Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பீலே மூன்றாவது திருமணம் கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு தற்போது 75 வயதாகிறது. ஏற்கெனவே பீலே செய்த இரண்டு திருமணமும் முறிந்து போனது. ரோஸ்மேரி ஜோல்பி என்ற முதல் மனைவிக்கு 3 குழந்தைகள் உண்டு. இரண்டாவதாக அஸ்ரியா என்பவரை திருமணம் செய்தார். அந்த வகையில் இரு குழந்தைகள் என மொத்தம் 5 குழந்தைகளுக்கு பீலே தந்தை. இந்த நிலையில் 42 வயது மார்சியா சிப்லே அயோகி என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார். கடந்த 1980ம் ஆண்டு பீலேவும் மார்சியாவும் நியூயார்க்கில் சந்தித்துள்ளனர். அந்த பழக்கம் நட்பாக மாறி தற்போது திருமணத்தில் வந்து முடிந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு முதலே இருவரும் சாபோலோ நகரில் தனியாக சந்திக்கத் தொடங்கியுள்ளனர். செவ்வாய்க் கிழமையன்று…

  2. ஜெரோம் டெய்லர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரோம் டெய்லர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (11) அறிவித்துள்ளார். எனினும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளைாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டெய்லர் இதுவரையில் 130 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெய்லர் தனது 18 ஆவது வயதில் இலங்கை அணிக்கெதிராக தனது முதலாவது போட்டியில் 2003 ஆம் ஆண்டு அறிமுகமாகினார். இவருடைய டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றின் சிறப்பான பந்துவீச்சுப் பதிவு என்றால் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 2015 ஆம் ஆண்டு 47 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டினை கைப்பற்றியமையை கூறமுட…

  3. கோலூன்றிப் பாய்தலில் யாழ். மகாஜனாவின் அனிதா ஜெகதீஸ்வரனுக்கு தங்கப்பதக்கம் திய­கம மஹிந்த ராஜ­பக் ஷ விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற 94 ஆவது தேசிய மெய்­வல்­லுநர் போட்­டி­களில் யாழ். தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்­லூரி மாணவி அனிதா ஜெக­தீஸ்­வரன் கோலூன்றிப் பாய்­தலில் தங்கப் பதக்கம் வென்றார். இப் போட்­டியில் தன்­னை­விட வசதி வாய்ப்­புகள் நிறைந்த, சிறந்த நுட்­பத்­தி­ற­னு­டான பயிற்­சிகள் பெற்­று­வரும் படைத்­த­ரப்பு வீராங்க­னை­க­ளுடன் போட்­டி­யிட்ட அனிதா 3.30 மீற்றர் உய­ரத்தைத் தாவி தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார். இவர் யாழ். மாவட்ட மெய்­வல்­லுநர் சங்கம் சார்­பி­லேயே இப் போட்­டியில் பங்­கு­பற்­றினார். 3.30 மீற்றர் உய­ரத்தை முதல் முயற்­சி­யி…

  4.  சம்பியனானது அரசடித்தீவு விக்னேஸ்வரா வி.க -வடிவேல் சக்திவேல் மட்டக்களப்பு முதலைக்குடா விளையாட்டுக் கழகத்தின் 55ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில், பெனால்டி மூலம் அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று, முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. இத்தொடரில் 24 விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்று இறுதிச் சுற்றுக்கு முதலைக்குடா விளையாட்டுக் கழகமும் அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகமும் தெரிவாகியிருந்தன. இக்கால்பந்தாட்டப் போட்டியின் இறுதி நிகழ்வின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீ…

