோம். சிறிலங்கா அரசாங்கம் பதிலனுப்பியது போன்று எமது சமாதான செயலகம் ஊடாக அனுப்பி வைப்போம் என்றார். நோர்வே தூதுவரகப் பேச்சாளர் எரிக் நூம்பெர்க் கூறுகையில், விடுதலைப் புலிகள் இதுவரை பதில் அனுப்பவில்லை. இருப்பினும் நோர்வே விதித்திருந்த காலக்கெடுவுக்கு ஒருநாள் உள்ளது என்றார். ஓஸ்லோ பேச்சுக்களின் தோல்விக்குப் பின்னர் இலங்கை அமைதி முயற்சிகளின் எதிர்காலம் குற…
-
- 1 reply
- 1.2k views
-
-
விமானக் குண்டுவீச்சு: சர்வதேச மன்னிப்புச் சபை கவலை தமிழர் தாயகப் பகுதியில் சிறிலங்கா விமானப் படையினர் நடத்தும் விமானக் குண்டு வீச்சுக்கள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கவலை தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கை: கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவத்தைத் தொடர்ந்து பதில் விமானத் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை கவலை அளிக்கிறது. சம்பூர், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி அருகில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சர்வதேச மனித உரிமைகளை மீறி பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையிலான தாக்குதல் இது. இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரும் இந்த விமானத் தாக்குதல்கள் யுத்த நிறுத்த மீறல் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் தேசிய…
-
- 0 replies
- 797 views
-
-
மன்னாரில் 15 ஆயிரம் குடிமக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம் அச்சம் காரணமாக பொது இடங்களில் தஞ்சம் மன்னார் பேசாலை, வாங்காலைப்பாடு பகுதிகளில் சனிக்கிழமை கடற்படையினர் நடத்திய மிக மோசமான தாக்குதல்களையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் பொது மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு அச்சம் காரணமாக வெளியேறி பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். சனிக்கிழமை காலை பேசாலை கடற்பரப்பில் கடற்புலிகளுக்கும் கடற் படையினருக்குமிடையே மிக உக்கிரமான மோதல்கள் இடம்பெற்றன. இதனையடுத்து கடற்படையினர் மேற்கொண்ட மிகக் கொடூரமான தாக்குதல்களால் ஐந்து மீனவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டதுடன் 47 பேர் படுகாயமடைந்தனர். இதனை விட பேசாலை காட்டாஸ்பத்திரி, வாங்காலைப்பாடு கடற்கரையோரங்களில் அம…
-
- 0 replies
- 976 views
-
-
வெளினாட்டு ஆங்கில ஊடகங்களில் வந்த செய்திகளின் தொகுப்பு. இதனை பிறமொழிகள் ஆக்கத்தில் நான் பதியமால் தமிழீழம் பகுதியில் பதிந்ததன் நோக்கம் எல்லோரும் பார்ப்பதற்காக. Critics say Sri Lanka targeting civilians USA Today 6/18/2006 http://www.usatoday.com/news/world/2006-06...ce_x.htm?csp=34 - "I thought they were going to come to shoot us all," said L.R. Peiris, a 58-year-old woman crying hysterically at the thought of government forces returning a day after five villagers were killed by Sri Lankan troops. - Saturday's killings...critics charge is the brutal treatment meted out to Tamil civilians by security forces of the Sinhalese-dominated government, despite…
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கை: வாயில் சுட்டு 4 தமிழர்கள் படுகொலை 30 புலிகள் பலியாகவில்லை-இராணுவம் புருடா மேலும் வாசிக்க.......... http://thatstamil.oneindia.in/ இது எப்படி இருக்கு :P :P :P :P :P
