Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. புதிய வடிவில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் லீக்; ஐ.சி.சி. ஆலோசிக்கிறது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் புதிய லீக் முறையை அறி­மு­கப்­ப­டுத்த சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை ஆலோ­சித்து வரு­கின்­றது. 50 ஓவர் கிரிக்கெட் போட்­டி­க­ளுக்கு பொருத்­த­மான புது வடிவம் கொடுக்கும் வகையில் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் முதல் 13 இடங்­களை வகிக்கும் அணி­களைக் கொண்டு புதிய லீக் போட்­டி­களை நடத்த பேரவை திட்­ட­மிட்­டுள்­ளது. இந்தப் புதிய லீக் போட்­டியில் டெஸ்ட் விளை­யாடும் பத்து நாடுகள், சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் இணை உறுப்பு நாடு­க­ளான ஆப்­கா­னிஸ்தான், அயர்­லாந்து ஆகி­ய­வற்­றுடன் மற்­று­மொரு இணை உறுப்பு நாடு இந…

  2. பங்களாதேஷின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்க நீடிப்பு பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் ஷந்திக ஹத்துருசிங்கவின் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு வரை பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்கவை தக்கவைத்துகொள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஒப்பந்தத்தில் கைசாத்திட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்க செயற்பட்டு வருவதோடு பங்களாதேஷ் அணி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட போட்டிகளில் பிரகாசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/7783

  3. வேகப்பந்து வீச்சாளர் எரங்க இங்கிலாந்து வைத்தியசாலையில் வேகப்பந்து வீச்சாளரான ஷமிந்த எரங்க, இங்கிலாந்திலுள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருதய நோய் தொடர்பில் சிகிச்சை பெறுவதற்கே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/175040/வ-கப-பந-த-வ-ச-ச-ளர-எரங-க-இங-க-ல-ந-த-வ-த-த-யச-ல-ய-ல-#sthash.BH1F6LD8.dpuf

  4. ஜெயசூரியாவின் அதிவேக சத சாதனையை முறியடிக்கத் தவறிய இலங்கை வீரர் செகுகே பிரசன்னா அயர்லாந்துக்கு எதிராக 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை 2-0 என்று கைப்பற்றியது. இதில் டப்ளினில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் நேற்று இலங்கை அணி வீரர் செகுகே பிரசன்னா 46 பந்துகளில் 5 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 95 ரன்கள் விளாசினார், இதன் மூலம் ஜெயசூரியாவின் 48 பந்துகளில் சதம் என்ற சாதனையை செகுகே முறியடிக்க முடியாமல் போனது. செகுகே பிரசன்னாவின் ஒருநாள் கிரிக்கெட் சராசரி இதுவரை 9.19 என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று திடீரென அவர் 3-ம் நிலையில் களமிறக்கப்பட்டார். இறங்கியவுடன் முதல் பந்திலேயே தனது நோக்கத்தை அவர் அறிவித்தார். அயர்லாந்து ஆஃப் ஸ்பின்னர் ஆண்டி மெக்பி…

  5. இந்திய பேட்டிங் குறித்த ஹர்பஜனின் ஜோக்: பகிர்ந்து கொண்ட முரளி கார்த்திக் இர்பான் பத்தான், ஹர்பஜன், முரளி கார்த்திக். | கோப்புப் படம்: வி.கணேசன். இந்திய அணியிலேயே மிகவும் நகைச்சுவை உணர்வு வாய்ந்தவர் ஹர்பஜன் சிங் என்று கூறப்படுவதுண்டு. சக வீரர்கள் பற்றியும் சில வேளைகளில் அணி பற்றியுமே அவர் தனது நகைச்சுவைக் கருத்துகளை வெளியிட்டுள்ளார். அதேபோல் அவர் மற்ற வீரர்கள் போல் அப்படியே மிமிக்ரி செய்வதிலும் வல்லவர் என்று கூறப்படுவதுண்டு. 2005ம் ஆண்டு ஜிம்பாப்வேயில் கங்குலி தலைமை இந்திய அணி, நியூஸிலாந்து, ஜிம்பாப்வே பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் நடந்தது. இதில் நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியா மோசமான தோல்வியைச் சந்தித்தது. நியூஸிலாந்து அணியை 21…

