விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7848 topics in this forum
-
உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி: விஸ்டன் இதழ் புகழாரம் கடந்த 2016-ம் ஆண்டின் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக விராட் கோலியை விஸ்டன் அறிவித்து அவருக்கு புதிய மகுடத்தை சூட்டியுள்ளது. இந்திய அணியில் தற்போது சூப்பர் மேனாக திகழ்ந்து வருபவர் கேப்டன் விராட் கோலி. ரன் எடுக்கும் எந்திரம் என்று தற்போது எல்லோராலும் அழைக்கப்படுகிறது. இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர் மேலும் இவரது ரன் குவிக்கும் வேக சூடுபிடித்தது. நியூசிலாந்து, வங்கதேசம், இங்கிலாந்து மற்ற…
-
- 0 replies
- 493 views
-
-
பஜ்ரங் புனியா: பள்ளியை தவிர்க்க மல்யுத்தம் பயின்றது முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றது வரை பிரதீப் குமார் பிபிசி தமிழ் 7 ஆகஸ்ட் 2021, 03:42 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,VIPIN KUMAR/HINDUSTAN TIMES VIA GETTY IMAGES) இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா டோக்யோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். ஆண்கள் 65 கிலோ உடல் எடைப் பிரிவில் ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்தியா சார்பாக விளையாடிய பஜ்ரங் புனியா இன்று கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த தெளலத் நியாஸ்பெகொவ்வை வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் எதிர்கொண்டு வெற்றி பெற்றார். சில …
-
- 0 replies
- 588 views
- 1 follower
-
-
பார்சிலோனாவை விமர்சிக்கிறார் நேமர் பரிஸ் செய்ன்ட் ஜேர்மா அணியின் புதிய ஒப்பந்தமான நேமர், தனது முன்னைய கழகமான பார்சிலோனாவின் பணிப்பாளர்கள் மீது, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். "பார்சிலோனாவுக்கு, இதைவிடச் சிறப்பான விடயங்கள் கிடைக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார். பார்சிலோனாவின் நட்சத்திர வீரராகக் காணப்பட்ட நேமர், உலக சாதனைத் தொகையான 222 மில்லியன் யூரோக்களுக்கு, பரிஸ் கழகமான பரிஸ் செய்ன்ட் ஜேர்மாவால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், தனது புதிய கழகத்துக்கான அறிமுகப்போட்டியில், 2 கோல்களைப் பெற்ற நேமர், 6-2 என்ற கோல் கணக்கில், தௌலோஸ் அணியை வீழ்த்துவதற்கு உதவியிருந்தார். …
-
- 0 replies
- 200 views
-
-
இலங்கை அணியின் நம்பிக்கை தரும் எதிர்காலம் இலங்கை அணியின் நம்பிக்கை தரும் எதிர்காலம் சிட்னியில் நடைபெற்ற 2015 உலகக் கிண்ண காலிறுதிப் போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்குப் பின்னர் அணியை அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு செல்ல வேண்டி ஏற்பட்டது. ஏனென்றால் அணியின் தூண்களாக இருந்த குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன இருவருமே சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்றார்கள். சங்கக்கார இதற்கு பின்னரும் ஒருசில டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தபோதும் அது அணிக்கு பலம் சேர்க்கவே தவிர அவரது இடம் நிரந்தரமானதாக இருக்கவில்லை. எனவே உலகக் கிண்ண போட்டிக்கு பின்னரான இலங்கை அணியில் …
-
- 0 replies
- 546 views
-
-
ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் பணியாற்றும் முதல் பெண் நடுவர் ஆஸ்திரேயாவில் நடைபெறும் உள்ளூர் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக கிளாரி போலோசாக் என்ற பெண் நடுவராக களமிறங்க உள்ளார். கான்பெரா: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளாரி போலோசாக் (29) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நடுவர் குழுவில் பணியாற்றி வருகிறார். சென்ற ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான உலகக் கோப்பை தொடரின் 4 போட்டிகளில் நடுவராக இருந்தார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் இவர் நடுவராக நியமிக்கப்பட்டுளார். ஆண்கள் கிரிக்கெ…
-
- 0 replies
- 469 views
-
-
விக்ராந்த், விஷ்ணு இல்லாத சென்னை சிசிஎல் அணி முதல் போட்டியில் தோல்வி! திரை நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் எனப்படும் சி.சி.எல் போட்டி நேற்று முதல் தொடங்கியது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் விளையாடிய சென்னை ரைனோஸ் அணியை பெங்கால் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. பெங்கால் அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. ஷாம் சென்னை சென்னை அணியின் கேப்டனாகவும் ஜாய் பெங்கால் அணி கேப்டனாகவும் செயல்பட்டார்கள். நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் பெங்கால் அணி அதிரடியாக விளையாடி 2 விக்கெட் இழப்புக்கு 91 ரன…
-
- 0 replies
- 357 views
-
-
சர்வதேச பனிச்சறுக்கல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் சர்வதேச பனிச்சறுக்கல் போட்டியில் பதக்கம் வென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையை 21 வயதான யுவதி அன்ச்சல் தக்கூர் தனதாக்கிக்கொண்டார். துருக்கியில் நடைபெற்ற அல்பைன் எஸ்டர் 3200 கிண்ண பனிச்சறுக்கல் போட்டியில் அன்ச்சல் தக்கூர் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இப் போட்டி சர்வதேச பனிச்சறுக்கல் (ஸ்கி) சம்மேளனத்தினால் நடத்தப்பட்டது. இந்தியாவில் பனிப்பொலிவு இடம்பெறுவது அரிது என்பதால் குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் பெரிதாக கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. வெண்கலப் பதக்கம் வென்ற அன்ச்சலை முதலாவதாக பாராட்டியவர்களில் இந்தியப் பிரதமர…
-
- 0 replies
- 322 views
-
-
ரிவர்ஸ் ஸ்விங்கின் அறிவியலும் ஆஸ்திரேலியா வைத்துக்கொண்ட ஆப்பும்! #SAvAUS ஆஸ்திரேலியா மொத்தமும் அப்சட்டாக இருக்கிறது. அனுபவமற்ற வீரர் ஒருவர் ஒழுக்கமற்ற செயலில் இறங்க, அது 'எங்கள் திட்டம்' என்று கேப்டன் அப்ரூவர் ஆகிவிட, ஆஸ்திரேலிய பிரதமரே அதைப் பற்றி நேரடியாக பேட்டி கொடுத்தார். கேப்டன், துணைக் கேப்டன் ராஜினாமா... இருவர் சஸ்பென்ஷன்... லீடர்ஷிப் குழு மீது விசாரணை என இரண்டு நாளில் ஏகப்பட்ட களேபரங்கள். மற்ற நாட்டு வீரர்களெல்லாம், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆஸி அணி மீதான தங்களின் வன்மத்தைக் கொட்டிக்கொண்டிருக்கின்றனர். ஐ.பி.எல் நிர்வாகம் முதல் ராஜஸ்தான் ராயலஸ் போர்டு வரை அடுத்து என்ன செய்வது எனக் காத்துக்கொண்டிருக்கின்றன. ஒரே ஒரு சம்பவம் சாம்பியன்…
-
- 0 replies
- 503 views
-
-
