விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
உலக லெவன் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்றடைந்தது: வரலாறு காணாத பாதுகாப்பு பாகிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஐ.சி.சி.யின் உலக லெவன் அணி பாகிஸ்தான் சென்றடைந்துள்ளது. இலங்கை அணி கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று விளையாடியது. அப்போது தீவிரவாதிகள் இலங்கை வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 6 இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். 6 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தால் இலங்கை அணி உடனடியாக பாகிஸ்தான் தொடரை ரத்து செய்து சொந்த நாடு திரும்பியது. அதன்பின் எந்த நாடும் பாக…
-
- 5 replies
- 708 views
-
-
தரப்பட்டுத்தல் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் ஜெர்மனி உலக காற்பந்தாட்ட சம்மேளனம் FIFA நேற்று வெளியிட்ட , தரப்படுத்தல் பட்டியலில் , ஜெர்மனி முதலிடத்தைப் பிடித்துள்ளது . செக் குடியரசுக்கு எதிராகவும் , நோர்வேக்கு எதிராகவும் , இந்த மாதம் விளையாடி வென்ற காரணத்தால் , அதற்கு முன்னணி வகிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது . லயனல் மெஸ்ஸியின் ஆர்ஜெண்டீனா , நான்காம் இடத்துக்கு இறங்கி உள்ளது. ரொனால்டோவின் போர்த்துக்கல் அணி , மூன்றாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. பிரித்தானியாவின் சிறந்த அணியாகி உள்ள வேல்ஸ் ,இங்கிலாந்தை 15ம் இடத்துக்கு தள்ளி விட்டு , 13ம் இடத்துக்கு தாவி இருக்கின்றது. முதல் பத்து இடத்திலுள்ள அணிகளின் பட்டியல் இதோ : ஜேர்மனி , ப…
-
- 0 replies
- 307 views
-
-
முதலிடத்தை பிடிப்பது யார்? சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில், முதலிடத்தை பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. அணிகளுக்கான தற்போதைய தரவரிசையில் தென்னாபிரிக்கா 119 தரப்புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் தலா 117 தரப்புள்ளிகளுடன் சமநிலை வகித்தாலும், புள்ளிகள் அடிப்படையில் அவுஸ்திரேலியா (5,505) 2ஆவது இடத்திலும், இந்தியா (5,266) 3ஆவது இடத்திலும் உள்ளன. இந்த நிலையில், இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரின் முடிவைப் பொறுத்து தரவரிசையில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த தொடரை இந்தியா …
-
- 0 replies
- 525 views
-
-
பேட்டிங்கில் தோனியிடமிருந்து சில ஆச்சரியங்களை எதிர்பார்க்கலாம்: ரவி சாஸ்திரி இலங்கைக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டி வெற்றிக்குப் பிறகு.. - படம்.| பிடிஐ. தோனி தனது ஆரம்பகால அதிரடி பேட்டிங்குக்கு எப்போது திரும்புவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் வேளையில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அதற்கான சாத்தியங்களை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் எதிர்பார்க்கலாம் என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்தியா டுடே நேர்காணலில் தோனி பற்றிய பலரது சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதமாக ரவி சாஸ்திரி, “தோனி இவ்வாறு ஆடிவரும் போது நாம் எப்படி மாற்றி யோசிக்க முடியும்?” என்று 2019 உலகக்க…
-
- 0 replies
- 329 views
-
-
பலகோடி ரூபாய் பெறுமான குளிர்பான விளம்பர ஒப்பந்தத்தை மறுத்தார் விராட் கோலி பலகோடி ரூபாய் பெறுமான குளிர்பான விளம்பர ஒப்பந்தத்தை விராட் கோலி வேண்டாம் என்று மறுத்துள்ளார். தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் இந்தத் தகவலை உறுதி செய்த போது, காற்றடைக்கப்பட்ட எந்த ஒரு குளிர் பானத்தையும் தான் அருந்துவதில்லை என்ற காரணத்தினால் இந்த வாய்ப்பை மறுத்ததாகத் தெரிவித்தார். கோலி கடைபிடிக்கும் கொள்கைக்கு இது சற்றும் பிசகாமல் உள்ளது. அதாவது தான் எதை மற்றவர்களுக்குக் கூறுகிறோமோ அதை நாம் முதலில் கடைபிடிக்க வேண்டும் என்ற கொள்கைதான் அது. அவரே ஒருமுறை நிருபர் ஒருவரிடம் கூறும்போது, தன்னால்…