  6. இலங்கை அயர்லாந்து ஒருநாள் போட்டி: அணி விபரம் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நாளை டப்ளினில் ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இழந்த இலங்கை அணி பல மாற்றங்களுடன் அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அணிகளின் விபரம் பின்வருமாறு இலங்கை அணி - அஞ்சலோ மெத்தியுஸ், (அணித்தலைவர்) தினேஸ் சந்திமால் (உப தலைவர்) குசல் பெரேரா, உபுள் தரங்க,தனஞ்சய டி சில்வா, சமிந்த எரங்க, நுவான் பிரதீப், சுரங்க லக்மால், குசல் மெண்டிஸ், தசுன் சானக, பர்விஸ் மஹ{ருப், சுராஜ் ரந்திவ், சீக்குகே பிரசன்ன. அயர்லாந…

  7. வாதத்தால் விரல்களை இழந்த கிரிக்கெட் நடுவர் பில்லி பவுடன் ! கிரிக்கெட் நடுவர்களில் நியூசிலாந்தை சேர்ந்த பில்லி பவுடன் சற்று வித்தியாசமானவர். சொந்த நாட்டு வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்தால் கூட, பில்லி பவுடன் கொடுக்கும் 'அவுட் சைகை' யை பார்த்து, ரசிகர்கள் சோகத்தை மறந்து விடுவார்கள். கிரிக்கெட் மைதானத்தில், தனது வித்தியாசமான அணுகுமுறையால் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த பில்லி பவுடனின் விரல்கள், தற்போது செயல் இழந்திருப்பதுதான் சோகத்திலும் சோகம். இதனால் இனிமேல் பில்லி பவுடன் நடுவர் பணியில் ஈடுபடமாட்டார். ஆர்த்தரைடிஸ் வாதத்தால், இவரது விரல்கள் பாதிப்படைத்துள்ளனவாம். http://www.vikatan.com/news/sports…

  8. இள­வாலை புனித ஹென்­றி­ய­ர­ச­ருக்கு 3 ஆவது வெற்றி இலங்கை பாட­சா­லைகள் கால்­பந்­தாட்ட சங்­கத்­துடன் இணைந்து இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனம் நடத்தும் 19 வய­துக்­குட்­பட்ட பாட­சாலை அணி­க­ளுக்கு இடை­யி­லான கொத்­மலை கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் இள­வாலை புனித ஹென்­றி­ய­ரசர் கல்­லூரி மூன்­றா­வது தொடர்ச்­சி­யான வெற்­றியைப் பதிவு செய்­துள்­ளது. யாழ்ப்­பா­ணத்தில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற கண்டி திரித்­துவ கல்­லூ­ரி­யு­ட­னான குழு ஏ போட்­டியில் 2 – 0 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் புனித ஹென்­றி­ய­ரசர் வெற்­றி­பெற்­றது. இப் போட்­டியில் ஏகப்­பட்ட கோல்­போடும் வாய்ப்­பு­களை இழந்த புனித ஹென்­றி­ய­ரசர் போட்­டியின் …

  9. வெளியாகியது இங்கிலாந்து பிறிமீயர் லீக் போட்டி அட்டவணை 2016-17 பருவகாலத்துக்கான இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஓகஸ்ட் 13ஆம் திகதி, இப்பருவகாலத்துக்கான முதலாவது போட்டி இடம்பெறவுள்ளது. முதல் வாரத்தில், நடப்புச் சம்பியன்களான லெய்செஸ்டர் சிற்றி அணி, ஹள் சிற்றி அணியை எதிர்கொள்ளவுள்ளது. ஆர்சனல் - லிவர்பூல், போர்ண்மெத் - மன்செஸ்டர் யுனைட்டட், பேர்ண்லி - சுவன்சி சிற்றி, செல்சி - வெஸ்ட் ஹாம் யுனைட்டட், கிறிஸ்டல் பலஸ் - வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன், எவேர்ட்டன் - டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர், மன்செஸ்டர் சிற்றி - சண்டர்லான்ட், மிடில்ஸ்புரோ - ஸ்டோக் சிற்றி, சௌதாம்டன் - வட்போர்ட் ஆகிய போட்டிகள், முதல் வாரத்தின் ஏனைய…

