Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 5 ஆண்டுகளுக்குப் பின் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா! துபாய்: ஒருநாள் போட்டிகளுக்கான தர வரிசையில் தென் ஆப்பிரிக்கா அணி முதலிடம் பிடித்துள்ளது. 2009ம் ஆண்டுக்கு பிறகு இந்த இடத்துக்கு தென் ஆப்பிரிக்கா வந்து அசத்தியுள்ளது. ஐசிசி இன்று வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் 115 புள்ளிகளுடன் தெ.ஆப்பிரிக்கா முதலிடத்திலும், 114 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 2வது இடத்திலும், ஒரு புள்ளிகள் குறைவாக அதாவது 113 புள்ளிகளுடன் இந்திய அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. நவம்பரில் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ள இலங்கை 111 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், 107 புள்ளிகளுடன் இங்கிலாந்து ஐந்தாம் இடத்திலும், 98 புள்ளிகள், 96 புள்ளிகளுடன் முறை…

  2. சந்திமல், ஹத்துருசிங்க உள்ளிட்ட மூவருக்கு போட்டி தடை இலங்கை அணித் தலைவர் தினேஸ் சந்திமல் உள்ளிட்ட மூவருக்கு தலா இரு போட்டிகளுக்கு ஐ.சி.சி தடை விதித்துள்ளது. இலங்கை அணித் தலைவர் தினேஸ் சந்திமல், இலங்கை அணிப் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க மற்றும் இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கே குறித்த தடை உத்தரவு ஐ.சி.சி யினால் விதிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக மைதானத்திற்கு வரமறுத்தமை மற்றும் போட்டியை தாமதமாக ஆரம்பிப்பதற்கு காரணமாக இருந்தமை போன்ற செயற்பாடுகளால் அவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த மூவரும்…

  3. இந்தியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: ஆஸி 277 ஓட்டங்கள் சேர்ப்பு அவுஸ்ரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம், நிறைவுக்கு வந்துள்ளது. இதற்கமைய முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்ரேலியா அணி, ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்போது ஆட்டநேர முடிவில் அணித்தலைவர் டிம் பெய்ன் 16 ஓட்டங்களுடனும், பெட் கம்மிண்ஸ் 11 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். பெர்த் மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அவுஸ்ரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஆரோன் பின்ஞ்…

  4. எவ்வளவு செலவானாலும் உள்ளக கிரிக்கெட் பயிற்சிக்கூடம் அமைக்கப்படவேண்டும் : சிதத் வெத்தமுனி கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறு­வ­தற்­காக உள்­ளக கிரிக்கெட் பயிற்­சிக்­கூ­டத்தை நிச்­ச­ய­மாக அமைத்­துக்­கொ­டுப்போம் என்றும், இதற்கு 50 மில்­லியன் ரூபா செல­வாகும் என்று கணக்­கிட்­டுள்­ள­தா­கவும் அதற்கு மேல் சென்­றாலும் பர­வா­யில்லை எவ்­வ­ளவு செல­வா­னாலும் அதை செய்­து­கொ­டுப்போம் என இலங்கைக் கிரிக்­கெட்டின் தலைவர் சிதத் வெத்­த­முனி தெரி­வித்தார். இலங்கைக் கிரிக்கெட் தலை­மை­யகத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அங்கு தொடர்ந்தும் பேசிய சிதத் வெத்­த­முனி, உள்­ளக பயிற்­சிக்­கூ­டங்­களை அமைப்­பதன் மூலம் வீரர்­களின் த…

