விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7861 topics in this forum
-
டில்ஸ்கூப் மன்னன் டில்ஷானின் ஓய்வு அறிவித்தல் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவா? (ஆழமான அலசல்) டில்ஸ்கூப் மன்னன் டில்ஷானின் ஓய்வு அறிவித்தல் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவா? (ஆழமான அலசல்) இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி நாயகனும், ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான திலகரட்ன டில்ஷான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுப்பதாக இன்று அறிவித்துள்ளார். 1999 இல் சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தை மேற்கொண்ட டில்ஷானின் 17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வு இந்த திடீர் ஓய்வு அறைவிப்பு மூலமாக முடிவுக்கு வருகிறது. கிரிக்கெட்டில் சாதிக்க தெரிந்த சாதனையாளர்கள் பலருக்கு தாங்கள் உச்சத்தில் இருக்கும் போதே, சர்சைகளில் சிக்காமல் ஓய்வு அறிவித்தலை வெளியிட்டிருக்க முடிவதில்லை …
-
- 0 replies
- 609 views
-
-
ஈடன் கார்டனில் மணியடிக்கும் கபில்தேவ்: டாஸ் போடுவதற்கு தங்க நாணயம் கொல்கத்தாவில் நடைபெற உள்ள நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் மணியடித்து தொடங்கி வைக்கிறார். இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 30-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டி இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடும் 250-வது ஆட்டமாகும். இதை யொட்டி இரு அணிகளை கவுரவிக்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதுதவிர போட்டியை பாரம் பரிய லார்ட்ஸ் மைதானம் போல மணியடித்து தொடங்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. போட்டி தினத் தன்று காலை கபில்தேவ், சிறப்பாக வ…
-
- 0 replies
- 269 views
-
-
இலங்கை வீரர் ஒருவருக்கு ஓட்டத்துக்கு 27 ஆயிரம் ரூபா : தயாசிறி அதிர்ச்சி தகவல் இலங்கை கிரிகட் வீரர்களுக்கு ஒரு ஓட்டத்திற்கு மாத்திரம் சுமார் 27 ஆயிரம் ரூபாவை இலங்கை கிரிகட் நிறுவனம் வழங்குவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். “கடந்த காலத்தில் மாத்திரம் இலங்கை கிரிகட் அணியின் வீரர் ஒருவர் 5 கோடிக்கும் அதிகமான பணத்தை கிரிகட் நிறுவனத்தின் மூலம் பெற்றுள்ளார். இதன்படி குறித்த வீரருக்கு ஒரு ஓட்டத்திற்கு 56 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை அணியின் தலைவருக்கு ஒரு ஓட்டத்துக்கு 27 ஆயிரம் ரூபா கிடைக்கின்றது. எனினும் அணி தோல்வியடைந்தாலும் குறித்தப் பணம் வீரர்களுக்கே சென்றடைக…
-
- 0 replies
- 337 views
-
-
உடற்தகுதி குறித்து கேள்வி எழுப்பிய திலிப் வெங்சர்க்காருக்கு டோனி பதிலடி நீண்ட நாட்கள் விளையாடாமல் இருக்கும் டோனியின் உடற்தகுதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு டோனி பதிலடி கொடுத்துள்ளார். இந்திய அணியின் தலைசிறந்த கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று வி்ட்டார். இதனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். இதனால் அவருக்கு அதிக அளவில் ஓய்வு கிடைக்கிறது. இந்த ஓய்வு நேரத்தில் உள்ளூர் தொடர்களில் அவர் விளையாடுவதில்லை. இதனால் ஓய்வை கழித…
-
- 0 replies
- 372 views
-
-
இந்தியக் கிரிக்கெட் அணியின் அஸ்வின் புதிய சாதனை! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/116992093_gettyimages-1228368442-3-720x450.jpg இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 400வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 400 விக்கெட்டுகள் வீழ்த்திய நான்காவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் அஸ்வின் உலகளவில் 16ஆவது பந்துவீச்சாளர் என் பெருமையையும் பெற்றார். அத்துடன் 400 டெஸ்ட் விக்கெட்டுகளை மிக வேகமாக வீழ்த்திய பந…
-
- 0 replies
- 560 views
-
-