-
- 1 reply
- 1.6k views
-
-
சு.க. தலைவர் பதவியிலிருந்து சந்திரிகா விலகல்? [திங்கட்கிழமை, 19 யூன் 2006, 06:13 ஈழம்] [தெ.சந்திரநாதன்] சிறிலங்கா சுதந்திர கட்சித் தலைவர் பதவியிலிருந்து சந்திரிகா குமாரதுங்க விலகக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் வரும் 29 ஆம் நாள் தனது 61 ஆவது பிறந்த நாளை லண்டனில் கொண்டாடும் சந்திரிகா குமாரதுங்க, அதே நாளில் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலக உள்ளதாக கூறப்படுகிறது. சந்திரிகாவின் பிறந்த நாளுக்கு முன்னதாக 28 ஆம் நாளன்று சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. கட்சியின் தலைமைப் பதவி தொடர்பான கட்சியின் யாப்பில் அக்கூட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவராக உள்ளவரே கட்சியின் தலைவரா…
-
- 0 replies
- 1.5k views
-
-
முன்னாள் ஜனாதிபதியின் செலவுகளுக்கு பணம் செலுத்த ஜனாதிபதி செயலகம் மறுப்பு [19 - June - 2006] [Font Size - A - A - A] முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் ஏற்படுத்தப்படும் செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாதென ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பதவியைத் துறந்து லண்டனிற்குச் சென்ற சந்திரிகா குமாரதுங்க களியாட்ட நிகழ்வுகளில் பங்குபற்றுவதுடன் அங்கு அதிவிசேட விருந்தினர்களுக்கான உபசாரத்தை பெற்று வருகிறார். இதனால் அவரினால் ஏற்படுத்தப்படும் செலவு அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் செலவீனங்களுக்கு யார் பணம் செலுத்துவது என்பதில் தற்பொழுது சர்ச்சை ஏற்பட்டுள்ளது. லண்டன் ஹீதுரூ விமான நிலையத்திற்கு சந்திரிகா …
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கைக்கு எம்.பி.க்களை அனுப்ப சுப்பிரமணிய சுவாமி கடும் எதிர்ப்பு [19 - June - 2006] [Font Size - A - A - A] இலங்கையின் வட, கிழக்கு பகுதிகளில் காணப்படும் நிலைவரத்தை நேரடியாக கண்டறிவதற்காக இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கைக்கு இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள வேண்டுகோளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சுப்பிரமணிய சுவாமி, ஒரு நாட்டின் அழைப்பு இல்லாமல் அந்த நாட்டிற்கு பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவை அனுப்ப முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். சமஷ்டி தீர்வொன்றை சிங்கள பெரும்பான்மையினர் எதிர்த்து வருவதாலேயே…
-
- 1 reply
- 1.2k views
-
-
புலிகளின் புதிய கடற்கண்ணிகள் குறித்து பொலிஸாரின் விசாரணைகள் ஆரம்பம் [19 - June - 2006] [Font Size - A - A - A] விடுதலைப் புலிகள் கடற்படை கப்பல்களை தாக்குவதற்காக உருவாக்கியுள்ள புதிய வகை கடல் கண்ணிவெடி குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கப்பலின் அடிப்பகுதியில் காந்தம் மூலம் இந்தக் கடல் கண்ணி வெடியை பொருத்தலாம் எனவும் பின்னர் இதனை தூரத்திலிருந்து வெடிக்க வைக்கலாம் எனவும் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 10 முதல் 15 கிலோ எடையுள்ள நிலக்கண்ணி வெடிகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவ
-
- 0 replies
- 1.2k views
-
-