  5. விளையாட்டுத் துளிகள் நார்வே செஸ்: 3-வது சுற்றிலும் ஆனந்த் டிரா கிராண்ட் செஸ் தொடரின் ஒரு பகுதியாக நார்வேயின் ஸ்டவாங்கர் நகரில் நடைபெற்று வரும் நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் தனது 3-வது சுற்றிலும் டிரா செய்துள்ளார். ஏற்கெனவே முதல் இரு சுற்றுகளிலும் டிரா செய்திருந்த ஆனந்த், இப்போது 3-வது சுற்றில் ரஷ்யாவின் அலெக்சாண்டர் கிரிசுக்குடன் டிரா செய்துள்ளார். 3 சுற்றுகளின் முடிவில் 1.5 புள்ளிகளைப் பெற்றுள்ள ஆனந்த், இத்தாலியின் பேபியானோ கருணா, பிரான்ஸின் வச்சியர் ஆகியோருடன் 4-வது இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் ஹிகாரு நாகமுரா, பல்கேரியாவின் வெசலின் டோபலோவ் ஆகியோர் தலா 2.5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நெதர்லாந்தின் அனீஷ் கிரி 2 புள்ளிகளுடன் 3-…

  6. டெஸ்ட் கிரிக்கெட்டுக்குள் வந்த 10 மாதத்திற்குள் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை ! சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வந்த 10 மாதங்களில், 50 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் வீரர் யாஷிர் ஷா புதிய வரலாறு ஏற்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான 2வது ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் யாஷிர் ஷா களதிறங்கும் 9வது டெஸ்ட் போட்டி ஆகும். கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான் பாகிஸ்தான் அணிக்காக முதன் முறையாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். இந்நிலையில் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் யாஷிர் ஷா 3 விக்கெட்டுகள…

  7. 'டக் அவுட்' பிரபலம் லார்ட்சில் சதமடித்தது எப்படி? இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர், எதுக்கு ரொம்ப ஃபேமஸ்னு கேட்டா... சின்னப்புள்ள கூட கண்ண மூடிட்டு சொல்லும் டக் அவுட்டுக்கு ரொம்ப பேமஸ்னு. அஜித் அகர்கர் தொடர்ந்து 7 முறை டக்அவுட் ஆகியெல்லாம் வரலாறு படைத்துள்ளார். இதில் 4 முறை, முதல் பந்திலேயே மனிதர் வெளியேறியிருக்கிறார். இப்படி 'டக் அவுட்' ஆகியே பிரபலம் ஆன அஜித் அகர்கர், லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்து அசத்தியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? கடந்த 2002ஆம் ஆண்டு இந்திய அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதே நாளில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அஜித் அகர்கர் 190 பந்துகளில், 109 ரன்களை அடித்து அசத்தினார். இதில் 1…

  8. முக்கோண கிரிக்கெட் அட்டவணை [27 - January - 2008] [Font Size - A - A - A] இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முக்கோண ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 3 ஆம் திகதி பிறிஸ்பேர்னில் ஆரம்பமாகின்றது. இப்போட்டி பற்றிய அட்டவணை வருமாறு: திகதி, அணிகள் , இடம் 03.02.08 , அவுஸ்திரேலியா எதிர் இந்தியா, பிறிஸ்பேர்ன் 05.02.08 , இந்தியா எதிர் இலங்கை, பிறிஸ்பேர்ன் 08.02.08, அவுஸ்திரேலியா எதிர் இலங்கை, சிட்னி 10.02.08, அவுஸ்திரேலியா எதிர் இந்தியா, மெல்பேர்ன் 12.02.08 , இந்தியா எதிர் இலங்கை, ஹன்பரா 15.02.08 , அவுஸ்திரேலியா எதிர் இலங்கை, பெர்த் 17.02.08, அவுஸ்திரேலியா எதிர் இந்தியா, அடிலெய்ட் 19.02.08 …

  9. இலங்கையை வீழ்த்தியது இந்தியா Tuesday, 19 February, 2008 09:36 AM . அடிலெய்டு, பிப்.19: இலங்கைக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டி வரிசையில் இந்தியாஇலங்கை மோதும் ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் நடைபெறுகிறது. இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே டாசில் வெற்றி பெற்று முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். . இதனையடுத்து அந்த அணியின் துவக்க வீரர்கள் தில்சன் மற்றும் ஜெயசூர்யா களமிறங்கினர். முதல் ஓவரியிலேயே தில்சன் முனாப் பட்டேல் பந்துவீச்சில் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை அடுத்து ஜெயசூர்யா ரன் எதுவும் எடுக்காமல் டக்அவுட்டானார். அவர் ரன் அவுட் முறையில் …