நியூசிலாந்து பிரபலம் வாய்ந்த ஆக்லாந்து ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தை கைவிடுகிறது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் புகழ்பெற்ற மைதானமாக ஈடன் பார்க்கை கைவிட்டு புதிய கிரிக்கெட் மைதானத்தை தயார் செய்கிறது. #nz கிரிக்கெட் விளையாடும் முக்கியமான அணிகளில் ஒன்று நியூசிலாந்து. இதுவரை உலகக்கோப்பை தொடரை வென்றது இல்லை என்றாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நியூசிலாந்தில் உள்ள முக்கியமான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று ஆக்லாந்து ஈடன் பார்க். 1930-ம் ஆண்டில் இருந்து இந்த மைதானத்தில் கிரிக்கெ…
-
- 0 replies
- 374 views
-
-
`எப்படி இருக்கீங்க?!’ - கொஞ்சும் தமிழில் மகள் கேட்ட கேள்விக்கு தோனி பதில் தோனி, தனது மகளுடன் தமிழில் உரையாடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ஆஸ்திரேலியத் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ள தோனி, தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார். அவ்வப்போது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். சமீபத்தில் சத்தீஸ்கரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தோனி, 2011ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி குறித்த நினைவலைகளைப் பகிர்ந்திருந்தார். யுவராஜுக்கு முன்னதாகத் தாம் களமிறங்கியது ஏன் என்பது குறித்தும் அவர் பேசியிருந்தார். ஓய்வு நாள்களில் தனது மகள் ஸிவாவுடன் இருப்பது போன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட…
-
- 0 replies
- 882 views
-
-
என் அணிக்கு இவர் கட்டாயம் வேண்டும்… அடம் பிடிக்கும் விராட் கோஹ்லி..! இந்திய அணியில் தற்போது ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகள் என அனைத்திற்கும் தலைமையேற்றுள்ளார் விராட் கோஹ்லி. இவர் தலைமையிலான இந்திய அணி அண்மையில் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதைத் தொடர்ந்து நேற்று நடந்த டி 20 போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. டி 20 தொடரில் முதல் முறையாக தலைவர் பதவியை வகித்து முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளார் கோஹ்லி. இந்திய அணிக்கு தலைவராக உள்ள கோஹ்லி, இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடரின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் தலைவராக உள்ளார். இந்நிலையில் இந்தாண்டு நடத்தப்படும் ஐபி…
-
- 0 replies
- 565 views
-
-
டிவில்லியர்ஸ் விரைவில் ஆட்டமிழக்க வேண்டிக்கொள்வதுதான் ஒரே வழி: வங்கதேச பயிற்சியாளர் ஏ.பி. டிவில்லியர்ஸை கண்டு நடுங்கும் வங்கதேச அணி. | கோப்புப் படம். வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பலம் குறித்து வங்கதேச கிரிக்கெட் பயிற்சியாளர் ஹதுரசிங்கே அச்சம் கலந்த குரலில் பேசியுள்ளார். வங்கதேச அணியின் மிகப்பெரிய பலமே அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள்தான், தன் நாட்டு பேட்ஸ்மென்கள் ஒரு ரன் எடுத்தால் காட்டுக்கூச்சல் போடுவதும், எதிரணி வீரர் புரட்டி எடுத்தால் கூட வாயைத் திறக்காமல் மைதானமே மவுனத்திலும் நிச்சலனத்திலும் மூழ்கிவிடுவதை அனைவரும் பார்த்திருக்கலாம். இந்நிலையில், அந்த உற்சாகமான ரசிகர்களின் வாயை தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் அ…
-
- 0 replies
- 295 views
-
-
