Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஸ்பெயின் ஏழு கால்பந்து கிளப்புகள் மில்லியன் கணக்கான டாலர்களை திரும்ப வழங்க உத்தரவு மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்களை திரும்ப வழங்க ஏழு ஸ்பெயின் கால்பந்து கிளப்புகளுக்கு உத்தரவு ஸ்பெயினிலுள்ள ஏழு முன்னிலை கால்பந்து கிளப்புகள் , மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர் அரசின் உதவி அல்லது ஆதரவை திரும்ப செலுத்த வேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளது. வரி மற்றும் சொத்துக்களில் சலுகைக் கடன்கள் மற்றும் உடன்பாடுகளால் அரசிடமிருந்து உதவிகளை பெற்று பயனடைந்துள்ளதன் மூலம் அவை ஐரோப்பிய சட்டங்களை மீறியுள்ளதாக ஐரோப்பிய ஆணயைம் முடிவு செய்துள்ளது. ஸ்பெயினின் தலைநகரில் சொத்து விவகாரம் தொடர்பான ஒரு வழங்கில், உலகிலேயே மிகப் பணக்கார கிளப்பான ரியல் மாட்ரிட் 20 மில்லியன் (2 கோடி…

  2. கும்ப்ளேவின் ஒரு மணி நேர புதிய சவாலை சமாளித்த ஒரே வீரர்? முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே, இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அணியின் பயிற்சியாளராக தன்னை தேர்ந்தெடுக்காதது ஏன் என இன்னமும் மீடியாக்களின் மூலம் கேள்வி எழுப்பிக்கொண்டு இருக்கிறார் ரவி சாஸ்திரி. இது ஒருபுறமிருக்க, பெங்களூருவுக்கு அருகாமையில் இருக்கும் அலூர் மைதானத்தில், இந்திய அணி வீரர்களை கடுமையான பயிற்சிக்கு உட்படுத்தி இருக்கிறார் அனில் கும்ப்ளே. ஒரு மணி நேர சவால்: கும்ப்ளே, வீரர்களுக்கு 1 மணி நேர சவால் ஒன்றை அறிவித்து இருக்கிறார். அதன்படி பேட்ஸ்மேன் அனைவரும் 1 மணி நேரம் பேட்டிங் செய்ய வேண்டும். அரை மணி நேரம் வேகப்பந்து வ…

  3. குசல் பெரேராவிற்கு நஷ்டஈடு வழங்க ஐ.சி.சி. இணக்கம் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கட் காப்பாளருமான குசல் ஜனித் பெரேராவிற்கு நஷ்டஈடு வழங்க சர்வதேச கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதாலாவது தடவையாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்த சந்திப்பு ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் குசல் பெரேராவிற்கு எதிராக ஊக்கமருந்து குற்றச்சாட்டின் பேரில் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த மே மாதம் சர்வதேச கிரிக்கெட் வாரியம் குசல் பெரோவிற்கு எதிரான தடையை நீக்கியிருந்தது. இந்நிலையில் குசல் பெரேராவின் பரிசோதனைக்கு இலங்கை கிரிக்…

  4. கொட்டும் மழையில் மெஸ்ஸி ரசிகர்கள் பேரணி மெஸ்ஸி ஓய்வுபெறும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி அவரது ரசிகர்கள் கொட்டும் மழையில் பேரணி நடத்தினர். | படம்: ஏஎஃப்பி அர்ஜென்டினா வீரர் லியோனஸ் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி அவரது ரசிகர்கள் கொட்டும் மழையில் பேரணி நடத்தினர். கடந்த வாரம் நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி யின் இறுதி ஆட்டத்தில் சிலி அணியி டம் அர்ஜென்டினா அணி தோல்வி யடைந்தது. இப்போட்டியில் புகழ் பெற்ற வீரரான லியோனல் மெஸ்ஸி பெனால்டி ஷூட்டில் கோல் அடிக்கத் தவறியது, அர்ஜென்டினாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து சர்…

