Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. விவ் ரிச்சர்ட்ஸைச் சந்தித்து உரையாடிய கோலி, இந்திய வீரர்கள் படம்: பிசிசிஐ பயிற்சி ஆட்டம் முடிந்து முதல் டெஸ்ட் போட்டிக்காக ஆன்ட்டிகுவா வந்த இந்திய அணியினர் தீவிர பயிற்சி அமர்வுக்கு முன்பாக மேற்கிந்திய முன்னாள் சூரர் விவ் ரிச்சர்ட்ஸைச் சந்தித்து உரையாடினர். ஒரு மாலைப்பொழுதை விவ் ரிச்சர்ட்ஸுடன் இந்திய அணி வீரர்களான கோலி, ராகுல், முரளி விஜய், ஷிகர் தவண், ஸ்டூவர்ட் பின்னி, ரஹானே ஆகியோர் செலவிட்டனர். அந்தச் சந்திப்பின் போது விவ் ரிச்சர்ட்ஸ் இந்திய வீரர்களுக்கு நிறைய உற்சாகமூட்டினார். விராட் கோலி ஆஸ்திரேலியாவில் அடித்த 4 டெஸ்ட் சதங்களை குறிப்பிட்டு விவ் ரிச்சர்ட்ஸ் அவரை பாராட்டி வாழ்த்தினார். மேலும் விராட் கோலியின் அதிரடி அணுகுமுற…

  2. தம்மை நிரூபித்துக் காட்டியது பாகிஸ்தான் இங்கிலாந்து மண்ணிலிருந்து பாகிஸ்தான் அணி, இறுதியாகப் புறப்பட்டபோது, அவமானங்களைச் சுமந்துகொண்டு, தமது மரியாதையையும் நற்பெயரையும் இழந்த அணியாகவே, பாகிஸ்தானுக்குச் சென்றடைந்தது. ஆனால், திரும்ப அந்நாட்டுக்குள் நுழைந்த பாகிஸ்தான் அணி, தமது அவமானத்திலிருந்து உச்சநிலைப் புகழைப் பெற்றுக் கொண்டுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், 75 ஓட்டங்களால் வெற்றிபெற்றதைத் தொடர்ந்தே, பாகிஸ்தான் அணிக்குப் இப்புகழ் ஏற்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற இரு அணிகளுக்குமிடையிலான தொடரின் இறுதி டெஸ்ட் போட்டி, இதே லோர்ட்ஸ் மைதானத்திலேயே இடம்பெற்றது. அப்போட்டியில் மொஹம…

  3. ரவி சாஸ்திரி சாதனை சமன் இங்கிலாந்தில் கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிசன்-2 முதல் தர கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஒரு போட்டியில் கிளாமோர்கன் - டெர்பி ஷையர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கிளாமோர்கன் அணியின் பேட்ஸ்மேன் அனேயுரின் டொனால்டு 123 பந்தில் இரட்டை சதம் விளாசினார். 80 பந்தில் சதம் கடந்த அவர், அடுத்த 43 பந்தில் இரட்டை சதம் அடித்தார். 100, 150 மற்றும் 200 ரன்களை அனேரியுன் சிக்ஸ் அடித்து நிறைவு செய்தார். அவர் 136 பந்தில் 26 பவுண்டரி, 15 சிக்சர்களுடன் 234 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி 1985-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற முதல் தர போட்டியில் 123 பந்தில் இரட்டை சதம் அடித்தார். இது…

  4. சர்ச்சையான ஜொய்ஸின் ஆட்டமிழப்பு அயர்லாந்தின் பெல்பாஸ்ட்டில் இடம்பெற்ற அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், அயர்லாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் எட் ஜொய்ஸுக்கு வழங்கபட்ட ஆட்டமிழப்பு சர்ச்சையாகியுள்ளது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், ஒரு கட்டத்தில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 109 ஓட்டங்களுடன் காணப்பட்ட நிலையில், ரஷீட் கானின் ஆட்டமிழக்காத 60, மொஹம்மட் நபியின் 50 ஓட்டங்கள் கைகொடுக்க 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முன்னதாக, ரஹ்மட் ஷா 48 ஓட்டங்களைப் பெற்றிருந்ததோடு, பந்துவீச்சில் அன்டி மக்ப…

