விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் முதல் T20-உலக சாம்பியன்களை இலகுவாக பந்தாடியது பாகிஸ்தான் பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் முதல் T20-உலக சாம்பியன்களை இலகுவாக பந்தாடியது பாகிஸ்தான். பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டி டுபாய் DSC மைதானத்தில் நிறைவுக்கு வந்திருக்கின்றது. இந்தப் போட்டியில் சகல துறைகளிலும் மிக சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி உலக சாம்பியன்கள் மேற்கிந்திய தீவுகள் அணியை 9 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டு 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது. போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்ப்பிராஸ் அஹமெட் முதலில் களத்தடுப்பு முடிவை மேற்க…
-
- 1 reply
- 331 views
-
-
வீதி விபத்தில் கிரிக்கெட் வீரர் பலி வாகன விபத்தொன்றில் பீ.ஆர்.சி கிரிக்கெட் கழக வீரரான பூர்ண பிரபஷ்வர அளுத்கே உயிரிழந்துள்ளார். பொரஸ்கமுவ பகுதியில் இடம்பெற்ற இடம்பெற்ற விபத்திலேயே குறித்த கிரிக்கெட் வீரர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த கிரிக்கெட் வீரர், கெப் வாகனமொன்றுடன் மோதுண்டதிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெப் வாகனத்தை ஓட்டிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 1994 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி பிறந்த பூர்ண, வலதுகை துடுப்பா…
-
- 0 replies
- 460 views
-
-
பாகிஸ்தானில் உருவாகும் இரண்டு கைகளிலும் வீசக்கூடிய அரிய வேகப்பந்து வீச்சாளர் இரண்டு கைகளிலும் நல்ல வேகத்துடன் வீசும் பாக். வேகப்பந்து வீச்சாளர் யாசிர் ஜான்.! வலது கையிலும் இடது கையிலும் நல்ல வேகத்துடன் வீசும் இருகை வேகப்பந்து வீச்சாளர் யாசிர் ஜான் என்பவர் பாகிஸ்தானில் உருவாகி வருகிறார். பாகிஸ்தான் சூப்பர் லீக் அணியான லாகூர் குவாலாண்டர்ஸ் அணியின் திறன் வேட்டையில் யாசிர் ஜான் என்ற இந்த இருகை வேகப்பந்து வீச்சாளர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் லாகூர் குவாலாண்டர்ஸ் அணியின் தலைமையாளருமான ஆகிப் ஜாவேத் லாகூரில் செய்தியாளர்களிடம் கூறும்போது, யாசிர் ஜான் வலது கையில் வீசும் போது மணிக்கு 145 கிமீ வேகத்திலும்…
-
- 2 replies
- 456 views
-
-
தோனியின் கேப்டன் பொறுப்பை பறிக்க பலமுறை விவாதித்தோம்: மனம் திறக்கும் சந்தீப் பாட்டீல் தோனி, பாட்டீல். | கோப்புப் படம். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி திடீரென ஓய்வு அறிவித்ததால் அவரது ஒருநாள் கிரிக்கட் வாழ்வு பற்றியும் கேப்டன்சி பற்றியும் விவாதித்து அவரை கேப்டன்சியிலிருந்து நீக்கவும் சில வேளைகளில் ஆலோசனை நடத்தியுள்ளதாக முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் தெரிவித்தார். கடந்த ஆஸ்திரேலியா தொடரின் நடுவில் தோனி திடீரென டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இது பெரிய ‘அதிர்ச்சி’ அலைகளை ஏற்படுத்தியதாகக் கூறிய சந்தீப் பாட்டீல், “உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு அறிவித்ததால் தோனியின் ஒருநாள் அணி கேப்டன் பொ…
-
- 0 replies
- 324 views
-
-
யாழில் முதல் தடவையாக தேசிய விளையாட்டு விழா 2016-09-22 09:38:32 49 வருட வரலாற்றைக்கொண்ட தேசிய விளையாட்டு விழா முதல் தடவையாக இவ்வருடம் வடக்கு மாகாணத்தின் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் அரங்கேற்றப் படவுள்ளது. தேசிய விளையாட்டு விழா 1967இல் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரை 41 அத்தியாயங்கள் நிறைவு பெற்றுள்ளன. இம்முறை 42 ஆவது தடவையாக தேசிய விளையாட்டு விழா நடைபெறவுள்ளது. இவ் விளையாட்டு விழா இம் மாதம் 29ஆம் திகதி முதல் அக்டோபர் 2 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. உள்ளூர் யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்கள் கடந்து விட்ட நிலையில் ஜ…
-
- 0 replies
- 414 views
-
-
சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது இலங்கை இளையோர் அணித் தலைவர் சரித் அசலங்காவுக்கு. சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது இலங்கை இளையோர் அணித் தலைவர் சரித் அசலங்காவுக்கு. இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்து நடத்திய ,இந்தாண்டின் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை இலங்கை இளையோர் கிரிக்கெட் அணித் தலைவர் சரித் அசலங்கா பெற்றுக் கொண்டார். நேற்று கொழும்பு, காலதாரி விருந்தகத்தில் இடம்பெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வில் தொடர்ச்சியான 2 வது வருடமாகவும் சரித் அசலாங்க தனதாக்கினார். இவருக்கான விருதை ,இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தன வழங்கி வைத்தார். காலி ரிச்மன்ட் கல்லூரியின் வீரராகவும், இலங்கை 19 வயத…
-
- 0 replies
- 338 views
-
-
2020 ஐரோப்பிய கிண்ணத்துக்கான சின்னம் உத்தியோகபூர்வமாக அறிமுகம். 2020 ஐரோப்பிய கிண்ணத்துக்கான சின்னம் உத்தியோகபூர்வமாக அறிமுகம். ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் 4 ஆண்டுகளுக்கொருமுறை இடம்பெறும் மிகப்பெரிய கால்பந்து திருவிழாவான ஐரோப்பிய கிண்ணப் போட்டிகளுக்கான சின்னம் இன்று உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கால்பந்து உலக கிண்ணப் போட்டிகளுக்கு அடுத்ததாக கால்பந்து ரசிகர்களின் மிகப்பெரிய கொண்டாட்டமான இந்த போட்டிகளின் இறுதி போட்டி 2020 இல் லண்டனில் இடம்பெறவுள்ளது. அரை இறுதி, இறுதி போட்டி ஆகியன லண்டன் மாநகரில் இடம்பெறவுள்ள அதேவேளை, ஐரோப்பாவின் 13 நகரங்களில் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஐரோப்பிய கிண்ண தொடரின் 60 ஆண்டு பூர்த்தியைக் …
-
- 0 replies
- 455 views
-
-
டி வில்லியர்ஸையே மிரட்டிய பவுலர்! தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ் களத்தில் இருந்தால் எதிரணிக்கு அடி வயிறு கலங்கும். ‘டிரைவ்’ ஆடுவார் என ஃபீல்ட் செட் செய்தால் ஸ்கூப் ஆடி, ஃபீல்டர்களை மட்டுமல்லாது ரசிகர்களையும் குழப்புவார். என்ன ரகம் என வரையறுக்க இயலாத 360 டிகிரி பேட்ஸ்மேன். எப்பேர்பட்ட பேட்ஸ்மேனுக்கும் ஒரு பவுலர் சிம்ம சொப்பனமாக இருப்பார் அல்லவா? அந்த வரிசையில் டி வில்லியர்ஸை அச்சுறுத்திய பவுலர் யார் என அவரது சுயசரிதை புத்தகமான, ‘ஏபி: தி ஆட்டோபயாகிரபி’யை ஆச்சரியத்துடன் புரட்டினால், இதுவரை யாருமே கேள்விப்படாத ஒரு பவுலரின் பெயரைச் சொல்லி பிரம்மிப்பூட்டுகிறார். தவிர, இணையத்தில் உலவுவது போல, ‘நான் மல்டி ஸ்போர்ட்ஸ் கில்லி அல்ல’ என, ட்வி…
-
- 0 replies
- 528 views
-
-
பாகிஸ்தானுக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியனுக்கான தண்டாயுதம்: ஐசிசி வழங்கியது ஐசிசி தண்டாயுதத்துடன் மிஸ்பா. | படம்: ஏ.பி. முதன் முதலாக ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான தண்டாயுதத்தை ஐசிசி வழங்கியது. 7 ஆண்டுகளுக்கு முன்பாக டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் விளையாடிய மைதானமான லாகூரில் இது வழங்கப்பட்டது பெருமை அளிக்கிறது என்கிறார் கேப்டன் மிஸ்பா உல் ஹக். லாகூர் கடாஃபி ஸ்டேடியத்தில் ஐசிசி தலைமை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் தண்டாயுதத்தை மிஸ்பாவிடம் வழங்கினார். உள்ளூர் ரசிகர்கள் ஆதரவில்லாமல் முழுக்கவும் பாகிஸ்தானுக்கு வெளியே விளையாடி முதலிடம் பிடிப்படு சாதாரண விஷயமல்ல. ஸ்டீவ் வா…
-
- 1 reply
- 633 views
-
-
செய்தித்துளிகள்: கேப்டன் பதவியில் அசார் அலி நீடிப்பு இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டி தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. இதனால் ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் அசார் அலிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு டி 20 அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது பொறுப்பு வகிக்கக்கூடும் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அசார் அலியை மீண்டும் கேப்டனாக நியமித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அசார் அலி தலைமையில் பாகிஸ்தான் அணி 25 ஆட்டத்தில் 15 தோல்விகளை சந்தித்துள்ளது. மேலும் ஒருநாள் போட்டி தரவரிசையில் 9-வது இடத…