  5. ஸ்பானிய மாடு பிடி விளையாட்டில் இந்த நூற்றாண்டின் முதல் பலி ஸ்பெயின் பிரசித்தி பெற்ற மாடு பிடி நிகழ்வில் , மாடு பிடி வீரர் ஒருவர் மாடால் முட்டிக்கொல்லப்பட்டார். இந்த நூற்றாண்டில் ஒரு மாடுபிடி விளையாட்டு வீரர் மாடால் முட்டிக்கொல்லப்படும் முதல் சம்பவம் இதுவாகும். கொல்லப்பட்டவர் 29 வயதான விக்டர் பேரியோ என்ற ஒரு தொழில்முறை மாடுபிடி விளையாட்டு வீரர். ஸ்பெயினின் கிழக்குப் பகுதி நகரான டெருவெல் என்ற இடத்தில் நடந்த இந்த நிகழ்வு நேரடியாக தொலைக்காட்சிகளால் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருந்தது. மாடு பேரியோவை குத்தித் தூக்கி வீசி,பின்னர் அவரது வலப்புற நெஞ்சில் மூர்க்கமாகக் குத்தித் தூக்கி எறிந்ததை தொலைக்காட்சிக் காட்சிகள் காட்டின. சனிக்கிழமை இந்த சம்பவம…

  6. மொத்த பணப்பரிசு 28.1 மில்லியன் யூரோக்களை வாரி வழங்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இன்று ஆரம்பம் சர்­வ­தேச டென்னிஸ் அரங்கில் தூய்­மையின் அடை­யா­ள­மாக விளங்­கு­வதும் வரு­டத்தின் மூன்­றா­வது மாபெரும் (க்ராண்ட் ஸ்லாம்) டென்னிஸ் போட்­டி­யாக அமை­வ­து­மான விம்­பிள்டன் டென்னிஸ் போட்­டிகள் இன்று முதல் ஜூலை 10ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளன. விம்­பிள்டன் டென்னிஸ் வர­லாற்றில் இவ்வருடம் 130ஆவது அத்­தி­யா­ய­மாக நடை­பெறும் போட்­டி­களில் 28.1 மில்­லியன் யூரோக்கள் மொத்த பணப்­ ப­ரி­சாக வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இவ் வருடம் முதல் தட­வை­யாக ஒற்­றை­ய­ருக்­கான சக்­கர இருக்கை டென்னிஸ் போட்டி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா…

  7. பகலிரவு போட்டிகளுக்கு தயாராகும் தம்புள்ள மைதானம். பகலிரவு போட்டிகளுக்கு தயாராகும் தம்புள்ள மைதானம். தம்புள்ள கிரிக்கட் மைதானம் பகலிரவு போட்டிகளை நடாத்தும் மைதானமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் அடிப்படையில் , அவுஸ்திரேலிய அணியோடு அடுத்த மாதம் நடைபெறும் ஒருநாள் போட்டிகளை மையமாகக் கொண்டு தம்புள்ள கிரிக்கட் மைதானத்தில் உள்ள மின் விளக்குகளை மேம்படுத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது. தம்புள்ள கிரிக்கட் மைதானத்தில் இறுதியாக 2010ஆம் ஆண்டு பகலிரவு ஒருநாள் போட்டி இடம்பெற்றிருந்தது.அதன் பின் மின் விளக்குகளில் பற்றாக் குறை காரணமாக அந்த மைதானத்தில் போட்டிகள் நடைபெறவில்லை. இதைவிடவும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிகளின் படி பகல…

  8. சிறைத்தண்டனை காரணமாக பார்சிலோனாவை விட்டு வெளியேற மெஸ்சி திட்டம்? மெஸ்சி குற்றமற்றவர் தொடர்ந்து பார்சிலோனா அவர் அணிக்கு விளையாட வேண்டும் ஸ்பானீஷ் லீக்கை விட்டு வெளியேறி விட கூடாது என லா லீகாத் தலைவர் ஜேவியர் டெபாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக நீண்டகாலம் விளையாடி வருகிறார். அண்மையில் சுமார் 60 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக பார்சிலோனா நீதிமன்றம் மெஸ்சிக்கும் அவரின் தந்தைக்கும் 21 மாத சிறைத்தண்டனையும் தலா ரூ15 கோடி அபராதமும் விதித்தது. எனினும் ஸ்பெயின் சட்டப்படி 2 ஆண்டுகளுக்கு குறைவாக சிறைத்தண்டனைக்குள்ளானால், சிறைக்கு செல்ல வேண்டிய நிலை இல்லை. அபராதத்தை செலுத்…