  5. DRS-இல் LBW விதிகளில் மாற்றம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டத்தின் (DRS) மூலம் வழங்கப்படும் LBW தீர்ப்புகள் தொடர்பாக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இதன்படி, அதிக தடவைகள் LBW முறையில் ஆட்டமிழப்பதற்கான நிலை, துடுப்பாட்ட வீரர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் காணப்பட்ட விதிகளின்படி, LBW தொடர்பாக நடுவர் வழங்கிய தீர்ப்பை மாற்ற வேண்டுமாயின், இரு புறங்களிலும் காணப்படும் விக்கெட்டொன்றின் நடுப் பகுதியில், பந்தின் அரைவாசிக்கும் அதிகமானது, தாக்க வேண்டும். ஆட்டமிழப்பு இல்லை என நடுவர் தீர்ப்பு வழங்கிய பின்னர், அதை பந்துவீசும் அணி மறுபரிசீலனைக்குக் கோரினால், இரு புறத்தில…

  6. பதவியை விட்டு ஓட மாட்டேன் : மெத்தியூஸ் இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் பதவியை விட்டு ஓட மாட்டேன். இக்கட்டான நிலையில் உள்ள இலங்கை அணியை மேலும் சிறப்பாக செயல்பட உதவுவேன் என அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் நம்பிக்கை தெரிவத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் ஐந்தாவது போட்டியிலும் இலங்கை தோல்விகண்டதோடு தொடரை 3-0 என இழந்தது. டெஸ்ட் தொடரையும் முழுமையாக இழந்தது. இந்நிலையில் இலங்கை அணியின் தொடர்ச்சியான தோல்லி தொடர்பில் கருத்து தெரிவித்த மெத்தியூஸ், தற்போது இலங்கை அணி இக்கட்டான நிலைமையில் உள்ளது. இதனால் நான் அணித்தலைவர் பதவியை விட்டு ஓட மாட்டேன். இதை எதிர்த்து போராடுவேன். எங்கள் அணியில் எனக்கு ஆ…

  7. கரிபியன் பிரிமியர் லீக் செய்திகள் #CPL16 முதல் போட்டியில் செயின்ட் லூசியா வென்றது. #CPL16 முதல் போட்டியில் செயின்ட் லூசியா வென்றது. T20 க்கு புகழ் பெற்ற மேற்கிந்திய தீவுகளின் கரீபியன் பிரிமியர் லீக்கின் முதல் போட்டியில் ரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா அணிகள் பங்கெடுத்தன. நாணய சுழற்சியில் வென்ற செயின்ட் லூசியா அணித்தலைவர் டரன் சமி முதலில் பந்து வீச முடிவு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய நைட் ரைடர்ஸ் அணி டரன் பிராவோவின் ஆட்டமிழக்காத 63 ஓட்டங்கள் துணையுடன் 20 பந்து பரிமாற்றங்களில் 6 இலக்குகள் இழப்பிற்கு 162 ஓட்டங்களை பெற்றது. 163 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய செயின்ட் லூசியா அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ச…

  8. ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகளிலிருந்து விலகினார் போல்ட் 100 மீற்றர் அரையிறுதிப் போட்டிகளைத் தொடர்ந்து, ஜமைக்கா தேசிய ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகளிலிருந்து, பின் தொடைத் தசைநார் கிழிவு காரணமாக உசைன் போல்ட் விலகியுள்ளார். கிங்ஸ்டனிலுள்ள தேசிய அரங்கில் இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில், மெதுவான ஆரம்பத்தைப் பெற்றிருந்தாலும் 10.04 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவு செய்து போல்ட் வென்றிருந்தார். முதல் சுற்று முடிவிலும் அரையிறுதிப் போட்டியிலும் பின் தொடைத் தசைநார் காயத்தை உணர்ந்ததாகவும், தேசிய சம்பியன்ஷிப் தலைமை மருத்துவரால் சோதிக்கப்பட்டதாகவும், தரம் ஒன்று வகையான காயத்தை கொண்டிருப்பதாகவும் டுவீட் பதிவொன்றில் போல்ட் தெரிவித்துள்ளார். …

