Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஆட்டநாயகன் தோனி, அஷ்வின், குல்தீப் யாதவ் சுழலில் சுருண்டது மேற்கிந்தியத் தீவுகள்! இன்று, மேற்கிந்தியத் தீவுகளுடன் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பாகிஸ்தானிடம் கோப்பையை நழுவவிட்ட இந்திய அணி, தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. 5 ஒருநாள் மற்றும் 1 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. 2 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனிடையே, இன்று ஆண்டிகுவாவில் 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய…

  2. கெப்ளர் முதல் மோர்கன் வரை... இரு நாடுகளுக்கு விளையாடிய கிரிக்கெட் வீரர்கள்! வாய்ப்புக்காக, திறமையை வெளிப்படுத்துவதற்கான இடம் கிடைக்காத காரணத்துக்காக, பணத்துக்காக, சந்தர்ப்பசூழல்களுக்காக... என, இரு வேறு நாடுகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கை அதிகம். அப்படி விளையாடிய, விளையாடிக்கொண்டிருக்கும் பத்து கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் இது. ஜான் ட்ரைகோஸ் (John Traicos) விளையாடிய நாடுகள் : தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே. 1970-களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணியில் அறிமுகமான ஆஃப் ஸ்பின் பெளலர் ஜான் ட்ரைகோஸ். தென் ஆப்பிரிக்காவில் நிலவிய உள்நாட்டுப் பிரச்னையால் கிரிக்கெட் …

  3. இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம் இலங்கை மற்றும் சிம்­பாப்வே அணிகள் மோதும் ஒருநாள் தொடர் நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இலங்­கைக்கு சுற்றுப்பயணம் மேற்­கொண்­டுள்ள சிம்­பாப்வே அணி ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொட­ரிலும் ஒரே ஒரு டெஸ்ட் போட்­டி­யிலும் விளை­யா­டு­கின்­றது. இவ்­விரு அணி­களும் மோதும் ஒருநாள் தொடரின் முத­லி­ரண்டு போட்­டிகள் காலி மைதா­னத்தில் நடை­பெ­று­கின்­றன. மீத­முள்ள மூன்று போட்­டி­களும் ஹம்­பாந்­தோட்டை மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளன. ஒருநாள் தொடரின் முத­லா­வது போட்டி நாளை காலி மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. சிம்­பாப்வே அணி­யுடன் மோத­வுள்ள இலங்கை அணி நேற்­று­முன்­தினம் அறி­விக்­க…

  4. ஒரே வருடத்தில் இரண்டு ஐபிஎல்- பிசிசிஐ புதிய திட்டம்? மினி ஐபிஎல் தொடர் நடத்துவது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றுவருவதாக, ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இந்தியாவில், ஏப்ரல்-மே மாதத்தில் நடக்கும் ஐபிஎல் தொடர், உலகம் முழுவதும் அதிக வரவேற்பைப் பெற்றது. இதில், முதல் இரண்டு இடத்தைப் பிடிக்கும் அணிகள், செப்டம்பரில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் விளையாடுவது வழக்கம். ஆனால், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால், இரண்டு ஆண்டுக்கு முன்னர் இந்தத் தொடர் கைவிடப்பட்டது. இதனால், தற்போது செப்டம்பர் மாதத்தில் 15 நாள்கள் இடைவெளி கிடைத்துள்ளதால், அதில் மினி ஐபிஎல் தொடர் ஒன்றை நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற…

  5. வேகமாக ஆயிரம் ஓட்டங்களை கடந்த குஷல் இலங்கை அணியின் இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குஷல் மென்டிஸ் சிம்பாப்வே அணிக்கெதிராக 28 ஓட்டங்களைப்பெற்றபோது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்த 2 ஆவது இலங்கை வீரர் என்ற பெருமையைப்பெற்றார். காலி சர்வதேச மைதானத்தில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்றுவரும் ஒருநாள் போட்டியிலேயே குஷல் மென்டிஸ் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். குஷல் மென்டிஸ் இந்த மைல்கல்லை 28 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார். இதேவேளை, இதற்கு முன்னர் ரோய் டயஸ் 27 இன்னிங்களிலும் உபுல் தரங்க 28 இன்னிங்களிலும் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்திருந்த நிலையில் குஷல் மென்டிஸ் 28 இன்னிங்ஸில் 1000 ஓட்டங்ளை…