  10. பாகிஸ்தான் அணி உதவிப் பயிற்றுநர்களாக முஷ்தாக் அஹ்மத், அஸ்ஹர் மஹ்மூத் 2016-06-16 12:02:38 பாகிஸ்­தானின் பந்­து­வீச்சைப் பலப்­ப­டுத்தும் வகையில் அணியின் உதவிப் பயிற்­று­ந­ராக முஷ்தாக் அஹ்­மதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நிய­மித்­துள்­ளது. பாகிஸ்­தானின் முன்னாள் சுழல்­பந்­து­வீச்­சா­ள­ரான முஷ்தாக் அஹ்மத் தற்­போது தேசிய கிரிக்கெட் கல்­வி­யத்தின் (அக்கடமி) தலைமைப் பயிற்­று­ந­ராக பதவி வகிக்­கின்றார். இங்­கி­லாந்­துக்கு எதி­ராக நடை­பெ­ற­வுள்ள நான்கு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரைக் கவ­னத்தில் கொண்டே இவர் உதவிப் பயிற்­று­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். …

  11. பிரேஸில் கால்பந்தாட்டப் பயிற்றுநர் பதவியிலிருந்து டுங்கா நீக்கம்! 2016-06-16 10:56:03 ஐக்­கிய அமெ­ரிக்­காவில் நடை­பெற்­று­வரும் கோபா அமெ­ரிக்க நூற்­றாண்டு கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் முதல் சுற்­றுடன் பிரேஸில் வெளி­யே­றி­யதை அடுத்து அதன் பயிற்­றுநர் பத­வி­யி­லி­ருந்து டுங்­காவை பிரேஸில் நீக்­கி­யுள்­ளது. ரௌல் ரூடி­யாஸின் கை மூலம் போடப்­பட்­ட­தாகக் கரு­தப்­படும் கோலின் உத­வி­யுடன் பிரேஸில் அணிக்கு எதி­ரான போட்­டியில் 1 க்கு 0 என்ற கோல் அடிப்­ப­டையில் பிரேஸில் வெற்­றி­பெற்­றது. இந்த தோல்­வியை அடுத்து முதல் சுற்­றுடன் பிரேஸில் வெளி­யே­றி­யது. அப் போட்­டியில் தோல்வி அடைந்­ததால் டுங்­கா…

  12. மெஸ்ஸி VS ரொனால்டோ: முதல் கோப்பையை முத்தமிடப்போவது யார்? “இந்தப் பூமிப்பந்தில் பிறந்தவர்களில் 'பாலன் டி ஓர் விருது' வாங்கியவர்களில் கடைசி ஆள் நானாகத்தான் இருப்பேன்” என்று சிரித்துக்கொண்டே கூறினார் பிரேசில் வீரர் ககா. கால்பந்தின் மிக உயரிய விருதினை கிறிஸ்டியானோ ரொனால்டோவோவும், மெஸ்ஸியும் மாறி மாறி 8 ஆண்டுகளாக வாங்கி வருவதை, ‘அவர்கள் பூமியில் பிறந்தவர்களே அல்ல’ என்று கூறி அவர் பாராட்டியிருந்தார். ஆம், கடந்த சில ஆண்டுகளாக கால்பந்தின் கலா ரசிகனை வியக்க வைத்து வரும் இவ்விரு மாயக்காரர்களைப் போல் இன்னொரு வீரர் இப்போது இல்லைதான். அவ்வளவு ஏன், பல தருணங்களில் பீலே, மாரடோனா போன்றோரையும் மறக்கடித்து விடுகின்றனர் இவ்விருவரும். இந்த …