  5. 20 வருட சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் யசீர் ஷா டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யசீர் 20 வருட சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் யசீர் ஷா 20 வருட டெஸ்ட் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கட்டுகளை கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 4 ஆவது இடத்திலிருந்த யசீர் 20 வருட சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் யசீர் ஷா 3 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பெற்றுள்ளார். இந்த பட்டியலில் அஸ்வின், என்டர்ஸன் மற்றும் போர்ட் ஆகியோர் முறையே இரண்டாம் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை பிடித்துள்ளனர்…

  6. மேற்கிந்திய தீவுகள் அணியின் புதிய முகாமையாளர் ஜோயல் கார்னர் மேற்கிந்திய தீவுகள் அணியின் புதிய முகாமையாளராக ஜோயல் கார்னர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மூன்று வருடகால ஓப்பந்தத்தின் அடிப்படையில், இந்திய அணியுடனான தொடரிலிருந்து தனது பணியை ஆரம்பிக்கவுள்ளார். 63 வயதான ஜோயல் கார்னர் 2009 தொடக்கம் 2010 ஆண்டுவரை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் பணிப்பாளராக பணியாற்றியுள்ளதோடு , பார்படோஸ் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஏ அணியின் முகாமையாளராகவும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஜோயல் கார்னர் தெரிவிக்கையில் மீண்டும் அணியில் முகாமையாளராக இணைந்துக்கொண்டமை சந்தோஷமளித்துள்ளதாகவும், தனது அனுபவம…

  7. 'தேசப்பற்று இல்லாதவள் என்றபோது மனமுடைந்து போனேன்!' - சானியா பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது சுயசரிதை புத்தகத்தை (ACE against ODDS) வெளியிட்டு உள்ளார். அந்த புத்தகத்தில் பல்வேறு தகவல்களை அவர் பதிவு செய்துள்ளார். புத்தக வெளியீட்டின்போது, தன்னை தேசப்பற்று இல்லாதவள் என்று மற்றவர்கள் விமர்சித்ததற்கு மனமுடைந்து போனதாக தெரிவித்தார். ''நான் 2003ம் ஆண்டுதான் டென்னிஸ் களத்திற்கு வந்தேன். அப்போது எனக்கு 16 வயது. இத்தனை ஆண்டுகள் இந்த ஆட்டத்தை ரசித்து விளையாடி விட்டேன். பத்திரிகைகளில் அடிக்கடி என்னை பற்றி தவறாக எழுதப்பட்டு வந்தது. அது சரியோ தப்போ எனக்கு தெரியாது. ஒருவேளை தவறான புரிதலாக கூட இருக்கலாம். அதனால்தான் என்னை பற்றி மற்றவர்…

  8. காற்பந்து வரலாற்றில் புதியதொரு அத்தியாயமாக முதலாவது ப்ரீமியர் புட்ஸால் போட்டிகள் காற்பந்து வரலாற்றில் புதியதொரு அத்தியாயமாக முதலாவது ப்ரீமியர் புட்ஸால் போட்டிகள். காற்பந்து வரலாற்றில் புதியதொரு அத்தியாயமாக முதலாவது ப்ரீமியர் புட்ஸால் போட்டிகள் இந்தியாவில் ஆரம்பமாகியது. 1930 ஆம் ஆண்டு உருகுவேஇல் புட்ஸால் காற்பந்து போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன. காற்பந்து விளையாட்டை வெளிப்புற விளையாட்டாக மட்டும் விளையாடி வந்த உலகிற்கு காற்பந்தை உள்ளக விளையாட்டாகவும் அறிமுகப்படுத்தியது புட்ஸால் வகைப் போட்டிகள். புட்ஸால் போட்டிகள் பொதுவாக காற்பந்து விளையாட்டின் விதியையே கொண்டிருந்தாலும் உள்ளக விளையாட்டின் சில விதிகளையும் சேர்த்து புட்ஸால் போட்டிகளின் விதிகள் அமைக…

