Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. மெஸ்ஸி எனும் ஃபுட்பால் ஏலியன் “இந்த உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் ரொனால்டோ தான். ஏனெனில் மெஸ்ஸி வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்” என்று தான் மொத்த உலகமும் அந்த ஐந்தரை அடி கோல் மெஷினைப் போற்றி வந்தது. எவராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவிற்கு 5 பாலன் டி ஓர் விருதுகள் வாங்கி கால்பந்து ஏணியின் உச்சானிக் கொம்பில் நிற்பவர் இந்த லயோனல் மெஸ்ஸி. இவரது நுணுக்கங்களும் ஸ்டைலும் வீடியோ கேமில் கூட நம்மால் செய்ய முடியாதவை. கால்பந்தின் ஹிஸ்டரி தெரியாத நம்ம ஊரு யூத்ஸ் கூட மெஸ்ஸியின் பெயர் போட்ட ஜெர்சியை போட்டுக் கொண்டு அளப்பறை செய்வார்கள். கால்பந்து வெறியர்களின் ஒரு தீராக்கனவு மெஸ்ஸியை ஒரு முறையாவது தொட்டுப் பார்க்க வேண்டுமென்பதாகத் தான் இருக்கும். …

  2. ஸ்பெயின் கேப்டன் ஐகெர் கேசிலாஸ் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு கடந்த 2010ம் ஆண்டு யூரோ 2012ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியின் கேப்டன் ஐகெர் கேசிலாஸ் சர்வதேச கால்பந்தில் இருந்து ஒய்வு அறிவித்துள்ளார். நடப்பு யூரோ தொடரில் நாக்அவுட் சுற்றிலேயே ஸ்பெயின் அணி இத்தாலியிடம் 2 கோல்கள் வாங்கி தோல்வியடைந்தது. இந்த தொடரில் ஸ்பெயின் அணியில் கேசிலாஸ் இடம் பெற்றிருந்தாலும் கோல்கீப்பிங் பணியை டிஜியா மேற்கொண்டார். தற்போது 35 வயதான கேசிலாஸ் மாற்று ஆட்டக்காரராகவே இருந்தார். யூரோவில் இருந்து ஸ்பெயினும் வெளியேறியதை தொடர்ந்து கேசிலாஸ் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறும் முடிவுக்கு வந்துள்ளார். கடந்த 2000ம் ஆண்டு முதல் ஸ…

  3. சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு.. கோபா அமெரிக்கா தோல்வியால் மெஸ்சி அறிவிப்பு பியுனோஸ் ஐரெஸ்: கால்பந்தாட்ட ஜாம்பவானான அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்சி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அர்ஜென்டினா அணிக்காக 112 போட்டிகளில் ஆடியுள்ள மெஸ்சி, 55 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். நேற்று நடைபெற்ற கோபா அமெரிக்கா கோப்பைக்கான இறுதி போட்டியில் சிலி அணியிடம் அர்ஜென்டினா தோற்ற நிலையில், மெஸ்சி இன்று ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். நேற்றைய போட்டியில் பெனால்டி ஷூட் வாய்ப்பை மெஸ்சி தவற விட்டது அர்ஜென்டினா தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியது. இந்த விர…

  4. வட மாகாண வல்லவன் தொடர்: சுப்பர் 8இல் நாவாந்துறை சென். மேரிஸ் பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம், தனது மைதானத்தில் நடாத்தி வரும் இவ்வருடத்துக்கான வட மாகாண வல்லவன் தொடரின் சுப்பர் 8 சுற்றுக்கு முதலாவது அணியாக நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் தகுதி பெற்றுள்ளது. நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் வதிரி மனோகரா விளையாட்டுக் கழகத்துக்குமிடையே ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற நான்காவது சுற்றுப் போட்டியொன்றில் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற சென். மேரிஸ், முதலாவது அணியாக சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. அவ்வணி சார்பாக, மதிவதனன், அமிட்டன…