  9. பந்துவீச்சாளர்களுக்கு ஏற்பட்ட உபாதையின் காரணமாகவே இலங்கை அணி தோல்வியுற்றது - அஞ்சலோ மெத்யூஸ் இங்கிலாந்து தொடரில் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்பட்ட உபாதையின் காரணமாகவே இலங்கை அணி தோல்வியை தழுவியதாக இலங்கை கிரிக்கெட் அணி தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார். இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய இலங்கை அணி,இங்கிலாந்து தொடர் குறித்து இலங்கை கிரிக்கெட் சபையில் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலே மேற்கண்டவாறு மெத்யூஸ் தெரிவித்தார். இங்கிலாந்து சுற்று பயணத்தின் போது இலங்கை அணியின் சில வீரர்கள் தங்களின் திறன்களை மேலும் வலுவூட்டிக் கொண்டனர். அதில் தினேஷ் சந்திமால், தனுஷ்க குணதிலக மற்றும் குஷல் மென்டிஸ் ஆகியோர் அடங்குவதாக தெரிவித…

  10. "நம்ம தல தோனி" இந்த கிரிக்கெட்ல பேட்ஸ்மேன அவுட் ஆக்க மட்டுமே பந்து வீசுவாங்க... ஆனா அதை தடுத்து, ரன் எடுக்கிறதுலதான் பேட்ஸ்மேனோட வெற்றி அடங்கி இருக்கு. அந்த கிரிக்கெட்ல கிறுக்குத்தனமான ஒரு வெறியும், ஒரு புத்திசாலித்தனமான திறமையும் இருந்தால், ஒரு நாள் கோடிக்கணக்கான மக்கள் பார்க்கிற இண்டர்நேஷனல் மேட்ச்சையும் ஆட முடியும். இதற்கு எடுத்துக்காட்டு நம்ம 'தல' தோனி. தொடரும்....

  11. தோனி ஏன் ’தல’ தெரியுமா? - ஒரு ரசிக வெறியனின் டைரி * ஏப்ரல் 2005. எப்போதும் மதிய உணவு இடைவேளைக்கு வீட்டிற்கு சென்று, ஸ்கூலுக்கு திரும்புவது வழக்கம். அன்று இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச் வேறு. வேகமாக வீட்டிற்கு ஓடினால் கரன்ட் இல்லை. சோகமாக சாப்பிட்டுவிட்டு வரும்போது எதிரில் வந்தார் ஆனந்த் அண்ணன். ஸ்கூல் சீனியர். 'ஸ்கோர் எவ்ளோண்ணே?' என்றேன். 'வெளுத்துட்டானுகடா... 356' என்றார். அந்தக் காலகட்டத்தில் 300-ஐ தொட்டாலே புருவங்கள் உயரும். 'எப்படிண்ணே?' என்றேன். 'புதுசா ஒரு சடையன் வந்துருக்கான்ல..... காட்டான் மாதிரி அடிக்கிறான்' என ஊர் மணத்தோடு ஒரு 'வார்த்தையைச்' சேர்த்துப் பெருமையாகச் சொன்னார். தோனி எனக்கு அறிமுகமானது சடையனாகவும், காட்டானாகவும்தான். …

  12. குசல் பெரேராவிற்கு நஷ்டஈடு வழங்க ஐ.சி.சி. இணக்கம் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கட் காப்பாளருமான குசல் ஜனித் பெரேராவிற்கு நஷ்டஈடு வழங்க சர்வதேச கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதாலாவது தடவையாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்த சந்திப்பு ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் குசல் பெரேராவிற்கு எதிராக ஊக்கமருந்து குற்றச்சாட்டின் பேரில் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த மே மாதம் சர்வதேச கிரிக்கெட் வாரியம் குசல் பெரோவிற்கு எதிரான தடையை நீக்கியிருந்தது. இந்நிலையில் குசல் பெரேராவின் பரிசோதனைக்கு இலங்கை கிரிக்…