-
- 0 replies
- 509 views
-
-
UEFA தொடரில் முதல் வெற்றியை சுவைத்த பார்சிலோனா, செல்சி, ரியல் மட்ரிட் Getty UEFA சம்பியன் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப்போட்டியானது இவ்வாரம் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் ஆரம்பமாகியது. போட்டியின் ஆரம்பம் முதலே ஒவ்வொரு அணியும் தமக்கு கிடைக்கப்பெறும் வாய்ப்புக்களை சிறந்த முறையில் பயன்படுத்தி அதிக எண்ணிக்கையிலான கோல்களைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது. ஜரோப்பாவின் சிறந்த கால்பந்து கழகங்களிற்கிடையிலான UEFA இன் சம்பியன் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப்போட்டி இவ்வாரம் 13ஆம் திகதி ஆரம்பமாகியது. இப்பருவகாலத்திற்கான சம்பியன்ஸ் கிண்ண சுற்றுப் போட்டியில் 13ஆம் திகதி 8 போட்டிகளும், 14ஆம் திகதி 6 போட்டி…
-
- 0 replies
- 416 views
-
-
"ஐ.பி.எல் ஃபைனலில் டிரெஸிங் ரூமில் பேசியது என்ன?" - கலகல ரோஹித் ஷர்மா ‛புனே அணிக்கு எதிரான ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குறைவான ஸ்கோரே எடுத்திருந்தாலும், பாசிட்டிவ் சிந்தனையும் ஸ்கோர் போர்டை பற்றிக் கவலைப்படாத மனநிலையுமே, மும்பை அணி சாம்பியன் பட்டம் வெல்லக் காரணம்’ என்றார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா. சென்னையின் எக்ஸ்பிரஸ் அவென்யு ஷாப்பிங் மாலில் உள்ள அடிடாஸ் நிறுவனத்தின் 'ஹோம் கோர்ட்' (home court) திறப்பு விழாவில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா பேசியது: ‛‛சென்னைக்கு வருவது என் வீட்டுக்கு வருவதைப் போன்றது. இங்கு வருவதை நான் மிகவும் விரும்புகிறேன்" என்று சென்னையில் விளையாடுவதைப் பற்றி நெகிழ்வாகப் பேசினார். …
-
- 0 replies
- 455 views
-
-
பிரிமா கிண்ணத்திற்கான மோதலுக்கு வடக்கு, கிழக்கு அணிகளும் தயார் பிரிமா கிண்ணத்திற்கான மோதலுக்கு வடக்கு, கிழக்கு அணிகளும் தயார் பாடசாலை மட்ட கிரிக்கெட் வீரர்களின் திறமைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தேசிய மட்டத்திற்கு சிறந்த வீரர்களை உருவாக்கும் எண்ணக்கருவுக்கு அமைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பூரண ஒத்துழைப்புடன் 11ஆவது தடவையாக நடைபெறவுள்ள 15 வயதிற்குட்பட்ட பிரிமா கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் மாகாண மட்டப் போட்டிகள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளன. இதன்படி, செப்டம்பர் முதலாம் திகதி முதல் நாடளாவிய …
-
- 0 replies
- 338 views
-
-
பாடசாலை கிரிக்கெட் வியூகத்தில் மஹேல, சிதத் வெத்தமுனி, திலின கன்தம்பி இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக் காலமாக சந்தித்து வருகின்ற தொடர் தோல்விகளுக்கு பாடசாலை மட்ட கிரிக்கெட்டில் காணப்படுகின்ற குறைபாடுகளே காரணம் என முன்னாள் வீரர்கள் பலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, இலங்கை அணி அண்மைக்காலமாக சந்தித்து வருகின்ற தோல்விகளுக்கு பாடசாலை கிரிக்கெட்டும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும், பாடசாலை மட்டத்தில் விளையாடுகின்ற வீரர்கள் பொருத்தமான முறையில் திறமைகளை அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காணப்படாமை போன்ற காரணிகள் கிரிக்கெட் விளையாட்டு இவ்வாறு பின்னடைவை சந்திக்க காரணியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு வந்தன. இந்நி…
-
- 0 replies
- 399 views
-
-
அயர்லாந்துடன் இன்று மோதல்:புத்துயிர் பெறுமா மே.இ.தீவுகள் அணி; மீண்டும் களமிறங்குகிறார் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் கிறிஸ் கெயில் - படம்: விவேக் பென்ரே அயர்லாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெல்பாஸ்ட் நகரில் இன்று நடக்கிறது. இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக கிறிஸ் கெயில் நீண்ட நாட்களுக்குப் பிறகு களம் இறங்குகிறார். மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி, தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை அந்த அணி இழந்தபோதிலும், ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது கிரிக்கெட் உலகில் சற்று தாக்கத்தை …