  10. ஆமிருக்கு நியூசிலாந்து விசா கிடைத்தது நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் , இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் ஆகியவற்றுக்கான பாகிஸ்தான் குழாமில் சேர்க்கப்பட்டுள்ள மொஹமட் ஆமிருக்கான நியூசிலாந்து விசா கிடைத்துள்ளது. அவருக்கான விசா கிடைக்குமா என்பது குறித்துச் சந்தேகங்கள் காணப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது அவருக்கான விசா வழங்கப்பட்டுள்ளது. ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்டு, குற்றவியல் குற்றத்துக்காக 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆமிர், அவரது புனர்வாழ்வு, தடைக்காலத்தைப் பூர்த்தி செய்த போதிலும், குற்றவாளிகளாகத் தீர்ப்பு வழங்கப்பட்டோருக்கு விசா வழங்கப்படுவதற்கு விசாக்களை நியூசிலாந்து வழங்குவதில்லை என்ற …

  11. தெற்காசியாவின் வேகமானோர் இலங்கையர்கள் தெற்காசியாவின் வேகமான நபர்களாக, இலங்கையைச் சேர்ந்த ஹிமாஷ இஷான், றுமேஷிகா புத்திக்க ஆகியோர் தெரிவாகியுள்ளனர். தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்றே, இவர்களிருவரும் இப்பெருமையைப் பெற்றுள்ளனர். நேற்று இடம்பெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அவர், 10.28 செக்கன்களில் ஓடி முடித்து, தங்கப் பதக்கம் வென்றார். இது, கடந்த ஏழு தசாப்தங்களில், இலங்கையர் ஒருவரால் பெறப்பட்ட சிறந்த பெறுபேறாகும். இறுதிப் போட்டிக்கு முன்னர் இடம்பெற்ற தகுதிகாண் சுற்றில், 10.26 செக்கன்களில் அவர் ஓடி முடித்த போதிலும், தொழில்நுட்பத் தவறு காரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கவில்லை. …

  12. ஒவ்வொரு பந்தையுமே பவுண்டரிக்கோ சிக்சருக்கோ விரட்ட விரும்பினேன்: பிரெண்டன் மெக்கல்லம் உலகசாதனை அதிரடி சதம். பிரெண்டன் மெக்கல்லம். | படம்: ஏ.பி. விவ் ரிச்சர்ட்ஸ், மிஸ்பா உல் ஹக் ஆகியோரின் அதிவேக டெஸ்ட் சத சாதனையை முறியடித்த மெக்கல்லம், நேற்று ஒவ்வொரு பந்தையுமே 4 ரன்களுக்கோ அல்லது சிக்சருக்கோ அடித்து விரட்டும் ‘மூடில்’ இருந்ததாகத் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பசுந்தரை ஆடுகளத்தில் மெக்கல்லம் நேற்று விளாசித்தள்ளினார். ஜோஷ் ஹேசில்வுட் பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசைக்கு மேல் விளாசி சதம் அடித்த மெக்கல்லத்திற்கு சாதனை பற்றி தெரியவில்லை. மைதான ஒலிபெருக்கியில் அறிவித்த பிறகுதான் அவருக்கே தெரிந்துள்ளது. “சாதனை பற்றி …

  13. 10 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த மெத்தியூஸ் இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் எஞ்சலோ மெத்தியூஸ் தனது 10 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். போட்டியின் நான்காவது நாளான இன்று தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி தற்போது வரையில் 5 விக்கெட் இழப்பிற்கு 349 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது. போட்டியில் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வரும் ஏஞ்சலோ மெத்தியூஸ் 117 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 8 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார். போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே அணி தனத…

