Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பார்சிலோனாவிற்காக 100 கோல்கள் அடித்து நெய்மர் அசத்தல் பிரேசில் நாட்டின் கால்பந்து அணியின் கேப்டனான நெய்மர் பார்சிலோனா அணிக்காக தனது 100-வது கோலை பதிவு செய்துள்ளார். பிரேசில் நாட்டின் கால்பந்து அணியின் கேப்டனான நெய்மர் பார்சிலோனா அணிக்காக தனது 100-வது கோலை பதிவு செய்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் மிகப்பெரிய தொடர் லா லிகா கால்பந்து தொடர். இதில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் ஆகியவை தலைசிறந்த அணிகள். பார்சிலோனா அணியில் மெஸ்சி, சுவாரஸ், நெய்மர் ஆகிய மூன்று தலைசிறந்த வீ…

  2. தமிழக கிரிக்கெட்டில் சாதி... அஷ்வின் சர்ச்சை ட்வீட்! அஷ்வின் ரவிச்சந்திரன் தமிழகத்தின் பெருமை. டெஸ்ட் உலக அரங்கில் நம்பர் 1 இடம் பிடித்த இந்திய பவுலர். தற்போது ஜடேஜாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார். பல காலம் தொடர்ந்து ஆல்ரவுண்டர் வரிசையிலும் அஷ்வின் தான் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்தவர். கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை முறியடித்தும், புதிய பல சாதனைகளையும் படைத்து வருகிறார் அஷ்வின். ஐசிசி, பிசிசிஐ என பல தரப்பிடம் இருந்தும் இப்போது விருதுகளாக குவிந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனில் அஷ்வின் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்திருக்கிறது. காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். ஜூன் மாதம் நடக்கும் ச…

  3. இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் அதிகாரிகளை ஜனாதிபதி சந்தித்தார் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரிய, இலங்கை அணியின் முன்னாள் வீரர் களுவிதாரண, இலங்கை அணியின் பிரதம பயிற்றுவிப்பாளர் கிரஹம் போர்ட் மற்றும் இலங்கை அணி வீரர்கள் கலந்துகொண்டனர். இதேவேளை, ஆசிய கிரிக்கெட் கவுன்ஸிலின் தலைவர் சஹ…

  4. மஸ்ரபீ முர்தஷாவுக்கு போட்டித் தடை விதித்தது ஐ.சி.சி! பங்களாதேஷ் அணியின் தலைவர் மஸ்ரபீ முர்தஷாவுக்கு ஒருநாள் போட்டியொன்றில் விளையாட ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. இலங்கை அணிக்கெதிரான இறுதி ஒருநாள் போட்டியின் போது, பந்துவீசுவதற்கு வழங்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டமைக்காகவே குறித்த போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவரது போட்டிக் கட்டணத்தில் 40 சதவீதம் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதுடன், ஏனைய வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் தண்டமாக அறவிடப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கெதிரான இறுதி ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 70 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk…

  5. சென். நிக்கலஸ், பாடும்மீன், கல்முனை பிறில்லியன்ட் அணிகள் அடுத்த சுற்றுக்குள் FA கிண்ண சுற்றுத் தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டிக்காக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மூன்று போட்டிகளின் முடிவுகளின்படி யாழ் அணிகளான நாவாந்துறை சென். நிக்கலஸ், குருநகர் பாடும்மீன் மற்றும் கல்முனை பிறில்லியன்ட் ஆகிய அணிகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன. நாவாந்துறை சென். நிக்கலஸ் எதிர் வென்னப்புவ அல் ஹிரா நாவாந்துறை சென். நிக்கலஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் வென்னப்புவா அல் ஹிரா கால்பந்துக் கழகம் என்பவற்றுக்கு இடையிலான போட்டி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றது. ஆட்டத்தில் ஹிரா வீரர்களின்…

  6. பங்களாதேஷ் உடனான T20 தொடரலிருந்தும் அஞ்சலோ மெதிவ்ஸ் வெளியேற்றம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவிருக்கும் T-20 தொடரில் கெண்டைக்கால் உபாதை காரணமாக, இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் இடம்பெறமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமையாளர் அசங்க குருசிங்க நேற்று உறுதிப்படுத்தியுள்ளார். “நடைபெறவிருக்கும் முதலாவது T-20 போட்டியில் நிச்சயமாக மெதிவ்ஸ் இடம்பெறமாட்டார். இதே நிலைமை இரண்டாவது போட்டியிலும் தொடரும். அவர் இத்தொடரில் இடம்பெறாதது மிகவும் ஏமாற்றமாகவுள்ளது. மேலும் மீண்டும் பூரண குணமடைவதற்காக அவர் கடினமாக போராடவேண்டியுள்ளது. அவரது பிற்தொடை தசை குணமடைந்து இருப்பினும் வலது கெண்டைக்கால் …