முரளிதரன், ரிச்சர்ட் ஹேட்லிக்குப் பிறகு விரைவு 400 விக்கெட்டுகள்: டேல் ஸ்டெய்ன் சாதனை தமிம் இக்பால் விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் போட்டிகளில் 400வது விக்கெட்டைக் கைப்பற்றிய டேல் ஸ்டெய்ன். | படம்: ஏ.எஃப்.பி. வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தமிம் இக்பால் விக்கெட்டை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் போட்டிகளில் 400-வது விக்கெட்டைக் கைப்பற்றி சாதனை புரிந்தார். முத்தையா முரளிதரன் 72 டெஸ்ட்களில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடம் வகிக்க, நியூஸிலாந்தின் வேகப்பந்து முன்னாள் மேதை ரிச்சர்ட் ஹேட்லி 80 போட்டிகளில் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்ற தற்போது டேல் ஸ்டெய்ன் 80-வது டெஸ்ட் போட்டியில் 400-வது விக்கெட்டை வீழ்த்தி ஹேட்லியுடன் 2-…
-
- 0 replies
- 236 views
-
-
குசல் மன உறுதியுடன் ஆற்றலை வெளிப்படுத்தினார்.-ஏஞ்சலோ மெத்யூஸ் 2015-09-04 12:00:05 குசல் ஜனித் பெரேரா மன உறதியுடன் துடுப்பெடுத்தாடி தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பற்றிப்பிடித்துக்கொண்டார் எனக் கருதுவதாக இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் குறிப்பிட்டார். ''அவர் ஓர் ஆற்றல்மிக்க வீரர். எந்தவகையான சூழ்நிலையிலும் அவர் மன உறுதியுடன் விளையாடக்கூடியவர். எமது துடுப்பாட்ட வரிசையைப் பற்றி நாங்கள் பல விடயங்கள் பற்றி கலந்துரையாடினோம். மத்திய வரிசையில் விரைவாக ஓட்டங்களைப் பெறக்கூடிய ஒருவர் எமக்குத் தேவைப்பட்டது. அதனால்தான் குசலை 7ஆம் இலக்க வீரராக கொண்டுவந்தோம்'' என இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது …
-
- 0 replies
- 322 views
-
-
நெய்மர், சுவாரஸின் ஆட்டத்தால் வில்லாரியலை வீழ்த்தியது பார்சிலோனா பார்சிலோனா அணியில் கடந்த சில வாரங்களாக லயனல் மெஸ்ஸி காயம் காரணமாக விளையாடாமல் உள்ளார். ஆனால், அவர் இல்லாத குறையை நெய்மர் மற்றும் சுவாரஸ் ஆகியோர் சிறப்பான முறையில் சரிசெய்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-ஆவது பாதி நேரத்தில் 60-ஆவது நிமிடத்தில் நெய்மர் முதல் கோலை பதிவு செய்தார். அடுத்த 10ஆ-வது நிமிடத்தில் சுவாரஸ் ஒரு கோல் அடித்து அசத்தினார். 85ஆ-வது நிமிடத்தில் நெய்மர் மேலும் ஒரு கோல் அடிக்க, பார்சிலோனா …
-
- 0 replies
- 191 views
-
-
யுஏஇ-யில் ஆடுவதில் என்ன பிரச்சினை?: பிசிசிஐ-க்கு பாக். கிரிக்கெட் வாரியம் கேள்வி கோப்புப் படம்: ஏ.பி. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவில் வந்து விளையாட பிசிசிஐ தலைவர் ஷஷாங்க் மனோகர் விடுத்த அழைப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கவில்லை. “இந்தியாவில் விளையாடும் பேச்சுக்கே இடமில்லை” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஷஹார்யார் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். “ஏன் யுஏஇ-யில் ஆட முடியாது என்ற காரணத்துக்காக நான் இன்னும் காத்திருக்கிறேன். நாங்கள் 2007 மற்றும் 2012-ல் இந்தியா சென்று விளையாடினோம், மீண்டும் முடியவே முடியாது. இது எங்கள் தொடர் எனவே எங்கள் நாட்டில்தான் விளையாடுவோம், அதாவது யுஏஇ-யில் தான் விளையாடுவோம். …
-
- 0 replies
- 352 views
-
-
கிரிக்கெட் துளிகள் [15 - March - 2008] * தென்ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சகீர்கான் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. கணுக்கால் காயத்தால் அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய சகீர்கான் காயத்துக்கு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், முழுமையாக குணமடையவில்லை. `சர்வதேச கிரிக்கெட்டுக்கு நான் இன்னும் தயாராகவில்லை' என்று சகீர்கான் கூறியிருக்கிறார். * பாதுகாப்பு காரணமாக இந்த மாத இறுதியில் மேற்கொள்ளவிருந்த பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை அவுஸ்திரேலியா தள்ளி வைத்துவிட்டது. இந்தத் தொடர் நடந்திருந்தால் அவுஸ்திரேலிய வீரர்கள் ஏப்ரல் 18 ஆம் திகதி தொடங்கும் இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட்டில் விளையாட முடியாமல் போயிருக்கும். ஆ…
