Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. தப்பினார் செபஸ்டியன் வெட்டல் அஸர்பைஜானில் இடம்பெற்ற கிரான்ட் பிறிக்ஸ் தொடரில், லூயிஸ் ஹமில்டனின் காரோடு ஏற்பட்ட வாகன மோதல் தொடர்பாக, போர்மியூலா வண் சம்பியன்ஷிப்பில் முன்னிலை வகிக்கும் செபஸ்டியன் வெட்டல், மேலதிக நடவடிக்கைகளை எதிர்கொள்ள மாட்டார் என, சர்வதேச ஓட்டோமொபைல் சம்மேளனம் அறிவித்துள்ளது. பாதுகாப்புக் காருக்குப் பின்னால் நின்ற போது, தனது சக மெர்சிடீஸ் சாரதியான ஹமில்டனின் காரோடு, வெட்டல் மோதியிருந்தார். இதனால் அவருக்கு, 10 செக்கன்கள் நிறுத்திச் செல்லும் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான மீளாய்வு இடம்பெற்ற நிலையில், தனது நடவடிக்கை தவறானது என ஏற்றுக் கொண்ட வெட்டல், அது தொடர்பாக பகிரங்க மன…

  2. சர்­வ­தேச கிரிக்கெட் பந்­து­வீச்சில் டேன் சாதனை இங்­கி­லாந்தில் நடை­பெற்­று­வரும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­களின் ஒன்­பதாம் நாளான ஞாயி­றன்று எட்டு மகளிர் அணி­களும் விளை­யா­டிய போட்­டி­களில் தென் ஆபி­ரிக்கா, இந்­தியா, அவுஸ்­தி­ரே­லியா, இங்­கி­லாந்து ஆகிய அணிகள் தங்­க­ளது பந்­து­வீச்­சா­ளி­னி­களின் அதீத திற­மையைக் கொண்டு வெற்­றி­களைப் பதிவு செய்­தன. தென் ஆபி­ரிக்க அணித் தலைவி டேன் வென் நீகேர்க் சாதனை மேற்­கிந்­தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதி­ராக லெஸ்டர் க்றேஸ் றோட் மைதா­னத்தில் நடை­பெற்ற மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் தென் ஆபி­ரிக்க மகளிர் அணித் தலைவி டேன் வென் நீகேர்க் சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் அபூர்வ சாதனை ஒன்றை நிலை­நாட்­டினா…

  3. சென்னையின் எஃப்.சி. பயிற்சியாளராக இங்கிலாந்தின் ஜான் கிரிகோரி நியமனம் சென்னையின் எஃப்.சி. பயிற்சியாளரான இருந்த இத்தாலியின் மார்கோ மெடாரசி நீக்கப்பட்டு, இங்கிலாந்தின் ஜான் கிரிகோரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் வாரியத்தால் கடந்த 2008-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடர் தொடங்கப்பட்டது. இதற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் இந்திய கால்பந்து சம்மேளனமும் இந்தியன் சூப்பர் லீக் என்ற கால்பந்து தொடரை அறிமுகப்படுத்தியது. இதில் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோர் அணிகளை வாங்கியுள்ளனர். 2014 முதல் இந்த தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ரசிகர்கள் ஆதரவு அதிக அளவ…

  4. லக்ஷன் சந்தகனின் மாய சுழலின் பின்னணியில் இருப்பது என்ன? போட்டியின் மத்திய ஓவர்களில் விக்கெட்டுக்களை சாய்ப்பதில் தடுமாற்றத்தினை காண்பித்திருந்ததே இலங்கை அணியின் அண்மைக்கால வீழ்ச்சிகளுக்கு காரணமாகவிருந்தது. எனினும், ஜிம்பாப்வே அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் மத்தியவரிசை ஓவர்களில் முக்கிய பல விக்கெட்டுக்களை சாய்த்திருந்த சுழல் வீரரான லக்ஷன் சந்தகன் சர்வதேச போட்டிகளில் இலங்கை அணிக்கான தனது பெறுமதியை உணர்த்தியிருந்தார். இந்தப் போட்டி மூலம், ஒரு நாள் போட்டிகளில் சிறப்பான பந்து வீச்சினை வெளிப்படுத்தியிருந்த சந்தகன், 10 ஓவர்களை வீசி 51 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார். இவரின் சிறப்பாட்டம் மூலம் இலங்கை, ஜிம…