  7. சென். மேரிஸின் கோல் மழையில் நனைந்தது துரையப்பா அரங்கு சென். மேரிஸின் கோல் மழையில் நனைந்தது துரையப்பா அரங்கு 2016/17 பருவகாலத்திற்கான FA கிண்ண சுற்றுப் போட்டியின் இறுதி 32 அணிகளுக்கிடையிலான போட்டியில், புத்தளம் விம்பிள்டன் அணியை 12-0 என்ற கோல்கள் கணக்கில் அபாரமாக வெற்றி கொண்ட சென்.மேரிஸ் அணி தமது ஆரதவாளர்களின் பெரும் மகிழ்ச்சிக்கு மத்தியில் தொடரின் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியில் தமது கடந்த போட்டியில் மன்னார் ஹில்லரி அணியை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட புத்…

  8. மொனாகோவை வீழ்த்தி தொடர்ந்து 4-வது முறையாக சாம்பியன் ஆனது பி.எஸ்.ஜி. பிரான்ஸ் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான லீக் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் மொனாகோவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பி.எஸ்.ஜி. பிரான்ஸ் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் தொடர் லீக் 1. இந்த தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியும், மொனாகோ அணியும் பலப்பரீட்சை நடத்தின. …

    • 1 reply
    • 370 views
  9. இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: வங்காள தேச அணியில் புதுமுக ஆல்ரவுண்டர் சேர்ப்பு இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான வங்காள தேச அணியில் புதுமுக ஆல்ரவுண்டர் மொகமது சாய்புதின் சேர்க்கப்பட்டுள்ளார். வங்காள தேச அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளைாடி வருகிறது. இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்கள் முடிந்துள்ள நிலையில், இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி 4-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 6-ந்தேதி நடக்கிறது. இந்த தொடருக்கான வங்காள தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 வயதான வே…

  10. பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருபது 20 போட்டி : இலங்கை அணியிலா, மும்மை அணியிலா விளையாடுவேன் : மாலிங்க அதிரடி தீர்மானம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இருபது 20 போட்டித் தொடர் எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களை பங்களாதேஷ் அணி சமநிலைப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருபது 20 போட்டித் தொடர் இலங்கை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டித் தொடரும் எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பமாகின்றது. 6 ஆம் திகதி நடைபெற உள்ள போட்டியில் மும்மை அணி சுப்பர்ஜிகான்ட் அணியை எதிர்கொள்ள உள்ளது. …

  11. லிவிஸ் அதிரடி : பாகிஸ்தானை வீழ்த்தியது மே. தீவுகள் (காணொளி இணைப்பு) பாகிஸ்தான் அணிக்கெதிரான 3 ஆவது இருபதுக்கு-20 போட்டியில் மே.தீவுகள் அணி 7 விக்கட்டுகள் மற்றும் 31 பந்துகளினால் அபார வெற்றிபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் கம்ரன் அக்மல் 48 ஓட்டங்களையும், பாபர் அஷாம் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இந்நிலையில் 138 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி 14.5 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது. மே.தீவுகள் அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய இவைன் லிவிஸ் 51 பந்துகளில…

  12. பங்களாதேஷூடனான ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணிக்கு உபுல் தரங்க தலைவர் பங்களாதேஷூடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 25 ஆம் திகதி இச்சுற்றுப்போட்டி ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக் குழாம் விபரம்: உபுல் தரங்க (அணித்தலைவர்), நிரோஷன் டிக்வெல்ல, தனஞ்செய டி சில்வா, குசல் மெண்டிஸ், அசேல குணரட், தினேஷ் சந்திமால், குசல் ஜனித் பெரேரா, தனுஷ்க குணதிலக்க, சுரங்க லக்மல், லஹிரு குமார, விக்கும் சஞ்சய பண்டார, திசேர பெரேரா, சச்சின் பத்திரண, சீக்குகே பிரசன்ன, லக்ஷான் சந்தக்கன் http://metronews.lk/?p=3721