  6. 1987 உலகக் கோப்பை கிரிக்கெட்.. தெரிந்ததும் தெரியாததும்! Gentleman to CommonMan மினி தொடர் பாகம் 1 அப்போது எந்த கிரிக்கெட் விமர்சகரும் சேத்தன் ஷர்மா ஹாட்ரிக் எடுப்பார் என்றோ, நவ்ஜோத் சித்து தொடர்ந்து நான்குமுறை 50 ரன்கள் அடிப்பார் என்றோ கணிக்கவில்லை. அந்த உலகக் கோப்பை தொடங்கும் முன்பும் முடிந்த பின்பும் கிரிக்கெட் அல்லாத ஒரு விஷயத்தை பற்றிதான் அதிகம் பேசினார்கள். அது டேவிட் பூனின் மீசை. இப்படி பல விஷயங்களுக்கு அச்சாரமாக இருந்த 1987 உலகக் கோப்பையைப் பற்றிய கம்ப்ளீட் ரீவைண்ட் இதோ... 1987 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முதன்முறையாக கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்துக்கு வெளியே நடக்கப்போகிறது என்றதுமே கிரிக்கெட் உலகிற்கு …

  7. மகளிர் உலகக்கோப்பை: 257 ரன்களில் 178 நாட் அவுட்; இலங்கை வீராங்கனை அட்டப்பட்டு ஜெயங்கனி சாதனை 178 ரன்கள் விளாசிய இலங்கை வீராங்கனை அட்டப்பட்டு ஜெயங்கனி. | படம்.| ராய்ட்டர்ஸ். பிரிஸ்டலில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை அணி 257 ரன்களைக் குவித்துள்ளது. இதில் 3-ம் நிலையில் களமிறங்கிய அட்டப்பட்டு சமாரி ஜெயங்கனி என்ற இடது கை விராங்கனை தனியாகப் போராடி, 178 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து சாதனை புரிந்துள்ளார், இது மகளிர் ஒருநாள் போட்டிகளில் 3-வது அதிகபட்ச தனிநபர் ரன் எண்ணிக்கையாகும். மேலும் அணி எடுத்த 257 ரன்களில் 178 ரன்கள் பங்களிப்பு என்பது அதிக…

  8. கோஹ்லி ஏன் சொதப்புகிறார்? சார்லஸ் சாம்பியன்ஸ் டிராஃபி தோல்வி, பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கும்ப்ளே விலகல், கோஹ்லியின் கேப்டன்ஸி மீதான நம்பிக்கையின்மை என மீண்டும் சர்ச்சைகளுக்குள் வந்து விழுந்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. பயிற்சியாளரான ஒரே ஆண்டில் பதவியில் இருந்து விலகியிருக்கிறார் அனில் கும்ப்ளே. ‘`என்னுடைய ‘ஸ்டைலில்’, நான் பயிற்சியாளராகத் தொடர்வதில் கேப்டனுக்கு மாற்றுக்கருத்துகள் இருப்பதாக பிசிசிஐ என்னிடம் சொல்லி யிருக்கிறது. முரண்பாடுகளைக் களைய பிசிசிஐ எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்து விட்டநிலையில் நான் பதவி விலகுகிறேன்’’ என அறிவித்திருக்கிறார் கும்ப்ளே. இதே கும்ப்ளே கடந்த ஆண்டு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்…

    • 1 reply
    • 560 views
  9. சதம் அடித்ததும், டோனி அதிக அளவில் ரியாக்சன் காட்டாதது ஏமாற்றம் அளித்தது: பகர் சமான் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நான் சதம் அடித்ததும் டோனி முகத்தில் அதிக அளவில் ரியாக்சன் இல்லாதது ஏமாற்றம் அளித்தது என பகர் சமான் கூறியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வென்றது. கோப்பையுடன் சென்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு சொந்த நாட்டில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அனைத்து மீடியாக்களும் வீரர்களை அழைத்து பேட்டி கண்டு வருகிறது. பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் பகர் சமான்…