பாக். சுப்பர் லீக் : முதல் வெற்றியை பதிவுசெய்தது கராச்சி (Highlights) டுபாயில் இடம்பெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் நேற்றைய போட்டியில் சங்கக்காரவின் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியினை பதிவு செய்தது. நேற்றைய போட்டியில் இஸ்லாமாபாத் யுனைட்டட் அணியை எதிர்கொண்ட கராச்சி அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 8 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்த போட்டி மழைக்காரணமாக 13 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இஸ்லாமாபாத் யுனைட்டட் அணி 8 விக்கட்டுளை இழந்து 90 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கராச்சி அணி 9.4 ஓவர்களில் 75 ஓட்டங்களை…
-
- 0 replies
- 314 views
-
-
ஆசிய ஆணழகனாக முடிசூடிய லூசன் புஷ்பராஜ் சுமார் 50 வருட வரலாற்றைக் கொண்ட ஆசிய ஆணகழகன் போட்டித் தொடரில் இலங்கைக்கு முதலாவது சம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து 2017ஆம் ஆண்டின் ஆசியாவின் சிறந்த ஆணழகனாக இலங்கையைச் சேர்ந்த லூசன் புஷ்பராஜ் இன்று மகுடம் சூடினார். ஆசிய ஆணழகன் மற்றும் உடற்தகுதி விளையாட்டு சம்மேளனத்தினால் நடாத்தப்படுகின்ற 51ஆவது ஆசிய ஆணழகன் போட்டிகள் (Asian Bodybuilding & physique Sports Championship-2017) கடந்த 20ஆம் திகதி தென்கொரியாவின் தலைநகர் சோலில் ஆரம்பமானது. இதில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 100 கிலோ கிராமிற்கு அதிகமான எடைப்பிரிவில் கலந்துகொண்ட லூசன், முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். …
-
- 0 replies
- 587 views
-
-
இளம் வயதில் மேன் ஆஃப் தி மேட்ச் 16 வயதில் சாதித்த ஆப்கானிஸ்தான் அறிமுக வீரர் அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த முஜீப் ஜர்தான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். Photo Credit: ICC அயர்லாந்து- ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில், முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. 239 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி ஆஃப்கானிஸ்தான் சுழல் தாக்குதலில் தாக்குப்பிடிக்க முடியாமல், 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 138 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஃப்கா…
-
- 0 replies
- 431 views
-
-
சம்பியனானது சென்றலைட்ஸ் கொக்குவில் மத்திய சனசமூக நிலையத்தின் கிரிக்கெட் தொடரின் வெள்ளி விழாக் கிண்ணத்தை, ஜொனியன்ஸ் அணியை வீழ்த்தி யாழ். சென்றலைட்ஸ் அணி கைப்பற்றியதுடன், இத்தொடரை அதிக தடவைகளாக ஐந்தாவது தடவையாக வென்ற அணியாக தம்மை மாற்றிக் கொண்டது. யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் 30 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கொண்ட தொடராக ஆண்டுதோறும் நடைபெறும் இத்தொடர், இம்முறை கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகிய மைதானங்களில் நடைபெற்றது. இவ்வாண்டு தொடரில் மொத்தமாக 24 அணிகள் பங்குபற்றி, சென்றலைட்ஸ…
-
- 0 replies
- 646 views
-
-
ஹியூக்ஸின் மறைவு எமது அணிகளை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது: மெத்யூஸ், குக் கூட்டாக தெரிவிப்பு அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் பிலிப் ஹியூஸின் மறைவு தங்ளது அணிகளைப் பெருந்துயரத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்திவிட்டுள்ளதாக இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் இங்கிலாந்து அணித் தலைவர்அலஸ்டெயார் குக்கும் தெரிவித்தனர். இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி தொடர்பான ஆயத்தங்கள் குறித்து செய்தியாளர்ளுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு கெத்தாராம ஆர்.பிரேமதாச விளையாட்டரங்க கேட்போர்கூடத்தில் இன்று பகல் நடைபெற்றபோது இரண்டு அணிகளிதும் தலைவர்கள் மேற்கண்டவாறு கூறினர். ஏஞ்சலோ மெத்யூஸ் 'பிலிப் ஹியூஸின் மறைவு குறித்த செய்தியை நேற்று காலை அறிந்தபோது பயிற்சியில் ஈட…