-
- 0 replies
- 361 views
-
-
களத்தில் நெஞ்சை நிமிர்த்தும் பழைய ஆக்ரோஷம் ஆஸி. அணிக்கு தேவை: வீரர்களைத் தூண்டும் ஸ்மித் படம். | ஏ.எஃப்.பி. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சமீப காலமாக களத்தில் அமைதியாக இருக்கின்றனர், இது சரிபட்டு வராது, பழைய பாணி ஆக்ரோஷம் தேவை என்று கேட்பன் ஸ்மித் வலியுறுத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் பிறகு ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் ஆகியவை வரும் நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆக்ரோஷ அணுகுமுறையில் நெஞ்சை நிமிர்த்தி எதிரணியினரை சீண்டும் பழைய பாணி கிரிக்கெட்டுக்குச் செல்ல வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது: இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் டேவிட் வார்ன…
-
- 0 replies
- 273 views
-
-
நியூஸி. ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க மாட்டோம்: அஜிங்கிய ரஹானே கான்பூர் பிட்ச் பெரிய அளவில் பந்துகள் திரும்பும் ஆடுகளமாக இருக்காது என்று பிட்ச் தயாரிப்பாளர் கூறியுள்ள நிலையில், நியூஸிலாந்து அணி ஸ்பின்னர்களை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அஜிங்கிய ரஹானே தெரிவித்துள்ளார். நியூஸிலாந்து அணியில் மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, மார்க் கிரெய்க் ஆகிய திறமையான ஸ்பின்னர்கள் உள்ளனர். முதல் நாளிலிருந்தே திரும்பும் பிட்ச்கள் தேவை என்று கோரி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அலிஸ்டர் குக் தலைமையில் இங்கு தோனி தலைமை இந்திய அணி தோல்வி கண்டதையடுத்தே பிட்ச் பற்றிய பேச்சுக்கள் பலமாக எழத் தொடங்கின. மாறாக கடந்த முறை …
-
- 51 replies
- 3.7k views
-
-
முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் ; ஆரம்பித்து வைத்தார் சங்கா (படங்கள் இணைப்பு) இலங்கையிலுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களிடையே நட்புறவை பேணும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி தொடர்ந்தும் 5 ஆவது முறையாக நாளை (21) ஆரம்பமாகவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி இரணைமடு நிலும்பியசவில் இன்று மாலை மூன்று மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் தலைவரும், விக்கெட் காப்பாளருமான குமார் சங்கக்கார விசேட அதிதியாக கலந்துகொண்டு ஆரம்ப நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இந்நிலையில் இந்த போட்டிகள் இம்மாதம் 21 திகதி முதல் 25 ஆம் திகதிவரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி,…
-
- 7 replies
- 853 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை சந்தித்தார் பிரதமர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு இன்று (20) இன்று இடம்பெற்றுள்ளது. ஆஸி அணியுடனான டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் பிரதமர் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால, செயலாளர் மொஹான் டி சில்வா, தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் பாடசாலை மட்டத்திலான கிரிக்கெட் விரர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர். http://www.virakesari.lk/article/11557
-
- 0 replies
- 374 views
-
-
பாராலிம்பிக் நிறைவு விழா: தேசிய கொடி ஏந்திச் சென்றார் மாரியப்பன் மாரியப்பன் தங்கவேல் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் பாராலிம்பிக் போட்டிகள் கடந்த 7-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 160 நாடுகளை சேர்ந்த 4,342 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 22 விளை யாட்டுக்களில் 528 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. 11 நாட்கள் நடந்த இந்த விளை யாட்டு திருவிழாவின் நிறைவு விழா நிகழ்ச்சிகள், வரலாற்று சிறப்பு மிக்க மரக்கானா ஸ்டேடியத்தில், வண்ணமயமான வாண வேடிக் கைகளுடன் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடை பெற்றது. பல்வேறு நடன மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக, சைக்கிள் பந்தயத்தின்போது உயிரிழந்த ஈரான் வீரர் பஹ்மன் கோல…