  10. சங்காவின் அதிரடி தொடர்கிறது இங்கிலாந்தின் பிராந்திய கிரிக்கெட் போட்டிகளில், சரே அணிக்காக விளையாடிவரும், இலங்கையின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இந்தப் பருவகாலத்தில் 1,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். பலமிக்க யோர்க்‌ஷையர் அணிக்கெதிராக, லீட்ஸில் இடம்பெற்றுவரும் போட்டியிலேயே, இந்தச் சாதனையை அவர் படைத்தார். பகல் - இரவுப் போட்டியாக, மென்சிவப்புப் பந்தைப் பயன்படுத்தி இடம்பெற்றுவரும் இப்போட்டியில், அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய குமார் சங்கக்கார, 183 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 180 ஓட்டங்களைக் குவித்தார். தனது சதத்தை 136 பந்துகளில் கடந்த அவர், அதன் பின்னர் மேலும் அதிரடியாக…

  11. மலிங்காவுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்ட ஓராண்டு தடை; ஒப்பந்தத்தை மீறியதால் நடவடிக்கை படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒப்பந்த விதிகளை மீறியதாக, ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்த தண்டனை 6 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வருமானத்திலிருந்து 50 சதவீதத்தை அவர் அபராதமாகச் செலுத்த வேண்டும் என்றும் சிறப்பு விசாரணைக்குழு அறிவித்துள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பிறகு, இரண்டு முறை லசித் மலிங்க, ஒப்பந்த விதிகளை மீறியுள்ளதாகவும், ஊடகங்களுக்கு அதிகாரிகளின் அனுமதியி…

  12. இரண்டாவது கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக்கின் சம்பியனாகிய நோர்த் டிராகன்ஸ் Tamil இரண்டாவது கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக்கின் சம்பியனாகிய நோர்த் டிராகன்ஸ் யாழ்ப்பாணம் கிறாஸ்ஹொப்பேர்ஸ் விளையாட்டுக் கழகம், தமது கழகத்தின் முன்னாள் வீரர்களான ராஜசிங்கம் றொஹான் மற்றும் சிவசங்கர் ஆகியோரது ஞாபகார்த்தமாக நடாத்திவரும் அணிக்கு 06 பேர் விளையாடும் 05 ஓவர்கள் கொண்ட கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக் (ஜி.பி.எல்) போட்டித் தொடரின் இரண்டாவது பருவகால சம்பியன்களாக நோர்த் டிராகன்ஸ் அணியினர் முடிசூடியுள்ளனர். இந்த பருவகாலத்திற்கான ப…

  13. கிரஹாம் போர்ட் மற்றும் சங்கக்கார எவ்வாறு இலங்கை கிரிக்கெட் சபையினால் இழிவுபடுத்தப்பட்டனர்? ஒரு கிரிக்கெட் வீரராக ஆஷஸ் கிரிக்கெட் தொடர் மற்றும் உலகக் கிண்ணத்தை கைப்பற்றி பின்னர் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களாக மாறிய விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரே கிரிக்கெட் உலகில் காணப்படுகின்றனர். அந்த வகையில் பயிற்றுவிப்பாளர்களாக உருவெடுத்த இரு கிரிக்கெட் வீரர்களில் டேரன் லீமன் மற்றும் ஜெஃப் மார்ஷ் காணப்படுகின்றனர். அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய ஜெஃப் மார்ஷை எவ்விதமான பாரபட்சமின்றி 2012ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் சபையானது பணிநீக்கம் செய்திருந்தது. 2011ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கான சுற்றுப்ப…

  14. மோசடியால் வாய்ப்புப் பெற்றதா கட்டார்? 2022ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை நடாத்தும் வாய்ப்பை, மோசடி செய்து கட்டார் பெற்றது என்று கூறப்படுவது தொடர்பான அறிக்கையை, ஜேர்மனியப் பத்திரிகையான பில்ட் பிரசுரித்துள்ளது. சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நன்னெறிக் கோவை மீறல் முன்னாள் விசாரணையாளரான மைக்கல் கர்சியாவின் 2014ஆம் ஆண்டு அறிக்கையையே தாம் பெற்றதாக, பில்ட் தெரிவித்துள்ளது. பிரசுரிக்கப்பட்ட அறிக்கையில், சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன அதிகாரி ஒருவரின் 10 வயது மகளுக்கு, இரண்டு மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டன என்று கூறப்பட்ட விவரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கட்டாருக்…