  5. நாளை ஆரம்பிக்கிறது முக்கோணத் தொடர் மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகள் பங்குபற்றும் முக்கோணச் சுற்றுத் தொடர் நாளை வெள்ளிக்கிழமை (03) ஆரம்பிக்கிறது. இலங்கை நேரப்படி இரவு 10.30மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியில், தொடரை நடாத்தும் நாடான மேற்கிந்தியத் தீவுகளை தென்னாபிரிக்கா கயானாவில் எதிர்கொள்கின்றது. இத்தொடரின் அனைத்துப் போட்டிகளும் பகலிரவுப் போட்டிகளாகவே இடம்பெறவுள்ளதுடன், இறுதிப் போட்டியானது பார்படோஸில், ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெறவுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் குழாமில், அவ்வணியின் நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெயில், டுவைன் பிராவோ, அன்றே ரஸல், டரன் சமி ஆகியோர் இடம்பெறாத நிலையில், சுனில் நரைன், பொல…

  6. மெஸ்ஸி தவறவிட்ட பெனால்டி கோல்; அர்ஜென்டினாவை வீழ்த்தி சிலி சாம்பியன் 'மேஜிக்' மெஸ்ஸி பெனால்டி ஷூட் அவுட்டில் கோல் அடிக்கத் தவற, இறுதிப் போட்டியில் பெனால்டி முறையில் சிலி அணி 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது முறையாக கோப்பா அமெரிக்கா சாம்பியன் ஆனது. ஒரு முக்கிய கோப்பையை வென்று அர்ஜென்டினாவுக்கு 23 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் காத்திருப்பு தொடர்கிறது. சிலி வீரர்கள் தங்கள் ரசிகர்களுக்கு சல்யூட் செய்தனர். நாளை சிலியில் பொது விடுமுறை, மைதானத்தில் லத்தீன் அமெரிக்க இசை, பாட்டு, கொண்டாட்டம். ‘வீ ஆர் த சாம்பியன்ஸ்’ பாடல் ஒலித்தது. மெஸ்ஸி அதிர்ச்சியில் பெஞ்சில் வந்து அமர்ந்தார். 10 வீரர்களுக்கு சிலி அ…

  7. கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம் நடப்பு சாம்பியன் சிலி, அர்ஜென்டினா, பிரேசில் உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்ளும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் கொலம்பியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. உலகக் கோப்பை, ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கு அடுத்து புகழ்பெற்றது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி. தென் அமெரிக்க கண்டங்களில் உள்ள அணிகள் இதில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வெல்ல மோதும். இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 45-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி தொடர் அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. போட்டிகள் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்…

  8. கிரெக் சாப்பலை விட அனில் கும்ப்ளே சிறப்பாக செயல்பட முடியும்: இயன் சாப்பல் இயன் சாப்பல் சகோதரரர் கிரெக் சாப்பலுடன் அனில் கும்ப்ளே. | கோப்புப் படம். இந்திய வீரர்களின் மனநிலையை நன்கு அறிந்தவர் என்பதால் அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பொறுப்பில் கிரெக் சாப்பலை விட சிறப்பாக செயல்பட முடியும் என்று இயன் சாப்பல் கூறியுள்ளார். இது குறித்து அவர் ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போவில் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது: ஒரு முன்னாள் சிறந்த வீரர் சர்வதேச கிரிக்கெட் பயிற்சியாளராக ஆவது வழக்கத்துக்கு மாறானது, அவ்வகையில் ஒரு அரிதான குழுவில் இணைந்துள்ளர் அனில் கும்ப்ளே. எப்போதும் நட்சத்திர வீரர்கள் தங்களது கடினமான விளையாட்டுக்காலத்திற்குப் பிறகு ஓய்வு காலங்களில்…

  9. பிறேசில் ஒலிம்பிக்கிற்கு 7 இலங்கையர்கள் பிறேசிலின் தலைநகரான ரியோடி ஜெனிரோவில் இம்முறை நடைபெறவுள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கையைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் 7 பேர் தகுதி பெற்றுள்ளனர். குறித்த போட்டிகளில் தடகள விளையாட்டு வீர வீராங்கனைகள் 3 பேரும் நீச்சல் வீரர்கள் 2 பேரும் இலக்கிற்கு துப்பாக்கிச்சூடும் வீரர் ஒருவரும் பூப்பந்து விளையாட்டு வீரர் ஒருவரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதன்படி, அனுருத்த இந்திரஜித் மற்றும் கீதானி ராஜசேகர தொலை தூர ஓட்டங்களுக்காகவும் சுமேத ரணசிங்க ஈட்டி எரிதல் போட்டிக்காகவும் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, பூப்பந்து ஒற்றையர் பிரிவிற்காக நிலுக கருணாரத்னவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். …