    • 0 replies
    • 372 views
  14. கரீபியன் பீரிமியர் லீக் தொடரில் பார்படோஸ் அணியை விலைக்கு வாங்கிய மல்லையா April 14, 2016 இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்து விட்டதலைமறைவாக உள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, கரீபியன் பீரிமியர் லீக் தொடரில் பார்படோஸ் அணியை விலைக்கு வாங்கியுள்ளார். ஐபிஎல் தொடரில் பெங்களூர் றொயல்சேலஞ்சர்ஸ் அணியின் முக்கிய பொறுப்புகளிலிருந்து விலகியதையடுத்து, கடந்த பெப்ரவரி மாதம் இந்த புதிய அணிக்கு பங்குதாரர் ஆகியிருப்பதாக மல்லையா கூறியுள்ளார். இதற்காக இந்திய மதிப்பில் சுமார் 6 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே செலவழித்துள்ளதாக தெரிவித்த மல்லையா, அந்த அணியின் மதிப்பு சுமார் ரூ.130 கோடியாக ‌உள்ள நிலையிலும், மற்ற உ‌ரிமையாளர்கள் தன்னையும் பங்குதாரராக இணை…

  15. நான் இந்து சமயத்தவன் என்பதால் பாக். கிரிக்கெட் சபை புறக்கணிக்கின்றதா? - கனே­ரியா கேட்கின்றார் ஐந்து வருட தடைக்­குட்­பட்ட மொஹமத் அமிர் விட­யத்தில் தனது எல்­லைக்கும் அப்பால் சென்று கரி­சனை காட்­டிய பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, தனக்கு என்ன செய்­துள்­ளது என தனிஷ் கனே­ரியா கேள்வி எழுப்­பி­யுள்ளார். “பாகிஸ்தான் கிரிக்கெட் சபை­யினர் என்­னுடன் பேசு­வ­தற்­குக்­கூட விரும்­ப­வில்லை. நான் ஒரு இந்து என்­பதால் புறக்­க­ணிக்­கப்­ப­டு­கின்றேனா? என என்­னையே நான் கேட்­டுக்­கொள்வேன்” என இந்­திய ஊட­க­மொன்­றுக்கு தனிஷ் கனே­ரியா தெரி­வித்­துள்ளார். பாகிஸ்­தா­னினால் வாழ்நாள் தடைக்­குட்­பட்­டுள்ள தனேஷ் கனே­ரியா, டெஸ்ட் அரங்…

  16. நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் ‘டிரா’ மழையால் கடைசி நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் நியூசிலாந்து- தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது. டுனிடின்: நியூசிலாந்து- தென்னாப்பிரிக்கா அணிகள் டுனிடினில் மோதிய முதல் டெஸ்ட் ‘டிரா ஆனது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 308 ரன்னும், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 341 ரன்னும் குவித்தன. 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்கா நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்து இருந்தது. இன்றைய 5-வது மற்…

  17. கிழக்கு மாகாண உதைபந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் சம்பியனாகத் தெரிவு கிழக்கு மாகாண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் பெண்கள் பிரிவில் மட்டக்களப்பு மாவட்டம் மாகாண சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை திருகோணமலை ஏகாம்பரம் மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் அம்பாரை மாவட்ட அணியை 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தே மட்டக்களப்பு மாவட்ட அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மட்டக்களப்பு மாவட்ட அணி கிழக்கு மாகாணம் சார்பாக தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பினையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கிழக்கு மாகாணம் அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங…

  18. இலங்கை - இங்கிலாந்து தொடர் எதிர்வரும் ஒக்டோபரில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 வகையான கிரிக்கெட் போட்டிகளைக்கொண்ட தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இங்கிலாந்து அணி இலங்கைக்கு வருகைதரவுள்ளது. இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் 5 ஒருநாள் போட்டிகளும் 3 டெஸ்ட் போட்டிகளும் ஒரேயொரு இருபதுக்கு - 20 போட்டியும் இடம்பெறவுள்ளது. போட்ட…