  9. சுனில் கவாஸ்கர் சாதனையை முறியடித்த அலிஸ்டர் குக் படம்: ராய்ட்டர்ஸ்/ இந்து ஆர்கைவ்ஸ். தொடக்க வீர்ராகக் களமிறங்கி அதிக ரன்களைக் குவித்ததற்கான சுனில் கவாஸ்கர் சாதனையை இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் முறியடித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 81 ரன்கள் எடுத்த குக், மொகமது ஆமிர் பந்தில் பவுல்டு ஆனார். இவர் மொகமது ஆமிர் பந்தை கட் செய்து பவுண்டரிக்கு அனுப்பிய 61 ரன்களுக்குச் சென்ற போது கவாஸ்கர் சாதனை முறியடிக்கப்பட்டது. இதில் தொடக்க வீரராக சுனில் கவாஸ்கர் எடுத்திருந்த 9,607 ரன்கள் என்ற சாதனையை அலிஸ்டர் குக் முறியடித்து தற்போது 9,630 ரன்கள் எடுத்து முதலிடம் வகிக்கிறார். 123 டெஸ்ட் போட்டிக…

  10. 'இனிமேல் இப்படி ஒரு கேள்வியை கேட்கமாட்டேன்'- சானியாவிடம் மன்னிப்பு கேட்ட ராஜ்தீப் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, அடிக்கடி ஏதாவது கருத்து சொல்லி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். ஆனால் கடந்த ஒரு வருடமாக அமைதியாகவே இருந்து வந்தார். ‘Ace Against Odds’ என்ற சானியாவின் சுய சரிதை புத்தகம் அண்மையில் வெளியிடப்பட்டது. இது குறித்து பிரபல ஆங்கில தொலைக்காட்சியின் லைவ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் சானியா. இந்த நிகழ்ச்சிக்கு, பிரபல தொகுப்பாளர் ராஜ்தீப் சர்தேசாய் நெறியாளராக செயல்பட்டார். நிகழ்ச்சியின்போது எடுத்தவுடனேயே ஒரு கேள்வியை கையில் எடுத்த ராஜ்தீப், சானியா அளித்த பதிலால் மன்னிப்பு கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். " என்ன சானியா ஓய்வு பெறு…

  11. 82 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட்டில் 42 வயது மிஷ்பா படைத்த சாதனை கிரிக்கெட்டில் அதிக வயதில் சதமடித்த கேப்டன் என்ற பெருமையை பாகிஸ்தான் அணியின் 42 வயது கேப்டன் மிஷ்பா உல் ஹக் பெற்றுள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான், பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி 77 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில், ஜோடி சேர்ந்த மிஷ்பா உல் ஹக்கும் ஆஷாத் சபீக்கும் நிதானமாக விளையாடி, ரன்களை உயர்த்தினர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 148 ரன்களை சேர்த்தது. மிஷ்பா உல் ஹக் 110 ரன்களை அடித்தார். 154 பந்துகளை எதிர்கொண்ட அவர், 17 பவுண்டரிகளையும் விளாசின…

  12. போர்ச்சுகலுக்கு யூரோ கோப்பையை வாங்கிக் கொடுத்தது சிறைக் கைதி மகன்! அண்மையில் நடந்து முடிந்த ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில், போர்ச்சுகல் அணி கோப்பையை வென்றது. பிரான்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், 109வது நிமிடத்தில் ஈடர் அடித்த கோலால், போர்ச்சுகல் அணி, ஐரோப்பிய கோப்பையுடன் நாடு திரும்பியது. இந்த ஒரே கோலால், ஒரே நாளில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோவுக்கு இணையாக ஈடரும் பிரபலமாகி விட்டார். ஆனால் ஈடர் வாழ்க்கையில் சந்தித்த இன்னல்கள் அதிகம். ஈடருக்கு 12 வயதாக இருக்கும் போது, அவரது தந்தை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இங்கிலாந்தில் வசித்து வந்த அவர், ஈடரின் சித்தியை கொலை செய்த வழக்கில் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.…