  10. சொந்த மைதானத்தில் பீற்றர்ஸை உதைத்த பற்றிக்ஸ் ; 6:1 என அசத்தல் வெற்றி கொழும்பு சென் . பீற்றர்ஸ் கல்லூரிக்கு எதிரான கால்பந்தாட்ட லீக் போட்டியொன்றில் யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரி 6:1 என்ற கோல்களைப் பெற்று அசத்தல் வெற்றிபெற்றுள்ளது. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தால் நடத்தப்பட்டுவரும் கொத்மலை சொக்ஸ் கிண்ணத்திற்கான கால்பந்தாட்டத் தொடரில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போட்டியில் யாழ். சென்.பற்றிக்ஸ் கல்லூரி மற்றும் சென் . பீற்றர்ஸ் கல்லூரி அணிகள் மோதின. கொழும்பு சென் . பீற்றர்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியிலேயே யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி 6:1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது. ஆட்டம் ஆரம்பமானது முதலே போட்டி விறுவிறு…

  11. விற்றோரியின் தடை நீக்கம் மாற்றியமைக்கப்பட்ட பந்துவீச்சுபாணியின் பின்னர், பிறீத்தோறியா பல்கலைக்கழகத்தில் இம்மாதம் 10ஆம் திகதி மீண்டும் இடம்பெற்ற சோதனையின் பின்னர், சிம்பாப்வேயின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் பிரயன் விற்றோரியின் பந்துவீச்சுபாணியானது, விதிகளுக்குட்பட்டது என சர்வதேச கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது. மீள் சோதனையின்போது, விற்றோரியின் அனைத்து வகையான பந்துவீச்சுகளிலும் அவரின் முழங்கை நீட்சியானது 15 பாகைக்குள்ளேயே இருந்தது என வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சர்வதேசக் கிரிக்கெட்டிலும் உலகளாவிய உள்ளூர் தொடர்களிலும் பந்துவீசலை ஆரம்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் ஜனவரி 10ஆம் திகதி, குளுநாவில், பங்கள…

  12. செப்டம்பரில் ‘மினி ஐபிஎல்’ டி20 தொடர்: பிசிசிஐ அறிவிப்பு பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர். | கோப்புப் படம். ஆண்டின் ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் மினி ஐபிஎல் போட்டித் தொடர் ஒன்றை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இது ‘மினி ஐபிஎல்’ அல்லது ‘ஐபிஎல் ஓவர்சீஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் நடக்கும் ஐபிஎல் தொடர் போல் அல்லாமல் குறைந்த போட்டிகள் கொண்டதாக இருக்கும் என்றும் 2 வாரங்களில் போட்டிகளை நடத்தி முடிப்போம் என்றும் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். தற்போது பங்கேற்று விளையாடும் 8 அணிகளும் இதில் பங்கேற்கும். இந்தத் தொடர் அயல்நாட்டில் நடைபெறும். அமெரிக்கா, அல்லது யு.ஏ.இ.யில் இந்த மினி ஐபிஎல் த…

  13. கேள்விக்குறியில் சம்பியன்ஸ் கிண்ணத்தின் எதிர்காலம் சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத்தின் எதிர்காலம், மீண்டும் சந்தேகத்துக்குரியதொன்றாக மாறியுள்ளது. அதாவது, 2021ஆம் ஆண்டு இந்தியாவில் இடம்பெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணத்தோடு இத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, 2019ஆம் ஆண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டி லீக் அறிமுகப்படுத்தப்பட்டால், அடுத்த வருடம் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள தொடரோடு, சம்பியன்ஸ் கிண்ணம் நிறைவுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. 2013ஆம் ஆண்டோடு சம்பியன்ஸ் கிண்ணத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக இருந்தபோதும், அத்தொடருக்கு கிடைத்த பாரிய வர்த்தக வெற்றி காரணமாக சம்பியன்ஸ் கிண்ணம் தொடர்ந்திருந்தது. …