  19. திராவிட் பாணியில் ஆஸி. வீரர்களுக்கு டீன் ஜோன்ஸ் அறிவுரை பாகிஸ்தானுக்கு எதிராக சுழற்பந்து வீச்சில் படுதோல்வியடைந்த ஆஸ்திரேலியா மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளது. இந்நிலையில் ராகுல் திராவிட், கெவின் பீட்டர்சனுக்கு அளித்த அறிவுரையை எதிரொலித்து டீன் ஜோன்ஸ் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஸ்பின் பந்துகளை எதிர்கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளார். அதாவது முதலில் வலைப்பயிற்சியில் ஸ்பின் பந்துகளை எதிர்கொள்ளும் போது கால்காப்பு அணியாமல் பயிற்சி எடுத்துக் கொள்ளவேண்டும் என்கிறார் டீன் ஜோன்ஸ். இதே அறிவுரையைத்தான் ராகுல் திராவிட் தனது மின்னஞ்சலில் கெவின் பீட்டர்சனிடம் தெரிவித்தார்: “கால்காப்பு அணியாமல் விளையாடும் போது, காலுக்கு முன்னால் பேட்டைக் கொண்டு வந்து ஆட அதிகம் முயற்சி செய்வோம். மேலும் பந்தை …

  20. டெஸ்ட் தொடரை இழந்ததை வைத்து இந்திய அணியை குறைவாக எடை போடவேண்டாம்: மைக் ஹஸ்ஸி எச்சரிக்கை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததை வைத்து இந்திய அணியை ஒருநாள் போட்டிகளில் குறைவாக எடைபோட வேண்டாம் என்று மற்ற அணிகளை மைக் ஹஸ்ஸி எச்சரித்துள்ளார். அடுத்த மாதம் தொடங்கும் உலகக் கோப்பை போட்டிகளின் போது இந்திய அணி தங்கள் சாம்பியன் தகுதியை தக்க வைக்க கடுமையாக விளையாடும் என்பதை மறந்து விட வேண்டாம் என்று கூறுகிறார் ஹஸ்ஸி. "இந்திய அணிக்கு உள்ள மிகப்பெரிய அனுகூலம் என்னவெனில் ஆஸ்திரேலிய மைதானங்களில் 2 மாதங்களாக விளையாடி வருகின்றனர். இப்போது அவர்கள் இங்குள்ள பல்வேறு சூழ்நிலைகளுக்கு தங்களை தயார் படுத்திக் கொண்டிருப்பார்கள். அதாவது பிட்ச்களின் வேகம் மற்றும் பவுன்ஸிற்கு அந்…

  21. 11 ஆவது உலகக் கிண்ணம் : 11 கிலோ எடை வெள்ளியால் உருவாக்கப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட 11 ஆவது உலகக் கிண்ணம் 60 சென்ரிமீற்றர் உயரத்தையும் 11 கிலோ எடையையும் கொண்டது. குறித்த 11 ஆவது உலகக் கிண்ணத்தை கையில் ஏந்தப் போகும் அணி எது என்பது மார்ச் மாதம் 29 ஆம் திகதி தெரிய வரும். ஆரம்பத்தில் ஒவ்வொரு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் போதும், வெவ்வேறு வடிவங்களில் கிண்ணம் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 1999 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியின் போது தான் நிரந்தர வடிவமைப்பை பெற்றது. அந்த உலகக் கிண்ணத்தை லண்டனை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியது. இதற்காக 2 மாத காலம் எடுத்துக் கொண்டது. உலகக் கிண்ணம் 60 சென்ரிமீற்றர் உயரமும், 11 கிலோ எடையும் கொண்டது. வெள்ளியால் செய்…