-
- 2 replies
- 648 views
-
-
கோலியைச் சீண்டிய ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்... பதிலடிகொடுத்த இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள்! பாகிஸ்தானில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐ.சி.சி அனுமதியுடன் சர்வதேசப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் கோலியை, ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ஒருவர் துப்புரவுப் பணியாளர் எனச் சீண்ட, அதற்கு இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள் இணைந்து தக்க பதிலடிகொடுத்துவருகின்றனர். பாகிஸ்தானில் நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப் பிறகு, அங்கு சர்வதேசப் போட்டிகள் நடைபெறாமல் இருந்துவந்தது. இந்நிலையில், அங்கு மீண்டும் போட்டிகளை நடத்துவதற்கு பாகிஸ்தான் கடுமையான முயற்சி எடுத்தது. இதன் பலனாக, தற்போது பாகிஸ்தானில் அந்த அணிக்கு எதிராக, டுபிளெசிஸ் தலைமை…
-
- 0 replies
- 460 views
-
-
மெஸ்ஸிக்கு இது முதல் கோல்... நம்பமுடிகிறதா? சாம்பியன்ஸ் லீக் அப்டேட்! பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, உலகின் டாப் மோஸ்ட் கால்பந்து க்ளப்புகள் கலந்துகொள்ளும் 2017-18 சீஸனுக்கான சாம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் சுற்று நேற்று தொடங்கியது. ஸ்பெயினின் பார்சிலோனா, ஃபிரான்சின் பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி), ஜெர்மனியின் பேயர்ன் முனிச், இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் செல்சீ அணிகள் தொடக்க ஆட்டத்திலேயே பட்டையைக் கிளப்பின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்தாலியின் யுவெண்டஸ் அணி, பார்சிலோனாவிடம் மண்ணைக் கவ்வியது.ஸ்பெயினின் அட்லெடிகோ மாட்ரிட் மற்றும் இத்தாலியின் ரோமா அணிகளுக்கிடையான ஆட்டம் டிராவில் முடிந்தது. பார்சிலோனா சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி, தன் கரி…
-
- 0 replies
- 1.1k views
-
-
எத்தனை காயம், எத்தனை தோல்வி... ஆனாலும், இவன் ஓய்வதில்லை... நடால் எனும் கம்பேக் நாயகன்! #FedalSlam #Nadal ரஃபேல் நடால் - டென்னிஸ் உலகம் போற்றும் ஒரு மாபெரும் வீரன். 16-வது கிராண்ட் ஸ்லாம் பதக்கத்தை வென்று, சரித்திரம் படைக்க முன்னேறிக்கொண்டிருக்கிறான் அந்தப் போராளி. சீனியர் டென்னிஸ் போட்டிகளில் கால் பதித்து 16 ஆண்டுகளில் 16 பட்டங்கள். போதாக்குறைக்கு 2 ஒலிம்பிக் தங்கங்கள் வேறு! மொத்த உலகமும் இன்று அவரின் வெற்றியை உச்சிமுகர்ந்து கொண்டிருக்கிறது. நாமும் வெறும் வெற்றிப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்தால் அந்த நாயகனின் வலியும் போராட்டமும் கண்காணாமல் போய்விடும். காரணம் நடாலின் வாழ்க்கை டென்னிஸ் வீரர்களுக்கு மட்டுமல்ல, காயமும் தோல்வியும் ஆட்கொண்ட ஒவ்வொர…
-
- 0 replies
- 1k views
-
-
தென் ஆபிரிக்காவின் மூவகை கிரிக்கெட் அணிகளுக்கும் டு ப்ளெசிஸ் தலைவர் மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணித் தலைவராக பவ் டு ப்ளெசிஸ் பதவி வகிக்கவுள்ளார். ஏ. பி. டி வில்லிர்ஸைத் தொடர்ந்து சர்வதேச ஒருநாள் கிரிக்கடெ் அணியின் தலைவராக டு ப்ளெசிஸ் நியமிக்கப்பட்டதை அடுத்து இது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே தென் ஆபிரிக்காவின் டெஸ்ட் அணித் தலைவராக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திலும் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அணியின் தலைவராக 2013 பெப்ரவரியிலிருந்தும் பவ் டு ப்ளெசிஸ் பதவி விகித்துவருகின்றார். 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளிலும் தென் ஆபிரிக்கா அணியைத் தலைவரா…
-
- 0 replies
- 429 views
-
-