  5. ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் MCC அணிக்காக குமார் சங்கக்கார லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஜூலை 11ஆம் திகதி நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான கிரிக்கெட் போட்டியில் களமிறங்கவுள்ள முன்னாள் நட்சத்திர வீரர்களை கொண்ட MCC அணியின் துடுப்பாட்ட வரிசையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்கார இணைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான யூனிஸ் கான் மற்றும் மிஸ்பா உல் ஹக் ஆகியோர் சர்வதேச மட்டத்தில் 28,922 ஓட்டங்களை தங்களுக்கிடையே பகிர்ந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள், அண்மையில் இங்கிலாந்து உள்ளூர் பருவகால போட்டிகளில் 1000 ஓட்டங்களை குவித்த குமார் சங்…

  6. ஆமை வேகத்தில் அரைசதம்: 108 பந்தில் அடித்து மோசமான சாதனையை பதிவு செய்தார் டோனி டோனி 108 பந்தில் அரைசதம் அடித்ததன் மூலம் அதிக பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்த 2-வது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை பெற்றுள்ளார். ஆன்டிகுவா, இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முடிந்த மூன்று போட்டிகளில் (மழையால் ஒரு ஆட்டம் ரத்து) இந்தியா இரண்டில் வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகித்த நிலையில், நேற்று 4-வது போட்டியில் களமிறங்கியது. இதில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடலாம் என்ற …

  7. இலங்கை - ஜிம்பாப்வே கிரிக்கெட்: ரசிகர்களை அச்சுறுத்தும் யானைக் கூட்டம் ஹம்பன்தோடாவில் நடைபெற இருக்கும் இலங்கை - ஜிம்பாப்வே கிரிக்கெட் போட்டிக்கு யானைக்கூட்டம் அச்சுறுத்தலாக இருப்பதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. காலேயில் முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகள் பெற்றுள்ளதால் தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது. அடுத்த மூன்று போட்டிகள் ஹம்பன்தோடாவில் நடக்கிறது. 3-வது போட்டி 6-ந்தேதியும், 4-வது போட்டி…

  8. இன்று ஆரம்பிக்கிறது விம்பிள்டன் கோலாகலம் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில், முக்கியமான தொடராகக் கருதப்படும் விம்பிள்டன் சம்பியன்ஷிப் தொடரின் பிரதான சுற்று, இன்று ஆரம்பிக்கவுள்ளது. உலகின் முன்னணி வீரர்கள் பலரும், தங்களது திறமைகளை வெளிப்படுத்தக் காத்திருக்கின்றனர். 16ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்தத் தொடரில், மொத்தமாக 31,600,000 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ், பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. பிரதான தொடர் ஆரம்பிக்கும் இன்றைய தினமே, முக்கியமான வீரர்கள் பலரும் பங்குபற்றும் போட்டிகள் இடம்பெறவுள்ளன. ஆண்கள் ஒற்றையர் போட்டிகளில், தொடருக்கான தரப்படுத்தல்களில், அன்டி மரே, நொவக் ஜோக்கோவிச், ரொஜர் பெடரர், ரப…

  9. இலங்கைக்கு வெற்றியிலக்காக 156 ஓட்டங்கள் இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் வெற்றியிலக்காக 156 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலி சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் சிம்பாபே அணியை துடுப்பெடுத்தாடுமாறு அழைப்பு விடுத்தது. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாபே அணி, 33.4 ஓவர்களில் 155 ஓட்டங்களை பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது. சிம்பாபே அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மசகட்ஸா அதிகபட்சமாக 41 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.இதேவேளை இலங்கை அணி சார்பாக அபாரமாக பந்து வீசிய லக்‌ஷான் சன்டகன் நா…

  10. 'நான் ஒரு ஒயின் மாதிரி!'- இது தோனி பன்ச் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 'நான் ஒரு ஒயின் மாதிரி. காலம் போக போக சுவைகூடிக் கொண்டே போவேன்' என்று சிலாகித்துள்ளார். கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியதிலிருந்தே, அவரது ஃபார்ம் பற்றி தொடர்ச்சியான கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில் கெத்து கம்-பேக் கொடுத்துள்ளார். இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் ஒரு 20 ஓவர்கள் போட்டியை விளையாடி வருகிறது. நேற்றுடன் இதுவரை மூன்று ஒரு நாள் போட்டிகள் முடிந்துள்ளன. நேற்றைய போட்டியில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பவே தோனி கொஞ்சம் சீக…