  22. 4000 ஓட்டங்களைப் பெற்றார் திலகரத்ன டில்ஷான் இலங்கை அணியின் நட்­சத்­திர துடுப்பாட்ட வீரரான டில்ஷான், இருபது ஓவர்கள் போட்­டி­களில் 4000 ஓட்­டங்கள் என்ற மைல்­கல்லை எட்­டி­யுள்ளார். இங்­கி­லாந்தில் நாட் வெஸ்ட் இருபது ஓவர் தொடரில் நேற்று முன் தினம் நடந்த ஆட்­டத்தில் டெர்­பை­ஷயர்- துர்ஹாம் அணிகள் மோதின. முதலில் விளை­யா­டிய துர்ஹாம் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்­பிற்கு 147 ஓட்­ட எண்ணிக்கையை எடுத்­தது. மஸ்டார்ட் (20), ஸ்டோன் மென் (28), கோலிங்வுட் (41) சிறப்­பாக விளை­யாடி அணியின் ஓட்­டங்­களை உயர்த்­தினர். இதைத் தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி கள­மி­றங்­கிய டெர்­பை­ஷயர் அணிக்கு டில்ஷான், டுர்ஸ்டன் ஆகி யோர் சிறப்­பான ஆரம்பத்தைக் கொடுத்­தனர். டுர்ஸ்டன் 21 ஓட்டங்கள…

  23. தோனி இடித்த வங்கதேச பந்துவீச்சாளரை உருவாக்கியதே இந்தியர்தான்...! இந்திய கேப்டன் தோனியால் இடித்து தள்ளப்பட்ட வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தாஃபீகுர் ரக்மானை சிறந்த வேகப்பந்துவீச்சாளராக இந்தியர் ஒருவர்தான் உருவாக்கியுள்ளார். மிர்பூரில் கடந்த 18ஆம் தேதி நடந்த ஒருநாள் போட்டியில், வங்கதேசத்தின் 19 வயது பந்துவீச்சாளர் முஸ்தாபீகுர் ரக்மான், முதன் முதலாக ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். அதே வேளையில் ரோகித் சர்மா, தோனி ஆகியோர் ரன் எடுக்க ஓடும் போது பிட்சின் குறுக்கே அடிக்கடி ஓடினார். ஒரு கட்டத்தில் இந்திய கேப்டன் தோனியால் இடித்தும் தள்ளப்பட்டார். இந்த சம்பவத்தில் ரக்மானுக்கும் போட்டி கட்டணத்தில் 50 சதவீ…

  24. தோனிக்கு அப்ரிடி ஆதரவு: 'தோற்றால் சாடுவது துணைக்கண்ட போக்கு' 2011 உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு முன் தோனியும், அப்ரிடியும் மொஹாலியில் பேசிக்கொள்ளும் காட்சி. | கோப்புப் படம்: பிடிஐ. ஒரு தொடரை இழந்தால் உடனே தாறுமாறாக விமர்சிப்பது என்பது ‘துணைக் கண்டங்களின் போக்கு’ என்று தோனிக்கு தனது ஆதரவை பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி மனதார தெரிவித்துள்ளார். "வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த பிறகு தோனியை இலக்காக்கும் விதம் குறித்து நான் மிக மோசமாக உணர்கிறேன். இது துணைக்கண்ட மனோநிலை என்பதை நான் முழுமையாக நம்புகிறேன், இங்குதான் ஒரு தொடரைத் தோற்றால் உடனே ஹீரோக்களை கடுமையாக விமர்சனம் செய்யும் போக்கு இருந்து வருகிறது. உண்மையான நிலவரத்தை சித்தரிக்காமல் இருப்பதில் ஊ…

  25. மூன்று முரை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற சைக்கிள் பந்தய வீராங்கனை மரணம் உலக சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க சைக்கிள் பந்தய வீராங்கனை கெல்லி கேட்லின் மரணம் அடைந்தார். அமெரிக்காவின் பிரபல சைக்கிள் பந்தய வீராங்கனை கெல்லி கேட்லின் மரணம் அமெரிக்காவைச் சேர்ந்த அணைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. உயிரிழந்த சைக்கிள் பந்தய வீராங்கனை கெல்லி கேட்லின் வயது 23 , இவர் 3 முறை (2016, 2017, 2018) உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற அமெரிக்க அணியில் அங்கம் வகித்தவர். இந்நிலையில், கெல்லி கேட்லின் கடந்த வியாழக்கிழமை மரணம் அடைந்ததாக அவரது சகோதரர் சமூக வலைத்தளம் மூலம் தகவல் வெளியிட்டார். சைக்கிள் பந்தயத்தில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.