  13. கடினமான சில சூழ்நிலைகளில் சச்சினை விட விராட் கோலி சிறந்த பேட்ஸ்மென்: இம்ரான் ஒப்பீடு சச்சின், விராட் கோலி. | கோப்புப் படம். விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் சதங்களை விளாசியது முதல் இவரையும் சச்சினையும் ஒப்பிட்டு பலரும் பல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். இதில் சமீபமாக பாகிஸ்தான் ‘கிரேட்’ இம்ரான் கான், விராட் கோலி பேட்டிங் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இது பற்றி கூறியதாவது: “கிரிக்கெட் ஆட்டம் பல காலக்கட்டங்களைக் கொண்டது. 80’களில் விவ் ரிச்சர்ட்ஸ், அதன் பிறகு சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, இவர்கள் இருவரும் அனைவரையுமே பின்னுக்குத்…

  14. டோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய ஜிம்பாப்வே பயிற்சியாளர்: வைரலாகும் புகைப்படம் 10 hours agoகிரிக்கெட் 755 SHARES PrintReport us0 Comments தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரும், ஜிம்பாப்வே அணியின் தலைமை பயிற்சியாளருமான மகாயா நிடினி, இந்திய அணித்தலைவர் டோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கியது ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்க அணியின் முதல் கருப்பின் கிரி…

  15. பிரேசிலில் ஏற்பட்டிருக்கும் சிகா தொற்று காரணமாக ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இடைநிறுத்தப்படவேண்டும் அல்லது அங்கிருந்து மாற்றப்பட வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகள் குறித்து உலக சுகாதார நிறுவன நிபுணர்களின் கூட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை விவாதிக்கப்படவிருக்கிறது. கர்ப்பிணிப்பெண்கள் இந்த போட்டிகளை தவிர்க்க வேண்டும் என்றும் மற்றவர்கள் கொசுக்கடியை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=159559&category=WorldNews&language=tamil

  16. நான் இந்து சமயத்தவன் என்பதால் பாக். கிரிக்கெட் சபை புறக்கணிக்கின்றதா? - கனே­ரியா கேட்கின்றார் ஐந்து வருட தடைக்­குட்­பட்ட மொஹமத் அமிர் விட­யத்தில் தனது எல்­லைக்கும் அப்பால் சென்று கரி­சனை காட்­டிய பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, தனக்கு என்ன செய்­துள்­ளது என தனிஷ் கனே­ரியா கேள்வி எழுப்­பி­யுள்ளார். “பாகிஸ்தான் கிரிக்கெட் சபை­யினர் என்­னுடன் பேசு­வ­தற்­குக்­கூட விரும்­ப­வில்லை. நான் ஒரு இந்து என்­பதால் புறக்­க­ணிக்­கப்­ப­டு­கின்றேனா? என என்­னையே நான் கேட்­டுக்­கொள்வேன்” என இந்­திய ஊட­க­மொன்­றுக்கு தனிஷ் கனே­ரியா தெரி­வித்­துள்ளார். பாகிஸ்­தா­னினால் வாழ்நாள் தடைக்­குட்­பட்­டுள்ள தனேஷ் கனே­ரியா, டெஸ்ட் அரங்…

  17. பெறுபேறுகள் தொடர்பாக மத்தியூஸ்: திரிமான்ன தொடர்பில் மௌனம் இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், அணி வீரர்களான குசால் மென்டிஸ், ரங்கன ஹேரத் ஆகியோரைப் பாராட்டிய போதிலும், லஹிரு திரிமான்ன தொடர்பாகத் தெளிவான தகவல்களை வழங்கவில்லை. இத்தொடரில் ஓரளவு தொடர்ச்சியான துடுப்பாட்டப் பெறுபேறுகளை வெளிப்படுத்திய இளம் வீரரான குசால் மென்டிஸ், 6 இனிங்ஸ்களில் 31.20 என்ற சராசரியில் 156 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இது, இலங்கை சார்பாக இத்தொடரில் பெறப்பட்ட 3ஆவது அதிக ஓட்டங்களாகும். இத்தொடரில் இலங்கையின் நாயகனாகத் தெரிவான கௌஷால் சில்வா, 193 ஓட்டங்களைப் பெற்றதோடு, ட…