  11. மலிங்காவிற்கு வைரஸ் காய்ச்சல்: ஜிம்பாப்வேக்கு எதிரான நாளைய போட்டியில் இருந்து விலகல் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் நாளை ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது போட்டியில் இடம்பெறமாட்டார். ஜிம்பாப்வே அணி இலங்கையில சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. காலேயில் நடந்த முதல் போட்டியில் 300-க்கும் அதிகமான ரன்னை சேஸிங் செய்து ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 51 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரே…

  12. இங்கிலாந்தில் விளையாடவுள்ள திசர பெரேரா!! இங்கிலாந்தின் க்லோஸ்ட்ரஸயர் பிராந்திய அணியில் விளையாடுவதற்காக இலங்கை அணியின் வீரர் திசர பெரேரா தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள 20-20 பிராந்திய ஆட்டங்களில் விளையாடவே திசர அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிக்குகே பிரசன்ன பங்களாதேஸ் பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. பங்களாதேஸின் குல்னா டைடன் அணிக்காகவே இவர் விளையாடவுள்ளார். http://uthayandaily.com/story/8893.html

  13. அதிக ரன்கள் குவித்ததில் அசாருதீனை முந்திய டோனி ஒரு நாள் போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் அசாருதீனை முந்திய டோனி 4-வது இடத்தை பெற்றார். அவர் 294 ஒரு நாள் போட்டியில் விளையாடி 9442 ரன் எடுத்துள்ளார். ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு டோனி முக்கிய பங்கு வகித்தார். அவர் 35 வயதிலும் 78 ரன்கள் குவித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். 15-வது ரன்னை எடுத்த போது டோனி ஒரு நாள் போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் 4-வது இடத்தை பிடித்தார். அவர் அசாருதீனை முந்தினார். தெண்டுல்க…

  14. சிறுவயது தோழியை கரம்பிடித்த நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி பிரபல நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தனது சிறுவயது தோழி அண்டோனல்லா ரோகுசோவை நேற்று திருமணம் செய்து கொண்டார். பியுனோஸ் ஐரஸ்: அர்ஜென்டினா கால்பந்து அணியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி. உலக புகழ்பெற்ற அவர் தனது ஆரம்ப கால தோழியான அண்டோனல்லா ரோகுசோவை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் வசித்து வரும் மெஸ்ஸி தம்பதியினருக்கு தியாகோ…

  15. ஆட்டநாயகன் தோனி, அஷ்வின், குல்தீப் யாதவ் சுழலில் சுருண்டது மேற்கிந்தியத் தீவுகள்! இன்று, மேற்கிந்தியத் தீவுகளுடன் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பாகிஸ்தானிடம் கோப்பையை நழுவவிட்ட இந்திய அணி, தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. 5 ஒருநாள் மற்றும் 1 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. 2 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனிடையே, இன்று ஆண்டிகுவாவில் 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய…

  16. கெப்ளர் முதல் மோர்கன் வரை... இரு நாடுகளுக்கு விளையாடிய கிரிக்கெட் வீரர்கள்! வாய்ப்புக்காக, திறமையை வெளிப்படுத்துவதற்கான இடம் கிடைக்காத காரணத்துக்காக, பணத்துக்காக, சந்தர்ப்பசூழல்களுக்காக... என, இரு வேறு நாடுகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கை அதிகம். அப்படி விளையாடிய, விளையாடிக்கொண்டிருக்கும் பத்து கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் இது. ஜான் ட்ரைகோஸ் (John Traicos) விளையாடிய நாடுகள் : தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே. 1970-களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணியில் அறிமுகமான ஆஃப் ஸ்பின் பெளலர் ஜான் ட்ரைகோஸ். தென் ஆப்பிரிக்காவில் நிலவிய உள்நாட்டுப் பிரச்னையால் கிரிக்கெட் …

