Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. தலைமைப் பதவியிலிருந்து விலகுகிறார் குக்? இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவரான அலஸ்டெயர் குக், இந்திய அணிக்கெதிராக இன்று ஆரம்பிக்கவுள்ள தொடருக்குப் பின்னர், அணித்தலைவர் பதவியிலிருந்து விலகலாம் என்ற சமிக்ஞைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 31 வயதான குக், இதுவரை 135 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 54 போட்டிகளில் தலைவராகச் செயற்பட்டுள்ளார். இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அலஸ்டெயர் குக், "ஆழ் மனதில், எவ்வளவு காலம் நான் நீடிப்பேன் என்பது எனக்குத் தெரியவில்லை. அது, இரண்டு மாதங்களாக இருக்கலாம், ஓராண்டாக இருக்கலாம்" என்று குறிப்பிட்டார். தனியே ஒரு துடுப்பாட்ட வீரராகப் போட்டிகளில் பங்குபற்றும் நாளை எதிர்பார்த்திருப்பத…

  2. பெர்த் மண்ணில் ஆஸ்திரேலியாவை புரட்டிப் போட்ட 21 வயது பவுலர்! டிவில்லியர்ஸ் இல்லை, ஸ்டெயினுக்கும் காயம், அணியின் நிலைமையோ மோசம். ஆனால் நாங்கள் மனம் தளர்ந்துவிட மாட்டோம் எனச் சொல்லி ஆஸ்திரேலியாவுடனான மேட்சை தலைகீழாக திருப்பிப்போட்டு ஜெயித்திருக்கிறது தென்னாப்பிரிக்கா. ஆஸ்திரேலியா நாட்டுக்கு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக வந்திருக்கிறது தென்னாப்பிரிக்க அணி. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில், கடந்த வியாழன் அன்று புகழ்பெற்ற பெர்த் மைதானத்தில் தொடங்கியது. எகிறும் பவுன்சர்கள், ஏகோபித்த ஆதரவுடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய வீரர்கள், ஆதரவுக்கு அற்புதமான பேட்ஸ்மேனும் இல்லை என்ற நிலையில் முதல் இன்னிங்ஸில் 32/4 என ஒடுங்கியது தென்னாபிரிக்கா. ம…

  3. அதிரடி வெற்றியுடன் முதலிடத்தில் லிவர்பூல் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (06), இடம்பெற்ற வட்போர்ட்டுடனான போட்டியில் வெற்றி பெற்ற லிவர்பூல், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்குச் சென்றுள்ளது. லிவர்பூல், வட்போர்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 6-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வெற்றி பெற்றது. போட்டி ஆரம்பித்தில் பல வாய்ப்புகளை லிவர்பூல் தவறவிட்டபோதும் போட்டியின் 27ஆவது நிமிடத்தில், முதலாவது கோலினை, அபாரமாகத் தலையால் முட்டி சாடியோ மனே பெற்றார். அடுத்த மூன்று நிமிடங்களில், 20 யார் தூரத்திலிருந்து கோலைப் பெற்ற பிலிப்பே கூத்தின்யோ, 2-0 என்ற கோல் கண…

  4. 15 வயது பெண்கள் சமபோஷ உதைபந்தாட்டம் தெல்லிப்பளை மகாஜன இரண்டாமிடம் இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தால் சமபோஷா கிண்ணத்திற்காக 15 வயது பெண்கள் அணிகளுக்கிடையே தேசியமட்டத்தில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டத் தொடரில் யா/மகாஜனக் கல்லூரி இரண்டாமிடம் பெற்றுள்ளது. சிலாபம் வென்னப்பு அல்பேர்ட் பீரிஸ் விளையாட்டு அரங்கில் இன்று(07.11.2016) நடைபெற்ற இறுதிப்போட்டியில் குருநாகல்/ நிக்கம்பிட்டிய வித்தியாலயத்தை எதிர்கொண்டது மகாஜனா. இதில் 1:0 என்ற கோல் கணக்கில் நிக்கம்பிட்டிய வித்தியாலயம் வெற்றிபெற, மகாஜன இர ண்டாமிடத்தை பெற்றது. http://www.onlineuthayan.com/news/19855