  15. என்னை விட்டுவிடுங்கள்: செரினா உலகில் தோன்றிய மிகச்சிறந்த டென்னிஸ் வீரர்களுள் ஒருவராகக் கருதப்படும் செரினா வில்லியம்ஸ், ஆண்களுக்கான போட்டியில் பங்குபற்றினால், 700ஆவது இடத்துக்கு அருகிலேயே தரப்படுத்தப்பட்டிருப்பார் என, டென்னிஸ் ஜாம்பவானான ஜோன் மக்என்ரோ தெரிவித்த கருத்துகளுக்கு, செரினா, பதிலளித்துள்ளார். கிரான்ட் ஸ்லாம் போட்டிகளில், ஒற்றையர் பிரிவில் 7 பட்டங்களையும் இரட்டையர் பிரிவில் 9 பட்டங்களையும் வென்றவராவார். இந்நிலையில், தனது புதிய புத்தகத்தைப் பிரபல்யப்படுத்துவதற்காக, வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட ஜோன், செரினாவை, “சிறந்த பெண் வீரர். எந்தவிதக் கேள்வியும் இல்லை” என்று குறிப்பிட்டார். ஆனால்…

  16. இலங்கை அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் ? 3 பேரிடம் பேச்சுவார்த்தை இலங்­கை அணியின் புதிய பயிற்­சி­யா­ள­ர் நியமனம் தொடர்பில் மூன்று பேரிடம் பேச்­சு­வார்த்தை நடத்தப்பட்டு வரு­வ­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. அதன்­படி பங்­க­ளாதேஷ் பயிற்­சி­யா­ள­ரான இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­க­வி­டமும், நியூ­ஸி­லாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டீபன் பிள­மிங்­கு­டனும், அவுஸ்­தி­ரே­லிய வீரர் டொம் மூடி­யுடனும் பேச்­சு­வார்த்தை நடை­பெ­று­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் இம்­மாத இறு­தியில் சிம்­பாப்வே அணி­யு­ட­னான 5 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொட­ரிலும் ஒரே­யொரு டெஸ்ட் போட்­டி­யிலும் இலங்கை அணி விளை­யா­…

  17. சந்திமல், திஸர வெளியே : அகில தனஞ்சய உள்ளே , மலிங்க விளையாடுகிறார் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் சிம்பாப்வே அணிக்கெதிராக முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ள இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதியும் 2 ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 2 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது. இதேவ…

  18. டி.ஆர்.எஸ் முதல் ட்ரோன் அனாலிசஸ் வரை... இது ‘டெக்னாலஜி’ கிரிக்கெட்! ஆறிலிருந்து அறுபது வரை மட்டுமல்ல, தள்ளாடும் தாத்தாக்கள் வரை கிரிக்கெட் பார்க்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். உலக கிரிக்கெட் அரங்கிலேயே மிகவும் செல்வாக்குடைய, மிகுந்த செல்வம் கொழிக்கும் கிரிக்கெட் போர்டு இந்தியாவினுடையது என்றால் அதற்கு இந்திய ரசிகர்கள் தரும் பேராதரவு தான் காரணம். ஆனால் பெரும்பாலும் கிரிக்கெட்டில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது வீரர்களின் ஆட்டத்திறன் மட்டுமல்ல, நடுவர்கள் தரும் தீர்ப்புகளும் தான் என்றால் மறுப்பதற்கில்லை. நடுவர்கள் தரும் தவறான தீர்ப்புகள் பலமுறை ஆட்டத்தின் முடிவையே மாற்றி இருக்கின்றது! இது இயல்புதான் என்றாலும், இந்த தவிர்க்க முடியாத மனிதப் பிழைகளை சரிக்க…

  19. விளையாட்டுத்துறை அமைச்சரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த லசித் மலிங்க Tamil விளையாட்டுத்துறை அமைச்சரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த லசித் மலிங்க கடந்த ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண குழு மட்ட போட்டிகளில் அரை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் தீர்மானமிக்க போட்டியில் இலங்கை அணி மிகவும் மோசமான முறையில் தோல்வியடைந்து சம்பியன்ஸ் கிண்ண தொடரிலிருந்து வெளியேறியிருந்தமை குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகற அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணி பலவீனமான அணி என்றும், அணியின் வீரர்களை வலுவான வீரர்களாக உருவாக்குவத…