    • 4 replies
    • 605 views
  13. இலங்கையை வீழ்த்தத் திட்டமிடும் முரளி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கைக்குமிடையிலான கிரிக்கெட் தொடரின் தயார்படுத்தல்களில், அவுஸ்திரேலிய அணி ஈடுபட்டுவரும் நிலையில், அவ்வணிக்கான சுழற்பந்துவீச்சு ஆலோசகராகச் செயற்பட்டுவரும் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், தனது பணியை நியாயப்படுத்தியுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் பலர், வெளிநாடுகளைச் சேர்ந்த அணிகளால் ஒப்பந்தம் செய்யப்படுவதொன்றும் புதிதன்று. குறிப்பாக, இலங்கை கிரிக்கெட் சபை மீது முன்னாள் வீரர்களுக்கு இன்னமும் காணப்படுவதாகக் கூறப்படும் எதிர்ப்பு அல்லது நம்பிக்கையின்மை காரணமாக, வெளிநாட்டு அணிகளோடு இணைந்து செயற்படுவதற்கு, அவ்வ…

  14. 88 லட்சம் ரூபாய் வாடகை சொகுசு படகில் பொழுதை கழிக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து போட்டியில் முத்திரை பதித்து வருபவர் 31 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஸ்பெயின் நாட்டின் பிரபல கால்பந்து கழகமான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் இவர், இந்த தலைமுறையில் சிறந்த வீரராக கருதப்படும் மெஸ்சியுடன் சேர்ந்து புகழ்பெற்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யூரோ கோப்பை இறுதிப்போட்டியில் போர்த்துக்கல்-பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினார். இதில் கலந்து கொண்ட ரொனால்டோவிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் 25ஆவது நிமிடத்தில் களத்தை விட்டு வெளியேறினார். இருந்தாலும் வீரர்களுக்கு வெளியில் இருந்து அறிவுரை வழங்கினார். இந்த போட்டியில் போர்த்துக்கல் 1-0 என வெற்றி பெற்றது. …

  15. சனோகீத் சண்முகநாதன், சம்மு அஷான் அதிரடியில் தொடரை வென்றது இலங்கையின் இளையோர் அணி. சனோகீத் சண்முகநாதன், சம்மு அஷான் அதிரடியில் தொடரை வென்றது இலங்கையின் இளையோர் அணி. இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள தென் ஆபிரிக்க, மற்றும் இலங்கை இளையோர் அணிகளுக்கிடையிலான போட்டித் தொடரில் இலங்கையின் 19 வயத்துக்குட்படந்தோர் அணி தொடரை வென்று அசத்தியுள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்த தென் ஆபிரிக்க இளையோர் அணி, அதன் பின்னர் மீதமான இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவி தொடரை இழந்துள்ளது. தீர்மானம் மிக்க ‘காமினி திஸாநாயக்க’ தொடரின் இறுதி போட்டி கொழும்பு,பி, சரவணமுத்து மைதானத்தில் நேற்று இடம்பெற்றது. இந்தப் போட்டியில் தமிழ் ப…

  16. ரகசியங்களை வெளியிடுவேன்..! பாக். கிரிக்கெட் வாரியத்தை மிரட்டும் அப்ரிடி பாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு எப்படி மோசமான நிலையில் உள்ளது என்பது குறித்து ஓய்வு பெற்ற பின்னர் வெளியிடுவேன் என அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி மிரட்டல் விடுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அப்ரிடி அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் உள்ள சில வீரர்களை விட சிறந்த முறையில் விளையாடினேன் என உணர்ந்தேன். அதனால் ஐ.சி.சி. டி20 உலக கோப்பை போட்டிக்கு பின் கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெறவில்லை. அணியில் இருந்து விலகும்பொழுது அது தகுதியுடைய ஒன்றாக இருக்க வேண்டும் என விரும்பினேன். நாட்டில் கிரிக்கெட் விளையாட்டு எப்படி மோசமான நில…