    • 1 reply
    • 443 views
  9. றோம் வென்றால், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் ஒலிம்பிக்கை நடாத்துவதற்கான போட்டியில் இத்தாலியத் தலைநகர் றோம் வெற்றி பெற்றால், 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின்போது கிரிக்கெட் உள்ளடக்கப்படும் என்று இத்தாலிய கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடாத்த, பிரான்ஸின் தலைநகர் பரிஸ், அமெரிக்காவின் லொஸ் ஏஞ்செல்ஸ், ஹங்கேரியின் தலைநகர் புடாபாஸ்ட் ஆகியன றோம் போட்டியிடுகின்ற நிலையில், புதிய விடுமுறைகளின்படி, போட்டியை நடாத்த வெல்லும் நகரம், அவர்கள் உள்ளடக்கலாம் என்று கருதுகின்ற ஐந்து விளையாட்டுக்களை உள்ளடக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே, ஒலிம்பிக்கை றோம் நடாத்தினால், கிரிக்கெட் உள்ளடக்கப்படும் என இத்தாலிய …

  10. அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் கல்­வி­ய­கத்தின் ஆலோ­ச­க­ராக இலங்­கையின் சம­ர­வீர அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் வீரர்கள் சில­ருக்கு இலங்­கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலான் சம­ர­வீர துடுப்­பாட்ட பயிற்சி அளித்து வரு­கின்றார். அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணி விரைவில் இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்ள நிலையில் திலான் அங்கு பயிற்சி அளித்து வரு­கின்றார். அவர் உண்­மையில் அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளிப்­ப­தற்­காக அவுஸ்­தி­ரே­லியா செல்­ல­வில்லை. மாறாக அவுஸ்­தி­ரே­லிய தேசிய கிரிக்கெட் கல்­வி­ய­கத்தின் ஆலோ­ச­க­ராக குறு­கிய கால அடிப்­ப­டையில் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் வரை இந்த …

  11. ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள ரஷிய வீராங்கனைக்கு உலக தடகள கூட்டமைப்பு அனுமதி ரியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக்ஸ் போட்டியில் எந்த ஒரு நாட்டையும் சாராத நடுநிலையாளராக கலந்து கொள்ள ரஷிய வீராங்கனை யூலியா ஸ்டெப்பநோவாவிற்கு உலக தடகள கூட்டமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. ஊக்க மருந்து சர்ச்சையை தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷிய வீரர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், யூலியா ஸ்டெப்பநோவா ரியோ போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல் ரஷியர் ஆவார். அதீத திறமை காரணமாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான யூலியா ஸ்டெப்பநோவாவின் விண்ணப்பதைஏற்று கொண்டதாக உலக தடகள ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது. 2013ல் ஊக்க மருந்து மோசடியில் சிக்கும் வரை, 100 மீட்டர் …

  12. போர்ச்சுக்கல் அணியின் வளரும் நட்சத்திரம் ரெனேட்டோ சான்சேஸ் வெற்றி மகிழ்ச்சியில் குரேஸ்மாவை கட்டித்தழுவும் ஆட்ட நாயகன் ரெனேட்டோ சான்சேஸ்.| படம்: ஏ.எஃப்.பி. யூரோ 2016-ல் இறுதி 16 சுற்றில் குரேஷியா அணிக்கு எதிராக கலக்கிய இளம் கால்கள் காலிறுதியில் போலந்தை வெளியேற்றியது, அந்தக் கால்களுக்குச் சொந்தக்காரரான 18 வயது போர்ச்சுகல் வீரர் ரெனேட்டோ சான்சேஸ் போர்ச்சுகல் கால்பந்தின் எதிர்காலம் எனும் அளவுக்கு நிபுணர்களால் உயர்வாக விதந்தோதபடுகிறார். சான்சேஸ் தனது கால்பந்து கிளப் வாழ்க்கையை பென்ஃபிகா மூலம் தொடங்கினார். அக்டோபர் 2014-ம் ஆண்டு ரிசர்வ்களுக்காக தனது அறிமுக போட்டியில் ஆடினார். பென்பிகாவுக்கு 2015-ல் இவர் ஆடிய போதுதான் அந்த பிரிமியர் லீக் மற்று…