  20. எதிர்காலம் குறித்து ஆகஸ்ட் மாதம் முடிவு: 360 டிகிரி சொல்கிறார் கிரிக்கெட்டில் தன்னுடைய எதிர்காலம் குறித்து ஆகஸ்ட் மாதம் முடிவு செய்வேன் என்று தென்ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். தென்ஆப்பிரிக்க அணியின் முன்னணி பேட்ஸ்மேனும், ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் திகழ்ந்து வருபவர் ஏபி டி வில்லியர்ஸ். மைதானத்தின் எந்த திசைக்கும் பந்தை பறக்கவிடும் திறமை படைத்தவராக திகழ்வதால், இவரை 360 டிகிரி என்று அழைக்கிறார்கள். வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது இவருக்கு காயம் ஏற்பட்டது. அதன்பின் நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடாமல் இருந்த டி வில்லியர்ஸ…

  21. இந்திய வீரர்களுக்கு விருந்து அளித்து உபசரித்த வெயின் பிராவோ ஐ.பி.எல். தொடரில் நட்சத்திர வீரராக திகழ்ந்து வரும் வெயின் பிராவோ, இந்திய அணிக்கு விருந்து அளித்து உபசரித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடியதை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும்போது அவருக்கு உலகளாவிய புகழ் கிடைத்தது. டோனியின் தலைமையின் கீழ் அவர் மிகவும் ரசித்து கிரிக்கெட் விளையாடினார். டோனி, ரெய்னா, ஜடேஜா மற்றும் இந்திய வீரர்களை தனது சகோதரர்கள் போல்தான் நினைத்து வருகிறார். இந்திய அணி ஐந்து ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 கிர…

  22. தவறுதலாக சாம்பியன்ஸ் டிராபி ஜெர்சியுடன் களம் இறங்கிய யுவராஜ் சிங் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 2-வது போட்டியின்போது யுவராஜ் சிங் தவறுதலாக சாம்பியன்ஸ் டிராபி ஜெர்சியுடன் பேட்டிங் செய்ய களம் இறங்கினார். இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடர் முடிந்த பிறகு இந்திய அணி, ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரேயொரு டி20 கிரிக்கெட் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. முதல் போட்டி மழையினால் கைவிடப்பட்டது. 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 105 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற…

  23. இலங்கைக்கு பயிற்சியளிக்க இப்போதைக்கு மஹேலவுக்கு முடியாது இலங்கை அணிக்கு பயிற்­சி­ய­ளிப்­ப­தற்கு மஹே­ல ஜயவர்தனவால் தற்­போ­தைக்கு முடி­யாது என்றும், தேசிய அணி­யொன்றுக்கு பயிற்­சி­யா­ள­ரா­வ­தற்கு அவ­ருக்கு வயது போதாது என்றும் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனத்தின் தலைவர் திலங்க சும­தி­பால தெரி­வித்­துள்ளார். அதேபோல் அவ­ருடன் விளை­ய­டிய வீரர்கள் இன்னும் இலங்கை அணியில் விளை­யாடி வரு­வதால் அவரை உட­ன­டி­யாக பயிற்சியாள­ராக்க முடி­யாது. அதற்கு இன்னும் சில காலம் செல்ல வேண் டும் என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்­சி­யா­ள­ராக இருந்த தென்­னா­பி­ரிக்­காவை சேர்ந்த கிரஹம் போர்ட் அந்த பொறுப்­பி­லி­ருந்து நேற்­று­ம…

  24. கடைசி 20 ஓவர் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரையும் கைப்பற்றியது. கார்டிப்: தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கார்டிப்பில் நேற்று நடந்தது. இங்கிலாந்து அணியில் கேப்டன் மோர்கன் திடீரென தானாகவே ஒதுங்கிக் கொண்டதால், ஜோஸ் பட்லர்…

  25. இலங்கைக்கு வருகிறார் ஹத்துருசிங்க? இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுநராகப் பதவியேற்பது குறித்து, பங்களாதேஷ் அணியின் பயிற்றுநரும் இலங்கை அணியின் முன்னாள் வீரருமான சந்திக்க ஹத்துருசிங்கவுடன், இலங்கை கிரிக்கெட் சபை, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அணியின் பயிற்றுநராக இதுவரை பதவிவகித்த கிரஹம் ஃபோர்ட், தனது பதவியிலிருந்து விலகுவதாக, நேற்று முன்தினம், உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். எனினும் அதற்கு முன்னரே, அவர் பதவியிலிருந்து விலகுவார் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இடைக்காலப் பயிற்றுநராக, தற்போது களத்தடுப்புப் பயிற்றுநராக இருக்கும் நிக் போதாஸ் பதவியேற்றுள்ளார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.