-
- 0 replies
- 309 views
-
-
ரஷ்ய கால்பந்தாட்ட வீரர் சுட்டுக்கொலை ரஷ்யாவைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் கசான் மகோமெதோவ், இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் வடக்கு காகசஸின் டாஜெஸ் பகுதியில் உள்ள அன்ஷி மகா செக்கலா தேசிய கால்பந்தாட்ட லீக்கில் விளையாடி வந்தார். இந்நிலையில் மகோமெதோவ் நேற்று காரில் சென்று கொண்டிருந்தபோது இனந்தெரியாத நபரொருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். http://www.virakesari.lk/articles/2015/01/06/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%…
-
- 0 replies
- 562 views
-
-
இந்த ஆண்டுக்கான தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் 10 தமிழ் பேசும் வீரர்கள் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் 106 பேர் கொண்ட தேசிய மெய்வல்லுனர் குழாம் நேற்று (18) அறவிக்கப்பட்டது. இதில் வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிலங்கை உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாகங்களையும் சேர்ந்த தமிழ் பேசும் வீரர்களுக்கு தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் வாய்ப்பு வழங்க இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அடுத்த வருடம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழா மற்றும் கட்டாரில் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர்களை இலக்காகக் கொண்டு Super Pool, Elite Pool, National Pool என மூன்று தேசிய மெய்வல்லுனர் …
-
- 0 replies
- 519 views
-
-
இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் டி20-யில் விளாசித்தள்ளிய கிறிஸ் கெயில் இங்கிலாந்தில் நடைபெறும் நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் தொடரில் சோமர்செட் அணிக்காக எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிராக கிறிஸ் கெய்ல் 92 ரன்களை விரைவு கதியில் விளாசி அசத்தினார். நேற்று இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் சோமர்செட் அணி கெயிலின் அதிரடியினால் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த டென் டஸ்சாதே தலைமை எஸ்ஸெக்ஸ் அணி நியூஸிலாந்து வீரர் ஜெஸி ரைடர் (54 ரன்கள், 28 பந்துகள், 8 பவுண்டரி 1 சிக்சர்) மற்றும் வெஸ்ட்லி (56 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 68) ஆகியோரது அரைசதங்களுடன் 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தனர், சோமர்செட் அணியில் பாக் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சொஹைல் தன்வீர் 2 விக்கெட்டுகளையும், ஏ.சி.தாமஸ் 4 விக்கெட்டு…
-
- 0 replies
- 267 views
-
-
'எனது கட்டுப்பாட்டில் இருக்காத விடயங்களுக்காக பழியை ஏற்று களைப்படைந்துள்ளேன்': பிளாட்டர் ரஷ்யாவுக்கும் கத்தாருக்கும் 2018 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு வாய்ப்பளிப்பதற்கு ஆதரவாக பிரான்ஸும் ஜெர்மனியும் அரசியல் அழுத்தங்களை கொடுத்திருந்ததாக ஃபிஃபா தலைவர் செப் பிளாட்டர் குற்றம்சாட்டியுள்ளார். போட்டியை நடத்தும் நாடுகளை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்புக்கு முன்னதாக, பிரான்ஸ் அதிபர் நிக்கோலா சார்க்கோஸி-உம் ஜெர்மனிய அதிபர் கிறிஸ்டியன் வூல்ஃப்-உம் தங்கள் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழுத்தம் கொடுத்திருந்ததாக ஜெர்மனிய நாளிதழ் ஒன்றுக்கு பிளாட்டர் கூறியுள்ளார். அமெரிக்காவின் புலனாய்வுத் துறையினர் ஊழல்குற்றச்சாட்டில் விசாரித்துவரும் செப் பிளாட்…
-
- 0 replies
- 275 views
-
-