  13. இங்கிலாந்தின் சசெக்ஸ் அணியில் குலசேகர இங்கிலாந்தின் நெட் வெஸ்ட டி20 தொடரில் சசெக்ஸ் அணிக்கு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர அழைக்கப்பட்டுள்ளார். சசெக்ஸ் அணி பங்களாதேஷ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முஸ்தபிசூர் ரஹ{மானை ஒப்பந்தம் செய்திருந்தது. எனினும் ஐ.பி.எல் போட்டியின்போது அவருக்கு தொடைப் பகுதியில் ஏற்பட்ட உபாதைக் காரணமாக அணிக்கு திரும்ப முடியவில்லை. இதனால் இலங்கை அணியின் குலசேகர சசெக்ஸ் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் கென்ட் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய இவர் 4 பந்து ஓவர்களில் 28 ஓட்டங்களை கொடுத்து 1 விக்கட்டினை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.vir…

  14. விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின்போது டவல்களை திருடிச் சென்றதை ஒப்புக்கொண்ட உலகின் முதல்நிலை வீரர் நோவாக் ஜோகோவிச் உலகின் முன்னிலை டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் போது டவல்கள் (துவாய்) பலவற்றை திருடிச் சென்ற தாக ஒப்புக் கொண்டுள்ளார். ஜோகோவிச் சேர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகோ விச் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தற்போது உலகின் முதல் நிலை வீரராக விளங்குகிறார். 12 கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வென்றவர் அவர். விம்பிள்டன் டென் னிஸ் போட்டிகளிலும் 2011, 2014, 2015 ஆம் ஆண்டுகளில் அவர் சம்பியனானார். இம் முறை தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாக வி…

  15. 19இன் கீழ் கொத்மலை கிண்ண பாடசாலைகள் கால்பந்தாட்டம்; இறுதிச் சுற்றில் யாழ். புனித பத்திரிசியார், யாழ்.புனித ஹென்றியரசர் இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனம் நடத்தும் 19 வய­துக்­குட்­பட்ட பாட­சாலை அணி­க­ளுக்கு இடை­யி­லான கொத்­மலை கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் பங்­கு ­பற்றும் யாழ். மாவட்டப் பாட­ச­லைகள் இரண்டும் கால் இறு­தி­களில் விளை­யாட தகு­தி­பெற்­றுக்­கொண்­டுள்­ளன. புனித பத்­தி­ரி­சியார், புனித ஹென்­றி­ய­ரசர் ஆகிய அணி­களே கால் இறு­திக்கு முன்­னே­றி­யுள்­ளன. குழு டி யில் பங்­கு­பற்றும் புனித பத்­தி­ரி­சியார் கல்­லூரி தனது ஆறு போட்­டி­க­ளிலும் வெற்­றி­யீட்டி 18 புள்­ளி­க­ளுடன் முதலாம் இடத்தைப் பெற்று கால் இறு­தியில் விள…

  16. நானா, ரவி சாஸ்திரியா என்பது முக்கியமல்ல: பயிற்சியாளர் அனில் கும்ப்ளே அனில் கும்ப்ளே. | கோப்புப் படம். கங்குலி தனக்கு மரியாதை அளிக்கவில்லை என்று ரவி சாஸ்திரி தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்திய நிலையில் அணி என்றால் அதில் வீரர்கள்தான் முக்கியம் என்று பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்தார். பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினராக சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி நேர்காணலின் போது இல்லை, இதனையடுத்து ரவி சாஸ்திரி கடும் ஏமாற்றமடைந்தார். இந்நிலையில் அனில் கும்ப்ளே கூறியதாவது: ரவி சாஸ்திரியை முதலில் அழைத்து தலைமைப் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை பகிர்ந்து கொண்டேன். அவர் இந்திய அணியுடன் அபாரமாக பணியாற்றியுள்ளார். ஆகவே நான் அல்…

  17. நான் எப்போதுமே விரைவுகதியில் பீல்ட் செய்பவனல்ல: விராட் கோலி விராட் கோலி. | படம்: பிடிஐ. தான் எப்போதும் களத்தடுப்பில் விரைவு கதியில் இயங்கும் பீல்டர் அல்ல என்று கூறிய விராட் கோலி 2012 ஐபிஎல் தொடருக்குப் பிறகு உடற்தகுதி குறித்த தனது பார்வையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது என்று கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற விளம்பராதாரர் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி கூறியதாவது: 2012-ம் ஆண்டு ஐபிஎல் வரை நான் உடற்தகுதி குறித்து கவனம் கொள்ளாமலேயே இருந்தேன். உடற்தகுதியின் சில நுட்பமான விவரங்களுக்குள் நான் சென்றதில்லை. அதாவது காலை முதல் இரவு வரை என்ன சாப்பிட வேண்டும், எவ்வளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும், எவ்வளவு நேரம் பயிற்சி செ…