  17. ஆரம்பமானது வடமாகாண விளையாட்டுப் போட்டி வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில், வட மாகாண பாடசாலைகளின் வீர, வீராங்கனைகளுக்கிடையிலான தடகள மற்றும் மைதான நிகழ்வுகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (14) முதல் ஆரம்பமாகியது. இன்றை ஆரம்ப நிகழ்வு வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டு திணைக்களத்தின் செயலாளர் ஆர்.இரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக இந்திய துணைத்தூதர் ஆ.நடராஜன் கலந்துகொண்டார். இந்த விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. ஐந்து நாட்களிலும் 258 மைதான மற்றும் தடகள போட்டிகள் நடத்தப்பட…

  18. யூரோவின் ‘தல’! எம்.பிரதீப் கிருஷ்ணா `கிளப்புக்கு ஹீரோ... நாட்டுக்கு ஸீரோ’ என்ற விமர்சனத்தை அதிரடியாக உடைத் திருக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. முதன்முறையாக ஐரோப்பாவின் மிகப்பெரிய கெளரவமான யூரோ கோப்பையை ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. கால்பந்தைத் தவிர்த்து வேறு எந்த விளையாட்டிலும் பிரசித்திப்பெறாத நாடு போர்ச்சுக்கல். ஆனால், அது கால்பந்திலும் இதுவரை எந்தக் கோப்பையையும் வென்றது இல்லை. `நம் அணி ஒருமுறையாவது உலக அளவில் ஒரு கோப்பையை வெல்லாதா?’ என ஏங்கிக் கிடந்தது போர்ச்சுக்கல். மொத்த தேசத்தின் ஏக்கத்தையும் அணித் தலைவனாக நின்று, கோப்பையை வென்று கொண்டாட் டத்தைத் தொடங்கிவைத்திருக்கிறார் ரொனால்டோ. யூ…

  19. மகி­ழடித்­தீவு மகிழை இளைஞர் விளை­யாட்டுக் கழ­கத்தின் கால்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்டி ; முத­லைக்­குடா விநா­யகர் அணி சம்­பி­ய­னா­கி­யது (சதீஷ்) மட்­டக்­க­ளப்பு மகி­ழடித்­தீவு மகிழை இளைஞர் விளை­யாட்டுக் கழ­கத்­தினால் நடத்­தப்­பட்ட கால்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்­டியில் முத­லைக்­குடா விநா­யகர் அணி சம்­பி­ய­னா­கி­யுள்­ளது. 1987 மற்றும் 1991ஆம் ஆண்­டு­களில் இப்­பி­ர­தே­சத்தில் படு­கொலை செய்­யப்­பட்ட உற­வு­களின் ஞாப­கார்த்­த­மாக இந்த கால்­பந்­தாட்டச் சுற்­றுப்­போட்டி ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. 20 இற்கும் அதி­க­மான கழ­கங்கள் இப்­போட்­டி­களில் பங்…

  20. பிபா கால்பந்து தரவரிசை இன்று வெளியிடப்பட்டது. இதில் யூரோ கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிரான்ஸ் 10 இடங்களும், வேல்ஸ் 15 இடங்களும் முன்னேறியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் யூரோ கோப்பை கால்பந்து போட்டி தொடர் முடிவடைந்தது. இந்த தொடரில் போர்ச்சுக்கல் முதன்முறையாக கோப்பையை வென்றது. போட்டியை நடத்திய பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கத்துக்குட்டி அணியான வேல்ஸ், ஜெர்மனி ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதிக்கு முன்னேறியதால் பிபா தரவரிசையில் வேல்ஸ் அணி மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. இதற்குமுன் வேல்ஸ் அணி 26-வது இடத்தில் இருந்தது. இன்று வெளியிடப்பட்ட ப…