  14. பதவிக்கு அலைபவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு மனிதர்! கடந்த உலகக் கோப்பைத் தொடர் முடிந்ததில் இருந்தே, இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் இல்லாமல்தான் விளையாடி வருகிறது. ரவி சாஸ்திரி தற்காலிக பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். இந்திய அணிக்கு சரியான திறமையான பயிற்சியாளரைத் தேர்வு செய்ய, பிசிசிஐ முன்னாள் வீரர்கள் கங்குலி, சச்சின் , வி.வி.எஸ். லக்ஷ்மண் அடங்கிய குழுவை அறிவுரையாளர்களாக நியமித்திருந்தது. ஒரு ஆண்டு காலமாக காலியாகவுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 50க்கும் மேற்பட்டவர்கள் அப்ளை செய்திருந்தனர். இதில் ஒரு கேலிக் கூத்தும் நடந்தது. இதுவரை இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராக இருந்து வந்த சந்தீப் பாட்டீலின் பதவி காலம் …

  15. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தேர்வு முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே இந்திய பயிற்சியாளராகத் தேர்வு. படம்: பிடிஐ. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் ஓராண்டுக்கானது. கும்ப்ளேயின் பயிற்சிக்காலம் மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய தொடருடன் தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு 57 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 21 பெயர்கள் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு பிசிசிஐ-க்கு அனுப்பியது சச்சின், கங்குலி, லஷ்மண் அடங்கிய குழு. பவுலிங், பேட்டிங் மற்றும் உதவிப்பயிற்சியாளர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என்ற…

  16. பெயில் தாக்கியதில் சிவந்து போன கண்ணுடன் தோனி! இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஹராரேவில் நடந்த 3வது டி20 போட்டியின் போது, விக்கெட் கீப்பர் தோனியின் கண்களை பெயில்ஸ் பதம் பார்த்தது. ஜிம்பாப்வே வீரர் டொனால்ட் டிரிபானோவை அவுட்டாக்கும் முயற்சியின் போது தோனியின் வலது கண்ணை பெயில் தாக்கியது. அந்த வேதனையுடன்தான் தோனி தொடர்ந்து போட்டியில் பங்கேற்றிருந்தார். தற்போது தோனியின் கண் சிவந்து போய்விட்டது. மருத்துவ பரிசோதனையில் கண்களில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. தோனி தனது சிவந்து போன கண்ணை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.அத்துடன் தான் வலியுடன் மங்கிய பார்வையுடனே விக்கெட் கீப்பர் பணியை மேற்கொண்டதாகவும் தோனி த…

  17. விம்பிள்டன் தரவரிசைகள் வெளியிடப்பட்டன இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கான தரவரிசைகள் (seeds) வெளியிடப்பட்டுள்ளன. ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர் போட்டிகளுக்கான தரவரிசைகளே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, உலகின் முதல் 3 வீரர்களான நொவக் ஜோக்கோவிச், அன்டி மரே, ரொஜர் பெடரர் ஆகியோர், முதல் 3 தரவரிசைகளையும் பெற்றுள்ளனர். 4ஆம் நிலை வீரரான ரபேல் நடால், இத்தொடரில் பங்குபெற மாட்டார் என்பதால், 5ஆம் நிலை வீரரான ஸ்டான் வவ்றிங்கா, 4ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். 5ஆவது இடத்தில் ஜப்பானின் கீ நிஷிகோரியும் 6ஆவது இடத்தில் கனடாவின் மிலோஸ் றாவோனிக்கும் 7ஆவது இடத்தில் பிரான்ஸின் றிச்சர்ட் கஸ்கட்டும் காணப்படுகின்றனர். ப…