-
- 0 replies
- 403 views
-
-
வேகமான 200 விக்கெட் சாதனை நோக்கி அஸ்வின். வேகமான 200 விக்கெட் சாதனை நோக்கி அஸ்வின். இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சூழல் பந்து வீச்சாளரான அஸ்வின் ,வேகமான 200 டெஸ்ட் விக்கெட் சாதனை நோக்கி காத்திருக்கிறார். எதிர்வரும் 22 ம் திகதி கான்பூர் மைதானத்தில் இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி இந்தியாவின் 500 வது டெஸ்ட் என்பதோடு மாத்திரமல்லாமல் , ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனைக்காகவும் இந்திய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 193 டெஸ்ட் விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.அண்மையில் நிறைவுக்கு வந்த மேற்கிந்திய தீவுகள் அணியுடனான த…
-
- 0 replies
- 339 views
-
-
பிரீமியர் லீக் 2016/2017 போட்டிகளின் 5 ஆவது வார போட்டிகள் பின்னரான முடிவுகள். பிரீமியர் லீக் 2016/2017 போட்டிகளின் 5 ஆவது வார போட்டிகள் பின்னரான முடிவுகள். பிரீமியர் லீக் 2016/2017 போட்டிகளின் சுவாரஸ்யமான இவ்வாரம் இடம்பெற்ற 10 போட்டிகளில் மொத்தமாக 36 கோல்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 3 கோல்கள் பெனால்டி வாய்ப்பிலும் 3 கோல்கள் ஓவ்ன் கோல் முறை மூலமும் பெறப்பட்டுள்ளன. அத்துடன் 3 வீரர்கள் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டிருந்தனர். #செல்சி 1-2 லிவர்பூல் பலம் வாய்ந்த இரு அணிகளுக்கிடையிலான விறுவிறுப்பான போட்டியில் செல்சி அணி லிவர்பூலிடம் தோல்வியடைந்துள்ளது. லிவர்பூல் சார்பாக லாவ்ரென், ஹெண்டர்சன் தலா 1 கோலும் செல்சி சார்பாக கோஸ்டா 1 கோளும் பெற்ற…
-
- 1 reply
- 291 views
-
-
ஹமில்டனை முந்தினார் றொஸ்பேர்க் சிங்கப்பூர் கிரான்ட் பிறிக்ஸை அபாரமாக வென்ற மெர்சிடிஸ் அணியின் ஜெர்மனியச் சாரதியான நிக்கோ றொஸ்பேர்க், சம்பியன்ஷிப் புள்ளிகளில், சக மெர்சிடிஸ் அணியின் பிரித்தானியச் சாரதியான லூயிஸ் ஹமில்டனை முந்தினார். ரெட் புல் அணியின் அவுஸ்திரேலியச் சாரதியான டேனியல் றிக்கார்டோவிடமிருந்து, இறுதி நேரங்களில் பலத்த போட்டியை எதிர்கொண்டே, றொஸ்பேர்க் வெற்றி பெற்று, ஹமில்டனை விட எட்டு சம்பியன்ஷிப் புள்ளிகளை பெற்றுள்ளார். இரண்டாமிடத்தை றிக்கார்டோ பெற்றார். பந்தயத்தினை மூன்றாவதாக ஆரம்பித்த ஹமில்டன், பந்தயத்தின் நடுவினிலே, பெராரி அணியின் பின்லாந்துச் சாரதியான கிமி றைக்கோனனிடம் போட்டியை எதிர்கொண்டு, ஒரு இடம் பின்தங்கி …
-
- 0 replies
- 477 views
-
-
நுவான் குலசேகர கைது (UPDATE) இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான நுவான் குலசேகர, கடுவலையில் ஏற்பட்ட விபத்து சம்பவமொன்றில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர் செலுத்திய கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலியாகியுள்ளார். கண்டி -கொழும்பு பிரதான வீதியில் கடுவலை ரன்முத்துகல பிரதேசத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு நோக்கி பயணித்த 28 வயதுடைய இளைஞனே பலியாகியுள்ளதுடன் நுவான் குலசேகரவும் கொழும்பு நோக்கி பயணித்தபோதே அந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். …
-
- 2 replies
- 606 views
-
-
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை துவம்சம் செய்தது அவுஸ்திரேலியா 2016-09-19 10:12:23 அவுஸ்திரேலிய, இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையில் தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற முதலாவது மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுகளால் அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்றது. பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இப் போட்டி 40.3 ஓவர்களில் நிறைவுபெற்றது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 24.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி சிரமத்திற்கு மத்…
-
- 1 reply
- 606 views
-
-