-
- 0 replies
- 1.1k views
-
-
தனி ஒருவனை கிரிக்கெட் உலகம் மிஸ் செய்ய 7 காரணங்கள்! இந்த வெஸ்ட் இண்டீஸ் வீரரை தெரியாமல் யாரும் இருக்க முடியாது. களத்தில் இவரது வினோதமான பேட்டிங் ஸ்டைலை ரசிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். மூன்று ஸ்டெம்புகளையும் காட்டி நிற்கும் மனிதர் பந்து வீச்சாளரின் வேகத்துக்கு ஏற்ப ஸ்டெம்புகளை நோக்கி நகர்ந்து பந்தை பவுண்டரிக்கு விரட்டுவது கிரிக்கெட்டின் கிளாசிக் ஷாட்களில் ஒன்று. இதற்கு சொந்தக்காரர் இந்திய வம்சாவளியை சேர்ந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிவ் நாராயண் சந்தரபால் அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒரு கிளாசிக் கிரிக்கெட்டர். அவர் ஓய்வை அறிவித்துள்ளார். இவரை கிரிக்கெட் உலகம் இந்த 7 காரணங்களுக்காக கட்டாயம் மிஸ் செய்யும். தனி ஒருவன்! மிகப்பெரிய ஜாம்பவான்களை கொண்ட வெஸ்ட் இ…
-
- 0 replies
- 527 views
-
-
டிவில்லியர்ஸ், அம்லா அதிரடி, 9 விக்கெட்களால் இங்கிலாந்தை வென்றது தென் ஆபிரிக்கா இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது இருபது 20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 9 விக்கெட்களால் வென்றது. தென் ஆபிரிக்காவின் ஜொஹான்னஸ்பேர்க் நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 171 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 14.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஏ.பி. டிவில்லியர்ஸ் 29 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பெற்றார். ஹஷிம் அ…
-
- 0 replies
- 304 views
-
-
26 அணிகள் பங்கேற்கும் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பம் By Mohammed Rishad - இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பருவகாலத்துக்கான (2019/20) உள்ளூர் முதல்தர கழகங்களுக்கிடையிலான Major A மற்றும் Major B கிரிக்கெட் போட்டித் தொடர்கள் இன்று (31) முதல் இடம்பெறவுள்ளன. நான்கு நாட்களைக் கொண்டதாக A மற்றும் B பிரிவுகளாக நடைபெறவுள்ள இம்முறை போட்டித் தொடரானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன்படி, மேஜர் ஏ பிரிவுக்கான போட்டிகள் 2 குழுக்களாக நடைபெறவுள்ளதுடன், அதில் இடம்பிடித்துள்ள 14 அண…
-
- 0 replies
- 534 views
-
-
தோனியின் தலை வெட்டப்பட்டது - ரசிகர்களின் பதிலடி! (காணொளி) சமீபத்தில் நடந்த ஆசிய கிண்ண இறுதி போட்டிக்கு முன்பாக இந்திய அணி தலைவர் தோனியின் வெட்டப்பட்ட தலையுடன் பங்காளதேஷ் பந்துவீச்சாளர் தஸ்கின் ஓடிவருவது போன்று ஒரு போட்டோவை மார்பிங் செய்து வெளியிட்டார்கள் பங்காளதேஷ் ரசிகர்கள். இந்த மார்பிங் போட்டோ இந்திய ரசிகர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது நடந்துவரும் டி20 உலக கிண்ண தொடரில் இன்று பங்காளதேஷூம் இந்தியாவும் மோதவுள்ளன. இந்த போட்டிக்கு முன்பாக பங்களதேஷ் ரசிகர்களை கலாய்த்து இந்திய ரசிகள் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவனாது தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் போட்டோஷாப் வைத்திருக்கும் இந்திய …