  17. ஒரே வருடத்தில் இரண்டு ஐபிஎல்- பிசிசிஐ புதிய திட்டம்? மினி ஐபிஎல் தொடர் நடத்துவது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றுவருவதாக, ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இந்தியாவில், ஏப்ரல்-மே மாதத்தில் நடக்கும் ஐபிஎல் தொடர், உலகம் முழுவதும் அதிக வரவேற்பைப் பெற்றது. இதில், முதல் இரண்டு இடத்தைப் பிடிக்கும் அணிகள், செப்டம்பரில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் விளையாடுவது வழக்கம். ஆனால், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால், இரண்டு ஆண்டுக்கு முன்னர் இந்தத் தொடர் கைவிடப்பட்டது. இதனால், தற்போது செப்டம்பர் மாதத்தில் 15 நாள்கள் இடைவெளி கிடைத்துள்ளதால், அதில் மினி ஐபிஎல் தொடர் ஒன்றை நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற…

  18. இந்திய கிரிக்கெட்டில், 'மும்பை லாபி ' வெகு பிரபலம். மும்பையைச் சேர்ந்த நான்கைந்து வீரர்கள் இந்திய அணியில் இருந்த காலமும் உண்டு. அணியில் அவர்கள் வைத்ததுதான் சட்டம். கவாஸ்கர் கேப்டனாக இருந்தால், மும்பையைச் சேர்ந்த வீரர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார். ரவி சாஸ்திரி, வெங்சர்க்கார் போன்றோர் அப்படித்தான் இந்திய அணியில் கோலோச்சினர். அணி நிர்வாகமும் மும்பைவாசிகள் கையில்தான் இருந்தது. இந்த நிலை மாறியுள்ளதால், தற்போது சச்சினால் `மும்பை லாபி' மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து கும்ப்ளே விலகியுள்ள நிலையில், புதிய பயிற்சியாளர் தேர்வு நடைபெற்றது. இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் திடீரென பயிற்சியாளர் பதவிக்க…

    • 1 reply
    • 570 views
  19. வேகமாக ஆயிரம் ஓட்டங்களை கடந்த குஷல் இலங்கை அணியின் இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குஷல் மென்டிஸ் சிம்பாப்வே அணிக்கெதிராக 28 ஓட்டங்களைப்பெற்றபோது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்த 2 ஆவது இலங்கை வீரர் என்ற பெருமையைப்பெற்றார். காலி சர்வதேச மைதானத்தில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்றுவரும் ஒருநாள் போட்டியிலேயே குஷல் மென்டிஸ் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். குஷல் மென்டிஸ் இந்த மைல்கல்லை 28 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார். இதேவேளை, இதற்கு முன்னர் ரோய் டயஸ் 27 இன்னிங்களிலும் உபுல் தரங்க 28 இன்னிங்களிலும் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்திருந்த நிலையில் குஷல் மென்டிஸ் 28 இன்னிங்ஸில் 1000 ஓட்டங்ளை…

  20. கோஹ்லி ஏன் சொதப்புகிறார்? சார்லஸ் சாம்பியன்ஸ் டிராஃபி தோல்வி, பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கும்ப்ளே விலகல், கோஹ்லியின் கேப்டன்ஸி மீதான நம்பிக்கையின்மை என மீண்டும் சர்ச்சைகளுக்குள் வந்து விழுந்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. பயிற்சியாளரான ஒரே ஆண்டில் பதவியில் இருந்து விலகியிருக்கிறார் அனில் கும்ப்ளே. ‘`என்னுடைய ‘ஸ்டைலில்’, நான் பயிற்சியாளராகத் தொடர்வதில் கேப்டனுக்கு மாற்றுக்கருத்துகள் இருப்பதாக பிசிசிஐ என்னிடம் சொல்லி யிருக்கிறது. முரண்பாடுகளைக் களைய பிசிசிஐ எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்து விட்டநிலையில் நான் பதவி விலகுகிறேன்’’ என அறிவித்திருக்கிறார் கும்ப்ளே. இதே கும்ப்ளே கடந்த ஆண்டு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்…