  18. சிம்பாவே எதிர் இந்தியா ஒரு நாள் போட்டி தொடர் செய்திகள் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் சரண்: இந்தியா முதலில் பீல்டிங் தேர்வு ஹராரேயில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். ஆட்டத்தின் 2-வது ஓவரை வீசிய சரண் அபாரமாக வீசினார். முதல் பந்திலேயே சிபாபாவுக்கு ஒரு இன்ஸ்விங்கரை வீச அது பிளம்ப் அவுட், ஆனால் நடுவர் ரசல் டிஃபின் அதனை அவுட் கொடுக்க மறுத்தார். ஆனால் அதே ஓவரில் கடைசி பந்தில் மற்றொரு தொடக்க வீரர் பி.ஜே.மூர் விக்கெட்டை எல்.பி.யில் வீழ்த்தினார் பரீந்தர் சரண். இந்தப் பந்தும் உள்ளே ஸ்விங் ஆனது, பந்தை லெக் திசையில் திருப்பி விட முயன்ற மூர் கால்காப்பில் வாங்கினார். அவர் 3 ரன்களில்…

  19. இலங்கையின் புதிய அதிரடி வீரர் சீகுகே பிரசன்னாவின் சாதனைத் துளிகள் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிக்ஸ் அடிக்கும் சீகுகே பிரசன்னா. | படம்: ஏ.எஃப்.பி, இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி பிளங்கெட்டின் கடைசி பந்து சிக்ஸருடன் ‘டை’ ஆக, இலங்கை வீரர் சீகுகே பிரசன்னாவின் அதிரடி அரைசதம் சில சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. அன்று அயர்லாந்துக்கு எதிராக ஜெயசூரியாவின் 48 பந்து சத சாதனையை நூலிழையில் நழுவ விட்டு 46 பந்துகளில் 95 விளாசிய இந்த புதிய அதிரடி வீரரான சீகுகே பிரசன்னா, நேற்று இங்கிலாந்துக்கு எதிராக 24 பந்துகளில் அரைசதம் கண்டார், அயர்லாந்துக்கு எதிராக 23 பந்துகளில் அரை சதம் கண்டவர் அடுத்த போட்டியிலேயே 24 பந்துகளில் அரைசதம் …

  20. 'மெஸ்சி வித் ரசிகர்' நெகிழ வைக்கும் புகைப்படம் கால்பந்து போட்டிகள் முடிந்தவுடன் ரசிகர்கள் பாதுகாவலர்களை மீறி மைதானத்திற்குள் நுழைந்து வீரர்களை கட்டிபிடித்து கொள்வது உண்டு. பொதுவாக கால்பந்து வீரர்களுக்கு ரசிகர்களை மதிக்கும் குணம் உண்டு.முடிந்தவரை ரசிகர்களை அவமதிக்கும்விதத்தில் நடந்து கொள்வதில்லை. ஜெர்மனி கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஒலிவர் கானிடம் ரசிகர் ஒருவர் நிர்வாணமாக ஓடி வந்து கை கொடுத்தார். பரபரப்புக்காக அந்த ரசிகர் இப்படி செய்தாலும் ஓலிவர் கான் கோபத்தை காட்டவில்லை. மரியாதைக்காக அந்த ரசிகருக்கு கை கொடுத்து விட்டு சென்றார். அதே போல் யூரோ கால்பந்து தொடரில், ஆஸ்திரிய அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, ரொனால்டோ பெனால்டியை மிஸ் செய்த நிலைய…

  21. பிரேசிலின் அடையாளங்களில் ஒன்றான, அமேசான் நதி ஓடும் அமேசான் மாகாணத்தில் உள்ள மென்னஸ் நகரில், ஒலிம்பிக் டார்ச் ஓட்டம் நடைபெற்றது. அமேசான் காட்டின் முக்கிய வன விலங்கு சிறுத்தை. எனவே இந்த நிகழ்வில் ஜாகுவார் ஒன்று பங்கேற்றால் நிகழ்ச்சிக்கு பெருமை சேர்க்கும்விதமாக இருக்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கருதினர். மென்னஸ் நகரில் உள்ள ராணுவ மையத்தில் இந்த நிகழ்வு நடந்தது. எனவே அந்த ராணுவ மையத்துக்கு வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து ஜுமா என்ற சிறுத்தை கொண்டு வரப்பட்டது. அதன் கழுத்தில் சங்கிலி மாட்டப்பட்டு நிகழ்ச்சி நடந்த இடத்தில் படுக்க வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது அதன் பராமரிப்பாளர் கையில் இருந்து தப்பிய ஜுமா, ராணுவ மையத்துக…