  18. இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு இரு தமிழ் இளைஞர்கள். இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு இரு தமிழ் இளைஞர்கள். சீனாவில் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஆசிய பல்கலைக்கழகங்களுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணியை பிரதிநிதித்துவபடுத்தி விளையாடுவதற்கு 2 தமிழ் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த சச்சிதானந்தன் உகந்தன், கிறிஸ்ரின் விஜய் ஆகிய இருவருமே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://vilaiyattu.com/இலங்கை-தேசிய-கூடைப்பந்தா/

    • 1 reply
    • 335 views
  19. மெஸ்ஸி எனும் ஃபுட்பால் ஏலியன் “இந்த உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் ரொனால்டோ தான். ஏனெனில் மெஸ்ஸி வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்” என்று தான் மொத்த உலகமும் அந்த ஐந்தரை அடி கோல் மெஷினைப் போற்றி வந்தது. எவராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவிற்கு 5 பாலன் டி ஓர் விருதுகள் வாங்கி கால்பந்து ஏணியின் உச்சானிக் கொம்பில் நிற்பவர் இந்த லயோனல் மெஸ்ஸி. இவரது நுணுக்கங்களும் ஸ்டைலும் வீடியோ கேமில் கூட நம்மால் செய்ய முடியாதவை. கால்பந்தின் ஹிஸ்டரி தெரியாத நம்ம ஊரு யூத்ஸ் கூட மெஸ்ஸியின் பெயர் போட்ட ஜெர்சியை போட்டுக் கொண்டு அளப்பறை செய்வார்கள். கால்பந்து வெறியர்களின் ஒரு தீராக்கனவு மெஸ்ஸியை ஒரு முறையாவது தொட்டுப் பார்க்க வேண்டுமென்பதாகத் தான் இருக்கும். …

  20. ஸ்பெயின் கேப்டன் ஐகெர் கேசிலாஸ் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு கடந்த 2010ம் ஆண்டு யூரோ 2012ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியின் கேப்டன் ஐகெர் கேசிலாஸ் சர்வதேச கால்பந்தில் இருந்து ஒய்வு அறிவித்துள்ளார். நடப்பு யூரோ தொடரில் நாக்அவுட் சுற்றிலேயே ஸ்பெயின் அணி இத்தாலியிடம் 2 கோல்கள் வாங்கி தோல்வியடைந்தது. இந்த தொடரில் ஸ்பெயின் அணியில் கேசிலாஸ் இடம் பெற்றிருந்தாலும் கோல்கீப்பிங் பணியை டிஜியா மேற்கொண்டார். தற்போது 35 வயதான கேசிலாஸ் மாற்று ஆட்டக்காரராகவே இருந்தார். யூரோவில் இருந்து ஸ்பெயினும் வெளியேறியதை தொடர்ந்து கேசிலாஸ் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறும் முடிவுக்கு வந்துள்ளார். கடந்த 2000ம் ஆண்டு முதல் ஸ…

  21. வட மாகாண வல்லவன் தொடர்: சுப்பர் 8இல் நாவாந்துறை சென். மேரிஸ் பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம், தனது மைதானத்தில் நடாத்தி வரும் இவ்வருடத்துக்கான வட மாகாண வல்லவன் தொடரின் சுப்பர் 8 சுற்றுக்கு முதலாவது அணியாக நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் தகுதி பெற்றுள்ளது. நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் வதிரி மனோகரா விளையாட்டுக் கழகத்துக்குமிடையே ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற நான்காவது சுற்றுப் போட்டியொன்றில் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற சென். மேரிஸ், முதலாவது அணியாக சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. அவ்வணி சார்பாக, மதிவதனன், அமிட்டன…