    • 1 reply
    • 554 views
  21. சதம் அடித்ததும், டோனி அதிக அளவில் ரியாக்சன் காட்டாதது ஏமாற்றம் அளித்தது: பகர் சமான் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நான் சதம் அடித்ததும் டோனி முகத்தில் அதிக அளவில் ரியாக்சன் இல்லாதது ஏமாற்றம் அளித்தது என பகர் சமான் கூறியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வென்றது. கோப்பையுடன் சென்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு சொந்த நாட்டில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அனைத்து மீடியாக்களும் வீரர்களை அழைத்து பேட்டி கண்டு வருகிறது. பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் பகர் சமான்…

  22. மகளிர் உலகக்கோப்பை: 257 ரன்களில் 178 நாட் அவுட்; இலங்கை வீராங்கனை அட்டப்பட்டு ஜெயங்கனி சாதனை 178 ரன்கள் விளாசிய இலங்கை வீராங்கனை அட்டப்பட்டு ஜெயங்கனி. | படம்.| ராய்ட்டர்ஸ். பிரிஸ்டலில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை அணி 257 ரன்களைக் குவித்துள்ளது. இதில் 3-ம் நிலையில் களமிறங்கிய அட்டப்பட்டு சமாரி ஜெயங்கனி என்ற இடது கை விராங்கனை தனியாகப் போராடி, 178 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து சாதனை புரிந்துள்ளார், இது மகளிர் ஒருநாள் போட்டிகளில் 3-வது அதிகபட்ச தனிநபர் ரன் எண்ணிக்கையாகும். மேலும் அணி எடுத்த 257 ரன்களில் 178 ரன்கள் பங்களிப்பு என்பது அதிக…

  23. இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம் இலங்கை மற்றும் சிம்­பாப்வே அணிகள் மோதும் ஒருநாள் தொடர் நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இலங்­கைக்கு சுற்றுப்பயணம் மேற்­கொண்­டுள்ள சிம்­பாப்வே அணி ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொட­ரிலும் ஒரே ஒரு டெஸ்ட் போட்­டி­யிலும் விளை­யா­டு­கின்­றது. இவ்­விரு அணி­களும் மோதும் ஒருநாள் தொடரின் முத­லி­ரண்டு போட்­டிகள் காலி மைதா­னத்தில் நடை­பெ­று­கின்­றன. மீத­முள்ள மூன்று போட்­டி­களும் ஹம்­பாந்­தோட்டை மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளன. ஒருநாள் தொடரின் முத­லா­வது போட்டி நாளை காலி மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. சிம்­பாப்வே அணி­யுடன் மோத­வுள்ள இலங்கை அணி நேற்­று­முன்­தினம் அறி­விக்­க…

  24. சங்காவின் அதிரடி தொடர்கிறது இங்கிலாந்தின் பிராந்திய கிரிக்கெட் போட்டிகளில், சரே அணிக்காக விளையாடிவரும், இலங்கையின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இந்தப் பருவகாலத்தில் 1,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். பலமிக்க யோர்க்‌ஷையர் அணிக்கெதிராக, லீட்ஸில் இடம்பெற்றுவரும் போட்டியிலேயே, இந்தச் சாதனையை அவர் படைத்தார். பகல் - இரவுப் போட்டியாக, மென்சிவப்புப் பந்தைப் பயன்படுத்தி இடம்பெற்றுவரும் இப்போட்டியில், அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய குமார் சங்கக்கார, 183 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 180 ஓட்டங்களைக் குவித்தார். தனது சதத்தை 136 பந்துகளில் கடந்த அவர், அதன் பின்னர் மேலும் அதிரடியாக…

  25. இரண்டாவது கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக்கின் சம்பியனாகிய நோர்த் டிராகன்ஸ் Tamil இரண்டாவது கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக்கின் சம்பியனாகிய நோர்த் டிராகன்ஸ் யாழ்ப்பாணம் கிறாஸ்ஹொப்பேர்ஸ் விளையாட்டுக் கழகம், தமது கழகத்தின் முன்னாள் வீரர்களான ராஜசிங்கம் றொஹான் மற்றும் சிவசங்கர் ஆகியோரது ஞாபகார்த்தமாக நடாத்திவரும் அணிக்கு 06 பேர் விளையாடும் 05 ஓவர்கள் கொண்ட கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக் (ஜி.பி.எல்) போட்டித் தொடரின் இரண்டாவது பருவகால சம்பியன்களாக நோர்த் டிராகன்ஸ் அணியினர் முடிசூடியுள்ளனர். இந்த பருவகாலத்திற்கான ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.