  13. மீண்டும் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கும்: என்.சீனிவாசன் நம்பிக்கை கோப்புப் படம்.| ஆர்.ரகு. சென்னை விளம்பர கிளப் நடத்திய விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் பிசிசிஐ தலைவர், என்.சீனிவாசன், மீண்டும் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2013 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நிகழ்ந்த கடும் ஊழல் புகார்கள் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதிகப்பட்டுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய என்.சீனிவாசன் கூறியதாவது: அப்போது ஐபிஎல் சேர்மனாக இருந்த லலித் மோடி இந்திய சிமெண்ட்ஸ் அணியை வாங்கி ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்க அழைப்ப…

  14. மியாமி டென்னிஸ்: ஹிங்கிஸ் இணையை வென்று இறுதிச்சுற்றில் சானியா இணை! மியாமி ஓப்பன் டென்னிஸ் போட்டியில்... மகளிருக்கான இரட்டையர் பிரிவில், சானியா- ஸ்ட்ரைகோவா இணை, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரில் நடைபெற்றுவரும் மியாமி ஓப்பன் டென்னிஸ் தொடரில், மகளிர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா- செக் குடியரசின் ஸ்ட்ரைகோவா இணை, அரையிறுதிப் போட்டியில் சான்- ஹிங்கிஸ் இணையரை எதிர்த்து விளையாடியது. இதில், சானியா இணை முதல் செட்டை 6-7 எனத் தோற்றாலும், அடுத்தடுத்த செட்களில் 6-1, 10-4 என்ற கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. http://www.vikatan.com/news/sports/85103-sania-strycova-in-miami-fina…

  15. 2018-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முதல் அணியாக பிரேசில் தகுதி 2018-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை பந்தாடி முதல் அணியாக தகுதி பெற்றது சாவ்பாலோ: 32 அணிகள் இடையிலான 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2018) ஜூன்-ஜூலை மாதங்களில் ரஷியாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. தென்அமெரிக்க கண்டத்திற்கான தகுதி சுற்றில் 10 அணிகள் பங்கேற்று லீக்கில் மோதி வருகின்றன. இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக உலக கோப்பை…

  16. இலங்கை அணிக்கு தொடரும் ஏமாற்றம் : இருபதுக்கு-20 தொடரில் முக்கிய இரு வீரர்கள் இல்லை! இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல பங்களாதேஷ் அணிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரிலும் விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவித்துள்ளன. நிரோஷன் டிக்வெல்ல கையில், பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக இவர் பங்களாதேஷ் தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். இதேவேளை இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் விளையாடமாட்டார் எனவும், இரண்டாவது போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/18543

  17. “கோலியை ஸ்டம்பால் குத்த விரும்பினேன்”: ஆஸி. வீரர் வாக்குமூலம் “ஒரு முறை எனக்கு ஏற்பட்ட கோபத்தினால், களத்தில் இருந்த ஸ்டம்ப் ஒன்றைப் பிடுங்கி கோலியைக் குத்தவும் விரும்பினேன்” என்று கூறியுள்ளார் அவுஸ்திரேலிய முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் எட் கோவன். இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டிகளும், அதைச் சார்ந்து எழுந்த சர்ச்சைகளும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வரும் நிலையில், அதை மீண்டும் கிளப்பியுள்ளார் எட் கோவன். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியொன்றின்போது, தனக்கு ஏற்பட்ட கோபத்தினால் கோலியை ஸ்டம்ப்பால் குத்த விரும்பியதாகத் தெரிவித்தார். “ஒரு போட்டியின் நடுவே நான் கடுமையாக சுகவீனமுற்றேன். அப்போது என்னைப் பார்த்து ம…

  18. கிறிஸ்ரியானோ றொனால்டோவின் அதிசிறந்த 10 கோல்கள் (2016)

    • 0 replies
    • 396 views
  19. கிரிக்கெட் போட்டியில் மற்றுமொரு விபரீதம் : மைதானத்துக்குள் நுளைந்த அம்பூயலன்ஸ் : பாகிஸ்தான் வீரர் வைத்தியசாலையில்! (காணொளி இணைப்பு) பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற இருபதுக்கு-20 போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் எதிர்பாராத விதமாக போட்டியின் போது விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணியின் அஹமட் சேஷாட் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் செமியல்ஸ் ஆகியோர் மோதிக் கொண்டதில் சேஷாட்டின் கழுத்துப்பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டது. இதனால் மைதானத்துக்குள் அம்புயூலன் கொண்டுவரப்பட்டு, சேஷாட் வைத்தியசாலைக்…