  13. அளவில் பெரிய துடுப்புகளை தடை செய்யவும்’-ரிக்கி பொன்டிங் டேவிட் வோர்னர் போன்ற கிரிக்கெட் வீரர்கள் பயன்­ப­டுத்தும் அள­வுக்கு அதிகம் பெரி­தான துடுப்­புகள் (பட்கள்) தடை­செய்­யப்­ப­ட ­வேண்டும் என அவுஸ்­தி­ரே­லி­யாவின் முன்னாள் அணித் தலைவர் ரிக்கி பொன்டிங் தெரிவித்தார். உயிர்­பா­து­காப்பு மற்றும் துடுப்­புக்கும் பந்­துக்கும் இடையில் நிலவும் சமச்­சீ­ரற்ற தன்மை ஆகி­யன தொடர்பில் வெளி­யாகும் கருத்­துக்­களை அடுத்தே ரிக்கி பொன்டிங் இதனைத் தெரி­வித்­துள்ளார். குறை­பாரம் கொண்ட ஆனால் அளவில் பெரி­தான துடுப்­புகள் டெஸ்ட் போட்­டியில் சீர­மைக்­கப்­ப­ட­ வேண்டும் எனக் குறிப்­பிட்­டுள்ள அவர், அளவில் பெரி­தான துடுப்­புகள் மட்­…

  14. மெஸ்ஸிக்கு 21 மாத சிறை ஆர்ஜென்டீனா தேசிய கால்பந்தாட்ட அணியினதும் ஸ்பெயின் கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் நட்சத்திர வீரருமான லியனல் மெஸ்ஸிக்கு, வரி மோசடிக் குற்றத்தில் 21 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையில் 4.1 மில்லியன் யூரோவை மோசடி செய்தமைக்காக மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸிக்கும் 21 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் மெஸ்ஸியும் அவரது தந்தையும் சிறைத் தண்டனைக் காலத்தை தவிர்ப்பர் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஸ்பெயின் சட்டத்தின்படி, இரண்டு வருடத்துக்கு குறைவான சிறைத்தண்டனையை பெறுவோர், அதை நன்னடத்தைக் காலத்தில் கழிக்கலாம் என்பது குற…

  15. மேற்கிந்தியத் தீவுகளுக்கு புறப்பட்டது இந்திய அணி காம்போ போட்டோ. | பிடிஐ. இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து 4 டெஸ்டில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வரும் 21-ம் தேதி ஆன்டிகுவாவில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் பயிற்சி ஆட்டம் 9-ம் தேதி நடைபெறுகிறது. மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்காக இந்திய வீரர்களின் பயிற்சி முகாம் பெங்களூரில் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. 6 நாட்கள் நடைபெற்ற பயிற்சி முகாமில் புதிய தலைமை பயிற்சியாளரான கும்ப்ளே மேற்பார்வையில் வீரர்கள் பயிற்சி பெற்றனர். பயிற்சி முகாம் நிறைவடைந்த நிலையில் விராட் கோலி தலைமையிலான இந்த…

  16. கேட்ச் பிடிப்பதில் நாசர் ஹூசைன் கின்னஸ் சாதனை ( வீடியோ ) கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக உயரத்தில் இருந்து வந்த பந்தை கேட்ச் பிடித்தவர் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரராகியிருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசேன் . ........ லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ட்ரோனில் இருந்து 160 அடி உயரத்தில் இருந்து போடப்பட்ட பந்தை நாசன் ஹூசேன் கேட்ச் பிடித்து அசத்தினார். இது ஒரு புதிய கின்னஸ் சாதனையாம். ஆனால் 400 அடியில் இருந்து வீசப்பட்ட பந்தை பிடிக்க ஹூசேனால் முடியவில்லை. நாசர் ஹூசேன் சென்னையில் பிறந்தவர் .இங்கிலாந்து அணிக்காக 88 ஒருநாள் போட்டிகள் மற்றும் 96 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். http://www.vikatan.com/new…