  5. நெதர்லாந்து கால்பந்து வீரர் ராபின் வேன் பெர்ஸி கண்ணில் காயம் (வீடியோ) ராபின் வேன் பெர்ஸி நினைவிருக்கிறதா? பிரேசில் நாட்டில் 2014ல் நடந்த உலக கோப்பையில் ஸ்பெயின் அணிக்கு எதிராக அந்தரத்தில் பறந்து தலையால் முட்டி கோல் அடித்தாரே... யார் கண் பட்டதோ இப்போது அவர் கண்ணுக்கு சிக்கல். மான்செஸ்டர், ஆர்சனல் கிளப்களின் முன்னாள் வீரரான ராபின் தற்போது, துருக்கியில் உள்ள பெனர்பேஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் போட்டியின்போது பெனர்பேஸ் - அகிசர் அணிகள் மோதின. பெனர்பேஸ் அணியின் முதல் கோலை ராபின் அடித்தார். ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில், பெனால்டி பாக்ஸில் வைத்து அகிசர் அண…

  6. அரை இறுதியில் இளவாலை புனித ஹென்றியரசர் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொத்மலை கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் அரை இறுதியில் விளையாடுவதற்கு யாழ். மாவட்டத்திலிருந்து இரண்டாவது அணியாக இளவாலை புனித ஹென்றியரசர் அணி தகுதிபெற்றுள்ளது. சிட்டி லீக் மைதானத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா அணிக்கு எதிரான மூன்றாவது கால் இறுதிப் போட்டியில் 2 ; 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றதன் மூலம் புனித ஹென்றியரசர் அணி அரை இறுதிக்குள் பிரவேசித்தது. இப் போட்டியின் முதலாவது பகுதியில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய புனித ஹென்றியரசர் கல்லூரி அணியினர் 9ஆவது நிம…

  7. சச்சின், ஜெயசூர்யா, பாண்டிங்கைவிட கோஹ்லி பெஸ்ட். இதோ ஆதாரம்..! #WhyKohliIsBest? #HBDKohli கோஹ்லி இதுவரை 168 இன்னிங்ஸ்கள் விளையாடி இருக்கிறார். அவரோடு ஒப்பிடும் போது சச்சின், ஜெயசூர்யா, பாண்டிங் ஆகியோர் முதல் 168 இன்னிங்ஸ் வரை எந்தளவுக்கு சாதனைகள் படைத்திருக்கிறார்கள் என்பதை அலசும் கட்டுரை இது. தலைமுறைகள் கடந்த ஒரு வீரரை, இன்னொரு வீரரின் ஆட்டத்தோடு ஒப்பிடுவது சரியில்ல. பிட்ச், வீரர்கள், காலநிலை, எதிரணியின் நிலை, தான் சார்ந்தஅணியின் சூழ்நிலை, பயம், பதற்றம், மேட்சின் நிலை, விக்கெட் வீழ்ச்சி, எதிரே நிற்கும் வீரர், ஆகியவற்றை பொருத்து ஒரு வீரரின் ஆட்டமுறை வேறுபடும்.தவிர, கிரிக்கெட்டில் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஆட்டபாணியில் பெரியளவிலான மாற்றங்கள் நடந்து வரு…

  8. பிரிட்டிஷ் டென்னிஸ் வீரர் ஆண்டி மர்ரீ தரவரிசை பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியிலிருந்து மிலோஸ் ரவோனிக் விலகியதைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் டென்னிஸ் சாம்பியன் ஆண்டி மர்ரீ ஆண்கள் பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். கோப்புப்படம் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அரையிறுதி ஆட்டத்திலிருந்து மிலோஸ் ரவோனிக் விலகினார். இதன் காரணமாக, தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பதற்கு மர்ரீக்கு தேவைப்பட்ட வெற்றி கிடைத்தது. கடந்த திங்களன்று, புதிய பட்டியல் வெளியான போது, உலகத் தரவரிசையில் முதல் இடத்திலிருந்த நோவாக் ஜோகோவிச்சை ஆண்டி மர்ரீ முந்தியுள்ளார். 1973 ஆம் ஆண்டிலிருந்து கணினிமயமாக்கப்பட்ட தர…