மர்லன் சாமுவேல்ஸ் மரியாதை தெரியாதவர்: பென் ஸ்டோக்ஸ் சாடல் AP படம். | தி கார்டியன். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், தனது சுயசரிதை நூலில் மே.இ.தீவுகள் வீரர் மர்லான் சாமுவேல்ஸ் குறித்து காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மர்லன் சாமுவேல்ஸ் தகராறுக்கு புகழ்பெற்றவர், பிக் பாஷ் லீகில் ஷேன் வார்னுக்கும் இவருக்கும் மோதல் ஏற்பட்டது, பிறகு 2015-ல் கிரெனடா டெஸ்ட் போட்டியில் ஸ்டோக்ஸ் அவுட் ஆன பிறகு அவரை கேலி செய்யும் விதமாக சல்யூட் அடித்து சர்ச்சையில் சிக்கினார் சாமுவேல்ஸ். அதன் பிறகு உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டியில் பென்ஸ்டோக்ஸ், மர்லன் சாமுவேல்ஸ் மீண்டும் நேருக்கு நேர் தகராறில் ஈடுபட்டனர். சாமுவேல்ஸ் 85 ரன்கள் எடுத்து …
-
- 0 replies
- 435 views
-
-
ரியோ பாராலிம்பிக்கில் மிதிவண்டி போட்டியில் விபத்து, போட்டியாளர் பலி பிராமன் கோல்பார்நெஸ்ஹாடு ரியோ பாராலிம்பிக்கில் ஆடவர் மிதிவண்டி போட்டியின்போது விபத்திற்குள்ளாகி இறந்த ஈரான் மதிவண்டி போட்டியாளரான பிராமன் கோல்பார்நெஸ்ஹாடுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது, 48 வயதான இந்த விளையாட்டு வீரர் திடீரென கீழே விழுந்து சாலையோர கல்லில் அவரது தலை மோதி கழுத்து எலும்பு உடைந்தது. பிராமன் கோல்பார்நெஸ்ஹாடு (இடது) தென் ஆப்ரிக்க வீரர் டானி வில்சனை முந்தி செல்ல துரத்தி செல்கிறார் கிராமன் கோல்பார்நெஸ்ஹாடுவின் இறப்பு உண்மையிலேயே இதயத்தை நெகிழச் செய்துள்ளது என்று கூறியிருக்கும் சர்வதேச பாராலிம்பிக் குழுவின் தலைவர் பிலிப் கிரேவன், இந்த சம்பவம் …
-
- 0 replies
- 402 views
-
-
500-வது டெஸ்ட் போட்டியை காண அசாரூதீனுக்கு பிசிசிஐ அழைப்பு அசாரூதீன் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. இது இந்திய அணியின் 500-வது டெஸ்ட் போட்டியாகும். இதனை நினைவு கூரும் வகையில் இந்தப் போட்டியில் டாஸ் போடுவதற்கு வெள்ளி நாணயம் பயன்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன்களை அழைத்து கவுரவப்படுத்தவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது. முன்னாள் கேப்டன்களான சந்து போர்டே, வெங்சர்க்கார், கபில்தேவ், ரவிசாஸ்திரி, கவாஸ்கர், சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், காந்த், ராகுல் டிராவ…
-
- 0 replies
- 427 views
-
-
தினேஸ் சந்திமால் வைத்தியசாலையில்..! (படங்கள் இணைப்பு) இலங்கை கிரிக்கெட் அணியின் உபதலைவர் தினேஸ் சந்திமால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. நேற்று முன்னதினம் இடம்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றின் போது வலது கையில் ஏற்பட்ட உபாதை காரணமாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உபாதைக்குள்ளான சந்திமாலுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு மேலும் பல மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவிக்கின்றது. மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னரே இவருடைய உடல் நலம் தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியும் எனவும் கிரிக்…
-
- 0 replies
- 570 views
-
-
இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றி எங்கு கிடைத்தது தெரியுமா?? #500testsofIndia வரும் 22 ஆம் தேதி கான்பூரில் நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டி விளையாடுகிறது இந்திய அணி. இது இந்தியாவின் 500வது டெஸ்ட் போட்டி. 1932 ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க ஆரம்பித்தது இந்தியா. 84 வருட டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் சாதித்தது என்ன? சறுக்கியது என்ன? படங்கள், தகவலுடன் ஒரு பிளாஷ்பேக் இங்கே ... 1. முதல் டெஸ்ட் :- 1932 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராகத்தான் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆடியது இந்திய அணி. முதல் டெஸ்ட் நடந்தது இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில். ஆம். அங்கிருந்து தான் இந்திய அணி தனது பயணத்தை துவக்கியது. இந…
-
- 3 replies
- 1.3k views
-