  20. நான்கு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸி. அணி இந்தியா வந்தது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா அணி இன்று மும்பை வந்தடைந்துள்ளது. இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முடிவடைந்தது. அடுத்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் போட்டி வருகிற 23-ந்தேதி புனேயில் தொடங்குகிறது. இதற்காக ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி இன்று இந்தியா வந்துள்ளது. துபாயில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த அந்த அணி துபாயில் இருந்து மும்பை வந்தடைந்தது. பின்னர் …

  21. தோனியின் ஆதார் தகவல்கள் வெளியானது ஏன்? சட்ட அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய சாக்‌ஷி! மத்திய அரசின் முக்கிய அடையாள அட்டையாக ஆதார் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் மானியம் பெறுவதற்கும், ரேஷன் கடைகளில் பொருள்கள் பெறுவதற்கும் ஆதார் எண் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வரப்படுகிறது. வங்கிக் கணக்கு தொடங்குதல், புதிதாக பான் அட்டை பெற, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய எனப் பல்வேறு பணிகளுக்கு ஆதார் எண் தேவைப்படுகிறது. இந்நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், தன்னுடைய ட்விட்டர் தளத்தில் தோனி ஆத…

  22. உலக கால்பந்து தகுதி சுற்று: அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி தென்ஆப்பிரிக்கா கண்டத்தில் நடைபெற்று வரும் தகுதி சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினா- பொலிவியா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா 0-2 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது. 2018-ம் ஆண்டுக்கான உலககோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா கண்டத்தில் நடைபெற்று வரும் தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா- பொலிவியா அணிகள் மோதின. இதில் யாரும…

  23. மேட்ச் பிக்சிங் விவகாரம்: முகம்மது இர்பான் கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகம்மது இர்பான் கிரிக்கெட் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்துள்ளது. இஸ்லாமாபாத்: ஐபிஎல் பாணியில் பாகிஸ்தான் சூப்பர் லீக் என்னும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தால் துபாயில் கடந்த மாதம் நடத்தப்பட்டன. இந்த தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடிய முகம்மது இர்பானை சூதாட்ட தரகர்கள் அணுகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கிரிக்கெட் வாரியத்தில் ஊழல் தடுப்பு நடத்தை வ…

  24. மெஸ்ஸிக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடை! அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸியை, நான்கு போட்டிகளில் விளையாட பிஃபா தடை விதித்துள்ளது. கால்பந்து உலகக் கோப்பை அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இதற்கான தகுதிச் சுற்றுகள் நடந்து வருகிறது. இந்நிலையில், அர்ஜென்டினா, சிலி அணிகள் கடந்த வாரம் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் மோதின. இந்தப் போட்டியின்போது, அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்ஸிக்கும், போட்டி நடுவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து பிஃபா விசாரணை நடத்தியது. அப்போது, போட்டியின்போது துணை நடுவர் ஒருவரை மெஸ்ஸி மரியாதைக் குறைவாக பேசியது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு அடுத்து நடக்க உள்ள நான்கு உலகக் கோப்பை தகுதி போட்டிகளில் விளையாட பிஃபா தடை…

  25. சுழல்பந்து வீச்சை ஆதிக்கம் செலுத்தி வந்த இந்தியா தடுமாறுகிறதா? சிவக்குமார் உலகநாதன்பிபிசி தமிழ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை, 2-1 என இந்தியா வென்ற போதிலும், அனுபவம் இல்லாத ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியாதொடரில்ஆதிக்கம் செலுத்த தவறியதா ? அண்மைக் காலமாக இந்திய வீரர்கள் சுழல் பந்துவீச்சில் தடுமாறுகின்றனரா ? படத்தின் காப்புரிமைAP Image captionபூனே, பெங்களூரு போட்டிகளில் இந்திய வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய நேதன் லயன் மற்றும் ஸ்டீவ் ஓ கீஃப் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று செவ்வாய்கிழமை தரம்சாலாவில் முடிவடைந்த நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-1 என்ற கண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.