  9. சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் தலைவராக உபுல் தரங்க சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடருக்கான இலங்கைக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருநாள் அணியின் தலைவராக உபுல் தரங்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை அணியின் உபத் தலைவராக குசால் ஜனித் பெரேரா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஒருநாள் தொடருக்கான இலங்கைக்குழாம் இதோ... 1. தனஞ்சய டி சில்வா 2. குசல் ஜனித் பெரேரா (உபத் தலைவர்) 3. நிரோஷன் டிக்வெல்ல 4. உபுல் தரங்க (தலைவர்) 5.குசால் மெண்டிஸ் 6. செஹான் ஜயசூரிய 7. அசேல குணவர்தன 8. சசித்ர பத்திரன 9. நுவான் குலசேகர …

  10. துணைக்கண்ட சரிவுகளின் மனத்தழும்புகள் ஆஸி. வீரர்களிடமிருந்து அகலவில்லை: மைக்கேல் கிளார்க் கருத்து மைக்கேல் கிளார்க். | படம்: ஏ.எப்.பி. ஆஸ்திரேலியாவுக்கு வெளியே ஆடும் போது பேட்டிங்கில் ஏற்பட்ட திடீர் சரிவுகள், தொடர்ச்சியாக ஆட்டமிழப்பதன் மனத்தழும்புகள் இன்னமும் ஆஸ்திரேலிய வீரர்கள் மனதை விட்டு அகலவில்லை என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். பெர்த் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 158/0 என்ற நிலையிலிருந்து அடுத்த 10 விக்கெட்டுகளை 86 ரன்களுக்கு இழந்து திடீர் சரிவு ஏற்பட்டதற்கு இந்தக் காரணத்தை மைக்கேல் கிளார்க் முன்வைத்துள்ளார். அதாவது 2013-ம் ஆண்டு இந்திய தொடர் முதல் சமீபத்த…

  11. கோலியின் ரன்னிங்... தோனி ஸ்டெம்பிங்... இந்த 19 பேர் இல்லாமல் பார்க்க முடியாது! ஆஸ்திரேலியால மேட்ச் நடந்தா 5 மணிக்கு அலாரம் வைச்சு எழுந்து மேட்ச் பாக்கணும், வெஸ்ட் இண்டீஸ் மேட்ச்சுக்கு நைட்டு 12 மணி வரைக்கும் கண்னு முழிச்சு மேட்ச் பாக்கணுனு லைவ் கிரிக்கெட் பாக்குற வெறித்தனமான கிரிக்கெட் ஃபேனா நீங்க. அந்த லைவ் எப்படி நடக்குதுனு தெரியுமா? எத்தனை கேமரா சுத்தி சுத்தி படமெடுக்குது தெரியுமா? ஒரு லைவ் மேட்சைகூட செய்ய மொத்தமா 29 கேமராக்கள் தேவை. அதில் 19 கேமராக்களை மனிதர்களும் 10 தானியங்கி கேமராக்களும் இயங்கும். ஒவ்வோரு கேமராவும் டைரக்டரின் கட்டளைக்கு ஏற்றவாறு இயங்கும் ஒவ்வோரு கேமராக்கும் ஒரு சிறப்பு பணி உள்ளது. உதாரணமாக சட் ஸ்க்ரீனுக்கு எதிராக உள்ள கேமர…

  12. தரப்படுத்தலில் மீண்டும் முன்னேறிய ஹேரத் இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் டெஸ்ட் பந்துவீச்சாளர் தரப்படுத்தலில் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளார். ஐ.சி.சி. நேற்று வெளியிட்ட டெஸ்ட் தரப்படுத்தலில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரப்படுத்தலில் முதலாம் இடத்தை இந்திய அணியின் அஸ்வின் பிடித்துள்ள நிலையில், இரண்டாம் இடத்தை தென்னாபிரிக்காவின் டேல் ஸ்டெயினும், மூன்றாம் இடத்தை இங்கிலாந்தின் ஜேம்.என்டர்ஸனும் பிடித்துள்ளனர். http://www.virakesari.lk/article/13183