  22. சர்வதேச தடகள போட்டிகளுக்கு ரஷ்யாவிற்கு தடை: ரியோ ஒலிம்பிக்கிலும் பங்குகொள்ள முடியாது இவ்வருடம் இடம்பெறவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டி உட்பட அனைத்த விதமான சர்வதேச தடகள போட்டிகளில் பங்குபற்ற ரஷ்யாவிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தடகள சம்மேளனம் ரஷ்யாவிற்கு ஏற்கனவே விதித்திருந்த தடையை நீடித்ததமையினால் குறித்த காலப்பகுதியில் நடைபெறும் அனைத்து விதமான தடகள போட்டிகளுக்கும் ரஷ்யா பங்கபற்றுவதற்கான உரிமை இல்லாமலாக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அரச ஆதரவுடனான வீரர்கள் தடைவிதிக்கப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அமைய சர்வதேச தடகள சம்மேளனம், கடந்த வருடம் ரஷ்யாவுக்கு எதிராக தடைவிதித்தது. எனினும் இந்த தடைக்கு பின்னர் சர்…

  23. தோனி ஓய்வு பெற்றால் அவரை நாம் மிகவும் இழந்ததாகவே உணர்வோம்: டீன் ஜோன்ஸ் இந்திய ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் தோனி. | படம்: பிடிஐ. தோனி ஓய்வு பெற்று விட்டார் எனும்போதுதான், அவர் இல்லாதது குறித்து நாம் அதிகம் உணர்வோம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி நிறுவன நேரகாணல் ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது: நாம் நமது பெரிய வீரர்களை விரைவில் வெளியேற்றவே விரும்புகிறோம். இந்திய கிரிக்கெட்டுக்கு தோனி செய்த பங்களிப்பை வைத்து அவரது விருப்பத்தை அவரே தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும். கேப்டனாக வேண்டும் என்று பெரிய அவசரம் காட்டுவதாக நான் கருதவில்லை. காலம் வரும். நான் கூறுவதை நம்புங்கள், தோனி ஓய்வு ப…

  24. ஐக்கிய அரபு இராச்சியத்தில் பகல் - இரவு டெஸ்ட்: பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் இணக்கம் டெஸ்ட் கிரிக்கெட் விளை­யாடும் நாடு­க­ளுக்கு மத்­தியில் பகல் –இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்­டி­களை நடத்­து­வ­தற்­கான முஸ்­தீ­புகள் இடம்­பெற்று வரும் நிலையில் பாகிஸ்­தானும் மேற்­கிந்­தியத் தீவு­களும் பகல் – இரவு டெஸ்ட் போட்­டியில் விளை­யாட கொள்கை அளவில் இணங்­கி­யுள்­ளன. நடு­நி­லை­யான ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் பகல் - இரவு டெஸ்ட் போட்­டியை இளஞ்­சி­வப்பு பந்­தைக் ­கொண்டு நடத்த இரண்டு நாடு­களும் முன்­வந்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. இந்த யோச­னைக்கு மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்ெகட் சபைஆ…

  25. NBA: அதிரடி மீள்வருகையால் சம்பியனானது கிளீவ்லான்ட் கவாலியேர்ஸ் அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்தாட்டச் சங்க (NBA) தொடரின் வரலாற்றில், மிகச்சிறந்த மீள்வருகைகளில் ஒன்றை நிகழ்த்திய கிளீவ்லான்ட் கவாலியேர்ஸ் அணி, சம்பியன் பட்டத்தை வென்றது. நடப்புச் சம்பியன்களான கோல்டன் ஸ்டேட் அணியை 93-89 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தே, தனது முதலாவது பட்டத்தை கிளீவ்லான்ட் கவாலியேர்ஸ் அணி பெற்றுக்கொண்டது. தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கத் தொடரின் மேற்குச் சம்பியன்களுக்கும் கிழக்குச் சம்பியன்களுக்குமிடையில் 7 போட்டிகள் கொண்ட தொடராக இடம்பெறும் இறுதிப் போட்டித் தொடரில், நான்கு வெற்றிகளைப் பெறும் அணி, சம்பியனாகத் தெரிவாகும். இந்த இறுதிப் போட்டித் தொடர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.