  22. மெஸ்ஸி தவறவிட்ட பெனால்டி கோல்; அர்ஜென்டினாவை வீழ்த்தி சிலி சாம்பியன் 'மேஜிக்' மெஸ்ஸி பெனால்டி ஷூட் அவுட்டில் கோல் அடிக்கத் தவற, இறுதிப் போட்டியில் பெனால்டி முறையில் சிலி அணி 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது முறையாக கோப்பா அமெரிக்கா சாம்பியன் ஆனது. ஒரு முக்கிய கோப்பையை வென்று அர்ஜென்டினாவுக்கு 23 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் காத்திருப்பு தொடர்கிறது. சிலி வீரர்கள் தங்கள் ரசிகர்களுக்கு சல்யூட் செய்தனர். நாளை சிலியில் பொது விடுமுறை, மைதானத்தில் லத்தீன் அமெரிக்க இசை, பாட்டு, கொண்டாட்டம். ‘வீ ஆர் த சாம்பியன்ஸ்’ பாடல் ஒலித்தது. மெஸ்ஸி அதிர்ச்சியில் பெஞ்சில் வந்து அமர்ந்தார். 10 வீரர்களுக்கு சிலி அ…

  23. சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு.. கோபா அமெரிக்கா தோல்வியால் மெஸ்சி அறிவிப்பு பியுனோஸ் ஐரெஸ்: கால்பந்தாட்ட ஜாம்பவானான அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்சி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அர்ஜென்டினா அணிக்காக 112 போட்டிகளில் ஆடியுள்ள மெஸ்சி, 55 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். நேற்று நடைபெற்ற கோபா அமெரிக்கா கோப்பைக்கான இறுதி போட்டியில் சிலி அணியிடம் அர்ஜென்டினா தோற்ற நிலையில், மெஸ்சி இன்று ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். நேற்றைய போட்டியில் பெனால்டி ஷூட் வாய்ப்பை மெஸ்சி தவற விட்டது அர்ஜென்டினா தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியது. இந்த விர…

  24. மொத்த பணப்பரிசு 28.1 மில்லியன் யூரோக்களை வாரி வழங்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இன்று ஆரம்பம் சர்­வ­தேச டென்னிஸ் அரங்கில் தூய்­மையின் அடை­யா­ள­மாக விளங்­கு­வதும் வரு­டத்தின் மூன்­றா­வது மாபெரும் (க்ராண்ட் ஸ்லாம்) டென்னிஸ் போட்­டி­யாக அமை­வ­து­மான விம்­பிள்டன் டென்னிஸ் போட்­டிகள் இன்று முதல் ஜூலை 10ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளன. விம்­பிள்டன் டென்னிஸ் வர­லாற்றில் இவ்வருடம் 130ஆவது அத்­தி­யா­ய­மாக நடை­பெறும் போட்­டி­களில் 28.1 மில்­லியன் யூரோக்கள் மொத்த பணப்­ ப­ரி­சாக வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இவ் வருடம் முதல் தட­வை­யாக ஒற்­றை­ய­ருக்­கான சக்­கர இருக்கை டென்னிஸ் போட்டி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா…

  25. கிரெக் சாப்பலை விட அனில் கும்ப்ளே சிறப்பாக செயல்பட முடியும்: இயன் சாப்பல் இயன் சாப்பல் சகோதரரர் கிரெக் சாப்பலுடன் அனில் கும்ப்ளே. | கோப்புப் படம். இந்திய வீரர்களின் மனநிலையை நன்கு அறிந்தவர் என்பதால் அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பொறுப்பில் கிரெக் சாப்பலை விட சிறப்பாக செயல்பட முடியும் என்று இயன் சாப்பல் கூறியுள்ளார். இது குறித்து அவர் ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போவில் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது: ஒரு முன்னாள் சிறந்த வீரர் சர்வதேச கிரிக்கெட் பயிற்சியாளராக ஆவது வழக்கத்துக்கு மாறானது, அவ்வகையில் ஒரு அரிதான குழுவில் இணைந்துள்ளர் அனில் கும்ப்ளே. எப்போதும் நட்சத்திர வீரர்கள் தங்களது கடினமான விளையாட்டுக்காலத்திற்குப் பிறகு ஓய்வு காலங்களில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.