  13. பங்களாதேஷ் பிரீமியர் லீக் – முதல் நாள் மழையால் கழுவப்பட்டது பங்களாதேஷ் பிரீமியர் லீக் – முதல் நாள் மழையால் கழுவப்பட்டது. இந்தாண்டுக்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டித் தொடரின் முதல் நாள் போட்டிகள் மழையால் கழுவப்பட்டது. இன்று ஆரம்பமான இந்தப் போட்டிகளில் இலங்கையின் சங்ககார, மஹேல உள்ளிட்ட 11 பேர்பங்கெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது. http://vilaiyattu_com.apache5.cloudsector.net/en/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%af%8…

  14. சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார் ரோஹித் சர்மா: ஆஸி.க்கு எதிரான தொடருக்கும் சந்தேகம் ரோஹித் சர்மா. | படம்: அகிலேஷ் குமார். தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொள்ள லண்டன் செல்லும் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. நியூஸிலாந்துக்கு எதிரான வைசாக் ஒருநாள் போட்டியில் காயமடைந்தார் ரோஹித் சர்மா. இந்நிலையில் லண்டனுக்குச் சிகிச்சைக்குச் செல்வதால் பிப்ரவரி 23-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடங்கும் டெஸ்ட் தொடருக்கும் ரோஹித் திரும்புவது கடினம் என்று தெரிகிறது. இது குறித்து பிசிசிஐ செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரோஹித் சர்மா அடுத்த வாரம் லண்டன் செல்கிறார், அங்…

  15. பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் 3 வது டெஸ்ட் -வெற்றியின் விளிம்பில் மேற்கிந்திய தீவுகள். பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் 3 வது டெஸ்ட் -வெற்றியின் விளிம்பில் மேற்கிந்திய தீவுகள். பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3 வதும் இறுதியான போட்டி இடம்பெற்று வருகின்றது. இந்தப் போட்டியின் இன்றைய 4 ம் நாள் நிறைவில் மிக திறமையாக விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியின் விளிம்பில் காத்திருக்கின்றது. தங்களது 2 வது இன்னிங்சில் ஆடிய பாகிஸ்தான், இன்றைய நாளில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 281 ஓட்டங்களையும், மே…

  16. பொப்பிக்கு தடை ; கோபத்தில் பிரிட்டன் முதலாம் உலகப்போரின் நிறுத்த நாளான ஆர்மிஸ்டஸ் தினம் அடுத்த வாரம் நெருங்கும் நிலையில் இங்கிலாந்து, மற்றும் ஸ்காட்லாந்து கால்பந்து அணிகள் பொப்பி சின்னத்தை அணிவதற்கு தடை விதித்ததை அடுத்து, உலக கால்பந்து கட்டுப்பாட்டு அமைப்பான ஃபிஃபாவை பிரிட்டிஷ் பிரதமர் மிகுந்த கோபத்துடன் தாக்கிப் பேசியுள்ளார். இந்த முடிவு முற்றிலும் அநியாயமானது என்று பிரதமர் தெரேஸா மே பேசியுள்ளார். கால்பந்து அணிகளின் ஆடைகளில் அரசியல் சின்னங்களை அனுமதிக்க முடியாது என்று ஃபிஃபா கூறுகின்றது. ஆனால், இந்த தடையை தாம் எதிர்ப்போம் என்று இங்கிலாந்து கால்பந்து அமைப்பு கூறுகின்றது. http://www.bbc.com/tamil/global-37864187