இலங்கை கிரிக்கெட் மைதானத்தில் இருந்து முரளீதரன் பெயர் நீக்கம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI/AFP/GETTY IMAGES Image captionமுத்தையா முரளீதரன் (வலது) இலங்கையில் கண்டி மாவட்டத்திலுள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பொறிக்கப்பட்டிருந்த முன்னாள் இலங்கை சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பெயர் அகற்றப்பட்டுள்ளதாக…
-
- 1 reply
- 422 views
-
-
பாகிஸ்தானுக்கு வீரர்களை அனுப்பி பலிக்கடாவாக்க ஒருபோது தயாரில்லை ; தயாசிறி பாகிஸ்தானுடான இலங்கையின் கிரிக்கெட் தொடரானது டுபாயிலேயே நடைபெறவுள்ளது. எமது வீரர்களை அங்கு பலிக்கடாவாக்க நாங்கள் ஒருபோதும் தயாரில்லையென இணை அமைச்சரவைப்பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இணை அமைச்சரவைப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், கேள்வி: பாகிஸ்தான் அணியுடன் விளையாட இலங்கை…
-
- 0 replies
- 320 views
-
-
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் தொடர்பு இல்லையாம்; மஹேல, ப்ரெண்டன், மஹாநாம ஆகியோர் தெரிவிப்பு திலங்க சுமதிபால தலைமையிலான ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் தங்களுக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவலை மஹேல ஜயவர்தன, ப்ரெண்டன் குருப்பு, ரொஷான் மஹநாம ஆகியோர் நிராகரித்துள்ளனர். இந்த மூவருடன் அரவிந்த டி சில்வா, க்ரேம் லெப்ரோய் ஆகியோரை தெரிவுக் குழுவில் இணைப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் கடும் பிரயத்தனம் எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் விளையாட்டை மீள் எழுச்சி அடையச் செய்யும் முயற்சியாகவே இந்த முயற்சியில் ஹலங்கா கிரிக்கெட் நி…
-
- 0 replies
- 456 views
-
-
குத்துச்சண்டையில் வரலாற்று சாதனை படைத்த வித்தியானந்தா கல்லூரி பாடசாலை குத்துச்சண்டை சங்கத்தினரால் நடாத்தப்படும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 48 ஆவது டி.பி ஜெயா ஞாபகார்த்த தேசிய குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி நான்கு தங்க பதக்கங்களை கைப்பற்றி அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளது. நாடு பூராகவும் 48 பாடசாலைகளை சேர்ந்த 267 வீரர்கள் பங்குபற்றிய 16 பிரிவுகளைக் கொண்ட இந்த தேசிய போட்டித்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து நான்கு நாட்கள் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் குத்துச்சண்டை திடலில் இடம்பெற்றுவந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன்முறையாக இந்த ப…
-
- 2 replies
- 431 views
-
-
லாலிகா தொடரில் முன்னிலை வகிக்கும் பார்சிலோனா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளின் பின்னரான லாலிகா சுற்றுப் போட்டிகளின் மூன்றாம் கட்டப்போட்டிகள் 9ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை நடைபெற்றது. போட்டியின் முடிவில் பார்சிலோனா கழகம் புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்றுக் கொண்டது. பல அணிகளின் எதிர்பாராத போட்டி முடிவுகள் ஆதரவாளர்களை மகிழ்ச்சியிலும் அதேபோல் அதிருப்தியிலும் ஆளாக்கியுள்ளது. உலக கிண்ண கால்பந்து போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகளின் பின்னரான ஸ்பெய்னின் லாலிகா சுற்றுப்போட்டிகள் 9ஆம் திகதி ஆரம்பமாகியது. ஓருவார கால இடைவெளியின் பின்னர் ஆதரவாளர்கள் தமது அணியின் வீரர்களை உற்சாகப்படுத்த திரள் திரளாக மைதானத்திற்கு சமூகமளித்திருந்தனர். அத…
-
- 0 replies
- 434 views
-
-
போட்டித் தடைக்கு உள்ளாகியுள்ள ரியல் மெட்ரிடின் மூன்று தலைவர்கள் புதிய பருவகாலத்திற்கான அனைத்து கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிகளும் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஸ்பெய்னின் ரியல் மெட்ரிட் கழகத்தின் முதல் மூன்று தலைவர்களும் கடந்த ஒருமாத காலத்திற்குள் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது மட்டுமன்றி, பல போட்டிகள் தடைவிதிக்கப்பட்டுமுள்ளன. இந்நிகழ்வால் அவ்வணியின் ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. இப்பருவகாலத்திற்கான லாலிகா சுற்றுப்போட்டி முதல் பிரீமியர் லீக் வரையிலான அனைத்து சுற்றுப்போட்டிகளும் ஆரம்பிக்கப்பட்டு, நடைபெற்றுவருகின்றது. போட்டி முடிவுகள் தமது அணிக்கு சாதகமாக அமையாத நிலையில் வீரர்கள் முதற்கொண்டு, ஆதரவ…