ஐபிஎல் சூதாட்டம்: 14-ல் தண்டனை அறிவிப்பு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா உள்ளிட்டோருக்கான தண்டனை விவரம் வரும் 14-ம் தேதி வெளியாகிறது. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 3 பேர் அடங்கிய குழு, இந்த தண்டனை விவரத்தை அறிவிக்கிறது. குருநாத், குந்த்ராவுக்கு மட்டுமின்றி, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கான தண்டனை விவரமும் 14-ம் தேதி வெளியாகிறது. இது பிசிசிஐ மற்றும் ஐபிஎல்லில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் எழுந்த சூதாட்ட புகார் கிரிக்கெட் உலகையே உலுக்கியது. ஸ்ர…
-
- 0 replies
- 435 views
-
-
ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கடந்த 9ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மைதானத்தில் நீர் தேங்கியது. இதனால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. மைதானத்தில் வடிகால் வசதி சரியாக இல்லாததால் தேங்கிய தண்ணீரை உடனடியாக வெளியேற்ற முடியவில்லை. தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலையில் 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மைதான ஊழியர்கள் போராடி 3வது நாளான நேற்று முன்தினம் தண்ணீரை வெளியேற்றினர். ஆனால் மீண்டும் கிரேட்டர் நொய்டாவில் மழை…
-
- 0 replies
- 526 views
- 1 follower
-
-
சூடுபிடிக்கும் ஐ.சி.எல். சூதாட்ட வழக்கு : பிரன்டென் மெக்கல்லம் நீதிமன்றத்தில் சாட்சி! ஐ.பி.எல். போட்டிகளுக்கு முன்னதாக, இந்தியாவில் ஐ.சி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த தொடர், இரு சீசன்கள் மட்டுமே நடைபெற்றது. பின்னர் பி.சி.சி.ஐ.யின் நெருக்கடி காரணமாக அழிந்து போனது. இந்த தொடரில் நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெயிர்ன்ஸ் சண்டிகார் லயன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். இவர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி குற்றஞ்சாட்டியிருந்தார். இதையடுத்து, லலித் மோடி மீது கிறிஸ் கெயிர்ன்ஸ் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 2.4 மில்லியன் அமெரிக்க டா…
-
- 0 replies
- 204 views
-
-
பந்துகள் அதிவேகத்துடன் எகிறும் பிட்ச்: பெர்த்தில் தயாரிப்பு பெர்த் மைதானம். | படம்: கெட்டி உலகின் அதிவேக பிட்ச் என்று கருதப்படும் பெர்த் இடையில் சில காலங்கள் அதன் மரபான வேகத்தையும், எகிறு பந்தையும் இழந்திருந்தது. ஆனால் தற்போது நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கு பழைய அதிவேக பிட்ச் பெர்த்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. கடைசியாக பெர்த்தில் நடைபெற்ற 8 டெஸ்ட் போட்டிகளிலும் முடிவு தெரிந்துள்ளது. இதில் ஆஸ்திரேலியா 5 போட்டிகளில் வென்றுள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நியூஸிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா மோதும் 2-வது டெஸ்ட் போட்டிக்காக பழைய அதிவேக பெர்த் பிட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மைதானத்தின் பிட்…
-
- 0 replies
- 284 views
-
-
நடந்து முடிந்த 1000 ஐ.சி.சி. 20:20 போட்டிகளில் மறக்க முடியாத 20 முக்கிய பதிவுகள் Published by J Anojan on 2019-11-04 16:10:55 ( ஜெ.அனோஜன் ) சர்வதேச ஆண்களுக்கான இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியானது கடந்த 2005 ஆம் ஆண்டு அறிமுகமாகி ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் இடம்பெற்று வருகின்றது. நேற்றைய தினம் இடம்பெற்ற ஐ.சி.சி.யின் 1000 ஆவது ஆண்களுக்கான இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணியும் பங்களாதேஷ் அணியும் மோதின. இப் போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களினால் வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது. இந் நிலையில் இதுவரை காலமும் இடம்பெற்ற 1000 ஐ.சி.சி. ஆண்களுக்கான இருபதுக்கு : 20 போட்டிகளில் மறக்க முட…
-
- 0 replies
- 464 views
-
-
இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் குஷால் மெண்டிஸ் -மத்தியூஸ் தகவல் இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் குஷால் மெண்டிஸ் -மத்தியூஸ் தகவல். இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் கன்டுபிடிப்பாக கருதப்படும் 20 வயதான குஷால் மெண்டிஸ், அண்மைய நாட்களில் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்துவிட்டார். அறிமுகமான போட்டி முதல்கொண்டு அனைத்திலும் தனது திறமைகளை சிறப்பாக நிரூபித்துவரும் குஷால் மெண்டிஸ், தனது துல்லியமான துடுப்பாட்டம் மூலமாக அணியின் வெற்றிகளுக்கும் காரணமாக திகழ்கிறார். நேற்று இடம்பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 2 வது ஒருநாள் போட்டியின் போதும் ஆரம்பத்திலேயே இலங்கை அணி இரு விக்கெட்டுக்களை பறிகொடுத்தாலும், அசராமல் நின்று அடித்தாடி அரைச்சதம்…
-
- 0 replies
- 474 views
-
-
'அணித் தலைவருக்கு நண்பர்களை விட விரோதிகளே அதிகம்' – ஏஞ்சலோ மெத்யூஸ் 2016-10-25 11:24:24 இலங்கை அணியில் தலைவர் பதவியை வகிக்கும்போது நண்பர்களை விட விரோதிகளையே அதிகம் சம்பாதிக்க வேண்டியுள்ளமை துரதிர்ஷ்டமானது என இலங்கை கிரிக்கெட் அணியின் வழைமையான தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் கூறினார். தான் அணியில் சேர்த்துக்கொள்வதற்கு அணித் தலை வர் ஏஞ்சலோ மெத்யூஸ்தான் தடையாக இருந்ததாக வீரர் ஒருவர் குற்றஞ்சாட்டியதாக செய்தியாளர் ஒருவர் சுட்டிக்காட்டியபோதே ஏஞ்சலோ மெத்யூஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், ‘‘அணித் தலைவர் என்ற வகையில் நண்பர்களை விட விரோதிகளைத்தான்…
-
- 0 replies
- 303 views
-
-
ஒருநாள் தரவரிசை: முதல் இடத்திற்கு டி வி்ல்லியர்ஸ், கோலி, வார்னர் கடும் போட்டி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டி வி்ல்லியர்ஸ், விராட் கோலி, டேவிட் வார்னர் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 3-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. இந்த தொடரில் டேவிட் வார்னர் அபாரமான ஆட்டத்தை வ…
-
- 0 replies
- 453 views
-
-
2016-ன் நம்பர் ஒன் டி20 பவுலர் எத்தனை மெய்டன் ஓவர் வீசியிருக்கிறார்? #2016Rewind டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை பந்துவீச்சாளர்கள் பங்கு அளப்பரியது; கடினமானதும் கூட . சிக்ஸர் விளாச வேண்டும் என வெறியோடு கிரீஸை விட்டு இறங்கி ஒருவரை ஏமாற்ற வேண்டும், இக்கட்டான சூழ்நிலையில் சிங்கிள் அடிக்கத் துணிபவருக்கு, ஆசை காட்டி அவுட்டாக்கத்தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு வீரருக்கும் ஏற்றவாறு ஒவ்வொரு பந்தையும் பலவாறாக யோசித்துச் சிறப்பாக பந்துவீச வேண்டும். அப்படி இந்த ஆண்டு சிறப்பாக பந்து வீசியவர்கள் பட்டியல் தான் இது. 10. ஃபால்க்னர் :- அதிக ரன்கள் விட்டுக்கொடுக்கிறார் என இவர் மீது எப்போதும் ஒரு வருத்தம் ஆஸி ரசிகர்ளுக்கு இருக்கும். அதே சமயம் விக்கெட்டுக…
-
- 0 replies
- 372 views
-
-
2018-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முதல் அணியாக பிரேசில் தகுதி 2018-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை பந்தாடி முதல் அணியாக தகுதி பெற்றது சாவ்பாலோ: 32 அணிகள் இடையிலான 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2018) ஜூன்-ஜூலை மாதங்களில் ரஷியாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. தென்அமெரிக்க கண்டத்திற்கான தகுதி சுற்றில் 10 அணிகள் பங்கேற்று லீக்கில் மோதி வருகின்றன. இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக உலக கோப்பை…
-
- 0 replies
- 278 views
-
-
இலங்கைக்கு படையெடுக்கவுள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு இம் மாத இறுதியில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போலி தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் ஒரேயொரு இருபதுக்கு - 20 போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி தொடர்பான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள போட்டி அட்டவணை வருமாறு, ஜூலை மாதம் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி காலி சர்வதேச க…
-
- 0 replies
- 450 views
-