  17. ஆட்டமிழக்காத உறுதி: புதிய சாதனை ஒன்றை உருவாக்கிய கிரெய்க் பிராத்வெய்ட் ஷார்ஜா டெஸ்ட் நாயகன் கிரெய்க் பிராத்வெய்ட் பரிசு பெறும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி. ஷார்ஜா டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றியில் 142 மற்றும் 60 நாட் அவுட் என்று 2 நாட் அவுட்கள் மூலம் தொடக்க வீரர் கிரெய்க் பிராத்வெய்ட் புதிய சாதனை ஒன்றை உருவாக்கியுள்ளார். அதாவது ஒரு தொடக்க வீரர் ஒரு டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் ஆட்டமிழக்காமல் இருக்கும் சாதனை ஒன்றை முதன் முதலாக உருவாக்கியுள்ளார் மே.இ.தீவுகளின் தொடக்க வீரர் கிரெய்க் பிராத்வெய்ட். ஷார்ஜா வெற்றியில் முதல் இன்னிங்சில் 142 ரன்கள் என்று தொடக்கத்தில் இறங்கி அணி ஆல் அவுட் ஆன போதும் ஒரு முனையில் நாட் …

  18. சகோதரனை நினைத்து கண்ணீர் சிந்திய மஹேல (காணொளி இணைப்பு) இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன இறந்துபோன தனது சகோதரனை நினைத்து கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. காலி காராப்பிட்டி வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவை ஸ்தாபிக்கும் நோக்குடன் (TRAIL WALK ) நடைபவனி இடம்பெற்று வந்தது. இதன் நிறைவு நாளான நேற்று காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் குறித்த புற்றுநோய் சிகிச்சைப்பிரிவுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மேடையில் அமர்ந்திருந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் குறித்த நிதி சேகரிப்பு அறக்கட்டளை அமைப்பின் தூதுவருமான மஹேல ஜெ…

  19. திரிமான்னவுக்கு ஓய்வு வழங்க வேண்டும் ; அவிஷ்க குணவர்தன இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்னவுக்கு சில வாரங்களுக்கு ஓய்வளிக்கப்பட வேண்டுமென இல்ஙகை ஏ அணியின் பயிற்றுவிப்பாளர் அவிஷ்க குணவர்தன தெரிவித்துள்ளார். திரிமான்ன சிறந்த துடுப்பாட்ட வீரர். எனினும் அவரது துடுப்பாட்டம் கடந்த சில நாட்களாக சற்று சரிவை சந்தித்துள்ளது. இதனால் அவருக்கு சில வாரங்களுக்கு ஓய்வளித்தால் மீண்டும் அவர் எழுச்சியடைய வாய்ப்புள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கெதிராக விளையாடிய நான்கு நாள் டெஸ்ட் போட்டியில், ஆறு இன்னிங்ஸ்கள் விளையாடிய திரிமான்னவின் 9.83 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறான மோசமான துடு…

  20. தோற்ற பிறகு மான்செஸ்டர் சிட்டி அணி வீரரிடம் நிதானம் இழந்த ‘லயன்’ மெஸ்ஸி தோல்வி அதிர்ச்சியில் பார்சிலோனாவின் ஜேவியர் மஸ்சரானோ, லயோனல் மெஸ்ஸி, நெய்மர். | படம்: ஏ.எஃப்.பி. மான்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவிய பிறகு மெஸ்ஸி மான்செஸ்டர் சிட்டி வீரர் ஒருவருடன் மோதல் மேற்கொண்டதாக ஸ்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெஸ்ஸி, பிரேசில் நட்சத்திரம் நெய்மர் ஆகியோர் இருந்தும் மான்செஸ்டர் சிட்டி அணியிடம் பார்சிலோனா தோல்வி தழுவியது குறிப்பிடத்தக்கது. ஸ்பானிய செய்தித் தாள்களான ‘முண்டோ டிபோர்டிவோ’ மற்றும் மார்கா ஆகியவை தனது செய்தியில் பார்சிலோனா அணிக்…

  21. இலங்கை முதலில் துடுப்பாட்டம் இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகின்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது. இந்தப் போட்டி ஹராரே நகரில் இன்று நடைபெறுகிறது. குறித்த போட்டியில் இலங்கை அணியின் புதிய தலைவராக ரங்கன ஹேரத் செயற்படுகின்றார். http://tamil.adaderana.lk/news.php?nid=84871