-
- 0 replies
- 310 views
-
-
ஆஸி. வீரர்களின் சிக்ஸர் மழைக்கு மத்தியில் கில்லி போல பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர்! 11 சிக்ஸர்கள். 50 ஓவர்களில் 347 ரன்கள். இந்த ரன் மழைக்கு மத்தியில் வாஷிங்டன் சுந்தர் மட்டும் தன்னிரகற்ற பந்துவீச்சாளராக விளங்கினார். அட என்று அத்தனை பேரும் ஆச்சர்யப்படும் பந்துவீச்சு. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர், 3 போட்டிகள் டி20 தொடர் ஆகியவற்றில் மோதுகின்றன. ஒரு நாள் தொடரின் முதல் ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. அதை முன்னிட்டு ஆஸ்திரேலியா-இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் லெவன்…
-
- 1 reply
- 443 views
-
-
பாகிஸ்தான் சென்று இலங்கை ஒரு டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறது பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் சர்வதேச போட்டிகள் துளிர்விட ஆரம்பித்துள்ளது. இலங்கை அணி ஒரு டி20 கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறது. இலங்கை அணி கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று விளையாடியது. அப்போது தீவிரவாதிகள் இலங்கை வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 6 இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். 6 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தால் இலங்கை அணி உடனடியாக பாகிஸ்தான் தொடரை ரத்து செய்து சொந்த நாடு திரும்பியது. அதன்பின் எந்த நாடும் பாகிஸ்தான் சென்று விளைய…
-
- 0 replies
- 309 views
-
-
வீடியோ... ஸ்லெட்ஜிங் செய்த பவுலரை பேட்டிங்கால் நோகடித்து பழிக்குப்பழி வாங்கிய பேட்ஸ்மேன் கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் ஸ்லெட்ஜிங் செய்த பவுலரை, பேட்ஸ்மேன் தனது பேட்டிங்கால் நோகடித்து பழிக்குப்பழி வாங்குவது தொடர்பான வீடியோவை பார்த்து மகிழுங்கள். வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரிமீயர் லீக் தொடர் சமீபத்தில் நடைபெற்றது. ஆறு அணிகள் இடம்பிடித்த இந்த தொடரில் ஒரு அணி மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். அதன்படி ஜமைக்கா தல்லாவாஸ் - கயானா அமேசான் வாரியஸ் அணிகள் மோதின. கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் சாட்விக் வால்டன் பே…
-
- 0 replies
- 385 views
-
-
பார்சிலோனாவிற்காக மெஸ்சி 38 முறை ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை லா லிகாவில் எஸ்பான்யல் அணிக்கெதிராக ஹாட்ரிக் கோல்கள் அடித்ததன் மூலம் பார்சிலோனாவிற்கு மெஸ்சி 38 முறை ஹாட்ரிக் அடித்து சாதனைப் படைத்துள்ளார். லா லிகா தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் பார்சிலோனா - எஸ்பான்யல் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதலே பார்சிலோனா வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக நட்சத்திர வீரர் மெஸ்சி அபாரமாக விளையாடினார். ஆட்டத்தின் 26, 35 மற்றும் 67-வது நிமிடங்களில் அடுத்தடுத்து மூன்று கோல்கள் அடி…
-
- 0 replies
- 286 views
-
-
2017இல் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்த கிரிக்கெட் நட்சத்திரங்கள் 2017இல் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்த கிரிக்கெட் நட்சத்திரங்கள் எந்தவொரு விளையாட்டிலும் தலைமைத்துவம் என்பது இலகுவான விடயமல்ல. அதிலும் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தமட்டில் போட்டியின் அரைவாசி பகுதி முழுவதும் தலைவரின் கருத்துக்கள் மற்றும் தீர்மானங்கள் படிதான் அணி வழிநடாத்தப்படுவதுடன், போட்டி நிறைவடையும் வரை அனைத்து அழுத்தங்களையும் தனது தோள்களில் சுமந்துகொண்டு அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்வதில் மும்முரமாக இருப்பார். வானம் உயர்ந…
-
- 0 replies
- 433 views
-