புலிகளின் பகுதியில் பயணிக்கும் எந்த வாகனமானாலும் தாக்குமாறு எமக்கு இராணுவ அதிகாரி உத்தரவிட்டிருந்தார் [19 - June - 2006] [Font Size - A - A - A] புலிகளினால் கைது செய்யப்பட்ட ஆயுதக்குழு உறுப்பினர்கள் தெரிவிப்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இரவு நேரங்களில் பயணஞ் செய்யும் எந்த வாகனமாக இருந்தாலும் தாக்குதல் நடத்துமாறும் அது எந்த வாகனமாக இருந்தாலும் தயங்க வேண்டாம் எனத் தங்களுக்கு உத்தரவிடப்பட்டதாகவும் மேலும், அம்பாறையில் இனிய பாரதியை கொலை செய்துவிட்டு விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த முனைக்காட்டைச் சேர்ந்த ஞான தீபனுடைய குடும்பத்தை அழித்து விட்டு வருமாறும் தமக்கு உத்தரவிடப்பட்டதாகவும் இலுப்படிச்சேனையில் கைதான கருணா குழு உறுப்பினர்கள் மூவரும் தெர…
-
- 0 replies
- 1.2k views
-
-
நோர்வேயின் தூதுவர் விரைவில் வன்னிக்கு கொழும்புக்கான நோர்வேத் தூதர் ஹான்ஸ் பிரட்ஸ்கரும், இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்ஸனும் மிகவிரைவில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களோடு விரிவான பேச்சுகளை நடத்துவர் என விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. தற்போதைய களநிலைவரங்கள் குறித்து விடுதலைப்புலிகளின் தலைவர்களோடு விரிவான கலந்துரையாடலில் ஈடுபடுவது அவர்களது நோக்கமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது களத்தில் ஏற்பட்டுள்ள நெருக் கடியான நிலையில் பதற்றம் மற்றும் போர்ச் சூழலைத் தவிர்த்தல் அமைதி முயற்சிகளை ஆக்கபூர்வமான திசையில் நகர்த்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்தல் விடுதலைப் புலிகளைத்தடை செய்த…
-
- 0 replies
- 933 views
-
-
இனவன்முறை வெடிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசை வற்றுபுறுத்துகிறார் மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டில் இனவன்முறைகள் வெடிக்காமல் இருப்பதற்கு முனைப்பான ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்க வேண்டும். சகல இன பொதுமக்களின் உயிர்கள் மற்றும் சொத்துக்கள் காப்பற்றப்பட வேண்டும். இவ்வாறு இலங்கை அரசை வற்றுபுறுத்திக்கேட்டுக்கொள
-
- 0 replies
- 833 views
-
-
விடுதலைப் புலிகளின் நிலைகளை தாக்க வந்த இராணுவத்தினர் மீது தாக்குதல்: 2 இராணுவத்தினர் பலி முல்லைத்தீவு மாவட்டம் மணலாற்று காட்டுப்பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளை தாக்க வந்த சிறிலங்கா இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் தாக்குதல் நடவடிக்கையினை மேற்கொள்ள முற்பட்ட போது, விடுதலைப் புலிகள் நடத்திய பதில் தாக்குதலிலேயே இராணுவத்தினர் இருவரும் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் இராணுவத்தினரினது இரு சடலங்களும், ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பறப்பட்ட ஆயுதங்கள்: ரி௫6 01 ரக துப்பாக்கி - 0…
-
- 1 reply
- 1.1k views
-
-
தடைகள் எது வந்தாலும் தமிழீழம் அடைவது உறுதி http://www.orupaper.com/issue49/pages_K__Sec3_25.pdf
-
- 0 replies
- 1.1k views
-
-
படுகொலைகளும் சிங்கள ஊடகங்களும் யாழ் செம்மணியில் வைத்து படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசுவாமி,புங்குடுதீவு தர்சினி படுகொலையினை,நாவலப்பிட்டி உமாதேவி படுகொலையினை, திருகோணமலை மாணவர் படுகொலையினை அல்லைப்பிட்டி பொதுமக்கள் படுகொலையினை, வடமுனையில் இடம்பெற்ற கண்ணிவெடி தாக்குதலில் கொலை செய்யப்பட்டவர்களை மற்றும் கடந்த 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மன்னார் வங்காலை தோமஸ்புரியில் இடம்பெற்ற படுகொலையென வட,கிழக்கில் இடம்பெறும் படுகொலைகளை வகைதொகையின்றி அடுக்கிக்கொண்டே போகலாம். அவற்றை இன்று ஊடகங்களும் மறந்து விட்டன. மக்களும் மறந்து விட்டனர். சம்பவமொன்றினைப் பின் தொடர்ந்து செல்லுதலே ஊடகத்தின் பொறுப்பு. இச்சம்பவங்களினூடாக அவை அக்கடமைகளிலிருந்தும் தவறிவிட்டன.எது எவ்வாறிருப்பனும் இச்ச…