-
- 0 replies
- 517 views
-
-
ஜிம்பாப்வே தொடர்: தோனிக்குக் காத்திருக்கும் சோதனைகள் தோனி இதுவரை 275 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.| படம்: ஏ.பி. ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடும் தொடரில் நாளை (சனிக்கிழமை) முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் தொடங்குகிறது. இந்திய அணியில் தோனி, மணிஷ் பாண்டே, அம்பாத்தி ராயுடு தவிர மற்றோர் அனுபவமில்லாதவர்கள். அன்னிய மண்ணில் அனுபவமற்ற வீரர்களை நம்பி தோனி ஜிம்பாப்வே பிட்சில் களமிறங்குகிறார். அதுவும் தோனி ஜிம்பாப்வேவுக்கு கடைசியாக சென்று விளையாடியது 2005-ம் ஆண்டு, அவரது கிரிக்கெட் வாழ்வின் ஆரம்ப காலமாகும் அது. இந்நிலையில் ஜிம்பாப்வே அணியின் சமீபத்திய ஆட்டங்கள் அந்த அணியை பெரிய அச்சுறுத்தலாகக் காட்…
-
- 0 replies
- 523 views
-
-
'அது ஒரு மெலிசான கோடு' – கோலி குறித்து கோச் கும்ப்ளே இந்திய அணியின் புதிய பயிற்சியாளரான கும்ப்ளே, லோலியின் ஆக்ரோஷமான அணுகுமுறையை தான் விரும்புவதாகவும், அதையே இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெளிக்காட்டும் என்றும் கூறினார். கர்நாடகாவைச் சார்ந்த 45 வயதான அணில் கும்ப்ளே, இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சேர்த்து 956 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார். கடந்த வாரம் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்ட கும்ப்ளே, இந்திய அணியுடன் தனது முதற்கட்ட பயிற்சியைத் தொடங்கிவிட்டார். இம்மாதம் தொடங்கவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரே, பயிற்சியாளராக கும்ப்ளேவிற்கு முதல் டெஸ்ட். இந்நிலையில் நேற…
-
- 0 replies
- 623 views
-
-
மொனாகோவின் தியேமௌ பகாயோகோவை ரூ. 337 கோடி கொடுத்து வாங்கியது செல்சியா மொனாகோவின் நடுகள வீரரான தியேமொள பகாயோகோவை 337 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது பிரிமீயர் லீக் அணியான செல்சியா. பிரான்ஸ் கால்பந்து அணியின் நடுகள வீரர் தியேமௌ பகாயோகோ. 22 வயதான இவர் மொனாகோ கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த வருடத்திற்கான யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் மொனாகோ அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதி வரை முன்னேறியது. பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கால்பந்து லீக் தொடரான லீக் 1-ல் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இவரது ஆட்டத்தை பார்த்து இங்கிலீஷ் பிரிமீய…
-
- 0 replies
- 272 views
-
-
சபையையும் தேர்வாளர்களையும் விமர்சிக்கிறார் இலங்கைப் பயிற்றுநர் இலங்கை கிரிக்கெட் அணி, அண்மைக்காலமாகவே தோல்விகளைச் சந்தித்துவரும் நிலையில், அதன் நிலைமை குறித்து, அணியின் இடைக்காலப் பயிற்றுநர் நிக் போதாஸ், இலங்கை கிரிக்கெட் சபை, அணியின் தேர்வாளர்கள் ஆகியோர் மீது, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இவ்வாண்டில், தென்னாபிரிக்காவில் வைத்து தென்னாபிரிக்காவுக்கு எதிராகத் தோல்வியடைந்த இலங்கை அணி, அதன் பின்னர் பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கெதிராகவும் குறிப்பிடும் படியான தோல்விகளைப் பெற்றுக் கொண்டது. பின்னர், இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்த அவ்வணி, தற்போது முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில…
-
- 0 replies
- 295 views
-