  18. சிரிவர்தன நீக்கம் இங்கிலாந்து, அயர்லாந்து அணிகளுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமிலிருந்து, இலங்கை அணியின் சகலதுறை வீரர் மிலிந்த சிரிவர்தன நீக்கப்பட்டுள்ளார். இலங்கையின் முக்கிய வீரராக அண்மைக்காலத்தில் மாறியிருந்த சிரிவர்தன, கடந்த சில போட்டிகளாகச் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருக்கவில்லை. இதனையடுத்தே, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் அவர் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ள ரங்கன ஹேரத் தவிர, டெஸ்ட் தொடரில் இடம்பெற்ற திமுத் கருணாரத்ன, கௌஷால் சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, டில்ருவான் பெரேரா ஆகியோருக்கும் இக்குழாமில் இடம் கிடைக்கவில்லை. இல…

  19. நுவான் பிரதீப்பின் 'நோ போல்': அநியாயமா, தவறா? -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகள், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குக் கிரிக்கெட் தொடர்களுக்காகச் செல்லும்போது, நடுவர்களின் தீர்ப்புகளும் மத்தியஸ்தர்களின் முடிவுகளும், கீழைத்தேய நாடுகளுக்கு எதிராகவே கிடைக்குமென்பது, முன்பிருந்த எதிர்பார்ப்பு. முன்னைய காலங்களில், சர்வதேச கிரிக்கெட் சபையில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளே ஆதிக்கம் செலுத்தியிருந்த நிலையில், அவற்றுக்குச் சார்பான முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கருதப்பட்டது. ஆனால், சர்வதேச கிரிக்கெட் சபையில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்ததோடு, மூன்றாம் நாடொன்றைச் சேர்ந்த நடுவர்கள், கிரிக்கெட் போட்டிகளில் பங்க…

  20. 'உபாய ரீதியாக மஹேல உதவலாம்' Comments இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர், எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், அத்தொடரில், இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்தன, உபாய ரீதியாக இலங்கைக்கு உதவலாம் என, இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற பின்னர், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராகச் செயற்பட்ட மஹேல ஜெயவர்தன, இறுதியாக, இந்தியாவில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 தொடரிலும் அவ்வாறு செயற்பட்டிருந்தார். இந்தத் தொடரில் அவர், இங்கிலாந்தின் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நேர்முக வர்ணனையாளப் பணியாற்றவுள்ளார். எனவே, இங்கிலாந்து அணியின் வீரர்கள் பற்றிய தகவல்களை…

  21. கிறிஸ் கெய்லை கண்டு பயந்த லாரா..! மேற்கிந்திய தீவு கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் கிறிஸ்கெய்ல், ‘சிக்ஸ் மெசின்: நான் கிரிக்கெட்டை விரும்புவதில்லை... அதை நேசிக்கிறேன்’ என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள சுவாரஸ்மான ஒரு நிகழ்வில், "சில வீரர்கள் தங்களது சாதனைகள் முறியடிக்கப்பட்டு விடுமோ என்று பயப்படுவார்கள். அதற்கு பிரையன் லாராவும் உதாரணம். 2005ம் ஆண்டு ஆன்டிகுவாவில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லாரா 4 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். பிறகு வீரர்களின் ஓய்வறையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த லாரா, அடிக்கடி பால்கனிக்கு வந்து ஸ்கோர் போர்டை மட்டும் பார்த்தபடி உள்ளே சென்றார். அச்சமயம் களத்…