  22. 'தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கினால் ஆபத்து!' - கேரி கிறிஸ்டன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை நம்பர் -1 அணியாக மாற்றி விட்டார் விராட் கோஹ்லி. அவரிடேமே ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டும் என அரசல் புரசலாக கொடி பிடிக்கத் தொடங்கி விட்டனர். ஆனால், தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கினால், அது ஆபத்தில் முடியும் என, 2011ல் இந்திய அணி உலக கோப்பை வென்றபோது, பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த விழாவில் கிறிஸ்டனிடம், விராட் கோஹ்லியை அனைத்து ஃபார்மட்டுக்கும் கேப்டனாக்க இதுதான் சரியான நேரமா? என கேள்வி எழுப்பினர் நிருபர்கள். ‛‛இதற்கு நீங்கள் என்னிடம் இருந்து பதில் பெற முடியாது. ஒன…

  23. கால்பந்து போட்டிகளுக்கு ஓய்வை அறிவித்தார் ஜெர்மனியின் குலோஸ். கால்பந்து போட்டிகளுக்கு ஓய்வை அறிவித்தார் ஜெர்மனியின் குலோஸ். சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவித்தார் ஜெர்மனியின் பிரபல கால்பந்து வீரர் மிரோசொல்வ் குலோஸ். கால்பந்து உலக கிண்ணப் போட்டிகளில்,கிண்ணம் வென்ற ஜெர்மனி அணியின் முக்கிய வீரராக 38 வயதான குலோஸ் விளையாடியிருந்தார். உலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக கோல்கள் பெற்றவர் எனும் பிரேசிலின் ரொனால்டோவின் உலக சாதனையை, இவர் அண்மையில் 16 கோல்கள் பெற்று முறியடித்திருதார். 137 சர்வதேச போட்டிகளில் ஜெர்மன் அணி சார்பில் பங்கேற்ற குலொஸ்,71 கோல்கள் பெற்றுள்ளார். 2018 ரஸ்யாவில் இடம்பெறவுள்ள கால்பந…

  24. 11 சொதப்பல் வீரர்கள்... பட்டியலில் யார் யார்? #INDvsNZ இந்தியா - நியூசிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர் யார் என கேட்டால், சட்டென விராட் கோலி, ரவிச்சந்திர அஷ்வின் என பொட்டில் அடித்தார் போல பதில் வரும். ஆனால் சொதப்பல் மன்னர்கள் யார் எனக்கேட்டால் கொஞ்சம் ரசிகர்கள் தடுமாறுவார்கள். இந்திய அணியிலும் சரி, நியூசிலாந்து அணியிலும் சரி இந்தத் தொடரில் எக்கச்சக்க சொதப்பல் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இருந்து சொதப்பல் வீரர்கள் பதினோரு பேரைத் தேர்வு செய்திருக்கிறோம். இரண்டு தொடக்க வீரர்கள், இரண்டு நடு வரிசை பேட்ஸ்மேன்கள், இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள், ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர், இரண்டு பவுலிங் ஆல்ரவுண்டர், இரண்டு பவுலர்கள் என பக்கா பேக்கேஜாக அணி…

  25. மைதானத்தில் துடுப்பாட்ட மட்டையுடன் நடனம் ; இங்கிலாந்து வீரர் அசத்தல் (கணொளி இணைப்பு) விசேட திறமையுடையவர்களுக்கான கிரிக்கெட் போட்டியொன்றில் இங்கிலாந்து அணி வீரரின் துடுப்பாட்டம் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. துடுப்பாட்ட மட்டையை சுழற்றி சுழற்றி நடனமாடியவாறு துடுப்பாட்டத்தை மேற்கொண்ட இவர் நான்கு ஓட்டங்களை பெற்றமை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதேவேளை இவரது இந்த துடுப்பாட்டத்தை பார்த்த சக வீரர்களும் தமது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். காணொளி இதோ... http://www.virakesari.lk/article/13032

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.