-
- 1 reply
- 1.4k views
-
-
கீழ்காணும் கையெழுத்து சேகரிப்பு புலம்பெயர்ந்த நோர்வே வாழ் தமிழீழமக்களிடம் மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்றது http://www.opprop.no/opprop.php?id=ermedltte கீழ்காணும் கையெழுத்து சேகரிப்பு புலம்பெயர்ந்த டென்மார்க் வாழ் தமிழீழமக்களிடம் மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்றது http://www.tamilernessag.underskrifter.dk/
-
- 5 replies
- 1.9k views
-
-
வங்காலைப்பாட்டில் பெரும் அட்டூழியம் -நூற்றுக்கணக்கான வாடி வீடுகள், படகுகள் தீக்கிரை; கடலுக்கு சென்ற 400 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை மன்னார் வங்காலைப்பாட்டில் நேற்று சனிக்கிழமை காலை மீனவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட வாடி வீடு களும், பேசாலை முதல் வங்காலைப்பாடு வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட கண்ணாடி நாரிழைப் படகுகளும் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதேநேரம், நேற்று அதிகாலை தலைமன்னார் முதல் மன்னார் வரையான கடற்பரப்பில் ஆழ்கடல் மீன்பிடிக்குச் சென்ற நானூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாலை வரை கரைதிரும்பவில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது. பேசாலைக் கடற்பரப்பில் நேற்றுக் காலை கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்குமிடையே நடைபெற்ற கடற் சமரையடுத்தே கடற்றொழி…
-
- 0 replies
- 987 views
-
-
நோர்வேயை வெளியேற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்: ஜே.வி.பி.யிடம் மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் நோர்வேயை வெளியேற்ற வேண்டும் என்பதுதான் என் விருப்பமும் கூட என்று ஜே.வி.பி. குழுவினரிடம் மகிந்த ராஜபக்ச கூறியதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜே.வி.பி.யினருடன் அண்மையில் மகிந்த ராஜபக்ச ஆலோசனை நடத்திய போது நடைபெற்ற விவாதங்களை கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ளதாவது: மகிந்தவுடனான ஜே.வி.பி.யின் சந்திப்பில் நோர்வே குறித்து விமல் வீரவன்ச கருத்துகளை முன்வைத்தார். அதற்குப் பதிலளித்து மகிந்த ராஜபக்ச கூறுகையில், விடுதலைப் புலிகளுக்கு பக்கச் சார்பாகத்தான் நோர்வே செயற்படுவது எ…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஜப்பானிய உதவிகள் நிறுத்தம்? இலங்கைக்கான அபிவிருத்தி உதவிகளை நிறுத்துவது தொடர்பாக ஜப்பான் பரிசீலித்து வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து ஒரு முழு அளவிலான யுத்தம் தொடங்கும் நிலை இருப்பதால் தனது உதவிகளை நிறுத்த ஜப்பான் முடிவு செய்திருப்பதாக கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பில் உத்தியோகப்பூர்வமற்ற முறையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஜப்பான் தெரிவித்திருப்பதாகவும் ஜப்பான் தனது உதவிகளை நிறுத்தினால் ஐக்கிய நாடுகள் சபை உதவியும் நிறுத்தப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது. தமிழ் மக்களினது சட்டப்பூர்வமான முறைமைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று டோக்கியோ இணைத் தலைமை நாடுகள் …
-
- 0 replies
- 1k views
-