  17. சுவாரஸ்யம் - அனுபவியுங்கள் - டோனியின் பதிய அறிவுரை இந்திய அணியின் வருங்கால வளர்ச்சி குறித்து விவாதிக்க டோனி, விராட் கோலி, டிராவிட், அனில் கும்ப்ளே, தேர்வாளர் பட்டோடி போன்றோர் நேற்று பெங்களூரில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் சுமார் 45 நிமிடங்கள் மூத்த மற்றும் இளம் வீரர்கள் டிரம்ஸ் வாசித்து மகிழ்ந்தனர். பின்னர் விராட் கோலி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் மற்றும் இளம் வீரர்களுக்கிடையில் டோனி உரையாற்றினார். அப்போது டோனி கூறுகையில் ‘‘நாம் 45 நிமிடங்கள் டிரம் வாசிப்பு பயிற்சியில் ஈடுபட்டோம். பின்னர் இதுபோன்று மியூசிக் கருவிகளை பயன்படுத்துவது இதுதான் முதல் முறை என்று ஒத்துக்கொண்டார்கள். ஆகவே, இதுபோன்று சம்பவ…

  18. இலங்கை அணியில் அதிரடி மாற்றம் : இலங்கை டி20 குழாமில் ரமித் ரம்புக்வெல்ல இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியான டி20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டியிலாவது வெற்றிப்பெற வேண்டும் என்ற நோக்கில் இலங்கை அணி பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. இந்த இறுதிப் போட்டிக்காக இலங்கை அணிக்கு சகலதுறை வீரர் ரமித் ரம்புக்வெல்ல இங்கிலாந்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். ரம்புக்வெல்ல இலங்கை ஏ அணிக்காக 2013 ஆம் அண்டு ஒரு டி20 போட்டியில் நியுஸிலாந்து அணிக்கெதிராக விளையாடியுள்ளார். இந்த போட்டியில் 19 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டினை கைப்பற்றியுள்ளார். இதேவேளை ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயற்பட்ட உபுள் தரங்கவையும…

  19. 'அது ஒரு மெலிசான கோடு' – கோலி குறித்து கோச் கும்ப்ளே இந்திய அணியின் புதிய பயிற்சியாளரான கும்ப்ளே, லோலியின் ஆக்ரோஷமான அணுகுமுறையை தான் விரும்புவதாகவும், அதையே இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெளிக்காட்டும் என்றும் கூறினார். கர்நாடகாவைச் சார்ந்த 45 வயதான அணில் கும்ப்ளே, இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சேர்த்து 956 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார். கடந்த வாரம் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்ட கும்ப்ளே, இந்திய அணியுடன் தனது முதற்கட்ட பயிற்சியைத் தொடங்கிவிட்டார். இம்மாதம் தொடங்கவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரே, பயிற்சியாளராக கும்ப்ளேவிற்கு முதல் டெஸ்ட். இந்நிலையில் நேற…

  20. ஸ்பெயின் ஏழு கால்பந்து கிளப்புகள் மில்லியன் கணக்கான டாலர்களை திரும்ப வழங்க உத்தரவு மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்களை திரும்ப வழங்க ஏழு ஸ்பெயின் கால்பந்து கிளப்புகளுக்கு உத்தரவு ஸ்பெயினிலுள்ள ஏழு முன்னிலை கால்பந்து கிளப்புகள் , மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர் அரசின் உதவி அல்லது ஆதரவை திரும்ப செலுத்த வேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளது. வரி மற்றும் சொத்துக்களில் சலுகைக் கடன்கள் மற்றும் உடன்பாடுகளால் அரசிடமிருந்து உதவிகளை பெற்று பயனடைந்துள்ளதன் மூலம் அவை ஐரோப்பிய சட்டங்களை மீறியுள்ளதாக ஐரோப்பிய ஆணயைம் முடிவு செய்துள்ளது. ஸ்பெயினின் தலைநகரில் சொத்து விவகாரம் தொடர்பான ஒரு வழங்கில், உலகிலேயே மிகப் பணக்கார கிளப்பான ரியல் மாட்ரிட் 20 மில்லியன் (2 கோடி…