  22. கனேடியன் கிரான்ட் பிறிக்ஸ்: வென்றார் ஹமில்டன் பெராரி அணியின் ஜெர்மனியச் சாரதியான செபஸ்டியான் வெட்டலுடனான பதற்றமான உத்திசார் மோதலையடுத்து, மெர்சிடிஸ் அணியின் பிரித்தானியச் சாரதியான லூயிஸ் ஹமில்டன், கனேடியன் கிரான்ட் பிறிக்ஸை வென்றார். மூன்றாவது இடத்திலிருந்து பந்தயத்தை ஆரம்பித்த வெட்டல், ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற வெட்டல், பந்தயத்தின் பெரும்பாலான பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதும், பந்தயத்தின் முக்கியமான நேரத்தின் போது, அவரினது காரை நிறுத்த பெராரி தீர்மானித்த நேரத்தில், ஒரு தடவை மாத்திரமே நிறுத்தியிருந்த ஹமில்டன் முன்னிலைக்கு வந்திருந்தார். இதேவேளை, இப்பந்தயத்தில் வெற்றி பெற்றதன் மூலம், தனக்கும் சக மெர்சிடி…

  23. மைலோ பாடசாலைகள் வர்ண விருது விழா இன்று வட பகுதி மாணவர்கள் ஐவருக்கு விருதுகள் (நெவில் அன்தனி) கல்வி அமைச்சு, இலங்கை பாடசாலைகள், விளையாட்டுத்துறைப் பேரவை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள 24ஆவது இலங்கை பாடசாலைகள் மைலோ வர்ண விருது விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் நடைபெறவுள்ளது. நெஸ்ட்லே லங்கா லிமிட்டட் 24ஆவது வருடமாக பாடசாலைகள் மைலோ வர்ண விருது விழாவுக்கு அனுசரணை வழங்குகின்றது. இலங்கை சார்பாக சர்வதேச அரங்கில் கடந்த வருடம் பங்குபற்றியவர்கள், பதக்கங்கள் வென்ற பாடசாலை மாணவர்களுக்கு மைலோ வர்ண விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. …

  24.  இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் பதவியில் ஜெரோம் ஜயரத்ன இலங்கை உள்ளூர் தொடர்களில் பங்குபற்றிய முன்னாள் சகலதுறை வீரரான ஜெரோம் ஜயரத்ன, இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நடவடிக்கை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம், உடனடியாக அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்படுகிறது. இலங்கை கிரிக்கெட் சபையில் பல்வேறு பதவிகளை வகித்த ஜெரோம் ஜயரத்ன, இறுதியாக செப்டெம்பர் 2015இல், அப்போதைய பயிற்றுநரான மார்வன் அத்தப்பத்து, தனது பதவியிலிருந்து விலகியதையடுத்து, தற்காலியப் பயிற்றுநராகச் செயற்பட்டு, மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக இலங்கையில் இடம்பெற்ற தொடருக்கும் நியூசிலாந்துக்கெதிராக நியூசிலாந்தில் வைத்து இடம்பெற்ற தொ…

  25. கால்பந்தாட்டம், கிரிக்கெட்டில் பிரகாசிக்கும் பாகிஸ்தான் யுவதி டயனா பெய்க் விளை­யாட்­டுத்­து­றையில் பெண்கள் சளைத்­த­வர்­க­ளல்லர் என்­பதை அண்­மைக்­கா­ல­மாக பல்­வேறு நாடு­களில் பலர் நிரூ­பித்து வரு­கின்­றனர். எனினும் அவர்­களில் விரல்­விட்டு எண்­ணக்­கூ­டி­ய­வர்­களே இரண்டு அல்­லது அதற்கு மேற்­பட்ட தேசிய அணி­களில் இடம்­பெ­று­வதைக் கண்­டுள்ளோம். பாகிஸ்­தானைச் சேர்ந்த டயனா பெய்க் எனும் யுவதி, பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி­யிலும் தேசிய கால்­பந்­தாட்ட அணி­யிலும் இடம்­பெற்­றுள்ளார். அண்­மையில் கழக மட்ட கிரிக்கெட் இறுதிப் போட்­டியில் தனது அணியை சம்­பி­ய­னாக வழி­ந­டத்­திய டயனா பெய்க், பரி­ச­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.