  21. லார்ட்ஸ்...இங்கிலாந்து...6 ஆண்டுக்கு பிறகு மீண்டும் முகமது ஆமிர்! #ThrowbackThursday ஆகஸ்ட் 2010, சல்மான் பட் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்து மண்ணில் படுதோல்வி அடைந்து திரும்பியது. தொடர் நாயகன் முகமது ஆமிர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வேன்டுமென்றே நோபால் வீசியது தெரிய வந்து 5 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் திரும்ப களம்கண்ட ஆமீர் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சு கில்லியாகியுள்ளார். அணிக்கு திரும்பியதை நன்றாக பயன்படுத்தி கொண்டார். உலகின் அதி பயங்கர வீரர்களான கோலி, டிவில்லியர்ஸையே டி20 போட்டிகளில் நிலை குலைய வைத்தார். ஆசியக் கோப்பையில் இந்தியாவை அலறவிட்ட ஆமீருக்கு ஒரு பேட்டை பரிசளிப்பதாக கோலி கூறி உலகக் கோப்பையில் அதன…

  22. அயர்லாந்தை வென்றது ஆப்கானிஸ்தான் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் அயர்லாந்தில் இடம்பெற்றுவரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான், தொடரில், 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து, முதலில் ஆப்கானிஸ்தானை துடுப்பெடுத்தாட பணித்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 250 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக, மொஹம்மட் ஷஷாட் 66, நஜிபுல்லா ஸட்றான் 59 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அயர்லாந்து அணி சார்பாக, கெவின் ஓ பிறைன், பரி மக்கிராத்தி ஆகியோர் தலா ந…

  23. மொரின்ஹோ யுகத்தை எதிர்பார்க்கும் றூணி மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் நட்சத்திர வீரரான வெய்ன் றூணி, தனது அணியின் புதிய முகாமையாளரான ஜொஸ் மொரின்ஹோவின் கீழ் விளையாடுவதற்கு, அதிக ஊக்கத்துடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளதோடு, இடம்பெறவுள்ள பிறீமியர் லீக் பருவகாலம் தொடர்பாக எதிர்பார்ப்புடன் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் பணியாற்றிய லூயிஸ் வான் காலின் காலத்தில், மத்தியகள வீரராக விளையாடிய வெய்ன் றூணி, கடந்த பருவகாலத்தில் கோல்களைப் பெறுவதற்குத் தடுமாறியிருந்தார். ஆனால், இம்முறை அவரை முன்கள வீரராகக் களமிறக்கும் சமிக்ஞைகளை, மொரின்ஹோ வெளியிட்டுள்ளார். அத்தோடு, புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஸல்ட்டான் இப்ராஹிமோவிக்குடன் இணைந்து,…

  24. தடிப்பான துடுப்புகளுக்கு வருகிறது ஆப்பு கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் துடுப்புகளின் அளவை மட்டுப்படுத்துவதற்கான விதிகளை, கிரிக்கெட்டின் விதிகளில் ஏற்படுத்த வேண்டுமென, கிரிக்கெட் விதிகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பான மெரில்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் (எம்.சி.சி) உலக கிரிக்கெட் செயற்குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. கிரிக்கெட்டில் துடுப்பாட்டம், பந்துவீச்சை அதிகளவில் ஆதிக்கம் செலுத்துகிறது எனத் தெரிவித்துள்ள அக்குழு, துடுப்புகளின் தடிப்பம் குறித்தும் அவற்றின் எடை குறித்தும் கவனம் செலுத்தியுள்ளது. அதிகாரங்கள் இல்லாவிட்டாலும், எம்.சி.சி-இன் விதிகள் தொடர்பான இறுதி முடிவில் அதிகளவில் மதிக்கப்படும் சுயாதீனமான இந்தக் குழுவில், சர்வ…

  25. தாமதமாக வந்தால் 50 டாலர் அபராதம் - கும்ப்ளே அதிரடி! அணியின் பேருந்தை தவறவிட்டால், வீரர்களுக்கு 50 டாலர் அபராதம் விதிக்கப்படும் என இந்திய அணியின் பயிற்சியாளர் கும்ப்ளே அதிரடி காட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். தற்போது இந்திய அணி, மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. ஜுலை 14ம் தேதி மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத் தலைவர் அணியுடன், இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த தொடருக்கு பிறகு, இந்திய அணி வலுவான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுடன் மொத்தம் 13 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. தொடர்ச்சியான போட்டிகளுக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.