  21. கும்ப்ளேவின் ஒரு மணி நேர புதிய சவாலை சமாளித்த ஒரே வீரர்? முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே, இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அணியின் பயிற்சியாளராக தன்னை தேர்ந்தெடுக்காதது ஏன் என இன்னமும் மீடியாக்களின் மூலம் கேள்வி எழுப்பிக்கொண்டு இருக்கிறார் ரவி சாஸ்திரி. இது ஒருபுறமிருக்க, பெங்களூருவுக்கு அருகாமையில் இருக்கும் அலூர் மைதானத்தில், இந்திய அணி வீரர்களை கடுமையான பயிற்சிக்கு உட்படுத்தி இருக்கிறார் அனில் கும்ப்ளே. ஒரு மணி நேர சவால்: கும்ப்ளே, வீரர்களுக்கு 1 மணி நேர சவால் ஒன்றை அறிவித்து இருக்கிறார். அதன்படி பேட்ஸ்மேன் அனைவரும் 1 மணி நேரம் பேட்டிங் செய்ய வேண்டும். அரை மணி நேரம் வேகப்பந்து வ…

  22. கொட்டும் மழையில் மெஸ்ஸி ரசிகர்கள் பேரணி மெஸ்ஸி ஓய்வுபெறும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி அவரது ரசிகர்கள் கொட்டும் மழையில் பேரணி நடத்தினர். | படம்: ஏஎஃப்பி அர்ஜென்டினா வீரர் லியோனஸ் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி அவரது ரசிகர்கள் கொட்டும் மழையில் பேரணி நடத்தினர். கடந்த வாரம் நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி யின் இறுதி ஆட்டத்தில் சிலி அணியி டம் அர்ஜென்டினா அணி தோல்வி யடைந்தது. இப்போட்டியில் புகழ் பெற்ற வீரரான லியோனல் மெஸ்ஸி பெனால்டி ஷூட்டில் கோல் அடிக்கத் தவறியது, அர்ஜென்டினாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து சர்…

  23. DRS-இல் LBW விதிகளில் மாற்றம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டத்தின் (DRS) மூலம் வழங்கப்படும் LBW தீர்ப்புகள் தொடர்பாக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இதன்படி, அதிக தடவைகள் LBW முறையில் ஆட்டமிழப்பதற்கான நிலை, துடுப்பாட்ட வீரர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் காணப்பட்ட விதிகளின்படி, LBW தொடர்பாக நடுவர் வழங்கிய தீர்ப்பை மாற்ற வேண்டுமாயின், இரு புறங்களிலும் காணப்படும் விக்கெட்டொன்றின் நடுப் பகுதியில், பந்தின் அரைவாசிக்கும் அதிகமானது, தாக்க வேண்டும். ஆட்டமிழப்பு இல்லை என நடுவர் தீர்ப்பு வழங்கிய பின்னர், அதை பந்துவீசும் அணி மறுபரிசீலனைக்குக் கோரினால், இரு புறத்தில…

  24. பதவியை விட்டு ஓட மாட்டேன் : மெத்தியூஸ் இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் பதவியை விட்டு ஓட மாட்டேன். இக்கட்டான நிலையில் உள்ள இலங்கை அணியை மேலும் சிறப்பாக செயல்பட உதவுவேன் என அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் நம்பிக்கை தெரிவத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் ஐந்தாவது போட்டியிலும் இலங்கை தோல்விகண்டதோடு தொடரை 3-0 என இழந்தது. டெஸ்ட் தொடரையும் முழுமையாக இழந்தது. இந்நிலையில் இலங்கை அணியின் தொடர்ச்சியான தோல்லி தொடர்பில் கருத்து தெரிவித்த மெத்தியூஸ், தற்போது இலங்கை அணி இக்கட்டான நிலைமையில் உள்ளது. இதனால் நான் அணித்தலைவர் பதவியை விட்டு ஓட மாட்டேன். இதை எதிர்த்து போராடுவேன். எங்கள் அணியில் எனக்கு ஆ…

  25. இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் முடிவு இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்பாராத விதமாக சமனிலையில் முடிவடைந்துள்ளது. இரண்டு அணிகளுமே நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவர்களில் தலா 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணி வீரர் ப்லான்கெட் இறுதிப் பந்தில் ஆறு ஓட்டம் பெற்று போட்டியை சமநிலை செய்தார். நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி இலங்கையைத் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.